Wednesday, October 7, 2009

ஜோக் + மனோதத்துவம் : A


முதலில் ஒரு ஜோக் :
ஒரு இளம்பெண் கேர்ஃப்ரீ வாங்கிச்செல்கிறாள். அதைப்பார்த்த ஒரு கிழம் (விஷயம் தெரிந்தே) "என்ன பாப்பா வாங்கிட்டு போறே ?" என்கிறது. அதற்கு அவள் " ஆங் .. ப்ரெட் வாங்கிட்டு போறேன்" என்கிறாள். மேற்படி மன நோய் பிடித்த கிழம் "எனக்கும் கொஞ்சம் கொடுக்கிறது தானே" என்கிறது. அதற்கு அந்த இளம்பெண் "கொஞ்சம் பொறுத்துக்க நாளைக்கு க்ரீம் தடவி தரேன்" என்கிறாள்ஏதோ ஒரு தமிழ் படத்தில் வசனம் ஞா.வருகிறது. " த பாருப்பா ஒரு வயசுல எந்த பெண்ணை பார்த்தாலும் இவள் என் பெண்டாட்டியாகக்கூடாதானு தோணும் ,அப்புறம் ஒரு வயசுல எந்த பெண்ணை பார்த்தாலும் இவள் என் மகளா பிறந்திருக்க கூடாதானு தோணும்."

என் வயது 42. பிறந்தது 1967. 1984 முதல் 1987 க்குள் (17 முதல் 20 வயதுக்குள்) எனக்குள் "அதற்கு" பின்னால் என்ன ? என்ற கேள்வி எழுந்து விட்டது. அதற்கு காரணம் எனக்கு தடையின்றி கிடைத்த வாய்ப்புகள். அவற்றை நொண்டி சாக்குகள் ,ஃபேட்டல் வீக்னெஸ் இத்யாதி காரணமாய் தவற விடாது உபயோகித்துக்கொண்ட தீரம். 20 வயதில் எனக்குள் ஒரு தெளிவு ஏற்பட்டு விட்டது. ஆனால் தினசரிகளில் படிக்கிறோம். 90 வயது கிழம் 9 வயது பெண்ணை கற்பழித்தது. இத்யாதி.

என் மகளுக்கு வயது 17 . இந்த காலத்தில் தான் ரெடி மேட் கார்மெண்ட்ஸ் வெளுத்து வாங்குகிறதே. தாளி ! எந்த பெண்ணை பார்த்தாலும் ஒரே மாதிரி இருக்கிறது. சில சமயம் ஒரே டிசைன் , சில சமயம் ஒரே கலர். இப்போதெல்லாம் மேற்படி சினிமா வசனம் போல் இந்த பெண் நமக்கு பெண்ணா பிறந்திருக்க கூடாதானுதான் தோணுதே தவிர வேற மாதிரி நினைக்க முடியலை.

மேலும் அந்த காலத்து செமை கட்டைகள் எல்லாம் இப்ப கிடையாது. ஸ்கூல், ட்யூஷன், யூனிட் டெஸ்ட் இத்யாதி தின்று போட்ட சக்கைகள் இவர்கள். அந்த காலத்து விளையாட்டுகள் , ஆரோக்கியம் ,வளர்த்தி எதுவும் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

இந்த பெண்களை பார்த்தால் "இதுக சாப்பிடுதா இல்லையா.. இதுகல்லாம் எப்படி பெத்து வளர்த்து " என்ற ஆயாசம் ஏற்படுகிறதே தவிர இன்னபிற சிந்தனைகள் பிறப்பதே இல்லை.

இதற்கு காரணம் என்ன ? நல்லதுக்கோ கெட்டதுக்கோ 1984 முதல் 1986 வரை நான் வாழ்ந்த வாழ்க்கை. மனித வாழ்வும் ஒரு பாட்டுதான் . முதலில் தொகையறா, பிறகு அனு பல்லவி, பின் பல்லவி, அதற்கு பிறகு சரணங்கள்.
ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து வந்தாதான் வாழ்க்கை. யாதொன்றுக்கும் கால , நேரம் என்று இருக்கிறது.

காமி கானி வாடு மோக்ஷ காமி காலேடு என்று ஒரு சொலவடை உண்டு. அதாவது காமாந்தகாரனாகாதவன் மோட்சத்தை விரும்புபவனாக மாற முடியாது என்பது இதன் பொருள்.

அதை விடுத்து வெறுமனே மஞ்சள் பத்திரிக்கை , ட்ரிபுள் எக்ஸ் வீடியோ, சுய இன்பம் ,ஸ்வப்ன ஸ்கலிதம் என்று வா(வீ)ழ்ந்து திருமண வாழ்விலும் வரதட்சிணை இத்யாதி பிரச்சினைகளால் அதை சரி வர அனுபவிக்காத ஜென்மங்கள் தான் இப்படி தகாத பேச்சும், தகாத செய்கையுமாக லொள்ளு செய்யும்.

வேண்டுமானால் பொது இடத்திலும் நீங்கள் பார்க்கலாம். இந்த 40 ஐ கடந்த ஆண்களாகட்டும் ,பெண்களாகட்டும் தமது உறுப்புகளை பளிச் பளிச் என்று ஃப்ளாஷ் செய்து கொண்டே இருப்பார்கள். எவனொருவன்/எவனொருத்தி இளமையில் செக்ஸை ஆழ அனுபவிக்கிறானோ/ ளோ அவள்/அவன் அன்புக்கு ஏங்குபவனாக , அன்பை பகிர்பவனாக மாறுகிறான்.
எந்த நாய் ஈர கோவணத்தை இழுத்து கட்டி பிரம்மச்சரியம் அது இது என்று பம்மாத்து செய்கிறதோ நிச்சயம் அது இது போன்ற லொள்ளுகளில் ஜொள் விடும்.

ரகசியம்: மெனோஃபஸை நெருங்கும் பெண்களுக்கும் , அதே வயது ஆண்களுக்கும் திடீர் என்று செக்ஸ் மீது ஆர்வம் பெருகுமாம். அணைய போகும் விளக்கு சுடர் விட்டு பிரகாசிப்பதை போல். அந்த கட்டம் ஏறக்குறைய ஓரிரண்டு வருடங்கள் தானிருக்கும். அதை கட்டுப்பாட்டுடன் தாண்டி வரவேண்டும் .இல்லா விட்டால் சரவண பவன் அண்ணாச்சி கதைதான்