Saturday, October 10, 2009

செக்ஸ் ஜோக் + மனோதத்துவம் : 10


செக்ஸ் ஜோக் + மனோதத்துவம் : 10

கணவன் மனைவி இடையில் கோட் இருப்பது நல்லதே. அது அடுத்தவருக்கு புரியாத வகையில் ஓகே. புரிந்தால் என்ன ஆகும் என்பதை இன்னொரு ஜோக்கில் சொல்கிறேன் என்று கடந்த பதிவில் சொல்லியிருந்தேன். அந்த ஜோக்கையும் , அது குறித்த விளக்கத்தையும் இப்போது பார்ப்போம். இதுவும் ரயிலில் தான் நடக்கிறது. ஏ.சி.காம்பார்ட்மெண்ட். ஒரு கணவன் மனைவி ஒரு புறம்.மாணவர்கள் ஒரு புறம். பொழுது போக போக கணவன் மனைவி கோடில் பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். (அவர்களின் கோட் வார்த்தை :ரொட்டி சுடறது ) கம்பார்ட்மெண்டில் எல்லோரும் சாப்பிட்டு தூங்க ஆரம்பித்து விட்டார்கள். கணவன் (புது மணத்தம்பதி என்று வைத்துக்கொள்ளுங்கள்) தன் ஆசை தீர இரண்டு முறை ரொட்டி சுட்டுவிட்டு தூங்கி விட்டான். மறு நாள் பொழுது விடிந்த பிறகு பேசும் போது மனைவி சொன்னாள் " என்னங்க ராத்திரி ரொட்டி சுட்டதில மூணாவது தடவை சுட்டிங்களே அதாங்க சூப்பர் " கணவன் அதிர்ந்து விட்டான். "அடிப்பாவி நான் ரெண்டு தடவ தானேடி சுட்டேன்" என்று சீறினான். அப்போது எதிரில் இருந்த மாணவர்களில் ஒருவன் " அட ஏன்யா சும்மா கத்தி கலாட்டா பண்றே.. ஏதோ தவ்வா சூடா இருக்கேனு நான் தான் மூணாவது தடவை ரொட்டி சுட்டேன்.என்றான்.

இந்த ஜோக் பகிரங்க பிரதேசத்தில் சீண்டிக்கொள்வது, உடலுறவு இத்யாதி குறித்து அமைந்துள்ளது. பகிரங்க பிரதேசத்தில் செக்ஸ் என்பது ஒன்று வேறு விதியில்லாது ஏற்படலாம். (இரவு நேரங்களில், கிராமப்புறங்களில் இது அதிகம்) மாற்றம் கருதி தம்பதிகள் இதில் இறங்கலாம். மொட்டை மாடி இத்யாதி. (சுற்றுப்புறத்தில் உயரமான மாடிகள்/பைனாகுலர் வைத்த ஜொள் பார்ட்டி எவனாவது இருந்தால் கதை கந்தல்) காதலர்கள் முயற்சி பண்ணலாம். இது சாதாரணமாக சரீர காதலில் தான் சாத்தியம். அதிலும் டீன் ஏஜர்கள் இதில் அதிகம் விற்பன்னர்கள். ரெய்டோ, ரோட் பொறுக்கிகளோ வந்தால் எதிர்காலமே நாஸ்தி.

புது மண தம்பதிகளில் ஆண் இதில் அதிகம் ஆர்வம் காட்டுவான். காணாததை கண்டவன் இதில் முதலில் இருப்பான். சாதாரணமாக பெண் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஏற்கெனவே ஒரு பதிவில் குறிப்பிட்டதை போல உடலுறவு கொள்ளும் இடம், பாதுகாப்பு ரொம்ப முக்கியம். ஆண் இதற்கு முக்கியத்துவம் தராதிருக்கலாம். ஆனால் பெண் ? இந்த ஒரே காரணத்தால் டென்ஷன் ஆகி , உடலும், உறுப்பும் உறவுக்கு தயாராகாது (லூப்ரிகேஷன்) வலி, எரிச்சலில் " ஆயுசுக்கும் வேண்டாண்டா சாமி " என்ற முடிவுக்கே அந்த பெண் வந்து விடவும் வாய்ப்புள்ளது.

இங்கு பிறன் மனை (ஊரான் மனைவி) என்ற கான்செப்ட்டையும் பார்க்க வேண்டும். ஆரோக்கியமான மனம் , உடல் நிலை, ஆண்மை, செக்ஸ் குறித்த புரிதல், விழிப்புணர்ச்சி,சூட்சுமங்கள் பற்றிய அறிவு உள்ள ஆண் ஆகட்டும் ,பெண் ஆகட்டும் எக்காரணம் கொண்டும் கை மாற கனவிலும் கருதுவதில்லை. மேற்சொன்ன அம்சங்கள் தவறினால் மட்டுமே கள்ள உறவு இத்யாதி துவங்குகிறது.

எனக்கு தெரிந்து என் நண்பனின் அக்கா ஒருத்தி இப்படித்தான் ஒரு நாவிதன் கைக்கு மாறிவிட்டாள். அவனுக்கு திருமணம் நிச்சயமாகிவிட, இவளை அவன் அலட்சியப்படுத்த அதை தேசீய பிரச்சினையாக கருதி என்னிடம் ஜோதிடம் கேட்க வந்தாள். (தன் தோழிக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டதாக)

மெள்ள விசாரித்தால் மேற்படி நாவிதன் ஏற்கெனவே இவளை பல வகைகளில் மொட்டை போட்டிருப்பது தெரிந்தது. சீட்டுப்பணம், கை மாற்று , அக்கம் பக்கத்தில் வட்டிக்கு கடன், அடகு வைக்க நகை என்று விளையாடியிருக்கிறான் என்பது தெரியவந்தது.

பிறகு ஜோதிடம், தர்ம சாஸ்திரம், சைக்காலஜி ,செக்ஸாலஜி எல்லாம் கலந்து கட்டியாய் கவுன்சிலிங் கொடுத்து இறுதியாய் பிரச்சினை உன்னதுதான். இதை இதோடு விட்டா சரி. இல்லே உன் வீட்ல போய் பேச வேண்டி வரும் என்று மிரட்டி அனுப்பினேன். மேற்படி நாவிதனுக்கும் (அவன் யார் என்று கண்டறிந்து) ஸ்ட்ரிக்ட் வார்னிங் கொடுத்து (பெண் பாவம் பொல்லாதது/ பொட்டை குட்டியா பிறக்கும் இத்யாதி) அவன் விழுங்கியதையெல்லாம் கக்கச்செய்வதற்குள் கண்ணைக்கட்டி விட்டது. தற்போது யாவும் சுபம்.

இந்த கேசையே எடுத்துக்கங்க. பிரச்சினை என்ன ?

இவள் பி.எஸ்.சி. கணவன் பத்தாங்கிளாசு. ஏதோ நர்சரி கார்டன் வச்சிருக்கான். 4 போர் (Bore) போட்டு ஃபெயில் ஆச்சு. அதுல கொஞ்சம் எரிச்சல் . அதனால லேசான விரிசல். இந்த சந்துல அந்த நாய் சிந்து பாடிருச்சு. கணவர்களுக்கு அட்வைஸ்:
இன்னும் ,இன்னும்னு நீங்க அலையறதும், சம்பாதிக்கிறதும் உங்க குடும்பத்துக்காகத்தான். வாழ்க்கையும் ஒரு எக்ஸாம் மாதிரிதான். எக்ஸாம்ல 5 சப்ஜெக்ட்ல நூற்றுக்கு நூறு வாங்கி ஒரு சப்ஜெக்டுல 34 வாங்கினா கூட ஃபெயில் தான்.

வாழ்க்கையில எல்லாமே முக்கியம் தான். அததுக்கு ஒரு நேரம் ஒதுக்கனும். (இங்கே செக்ஸை மட்டும் சொல்லலை /பேச்சு /சிரிப்பு/ ஒரு முத்தம்/ஒரு அணைப்பு எல்லாமே முக்கியமா மனைவியோட அப்பா, அண்ணன் தம்பி யார்னா இருந்தா அவங்களை பத்தி மட்டும் கேவலமா பேசவே பெசாதிங்கப்பா அப்புறம் இந்த சம்சாரங்க நரகத்துக்கு பேக்கேஜ் டூர் ஏற்பாடு பண்ணிருவாங்க)

பெண்களுக்கு :
இந்திய பெண்களுக்கு செக்ஸ் என்பது இரண்டாம் பட்சம் தான். அதனால் தான் ஏதோ வண்டி ஓடுகிறது. ஆனால் லேட்டஸ்ட் தலைமுறை மேற்கிந்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால் செக்ஸும் முக்கியமே என்ற நிலையில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. அவர் உங்களை கண்டுக்கலன்னாலும், எரிஞ்சு விழுந்தாலும், அவர் எது செய்தாலும் உங்களுக்காகத்தான் என்பதை மறந்துடாதிங்க. அவர் எதுவும் செய்யலைன்னாலும் உங்க அன்பு அவருக்கு நிச்சயம் உண்டு. இந்த எளிய உண்மை புரியாம ஏதோ ஒரு இழவை சாதிச்சு உங்களை மெய் மறக்க ச்செய்யத்தான் இத்தனை அல்லாடல்னு புரிஞ்சுக்கங்க.
ஆண்களின் மதுப்பழக்கம், சூது, சட்ட விரோத செய‌ல்கள், பொருளாதார குற்றங்கள் வன்முறை அனைத்துக்கும் நிறைவேறாத செக்ஸ் ஆசைகளே என்பதை புரிந்து கொள்ளுங்கள் . அதுக்கு தேவடியாளா மாறச்சொல்றிங்களானு முறைக்காதிங்க தாயே.. அய்யர் மாரே சொல்லிவச்சிருக்காங்க " சயனேஷூ ரம்பா" அதாவது மனைவிங்கறவ படுக்கையில பரத்தையாவே மாறனுமாம். ஓகே.