Saturday, April 3, 2010

எமலோகத்தில் நித்யானந்தா : 2

முன் கதை
எமதூதர்கள் நித்யானந்தாவை எமலோகம் அழைத்து வருகிறார்கள். நித்யானந்தா தன் வழக்கை விசாரிக்கும் தகுதி எமன், பிரம்மா,விஷ்ணு,மகேஸ்வரன் யாருக்கும் கிடையாது.எல்லாரும் செக்ஸ் ஸ்காண்டலில் சிக்கியவர்களே என்று வாதம் பண்ணுகிறார்.

ப்ளாகர்ஸ்ல யாராவது ஒருத்தரை குலுக்கல் முறைல தேர்வு செய்தா அவர் விசாரண பண்ண  ஒத்துக்கறேனு நித்யானந்தா சொல்றார்.

குலுக்கல்ல சித்தூர்.முருகேசன் பேர் வருது. இனி படிங்க‌
ஹி ஹி.. உனக்கு 22 எனக்கு 32 தொடர் கதைல  ஹீரோ ஹீரோயினுக்கு இப்ப இதாங்க வயசு தொடர் கதையோட லேட்டஸ்ட் அத்யாயத்தை  படிக்க இங்கே அழுத்துங்க‌





நித்யா: (மனசுக்குள்) அய்யய்யோ இதென்னடா நித்யானந்தாவ பிடிச்ச கிரகம் இப்படி ஆட்டி வைக்குது.
எமன்: என்ன ஓய் .. உம்ம விருப்பப்படியே குலுக்கல்ல வந்த பேர்
கொண்ட  ஆசாமிய வரவழைக்கிறேன். விசாரணைக்கு சம்மதம் தானே
நித்யா: (மனசுக்குள்) சம்...........மதம் ?  கேட்கறிங்களா? சம்மதம்?ஹும்.. மசாலா தடவ கோழி கிட்ட சம்மதம் கேட்டாப்ல இருக்கு (மேலுக்கு) சம்மதம் தான்

பூலோகம் , ஆந்திர மானிலம் சித்தூர்

எம தூதர்கள்: வாய்யா கொஞ்சம் வேலையிருக்கு
முருகேசன்: யாருப்பா நீங்க அக்பர்  கவுசர் அனுப்பின ஆளுங்களா?
எம தூதர்கள்: ஊஹூம்
முருகேசன்: திருமலை கோடி?
எம தூதர்கள்:  ஊ ஹூம்
முருகேசன்:பின்னே யாருப்பா நீங்க?
எமதூதர்கள்:எமதூதருங்க சார்
முருகேசன்: தபார்ரா.. அப்ப ஆட்டம் க்ளோசா? ஆமா செத்த பிறகுதானே வரனும். உயிரோட இருக்கிறப்பவே வரிங்க?
எமதூதர்கள்: உன் விதி முடிஞ்சு வரலப்பா . எமலோகத்துல சின்ன விசாரணை இருக்கு..வந்து போயிருவ வா
முருகேசன்:என்னப்பா ராணி புக் மாதிரி தமாசு பண்றிங்க? நானெல்லாம் ரொம்ப சின்ன ஆளுப்பா. ஏதோ சின்ன சின்ன பஞ்சாயத்து பண்றது உண்டுதான் அதுக்காக யமலோகமெல்லாம் வர்ர அளவுக்கு நமக்கு சீன் இல்லப்பா
எமதூதர்கள்: ஏன்யா எமலோகம்னா கொஞ்சூண்டு கூட பயமில்லாம இருக்கே
முருகேசன்:எத்தினி சினிமால பார்த்திருக்கேன் .. அப்புறம் என்ன பயம். ஆமா உங்க பாஸ் அதான் எமன்  எப்படி இருக்காரு.இப்ப கூட எமண்டானு கத்தி இருமுறாரா?
எமதூதர்கள்:அதெல்லாம் ஒன்னுமில்லப்பா  கார்ப்போரேட் ஆஃபீஸ் மாதிரி மாறிருச்சு. சித்ர குப்தன் ஷார்ட்ஸ் எல்லாம் போடறாருன்னா பார்த்துக்கயேன்
முருகேசன்: அப்பசரி பார்த்துர வேண்டியதுதான் . கிளம்பலாமா?
எமதூதர்கள்: ஏயப்பா உனக்கு எமலோகம்னா பயமில்லயா?
முருகேசன்: அதுக்கு தாத்தாவா இங்கே பல இடம் இருக்கு.. எல்லாம் பார்த்தாச்சுங்கண்ணா போலாம் போங்க
எமதூதர்கள்: எதுக்கு கூட்டுவரச்சொன்னாங்கனு கேளேன்
முருகேசன்:என்ன இருக்கு எமலோகத்தில் நித்யானந்தானு ஒரு பதிவு போட்டேன். அதுல உங்க பாஸ் குந்திக்கு தலைச்சன் புள்ள கொடுத்ததை பத்தி எழுதியிருந்தேன். ராம கோபாலன் சார் எதுனா கம்ப்ளெயிண்ட் பண்ணியிருப்பாரு ..அதப்பத்தி தானே விசாரணை?
எமதூதர்கள்:அதெல்லாம் ஒன்னுமில்லப்பா .. நித்யானந்தா நித்யானந்தானு ஒரு போலி சாமியார்
முருகேசன்: அடத்தெரிக்க .. அந்தாள எப்ப புக் பண்ணிங்க
எமதூதர்கள்: இன்னைக்குதான்
முருகேசன்:அப்போ சந்தேக மரணம்தான் .. ஓஞ்சு போட்டும் சாகறப்ப நமக்கு ஒரு நல்லது பண்ணியிருக்கு பார்ட்டி .அதுசரி நித்யானந்தா கேஸ்ல நான் எங்கே வரேன். சாட்சி கீட்சி சொல்லனுமா?
எமதூதர்கள்:இல்லப்பா .. குறுக்கு விசாரண பண்ணனுமாம்
முருகேசன்: காமெடி கீமிடி பண்ணலியே
எமதூதர்கள்:அட நீ கெளம்புப்பா

                    * * *
எமலோகம்                   
எமன்: வாப்பா .. நீதான் முருகேசனா? என்னப்பா ஏதோ மாமியார் வீட்ல விருந்தாட வந்த மாதிரி வர்ரே..இது எமலோகம் ஞா இருக்கில்ல
முருகேசன்:எனக்கு இன்னும் இன்னும் இந்த நாறிப்போன வாழ்க்கைய வாழனும்னு இருந்து நீங்க  இங்கே கூட்டிட்டு வந்திருந்தா கொஞ்சம் ஆடிப்போயிருப்பேன். நமக்குத்தான் அந்த எண்ணமே கிடையாதே.
எமன்: என்னப்பா அப்படி சொல்ட்டே. மனித வாழ்க்கைல இன்பமே கிடையாதுங்கறியா?
முருகேசன்: ஹும் ..இன்பம் இருக்கு .ஆனால் எல்லாமே டெம்ப்ரரியா இருக்கே. ஒரு இன்பம் தன் பின்னாடியே ஒரு துன்பத்தை கோர்த்துக்கிட்டுதானே வருது. இன்பம் கின்பம்  எல்லாம்  யோசிக்காத வாழறவனுக்குதான் சாரே ! நாம லேசா யோசிக்கறம். அதுவும் சம்பவ நேரத்துலயே ரோசிக்கிறமா.. மீனிங் லெஸ்ஸுன்னுதான் தோணுது . வாழ்க்கை   ஜவ்வான மெகாசீரியலு மாதிரி இருக்குது தலை.. முடிஞ்சி தொலையாதாங்கற ஸ்டேஜுக்கு வந்துட்டன்.
எமன்:பின்னே தற்கொலை பண்ணிக்கிட வேண்டியதுதானே
முருகேசன்:அஸ்கு புஸ்கு.. அது மட்டும் பண்ணக்கூடாது வாத்யாரே..ஏன்னு கேளு. எங்கம்மா என்னை ஜி.ஹெச் லதான் பெத்தா. நான் கவர்ன்மென்ட் ஸ்கூல்லதான் படிச்சேன். கவர்மென்டுக்கு ஏது பணம் மக்கள் வரி கட்டினாதானே கவர்ன்மென்டுக்கு பணம்.  அதே மக்கள் தான் ஜோசியம் பார்த்துக்கிட்டு காசு பணம் கொடுத்து என்னை போஷிச்சாங்க.  நான் அவிகளுக்கு கடன் பட்டிருக்கேன். அவிக துன்பங்களை ஒரு மி.கி அளவாவது குறைக்க எதையாச்சும் குரைச்சிக்கிட்டே  இருந்தா கூட போதும் . கடன் தீருதுல்ல. கருமம் ஒழியுதுல்ல
எமன்:அட அடா என்னா பாலிசிப்பா
முருகேசன்: வாத்யாரே சீக்கிரம் வேலைய முடிக்கலாம். ஊர்ல சின்னதா ரெண்டு வேலையிருக்கு. அதையாவது பார்க்கலாம்ல
எமன்: சரிப்பா அந்த நித்யானந்தாவ கொண்டுவாங்க
முருகேசன்: சார் சார்.. இங்கே கொஞ்சம் ஃபெனாயில் கினாயில் கிடைக்குமா ?
எமன்: ஏம்பா?
முருகேசன்: பார்ட்டி வந்தா ரொம்ப நாறும் சார்
எமன்: ஹா ஹா ..ஹா

( நித்யானந்தாவை எம தூதர்கள் கொண்டு வர்ராங்க)

நித்யானந்தா: ( தமது வழக்கமான ஸ்டைலில் புன் சிரிப்புடன் ஆசி வழங்கிய படி)  நண்பனே உன் கடமைய செய்யலாம். விசாரணை துவங்கட்டும்
முருகேசன்: நான் உங்களை விசாரிக்கலாம்ல .உங்களுக்கெதுவும் அப்ஜெக்சனில்லயே
நித்யானந்தா: இப்படி ஒரு திருவிளையாடலை யாம் தான் ஏற்பாடு செய்தோம்.
முருகேசன்: இந்த வெட்டி பந்தாவுக்கொண்ணும் குறைச்சலில்லே . இதென்ன உங்க ஆசிரமமா .. இல்லே நான் என்ன பக்த சிகாமணியா?
நித்யானந்தா: ஞானி நரகத்தை கூட ஸ்வர்கமாவே நினைச்சு வாழறாம்பா. இதை எம லோகம்னு நினைச்சாதான் எமலோகம்.
முருகேசன் : அப்போ உங்க  ஆசிரமத்தை கூட ஆசிரமமா நினைச்சு வாழல போல இருக்கு அப்படித்தானே
நித்யானந்தா: (மனசுக்குள்) என்னங்கடா இது கொக்குக்கு ஒன்னே மதிங்கற மாதிரி பாயிண்டுக்கே இழுக்கறான் (மேலுக்கு) யோகிக்கு எல்லாமே ஒன்னுதான் தம்பி
முருகேசன்:ஓஹோ அதனாலதான் ஹீலிங் தெரஃபின்னிட்டு கண்ட குட்டி மேலயும் கை போட்டியா
நித்யானந்தா:என்ன மரியாதை குறையுது.........   நீ என்ன உத்தமனா.. பலான ஜோக் எழுதுற  பார்ட்டிதானே
முருகேசன்: அடத்தெரிக்க .. என்னடா பார்ட்டி அதி வினயம் காட்டுதுனு  ரோசிச்சேன். பாஞ்சுட்டே இல்லை. இப்ப வச்சிக்கிறேன். பலான ஜோக் எழுதினேங்கற இல்லைங்கல. நான் எந்த கண்டிசன்ல எழுதினேன் தெரியுமா ப்ளாக் வச்சி எட்டுவருஷம் சுத்த சைவமா நடத்தி பார்த்தேன். உன்ன மாதிரி டகுலு காட்டற பார்ட்டிங்களுக்கு 7 வருசம்  சர்வீஸ் பண்னாலும் , ஏழு ஜன்மம் உங்க காலடில விழுந்துகிடந்தாலும் பேராத ஸ்ருஷ்டி ரகசியத்தை எல்லாம் ரத்தினமா கொட்டினேன். பப்பு வேகலை. தாளி.. இதென்னடா கடல்ல பெய்த மழையா வீணா போகுது. நாம எழுதறது பத்து பேர் படிக்கத்தானே. யாரும் படிக்கலன்னா எழுதி என்ன பிரயோஜனம்னு திங்க் பண்ணி சனத்தை கூவி கூப்பிட பலான ஜோக் எழுதினேன்.  உன்னை மாதிரி உசுப்பி விடலே கண்ணா, செக்ஸை பார்த்து சிரிக்க வச்சேன். வெறுமனே சிரிக்க வைக்கலே நைனா .. அதும் பின்னால இருக்கிற சைக்கலாஜிக்கல்,செக்ஸாலஜிக்கல் சத்தியங்களை விவரிச்சேன்.
நித்யானந்தா:அதெல்லாம் எனக்கு தெரியாது செக்ஸ் எழுதினயா இல்லையா?
முருகேசன்: நீ பேசறது எப்படி இருக்குன்னா இந்த குழாயடில பொம்பளைங்க பேசிக்கிறாப்ல இருக்கு . அங்கேதான் சில தே....யாளுங்க ஆன அழும்பெல்லாம் பண்ணிக்கிட்டு யாராவது அந்த  அநியாயத்தை  தட்டிக்கேட்டா ஊர்ல இருக்கிற்வளையெல்லாம் தே...யான்னு சாதிப்பாளுங்க. உன் பேச்சு அப்படித்தான் இருக்கு. யோவ் நான் சிவிலியன். ஆர்டினரி சிட்டிசன் ஆஃப் இண்டியா. நீ சன்னியாசி. காவி கட்டின ஸ்வாமிஜி. அதுலயும் பிரம்மச்சரியத்தை போதிச்ச உத்தமன். இந்த விசாரணை உன்னை பத்தி தான் . என்னை பத்தி கிடையாது
நித்யானந்தா:பைபிள்ள ஜீஸஸ் என்ன சொல்றாரு " உங்களில் பாவம் செய்யாதவர் யாரோ அவர் முதல் கல்லை வீசட்டும்"னாரு.
முருகேசன்: சரிப்பா நாங்கல்லாம் தப்பு பண்ணவங்க கிரேனை வச்சி ஒரே கல்லா பெரிய கல்லா போட்டுரட்டுமா? பாவம் பண்ணாதது கிரேன் ஒன்னுதான்.
நித்யானந்தா: நான் காவி கட்டினவன். பிராமணனுக்கு சமமானவன் .என்னை கொன்னா பிரம்ம ஹத்தி தோஷம் வரும்.
முருகேசன்:அட போய்யா பொங்கி. ராவணனை கொன்னப்ப ராமனுக்கு கூட பிரம்மஹத்தி வந்துருச்சாம். கடல்ல குளிச்சா அதெல்லாம் காக்கா தூக்கிட்டு போயிரும்.
நித்யானந்தா: நாலு சுவருக்குள்ள நடந்ததை விசாரிக்கிறது தனி மனித உரிமை மீறல்.

முருகேசன்: நீ காவி கட்டாத இருந்திருந்தா நீ வெறுமனே சுய இன்பம் அனுபவிச்சிருந்தா அது உன் பர்சனல் விஷயம். ஆனால் நீ காவி கட்டியிருக்கே,  பிரம்மச்சரியத்தை போதிச்சிருக்கே. உன் போதனைய பரப்பறதுக்காக மக்கள்    நெத்தி வேர்வை நிலத்துல சிந்த சம்பாதிச்ச பணத்தை கொட்டிக்கொடுத்திருக்காங்க  . நீ ஜஸ்ட் சுய இன்பம் அனுபவிச்சிருந்தா கூட.. அட ஸ்வப்ன ஸ்கலிதம் நடந்திருந்தா கூட அது ப்ரீச் ஆஃப் காண்ட் ராக்ட் . சரி உன் காவி உடைய தவிர்த்துட்டு கூட பார்க்கலாம்.  

நித்யானந்தா: அய்யய்யோ இப்ப வஸ்திராபரணம் நடக்கப்போவுதா?

முருகேசன்: அட த்தூ.. திருடனுக்கு திருட்டு புத்தி அவிங்கப்பனுக்கு அதே புத்திங்கற மாதிரி புத்தி போவுது பாரு. நீ சன்னியாசிங்கறத மறந்துட்டு பார்த்தா கூட நீ பண்ணது குற்றம்தான்னு  சொல்ல வந்தேன். உன் அஜால் குஜால் வேலைல இன்னொரு பார்ட்டி சம்பந்தப்பட்டிருக்கு.ரஞ்சிதா ஒன்னும் ப்ரொஃபெஷ்னல் செக்ஸ் ஒர்க்கர் கிடையாது. அப்படியே இருந்தாலும் இந்தியாவுல பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது. நீ எப்போ லெமன் லைட்டுக்கு வந்துட்டயோ, எதுவுமே பர்சனல் இல்லே கண்ணா. நீ  ஒரு ஊருக்கு போறே ,  கேம்ப் நடத்தறேன்னா அது உன்+ உன்னை நம்பி வந்தவுங்களோட  பர்சனல் ப்ரோக்ராமா இருந்தா அதுக்கு ஏன்யா குமுதத்துல விளம்பரம்,ஆப்ளிகேஷன் ஐட்டம்?.  நீ தனிமனிதனில்லயா.. சனாதன மதத்தோட சிம்பலா எஸ்டாப்ளிஷ் பண்ணிக்கிட்டே. 

நித்யானந்தா: காவி கட்டினதுதான் என் தப்பா ? ஜீன்ஸ் போட்டுக்கிட்டு என்னவேணா செய்யலாமா?
முருகேசன்: அட அல்ப்பம் இப்படி நினைச்சித்தான் காலிஃபோர்னியால ஜீன்ஸ் மாட்டிக்கிட்டு கெட்ட ஆட்டம் போட்டியா? நீ ஜீன்ஸ் போட்டாலும்,காவி போட்டாலும் அடுத்தவன் பெண்டாட்டியோட உருண்டா அது அடல்ட் ரிய்யா.. தினத்தந்தி பாஷைல சொன்னா கள்ள காதல் . நீ இதே வேலைய ஒரு சித்தாள் பெண்டாட்டி விஷயத்துலயோ, கூலிக்காரன் பெண்டாட்டி விஷயத்துலயோ செய்திருந்தா சங்கை அறுத்திருப்பான். ரஞ்சிதா வீட்டுக்காரர் கொஞ்சம் வசதியான ஆள் போல அதான் விட்டுவச்சிருக்காரு
நித்யானந்தா: நீ கொலை செய்ய தூண்டறே.
முருகேசன்: நீ ஆன்மீகத்தை, ஆன்மீக ஆர்வலர்களோட நம்பிக்கையையே கொன்னுட்ட. தன்னை கொல்ல வர்ர பசுவை கூட கொல்லலாம்னு தர்ம சாஸ்திரம் சொல்லுது. உன்னை கொல்லாம விட்டாங்களேனு சந்தோசப்படு..
நித்யானந்தா:அடுத்தவுக ஒப்புதலோட படுத்துக்கிட்டா தப்பில்லேனு சட்டம் சொல்லுது.
முருகேசன்: நீ என்ன பி.பியா இல்லே?  டிஃபென்ஸ் லாயரா? இல்லே லா காலேஜ்ல லெக்சரரா? நீ உபதேசிச்சதெல்லாம் தர்மம் நைனா. அந்த தர்மத்தை நீ ஃபாலோ பண்ணனும். இல்லேன்னா அது 420 வேலை, ஃப்ராடு வேலை,மொள்ளமாரி வேலை. ப்ரீச் ஆஃப் காண்ட் ராக்ட், சதி, மோசடி, மத நம்பிக்கைகளை அவமதிச்ச குற்றம்.
நித்யானந்தா:இதெல்லாம் கோர்ட்டுல நிக்காது
முருகேசன்: இது மேனோட  கோர்ட்டில்ல சாமி.. எமனோட கோர்ட்..
நித்யானந்தா: மிஸ்டர். எம்.டி.ராஜன் இதையெல்லாம் நீங்க அனுமதிக்கிறிங்களா?
எமன் : அனுமதிக்கவோ,மறுக்கவோ இந்த கோர்ட்ல இப்ப நான் நீதிபதியோட ஸ்தானத்துல இல்லை. எனக்குத்தான் உன்னை விசாரிக்கவே தகுதியில்லேன்னிட்டியேப்பா.
நித்யானந்தா:(மனசுக்குள்) அய்யய்யோ ஆப்பசைச்ச குரங்குகதையாயிருச்சே.. ஒரு வேளை பிரம்மச்சரிய முகமூடிய போட்டுக்கிட்டு கச முசா பண்ணதால ஆஞ்சனேயருக்கு கோபம் வந்து இப்படி இந்த குரங்குபயல்கிட்டே மாட்டிவிட்டு சோதிக்கிறாரோ.
முருகேசன்: என்ன சாமி முணுமுணுக்கறிங்க.. இதெல்லாம் கோர்ட் அவமதிப்பு கீழே வந்துரும் ..டேக் கேர்
நித்யானந்தா:அய்யய்யோ நான் ஒன்னும் முணுமுணுக்கல
முருகேசன்: சரி மேட்டருக்கு வா.பண்ண  தப்பை  தப்புனு ஒத்துக்கிடறியா இல்லையா..
நித்யானந்தா: நான் யாரையும் வற்புறுத்தலை.ரஞ்சிதாவ  ரேப்பா பண்ணேன்.
முருகேசன்: அட  டுபுக்கே இது மேல் சேவனிஸ்ட் சொசைட்டி. பெண் வீக்கர் செக்ஸாவே இருக்கா. இந்த சமூகத்துல உண்மையான ஒடுக்கப்பட்ட ஜீவன் பெண் தான். இதுவே நீ பத்து ரூபா இல்லாத பன்னாடையா, மூஞ்சி முகம் தெரியாத கஞ்சா அடி சாமியாரா , இருந்திருந்தா இதே ரஞ்சிதா செருப்பாலடிச்சிருப்பாங்க.  நீ உன்னோட நேம்,ஃபேம்,ப்ராஸ்பெரிட்டி,செல்வாக்கு எல்லாத்தயும் வச்சு அவிகள மறைமுகமா ப்ளாக் மெயில் பண்ணேனுதான் சொல்லனும். மேலும் அவிக டைவோர்சியா, விடோவா, அன் மேரீடா இருந்திருந்தாலும் பரவால்ல அவிக கல்யாணமானவுக. மேரேஜுங்கறது ஒரு சோஷியல் அக்ரிமென்ட். இதை அவிக ப்ரேக் பண்றாப்ல பண்ணியிருக்கே. குற்றங்கள்ள பேர்பாதி குற்றம் செக்ஸ் ஓரியண்டட்தான். ஒரு வேளை அவிக வீட்டுக்காரர் ரஞ்சிதாம்மாவை போட்டுத்தள்ளியிருந்தா ..
நித்யானந்தா: நீ என்னை சாமானியனா நினைச்சு பேசிக்கிட்டிருக்கேப்பா   நான் இதையெல்லாம் கடந்தவனப்பா. அக்கரையிலருந்து பார்க்காதே இக்கரைக்கு வா .பாரு அப்பதான் நிஜம் புரியும்.
முருகேசன்: நீ எட்ட இருந்தாலே நாறுது. அதுலயும் உன் கரைக்கு வந்தா அவ்ளதான். நீ ஆள விடு. உன் கரையில ,உன் கறைங்களோட நீயே இருந்துக்க.
நித்யானந்தா:  நான் சாமானியனில்லே. தர்ம சாஸ்திரப்படி நான் பிராமணன். எங்களுக்குனு சிறப்பு உரிமைகள் எல்லாம் இருக்கு.
முருகேசன்:ஓ அப்படி வர்ரியா.. வா. சரியா நீ பார்ப்பானாவே கூட இரு.  நீ ராஜா சம்சாரத்தை வேலை பார்த்திருந்தா அதுவும் வெறும் சந்தானத்துக்காக தான் உங்க ஸ்பெஷல் ப்ரிவிலஜ் படி ஓகே. ரஞ்சிதா எந்த  நாட்டு ராஜாவ கட்டியிருக்காங்க.
நித்யானந்தா: (மனசுக்குள்)  அய்யய்யோ ரவுண்டு கட்டி அடிக்கிறானே (வெளியில்) நான் என்னை பொறுத்தவரை எந்த தப்பும் செய்யலை.  நான் ஒரு ஆராய்ச்சியாளன். ஜஸ்ட் சில பரிசோதனைகள் செய்தேன்.
முருகேசன்:அப்படிங்கறே. அப்ப நீ செக்ஸாலஜி படிச்சிருக்கனும். யூனிவர்சிட்டில ரிசர்ச் ஸ்காலரா பதிவாயிருக்கனும். உன் பரிசோதனைக்கு எலி, பூனைய உபயோகிக்கிற மாதிரியிருந்தா கூட மேனகா காந்தியை கன்வின்ஸ் பண்ணியிருக்கனும்.  நீ ஒரு மனுஷ உசுரை, அதுலயும் கல்யாணமான   பொம்பளைய உபயோகிச்சிருக்க.  அதுக்கு ஆரு கிட்டெ பர்மிஷன் வாங்கினே.
நித்யானந்தா: உங்க பேச்சுல குரோதம் இருக்கு. என் வளர்ச்சிய பார்த்து பொறாமை உங்களுக்கு .
முருகேசன்:வளர்ச்சியா.. போடாங்கோ.உன் வளர்ச்சி எதுலன்னு உன் ஆராய்ச்சியும், வீடியோவுமே சொல்லுதே.
நித்யானந்தா: என்னை அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டறிங்க.
முருகேசன்: இல்லே நைனா தூக்கு தண்டனைய நீயே நிறைவேத்திக்கோனு சஜஸ்ட் பண்றேன்
நித்யானந்தா:   நீங்க  வீடியோல பார்த்ததெல்லாம் ஜஸ்ட் என் உடம்புதான். ஆத்ம ரீதியில பார்த்தா நான் சாட்சாத்  கிருஷ்ண பரமாத்மா. அவிக எல்லாம் கோபிகைங்க
முருகேசன்:  யோவ் நித்யா இப்படி வர்ரயா? வா வச்சிக்கிறேன் உன்னை. கிருஷ்ணர் ஒரு தரம் யமுனா நதிக்கரைல இருந்தாராம். யமுனா அப்படியே இந்தியாவுல ஊழல் மாதிரி பெருக்கெடுத்து ஓடுது.அப்போ ஒரு தயிர்காரி வந்து "யப்பா .. நான் ஆத்த தாண்டி போனா தான் பிழைப்பு .எதுனா பண்ணே"னு கேட்கிறா.உடனே கிருஷ்ணர் அவ கிட்டே வெண்ணை வாங்கி திருப்தியா சாப்டுட்டு  யமுனா நதியை நோக்கி " நான் உப வாசம் இருந்தது உண்மைன்னா நான் அஸ்கலித பிரம்மச்சாரிங்கறது உண்மைன்னா வழி விடு" ன்னாராம். யமுனா நதி வழி விட்டுச்சாம். உனக்கு கூவம் தான் வழி விடும். அதுவும் எதுக்கு உன் நாத்தம் தாங்க முடியாம.
நித்யானந்தா: என்னை தொடர்ந்து அவமதிக்கிறிங்க
முருகேசன்: நீ ஆதியந்தமில்லாத கடவுளை,சனாதன தருமத்தை, சன்னியாசத்தை,காவியுடைய, உன்னை நம்பி வந்த லட்சக்கணக்கான பக்தர்களை அவமதிக்கலாம். உன் பேரை சொன்னா அது அவமதிக்கிறதா ஆயிருமா?
நித்யானந்தா: டுபுக்கு,அல்பம்,துடுப்பு இதெல்லாம் என் பேரா?
முருகேசன்:இதெல்லாம் காரணப்பெயர் நைனா
நித்யானந்தா: எனக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ் இருக்காங்க.
முருகேசன்: ஹிட்லருக்கு இருந்தாங்க. மது கோடாவுக்கு இருக்காங்க, ஏன் துரோகத்துக்கு மறு பேரான சந்திரபாபுவுக்கு கூட இருக்காங்க. ஃபாலோவர்ஸ் இருந்தா நீ என்ன வேணம்னா பண்ணலாமா?
நித்யானந்தா: நான் பல கோடி ரூபா செலவு பண்ணி ஆசிரமங்கள் கட்டியிருக்கேன்
முருகேசன்:அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையேன்னானாம் எவனோ. எல்லாம் ஊர் பணம்தானே
நித்யானந்தா:என் வாக்குவன்மையால வந்த பணம்
முருகேசன்:அதுசரி.வேசி .......... காட்டி சம்பாதிப்பா,அதுவாச்சும்  அவளுக்கு மட்டும் சொந்தம் நீ வாய காட்டி சம்பாதிச்சே. ஆனால் உன் பேச்சு உனக்கு மட்டுமேவா  சொந்தம்?
நித்யானந்தா: அந்த ஒரு சமாச்சாரத்தை தவிர வேற என்ன குற்றம் சொல்ல முடியும் உங்களால..
முருகேசன்:இப்ப இப்படி வர்ரியா. இந்தியாவுக்கு சுதந்திரம் வந்து 63 வருசம் ஆகுது.ஆனால் இன்னைக்கும் 63.8 கோடி மக்களுக்கு கழிவறை கிடையாது. உன் காலடில கொட்டினாங்களே பணம்.. அது உனக்கு சொந்தமில்லே கண்ணா. திருப்பதில  ஏழுமலையான் கால்ல  கொட்டறாங்களே பணம் அது ஏழுமலையானுக்கு சொந்தமில்லே கண்ணா..லாபங்கறது எப்படி வருதுனு டாஸ் கேப்பிடல்ல மார்க்ஸ் சொல்லிட்டாருப்பா. அதெல்லாம் ஏழைகளோட பணம் ஏழைய சுரண்டின பணம். காந்தி என்னா சொன்னாரு தெரியுமா ? உன் சொந்த பணத்துக்கே நீ வெறும் ட்ரஸ்டிதாண்டான்னாரு. நீ உத்தமனா இருந்திருந்தா இதையெல்லாம்   நினைச்சி பார்த்து  நான் சொன்ன  63.8 கோடி மக்களுக்கு கழிவறை கட்டி கொடுத்திருக்கனும். நீ கட்டின ஆசிரமங்கள விட இந்த கழிவறைங்கனால மக்களுக்கு உபயோகம் அதிகம்.
நித்யானந்தா: நாக்குல சரஸ்வதிய வச்சிக்கிட்டு இ..ப்..படி பேசலாமா?
முருகேசன்: கூட்டணிக்கு கூப்பிடறியா..கன்வின்ஸ் பண்றியா.. நான் இந்த  நாட்டு மக்கள் செலுத்தின வரிப்பணத்துல வளர்ந்தவன். என் அப்பன் ஒரு கவர்ன்மென்ட் எம்ப்ளாயி அவனுக்கு கிடைச்ச சம்பளம் கூட மக்களோட வரிப்பணம்தான். நான் கர்ணன் மாதிரி . ஒரு பிடி சோத்துக்காக என் உயிரையே தருவேன். நீ இவிக பணத்தை மட்டும் கொள்ளையடிச்சிருந்தாலும் பரவால்ல. ஆனால் நீ இவிக இறை நம்பிக்கைய கொள்ளையடிச்சுட்டே. என்ன சொன்னே நாக்குல சரஸ்வதியா? சரஸ்வதி இருந்து பேசினதுக்கெ வேட்டி நனைஞ்சுருச்சு. சரோஜா தேவிய வச்சு பேச சொல்றியா? காவி கட்டின நீ சரோஜா தேவி சமாச்சாரத்தை செய்யவே செய்யலாம். ஜீன்ஸ் போட்ட  நான் பேசக்கூடாதா என்ன?
நித்யானந்தா: அய்யோ எமதர்ம ராஜா ! என் குற்றத்தை நான் ஒப்புத்துக்கறேன். இந்தாளு பேசற பேச்சு அப்படியே விஷம் மாதிரி தலைக்கேறுது. நீ என்ன தண்டனை கொடுத்தாலும் ஓகேப்பா
எமன்: நீ என் கேஸ்ல நீதிபதியா இருக்கவே லாயக்கில்லேன்னிட்டயேப்பா நான் என்னத்த  தண்டனை கொடுக்க முடியும்.. முருகேசன் .. நித்யா குற்றத்தை ஒப்புத்துக்கிட்டாரு. தண்டனையையும் நீயே சொல்லிருப்பா
முருகேசன்: ஜஸ்ட் ..ஒரு ப்ளூ ஃபிலிம் பாருங்க
எமன்: ஏய் என்ன சொல்றே நீ
முருகேசன்: உ.வ.படாதிங்க சார். இந்த தலைப்புல ஒரு கதை எழுதியிருக்கேன். அதை படிங்கனு சொல்லவந்தேன்

"அய்யய்யோ..............."னு கத்திக்கிட்டு  எமலோகத்தை விட்டு நித்யா ஓடறார். தவறி கீழே விழறார். விழுந்த இடம்  கூவம் ஆறு.

இனம் இனத்தோடு சேருங்கறமாதிரி கூவத்து அசிங்கமெல்லாம்  நித்யாவை தேடிவந்து சேர்ந்துக்க கூவம் சுத்தமாயிருது.

கலைஞர் அவசரமா  இந்த சாதனையை விவரிக்க உடன் பிறப்புக்கு கடிதம் எழுத ஆரம்பிக்கிறார்.