Thursday, April 15, 2010

காம நோய் தீர்க்க‌

இந்த பதிவு உடலளவில் செக்ஸே தேவைப்படாத பெண்ணின் தயவே தேவைப்படாத  ஆண்மையற்ற பால் மாற்றத்துக்கு ஏங்கும் பிரக்ருதிகள் பற்றியோ அல்லது 40 ஐ நெருங்கும் வரை , தனக்கென்று ஒரு மனைவி வரும்வரை ஈர கோவணம் கட்டியோ அ தன் கையே தனக்குதவி என்றோ வாழ்ந்துவிட கூடிய கேஸ்களை பற்றியதுமல்ல. பின்னே யாரைப்பற்றியது என்றால் .........

ஆண் பிள்ளை சிங்கங்கள்.  கோழைத்தனம் ,எஸ்கேப்பிசம், ஹிப்பாக்ரசி ஆகியவற்றை குறைவாய் பெற்றுள்ளவர்கள். சுய இன்பம் துணையுடனேயே  பேச்சலர் லைஃபை வாழ்ந்து விட முடியாதவர்கள். சாகச யாத்திரைக்கு துடிப்பதும், யாத்திரைக்கு பின் குற்றமனப்பான்மையில் குமைவதுமாய் இருப்பவர்கள்.,சில நாட்கள் அ சில வாரங்களில் வீரியம் புரண்டதும் பழைய குருடி கதவை திறடி ரேஞ்சில் ரீ என்ட்ரி தருவதும், மறுபடி குற்றமனப்பான்மையில் உழலுவதுமாய்  கிடக்கு ஆணினத்து பிரதி நிதிகளுக்காகவே இந்த பதிவை போடுகிறேன்.

திருமணமாகாத ஆண்களையெல்லாம் இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று சுய இன்பம் அனுபவித்தவர்கள் இரண்டு அனுபவித்ததே இல்லை என்று சொல்பவர்கள். ( சொல்பவர்கள் போல்ட் அண்ட் அண்டர்லைன்)

இது குறித்து ஏற்கெனவே ஒரு பதிவில் விஸ்தாரமாய் எழுதிவிட்டதால் சுய இன்பம் குறித்து இதில் ப்ரஸ்தாபிப்பதாய் இல்லை.

இனி அடுத்த ஆப்ஷன் என்ன? விலை மாது , காதலி, கணவனை இழந்த பெண், பிரிந்த பெண், தற்காலிக தனிமையில் வாடும் திருமணமான பெண், அல்லது செக்ஸ் தேவைகளுக்காக அணுகும் திருமணமான கணவனுடன் வாழும் பெண்.

விலை மாது:
விலை மாதுவை அணுக நினைச்சா எதிர்படக்கூடிய பிரச்சினைகள் அவமான உணர்ச்சி,இவன் அன் எம்ப்ளாய்டா இருந்தா பண பிரச்சினை ,பணம் இருந்தாலும்  அவளே ஏமாத்தி ,மிரட்டி காசு பிடுங்கலாம். அவள் நல்லவளா இருந்தாலும் அவளை சேர்ந்தவங்க பிடுங்கலாம் ,வியாதி வந்துரலாம், போலீஸ் ரெயிட்ல மாட்டலாம். 

காதலி:
பழந்தமிழ் இலக்கியங்கள்,திரைப்பாடல்கள் தான் பெண்களை மானினம் என்று குறிப்பிடுகின்றன. தற்போதுள்ள சட்டங்களை வைத்து பார்க்கும் போது காதல் என்பது  புலி வேட்டைக்கு மான் புறப்பட்ட கதையாகிவிட்டது.

மக்கள் தொகை பெருக்கத்தால் சகமனிதர்கள் மீதான நம்பிக்கை/ஈர்ப்பு/ அக்கறை/ஆர்வமே புஸ்வானமாகிவிட்டுள்ளது. வாழ்க்கை முறை நகரமயமாகிவிட்டமையால்  விவசாயம் சீரழிந்து கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு  மைக்ரேஷன் அதிகரித்து,  நகர வாழ்க்கையால் தேவைகள் அதிகரித்து,  தொழில் மயம்,  இயந்திரமயத்தால் பணம் இருந்தால் போதும் எதை வேண்டுமானாலும் வாங்கிவிடமுடியும், பணம் இல்லாமல் வாழவே முடியாதுங்கற  என்ற நிலை வந்திருக்கிறது.

ஒரு பக்கம் அந்த பணத்துக்கான பரிதவிப்பு சமூகத்தை சீரழிச்சு க்ரைம் நிழல் படியாத குடும்பமே இல்லேங்கற ஸ்டேஜ் வந்துருச்சு. எந்த குடும்பத்தை எடுத்துக்கிட்டாலும் கொலை,கொள்ளை, வங்கி கடன் எகிறடிப்பு, லஞ்சம்,ஊழல், நில ஆக்கிரமிப்புலருந்து அட்லீஸ்ட்  வரதட்சிணை கொடுமை, ஈவ் டீசிங் குற்றவாளியாவது இருக்கான்.

பழி பாவத்துக்கு அஞ்சற நடுத்தர வர்கமே இந்த கதில இருக்குன்னா. மத்த க்ரூப்ஸை பத்தி தனியே சொல்லனுமா?

ஒரு வேலை.அது என்னால முடியாதுங்கறப்போ ,பெண்டாட்டியால  முடியுங்கறப்போ அவளை "வச்சு" அந்த வேலைய செய்துக்கிட்டா என்ன தப்புங்கற ஸ்டேஜுக்கு ஆம்பளைங்க வந்தாச்சு. கடன் காரனுக்கு வாய்தா சொல்றதுலருந்து, டிஷ் காரனை நாளைக்கு வானு சொல்ற வரை மனைவியரை உபயோகிக்கிறது ஒரு வழமையாகி போச்சு.

இந்த யதார்த்தத்தை சில காலம் இளமையின் ஊற்று மறைத்துவிடுகிறது . காதல், கடலை பர்ஃபினு மனசு அலையுது. இது ரொம்ப லிமிட்டட் பீரியட். வெறுமனே காதல் கடிதம் எழுதிக்கிட்டிருந்தா கூட ப்ரீச் ஆஃப் அக்ரிமென்ட் அவளை மணந்தே தீரனும்னு சட்டம் சொல்லுது. இதுல அவளோட செக்ஸ் வச்சிக்கிட்டு, வயித்துல கியித்துல கொடுத்துட்டா கதை கந்தல்தான்.

இது சக்ஸஸாற காதல்களுக்கு தான் பொருந்தும். இவன் வடிவேலு மாதிரி இருந்து அவள் ஸ்ரேயா மாதிரி இருந்துட்டா நாஸ்தி தான். உடனே ஈவ் டீசிங்ல புக் பண்ணிக்கிட்டு மஹிளா எஸ்.ஐ தன் உள் மன வக்கிரங்களுக்கெல்லாம் இவனை வடிகாலா மாத்திக்குவாங்க.

பை மிஸ்டேக் காதல் ஒர்க் அவுட் ஆகி அவளோட அண்ணனோ,அப்பனோ,ஒன்னுவிட்ட மாமனோ வட்டம்,சதுரம்னு செயலாளரா இருந்தா போதும் இவன் குடும்பமே அதோ கதி.

ஆக காதலிக்கிறதே ஆபத்து.இதுல காதலியோட செக்ஸு பேராபத்து. திவாரி கதை தெரியுமில்லே. எந்த காலத்துலயோ விதைச்சது இன்னைக்கு ஆறடிக்கு வளர்ந்து வந்து ஜெனட்டிக் டெஸ்டு அது இதுனு அல்லாட்டம்.

கணவனை இழந்த பெண், பிரிந்த பெண், தற்காலிக தனிமையில் வாடும் திருமணமான பெண், அல்லது செக்ஸ் தேவைகளுக்காக அணுகும் திருமணமான கணவனுடன் வாழும் பெண்:

இந்த க்ரூப்புக்காக அந்த ஏரியால ,அவிக ரிலேட்டிவ் சர்க்கிள்ள பெரிய கூட்டமே ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருக்கும். இவனெல்லாம் சிங்கம்னு நினைச்சா அது மிஸ்டேக். ஊசில நூலை கோர்க்க கூட முடியாத கேஸு கூட மேற்படி பெண்களுக்காக நாக்கை தொங்க போட்டுக்கிட்டு ட்ரை பண்ணிக்கிட்டிருக்கும். இதென்னா சைக்காலஜினு கடுப்பாயிராதிங்க.

சரிய்யான தாக்கத் இருக்கிற பார்ட்டி பெண்டாட்டிய போட்டு புரட்டி எடுத்துட்டு அடுத்த அலாரம் வர்ர வரை (பயாலஜிக்கல் க்ளாக்லருந்து தலைவா) ஒழுங்கா வேலை வெட்டிய பார்த்துக்கிட்டு கிடக்கும்.

இந்த மதில் மேல் பூனைங்க, பெப்சி மூடிய கூட திறக்கற கெப்பாசிட்டி இல்லாத பார்ட்டிங்க தான் " எனக்கு வீட்ல சரியில்ல மாமூ..பக்கத்து தெருவுல ஒரு கேரளா குட்டி இறங்கியிருக்கூஊஊஊஊ" என்று டீக்கடையிலும், சலூனிலும், அலம்பல் பண்ணிக்கிட்டிருக்கும். "ஆட தெரியாத தே..யா கூடம் கோணம்னாளே" அதே கதைதான் இதுகளூம்.

சாதாரணமா பார்த்திங்கன்னா மேற்படி பார்ட்டியெல்லாம் கைமாறிக்கிட்டே இருக்கும். தினத்தந்தில செய்தியா வரும். குடும்ப டாக்டரையே மாத்தாதிங்கனு சொல்றாங்க.ஆனால் இவிக ஆக்டரையே மாத்திருவாங்க,. என்னடா சமாசாரம்னா இவனும் டம்மி பீஸாயிருப்பான். டம்மி பீஸுதான் இந்த மாதிரி எட்டாத காய் பார்த்து கொட்டாவி விட்டுக்கிட்டிருக்கும்.

இதென்னடா தலையெழுத்துன்னு அவள் ஆள் மாத்தினா உடனே இவருக்கு தன்மானம் பொத்துக்கும். பெண்டாட்டி எவனோட படுத்துக்கறானு தெரியாது இவிகளுக்கு. ஆனால் கள்ளக்காதலி மட்டும் கற்போட (?) இருக்கனும்னு அப்படி ஒரு பிடிவாதம்.

இதுல எந்த கேஸ டச் பண்ணாலும் தந்தில செய்தியா வர்ரது கியாரண்டி. ஓகே இப்போ உட்பிரிவுகளையும் பார்த்துருவம்.

கணவனை இழந்த பெண்(விதவை):
இந்த கேஸை எக்ஸ்ப்ளெயின் பண்ண ஜோதிஷத்தை கொஞ்சம் துணைக்கு கூப்டுக்கறேன்னா. பெண்கள் ஜாதகத்துல ஏழாவது ,எட்டாவது,ஒன்பதாவது பாவங்கள் , இந்த பாவங்களுக்கு அதிபதியான கிரகங்கள்தான் கணவனோட ஆயுளை காட்டும். இந்த விஷயங்கள்ள தகராறு இருந்தாதான் அவள் விதவையாவாள். இதெல்லாம் லேண்ட் மைன் மாதிரி. நானோ கார்னா அதே செகண்ட்ல டமால். கவச வாகனம்னா கொஞ்சம் நாள் பிடிக்கும் அவ்ளதான். நீங்க இந்த மாதிரி பார்ட்டிய பிடிச்சா அவள் கணவனுக்கு என்னா கதியாச்சோ அதே கதிதான் உங்களுக்கும். அப்ப இவிக வாழ் நாள் எல்லாம் வைபரேட்டரை உபயோகிச்சு வாழ வேண்டியதுதானானு நீங்க கேட்கலாம். நோ.. அவள் ஜாதகத்துல இருக்கிற சவால்களை சமாளிக்கிற கெப்பாசிட்டி இருக்கிற ஜாதகனை, விதவைய மணந்தாதான் பத்து வருஷமாவது குப்பை கொட்டமுடியுங்கற ஜாதகனை இவளுக்கு கட்டி வைக்கலாம்.

கணவனை  பிரிந்த பெண்,

ஒருபெண் ஜாதகத்துல அவள் விதவையாகனும்னு இருக்கு. ஆனால் அவளை கட்டிக்கிட்டவனுது தீர்க்காயுசு ஜாதகம்னு வைங்க. இந்த மாதிரி கண்டிஷன்ல அவன் ஜாதகத்துல இருக்கிற கிரகங்கள் அவனை காப்பாத்த அவனுக்கு தீர்காயுசை தர விவாகரத்து வாங்க வச்சிருது. இது மாதிரி கேஸை கோர்த்துக்கிட்டவன் தீர்காயுசு ஜாதகத்துல பிறந்திருந்தா பிரிஞ்சுருவான். அல்பாயுசா இருந்தா பட்டுனு போயிருவான்.

தற்காலிக தனிமையில் வாடும் திருமணமான பெண்:
ஒரு பெண் இருக்கா. அவளுக்கு கோசாரத்துல (தற்காலிகமா)  விதவையாகிற நேரம் வந்திருக்குனு வைங்க. அவள் கணவனோட சேர்ந்திருந்தா அவன் செத்துருவான். இவள் விதவையாயிருவாள். ஆனால் ஆக்சுவலா இவளுது தீர்க சுமங்கலி ஜாதகம். அவனுது தீர்காயுசு ஜாதகம். இந்த பிரச்சினைய கிரகம் எப்படி சால்வ் பண்ணுதுன்னா
ரெண்டு பேரையும் பிரிச்சு வச்சுருது. ஜோதிஷத்தை பொருத்தவரை வியோகம்னா செத்து போறது மட்டும் வியோகமில்லை. விவாகரத்து வாங்கிக்கிட்டாலும் வியோகம்தான். அம்மா வீட்ல வந்து டேரா போட்டாலும் வியோகம்தான்.  நாளைக்கு நல்ல நேரம் வந்ததுமே இவள் போய் அவனோட சேர்ந்துக்குவா. இவள் அம்மா வீட்ல கேம்ப் போட்ட நேரம் அவள் விதவையாற நேரம். அந்த நேரம் பார்த்து நீங்க அவளுக்கு லைன் விட்டிங்கனு வைங்க. அவள் கணவனை கை குலுக்க வேண்டிய மரண தேவன் உங்களை குலுக்கிருவான். டேக் கேர்.

செக்ஸ் தேவைகளுக்காக அணுகும் திருமணமான கணவனுடன் வாழும் பெண்:
ஆண் இயற்கையின் வேலைக்காரன். வேலைக்காரன் வேலை செய்யனும்னா அவனுக்கு கூலி தருவாய்ங்க. வேலைக்கு கூலி போலத்தான்  ஆணுக்கு செக்ஸில் உச்சம் கிடைக்குது.  

ஆனால் பெண் இயற்கையின் பிரதி. இயற்கையின் நிதி. இயற்கையின் பிரதி நிதி.
அவளோட ஒரே  நோக்கம் ஆண் கிட்டருந்து வீரியத்தை சேகரிக்கனும், கருவை தாங்கனும். ,தாயாகனும். இதுக்கு அவள் எந்த கூலியையும் எதிர்பார்க்கிறதில்லை. அவள் இந்த படைப்புல ஒரு சின்ன பாகமா இருந்தாலும் தன்னையே இயற்கையா உணர்ரா.

ஆண் ஒன்னை பெத்த பிறகுதான் தந்தையாகிறான். பெண்ணோ பிறக்கும் போதே தாயாக பிறக்கிறாள்.

செக்ஸில் உச்சம் அடைவதற்கான எதிர்பார்ப்பு அவளோட சப் கான்ஷியஸ் மைண்ட்ல இருக்கறதில்லை.

( பெண்களில் வெகு  சிலர் ஆர்காசம் குறித்த எதிர்பார்ப்புகளை தம் கான்ஷியஸ்  மைண்டில் வைத்திருக்கலாம்.ஆனால் இது ஜஸ்ட் மேம்போக்கானது. அது கிடைக்காத பட்சம் அதை குறித்து பெரிதாய் சிந்திப்பது கூட இல்லை.அவ்வாறு சிந்திக்க ஆரம்பித்திருந்தால்  திருமணம் என்ற ஏற்பாடே காலாவதியாகியிருக்கும். ஏன் என்றால் இன்செர்ஷனுக்கு பிறகு 7 அசைவுகள்ள ஆணுக்கு உச்சம் ஏற்பட்டுருதாம். பெண்ணுக்கு 23 அசைவுகள் தேவைப்படுதாம் . மேலும் ஒரு இரவில் ஆணுக்கு ஓரிரண்டு உச்சங்கள் ஏற்பட்டாலே சுஸ்தாயிருவான். ஆனால் பெண் பல தடவை உச்சம் பெறும்/அந்த மின் புயலை  தாங்கிக்கொள்ளும் சக்தியை பெற்றிருக்கிறாள்)

கணவன் தன் மேல இயங்கும் போது ஏதோ குழந்தை தன் மார்பில் முட்டி பால் குடிப்பதாய் உணர்கிறாளே தவிர,  இந்த செயலின் பின் விளைவாய் தனக்கு கிட்ட்டப்போகும்  பாக்கியத்தை ( ஓருடலில் இரண்டு உயிர்கள் தங்கும்) கனவு காண்கிறாளே தவிர வேறில்லை.

ஆக பெண் என்பவள் செக்ஸுக்காக செக்ஸில் ஈடுபடுவதில்லை. ஒன்று குழந்தையை பெற அல்லது தன் கணவனையே குழந்தையாக்கிக்கொள்ள தான் செக்ஸில் ஈடுபடுகிறாள்.

பெண்ணியவாதிகள் ஆகா ..இவன் பிற்போக்கு வாதி, பெண்ணுக்கான சம உரிமையை, செக்ஸில் உச்சம் பெறும் உரிமையை சுற்றி வளைத்து  மறுக்கிறான்  என்று கோஷமிடலாம். ஆனால் பல நூறு பெண்களிடம் அந்தரங்கமாய் கலந்துரையாடி, பல்லாயிரம் தம்பதிகளின் வாழ்க்கை போக்கை கவனித்தே மேற்படி பத்தியை எழுதினேன்.வசதி வாய்ப்புள்ளவர்கள் ஒரு  நாடு தழுவிய சர்வே நடத்திப்பார்க்கட்டும்.

பெண் மட்டும் செக்ஸில் உச்சத்தை எதிர்ப்பார்க்க ஆரம்பித்திருந்தால் திருமண அமைப்பில்லை,குடும்பமில்லை,தனியார் சொத்துக்களில்லை,  சுரண்டலில்லை,
சனத்தொகை பெருக்கமில்லை, ஜஸ்ட் வைபரேட்டர்கள்  இத்தனை பிரச்சினைகளையும் தீர்த்து வைத்துவிட்டிருக்கும்.

ஒரு பெண் வெறுமனே செக்ஸ் தேவைகளுக்காக கணவனல்லாத இன்னொரு ஆணை தேடுவாள் என்பதே தர்கத்திற்கொவ்வாத ஒன்று. அவளுக்கு செக்ஸ் ஒன்றே தேவையென்றால் அதற்கு எத்தனையோ விஞ்ஞான சாதனங்கள் உள்ளன. அவளுக்கு செக்ஸ் மட்டும் தேவையில்லை. வேறு எதையோ எதிர்பார்க்கிறாள். அதற்காக, அது கிடைக்குமோ என்ற எதிர்பார்ப்பில் செக்ஸை சகித்துக்கொள்கிறாள்.

உண்மை நிலை இப்படியிருக்க செக்ஸுக்காக ஒரு பெண்/அதுவும் திருமணமாகி கணவனுடன் வாழும் பெண்  உங்களை நாடிவந்தாள் என்றால் அவள் அப் நார்மல் என்று அர்த்தம்.

இன்னாபா என்னமோ விஸ்தாரமா பத்தி பத்தியா எழுதிக்கிட்டு வந்து இப்படி அம்போனு விட்டுட்டியே என்று நொந்து கொள்ளாதீர்கள்.திருமணமாகாத ஆணுக்கு
 செக்ஸுக்கான பாதுகாப்பான  ஆப்ஷன்ஸ் இரண்டே ஒன்று சுய இன்பம் .இரண்டாவது ?

சொல்லித்தான் ஆகனுமா?  பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம். மனிதன் பல்வேறு தளங்களில் இயங்குகிறான். உடல்,மனம்,புத்தி ,ஆத்மா. மனிதர்கள் யாவரும் உடல் என்ற தளத்தை தாண்டி வந்தாலன்றி  ப்ரக்ஞை வளராது. உடல் தாண்டிய வளர்ச்சிக்கு உடலளவு தேவைகள் நிறைவேற்றப்பட்டே ஆகவேண்டும். இல்லாவிடில் மனிதன் மாமிச இச்சைகளுக்கே இரையாகிவிடுவான்.

மாமிச இச்சைகளை கடந்து வந்தவன் முறையாகிறான், மறையாகிறான். ஏன் இறையுமாகிறான்.