Sunday, October 11, 2009

செக்ஸ் ஜோக் + மனோதத்துவம் :12

முதலில் ஒரு ஜோக். ஒரு சாமியார் ஆரம்பத்தில் பெரிய ஸ்த்ரீ லோலனாய் இருந்து சிற்றின்பத்தின் அர்த்தமற்ற தன்மை உறைக்கவே தவத்தில் இறங்கிவிட்டார். அவர்மேல் மண் மூடியது. அந்த வழியாக ஒரு ராஜா வந்தான். ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம் அதை அடக்க முடியுமா சாமியாரை மூடியுள்ள மண்மேட்டின் மீது ஒன் பாத்ரூம் அடித்துவிட்டான். கப்பு கிளம்பவே சாமியார் " இன்னைலருந்து உனக்கு ரெண்டு "என்று சாபமளித்து விட்டார். (தான் ஒன்றை வைத்துக்கொண்டு பட்ட பாடு சாமியாருக்குதானே தெரியும் "
ராஜாவுக்கு ஒன்று இரண்டாகிவிட்டது.அரண்மனைக்கு வந்தான். தன் ஆத்மார்த்த நண்பனும் ,மந்திரியுமான லிங்கத்திடம் தான் சாமியாரிடம் சாபம் பெற்ற கதையை கூறி கண்ணீர் வடித்தான்.ராஜாவுக்கு ஆறுதல் கூறியப‌டியே சாமியாரின் பெர்ஃபெக்ட் லொக்கேஷன் கேட்டறிந்து கொன்டான். மந்திரிக்கு பாவம் ரெண்டு சம்சாரம்.


காடு சென்ற மந்திரி சாமியார் தவம் புரியும் மண்மேட்டை தேடிப்பிடித்து ஒண்ணுக்கடித்தான். சாமியார்தான் முற்றும் அறிந்தவராயிற்றே. இருந்த ஒன்னே ஒன்னும் அறுந்து விழட்டுமுனு விட்டாரே பார்க்கலாம சாபம் .

இந்த ஜோக் குறித்த விளக்கத்தை அடுத்த பதிவில் கூறுகிறேன் சாரி.

எச்சரிக்கை 1:
இந்த பதிவை வீட்டுக்கணிணியில் தட்டச்சி சி.டி.யில் ரைட் செய்து என் அண்ணன் மகள் கவிதாவிடம் கொடுத்தனுப்பினேன். சைட்ல அப்லோட் பண்ணிட்டு பிங் பண்ணிட்டு வாம்மா என்று. (அவள் நினைவாகத்தான் இந்த வலைப்பூவுக்கு கவிதை என்று பெயர் சூட்டியது குறிப்பிடத்தக்கது. கவிதை07 என்ற பெயரில் நான் க்ரியேட் செய்த மெயில் ஐடிக்கு ஏதாவது மெயில் வந்ததா செக்கவும் கூறியிருந்தேன்.பாவம் அவள் கெட்ட நேரம் மெசஞ்சரில் சைன் இன் செய்துள்ளாள்.(சித்தப்பாவ பத்தி என்ன தான் சொல்லுது ஜனம் பார்ப்போமுனு நினைச்சாளோ என்னவோ. ஆண் மிருகங்கள் சாட்டிலேயே ரேப்ப முயற்சி செய்துள்ளன. ஏதோ கெட்ட நேரத்தில் நல்ல நேரம் அவள் ஆம்பள பாப்பாத்தி என்பதால் எப்படியோ சமாளித்து விட்டாள். வேறு யாரேனும் பெண் சிக்கியிருந்தால் நிச்சய்ம் தற்கொலைதான். இந்த போக்குக்கு காரணமும் பெண், பெண் மனம், பெண்ணுடல், செக்ஸ் குறித்த புரிதல் இன்மைதான். இதையெல்லாம் ஒழிக்கனும்னா ஆயிரம் பதிவு போடனும்போல இருக்கு. நினைச்சாலே கண்ண கட்டுது நைனா !

எச்சரிக்கை 2:

என்னடா இது மறுமொழி போடறவங்கல்லாம் என்ன ஆயிட்டாங்க எங்கே போயிட்டாங்கனு யோசிச்சு பார்த்தா இந்த 11 நாட்களா நம்ம வலைப்பூவுக்கு வருகை தரவங்கல்லாம் புதுசா வராங்களானும் ஒரு சம்சயம். நாம எழுதற ஸ்டைல வச்சு ஜனம் பலான டாக்டருனே நினைச்சு போன் பண்றாங்கப்பு. நம்ம அறிவுரைலாம் ஆரோக்கியமா இருந்தும் , அசால்ட்டா செய்ற சில தவறுகளால பிரச்சினை விலை கொடுத்து வாங்கற வாலிப வயோதிக அன்பர்களுக்கு தான் சரியா இருக்கும். மற்றபடி வெள்ளை ,வெட்டை இத்யாதிக்கெல்லாம் உங்க ஊர் ஆஸ்பத்திரில கைனகாலஜிஸ்ட் இருந்தா அவருக்கு காட்டுங்கப்பு.

இந்த தொடர்பதிவை ஆரம்பிச்ச பிறகு போன் போட்டு குடைச்சல் குடுக்கிற சனம் அதிகமாயிருச்சு. அந்த காலத்துல தமிழ் வாணன் மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸ்னு போட்டு , நீச்சல் அடிப்பது எப்படினு கூட ஒரு புஸ்தவம் போட்டதா ஞா. நமக்கு அந்த அளவுக்கு ஹிம்மத் இல்லப்பு.

அவர் உடலுறவில் மனைவியை மகிழ்விப்பதெப்படினு ஒரு புஸ்தகம் போட்டிருந்தாரு. அதையாவது மன்னிச்சிரலாம் கு.க வுக்கு சில வழிகள்னு கொடுத்திருந்தாரு பாருங்க ஒரு வழி. அட டா.. புல்லரிக்குதுப்பா

உறவுக்கு முன்னாடி பஞ்சை நூல் கட்டி விட்டுரனுமாம். காரியம் முடிஞ்ச பிறகு நூலை இழுத்து (பஞ்சை) குப்பைல போட்டுரனுமாம். அடப்பாவிங்களா.. நமக்கு அந்த மாதிரி வில்லங்க யோசனைல்லாம் சொல்ற அளவுக்கு தெம்பு, தெனாவட்டு இல்லிங்கணா. விகட‌ன் நிறுவனர் வாசன் கூட இந்த கேட்டகிரில புஸ்தவம் எழுதி வித்ததா தெரியுது. மொத்தத்துல இந்த மாதிரி சப்ஜெக்ட்ல விளையாடறவங்க ( எழுதறவங்கனு புரிஞ்சுக்கங்கப்பு) ஃப்யூச்சர்ல ரொம்ப பெரிய மனிதர்களாயிருவாங்க போல .

எச்சரிக்கை 3:

இதையெல்லாம் எழுத காரணம் சிலரின் போன் விமர்சனங்கள்தான். "இந்தியாவை பணக்கார நாடாக்க இதுவும் ஒரு வழியா? நதி நீர் இணைப்புக்கும் இதற்கும் என்னய்யா சம்பந்தம்னு கட்டைய போடறாங்க"

நான் ஒரேஒரு விஷயத்தை தெளிவு படுத்திர விரும்பறேன். 1967 ல பிறந்த நான் 1986 வரை வாழ்ந்த வாழ்க்கை வேற . அது ஆற்றோடு போகும் வாழ்க்கை. அதற்கு பின்னான வாழ்க்கை முழுக்க எதிர் நீச்சல்தான். என் லட்சியமே பிறப்பறுப்பது. சுய நலத்துடன் கூடிய செயல்கள் பிறப்பை தரும். பொது நலப்பணிகள் பூர்வ ஜென்ம கருமங்களை ஒழிக்குமே தவிர பிறப்பை தராது. எனவேதான் ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ என் லட்சியமாக கை கொண்டேன். இதன் முக்கிய நோக்கங்களை அறிய கீழ் காணும் லிங்கை க்ளிக் செய்யவும்.
அந்த நாள் முதல் இந்த நாள் வரை நான் என்ன செய்தாலும் அதன் பின்னான ஒரே நோக்கம் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் குறித்த பிரச்சாரம் & அமலுக்கான முயற்சிதான்..

இதில் முக்கிய அம்சம் 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் அமைத்து நதிகளை இணைத்தல் என்பது தாங்கள் அறிந்ததே. இளைஞர்கள் என்ன கேடு கிழ கட்டைகள் சகிதம் செக்ஸ் குறித்த விழிப்புணர்ச்சி,புரிதல் ,சூட்சுமம் அறியாது தம் வாழ்வை நரகமாக்கிக்கொண்டு ,
இதரரின் வாழ்வையும் நாஸ்தி பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். முதற்கண் இவர்கள் சிற்றின்பம் என்ன என்பதை அறியவேண்டும் ,அனாவசிய குற்ற உணர்ச்சிகள்,மூட நம்பிக்கைகள் காரணமாய் இதை தவிர்க்கவோ, இதனுடன் போராடவோ, காலம் கடந்து அனுபவிக்க இறங்கினாலோ சர்வம் நாசம் .

அதே சமயத்தில் நான் இந்த தொடர்பதிவில் சொல்லிவரும் விஷயங்களை மண்டையில் ஏற்றிக்கொண்டால் சிற்றின்ப பாதை க்ளியர் . பிறகு ஆட்டோமேட்டிக்காக பேரின்ப பாதைக்கு மனம் திரும்பும். இது ஒரு சட்டம். இதை எவனும் மீற முடியாது. கேவலம் சிற்றின்ப பாதையிலேயே சிக்கித்தவிப்பதும், வித விதமான காம்ப்ளெக்ஸுகளால் பணப்பேய்க்ளாய், அதிகார வெறியர்களாய், இரட்டை வேடதாரிகளாய், சேடிஸ்டுகளாய் அலைவதால் இவர்களில் படைப்பின் பால் நன்றியுணர்ச்சி இல்லை. என் லட்சியம் இவர்கள் கண்ணுக்கு கேலிக்கூத்தாக தெரிகிறது. எனவேதான் இந்த வாத்ஸாயன் 09 அவதாரம் . என்ன ஓகேவா .. ஜூட் !