Wednesday, September 22, 2010

தமிழ்த்தாயுடன் ஒரு பேட்டி

தமிழ்த்தாய்:

என்னப்பா பண்ணிக்கிட்டிருக்கே !



முருகேசன்:

ஒன்..ஒன்னுமில்லை தாயீ நாளைக்கு நம்ம ப்ளாக்ல ஒரு நல்ல ஐட்டமா போட்டுவிடனமுன்னு முக்கிக்கிட்டிருக்கேன்



தமிழ்த்தாய்:

ப்ளாகுன்னா தினசரி ஏவரேஜா நானூத்து சொச்சம் பேரு படிப்பாங்களே அதுவா?



முருகேசன்:

என்னம்மா நீ இவ்ள நெகட்டிவா திங்க் பண்றே.பாசிட்டிவ் அப்ரோச் இருக்கனும்மா. இன்னைக்கு 400+ ஆ இருக்கலாம். அது நாளைக்கோ அடுத்த வாரமோ 4000 அப்புறம் 40 ஆயிரம்னு எகிறிக்கலாமில்லயா?



தமிழ்த்தாய்:

எகிறி என்னத்த கிழிக்க போறே .. தமிழ் நாட்டு கழிவு நீர் கால்வாய்கள்ள பாலும், தேனும் கலந்து ஓடப்போகுதா?



முருகேசன்:

மாற்றம் வரும் தாயே.. என் எழுத்து அதை சாதிச்சே தீரும்



தமிழ்த்தாய்:

பாரதியை விட உன் எழுத்து சக்தி வாய்ந்ததா.. அவனே சோத்துக்கில்லாம செத்தான் தெரியுமில்லியா?



முருகேசன்:

யம்மா ! குக்கிராமத்துல அஞ்சு பத்து ரூபா நோட்டுக்கு உடனே சில்லறை கிடைக்கும் .. ஆயிரம் ரூபா நோட்டுக்கு கிடைக்குமா? அது மாதிரிதான் பாரதியோட தமிழுக்கும் சில்லறை கிடைக்கலை. நம்ம தமிழ் நூறு ரூபா நோட்டு மாதிரி. சந்தேகப்பட்டு சில்லறை இல்லேன்னிருவாங்க. இல்லே அவிக கிட்டே சில்லறை இருக்காது. நாலு கடை ஏறி இறங்கினா கிடைச்சுட்டு போவுது



தமிழ்த்தாய்:

பரவால்லியே சாலாக்கா பேசறே.. ஆமா தமிழ் தமிழ்னு பினாத்தறியே கச்சா முச்சானு இங்கிலீஷ் வார்த்தைகளை போடறே.



முருகேசன்:

தனித்தமிழ்ல எழுதினா 400 நாப்பதாயிருமோனு பயம்.



தமிழ்த்தாய்:

ஆமாண்டா கண்ணு எல்லாத்தலயும் டிஃப்ரண்டா திங்க் பண்ற பார்ட்டி ஆனால் என் மேட்டர்ல மட்டும் சம்பிரதாயமா திங்க் பண்றியே



முருகேசன்:

தாயீ.. நான் இயற்கைக்கு மரியாதை கொடுக்கிறவன். குழந்தை அம்மா வயித்துல இருக்கிறப்பயே அதனோட மூளைல தாய்மொழிக்கான இலக்கணமெல்லாம் குன்ஸா பதிவாயிருதாம். அப்பாறம் எதுக்கு புதுசா கிணறு வெட்டனும்?



தமிழ்த்தாய்:

ஆனா நிறைய பேரு இங்கிலீஷ் இல்லைன்னா ஆயி கூட வராதுங்கறாய்ங்களே



முருகேசன்:

அவிக திருமலைக்கு நடைபயணம் போகட்டும். அங்கன காத்தாட உலவ வர்ர சிறுத்தை அடிச்சு திங்கட்டும்.இப்ப புதுசா கரடி வேற வருதாம்



தமிழ்த்தாய்:

அதென்னப்பா இங்கிலீஷ் மேல அப்படியொரு கடுப்பு.



முருகேசன்:

எனக்கு அறிவாளினு பேரு எனக்கே இங்கிலீஷ்ல மொத்தமா 10,000 வார்த்தை தெரிஞ்சா அதிகம். பத்து வகையான சென்டன்ஸ் ஃபார்மேஷன் தான் தெரியும். ஒரு பெட்டிஷன் எழுதி முடிக்கிறதுக்குள்ள நாக்கு தள்ளி போகுது. மேலும் இதை இந்த ஆள்காட்டி பசங்க எழுதினாய்ங்கன்னா அதை படிக்கிறதுக்குள்ள மண்டைதான் காயும். கோர்ட்டுகள்ள இத்தீனி கேஸு பெண்டிங்ல இருக்க லா புக்ஸ் , தீர்ப்பு, ஜீ.ஓக்கள் எல்லாம் இங்கிலீஷ்ல இருக்கிறதுதான் காரணமோனு ஒரு சம்சயம் கூட எனக்குண்டு.



தமிழ்த்தாய்:

ஆள் காட்டிங்கன்னா நீ யாரை சொல்றே?



முருகேசன்:

வேற யாரை சொல்வேன். என் பங்காளிங்க இருக்காய்ங்களே அந்த பஞ்ச கச்சங்களைதான் சொல்றேன். அவிக இங்கிலீஷைத்தானில்லே எந்த பாஷைல எழுதினாலும் சூத்திரன் சட்டை கிழியனும்னே எழுதறானுங்கம்மா?



தமிழ்த்தாய்:

"சாதி இரண்டொழிய வேறில்லை"ங்கறதெல்லாம் தமிழ்ல தானே இருக்கு.



முருகேசன்:

அதை கம்ப்ளீட் பண்ணு தாயீ .. இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர். இங்கன காசு பணத்தை மட்டும் கணக்கு வைக்காதிங்க. அறிவு,ஞானத்தையும் மனசுல வச்சு பாருங்க. இண்டர்ல எக்கனாமிஸ் நான் படிச்சு எழுதினேன் 35 மார்க் வந்தது. டப்பாஸானவனுக்கு கத்துக்கொடுத்தேன் 50 மார்க் வந்தது. இந்த தாளிங்க தாலியறுத்துர்ரானுங்கம்மா



தமிழ்த்தாய்:

தமிழ்ல வந்துட்டா மட்டும் அறிவும் ஞானமும் பரவிரும்ங்கறியா?



முருகேசன்:

சான்ஸ் அதிகரிக்குதில்லை..



தமிழ்த்தாய்:

அது சரி. தமிழ் தமிழ்ங்கறியே தவிர திருக்குறளுக்கு அந்தப்பக்கம் போறதே இல்லியே..



முருகேசன்:

கரீட்டா பாய்ண்ட் அவுட் பண்ணிங்க தாயீ. இங்கிலீஷ் மீடிய பார்ட்டிங்க, தமிழ் மீடியம் படிச்சிருந்தாலும் வயித்துப்பொழப்புக்காக தமிழ்ல டச் விட்டுப்போன பார்ட்டிங்க தான் அதிகம். நானே பேச்சுத்தமிழை வச்சுத்தான் தம் கட்டிக்கிட்டிருக்கேன். இதுல வளையாபதி குண்டலகேசின்னா ஓடிப்போயிருவாய்ங்க தாயே..



தமிழ்த்தாய்:

அப்போ அதெல்லாம் தேவையில்லேங்கறியா?



முருகேசன்:

நான் அப்படி சொன்னேனா நாட்ல சுபிட்சம் வரணும். சனம் தங்கள் வாழ்க்கை வளம் பெற 4 மணி நேரம் உழைச்சா போதும்ங்கற நிலை வரணும். அப்பாறம் இந்த புதை பொருள் ஆராய்ச்சியெல்லாம் பண்ணலாம்.



தமிழ்த்தாய்:

மொத்தத்துல நீயும் பணம் தான் பிரதானம்ங்கறே.



முருகேசன்:

அய்யய்யோ .. போட்டு வாங்கறதுன்னா இதானா. நான் சொல்றது தனிமனித பொருளாதார வளர்ச்சியில்லே. ஒட்டு மொத்த சுபிட்சம். பசி , பட்டினி, ஏழ்மையை வச்சுக்கிட்டு பழந்தமிழ், செந்தமிழ்னு தமிழாராய்ச்சி பண்றது முட்டாள் தனம்.



தமிழ்த்தாய்:

ஓஹோ அதுக்குத்தான் கமிட்டட் டு மேக் இண்டியா ரிச் னுட்டு ஸ்லோகன் போட்டு வச்சிருக்கயா?



முருகேசன்:

தமிழ் வளர்ச்சின்னே இல்லை தாயீ .. மனிதன் மிருகமாயிரக்கூடாதுங்கற முன்னெச்சரிக்கை. மன்சன் சாகலாம். மனிதாபிமானம் சாகக்கூடாது. அடுத்தவேளையாவது உணவு கிடைக்கும்ங்கற கியாரண்டி இருக்கிறதாலதான்

கிரைம் ரேட் கட்டுக்குள்ளிருக்கு. இனி உணவே கிடையாதுங்கற நிலை வந்துட்டா .. என்னை வெட்டிச்சாப்பிடுங்கப்பானு நான் வேணம்னா சொல்லிரலாம். எத்தனை பேர் முன் வருவாங்க?



தமிழ்த்தாய்:

தபார்ரா .. நீ அத்தனாம்பெரிய தியாகியா?



முருகேசன்:

இல்லைம்மா. சின்ன லாஜிக். நானா முன் வராட்டாலும் விரட்டி பிடிச்சு வெட்டி கொன்னு, தின்னுருவாய்ங்க. அப்போ மன்சனும் சாவேன், மனிதாபிமானமும் செத்துரும். நானே முன் வந்தா கு.பட்சம் மனிதாபிமானமாச்சும் வாழுமில்லையா



தமிழ்த்தாய்:

எந்த தைரியத்துல சாகத்துணியறே. ?



முருகேசன்:

நீங்க தான் இருக்கிங்களே உங்களுக்கு அமுதுன்னு இன்னொரு பேர் இருக்காமே ..பொழைக்க வச்சுர மாட்டிங்க



தமிழ்த்தாய்:

அட நீ பாரதி தாசனை கோட் பண்றியா?



முருகேசன்:

ஆமா தாயி..



தமிழ்த்தாய்:

நெஜமாலுமே நீ உயிர்ப்பிக்கப்படுவேன்னு நீ நம்பறியா?



முருகேசன்:

நான் சாகலாம் . ஆனால் நீ தந்த சரளமான சிந்தனையும், எழுத்தும் சாகுமா? என் எழுத்தென்பது என்ன ? என்னோட நீட்சி தானே.



தமிழ்த்தாய்:

எப்படியோப்பா .. அடிமாடு கணக்கா என்னை ஏலம் போட்டுராம வத்தமாட்டை கோசாலைல வச்சு பராமரிக்கிற மாதிரியாச்சும் ப்ளான் பண்ணுப்பா..



முருகேசன்:

பார்த்திங்களா.. ஒட்டக்கறந்துக்கிட்டு வெட்ட விக்கறதுக்கு நானென்ன பார்ப்பானா? உனக்கொரு அவமதிப்புன்னா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு கிளம்பறவன். என்னை மாதிரி இன்னம் ஆயிரக்கணக்கான மியூசியம் பிறவிகள் இருக்கு. நீ கவலைப்படாதே தாயீ.. நீ வாழனும்னா தமிழன் வாழனும். தமிழன் வாழ்ந்தா நீ வாழ்வே .. நீ வாழ்ந்தாதான் தமிழன் வாழ முடியும் உயர முடியும்.. உன்னை பாதுகாக்கிறதுல எங்க சுய நலமும் அடங்கியிருக்கு. டோன்ட் ஒர்ரி



தமிழ்த்தாய்:

அந்த நம்பிக்கையிலதாம்பா நான் காலத்தை தள்றேன்