Sunday, October 25, 2009

ஹாட் நியூஸ் ஃப்ரம் ஆந்திரா

இது ஒரு நீ.........ண்ட பதிவு போல் தோன்றினாலும் தலைப்புக்கான பதிவுக்கும் மற்றதுக்கும் தொடர்பில்லை. அவற்றை வெவ்வேறு பதிவுகளாக போட வேண்டும். இன்னைக்கே அமரராயிட்டா என் மகள் பென் ட்ரைவ்ல என்ன இருக்குதுனு கூட பார்க்காம ஃபார்மெட் அடிச்சுருவா. அதனால ஒரே மூச்சில் இத்தனை பதிவுகள்.
1. நதி நீர் இணைப்பு, கூட்டுறவு பண்ணை விவசாயம் பற்றியெல்லாம் புள்ளி விவரங்களுடன் எழுதியுள்ளேன்
2. ஒரு கவிதையும் இருக்கிறது. தேவைய பற்றி
3.பிறன் இல் விழைதல் பற்றியும் ஒரு பதிவு. (ஊரான் பெண்டாட்டிய பெண்டாள நினைக்கிறது)
4.என் ஆதர்ச திட்டமான ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி ஒரு உரையாடலும் உள்ளது.
பி.கு: இதிலிருந்து எல்லாம் நீங்க தப்பவே முடியாது . ஏதோ ஒரு நாள் புதுசா எழுத முடியாத சமயம் மீள் பதிவு வந்தே தீரும். கபர்தார் !

Now Hot news from Andhra


1.சித்தூர்.எம்பி.சிவபிரசாத் வீட்டில் (ஐதராபாத்) 2.5 லட்சம் கொள்ளை
எம்.பிங்கதான் கொள்ளையடிப்பாங்கனு சொல்றாங்க..இதென்ன எம்.பி.வீட்லயே கொள்ளை. இவர் ஒரு நடிகரும் கூட சத்யவேடுவில் எம்.எல்.ஏ வாட தோற்ற இவர் சித்தூர் ரிசர்வ ஆனதாலும் சந்திரபாபுவின் குப்பம் தொகுதி மெஜாரிட்டியாலும் கரையேறினார்.அரசு விழாக்களில் தமக்கு ப்ரோட்டாகால் மரியாதை தரப்படாததை கண்டித்து சித்தூர் டிஸ்ட்ரிக்ட் ரெவ்யூ கமிட்டி கூட்டத்தில் ஜில்லா பரிஷத் சேர்மன் நாற்காலியில் உட்கார்ந்து அலம்பல் பண்ணினார்.
2.தலாய் லாமாவுக்கு வரவேற்பு :
அதென்னன்னே தெரியலை லொடக்காணி பார்ட்டிங்களுக்கு முட்டுதர வேண்டியது விரோதத்தை விலைக்கு வாங்க வேண்டியது. சீனாக்காரன் ஏற்கெனவே காண்டெடுத்து போய் கிடக்கான் .இப்ப இது வேற. இஸ்ரேல் விஷயமாகட்டும், பங்களா தேஷ் விஷயமாகட்டும் நமக்கு தேவையா. இப்ப பங்களா தேஷாவது நண்பனா என்றால் இல்லை. பாக் விரோதம் மட்டும் தொடருது.
ஒரு ஜோக்:
மன்மோகன் கீழே விழுந்தா?
மண்மோகன்
3.என்.டி.ஆர் பாத்திரத்தில் சத்ருக்ன சின்ஹா. ராம் கோபால் வர்மா ரக்த சரித்ராங்கற பேர்ல ஃபேக்ஷன் யுத்தத்தை படமாக்கபோறாராம். பரிடாலா ரவீந்திரா கதைய எடுக்கறாங்களாம். ரவீந்திராவோட அப்பா ஒரு நக்ஸல் தெரியுமோ? என்.டி.ஆர் கடைசியா சந்திச்ச தேர்தல் சமயத்துல நான் முதல்வரானால் நக்ஸல் மேல் தடையை நீக்குவேன்னு என்.டி.ஆர் அறிவிக்க காரணம் இவர்தான். ஆனால் சந்திரபாபு ஆப்பு வச்சப்ப ரவி பாபுவுக்கு தாளம் போட்டார். இதான் நேரங்கறது.
4. ராணுவத்தில் 11,500 அதிகாரிகள் பதவி காலியா இருக்காம். இதை ஃபில் அப் பண்றதுக்கு 20 வ. பிடிக்குமாம். காரணம் மிலிட்டரில சேர வரவங்க கம்மி. வி.ஆர்.எஸ்ல போறவங்க ஜாஸ்தியாயிட்டாங்களாம்.
5.ஆந்திர கவர்னர் திவாரி அமெரிக்கா போறார். கர்னாடக கவர்னருக்கு கூடுதல் பொறுப்பா ஆந்திரா/ இங்கே சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டம் நடக்க வேண்டியிருக்கு. சோனியாவை சந்திச்சு 40 நிமிஷம் பேசினப்பின்னாடி ஜகன் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தமாதிரி பேசினாலும் ,அப்பா திட்டங்களை முழு வீச்சில் அமல் செய்ய அரசின் மீது அழுத்தம் கொடுப்பேன்னு சொன்னது வயித்தை கலக்கிட்ட மாதிரி இருக்கு. திவாரிக்கு ஒய்.எஸ்.ஆர் மேல ஒரு இனம் புரியாத பாசம். சட்டமன்ற கட்சி கூட்டத்துல ஜகன் ஆட்கள் திடீர் புரட்சி பண்ணா எப்படின்னோ என்னவோ தெரியல திவாரிய அமெரிக்கா அனுப்பறாங்க. சீப்பை ஒளிச்சு வச்சுட்டா கல்யாணம் நின்னுடுமா? பால் தம்ளரை ஒளிச்சு வச்சுட்டா
ஃப ர்ஸ்ட் நைட் நின்னுருமா?
6.ஒய்.எஸ்.ஆர் மரணத்தால் காலியான புலிவேந்தலா சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ் நெருங்கிய உறவினர் யராவது நின்னா (ஜகன்?) போட்டியிட க்டாதுனு தெ.தேசம் முடிவு பண்ணியிருக்கு. பாஸ்ட்ல பாலயோகி மரணத்துக்கப்பறம் அவர் தொகுதில அவரோட மனைவி போட்டியிட்டப்ப காங்கிரஸ் விட்டு குடுத்துருச்சாம். அதுக்கு முன்னாடி நரசிம்மராவ் நந்தியாலால போட்டியிட்டப்ப என்.டி.ஆர் விட்டுகுடுத்தாருங்கோ
7.மாவோக்கள் இடதுசாரிகள் அல்லர்.- சி.பி.எம்.தலைமை செயலர் கரத். அடங்கொப்புரானெ.. அப்ப நீங்க மட்டும் தான் இடது சாரிங்களா? மேற்கு வங்கத்து பங்கத்தை எப்படிண்ணே மறைப்பீங்க? அப்போ நீங்க கூட இடது சாரிங்க கிடையாதே. ரெண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி கொடுத்த ஒய்.எஸ்.ஆர் தான் உண்மையான இடது சாரின்னு நீங்களும் தெரிஞ்சுக்கிட்டிங்களோ?
8 சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திரபாபு திருப்பதியில் பலிஜ சேவாசமிதி கட்டிடத்தை திறந்துவைத்தார். சிரஞ்சீவி பலிஜா வகுப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லா ஜாதிக்கும் கட்சி இருக்கு மனுஷ ஜாதிக்குனு ஒரு கட்சி" இப்ப வருமோ எப்ப வருமோ?"
தம்பிகளா!
பலான ஜோக்ஸ் படிக்க இந்த வலைப்பூவுக்கு வந்திருக்கும் உங்களுக்கு இந்த பதிவிலும் சர்வ நிச்சயமாக பலான ஜோக்ஸை தந்துள்ளேன். ஆனால் ஒரு வேண்டுகோள் அதற்கு முன் நான் உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் குடும்பம், உங்கள் காதலன்/காதலி , கணவன்/மனைவி , மகன்/மகள் எதிர்காலத்தையும் கருதி கூறியிருக்கும் சில சமாச்சாரங்களையும் படியுங்கள்:

1.செக்ஸ் மீது கவனம் செல்லுதல் பாவமும் அல்ல. தவறும் அல்ல. ஆனால் ஆரோக்கியமான, சட்டப்பூர்வமான , குற்ற உணர்ச்சிக்கு இடமில்லாத நிலையில் செக்ஸ் மீது கவனம் செல்லுவதால் என்ன பலன் என்று சிந்தியுங்கள்.

2.செக்ஸுக்கு நானோ இயற்கையோ எதிரியில்லை. ஆனால் மனிதகுலம் இயற்கை பாதையை விட்டு ரொம்பவே விலகிவந்துவிட்டது. 13 அ 14 வயதில் செக்ஸுக்கு தயாராகிவிடும் இளைஞன் அ இளம்பெண் கு.ப.10 வருடங்கள் அதிக பட்சம் 20 வருடங்கள் செக்ஸ் இல்லாமலே சமாளித்தாக வேண்டி உள்ளது. இதற்கு காரணம் சமுதாயத்தில் ஏற்பட்டுவிட்ட மாற்றங்கள். அந்த காலத்தில் பால்ய திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். திருமணம் நடந்து விட்டாலும் பெண் பருவமடையும் வரை தாய் வீட்டிலேயே இருப்பாள். என்ன ஒரு அற்புதமான ஏற்பாடு பாருங்கள்.
ஆனால் அக்காலத்தில் மருத்துவத்துறையில் போதிய வளர்ச்சி இன்மையால் (தடுப்பு ஊசி, வேக்சின் முதலானவை) இளம் வயதிலேயே மரணங்கள் சர்வ சகஜம். இதனால் பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே விதவைகளாவதும் சகஜம்.பால்ய திருமண முறையை மீண்டும் எடுத்து வருவது வீண்வேலை. அக்காலத்தில் மக்கள் உண்மையிலேயே கூடி வாழ்ந்தார்கள். தான் என்ற அகந்தை ஓரளவு கட்டுக்குள் இருந்தது. பெற்றோரோ/ஆசிரியரோ/ஊர் பெரியவர்களோ சொன்னதை கேட்டு அப்படியே நடந்து கொள்ளும் தன்மை இருந்தது. இப்போது அந்த நிலை இல்லை. இதற்கு என்னதான் தீர்வு ? விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குதல் ஒன்றே இதற்கு அறிவுப்பூர்வமான தீர்வாகும். பாக்யராஜ் ஸ்டைலில் சொன்னால் " வீட்டுச்சாப்பாடு கிடைக்கிற வரைக்கும் கொஞ்ச காலத்துக்கு ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா தப்பில்லைதான். ஆனால் அந்த ஹோட்டல் ( செக்ஸ் ஒர்க்கர்- ஆணாகட்டும், பெண்ணாக்ட்டும்) தரமானதுதானா ( நோய் பயம்) என்பதையும் உறுதி செய்ய வேண்டியுள்ளது.

ஜோதிடப்படி பார்த்தாலும் சரி/ உலக அனுபவப்படி பார்த்தாலும் சரி. எல்லா ஆண் பெண்ணும் கல்யாணம் கட்டி ஏக பத்தினி விரதர்களாகவோ , அக்மார்க் பத்தினிகளாகவோ இருந்து பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வதில்லை. அரசு பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்க வேண்டும். முன் வரும் செக்ஸ் வொர்க்கர்ஸுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும் ( நோய் தடுப்பு/கர்ப்ப தடை/ உச்சம் எய்துவதற்கான சூட்சுமங்களில்) அப்போது தான் ஒவ்வொரு இளைஞனும், யுவதியும் ஆரோக்கியமாக வளரமுடியும். திருமண தாம்பத்ய வாழ்வில் வெற்றி பெற முடியும். முக்கியமாக காம்ப்ளெக்ஸுகளுக்கு இடமில்லாத வாழ்வு வரிக்கும், மேலும் கணவன் மனைவியில் ஒருவர் சேடிஸ்டாக, அடுத்தவர் மசாகிஸ்டாக இருந்தால் தான் திருமண வாழ்வு வெற்றி பெறும் என்ற இழி நிலை மாறும். நாளை அவர்கள் பிள்ளைகளை பெற்று வளர்த்தாலும் அவர்களும் நல்ல உடல்,மன நிலைகளுடன் வளர்வார்கள். இது என் கருத்து. இது அமலாக 10 வருடம்பிடிக்குமோ 20 வருடம் பிடிக்குமோ அது வேறு விஷயம்.

அதுவரை என்ன செய்ய ?
இருக்கும் ஆல்ட்டர் நேட்டிவ்ஸ் சுய இன்பம் , உடலுறவே பிரதானமான காதல் விவகாரங்கள் ,கள்ள உறவுகள், ஹோமோ செக்ஸுவாலிட்டி, லெஸ்பியனிசம் , கற்பழிப்புகள், பயந்து பயந்து விபச்சாரம். இந்த பட்டியலில் குறைந்த பட்ச பிரச்சினைகளுடன் உடலுறவு வேட்கையை தீர்ப்பது சுய இன்பம் ஒன்றே.

சுய இன்பத்தால் என்ன பிரச்சினை:
(Please Wait for my next post


இலக்கியம் என்பதே கேள்வி பதில்தான்
எல்லா இலக்கியங்களும் ஒன்று கேள்வியை எழுப்புகின்றன.
அல்லது பதிலை தருகின்றன.
இதில் இயற்கை, சமூகம், மனித வாழ்வுகள் குறித்த பதிவுகள், வியப்புகள் ,விமர்சனங்கள் அடிஷ்னல்
சோற்றுக்கில்லாது சாகும் காலம் வெகு தொலைவில் இல்லை
நதிகள் இணைப்பு குறித்து அவ்வப்போது என் பதிவுகளில் ஐயர் சொல்லும் மந்திரத்தில் நமஹ /ஸ்வாஹா போல் வருவதை கவனிப்பவர்கள் என்னாத்துக்கு இந்த மனுசன் இப்படி நொய் நொய்ங்கறான் என்று அலுத்துக்கொள்ளலாம். ஆனால் கீழ் காணும் புள்ளிவிவரங்களை பாருங்கள் . நாம் சோற்றுக்கில்லாது சாகும் காலம் வெகு தொலைவில் இல்லை
1. விவசாய உற்பத்தி குறைவது 1995-96 லேயே துவங்கிவிட்டது.
2. சுமார் 70 சதவீதம் பேர் சுகுரா சொன்னா 68 % பேர் விவசாயத்தை நம்பியிருக்காங்க (மத்த 30 சதம் பேரும் திங்கறதுக்காகவாவது விவசாயத்து மேலதானே ஆதாரப்படனும்? மேலும் 68% விவசாயத்துல லோல்பட்டு பொருளீட்டினா மத்த 32 சதவீதம் அவனை நேரிடையாவோ ,மறைமுகமாகவோ எக்ஸ்ப்ளாயிட் பண்ணித்தானே பிழைக்கிறோம்
3. மத்திய பட்ஜெட் ஒதுக்கீட்டை பாருங்க:
எழுவது சதவீதம் மக்களை வாழ வைக்கும் விவசாயத்துறையின் நாடித்துடிப்பான நீர்ப்பாசனத்துக்கு 0.35 சதவீதம் . சுமார் 2 % பேரை மட்டும் வாழவைக்கிற தகவல் தொடர்பு துறைக்கு 13 % . உருப்படுவோமா ? என்னதான் லொல்லு பண்ணாலும் லல்லு சூப்பர் தத்துவம் ஒன்னு விட்டாரு. பால் குடுக்கிற மாட்டுக்கு புண்ணாக்கு போட்டேன். புண்ணாக்கு போட்ட மாடெல்லாம் பால் கறந்துச்சு. ஆனால் நாம என்ன பண்றோம் வெறுமனே சாணி போட்டு, கோமயம் பெய்யற மாடுகளுக்கு டன் டன்னா புண்ணாக்கு போடறோம்
4. நாட்டில் உள்ள 80 சதவீதம் விவசாயிகளுக்கு 1 ஹெக்டேருக்கும் குறைவான நிலம்தான் இருக்கு. ( பயிர் செலவை குறைக்கனும்னா மெக்கனைசேசன் பண்ணனும், சொட்டு நீர்பாசனம், செக் டேம் ,லொட்டு லொசுக்குனு ஆயிரம் பண்ணனும் அந்த நொள்ளை ஒரு ஹெக்டேருக்கு இதெல்லாம் பண்ணா கட்டுப்படியாகுமா? இதுக்குதான் நான் 1986 லருந்தே கூவிக்கிட்டு இருக்கேன். கூட்டுறவு பண்ணை விவசாயம் செய்யலாம். நாடு முழுக்க உள்ள விவசாயிகளை திரட்டி கூட்டுறவு சங்கம் வைப்போம். விவசாயி தன் நிலத்தை நீண்ட குத்தகைக்கு தரான் (சங்கத்துக்கு) விருப்பம் இருந்தா அவனும் உழைக்கிறான். (குத்தகை தனி விளைச்சல்ல பங்கும் கிடைக்கும். வேணாம்னா குத்தகை வாங்கி திங்கலாம்) இதை ஒய்.எஸ்.ஆர் ட்ரை பண்ண பார்த்தார். மொத்தமா 3 கிராமம் கூட முன்வரலை (எதிர்கட்சிங்க லொள்ளு காரணமா)
5.இதுல அதிர்ச்சிக்குரிய மற்றொரு விஷயம் என்னன்னா இப்போ உள்ள விவசாயிகள்ள 40 % பேரு விட்டு தொலைச்சுரலாம்னு இருக்கேன்னு சொல்றாங்களாம் .
6. விட்டுட்டா என்னாகும்? 2006 லயே 50 லட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்தோம். இந்திரா காந்தி காலத்துல ரஷ்யாலேருந்து கோதுமை இறக்குமதி பண்ணப்போதான் பார்த்தினீயம் இந்தியாவுக்குள்ள வந்துருச்சாம். அதை எரிச்சா கூட விதைகள் பட் பட்டுனு வெடிச்சு தூர விழுந்து அங்கே முளைக்கும்னா பார்த்துக்கோங்க ( இது முக்கியமான களைங்கோ !) இது மட்டுமில்லே 2007 ஜூனுக்கு பற்றாக்குறை நிலை எவ்ளனு பாருங்க !
கோதுமை: 40 லட்சம் டன்
பருப்பு வகை: 10 லட்சம் டன்
எண்ணெய் வித்துக்கள்: 20 லட்சம் டன்
பற்றாக்குறைன்னா நமக்கென்ன போச்சுனு நினைச்சுராதிங்கன்னா ! சரக்குக்கு டிமாண்ட் ஜாஸ்தியாச்சுன்னா மார்கெட்ல ரேட்டு பிச்சுக்கும்.

7. இறங்கு முகம்:
ரஜினியோட மூன்றுமுகம் மாதிரி இறங்கு முகம்னு ஒரு படம் எடுத்தா இந்தியாவோட விவசாயத்துறைய ஹீரோவா போட்டுரலாம். 1995ல சராசரி தானிய உற்பத்தி 207 லட்சம் டன் 2007 ஆம் வருசம் பார்த்திங்கண்ணா 186 டன் வித்யாசம் என்ன ? கூட்டி கழிச்சு பாருங்க ! 21 லட்சம் டன் குறைஞ்சு போச்சு. இப்போ 2009 வருசத்துக்கு எத்தனை குறையும்னு கற்பனை பண்ணி பாருங்க தாளி ! சோத்துக்கில்லாம சாகப்போறது நிச்சயம்.

8.மற்ற துறைகளில் முதலீடு செய்தா அதுலருந்து கிடைக்கிற வருமானம் வருசத்துக்கு 4 சதவீதம் உயருது. விவசாயத்துல ? நல்லா உத்து படிங்க 0.28% தான். என்னா மயித்துக்கு விவசாயம் பண்ணுவான் விவசாயி. உழுதவன் கணக்கு பார்த்தா உழக்கு கூட மிஞ்சாதுனு அன்னைகென்னைக்கோ சொல்லிவச்சது இன்னைக்கும் நடக்குதுன்னா இதான் வளர்ச்சியா?
9 வருசத்துக்கு 20 ஆயிரம் விவசாயி தற்கொலை பண்ணிக்கிரான். ( ஆந்திரால ஒய்.எஸ்.ஆர் முதல்வரானதும் பழைய கரெண்ட் பில் பாக்கி மொத்தத்தையும் ரத்து பண்ணாரு. இலவச மின்சாரம் கொடுத்தார்)
10. பஞ்சாப்ல 7 வருசத்துக்கு முன்னாடி( அதாவது 2000 வருசத்துல) ஏக்கருக்கு 25 குவிண்டால் கோதுமை கிடச்சது. இப்போ (2007ல) 16 குவிண்டால் தான் கிடைக்குது. என்ன காரணம்? மாட்டுக்கு இஞ்செக்ஷன் போட்டு பாலை ஒட்டக்கறந்த மாதிரி கண்ட உரத்தை போட்டு பூமியோட சாரத்தை உறிஞ்சு எடுத்தாச்சு. பிரசவம் நடந்தாலே டீல் ஆயிரும். குறுகிய கால சாகுபடி எல்லாம் அபார்ஷன் மாதிரிதானே . நம்மாழ்வார் மாதிரி பார்ட்டிங்க இயற்கை விவசாயம் பண்ண்வோம்
னு தலை தலையா அடிச்சிக்கிறாங்க கேட்டாதானே !
11.இதர சமாச்சாரங்களுக்காக (ரியல் எஸ்டேட், தொழிற்பூங்கா , இத்யாதி) வருசத்துக்கு 7.5 லட்சம் ஹெக்டேர் நிலம் டைவர்ட் ஆகுது. தாளி சாரம் குறைஞ்சுக்கிட்டே வருது , இதுல நிலத்தோட அளவும் குறைஞ்சிட்டே போனா என்னாத்த வெளையறது, என்னாத்த திங்கறது.
12. தேசிய உற்பத்தின்னா என்னானு தெரியுமான்னா ? ஒரு வருசத்துல நாட்ல உற்பத்தியான சரக்குகள்மற்றும் அளீக்கப்பட்ட செர்வீஸசோட வேல்யூதான் தேசீய உற்பத்தி. 1975 ல விவசாயத்துறையோட பங்களிப்பு 35 % இப்போ 19 சதவீதம். லல்லு ரயில்வே மந்திரியாகறதுக்குமுந்தி ரயில்வேயோட லாபம் 2 சதம். ஆனா இப்போ ?
கெவர்மென்டு ரோட்ல பஸ் விடறவன் கோடி கோடியா குவிக்கலாம். ஆனால் சொந்த ட்ராக்ல ஓடற ரயில் சம்பாதிக்க கூடாதானு யோசிச்சாரு லல்லு. உண்மையான ப்ரொடக்டிவிட்டி உள்ள ஒரே துறை விவசாயதுறைதான். மற்றதெல்லாம் கன்வெர்ஷன் தான். ஒரு கடலைக்கொட்டைய புதைச்சு வச்சா 40 கொட்டையாவது கிடைக்கும் . ஒருலட்ச ரூபா நானோ காரை புதைச்சு வச்சா என்ன கிடைக்கும் ? காயலான் கடைக்கு போட்டா பட்டாணி கிடைக்கும் அவ்ளதான்.
13.இன்னொரு வெட்ககேட்டை பாருங்க இருக்கிற நிலத்துல 60 சதவீதம் வானம் பார்த்த பூமி தானாம் (மத்ததெல்லாம் நமீதாவை பார்க்குதானு கேட்ராதிங்க) சுதந்திரம் வந்து 60 வருசத்துக்கப்பறம் இது நிலைமை
14.ஒட்டுமொத்தமா விவசாயத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை பாருங்க ! முதல் ஐந்தாண்டு திட்டத்துல 23% பத்தாவது ஐந்தாண்டு திட்டத்துல ... மயக்கம் போட்ராதிங்க வெறும் 5 சதவீதம்.

பத்தினியெல்லாம் பரத்தையாக போறா

இதெல்லாம் பார்த்துட்டுதான் சொல்றேன். என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் அமல் படுத்தபடலேன்னா சோத்துக்கில்லாம சாகப்போறோம். பத்தினியெல்லாம் பரத்தையாக போறா ! அஞ்சுக்கும் பத்துக்கும் குத்தி கொன்னுக்கிட்டு சாகப்போறோம் .(இப்பவும் அதான் நிலைன்னா சாரி. நிலைமை இதை விட ரொம்ப மோசமாயிரும்)
இந்தியாவை பணக்கார நாடாக மாற்ற, ஓவர் நைட் நாட்டின் 10 கோடி அன் எம்ப்ளாயிட் யூத்தும் வேலை வாய்ப்பு பெற நதிகள் யாவும் குறைந்த செலவில் , நிறைந்த தரத்துடன் , குறுகிய காலத்தில் , விரைவாக இணைக்கப்பட நான் 1986 முதல் சிந்தித்து , தீட்டி நானே பிரதமனாகி ( நமக்கென்னங்க பெரிசா மரியாதை) அமல் படுத்தவென்று ரகசியமாக வைத்திருந்து 1997 நவம்பர் முதல் தலைவர்களுக்கு அனுப்பி ஓய்ந்த ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை மையமாக வைத்து நான் எழுதிய /எழுத முயன்ற சிறுகதை/நாவல்/திரைக்கதைகள் நூறாகவாவது இருக்கும்.அவற்றில் இன்றைக்கும் ஃப்ரஷ்ஷாக இருக்க கூடியவற்றை பதிவுலகத்தின் முன் வைக்கிறேன். அதற்கு முன் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

மனசாட்சி: ஏம்பா இப்படி ஆரம்பிச்சு நீ ஆதியோடந்தமா எழுத ஆரம்பிச்சா சனம் படிக்குங்கற
நான்: இல்லைதான் அதுக்காக சொல்லாம விட்டுர முடியுமா?
மனசாட்சி:இது எப்படியிருக்குன்னா சுஜாதாவே மேலுப்பா புரிஞ்சவ புரிஞ்சுக்க புரியாதவன் சொரிஞ்சுக்கிட்டு போன்னாரு. நீ சொல்றத பார்த்தா நான் சொல்லிருவன். அதுவும் மொக்கை போட்டு சொல்வேன். படிக்கிறவன் படிங்கறமாதிரி இருக்கு.
நான்:இப்ப என்ன செய்யனுங்கற?
மனசாட்சி: ச்சும்மா தமாசா சொல்ப்பா !
நான்: நாட்டோட எதிர்காலம் உனக்கு தமாசா இருக்கா ?
மனசாட்சி:தா பாரு அடல்ட் ஜோக்கெல்லாம் போட்டவன் நீ ஆப்பரேஷன் இந்தியா பத்தி மொக்கை போடாம சொல்லுன்னா கோச்சுக்கறியே
நான்:இப்ப என்ன கிச்சு கிச்சு காட்டிக்கிட்டே சொல்லனும் அவ்ளதான?
மனசாட்சி:தட்ஸ் ஆல் யுவர் ஆனர்
நான்: இந்த திட்டத்தோட ஆதி மூலம் என்ன தெரியுமா ?
மனசாட்சி:உள் மூலமா வெளி மூலமா கண்ணா ?
நான்:இதெல்லாம் ஓவர்.
மனசாட்சி: நாம என்ன க்ரிக்கெட்டா ஆடறோம்?
நான்:என்னை சொல்ல விடறியா?
மனசாட்சி:எங்கே உன்னை சொல்ல விட்டா வந்தவன் எல்லாம் தலை தெறிக்க ஓடிர்ர மாதிரியிருக்கே
நான்: உன்னோட இதே ரோதனையா போச்சு. வர வர நீ ந்யூஸ் சேனல்ஸ் பார்த்து கெட்டுப்போயிட்டே .எதிர்கட்சி மாதிரி தாலியறுக்கிறே..
மனசாட்சி:இன்னாபா ஃப்ளோ கட் ஆயிருச்சா?
நான்: உனக்குதான் கட் ஆகப்போவுது டங்குவார்
மனசாட்சி: இதானாப்பா இந்தியாவை பணக்கார நாடாக்கறதுல உனக்கிருக்கிற அக்கறை?
நான்: திட்டத்துக்கு இன்ஸ்பிரேஷன் யாரு தெரியுமா? என்.டி.ஆர். சமுதாயமே என் கோவில் ஏழை மக்களே என் தெய்வங்கள்னாரு அவரு ..
மனசாட்சி:இன்ஸ்பிரேஷன் கீட்டம். ஏதோ ஒரு சம்பவம் ட்ரிக்கர் மாதிரி வேலை செய்திருக்குமே?
நான்:ஆமாம்பா. நான் டிகிரி செகண்ட் இயர் படிக்கிறேன்.அப்ப ஒல்லியா ஒரு பையனும், கில்லியா ஒரு பெண்ணும் ஓடி வந்துட்டாங்க, பிரம்பு நாற்காலி பண்றவங்க. கல்யாணம் பண்ணிக்க போறாங்க. நம்ம சென்டர் இருந்த தெருவுல குடியிருந்தாங்க. அப்போ ஒரு டெயிலர் கடைலதான் டெண்ட். செட்டுல ஒரு நாய் என்ன சொல்லுச்சு தெரியுமா ? "பட்டா ! இந்த ஒல்லிபீச்சான ரெண்டு காட்டு காட்டி (அடித்து) அவளை முடிச்சுரனும் மாமா" இத்தனைக்கும் அவன் நல்ல குடும்பத்து பையன் தான். இன்டலிஜெண்ட் தான்.
மனசாட்சி:அட காஞ்சானுங்களே ! அம்பதுக்கு நூறுக்கும் வரத்தான் நூறு டிக்கட் காத்திருக்கே.. இதெல்லாம் காண்டுதானே !
நான்: இல்லையா பின்னே அப்பத்தான் முடிவு பண்ணேன். தாளி இவனுகளை சும்மா விட்டா பிழைக்க விடமாட்டானுக . பேய்க்கு வேலை கொடுத்த மாதிரி கொடுத்துரனும்னு
மனசாட்சி:என்னா வேலைப்பா?
நான்:அந்த நிமிஷம் எனக்கே தெரியாது. அப்பறப்பறம்.. இந்தியாவுக்கும், விவசாயத்துக்கும் உள்ள பொருத்தம் இத்யாதியெலாம் உறைச்ச பிறகு, வடக்குல வெள்ளம், தெற்கில வறட்சி வந்து விவசாயத்தோட முதுகெலும்பை நொறுக்கற சங்கதியெல்லாம் கூட்டி கழிச்சு தான் வேலையற்ற யுவதி,யுவர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஏற்படுத்தி நதிகளை இணைத்தல் என்ற . கான்செப்ட் உருவாச்சு
மனசாட்சி: நீ சொல்றதெல்லாம் வெறும் யோசனை மாதிரியிருக்கே தவிர திட்டங்கற மாதிரி தெரியலியே.
நான்: கண்ணா ! நான் சுருக்கமா சொன்னேன். இதுக்கான தியரிட்டிகல் சப்போர்ட்ட விவரிச்சா மொக்கை போடறேன்னிருவ. நம்ம சைட்லயே சீரியஸா இன்னொரு பதிவு போட்டிருக்கேன். தேடிப்பிடிச்சு படி..
மனசாட்சி:அது சரி அது சரி. மேலே போ!
நான்:வேணாம்பா ஒய்.எஸ்.ஆர் அப்படி மேலே போய்தான் ஒரேதாட்டியா போய் சேர்ந்துட்டாரு.
மனசாட்சி: சரி முந்துக்கு போ ! (முன்னாலே போ)
நான்:இப்படித்தான் சந்திரபாபு 9 வருசமா முந்துக்கு போவாலி ! முந்துக்கு போவாலி !ன்னு ஜல்லியடிச்சிக்கிட்டிருந்தாரு. இன்னைக்கு நாறிட்டாரு

மனசாட்சி:என்ன நீ நான் ஏதோ உன்னை கலாய்க்கலாம்னு பார்த்தா நீ என்னை கலாய்க்கிறே !
நான்:நைனா என் வயசு 42 அதை திருப்பி போடு 24 ! தப்பாட்டம் ஆட இறங்கிட்டேனு வை .. நாஸ்திதான்
மனசாட்சி: அட வேணாம்பா ஆள விடு
நான்: விசயத்துக்கு வரேன்
மனசாட்சி: வா.. வா..
நான்:வேலை கொடுக்கனும். அதுக்கு சிறப்பு ராணுவம். இந்தியாவோட உயிர் நாடி ,70% பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிற துறை ,உண்மையான ப்ரொடக்டிவிட்டி இருக்கிற துறை, பொல்யூஷனுக்கிடமில்லாத ஒரே துறை விவசாயத்துறை அதுக்கிருக்கிற பெரும் பிரச்சினை பாசன் நீர் பற்றாக்குறை. அதுக்காக அந்த சிறப்பு ராணுவத்துக்கு கொடுக்கிற வேலை நதிகளை இணைத்தல்
மனசாட்சி: ஏன்பா தெரியாம கேட்கிறேன். ஒய்.எஸ். ஏதோ கோவணம் சைஸுக்கு கால்வாய் வெட்டி கிருஷ்ணாவையும், கோதாவரியையும் இணைக்கிறேன்னாரு. அதுக்கே நிலத்தை கையகப்படுத்தறதுல ஆயிரம் வில்லங்கம். இதுல எல்லா நதிகளையும் இணைக்கனும்னா?

நான்:சரியான கேள்வி. இதுக்குதான் கூட்டுறவுப்பண்ணை விவசாயம். விவசாயிகள் எல்லாரும் தங்கள் கிராமத்துல ஒரு கூட்டுறவு சங்கம் ஏற்பாடு செய்து தங்களோட நிலத்தை மேற்படி சங்கத்துக்கு லீசுக்கு கொடுத்துருவாங்க. அதுல கால்வாய் வெட்ராங்களோ ,கோல்ட் ஸ்டோரேஜு கட்டறாங்களோ, பல்ப் இண்டஸ்ட்ரி வைக்கிறாங்களோ அதுக்கும் வருசா வருசம் வர்ர லீசு தொகைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. டாணு வந்துரும். சங்கத்துல இருக்கிற விவசாயிகள் எல்லாரும் டீமா பயிர் வேலை பார்ப்பாங்க.
மனசாட்சி:இன்னொரு சந்தேகம் !
நான்:கேட்டுத்தொலை
மனசாட்சி: நானே ஒரு 50 ஏக்கர் வச்சிருக்கேனு வை . அதை சங்கத்துக்கு லீசுக்கு கொடுத்துட்டேன். ஆனால் நான் எப்படி மம்முட்டி பிடிச்சு வேலை செய்வேன்?
நான்:செய்யாதே..வருசா வருசம் லீசு வாங்கி சாப்பிடு
மனசாட்சி:ஒரு வேளை கூட்டுறவு பண்ணை விவசாயம் ஊத்திக்கிட்டா?
நான்:அபிஷ்டு ! அபிஷ்டு! இதுக்கு முன்னாடி ஒரு பதிவு போட்டிருக்கேன் படிச்சு பாரு. 80 சதம் விவசாயிக்கிட்டே ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலம்தான் இருக்கு. விவசாயம் சக்ஸஸ் ஃபுல் ஆகணும்னா பயிர் செலவை குறைக்கனும். அதுக்கு மெக்கனைசேஷன், தொழில் நுட்பம், வாட்டர் மேனேஜ்மென்ட், நில பரிசோதனை, தரமான விதைகள், இயற்கை விவசாயம், க்ராப் இன்ஷியூரன்ஸ் லொட்டு லொசுக்குனு ஆயிரம் இருக்கு. ஒட்டு மொத்தமா இன்வெஸ்ட் பண்ணா செலவை குறைக்கலாம். அதை ரஜினி மாதிரி சிங்கிளா வந்து சாதிக்க முடியாதில்லை. அதுக்குதான் கூட்டுறவு பண்ணை விவசாயம்
மனசாட்சி:தனியா மாட்டிக்கிட்டு சாகறதுக்கு பதில் சங்கமா மாட்டி சாவுங்கற.
நான்:முண்டம் ! தண்டம் ! நீ தனியாளா இருந்தா எல்லாத்துக்கும் நீ அலையனும். சங்கமா இருந்தா எல்லா நாயும் உங்களை தேடிவரும். உன் நிலத்தோட விஸ்தீரணம் குறைவா இருந்தா பாங்கிகாரன் கடன் குடுக்க ரோசிப்பான். அரசாங்கமும் உன்னை தேடி பிடிச்சு உதவ மெனக்கெடனும் சிகப்பு நாடாத்தனத்துல விதை வர்ரதுக்குள்ள விதைக்கிறா சீசனே போயிரும். நீ சங்கமா இருந்தா அதுலயும் ஒரு மண்டல அளவுல ஒருங்கிணைப்பு இருந்தா ஆஃபீஸர்ல இருந்து, பாங்கி,இன்ஷியூரன்ஸ் எல்லாமே உங்க ஆஃபீசண்டை வந்து தவம் கிடப்பான்
மனசாட்சி:அதுசரிப்பா.. தனியா செய்தாலும், கூட்டா செய்தாலும் வந்த விளைச்சலை சரியான விலைக்கு விக்கனுமே
நான்:அதுக்கும் அதே விதிதான். விளைச்சல் எல்லாத்தயும் ஒரே நாள்ள, அவசரமா,தனி தனியா விக்க நினைக்கறதால விலையும் குறைச்சல், அலைச்சலும் கூட. விவசாயிகள் சங்க நிர்வாகம்னா முண்டாசு கட்டின பெருசுங்க ( எலக்டட் டைரக்டர்ஸ்) மட்டும் இருக்காது. அதுக்கு தேவையான எல்லா நிபுணர்களையும் அரசு கொடுத்து உதவும். தேசிய அளவுல அடுத்த வருசம் என்னென்ன தானியம் தேவை? எவ்ள தேவை, அதிகப்படியா வந்ததை எத்தனை நாள் ஸ்டாக் பண்ணனும் ?அதுக்கு எவ்ள பெரிய கிடங்கு தேவை, கோல்டு ஸ்டோரேஜ் தேவையா? இல்லே கன்ஸூமர் ப்ராடக்டா மாத்தி விக்கனுமா? அதுக்கு என்ன ஃபேக்டரி தேவை? இப்படி சகலமும் இன்டர் நெட் மூலமா விரல் நுனில இருக்கும்பா.
மனசாட்சி: சரி கண்ணு.. நீ சொல்றதெல்லாம் ஒர்க் அவுட் ஆகி லாபம் வந்ததுன்னே வை ..அதை எப்படி பிரிச்சுக்கறதாம்.
நான்:லேண்ட் ,லேபர்,கேப்பிடல் ,ஆர்கனைசேஷன் கெட்ஸ் ரெண்ட்,லேபர்,இன்டரஸ்ட், அண்ட் பிராஃபிட்.
மனசாட்சி:என்னமோ இங்கிலீஷ்லபீலா விட்டுட்ட
நான்:இதை தமிழ்லசொல்லனும்னா ஒரு பத்தி எழுதனும்பா
மனசாட்சி: சரி அண்ணாச்சி ! விவசாயி கூட்டா பயிர் பண்றான், விளச்சலை ஸ்டாக் வச்சு மார்க்கெட் பண்றானே வை. கருப்புபண முதலைங்க சும்மா இருக்குமாம். மார்க்கெட் கண்ட்ரோலே அதுங்க கிட்டதானே இருக்கு?
நான்: அதுக்கும் வச்சிருக்கேன் ஆப்பு. மத்திய அரசு 3 மாசம் நோட்டீஸோட இப்ப இருக்கிற கரன்ஸி செல்லாது,பழச வச்சிருக்கிறவனெல்லாம் அதுக்கு கணக்கு காட்டி புது கரன்ஸிய வாங்கிக்கனு அனவுன்ஸ் பண்ணிரும். கணக்கில்லாத பணமெல்லாம் மார்க்கெட்லருந்து வெளியேறிடும்.
மனசாட்சி: அக்காங்க் அஸ்கு புஸ்கு. இன் கம்டேக்ஸ் காரன் பிடிச்சுட்டா வருமானத்துக்கு அதிகப்படியா பிடிச்ச சொத்தெல்லாம் என் அம்மா,மனைவி,மகள்கள் தொழில் செய்து சம்பாதிச்சதுனு தப்பிச்சுக்கறான். கணக்கு காட்டறது என்ன பெரிய பிரம்ம வித்தையா அதுக்குதானப்பா அய்ய மாரெல்லாம் ஆடிட்டிங் படிச்சுட்டு காத்திருக்காங்க
நான்:தோ பார் ! இப்ப இருக்கிற நிலைய வச்சே கணக்கு போட்டு பேசறே. சிறப்பு ராணுவத்துக்கப்பால வேலையில்லாத பசங்களே இருக்கமாட்டாங்கப்பா . ஒரு ஆடிட்டர்கிட்டே 60 பேர் அசிஸ்டண்டா இருப்பான். அத்தினி பேரு இருக்கிறதைரியத்லதான் ஆடிட்டர் கச்சா முச்சானு க்ளையண்ட்சை ஏத்துக்கிட்டு பொய் கணக்கு காட்டறான். அந்த 60 பேரும் சிறப்பு ராணுவத்துக்கு போயிட்டா ?
மனசாட்சி: அதிகாரிங்க எல்லாம் கருப்பு பணத்துக்கு அது வெள்ளைதானு பொய் சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறாங்கனு வை. அப்ப இன்னா செய்வீங்க அப்ப இன்னா செய்வீங்க
நான்: என் திட்டத்தை சக்ஸஸ் ஃபுல்லா அமல் படுத்தறதுக்காக எகானமி பேக்கேஜுனு ஒரு சப் ப்ராஜக்டு இருக்கு நைனா. அதுல முதல் அம்சமே அரசு துறை அதிகாரிங்க எலலாரையும் ஃபிசிக்கலா, சைக்காலஜிக்கலா டெஸ்ட் பண்ணுவம். இண்டியா டுடேங்கற தலைப்புல பரீட்சை வைப்போம். அதுல தேறினாதான் உத்யோகம் நைனா. இல்லேன்னா லாஸ் ஆஃப் பேல லீவ் கொடுத்து 3 மாசம் கழிச்சு ரீ எக்சாமினேஷன் வைப்போம் அதுலயும் டமாலாயிட்டா கோல்டன் ஷேக் ஹேண்டுதான்.
மனசாட்சி: அதுசரி கருப்பு பணம் வச்சிருக்கிறவன் தெருவுல போறவன் கிட்டே தன் பணத்தை கொடுத்து அவனோட வருமானமா காட்டி மாத்திக்கிட்டு வரச்சொல்றான்
நான்: அது வேலை வெட்டியில்லாத சனம் இருக்கிறப்ப நடக்கும். நாம தான் வேலையில்லாதவனே இல்லேனு ஆக்கிர்ரமே. சப்போஸ் அப்படியே மாத்த வச்சாலும் மாத்தறவன் சும்மா மாத்தமாட்டானில்லயா கு.ப.30 சதவீதமாவது கமிஷன் கேட்பானே. அந்த 30 சதம் கருப்பு பணமாவது மார்க்கெட்லருந்து ஒழியுதில்லயா?
மனசாட்சி:எப்படியோப்பா நல்லாவே கவர் பண்றே
நான்: நீ என்ன ஃபிகரா கவர் பண்ண
மனசாட்சி: இதுவரை நீ சொன்னதெல்லாம் சரினே வச்சுக்குவம்.நீ சொல்ற திட்டத்தை அமல் படுத்த வேண்டியது யாரு?
நான்:மத்திய அரசு
மனசாட்சி: அதாவது எம்.பி.கள்
நான்:யெஸ் .ஆமாம்
மனசாட்சி:டீக் ஹைனு ஹிந்தில கூட சொல்லு மும்மொழி திட்டத்தை அமல் படுத்தினாப்ல ஆயிரும்,
நான்: நீ என்ன கேள்வி கேட்கப்போறேனு எனக்கு புரிஞ்சு போச்சு. கோடி கோடியா செலவு பண்ணி எம்.பி.ஆனவன்/ ஆயிரமாயிரம் கோடி செலவழிச்சு பதவிக்கு வந்த மந்திரி அவனை மந்திரி ஆக்கினவங்க அவங்களுக்கே ஆப்பு வச்சுக்குவாங்களானு தானே கேட்கிறேன்
மனசாட்சி:கிரிக்கெட்டு.
நான்:இப்படி ஒரு வில்லங்கமிருக்கிறதாலதான் நம்ம ஆப்பரேஷ்ன் இந்தியால முதல் அம்சமே நேரிடை ஜன நாயகம்னு வச்சிருக்கோம்.பிரதமரை மக்கள் நேரிடையா தேர்ந்தெடுப்பாங்க . அதனால் அவருக்கு ஃபுல் பவர்ஸ் இருக்கும். முக்கியமா பார்லிமென்ட்ல வீட்டோ பவர் இருக்கும். கருப்பு பண முதலைகள் எம்.பிக்களைவிலைக்கு வாங்கி திட்ட அமலுக்கு ப்ரேக் போட முயற்சி பண்ணாலும் பருப்பு வேகாது.
மனசாட்சி: நெரிடையா எலக்ட் ஆகிற பிரதமர் மட்டும் எப்படி நியாயமான ஆளா இருக்க முடியும்?
நான்:இப்போ பாராளுமன்ற தேர்தல்கள்ள ஆந்திரால காங்கிரஸ் சக்ஸெஸ் ஆச்சு. எப்படி? டாக்டர் ஒய்.எஸ்.ஆரோட எம்.ஜி.ஆர் வேலைகளால வெற்றி கிடைச்சுது. ஆனால் மத்திய அரசை வழி நடத்தறது யாரு சோனியா. மக்கள் சோனியாவுக்காகவோ , நேரு குடும்பத்துக்காகவோ ஓட்டு போடனும்னா 1994 போட்டிருக்கலாம், 1999 ல கூட போட்டிருக்கலாம் இல்லியா?
மனசாட்சி: நீ என்ன சொல்ல வர்ரே ஸ்ட்ரெயிட்டா சொல்ல்லுப்பா சுத்தி வளைக்காத.
நான்:செக்ஸுல கூட இப்படிதான் அன்பான பேச்சு, முத்தம்,ஃபோர் ப்ளே எதுவுமில்லாம ஸ்ட்ரெயிட்டா விஷயத்துக்கு போயிர்ரதாலதான் பெண்ணுக்கு சரியா லூப்ரிக்கேட் ஆகாம, ஆணுக்கு ப்ரி மெச்யூர்ட் எஜாகுலேஷனாகி, பெண்ணுக்கு ஆர்காசம் கிடைக்காம நாஸ்தி ஆகிப்போவுது
மனசாட்சி:அய்யயோ இன்னாபா இது மாத்ரு பூதம் மாதிரி பேச ஆரம்பிச்சுட்டே. தாய் குலமெல்லாம் படிக்கிறாங்கப்பா.
நான்:ஏன் பாக்யராஜ் படத்துல முருங்கைகாய் சமாச்சாரம் வந்தா ரசிக்கலை? தப்பித்தவறி இந்த பதிவை க்ளிக் பண்ணிட்ட இளைஞர்கள் விலகிராம படிக்க
இதுவும் தேவைப்படுதுப்பா
மனசாட்சி: என்ன இழவோ விஷயத்துக்கு வா
நான்: நான் என்ன சொல்றேன்னா நாட்ல இருக்கிற பி.சி.,எஸ்.சி,எஸ்.டி,மைனாரிட்டி எல்லாம் சேர்த்து 72% இருக்காங்க. மும்முனை போட்டி ஏற்பட்டு இதுல பாதி பேர் ஒத்துமையா ஓட்டு போட்டா கூட இவிங்க சப்போர்ட் பண்ற ஆளு, இவிங்களோட வெல் விஷர் பிரதமராயிருவாரு. எம்.பிங்க தயவும் தேவையில்லை. அது தேவையில்லைங்கறதால டாட்டா,பிர்லா தயவும் தேவையில்லே, பதவிக்கும் கண்டம் வராது. ஒழுங்கா மக்களுக்கு செய்ய வேண்டியத செய்தா படுத்துக்கிட்டே ஜெயிக்கலாம்
மனசாட்சி:இதான் ஆப்பரேஷன் இந்தியாவா
நான்:யெஸ்ஸு..
மனசாட்சி:திட்டம் சரிப்பா . இதனோட அமலுக்காக என்ன கிழிச்சிருக்கே
நான்: அதெல்லாம் ஏற்கெனவே விரிவா இந்த வலைப்பூல சொல்லியாச்சுப்பா
தலைவன்னு எவனெவன் இருந்தானோ ,இன்னைக்கு இருக்கானோ எல்லாத்துக்கும் ஹோல்சேலா, ரீடெயிலா அனுப்பியாச்சுப்பா. லோக் சபா ஸ்பீக்கருக்கு 200 பிரதி அனுப்பினேன். தமிழ் நாடு,ஆந்திர ஹை கோர்ட் நீதிபதிகளுக்கு அனுப்பினேன், சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கு அனுப்பினேன், எல்லா எம்.பிக்களுக்கும் மெயில் அனுப்பினேன். ( நோ சச் யூசர்னு ரிட்டர்ன் வந்துருச்சு எல்லாமே)
மனசாட்சி:மொத்ததுல டெஸ்பாச் க்ளர்க் மாதிரி வேலை செய்திருக்கே.
நான்: சந்திரபாபுவுக்கு 97 ல ருந்து 02 ஏப்ரல் 22 வரை அனுப்பினேன். பதில் இல்லேனு பத்து ரூபா எம்.ஓ அனுப்பினேன். அது டெலிவரி ஆச்சு. கன்ஸ்யூமர் ஃபோரத்துல கேஸ போட்டேன். எனக்கு நானே ஆப்பு வச்சுக்கிட்டேன். கண்டமேனிக்கு என்னை லந்து பண்ணாங்க. இன்ஃபர்மேஷன் ஆக்ட் பிரகாரம் ஃபைட் பண்ணேன். ஹ்யூமன் ரைட்ஸ் கமிஷனை அப்ரோச் பண்ணேன். யூ.என்.ஓக்கு கம்யூனிக்கேட் பண்ணேன்.
பத்து நாள் உண்ணாவிரதமிருந்தேன். தொடர்ந்து பத்திரிக்கைகளுக்கு ஸ்டேட்மென்ட் கொடுத்துக்கிட்டிருந்தேன். ப்ரெஸ் மீட் வச்சிருக்கேன். ஒய்.எஸ்.சி.எம்.ஆன புதுசுல ஹைதராபாதுக்கு பாதயாத்திரை புறப்படறதா சொல்லி அலம்பல் பண்ணேன். ஒரு மயிரும் நடக்கலை
மனசாட்சி:இப்போ என்ன பண்றே?
நான்: செக்ஸ் ஜோக் எழுதிக்கிட்டிருக்கேன்
மனசாட்சி: ப்தூ.. இதுவும் ஒரு பிழைப்பா
நான்: சோடா புட்டிகண்ணாடிங்க அம்பதோ அறுபதோ படிச்சா போதுமுனு நினைக்கல கண்ணா சின்ன பசங்களை கூட நம்ம சைட் பக்கம் ஒதுங்க செய்ய தான் இன் டேக்டீஸ். இப்போ வார் ஸ்டார்ட்.
மனசாட்சி:என்னா வாரோ செருப்பு வாரா?
நான்:டங்குவார் அறுந்துரும்.
மனசாட்சி:அப்டின்னா என்னப்பா
நான்:எனக்கும் தெரியாதே
மனசாட்சி:ஆமா நீ தான் நவீன வாத்ஸாயனன் மாதிரி பில்ட் அப் தர ஆசாமியாச்சே இந்த திட்டம் அமலானா தீரக்கூடிய செக்ஸ் பிரச்சினைகள் என்னனு சொல்ல முடியுமா?
நான்:யூத்துக்கு காலாகாலத்துல வேலை கிடைக்காமதான் கல்யாணம் தள்ளிபோகுது. வேலை வெட்டி இல்லாத காரணத்தால சுய இன்பத்துக்கு பழக்கப்பட்டுர்ராங்க. இல்லேன்னா காமத்துக்கு காதல் வண்ணம் பூசி ஆசிட் அடிக்கிறாங்க கள்ள உறவு,ஈவ் டீசிங் பண்றாங்க, ரேப் பண்றாங்க. உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் ஆசைகள் வன்முறையா வெடிக்குது. சூடோ நக்ஸல்ஸ், ஃபேக்ஷனிசம், உதவாக்கரை அரசியல், சினிமாகாரனுக்கு தோரணம் கட்டறதுனு வீணாப்போறாங்க காலாகாலத்துல வேலை கொடுத்துர்ரமில்லே. ஒழுங்கு மரியாதையா கல்யாணம் பண்ணிக்கிட்டு செக்ஸை சட்டப்படி அனுபவிப்பாங்க எந்த வித காம்ப்ளெக்ஸுமில்லாம சக்ஸஸ்ஃபுல் செக்ஸ் லைஃபை லீட் பண்ணுவாங்க குழந்தையின்மை இத்யாதி பிரச்சினை வராது. தங்களுக்கு பிறக்கிற குழந்தைகளையும் நல்லா வளர்ப்பாங்க புதிய இந்தியா உருவாகும்.

மனசாட்சி:பழைய இந்தியாவை என்ன பண்றதாம். ஓல்ட் ஈஸ் கோல்ட் ம்யூசியத்துல வைக்கலாம்.

மன்மோகன் தலைமையிலான மத்திய அரசின் தோல்விகள்:
1.சீன நாட்டின் ஆக்கிரமிப்புகளை உலக நாடுகளின் ஆதரவுடன் முறியடிப்பதை விட்டு அந்த செய்திகளை வெளிக்கொணர்ந்த செய்தியாளர்களை முடக்கப்பார்ப்பது
2.தீவிரவாதத்தின் விளைவுகளை எதிர்கொண்டபடி ஞானோதய கணத்துக்கு மிக அருகில் உள்ள பாக்கிஸ்தானுக்கு கிடுக்கிப்பிடி போட்டு வழிக்கு கொண்டு வருவதை விட்டு மீன மேஷம் பார்த்துக்கொண்டிருப்பது (அது எங்க வேலைங்கண்ணா ! )
3.உள் நாட்டு தீவிரவாதம் செழிக்க காரணமான காரணங்களை (கல்வியறிவின்மை, த்ற்தல் முறைகேடுகள், அரசியல் வாதிகளின் ஊழல் அரசு & தனியாரின் சுரண்டல்,பசிகொடுமை, சிகப்பு நாடாத்தனம், ஒழித்து கட்டுவதை விட்டு மிலிட்டரிய கூப்பிடலாமா ? போலீஸே போதுமா என்று பட்டி மன்றம் நடத்துவது.
(To be continued

பிறன் மனை விழைதலின் விளைவுகள்
பிறன் மனை விழையும் ஆண்களை விட்டுவிடலாம் .(அது நாய் புத்திமட்டுமல்ல , ஒரே உடலில் ஒரே விதமான உறவு தொடர்வதால் ஆண்மை குறைவு ஏற்பட்டுவிட்டதாய் ஒரு ஃபீலிங் வந்து டெஸ்டிங் டோஸ் மாதிரி கூட சிலர் முயற்சிக்கலாம். மனைவி உணர்ச்சியற்ற ஜடமாக இருக்க வாய்ப்பே இல்லை (மருத்துவ, மன நல குறைபாடுகள் இருந்தால் தவிர). இவன் இவனுடைய ஆர்காசத்தை மட்டும் பார்த்துக்கொண்டு ஆச்சா போச்சா என்று செயல்பட்டிருந்தால் அவள் வெறுப்புற்று, விரக்தியுற்று "வெட்டி ..லு நித்திரைக்கு கேடு" என்று ஜடமாகியிருக்கலாம். அல்லது சதா மட்டம் தட்டி பேசுதல் , கர்ப பயம் இத்யாதி காரணங்களும் இருக்கலாம்.சிலருடைய ஜீன் களிலேயே இந்த வண்டு புத்தி இருக்கும். சிலர் சகவாச தோஷத்தால் , ஒரு சில மானங்கெட்ட கணவர்கள் காரியம் முடிய ஏற்கெனவே பெண்டாட்டியை ஆஃபர் செய்திருப்பார்கள். இவன் ஊரில் உள்ள கணவனெல்லாம் இந்த ஜாதிதான் என்ற முடிவுக்கு வந்திருப்பான். ஒரு சில கேஸ்களில் விட்ட குறை தொட்ட குறைய சில முன்னாள் தொடர்புகள் இரண்டாம்பாகமாக தொடரலாம். (இதை எல்லாம் எழுதவே அருவறுப்பாக இருக்கிறது. என்ன செய்ய கால்வாயை சுத்தப்படுத்த இறங்கியாயிற்று .பாதியில் விட முடியுமா என்ன ?)

பிறன் மனை அ பிறத்தியாள் கணவனை விழைதலால் எயிட்ஸ் வரலாம் (அவள்/அவன் உத்தம குணங்களுடன் இருந்தாலும் அவள்/அவன் வாழ்க்கை துணை மூலம் அவளுக்கு /அவனுக்கு வரலாம் அல்லவா) இது போன்ற கேஸ்களில் கள்ளக்காதல் ஒரு புறம் , வழக்கமான தாம்பத்யம் ஒரு புறம் இரண்டு ட்ராக்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்.

கொலை,தற்கொலை, அரிவாள் வெட்டு, விவாகரத்து, ஆள் கடத்தல் இப்படி என்ன என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். தினத்தந்தியில் செய்தியாகலாம். இதெல்லாம் ஒருபுறம். நான் விவரிக்க வந்தது ஜாதகப்படி என்ன நடக்கும் என்பதே !

மன்மதன் என்றால் என்ன அர்த்தம்?

மன்மதன் என்றால் என்ன அர்த்தம். இதை மன் என்ற வார்த்தையை விட்டு மதனன் என்று குறிப்பிடுவது நல்லதா என்று இந்த பதிவில் ஆராய்வோம். ( நாட்டுக்கு ரொம்ப தேவை என்று உடையல் விடாதிங்கண்ணே.. இதுல நாட்டுக்கு நல்ல சேதி ஒன்னும் ஒளிச்சு வச்சிருக்கேன்) மன்மதன் என்பது திரிபாக இருக்கலாம். அல்லது மதனம் என்ற வார்த்தைக்கு மதன் என்ற சொல்லும் ஆல்ட்டர்னேட்டிவாக இருக்கலாம். முதலில் மன் என்றால் என்ன? மனம் என்பது இதன் பொருள்.

மதனம் என்றால் கடைதல். மன்மதன் என்றால் மனதை கடைபவன் என்று பொருள். வெறுமனே மதனன் என்றால் கடைபவன் என்று பொருள்.வெண்ணைக்காக தயிர் கடைவதை பார்த்திருக்கிறீர்களா? (கடைல விக்கிற ஆரோக்யா தயிரை சொல்லலிங்கோவ்) அது போல் பெண் உறுப்பில் ஆண் உறுப்பை வைத்து கடைவதே மதனம் /மைதுனம். பழங்கால பஞ்சாங்கங்களில் மிதுன ராசிக்கு பலான படம் தான் போட்டிருப்பார்கள். இப்போதெல்லாம் ஆண்,பெண்ணை தூர தூரமாக போட்டுவைக்கிறார்கள். மைதுனம் (உடலுறவு) என்ற வார்த்தையிலிருந்துதான் மிதுனம் என்ற வார்த்தை வந்தது. எனவே தமிழ் கூறு நல்லுலகமே இனி மன்மதன் என்று முழுப்பெயரையே உச்சரிப்பாயாக ! காமம் என்பது மனதை தான் கடைகிறது. மனதிலிருந்துதான் சரீரத்திலான ஜன்ய பாகங்களுக்கு செய்தி போகிறது.

ஆனால் நிறைய சதவீதம் இளைஞர்கள் விஷயத்தில் பார்த்தால் சுய இன்பம் காரணமாய் காம உணர்வுகள் அனைத்தும் இன உறுப்பில் மையம் கொண்டு விடுகிறாது. அதை தூண்டியே காம உணர்வை பெற வேண்டியதாகிவிடுகிறது. இதனால் தான் அந்த வயது இளைஞர்கள் பெண்ணை உறித்து பார்ப்பதிலேயே கவனமாய் இருப்பார்கள் .உண்மையில் காம உணர்வை தருவது மனம் தான். "பஞ்சேந்த்ரியானாம் நயனம் ப்ரதானம்" என்று சொல்கிறார்கள். கண் வெறுமனே பார்க்கிறது. அந்த காட்சிக்கு அருஞ்சொற்பொருள் வழங்கி காமத்தை தூண்டுவதென்னவோ மனம் தான்.

எனது சம காலத்தோரே !

ஏழையர் பிணம் தின்று
சமாதிகளில் வாழ்ந்திருப்போரே !
உங்கள் பார்வையில் நான் மோசமானவன். நாசமானவன்
ஆனால் உங்களைப்போல் வேஷமானவனும் அல்லன்
கட்டி நடிக்கும் வேஷமே ஆனவனும் அல்லன்.
இந்த நாடகத்தில் நீங்கள் வாழ்ந்து காட்டுகிறீர்கள்
நான் நடித்து காட்டுகிறேன்.
ஆம் உங்களில் சிலரால் உங்களின் பொய் வேஷங்களால்
நான் மோசம் போனதாய் மோடி வேலை காட்டுவதும் உண்டு
ஆனால் அதுவும் என் நாடகத்தில் ஒரு பாகமே!
நான் சுகிப்பவன். தேவைகளை சுருக்கியும்
சில சமயம் தேவைகளுக்கு சுருக்கிட்டும்
சுகிப்பவன். அநியாயம் கண்டு தகிப்பவன்
அது என்னையே தகனம் செய்தாலும் சரி.
ககனமுறை தேவர் வந்தெனை தடுத்தாலும் சரியே

உங்களைப்போல் தேவைக்கு தேவையாகி அதற்கே சேவை புரியும்
தீர்வை நான் ஏற்றதில்லை.
அந்த தீர்வினை காட்டிலும் என் ரொட்டி யுத்தம் சுவாரஸ்யமாகவே இருக்கிறது
என்னை உயிர்த்திருக்க செய்கிறது.

என் தாயகத்தின் தேவையே என் தேவை
அந்த தேவைக்கு உங்கள் பூட்ஸுகளை நக்கி நான் பெறக்கூடிய ஊதியம் சுண்டைக்காய்.

நானும் உங்கள் போல் பெண்வழி வந்திருப்பினும்
வான் வழி வழி எனக்கு வரும் சேதிகளைத்தான் உங்களுக்கு அஞ்சல் செய்கிறேன்