Saturday, April 24, 2010

செக்ஸ் தான் மதத்தின் மூலம்

அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு இந்த வில்லங்க பதிவோட லைட் சப்ஜெக்டா "சினிமா ஸ்டோரி டிஸ்கஷன்"னிட்டு நக்கல் ஐட்டம் ஒன்னும் போட்டிருக்கேன். தலைப்பு மேல க்ளிக் பண்ணிபடிச்சுருங்கண்ணா..

இந்த உலகவாழ்க்கைக்கு அப்பால் (எப்பால்னு நக்கலடிகாதிக சீரியஸ்) இன்னம் ஏதோ ஒரு வாழ்க்கை இருக்கு. அதுக்கு இன்னின்ன காரியமெல்லாம் செய்யனும். இன்னின்ன காரியமெல்லாம் செய்ய கூடாதுனு சொல்றதுதான் மதம். அந்த நாள் முதல் இந்த நாள் வரை  இவ்வுலகவாழ்க்கை  மனுஷனுக்கு திருப்தியை தரலை. தர்ரதில்லை.இதனாலதான் இன்னொரு உலகம் இருக்கு, இன்னொரு வாழ்க்கை இருக்குனு கற்பனை பண்ணிக்கிட்டான்.

மனிதனுக்கு உலக வாழ்க்கை திருப்திய தராம போனதுக்கு காரணம் ரொம்ப சிம்பிள். இவன் இந்த இயற்கைல பிரிக்க முடியாத  ஒரு பாகம். இந்த இயற்கைக்கான மையம் வேற எதுவோ. ஆனால் இந்த டுபாகூர் தன்னை இந்த படைப்புக்கு  மையமா கற்பனை பண்ணிக்கிறான்.

இது எப்படியிருக்குன்னா.. இந்த இடத்துல ஒரு சின்ன பலான ஜோக்.

ஒரு அணிலுக்கு ரொம்ப நாளா லைஃப்ல ஒரு ஆனைய கர்பமாக்கிரனும்னு ஆசை. இதுக்காக என்னென்னமோ தகிடு தத்தமெல்லாம் பண்ணி காதல் கீதல்னு படம் காட்டி ஆனைய லைனுக்கு  கொண்டு வந்துருச்சு. காரியத்துலயும் இறங்கிருச்சு. அந்த நேரம் பார்த்து ஆனை தலை மேல ஒரு பனங்காய் விழுந்துச்சு. ஆனை வலில  பிளிருச்சு.உடனே அணில் கேட்டுதாம் . " என்ன..டா..ரொம்ப வலிக்குதா? நிதானமா செய்யறேன் ஆகட்டும்"

இங்கே இயற்கைய ஆனையா, மனிதனை அணிலா கற்பனை பண்ணி பாருங்க.  ஓஷோ சொல்றாப்ல பூமி சூரியனோட குழந்தை ,மனிடன் பூமியோட குழந்தை. இந்த படைப்புல இருக்கிறதே 98+ மூலகங்கள் தானாம். இந்த மூல்கங்கள் தான் பல்வேறு கெமிக்கல் காம்பினேஷன்ல சேர்ந்து புது புது ஐட்டம் உருவாகியிருக்கு. உதாரணமா தண்ணீரை ஹெச் டு  ஓ ங்கறாங்க. அதாவது ஹைட்ரஜன், ஆக்சிஜன் சேர்ந்து தண்ணீர் உருவாச்சு.  இதே இழவு மூலகங்களால தான்  மனிதஉடலும் உருவாகியிருக்கு. இதே ஐட்டங்கள் தான் இந்த இயற்கைலயும் பரவிக்கிடக்கு.

மனித உடல்ல இருக்கிற ஐரனை காந்தப்புலம் பாதிக்குது. மனித உடல்ல இருக்கிற வாட்டர் கன்டென்டை சந்திரன் பாதிக்குது இப்படி எத்தனையோ பாதிப்புகளுக்குள்ளாக கூடைய நிலைலதான் மனித உடல் இருக்கு. மூளை கூட ஏதோ லிக்விட்ல தான் மிதக்குதுங்கறாங்க. அந்த லிக்விடோட கெமிக்கல் காம்பினேஷனும் கடல் நீரை ஒத்ததேவா தெரியலை.

நான் என்ன சொல்லவரேன்னா..இயற்கை மத்திய அரசு மாதிரி.மனுஷன் கவுன்சிலர் மாதிரி. கவுன்சிலரும் இந்திய ஜன நாயகத்துல ஒரு பார்ட் அண்ட் பார்ஷலாதான் இருக்கான். தன்னோட வார்டுல இலவச கழிப்பறைய எங்கே கட்டலாம்னு முடிவு பண்ற அதிகாரம் இருக்கலாம். அதுக்காக ஆயிரம் ரூபா நோட்ல காந்தி தாத்தா படத்தை எடுத்துட்டு எங்க தாத்தா படத்தை போடுங்கப்பானு ரூல் பாஸ் பண்ண முடியுமா? முடியாத்.

இவன் தாத்தாவோட படம் ஆயிரம் ரூபா நோட்ல ப்ரிண்ட் ஆகனும்னா ரெண்டு வழி இருக்கு. ஒன்னு ஆயிரம் ரூ நோட்டை ஸ்கான் பண்ணி க்ராஃபிக்ஸ்ல  காந்தி தாத்தாவோட படத்தை எடுத்துட்டு இவன் படத்தை வச்சு  கலர் ப்ரிண்ட் எடுத்து திருப்தி பட்டுக்கலாம். இல்லேன்னா இவன் வார்டு லெவல்ல இவன் கடமைய ஒழுங்கோ ஒழுங்கா செய்துக்கிட்டு கிடந்தான்னா என்னைக்கோ ஒரு நாள் உங்க படத்தை கரன்சில போட முடிவு செய்திருக்கோம்னு தகவல் வரலாம். அப்போ " என்னை  இந்த லெவலுக்கு கொண்டு வந்ததே எங்க தாத்தா தான். அதனால எங்க தாத்தா படத்தை ப்ரிண்ட் பண்ணுங்கனு ரிக்வெஸ்ட் பண்ணலாம். ஒரு வேளை உங்க ரிக்வெஸ்ட் ஏற்கப்பட்டாலும் படலாம்.

இயற்கை மனிதனுக்கு வழங்கியிருக்கிற உரிமை,அதிகாரம் கூட இதை போன்றதுதான். உரிமை எப்போ கிடைக்கும் ? கடமைய ஒழுங்கா செய்தப்பதான். இயற்கை மனிதனுக்கு கொடுத்திருக்கிற கடமை ரெண்டு தான் ஒன்னு உயிர் வாழறது ரெண்டு இனப்பெருக்கம் செய்யறது.

( ஸ்தூலமா பார்க்கும் போது இந்த ரெண்டு விஷயங்கள் மட்டும் பளிச்சுனு தெரிஞ்சாலும் டெப்த்ல பார்க்கும்போது இதுக்கு விட்டலாச்சாரியா தனமான காரணம் வேற ஒன்னு இருக்கு. அதையும் இந்த பதிவுல சொல்லியே உடறேன்.)

இதை விட்டுட்டு   நான் இன்டர்ல ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரேன், 10000 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறேன்னு இறங்கினா என்னாகும்? இயற்கை கோச்சுக்கும்.

இயற்கை கோச்சுக்கிட்டா உங்கள்ள இருக்கிற ஒரே பவரான செக்ஸ் பவர் வெளிய பாய ஒரு சேனலை தேடும். அது வன்முறையா இருக்கலாம், சேடிசமா இருக்கலாம், மசாக்கிசமா இருக்கலாம், பணமா இருக்கலாம், புகழா இருக்கலாம். பதவியா இருக்கலாம். நீங்க எந்த செக்ஸுக்கு  ஆல்ட்டர் நேட்டிவா வன்முறைய  ஆரம்பிச்சிங்களோ அந்த வன்முறையே செக்ஸுக்கு திருப்பி விட்டுரும்.. இதே விதிதான் பணம் ,பதவி,புகழ் எல்லாத்துக்கும் பொருந்தும்.

அம்மாவ கேட்டு அழற குழந்தைக்கு எத்தீனி சைனா பொம்மைய  கொடுத்தாலும் சில நிமிஷம் வரைதான் அழுகைய நிறுத்தும்.  அடுத்த நிமிடமே எல்லா பொம்மையையும் வீசிட்டு சைரனை ஒலிக்க விட்டுரும். ( நித்யானந்தா கேஸ்ல நடந்ததும் இதுதான்)

செக்ஸுக்கு விட்டலாச்சாரியாதனமான பின்னணி:
செக்ஸுங்கறது இனப்பெருக்கத்துக்கு மட்டும் உதவறதில்லை. ஆணை ஒரு கணமேனும் உடல் குறித்த  நினைவை அகற்ற உதவுது. பெண்ணுக்கு தன் உடலில் இன்னொரு உயிரை  பூட்டி வைக்க உதவுது.

உடலை மறந்தா என்ன கிடைக்குது, இன்னொரு உயிரை தன் உடல்ல பூட்டி வச்சா என்ன லாபம்னு கேட்பிக. சொல்றேன்.

இந்த உயிர்களுக்கெல்லாம் மூலம் ஒரு செல் அங்க ஜீவியான ஒரே உடல்,ஒரே உயிரா இருக்கிற வரை போட்டி கிடையாது, பொறாமை கிடையாது, காலம்,தூரம்,இன் செக்யூரிட்டி,ஆபத்து, கம்யூனிகேஷன் கேப் கிடையாது. தான் தானாவே இருக்கிற நிலை. ஒரு செல் அங்கஜீவியான  அமீபா கொழுத்து செல் காப்பியிங் மூலமா  ரெண்டா பிரிஞ்சது .செல் காப்பியிங்க்ல வந்த எர்ரர் காரணமா புது ஜீவ ராசிகள் ஏற்பட்டுது. குரங்கு வந்தது. குரங்குலருது மனுஷன் வந்தான். எத்தனை உயிர்களா,எத்தனை உயிர்களா பிரிஞ்சாலும் இவிக எல்லாம் ஒரு காலத்துல ஒரே உடல்ல இருந்த ஒரே உயிர் தாங்கற ஞா / நினைவு இவிக அன் கான்ஷியஸ் மைண்ட்ல புதைஞ்சிருக்கு. ஓருடல்,ஓருயிரா இருந்த காலம், இனிமையான நினைவு மறுபடி அந்த நிலைய அடைய ஏங்க வைக்குது.

இதுக்கு காரணம் ஒரே உயிரா இருந்தப்போ இருந்த  நிர்மலமான மன நிலை செல்காப்பியிங்க் மூலமா செல் டு செல் செல் டு செல் காப்பி ஆகி வந்துக்கிட்டே இருந்தது.  அந்த மன நிலைல இருந்த நிச்சலத்வம் ( சஞ்சலத்துக்கு  எதிர்சொல்லுங்கண்ணா) குறித்த நினைவு ,ஏக்கம்தான்  மனிதனை மீண்டும் ஓருயிரா மாறச்சொல்லி தூண்டுது. இதுக்கு சில க்றுக்கு வழிகளையும் தேட வைக்குது.

அந்த குறுக்கு வழிகள்ள ஒன்னுதான் உடல்கள் இணையற செக்ஸ்.
உடல்கள் இணைஞ்சா உயிர் இணையுமா ? செக்ஸ்ல  ஒரு செகண்ட் ஆர்காசத்தின் போது உடல் மறைந்து  உயிர் மட்டும் ப்ரக்ஞைக்கு வருது. உடல் குறித்த ப்ரக்ஞை இருக்கிற வரைதான்  மனுஷன் தன்னை வெவ்வேறு உயிரா உணர்ரான். அது மறையும் போது இந்த பிரம்மாண்டமான சமஸ்த  ஸ்ருஷ்டியோட கை குலுக்க முடியுது. அதனாலதான் செக்ஸ் மேல மனுஷனுக்கு இத்தனை ப்ரேமை .பிரமை.

இந்த ஆர்காசம் ஒவ்வொரு ஆணுக்கும், ஒவ்வொரு முறை அவன் செக்ஸ்ல இறங்கறப்பயும் கிடைக்குது ஆர்காசத்தின் போது தன் உடலை மறந்து இயற்கைக்கு கு.ப.ஹலோ சொல்ல முடியுது.

அதனாலதான் அவன் இந்த இயற்கையோட தொடர்பு கொள்ள துடிக்கிறான். எங்கயோ இருக்கிற அமெரிக்கா, எங்கயோ இருக்கிற கிரகங்கள்,சூரிய சந்திரர்கள் பத்தியெல்லாம் தெரிஞ்சுக்க துடிக்கிறான். ஆனால் பெண்ணுக்கு இந்த ஆர்காசங்கறது தீபாவளி பம்பர் பரிசு மாதிரி எப்பவோதான் கிடைக்குது. அதனால தான் அவள் தானே இந்த இயற்கைக்கு பிரதியா, நிதியா,பிரதி நிதியா இருந்தாலும் எக்ஸ்பாண்ட் ஆகிறதையும்,உலகத்தை தொடர்பு கொள்றதயும் விரும்பாம தன்னை ஒரு கூட்ல அடைச்சிக்க விரும்பறா. பாத்ரூம்ல ஒழுகுற குழாய்,பக்கத்து வீட்டுக்காரி வாங்கின புதுமிக்ஸிதான் அவளை கவருது.

ஒவ்வொரு உடலுறவுலயும் ஆர்காசத்தை அனுபவிக்கிற ஆணோட அடி மனசுல இயற்கைக்கு பிரதியா, நிதியா,பிரதி நிதியா  இருக்கிற பெண் மேல பிரமை கூடிக்கிட்டே போகுது. ஐம்பதிலும் ஆசை வருது. கிளி மாதிரி பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு கூத்திய அவன் மனசு தேடுது.

இந்த உடலுறவு அனுபவங்கள் தான் மீண்டும் ஓருடல் ஓருயிரா மாற தடையா இருக்கிறது இந்த உடல் தான். இதை செக்ஸ்ல ரொம்ப  நேரம் மறக்க முடியாதுங்கற முடிவுக்கு ஆண் மனம் வந்துருது. (பெண் விஷயத்துல பத்து மாசத்துக்கு மேல இன்னொரு உயிரை தனக்குள்ள பூடி வைக்க முடியாதுங்கற எண்ணம் வந்துருது. எப்படியும் அவளுக்கு தான் ஆர்காசம் ரெகுலரா கிடைக்கிறதில்லயே ) 

இந்த உடல் உதிர்ந்து போய்ட்டா இதர உயிர்களோட தன் உயிர்  நிரந்தர தொடர்பில் இருக்க முடியுங்கற (தவறான)  எண்ணம் ஹ்யூமன் மைண்ட்ல ஸ்திரமாயிருது.இதனாலதான் அவன் எந்த செயலுக்கு இறங்கினாலும் அதன் பின்னாடி டையிங் இன்ஸ்டிக்ட் ( சாகனுங்கற எண்ணம் ) இருந்துகிட்டு தூண்டி விடுது.

மனிதன் மேலுக்கு என்ன வேலை செய்தாலும் அதன் பின்னாடி இருக்கிறது ரெண்டே காரணம்தான் ஒன்னு கொல்லனும் இல்லன்னா கொல்லப்படனும். இந்த ஆசையையும் சிங்கிள் இன்ஸ்டால்மென்ட்ல நிறைவேத்திக்க அவனால முடியறதில்ல. காரணம் உயிர்வாழனுங்கற இச்சை. (இது இயற்கையின் கொடை)

இதுக்கான ஆல்ட்டர் நேட்டிவா மறுபடி செக்ஸை தேடறான். நம்ம சமுதாயத்துல செக்ஸ் ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருக்கிறதால வன்முறை,பணம்,பதவி,புகழ்னு டைவர்ட் ஆகறான். இந்த இழவெல்லாம் அம்மாவுக்காக அழற குழந்தைக்கு கொடுத்த பொம்மைங்கனு சொன்னேனில்லயா. பொம்மை அலுத்து போய் மறுபடி செக்ஸுக்கே தாவறான்.

மேற்சொன்ன காரணங்களால மனிதனோட  இக லோக வாழ்வு நரகமாயிருச்சு. அதனாலதான் இன்னொரு உலகம் இருக்குனு கற்பனை பண்ண ஆரம்பிச்சான். மதம் உருவாச்சு. மதம்ங்கறது " நீச்சலடிப்பது எப்படி?"ங்கற மணி மேகலை பிரசுரம் புஸ்தவம் மாதிரி.

ஆனால்  நான் செக்ஸுல அனுபவிக்கிற ஒரு செகண்ட் ப்ளாக் அவுட்டை/உடல் மறக்கடிப்பை/ இந்த படைப்புடனான இணைப்பை /போட்டி,பொறாமை,  இன்செக்யூரிட்டி, காலம், தூரம்,கம்யூனிகேஷன் பிரச்சினை இத்யாதி இல்லாத உன்னத நிலையை  நான் நிரந்தரமா  பெற முடியுமா? பெற முடிஞ்சா எப்படி இருக்கும்? அதை அடைய என்ன வழின்னு  சில சீக்கர்ஸ் சின்சியரா கோதாவுல இறங்கினாங்க.

அவிக தங்களோட ஈகோவை தொலைச்சுட்டு  இயற்கை கைல தங்களை ஒப்பு கொடுத்துட்டு  கால வெள்ளத்தோட வெள்ளம் போற போக்குல மிதந்து போனப்ப இயற்கை அவிகளோட பேசாம பேசுச்சு.

இந்தபடைப்புல  நீ தனியில்லை.எல்லா உயிர்களோடும்  பின்னி பிணைஞ்சிருக்கே.     நீங்க எல்லாரும்  ஒரு தாய் மக்கள் . நான் தான் உங்க தாய். என் கர்பத்துல நீங்கல்லாம் இணைஞ்சிதான் இருக்கிங்க. உங்களுக்குனு தனிதனியா உடல் இருந்தாலும்... கான்ஷியஸ்ல ஈகோ இருந்தாலும் சப்கான்ஷியஸா நீங்க எல்லாரும் இணைஞ்சிதான் இருக்கிங்க.  என்ன ஒரு சோகம்னா உங்க ஈகோ காரணமா இந்த இணைப்பை உங்களால உணரமுடியல. இந்த படைப்போட மைய புள்ளி நீ இல்லேனு புரிஞ்சிக்க.  உன்னை நீ மைய புள்ளியா நினைக்கிற வரை  என்னோட   இணையறது சிரமமாயிரும். இந்த படைப்போட மையம்  நான் தான்.  நான் ஒரு  அமித கவர்ச்சி கொண்ட புள்ளி.  உன் மேல வச்சிருக்கிற கவனத்தை விட்டு  ஜஸ்ட் நீ  என்  மேல கவனத்தை திருப்பினா போதும் படக்குனு உன்னை இழுத்து அணைச்சிக்குவேன். என்னோட இணையற துடிப்பை விதைக்கவே, இந்த உடல் எத்தனை பாரமானது, உன்னை என் கிட்டேருந்து எப்படி  பிரிக்குதுனு உணர்வு பூர்வமா நீங்க உணரத்தான் , உங்களுக்குள்ள செக்ஸ் தூண்டுதலை வச்சிருக்கேன். பெண் என் பிரதி, நிதி,பிரதிநிதி .அவள் எப்படி ஒரு உயிரை தனக்குள்ள பூட்டி வச்சு தாய்மை கண்டு பூரிக்கிறாளோ அதே மாதிரி உன்னையும் தனக்குள்ள வச்சு பூட்டிக்கிற அளவுக்கு சக்தி அவளுக்கிருக்கு. அத்தனை சக்தி படைச்ச அவளை புரிஞ்சி, பரிஞ்சி  நடக்க கத்துக்கிட்டா , அவள் கூட உன் கைய  கோர்த்துக்கிட்டா  நீ வைக்கிற ஒவ்வொரு அடியும் என்னை நோக்கித்தான்.

ஈகோவை விட்டா, உடல் குறித்த பிரக்ஞையை மறந்தா இந்த இயற்கையோட இரண்டற இணையலாம்னு மனிதன் உணர்ந்ததே  செக்ஸ் மூலமாதான் .எல்லா மதங்களோட மூலமும் இந்த உணர்வுதான். எல்லா மதங்களோட நோக்கமும்
இயற்கையோட (அனைத்து உயிர்களோட ) இரண்டற கலத்தலே

ஆனால் சாமிக்கே சிலை வேணாம்னு தலை தலையா அடிச்சிக்கிட்ட பெரியாருக்கு பட்டி தொட்டியெல்லாம் சிலை வைக்கிறா மாதிரி  செக்ஸுல இருந்து  அனைத்து உயிர்களையும் இணைக்க பிறந்த  மதமே உயிர்களை பிரிக்கறது இயற்கை விதிகள்ள ஒன்னு. இதை ரிவர்ஸ் எஃபெக்டுங்கறாங்க.

ஆனால் சாமிக்கே சிலை வேணாம்னு தலை தலையா அடிச்சிக்கிட்ட பெரியாருக்கு பட்டி தொட்டியெல்லாம் சிலை வைக்கிறா மாதிரி பெண்ணுடனான  செக்ஸுல இருந்து கிடைச்ச இன்ஸ்பிரேஷனை வச்சு    அனைத்து உயிர்களையும் இணைக்க பிறந்த  மதமே பெண்களை அடிமைப்படுத்தி வச்சிருக்கிறதும், செக்ஸை ஏறக்குறைய தடை செய்து வச்சிருக்கிறதும் ,உயிர்களை பிரிக்கறதும் இயற்கை விதிகள்ள ஒன்னு. இதை ரிவர்ஸ் எஃபெக்டுங்கறாங்க.

வுட் வாத்யாரே தலை ச்சொம்மா திம்முனு ஆயிருச்சு. ஜூட்