Thursday, October 22, 2009

விரைவில் ரிலீஸ்

விரைவில் வெளிவர இருக்கும் பதிவுகள்
1.மனிதன் மிருகமாகவே வாழ்ந்திருந்தாலும் சரியே
2.உலக அழிவு எப்போது ?
3.பிறன் மனை விழையாமை
4.தெலுங்கு கற்றுக்கொள்ளுங்கள்
5.விற்பனையை அதிகரிப்பது எப்படி?
6.விளம்பரங்கள் பிடிப்பது எப்படி ?
7. நான் ரசித்த வரிகள்
"முடியறவாளுக்கு எப்பவும் முடியும் முடியறவாளுக்கும் காலத்துக்கும் சம்பந்தமில்லே"
-லா.ச.ராமாமிருதம் (என் பிரியமுள்ள சினேகிதியே)
8 சரஸ்வதி சபதம் ( நாடகம்)

முகேஷ் ( என் பாத்திரம்) 21 ஆம் நூற்றாண்டுல கல்வி, வீரம், செல்வம் இதுக்கெல்லாம் அர்த்தம் மாறிப்போச்சு , மூனுமே நாறிப்போச்சு இதுக்கெல்லாம் ஒரு தேவதையாம் அதுக்கு பூஜையாம் புனஸ்காரமாம் என்று கண்ட மேனிக்கு கலம்பகம் , அறம் எல்லாம் வச்சு கவிதை பாட நாரதர் போய் முப்பெரும்தேவியருக்கு போட்டுக்கொடுக்க அவர்கள் பூலோகம் வந்து முகேஷுடன் வாதிட உலகத்துல கு.பட்சம் இந்தியாவுல மட்டுமாவது உபயோகமான கல்வி, நேர்மையான செல்வம், தியாகத்துக்கு தயாராக உள்ள வீரம் செழிக்க ஒர்க் அவுட் பண்ணுகிறார்கள். இந்த முயற்சியில் மலைமகள், மலர்மகள், கலைமகள் மூவருமே செல்வமிழந்து தோற்று தத்தம் உலகத்துக்கு போய்விடுகிறார்கள்
(To be continued

9.வெற்றியை விரும்புபவர்களின் ரோல் மாடல் ஸ்ரீராமன்
10.பங்காரு அடிகளாருக்கு 10 கேள்விகள்
11.எங்கே பாலகுமாரன்?
12. பெண் சுதந்திரத்தால் பெண்ணினத்துக்கு பேரிழப்பு
13. சில சிறு கதைகள்
அ) புதுமை வார இதழுக்கு தரமான படைப்புகள் பெற வழி குறித்து சர்ச்சை பத்திரிக்கை காரியாலய டஸ்ட் பின்களில் மட்டுமே கிடைக்கும் என்று முடிவு

(To be continued

14. சில துளிப்பாக்கள்
அ) கிழமே சுருக்கமாய் சொல் - சீறும் இளைஞன் முகத்தில்
முதுமையின் சுருக்கம்
இ)எனது எழுத்துக்களுக்கான உந்து சக்தி இன்றைய சமுதாயத்து சகதிகளே
ஆனால் பயணம் மட்டும் நாளைய ஆதர்ச சமுதாயம் நோக்கியே
ஈ ) நாளைய உலகின் விமர்சனத்தை எதிர்கொள்ள நாணி
இன்றைய உங்களை சாடி ஏற்கின்றேன் உங்கள் விமர்சனங்களை இன்று
உ) நில்லாது சுழலும் காலச்சக்கரம்
அது சொல்லாது சொல்லும் சேதி
எனக்கு புரிந்து போனதால் தான்
என்னை புரிந்து கொள்ள முடியாத உங்களை
புரிந்துகொள்ள முடிகிறது என்னால்
ஊ) இன்று நான் தருவன இலவசம்
நாளை இவற்றின் விலை ஒரு ஆயுட்காலம்.
இலவசம் மறுத்து விலை தந்தே பெறுவம் எனில் உம் வாழ்க்கை விதிவசம்

எ)அன்று என் தந்தையிடம் உமக்காய் வழக்காடி வெளி நடப்பு செய்து
உம்மிடை வந்து உரத்து குரல் கொடுக்கிறேன்.
நீங்களோ உம் கூடுகளிலிருந்தபடி நடத்துகின்றீர் உள்ளிருப்பு போராட்டம்

ஏ)உங்களுக்குள் வாழ்தல் என் தந்தைக்கே கடினம்
இதில் என் கருத்துக்கள் நுழைதல் எங்ஙனம்?
(To be continued

மாறிய வீடுகள் 28 (1991-2009)

1.1991 நவம்பரில் திருமணமான இரண்டு மூன்று நாட்கள் என் பாட்டியின் தங்கை மகன் லட்சுமணன் (மொடா ,படா குடியன் . ஐம்பதில் திருமணம் செய்து , லாரி விபத்தில் கிட்னியில் அடிப்பட்டு அகாலமாய் செத்தான். நான் செய்த முதல் ரத்த தானம் இவனுக்காகத்தான்) வீட்டில் ஒண்டியிருந்த பிறகு குதிர்ந்தது சித்தூர் வேப்பமரத்தெருவில் ஒரு வீடு. தெருப்பக்கம் ஒரு அறை. உள்............ளே ஒரு அறை அது சமையலறை.
இந்த வீட்டில் ரொம்பகாலமெல்லாம் வசிக்கவில்லை. 1992 ஜனவரி 1 க்கு சத்தியவேடில் இருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்
2.சத்தியவேடில் சித்தி வீட்டில் சில காலம்
3. அங்கிருந்து கும்மிடி பூண்டியில் பாய் வீடு ஒன்றில் வாசம். செக்யூரிட்டி சார்ஜெண்டாய் வேலை.
(To be continued