Monday, April 12, 2010

மகாத்மாவின் ராவுகள்

அண்ணே வணக்கம்ணே..
இன்னைக்கு இந்த பதிவுல  மகாத்மா காந்திய பத்தி ஒரு வெளி நாட்டுபார்ட்டி எழுதின புஸ்தவத்தை பத்தின என் கருத்தையும்
எல்லா கண்டுபிடிப்புக்கும் செக்ஸ்தான் அடிப்படை என்ற தலைப்புல தனிப்பதிவும் போட்டிருக்கேன். மேற்படி படைப் பை படிக்க அந்த தலைப்பு மேல க்ளிக் பண்ணுங்க‌

                                                          
சுஜாதா தமது ஒரு பக்க கட்டுரைகளில் கஸ்தூரிபாவின் வா.வரலாறை படமாக எடுத்தாலும் பாவின் இரவுகள் என்று தான் தலைப்பிடவேண்டி வரும் என்று நக்கலடித்திருப்பார். அது ஏறக்குறைய நிஜமாகிவிட்டது. ஆம் ஜேட் ஆம்ஸ் என்பவர் காந்தி - நிர்வாண லட்சியம்ங்கற தலைப்புல ஒரு புஸ்தவம் எழுதியிருக்காரு.இதுல மகாத்மாவோட ராவுகளை பத்தி எழுதி பட்டைய கிளப்பியிருக்காரு.

தாத்தா குளியலுக்கு முன்னாடி மசாஜ் செய்ய வச்சுக்குவாராம் ( தாய் குலங்களை கொண்டுதான்)  நேரு இன்னும் மோசம் ஏகாந்தமா நீச்சலடிக்கனும்னா கூ ட ஆண் நண்பரை தான் தேடுவாராம். அவரு ஹோமோனு கூட எங்கயோ படிச்சேன்.

சரி மாமா விஷயத்தை விடுங்க  தாத்தா விஷயத்துக்கு வருவம். தான் செக்ஸ் மேல முழுக்கட்டுப்பாட்டோட இருக்காரா இல்லையானு தெரிஞ்சிக்க பெண்கள் குளிக்கிற இடத்துல கண்ணை மூடிக்கிட்டு உட்கார்ந்துக்குவாராம்.( கண்ணை மூடிக்கிட்டு என்னாத்த ரிசர்ச்சுப்பா)  இல்லன்னா யாராவது பெண்ணை தன் பக்கத்துல நிர்வாணமா படுக்க வச்சிப்பாராம்.

இந்த பரிசோதனைகளுக்கு அவர் உபயோகிச்சது தன் தொண்டர்களோட மனைவிமாரை, மருமகள் உறவு வர்ர பெண்களை.

தாத்தாகிட்டே ஸ்டெனோவா இருந்த குட்டி எங்கப்பன் குதிருக்குள்ள இல்லேங்கற மாதிரி " அவரோட அடிப்படை கொள்கையே பிரம்மச்சரியம்தான் அதுவே எங்களுக்கும் கை வந்தது"னு தன் சுயசரிதைல எழுதினாங்களாம்.

நம்ம தாத்தா எந்த அளவுக்கு ஜொள் பார்ட்டின்னா கஸ்தூரிபாவுக்கு அ,ஆ,இ,ஈ  கத்து தர கூட  நேரமில்லாத அளவுக்கு போட்டு பொரட்டி எடுத்தாராம்.அப்பா மரணப்படுக்கையில கிடக்கிறப்ப கூட ரூமுக்கு  போய் பெண்டாட்டியோட சம்ஸ்காரத்தை முடிச்சுட்டு தான் வெளிய வந்தாராம்.அதுக்குள்ள அப்பா துபாய் !

இந்த கசமுசாவ எல்லாம் நேரு கண்டும் காணாம போய்ட்டாராம்.இந்த மாதிரி விஷயங்களாலதான் சர்தார் பட்டேல்,கிருபாளினி மாதிரி தலைவர்ங்க காந்திய விட்டு விலகிட்டாங்களாம்.

இதெல்லாம் அந்த புஸ்தவத்துல இருக்கிறதா கேள்வி.

சரி இந்த புஸ்தவத்தை பத்தி  ஜோதிட ஓஷோனு பட்டம் வாங்கின முருகேசனோட கருத்து என்னனு கேக்கறிங்க அப்படித்தானே..

பல பதிவுகள்ள நான் சொன்னபடி மனுஷனுக்கு இயற்கை கொடுத்திருக்கிற ஒரே பவர் செக்ஸ் பவர். அது வெறுமனே செக்ஸ்லயே செலவழிஞ்சு போயிர்ர அளவுக்கு குறைவா இருந்தா செக்ஸுகு பிறகு மனுஷன் தோட்டாவ நீக்கிட்ட துப்பாக்கி மாதிரி ஹார்ம்லெஸ் ஆயிர்ரான்.

ஆனால் செக்ஸ்ல செலவழிஞ்ச பிறகும் மிச்சம் மீதி இருக்கிற பவர்தான் க்ரியேட்டிவ் பவரா மாறுது.  தாத்தாவே சொல்லியிருக்காராம் தனக்கு "பலான" எண்ணம் அதிகம்னு.

அப்பாவோட மரண தருணத்துல செக்ஸ் மேல எண்ணம் போச்சு. போய் முடிச்சுட்டு வர்ரதுக்குள்ளே அப்பா காலி. தாத்தா மைண்ட் பிரம்மச்சரியத்து மேல  போக இந்த சம்பவம் முக்கிய காரணம்.

மரணத்தை பார்க்கும்போதும் ,நினைக்கும்போதும் ஆட்டோமேட்டிக்கா ஹ்யூமன் மைண்ட் செக்ஸ் மேல தாவும்.இது இயற்கை. செக்ஸ்ல உச்சம் எய்தும்போது ஆண்,பெண் இருபாலாருக்கும் காலம் தெரியாத ப்ளாக் அவுட் ஒன்னு ஏற்படும். (கம்ப்யூட்டர்ல ரீ செட் பட்டனை அழுத்தின மாதிரி). இது ஒரு குட்டி மரணம். சிலருக்கு உயிர் பிரியும் போது வீரியம் வெளிப்படும். மரணத்துக்கும் செக்ஸுக்கும் உள்ள லிங்க் இது.

இயல்பான மனித மனம்  மரணத்தை பார்க்கும்போது ,நினைக்கும்போதும் செக்ஸுக்கு தாவும்.இது இயற்கை. இதுலருந்து தாத்தா நல்ல தாக்கத்தோட இருந்தாருனு அர்த்தம். எவ்வித மனத்தடையும் இல்லாமே செக்ஸ அனுபவிச்சிக்கிட்டிருந்தாருனு அர்த்தம்.

சப்போஸ் காந்தி தன் செக்ஸுவல் அர்ஜை அடக்கிக்கிட்டு அப்பா பக்கத்துலயே உட்கார்ந்திருந்தாலு காபா காந்தி பொழச்சிருப்பாரா? ஊஹூம்.

இங்கேதான் காந்தி தாத்தா மேல சமூகம் தன் முத்திரைய குத்திருச்சு. அவருக்குள்ள குற்ற மனப்பான்மை வந்துருச்சு. அவரோட இயல்புக்கு முரணான பிரம்மச்சரியத்து மேல ஆர்வம் வந்துருச்சு. இது இருமன போக்கா மாறிருச்சு.

தலைவன்னா தன்னோடதை அறுத்து போட்டுரனுங்கற ஃபீலிங் மேற்கத்திய கலாச்சாரத்துல கூட இருக்கு. ஆனால் உண்மைல இப்படி தனக்கு "அது" இல்லவே இல்லேங்கற மாதிரி பில்டப் காட்டற தலைவர்கள் தான் ஒன்னுக்கு ரெண்டா,மூணா, தெருவுக்கு ஒன்னா கூத்தடிக்கிறது.

ஒரு தலைவன்னா அவன் எப்படி  சிறு நீர் கழிக்கலாம். அடக்கிக்கவேணானு நான் சொன்னா உங்களுக்கு எவ்ளோ  கடுப்பாகும்.அதையே மாத்தி சொல்றேன். மகாத்மா எப்படி இதெல்லாம் பண்ணியிருக்கலாம்னு கேட்டா நான் இதெல்லாம் ஜஸ்ட் அவரோட இயல்புக்கு மாறான பிரம்மச்சர்யம் மீதான வேட்கையோட பின் விளைவுகள்னு சொல்வேன்.

உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் ஆசைகள்தான் வன்முறையா வெடிக்குது. காந்தியோட நடவடிக்கைகள்ள மேலோட்டமா பார்க்கும் போது அகிம்சை தெரிஞ்சாலும் கொஞ்சம் சுரண்டி பார்த்தா இம்சை தெரியுது.

ஒரு மனிதன் லிபரலா திங்க் பண்ணனும்னா, அடுத்தவுக கருத்தை காது கொடுத்து கேட்கனும்னா , ஃப்ளெக்சிபிளா இருக்கனும்னா அவனோட செக்ஸ் லைஃப் இயல்பானதா இருக்கனும்.

ஆனால் அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ் போன்றவங்க விஷயத்துல காந்தியோட நடவடிக்கைகள் சப்ரெஸ்ட் செக்ஸுவல் டிசைர்ஸ தான் காட்டுது.

செக்ஸுங்கறது ஆய்வு நடத்தவோ,பரிசோதனை செய்யவோ இல்லை. பறவை என்றால் பறப்பது. செக்ஸ் என்றால் அதில் குதிப்பது. அப்படியில்லே நான் ஆராய்ச்சி பண்றேன்னு எவராச்சும் இறங்கினா அவிக மன நோயோட பிடில இருக்காங்கனு அர்த்தம். (தொழில் முறை செக்ஸாலஜிஸ்டுகளோட ஆய்வு,பரிசோதனையெல்லாம் இந்த சாதியில சேர்த்தியில்லை)

காந்தி தாத்தாவை மேற்படி பரிசோதனைகள்ள இறக்கினது பலவந்தமா அடக்கிவைக்கப்பட்ட  அவரோட செக்ஸுவல் டிசைர்ஸ்தான்.

எத்தனை சாதிச்சு என்ன எவனோ ஒரு வெளி நாட்டுக்காரன் இன்னைக்கு புஸ்தவம் எழுத சான்ஸு கொடுத்தது சாட்சாத்  நம்ம சமுதாயம்தான். செக்ஸை ஏறக்குறைய தடை செய்து வச்சிருக்கிற சமுதாயம்.

அதுக்குத்தான் நான் என்ன சொல்லவரேன்னா செக்ஸை உள்ளபடி ஏத்துக்கங்க. ஹிப்பாக்ரசி வேணா. விபச்சாரத்துக்கு சட்ட அனுமதி கேட்டு குரல் கொடுங்க. வாழையடி வாழை மாதிரி 100 வருஷத்துக்கு அப்புறம் இந்திராவின் ராவுகள்,சோனியாவின் ராவுகள் மாதிரி புஸ்தவமெல்லாம் வெளிவர ஆரம்பிச்சுரும்.