Sunday, October 11, 2009

செக்ஸ் ஜோக் +மனோதத்துவம் :11


செக்ஸ் ஜோக் +மனோதத்துவம் என்ற தலைப்பிலான தொடர்பதிவுகளுக்குதொடரும் தங்கள் ஆதரவுக்கு நன்றி. இப்போது மற்றொரு ஜோக்கை பார்ப்போம்.

வேறு கிரகம் எதிலாவது உயிர்கள் வாழ்கின்றனவா என்பதை கண்டுபிடிப்பதே முக்கிய நோக்கமாக‌பூமியிலிருந்து ஒரு விண்கலம் புறப்பட்டது. இறுதியில் ஒரு கிரகத்தில் உயிர்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எப்படியோ மேற்படி கிரகத்தலைவரை சந்தித்து பேசி அங்கத்திய பௌதிக, உயிரியல் அறிஞ‌ர்களுடன் கலந்துரையாடல் செய்தனர். பேச்சு குழந்தை பிறப்பு குறித்து திரும்பியது. நம்மவர்கள் அவர்களை கேட்டனர். உடனே அந்த கிரகத்தை சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் முன் வந்தனர். தலைக்கு மேலாக உள்ள தத்தமது ஏரியல்களை ஒன்றுடன் ஒன்று உரசச்செய்தனர். இரண்டுக்குமிடையில் ஒரு ஒளி பாய்ந்து அடங்கியது. பின்பு பெண் தன் வயிற்றுப்பகுதியிலான கதவை திறந்தாள் அதனுள் ஒரு குழந்தை.

அந்த கிரகத்தை சேர்ந்தவர்கள் நம்மவர்களை கேட்டனர். நம்மவர்கள் கூடிபேசி ஒரு ஆணும் பெண்ணும் முன் வந்து தம் ஆடைகளை புறக்கணித்து அந்த புராதன சடங்கை நிறைவேற்றினர்.

மேற்படி கிரக வாசிகள் எங்கே குழந்தை என்று கேட்டனர்.
"பத்து மாசம் கழிச்சு வரும் "
"தூத்தெரி..அதுக்கு ஏன்யா கடைசில அவ்ள அவசரம் காட்டினே"

இந்த ஜோக்கை மனவியல் ரீதியாக கவனிப்பவர்களுக்கு சிறுவர்,சிறுமிகளை போலவே வளர்ந்த ஆண்களிலும் குழந்தை பிறப்பு குறித்த கேள்விகள் இருப்பது உறைக்கும். உடலுறவையோ , குழந்தை பிறப்பையோ கேவலமாக பேசுபவர்களின் , அது குறித்த ஜோக்ஸை பரப்புபவர்களின் சைக்காலஜி என்ன ?
ஒவ்வொரு ஆணுக்கும் டீன் ஏஜில் உடலுறவு என்ன கருமம் பெண்ணின் ஒரு முத்தமே ,ஒரு பார்வையே பெரும் பரபரப்புக்கு ஆளாக்கியிருக்கும் . ஏங்கச்செய்திருக்கும், விரகத்தில் எரியச்செய்திருக்கும். பலான விஷயத்தில் சுகானுபவங்களை எதிர்கொண்ட ஆண், பெண் எத்தனை வயதானாலும், அடுத்த தலைமுறையின் ஆசைகளை ,அபிலாஷைகளை புரிந்து கொள்ளவே முயற்சிப்பார்கள். முக்கியமாய் ஜெனரேஷன் கேப் என்பது இவர்களை பாதிக்காது

60 வயது முதியவர் கூட 14 வயது பையனை கலாய்ப்பதும், ஆலோசனை வழங்குவதையும் நான் பார்த்திருக்கிறேன்.பெண்களும் இப்படித்தான் எவளொருத்தி " நல்ல படியாக " செக்ஸை அனுபவித்திருக்கிறாளோ அவள் சீன் போடுவதில்லை. அவளில் காம்ப்ளெக்ஸுகள் இருப்பதில்லை. முக்கியமாய் இரட்டை வேடங்கள் இருக்காது.

ஆனால் காலத்தே பயிர் செய்யாது , ரிஷ்ய ஸ்ருங்கர்களாய் வேடமிட்டு, தம்மில் மேற்படி எண்ணங்களே கிடையாது , மேற்படி உறுப்பு இருப்பது வெறுமனே அற்ப சங்கியைக்காக மட்டும் தான் என்பது போல் ஷோ காட்டும் ஆண் ,பெண்கள் மானசிகமாக கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் அதிகம் பேர் சுய இன்பம் அனுபவிப்பவர்களாக இருப்பார்கள்.

"மடக்கிட்டேன்" "சாய்ச்சாச்சு" "முடிச்சாச்சு" என்று பீலா விடும் விடலைகள் , ஆச்சா போச்சா என்று மூச்சா போன கதையாய் வெளிவரும் ஆசாமிகள் இந்த சமாச்சாரத்தை ரொம்பவே கிண்டலடிப்பார்கள். ஆணை "ஜொள் விடறான் பார்ரா. ஆம்பளை ஆம்பளையா இருக்கணும் " என்றும் , "பெண்ணை அலையுது பார்" என்றும் விமர்சிக்கும் ஃபார்ட்டீஸ் (பாட்டீஸ் இல்லிங்க/பாட்டீஸ் எல்லாம் தங்களோட கடந்த கால காம்ப்ளெக்ஸுங்களை எல்லாம் நினைச்சு சிர்ரிச்சுட்டிருப்பாங்க. நான் சொல்றது 40 வயசு கிராக்கிங்களை)

ஆண் ஜொள் விடுவதும், பெண் அலைவதும் இயற்கை. அப்படி செய்யாவிட்டால் தான் பிரச்சினை. ஏற்கெனவே ஆண்கள் சுய இன்பம், வித விதமான காம்ப்ளெக்ஸ், விதைகளை இறுக்கி பிடிக்கும் ஜீன்ஸ், சதா சர்வ காலம் மூலத்தை சூடேற்றும் வாகன சவாரி, ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட், நூடுல்ஸ், மேகி,சிக்லைட் ,டீ,சிகரட், பான் ,கஞ்சா என்று வெற்று துப்பாக்கிகளாய் தயாராகிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் /அவன் ஜொள் விடாவிட்டால் திரு நங்கையா / துப்பாக்கி கையில் எடுப்பவனா/ வெற்று துப்பாக்கியா என்று டெஸ்ட் செய்தாக வேண்டிய நிலை.

40 ல் இருப்போர், 40 ஐ கடந்தோருக்கு நான் கூறும் அறிவுரை :
அம்மா ! அய்யா !
காலம் மாறிப்போச்சு. எங்க காலத்துல எல்லாம் இப்படியா என்று பீற்றிக்கொள்ளும் பழக்கத்தை விடுங்கள். நாம் வாழ்ந்தது (முக்கியமாய் செக்ஸ் லைஃப்) வாழ்க்கையே இல்லை. நான் காதல் களத்தில் இறங்குவதற்கு 5 வருடங்கள் முன் கூட ஆண் பெண் நின்று பேச மூத்திர சந்துகள் தான் இருந்தன.

அந்த ஒரே விஷயம்தான் உங்க பையன்,பெண்ணோட மனசை அலை பாய வைக்குது. வழி தவற வைக்குது நேரடியா அதுல இறங்கி (வயித்துல வாங்கிடாம/கொடுத்துடாம) ஏறி வந்தாலும் பரவாயில்லை. நிறைய சதவீதம் அதை மறக்க /அல்லது அதை நினைத்து செய்யும் பை.தனங்கள் தான் அவர்கள் வாழ்வை அதிகம் பாதிக்கப்போகிறது.

நீங்கள் வளர்க்கும் நாய்கள் பருவமடைந்தாலே புரிந்து கொண்டு செயல்படும் நீங்கள் உங்கள் வாரிசுகளை கண்டு கொள்ளாமல் விடுவது நியாயமா ? சொல்லித்தெரிவதல்ல மன்மதக்கலை என்று வாளாவிருந்தால் வாழ்க்கை கற்றுக்கொடுக்கும் அதிக வலியுடன். நம் குழந்தைகள் அவர்கள். அவர்களுக்கு சிறு வயதில் மூச்சா போவதெப்படி, கக்கா போவதெப்படி என்று கற்று கொடுத்தது நாம் தானே. இதையும் கற்றுக்கொடுத்தால் என்ன ? உங்களுக்கு கில்ட்டியாக‌ இருந்தால் இது தொடர்பான புத்தக‌ங்களை கொடுங்கள் அ எஜுகேட்டிவாக இருக்கும் டிவிடி இத்யாதி கொடுங்கள்.

இல்லாவிட்டால் அவர்களும் ஏங்கி ,எரிந்து சீ சீ அந்த பழம் புளிக்கும் என்ற நிலைக்கு வந்து விட்டால் என்ன ஆவது. அவர்களால் மேற்சொன்னது மாதிரி ஓரிரண்டு ஜோக்குகள் கிடைக்கலாம் அவ்வளவுதான் என்ன நான் சொல்றது கரெக்டுதானே !

எவனாவது எவளாவது ஆண் ,பெண், காதல் ,திருமணம் உடலுறவு, குழந்தை பிறப்பு இத்யாதி மீது ஜோக் சொன்னால் சிரிக்காதீர்கள் சிந்தியுங்கள். இவ்வித ஜோக்குகளை சொல்பவர்கள் சீ சீ அந்த பழம் புளிக்கும் கேஸுகளா ? அல்லது ஆண்டு அனுபவித்து அடச்சே இதுக்கா இவ்ள என்ற எண்ணத்துடன் தங்கள் மனதை லேசாக்கி கொள்ள ஜோக்காய் கொட்டும் கேஸுகளா? சிந்தியுங்கள். சிந்திக்காதே சிரித்து விடாதீர்கள் !