Friday, October 9, 2009

செக்ஸ் ஜோக் + மனோதத்துவம் : 9

ஜோக்கை ஒரு தடவை நினைவுப்படுத்திக்கொள்ளுங்கள். கணவன்,மனைவி, 8 வயது பையன். அந்த விசயத்துக்கு கோட் டைப் பண்றது. பையன் தூது. அம்மா காரி மிஷின் ரெட் ரிப்பன்ல ஓடுதுங்கறா. அதுக்கு புருசன் அவசரப்படறான். அப்போ அம்மாக்காரி அவ்ள அவசரம்னா கைல எழுதிக்க சொல்லுங்கறா. இதான் ஜோக்.

இதை அனலைஸ் பண்ணும்போது..கணவன் மனைவி இடையில் பலான விஷய்த்துக்கு கோட் வார்த்தைகள் இருப்பது சகஜமே. உடலுறவுக்கு தேவையான தூண்டுதல் பல வகை. அதில் இந்த கோடும் ஒரு வகை. இந்த கோட் என்பது கிராமப்புறங்களில் வேறு விதமாகவும், நகர் புறங்களில் வேறு விதமாகவும் இருக்கும். புற விளையாட்டுகள்/ ஃபோர் ப்ளே என்பது எவ்ள முக்கியமோ இந்த வார்த்தை விளையாட்டுகள் கூட முக்கியம் தான். அதிலும் மூன்றாவது ஆள் இருக்கும்போது அவருக்கு புரியாத வகையில் (புரிஞ்சா என்ன ஆகும்னு இன்னொரு ரயில் ஜோக்கிருக்கு அதை அப்புறம் பார்ப்போம்) சூசகமாக பேசும் போது மனம் , உடல் இரண்டுமே அதற்கு தயாராக வாய்ப்பு இருக்கிறது.

பலருக்கு இந்த முஸ்தீபுகளின் முக்கியத்வம் தெரிவதில்லை. காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் விழுந்த மாதிரி முடித்துவிடுவார்கள். அது ஒரு பாடல் மாதிரி. முதலில் தொகயறாதான் இந்த சூசக வார்த்தைகள். உடலுறவை டைப்படிப்பதோடு ஒப்பிடுகிறான் கணவன். மாதவிலக்கு என்பதை ரெட்ரிப்பன் என்று சூசகமாக குறிப்பிடுகிறாள் மனைவி. இந்த மாதவிலக்கு குறித்து இந்த கேர்ஃப்ரீ யுகத்திலும் அனேக மூட நம்பிக்கைகள் உள்ளன. அவற்றில் ஒன்று (இன்றும் நடைமுறையில் இருப்பது) மாதவிலக்கின் போது உடலுறவு கொண்டால் கணவன் ஜன்னி ஏறி சாவான் என்பதாகும்.

இது போன்ற நம்பிக்கைகளுக்கு காரணம் நம் முன்னோர் பெண்டிர் நலம் கருதி சொல்லிவைத்த எச்சரிக்கைகளே. மாதவிலக்குக்கும் , சந்திரனின் சுழற்சிக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. சந்திரன் மனோகாரகன்.மனதுக்கு அதிபதி. (ஜல காரகனும் இவரே இன்று விஞ்ஞானிகள் சந்திரனில் நீர் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த உள்ளனர்) எனவேதான் மாதவிலக்கின் போது பெண்களின் மன நிலை விசித்திரமாக மாறுகிறது. அதிகம் உணர்ச்சிவசப்படுவது , தாழ்வு மனப்பான்மை, எரிச்சல்,கோபம், தற்கொலை எண்ணம் இத்யாதியும் ஏற்படுவதுண்டு. இது மட்டுமல்ல பெண்ணே நீ இதழில் ஒரு கட்டுரை படித்தேன். மாதவிலக்கை அடிப்படையாக கொண்டு குறிப்பிட்ட பெண்ணின் மன நிலை மாதம் முழுக்க எப்படியிருக்கும் என்று விவரிக்கிறது அக்கட்டுரை.

ஆண்களே நீங்கள் ஒருமுறை கற்பனை செய்து பாருங்கள் . உங்கள் உறுப்பு வழியே ரத்தப்போக்கு இருக்கும்போது உடலுறவை பற்றி உங்களால் நினைத்தேனும் பார்க்க முடியுமா? ஆனால் ப்ராக்டிக்கலாய் நடப்பதென்ன மனைவி/காதலியின் டேட்ஸ் கூட தெரியாது இவனுக்கு. இவனாக கற்பனை செய்து கொண்டு வருவான். மாதவிலக்கு என்று தெரிந்தால் அவள் ஏதோ சதி செய்துவிட்டதாக எரிச்சலடைவான். இளமையின் துவக்கத்தில் பெண் என்பவளை கற்பனை செய்யும் இளைஞன் அவளது உடலின் இயற்கையையோ, மனோதத்துவத்தையோ ஒரு துளியேனும் ஊகிக்கவும் முயல்வதில்லை.இதனால் தான் பெண்ணை டைப்ரைட்டராக கற்பனை செய்ய முடிகிறது. மாதவிலக்கை ரெட் ரிப்பனாக கோட் செய்ய முடிகிறது.

மாதவிலக்கின் போது உடலுறவு குறித்த என் கருத்து : பெண்ணின் விருப்பத்தின் பேரில் (சம்மதத்தின் பேரில் அல்ல) ஆணுறை அணிந்து உடலுறவு கொள்ளலாம்

கையால் எழுதிக்க சொல் என்பது இங்கே சுய இன்பத்தை குறிக்கிறது.சுய இன்பம் என்பதை இரண்டு துருவங்களில் இருந்து பார்க்கிறோம் . ஒன்று கெட்டப்பழக்கம். அடுத்தது எத்தனை தடைவை செய்தாலும் ஆபத்தில்லை. இது இரண்டுமே தவறு. உண்மை என்பது இரண்டு துருவத்துக்கும் மத்தியில் உள்ளது.

சுய இன்பம் என்பது எமர்ஜென்சி கேட் மாதிரி என்று ஒரு வார்த்தை மட்டும் கூறி இந்த பதிவை முடிக்கிறேன்