Friday, April 2, 2010

ஜஸ்ட் ! ஒரு ப்ளூ ஃபிலிம் பாருங்க‌

அண்ணா வணக்கம்னா,
இன்னைக்கு எமலோகத்துல நித்யானந்தாங்கற  தலைப்புல ஒரு  குசும்ப ஆரம்பிச்சிருக்கேன்.படிச்சு பார்த்து கருத்து சொல்லுங்க. ஐட்டத்தை  படிக்க இங்கே அழுத்துங்க‌


டாக்டர் நீல கண்டன் அரை மணி நேரத்தில் தன் நிலையில் ஏற்பட்ட கொடூரமான மாற்றத்தை ஜீரணித்துக்கொள்ள முடியாது தவித்தார். தான் அமர்ந்திருந்த கோலத்தை பார்த்தார். இந்த மாதிரி சித்திரவதைக்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட நாற்காலி போலும். அசைய கூட முடியவில்லை. கைகள் நாற்காலி கையில் இணைத்து ஹிந்தி சினிமா போல் விலங்கு  போடப்பட்டிருக்க. இடுப்பும் ,கால்களும் அதே போன்று ஃபிட் ஆகியிருக்க முழு நிர்வாணமாக இருந்தார்.


இரவு பத்து மணிக்கு கடைசி பேஷண்டை கவனித்து விட்டு  நர்சிங்க் ஹோமிலிருந்து வெளிவந்து காரில் ஏறிய பிறகு பின் சீட்டில் இருந்து குரல் கேட்டது." கார் ஃபாரஸ்ட்  பக்கமா போவட்டும்.  பின் கழுத்தில் சில்லென்று துப்பாக்கி முனை அழுத்தியது. முன் பக்க டோர் திறக்கப்பட்டு யாரோ ஒருவன் டாக்டரை பக்கத்து சீட்டுக்கு நகர்த்தி ஸ்டீரிங்கை கைப்பற்றினான்.

பின் சீட்டில் இருந்தவன் டாக்டரின் கண்களை கருப்பு துணியால் கட்டினான். கார் சீறிக்கிளம்பியது. அரை மணி நேர பயணத்துக்கு பின்பார்த்தால் நிர்வாணம், நாற்காலியில் சிறை. தவளையை மல்லாத்தி போட்டு நாலு காலுக்கும் செருப்பாணி அடிச்ச மாதிரி இருந்தது.

நாற்காலி போடப்பட்டிருந்த ஹால்  முழுக்க கும்மிருட்டு. பின்னாலிருந்து குரல் மட்டும் கேட்டது  "டாக்டர்! வாயை திறங்க"   இவர் மவுனமாக இருக்க பின் கழுத்தில் துப்பாக்கி முனையின் சில். உடனே கீழ்படிந்தார். மாத்திரை ஒன்று போடப்பட்டு கண்ணாடி தம்ளரிலிருந்து தண்ணீர் அவர்  வாய்க்குள் சரிக்கப்பட்டது. டாக்டர் மாத்திரையை விழுங்கினார்.

அப்போது புடவையின் சரசரப்பு . டால்கம் பவுடரும் வியர்வையும் கலந்த வாசம். டாக்டர் தன்னிச்சையாக "யாரு .. யாரு" என்று பரபரத்தார்.

"ஷை .......ல..............ஜா" ஒவ்வொரு எழுத்தாக ஒலித்தது. டாக்டருக்கு சொரேர் என்றது. ஷைலஜா........டாக்டரின் நர்சிங் ஹோமில் வேலை பார்க்கும்   நர்ஸ். வெறுமனே நர்சாக மட்டுமில்லாது ஒட்டு மொத்தமான வரவு செலவு நிர்வாகம் எல்லாம் கவனிக்கிற பெண்.

உடனே டாக்டரின் ஈகோ சிலிர்த்தெழுந்தது.  "யு ப்ளடி ஃபூல் !  ராஸ்கல் ! என்ன இதெல்லாம் யார் அந்த ரெண்டு பேர்.. போலீஸ்ல சொல்லி உங்க எல்லாரையும்"

மறுபடி பின்னங்கழுத்தில் துப்பாக்கி முனையின் சில். டாக்டரின் வாய் உலர்ந்தது.  நாக்கால் உதடுகளை நனைத்து " உனக்கு.. உங்களுக்கு என்னவேணும்"

" நீங்க ஜஸ்ட் ஒரு ப்ளூ ஃபிலிம் பார்க்கனும்"

"எதுக்கு.. உங்களுக்கென்ன பைத்தியமா?"

"  நோ டாக்டர்.. நீங்க பிரபல செக்ஸாலஜிஸ்ட். உங்க தாத்தா பெரிய லேண்ட் லார்ட், உங்கப்பா பெரிய்ய தொழிலதிபர். பணம் உங்க கிட்டே கொட்டிக்கிடக்குது. பெத்து வளர்த்த தாய்,  தகப்பனுக்கு கூட சொல்லாத ரகசியங்களை  உங்க கிட்டே பகிர்ந்துக்கறாங்க. ஏன் ? ஒரு நம்பிக்கை. சப்ஜெக்ட் தெரிஞ்சவன் குரு ஸ்தானத்துல இருக்கான், ஒர் தந்தையோட ஸ்தானத்துல இருக்கான், இருப்பான்னு ஒரு எதிர்பார்ப்பு. ஆனா  நீங்க  என்ன செய்திங்க ? பேஷண்ட்ஸோட அந்தரங்கங்களை ரகசியமா படம் பிடிச்சு ப்ளாக் மெயில் பண்ணி பயந்தவங்களை நாசம் பண்ணே. அப்பவே  நான் பேஷண்ட்ஸை எச்சரிக்கை பண்ணியிருக்கனும், இல்லே  உன்னை போலீஸ்ல பிடிச்சு கொடுத்திருக்கனும். ஆனால் ஹெல் வித் தி மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டி.. நான் மவுனமா இருந்துட்டேன். தனக்கு வந்தாதான் தலைவலி தெரியும்ங்கற மாதிரி ஆயிருச்சு நிலைமை..


 நான் ஒரு  எஸ்.சி பையனை காதலிச்சேன். அவனை கல்யாணம் பண்ணிக்கவும் முடிவு செஞ்சிருக்கிறேனு தெரிஞ்சு நீங்க அப்ஜெக்ட் பண்ணிங்க.---- நீ ஒவ்வொரு ராத்திரியும் அவனோட உருண்டு புரண்டுட்டு வந்து இங்கே இங்கே கேஷ்ல உட்கார்ந்தா எனக்கு சகிக்காது .வேலையிலருந்து துரத்திடுவேன்---னு ப்ளாக் மெயில் பண்ணிங்க. நான் 6 வருஷமா வேலை செய்யறேன். எனக்கிருக்கிற எக்ஸ்பீரியன்ஸுக்கு இதைவிட பெட்டர் ஜாப்  கிடைக்கும்னு சொன்னேன். அதனால கொஞ்சமா அடங்கினிங்க.

கல்யாணமும் ஆச்சு. ஆனால் என் கணவருக்கு ஆண் குறியின் முனைய மூடற தோலு ரொம்ப குறுகி  இருந்ததால குளிக்கறப்ப  அவர் அதை நீக்கி சுத்தப்படுத்தாமயே வாழ்ந்துட்டதால அங்கே  ஃபங்கஸ் ஃபார்ம் ஆகி வீங்கியிருந்தது. இதனால எங்க முதலிரவே நடக்கலை. அப்புறம் நீங்கதான் அவருக்கு சுன்னத் பண்ணிங்க.  .அந்த காயம் ஆர்ர வரைக்கும் உடலுறவு கூடாதுன்னு சொன்னிங்க.

அன்னைலருந்து எப்படியும் அந்த தா.பட்டவன் கலீஜு பண்ணிரப்போறான். அதுக்குள்ள நான் ஒருதடவைன்னு என்னை டார்ச்சர் பண்ணிங்க.  அப்பவாச்சும்   நான் உன் வேலையுமாச்சு மயிருமாச்சுனு விட்டு ஒழிச்சிருக்கனும்.

ஆனால் நான்  மன உறுதியோட புகுந்த வீட்டு குடும்ப விவகாரங்களை பைசல் செய்றதுல ஈடுபட்டேன்.  நாத்தனாருக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணேன். அதுக்கு பணம் புரட்ட ஏற்பாடு செய்தேன்.  உங்க ப்ளாக் மெயிலை சட்டை பண்ணவே இல்லை என்னை எப்படியாவது மடக்கி அனுபவிக்கனுங்கறதுக்காக எங்க மாமனார்,மாமியார், கணவன், ஃபேக்டரில வேலை பார்க்கிற நாத்தனார்  கல்யாண செலவுக்குனு என் கிட்டே கொடுத்து வச்ச  பணத்தை நான் பேங்க்ல   கட்ட அது நர்சிங் ஹோம்ல  நான் கையாடின பணம்னு சொல்லி பேங்க் மேனேஜர் மூலமா  என் அக்கவுண்ட்டை நிறுத்தி வச்சு , ஸ்டேசன்ல   கம்ப்ளெயிண்ட் குடுத்து என்னை  எஸ்.ஐ, பேங்க் மேனேஜர்   மூலமா  மடக்கி எஸ்,ஐக்கும், பேங்க் மேனேஜருக்கும்  பங்கு போட பார்த்திங்க.  ஒழுங்கு மரியாதையா கேஸை வாபஸ் வாங்கிக்கிட்டு என் அக்கவுண்டை சுதந்திரமா நான் ஆப்பரேட் பண்ணிக்கிற மாதிரி செய்யனும். இதோ செல் ஃபோன் . பாங்க் மேனேஜரோட செல் நம்பரை டயல் பண்ணியிருக்கேன். சொல்லு. "

ஷைலஜா சொன்னதையெல்லாம் கேட்ட டாக்டருக்கு லேசா ஒரு யோசனை . தான் கடத்தப்பட்டதை எப்படியாவது பாங்க் மேனேஜருக்கு சொல்லிட்டா..

அந்த நேரம் மறுபடி பின்னங்கழுத்தில் துப்பாக்கியின் ஜில். மேனேஜருக்கு விஷயத்தை சொல்லி முடிச்சாரு. அடுத்த ஃபோன் எஸ்.ஐக்கு .  கொஞ்ச நேரத்துல வெளியே போன ஷைலஜா ஏடி.எம்மிலிருந்து அக்கவுண்டை துடைத்து தன் பணம் மொத்தத்தையும் ட்ரா செய்து கொண்டு வந்தாள். டாக்டர் கெஞ்சினார். "உன் பணம் தான் உனக்கு கிடைச்சிருச்சில்ல என்னை விட்டுடேன்"

ஷைலஜா , "விட்டுர்ரதான். ஜஸ்ட் ஒரு ப்ளு ஃபிலிமை எஞ்சாய் பண்ணிட்டு போங்க டாக்டர்" என்றாள்.

"ப்ளூ ஃபிலிம் என்ன ப்ளூ ஃபிலிம் என்னை வெளிய விட்டேன்னா எனக்கிருக்கிற டென்சனுக்கு ஃபுல்லா மப்பு ஏத்திக்கிட்டு தூங்கிருவன்"

"விட்டுர்ரன் டாக்டர் ஜஸ்ட் ஒரு ப்ளூ ஃபிலிம் பார்த்துட்டு போங்க"

சுவரில் இருந்த ப்ளாஸ்மா டிவியின் திரை உயிர் பெற்றது. கையுறை, காலுறை, புன்னகை (மட்டும்) அணிந்த பெண்கள் தோன்றினார்கள். இத்தனை சோகத்திலும் டாக்டரின் மனதில் மனித இனத்தின் பேசிக்கல் இன்ஸ்டிங்ட் உயிர் பெற உறுப்பில் எழுச்சி ஏற்பட்டது. தொடைகளுக்கு சற்றும் மேலாக இருந்த காப்பர் கம்பியை அவர் ஆணுறுப்பு தொட்டது. தொட்டதும் டாக்டரின் உடல் ஒரு உதறு உதறியதும் ஒரே கணத்தில் நடந்தன.

ஷைலஜா துப்பாக்கியால் கன்னத்தில் தட்டி எழுப்பினாள். டாக்டர் மலங்க மலங்க விழித்தார்.

" டாக்டர் உங்க தொடைக்கு மேல 24 ஓல்ட் கரண்ட் பாயற மின் கம்பி இருக்கு. அதான் சின்ன பிரச்சினையாயிருச்சு"

"மை காட் ! ஷைலஜா.. நீ இந்த அளவுக்கு கொடூரமா யோசிப்பேனு நான் நினைச்சு கூட பார்க்கலை" என்றார் டாக்டர் கிசு கிசுப்பாக. (அதற்கு மிஞ்சி பேச சுரத்தில்லை)

"ஆனா ஒன்னு இந்த மின் அதிர்ச்சிக்கு பின்னாடி எரக்சன் நடக்கும்ங்கற ? என்னை விட்டுரேன். வீட்டுக்கு போறேன்" என்றார் கெஞ்சலாக

"டாக்டர் உங்களுக்கு ஒரு மாத்திரை கொடுத்தோம் அது என்ன மாத்திரை தெரியுமா?"

" தெரியாது"

ஷைலஜா ஒவ்வொரு எழுத்தாய் உச்சரித்தாள். வ...............யா................க்..........ரா