Tuesday, October 6, 2009

செக்ஸ் ஜோக் + சைக்காலஜி 6

செக்ஸ் ஜோக் நேற்று சைக்காலஜி இன்று
நேற்று பதிவிட்ட இரண்டு செக்ஸ் ஜோக்குகளை உருவாக்கியவர் சைக்காலஜி , அதை இத்தனை காலம் ரசித்தவர்கள் சைக்காலஜியை இந்த பதிவில் பார்ப்போம். குழந்தைகள் இந்த பூமி கிரகத்துக்கு புதிதாய் வந்த விருந்தினர்கள். அவர்களை வரவேற்று இங்குள்ள நல்லது /கெட்டது குறித்த அறிமுகம் தர வேண்டியது பெற்றோரின் கடமை. நம் வீட்டுக்கு வந்து தங்கியுள்ள விருந்தினருக்கு பூசையறையை காட்டித்தரவேண்டியது எத்தனை முக்கியமோ கழிவறையை காட்டிதரவேண்டியதும் முக்கியம் தான். இல்லாவிட்டால் நள்ளிரவில் கக்கா போக கழிவறைக்கு வழி தெரியாது பூசையறையும் நாஸ்தியாகிவிடலாம். குழந்தைக்கு தன் விரல் எத்துணை புதுமையோ, அதன் இன உறுப்பும் அத்துணை புதுமை. விரலை ஆர்வத்துடன் ஆராய்வது போலவே இன உறுப்பையும் ஆராயும் சுற்றியுள்ள பெரியவர்கள் " பேட் பேட் " என்றோ "சீ சீ ஆய்" என்றோ அதை தடுத்து அதனுள் மனத்தடையை ஏற்படுத்தி விடுகின்றனர்.

அந்த உறுப்பின் வில்லங்கமான உபயோகம் நமக்கு (பெரியவர்களுக்கு) தெரியுமே தவிர குழந்தைக்கு தெரியாது. குழந்தைக்கு தெரிந்ததெல்லாம் அறிவது, அறிய முயற்சி செய்வது.

ஒரு குழந்தைக்கு ஹனி மூன் போட்டோ வை காட்டுகிறார்கள் . அப்போது அது தன் பெற்றோரை கேட்கிறது. "ஃபோட்டோல நான் இல்லையே ஏன் ? அப்போ எங்கே இருந்தேன்?" அதற்கு அதன் அப்பா சொல்கிறாராம். "ஹனி மூன் போறச்ச நீ எங்கிட்ட இருந்த வரச்ச அம்மா கிட்ட இருந்தே"

"நான் எப்படி வந்தேன்?" என்றால் "கறிவேப்பிலை காரிக்கிட்டே வாங்கினோம்" என்றோ "காக்கா தூக்கிகிட்டு வந்து போட்டுச்சு" என்றோ கூறுபவர்களும் இருக்கிறோம்.

குழந்தை/சிறுவன்/சிறுமி கேள்வி கேட்பது அடுத்த நிமிடம் கெட்ட காரியத்தில் இறங்க அல்ல.. ஜஸ்ட் க்யூரியாசிட்டி .தெரிந்து கொள்ளவேண்டும். தட்ஸ் ஆல் !

ஆனால் இதே பெரியவர்கள் (இறைவன் அருளால் அனைவரும் அல்ல , சில மனித மிருகங்கள் மட்டும்) அடுத்த வீட்டு குழந்தைகளிடம் பழகும்போது என்ன செய்கிறார்கள் ? பெண்டாட்டியிடமோ, காதலியிடமோ , விபச்சாரியிடமோ தம் ஆண்மையை காட்டும் ஆண்மையில்லாத சில இழவுகள் குழந்தைகள் முன் தம் இன உறுப்புகளை எக்ஸிபிட் செய்வது (இது எக்ஸிபிஷனிசம் என்ற மனோ வியாதி) , சில்மிஷங்கள் செய்வது , ஏமாந்தால் கற்பழிப்பது.

இந்த கேஸ்கள் எல்லாம் செக்ஸ் பற்றிய புரிதல் இன்றி, சுய இன்பம் ,ஸ்வப்ன ஸ்கலிதம் இத்யாதியில் சக்தியை வீணாக்கி விட்டு பெண் என்றாலே தொடை நடுங்கி /துரித ஸ்கலிதத்தால் நக்கலுக்கு எதிரான கேஸ்களே. இவர்கள் வெளியுலகத்தில் பெண்ணை கண்டாலே அப்படி ஒரு மரியாதை இத்யாதி பம்மாத்து செய்வார்கள் . ஆனால் எவ்வித பாதுகாப்பும் அற்ற தளிர் தம்மிடம் சிக்கினால் நாறடித்து , கொன்றும் போடுவார்கள் .

இன்றுள்ள நிலையில் எந்த ரிஷ்ய ஸ்ருங்கனும் பிரம்மச்சர்ய விரதமெல்லாம் காக்க முடியாது. எனவே குறிப்பிட்ட இடைவெளியிலான செக்ஸ் கட்டாயமாக்கப்பட வேண்டும். விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கினாலும் சரியே. செக்ஸ் கோரிக்கைகள் நிறைவேறாத ஆண் ஒரு மனித வெடிகுண்டை விட ஆபத்தானவன். மனித வெடிகுண்டுக்காவது அதை எப்போது,எங்கே வெடிக்கச்செய்வது என்ற் விஷயத்தில் சாய்ஸ் உண்டும் செக்ஸ் கோரிக்கைகள் நிறைவேறாத ஆணுக்கு அந்த சாய்ஸ் கிடையவே கிடையாது. எனவே ..என்ன செய்ய வேண்டும் என்பதை யாரேனும் அன்பர்கள் மறுமொழியிட்டால் மகிழ்வேன்.

(சாரி ..மற்றொரு ஜோக் மீதான அனலைசிஸ் அடுத்த பதிவில் )