Sunday, October 25, 2009

ஒதுங்கி போறவங்க


நாட்ல எது நடந்தாலும் நமக்கென்னனு ஒதுங்கி போறவக அதிகமாயிட்டே இருக்காங்க. இன்னைக்கு இன்னொருத்தனுக்கு நடக்கிற அநியாயம் நாளைக்கு நமக்கு நடந்தா எப்படிங்கற முன் யோசனை கூட இல்லை.

என்ன இது எடுத்த எடுப்புல இவ்ள சீரியஸா ஆரம்பமாகுது இந்த பதிவு ? சரி ஒதுங்குதல் என்ற வார்த்தையை கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணீட்டு அப்புறம் சீரியஸாவோம் (பார்த்துப்பா 108 க்கு போனை போட்டுர போறாங்க)

கிராமத்து பக்கத்துல ஒதுங்கறது என்ற வார்த்தைக்கு பல அர்த்தம் இருக்கு. ஒன் பாத்ரூம் ,டூ பாத்ரூம் போறதுக்கு கூட ஒதுங்கறதுனுதான் அர்த்தம். இப்படி திறந்தவெளில ஒதுங்கறதாலயும் , பாதுகாக்கப்பட்ட குடினீர் இல்லாததாலயும் தான் பல நோய்கள் வருது.

சுதந்திரம் வாங்கி 62 வருசமாகியும் இதான் நிலைன்னா தலைவர்கள் எல்லாம் தூக்கு போட்டு சாகலாம். இப்படி ஒதுங்கறதுல இன்னொரு பிரச்சினையும் இருக்கு . அப்படி தனி தனியா ஒதுங்கபோற சமயத்துல தான் ராங் கனெக்ஷன்ஸ் கூட மாட்டுதாம். என்னடா இழவு இது ?

அப்புறம் குத்து,கொலை,விஷம் வைத்து கொலை, தற்கொலை ,ப்ரோக்கன் ஃபேமிலி, அந்த குடும்பத்துல க்ரிமினல்ஸ் தயாராயிருவாங்க, இந்த இழவுக்காகவாவது கிராமப்புறங்கள்ள சரியான டாய்லெட் வசதிய ஏற்படுத்தனும்.

அப்புறம் ஒதுக்கறதுனு ஒரு வார்த்தை இருக்கு. இதை லஞ்சம், பொதுப்பணம் இத்யாதியை லவுட்ற சந்தர்பத்துலயும் உபயோகிக்கிறாங்க. ஒதுக்கீடுனும் ஒரு வார்த்தை இருக்கு. இந்திய அரசியலே இதை சுத்தி தான் காலத்தை தள்ளுது. இந்த இழவுக்குத்தான் நான் " பத்து கோடி வேலையற்ற ஆண் ,பெண்களை கொண்டு சிறப்பு ராணுவம் அமைப்போம் ! இந்திய நதிகளை இணைப்போம்" னு கரடியா கத்திக்கிட்டிருக்கேன்

சரி பொது பிரச்சினைகள்ள இருந்து ஒதுங்கி போறவங்களை பத்தி ரெண்டு பத்தி பார்ப்போம் !

2004 பிப்ரவரி வாக்குல நான் குடியிருந்த வீட்டுல பக்கத்து போர்ஷன்ல குடியிருந்த வீட்டுக்காரவுக பையன் மற்ற ரெண்டு பேரோட சேர்ந்து ஒரு கொலை பண்ணிட்டான். தலைமறைவாயிட்டான். அவனை தேடி போலீஸ்காரக கண்ட நேரத்துல வருவாக. இத்தனைக்கும் நான் குடியிருந்த ஏரியா ஒன்னும் மோசமான ஏரியா கிடையாது. ஐயருக (பெட்டிஷன் போடறதுல புலிங்கனு பேரு ..மொட்டை பெட்டிஷன்னா சொல்லவே தேவையில்லை) கூட குடியிருந்தாங்க. ஆனால் ஒருத்தராவது கொலை பண்ணவன் பண்ணான் நீங்க இந்த மாதிரி கண்ட நேரத்துல வந்து கதவை தட்றது நல்லாலேனு சொல்லலை. இதுவாச்சும் கொலை. இன்னொரு கேஸ்ல .....

ஒரு பையன் கல்யாணமான பிராமண பெண்ணோட கள்ள உறவு வச்சிருந்தான். அது காலேஜ்ல படிக்கிற காலத்துலயே பஜாரி. அவ அப்பனுக்கு தன் மகள் எவனை லவ் பண்றாளோ அவன் மேல் பிராது கொடுக்கிறதே வேலை. பிராது கொடுத்தாச்சு. அந்த பையன் வீட்டுல அம்மா,அக்கா,அண்ணி எல்லாம் இருக்காங்க. பையன் தலைமறைவாயிட்டான். பாதி ராத்திரிலயெல்லாம் போலீஸ் வரும் . தேடறாங்களாம். அவன் வீரப்பன் பாருங்க.

போலீஸ்னே இல்லே பல விதம் இருக்கு. என் பார்வைக்கு வந்தப்ப என் தகுதிக்கு முடியும்னு பட்டால் நிச்சயமா என்ட்ரி கொடுத்திருக்கேன். போராடியிருக்கேன் மிக சில விஷயங்களில் நியாயமும் நடந்திருக்கு. ஆனால் மத்தவங்க என்ன பண்றாங்க ? எவனாச்சும் பிரச்சினைல மாட்டிக்கிட்டு முழிச்சா அக்கம்பக்கத்துக்கு அது ஒரு தகவல் அவ்ளதான். இன்னும் சில பேர் " அன்னைக்கு பீடிக்கு நெருப்பு கேட்டா என்னா தெனாவட்டா போனான் தெரியுமாம்.நல்லா வேணும். அப்பத்தான் அடங்கும்." என்று பேடித்தனமாக( திரு நங்கைகள் மன்னிக்கவேண்டும்) சாரி ! கையாலாகாத்தனமாக சேடிஸ்டுகள் போல் பாதிக்கப்பட்டவர் காதில் பட பேசுவதும் உண்டு.

"பட்டாதான் தெரியும்" என்று தத்துவம் சொல்ல என் தாய்மனம் ஒப்பவில்லை. இன்று எவனுக்கோ நடப்பது நாளை நமக்கே நடக்கலாமே.இன்று இலங்கையில் ஈழத்தமிழர்கள் படும்பாடு நாளை நமக்கே நடக்கலாம். இந்த இனமே மானங்கெட்ட இனம். இதை என்ன பண்ணாலும் கேட்க நாதியில்லேனு உலக நாடுகள் & இந்திய மானிலங்களுக்கு ஒரு மெசேஜ் போயிருக்கு.

ஊர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்னு ஒரு சொலவடை இருக்கு. இது எப்படினு இன்னொரு பழமொழிய வச்சு எக்ஸ்ப்ளெயின் பண்றேன். " வாத்தியார் பிள்ளை மக்கு" இது பழமொழி. வாத்தியார் ஸ்கூல்ல பாடம் நடத்தும்போது எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுனு பாடம் நடத்துவார். இதுவே தன் பிள்ளைக்குன்னா? நொய் நொய்னு நச்சடிச்சு கத்து குடுப்பார்.டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் . பி.பி, ஷுகரே இல்லை அக்கறை கூட அதிகமாயிட்டா நாஸ்திதான். வாத்தியார் ஒழுங்கு மரியாதையா ஊர்பிள்ளைகளுக்கு மட்டும் பாடம் நடத்தினா அவரோட பையன் என்னடா இது அப்பா நம்பளை கண்டுக்க மாட்டேங்கிறாருனு பொறுப்பா ,ஒழுங்கா படிக்க ஆரம்பிச்சுருவான்.

ஆனா பாருங்க பொது நலம் கருதி சொல்லப்பட்ட இதை கூட கர்பமா இருக்கிற மருமகளுக்கு ஹார்லிக்ஸ் கொடுத்தா வயித்துல இருக்கிற பிள்ளை தானா வளரும்னு சில தாத்தாக்கள் வியாக்யானம் பண்ணி நாஸ்தி பண்ணிட்டாங்க!)

பெண் பலகீனமானவள். எனவே அவள் நித்தியம் ஒருவித பாதுகாப்பின்மையை உணர்வாள். எனவே தன் பாதுகாப்பு கருதி தினம் தினம் தன் அப்பா,அம்மா,அண்ணன் தம்பி, கணவன் ,பிள்ளைகள், தன் வீடு மீதே கவனம் வைப்பாள். அவளுக்கு தூரமாக உள்ள விஷயங்கள் மீது ஆர்வமிருப்பது துர்லபம்.

ஆனால் ஆண் வலிமையானவன். அவன் தனக்கு தூரமாக உள்ள விஷயங்கள் மீது அதிக ஆர்வம் காட்டுகிறான். உ.ம். மானில தலை நகர், தில்லி, அமெரிக்கா, ஆகாயம், கிரகங்கள் இப்படி.

ஆனால் இப்போ நிலைமை எப்படி ஆயிருச்சுன்னா ஆண்கள் ஆண்மையை இழந்துக்கிட்டிருக்காங்க. பெண்கள் சமத்துவம், சமோசானு பெண்மையை இழந்துவராங்க. இதெல்லாம் எங்க போய் முடிய போவுதோ பார்க்கனும்.

ஆதியோடந்தமா மேஞ்ச்சுப்பிடனும்னுதான் ஆரம்பிச்சேன். என்னாத்த சொல்லி என்ன ? எப்படியும் சனம் மனம் மாறா போறதில்லை. இதைவிட பத்து பலான ஜோக் போட்டா ஒழியுது போ என்று தோன்றிவிட்டது.

நான் இருகரம் கூப்பி கோருவது ஒன்றே ! இன்று பக்கத்துவீட்டுக்காரன் மனை ஆக்கிரமிக்க படுகிறதென்றால் நாளை உங்கள் மனையும் ஆக்கிரமிக்கப்பட எவ்வளவோ காலம் பிடிக்காது.

சுய நலம் கருதியேனும் , அநியாயத்தை எதிர்த்து மொட்டை பெட்டிஷனாவது போட்டு உங்கள் சமூக பொறுப்பை பறை சாற்றுங்கள் !