Tuesday, April 27, 2010

நவகிரக பிடியிலிருந்து விடுதலை

நவகிரக பிடியிலிருந்து விடுதலை பெற எனக்கு உதவிய அம்சங்கள் பலப்பல. அவற்றின் பட்டியலை இப்பதிவில் தருகிறேன். இவை உங்கள் வாழ்வில் தன்னிச்சையாய் அமைந்திருந்தாலோ அல்லது ஏற்பாடு செய்து கொள்ள கூடியவற்றை  நீங்களும் ஏற்பாடு செய்துகொண்டாலோ   நிச்சயமாக நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலை பெறலாம்.

1.பழைய தெலுங்கு சினிமாவில் ஒரு டயலாக் இருக்கு " அதிர்ஷ்டசாலியை எவனும் கெடுக்க முடியாது.துரதிர்ஷ்ட சாலிய எவனும் உருப்பட வைக்க முடியாது. நான் பை பர்த் அதிர்ஷ்டசாலி. இதான் முதல் பாயிண்ட் ( இந்த லிஸ்ட்ல வரப்போற விஷயங்களை பார்த்து நீங்களே இதை ஒத்துக்கிடுவிங்க)

2.தன் வரை தர்ம நியாயத்துக்கு பயந்து  தர்மாத்வா  வாழ்ந்த என்  அப்பா லைம் லைட்டுக்கு (புகழ் வளையம்) வரதுக்கு முயற்சியே பண்ணலை. இத்தனைக்கும் அவருக்கு அதுக்குண்டான எல்லா தகுதிகளும் இருந்தது.

அப்பனோட ஜாதகத்துல அஞ்சாவது இடம் தான் அவரோட பெயர் புகழை காட்டறதோட பிள்ளைகளையும் காட்டுது. என்.டி.ஆர், எம்.ஜி.ஆர், கலைஞர் மாதிரி செலிப்ரிட்டீஸோட விஷயத்துல அவிக ஜாதகத்துல அஞ்சாவது இடம்  பெயர் புகழை தர்ரதுலயே உழைச்சு ஓடா தேஞ்சு போச்சு.

அதனால தான் எம்.ஜி.ஆருக்கு பிள்ளையே இல்லை. என்.டி.ஆர் ஒரு டஜன் பெத்தும்  ஒரே ஒரு மகள் தான் ஓரளவு பேசப்படறாங்க. ( ஜோதிஷ சாஸ்திரபடி பெண் குழந்தைய பெற்றாலும் அவன் மலடன் கீழே தான் கணக்கு ,பெண் குழந்தை லைம் லைட்டுக்கு வந்தாலும் அது கணக்குல வராது )

கலைஞர் விஷயத்துல மு.க.  முத்து  ஒரு சோக அத்யாயம். என்னதான் ஒப்பேத்த பார்த்தாலும் அழகிரி முரண்டு பிடிச்சிக்கிட்டே இருக்கார். கலைஞர் எந்தளவுக்கு தன் மக்களை (பிள்ளைகளை) ஃபோக்கஸ் பண்ண முயற்சி பண்றாரோ அந்த அளவுக்கு மொக்கையாகிறார் என்பதை கவனிக்கவும்.

இந்த கணக்குப்படி உன்னோட பிறந்தவங்க எல்லாருமே அதிர்ஷ்ட சாலிகளா இருக்கனுமேனு கேட்பிங்க. இல்லே . அது ஏன்னு கேட்டா எங்கப்பாவுது கடகலக்னம். கடகலக்னத்துக்கு பஞ்சமாதிபதி (பெயர்,புகழ்,பிள்ளைகளை காட்டற பாவம்) செவ்வாய்.

எங்க பெரிய அண்ணன் ஹார்ட் அட்டாக்ல போயிட்டான். (செவ்வாய் ரத்தத்துக்கு காரகன். இதயம் தான் ரத்தத்தை பம்ப் பண்ற மிஷின். மேலும் ஹார்ட் அட்டாக்குக்கு வழி வகுக்குறது ஹை ப்ளட் ப்ரஷர் தானே)

எங்க சின்ன அண்ணன் ப்ளட் (செவ்வாய்) கேன்சர்ல போய்ட்டான்.

என் தம்பி டிகிரி படிக்கிற வயசுலயே பெப்டிக் அல்சர் காரணமாய் ரத்தம் ரத்தமா (செவ்வாய்) கக்கினதை பார்த்திருக்கேன்.  ஒரு தரம் ரத்த வாந்திக்கு சோர்ந்து போய் கண்ணெல்லாம் செருகிப்போக கை நிறைய க்ளூகோஸ் பவுடரை தண்ணீல போட்டு குடுத்து அவன் உயிரை காப்பாத்தியிருக்கேன்.

இப்ப என் கேஸு என்னாகும்னு நினைக்கிறிங்களா? ஒன்னும் ஆகாது . ஏன்னா என்னோடது செவ்வாய் காரகத்வம் வகிக்கிற காதல்+ கலப்பு திருமணம் தான்  செவ்வாய் காரகத்வம் வகிக்கிற  சகோதரர்கள்  3 பேரும் நமக்கெதிரா கூட்டு சேர்ந்து  3 வருஷம்  குடும்ப சொத்தான 1200 ச.அ வீட்டில் (பூமிகாரகன் செவ்வாய் )  பங்கு கொடுக்காம அவிகளே அனுபவிச்சாங்க.

நான் செங்கல் சுவருக்கு (இதற்கும் செவ்வாய் தான் காரகன்) பூசு வேலை கூட செய்யாத  குடிசை வீட்ல குடியிருந்தேன். 1992 லருந்து 2003 வரை வருடத்துக்கு ரெண்டு தடவை கூட ரத்த தானம் பண்ணியிருக்கேன். கடைசியா டாக்டர் நியாயப்படி  உங்களுக்கே ஏத்தனும்னு சொன்னபிறகு வருஷத்துக்கு ஒருதரம், ரெண்டுவருஷத்துக்கு ஒரு தரம்னு குறைச்சிக்கிட்டே வந்துட்டன்.

எல்லாத்துக்கும் மேல செவ்வாய் காரகத்வம் வகிக்கிற போலீஸோட  நமக்கு டீலிங்க் ஜாஸ்தி ( எல்லாம் ஊர் பஞ்சாயத்து தான்) மேலும் டவுன்ல இருக்கிற அடிதடி கும்பலோட எல்லாம் ஒரு கட்டத்துல மோதியிருக்கேன். ஒரு கட்டத்துல பொலிட்டிக்கலா இணைஞ்சி பணியாற்றியிருக்கேன்.  எலக்ட் ரானிக்ஸ், கார்ப்பெண்டரிங்கல(இதுக்கும் செவ்வாய் தான் காரகன்)  எல்லாம் இன்டரஸ்ட் அதிகம் மஸ்தா சுத்தியடி, எலக்ட் ரிக் ஷாக் எல்லாம் வாங்கியிருக்கேன்.

இதெல்லாம் ஒரு பக்கம்னா முக்கியமான விஷயம் நான் புரட்சிக்காரன். கேள்வி கேட்கிறவன். அப்படி கேட்டு  நிறையவே இழந்தவன்.  என் பெயரும் செவ்வாய்க்குரிய கடவுளான முருகன் பெயராவே அமைஞ்சதும்  ஒருவகைல பரிகாரமா போச்சு
நம்ம லட்சியமான  நதி நீர் இணைப்புக்கு கூட ராணுவ  ஸ்டைல்ல ஆப்பரேஷன் இந்தியா 2000னு பேர் பேர் வச்சிருக்கேன். சிறப்பு ராணுவம் ஏற்படுத்தறதை ஒரு முக்கிய அம்சமா வேற வச்சிருக்கேன். நம்ம ப்ளாகை கூட பாருங்க ஜேம்ஸ்பாண்ட் 007 மாதிரி 07னு வச்சிருக்கேன் . செவ்வாய்னா போலீஸ், செவ்வாயோட கேது சேர்ந்தா ரகசிய போலிஸ். ஜேம்ஸ்பாண்டும் ரகசிய போலீஸ்தானே.

என் தம்பி பேரும் முருகன் பெயர் தான். அவனோடதும் காதல் திருமணம்தான். என்ன கையில ஜாப் இருந்ததால அண்ணங்கள் மூலமா லாபியிங்க் பண்ணி கண்ணாலம் கட்டிக்கிட்டான்.  முக்கியமா உயிர் பிழைச்சிருக்கிற எங்க ரெண்டு பேருக்குள்ளவும் 1997லருந்து தொடர்பே கிடையாது.

ஜோசியத்துல வியோகம்னு ஒரு சொல் வரும். அதுக்கு பிரிவுன்னும் அர்த்தம் சொல்லலாம். மரணம்னும் சொல்லலாம். எங்க ரெண்டு பேரை பொருத்தவரை ஒருத்தனுக்கொருத்தன் இருந்தும் செத்து போனமாதிரிதானே.

உங்களுக்கு இந்த சந்தர்ப்பத்துல சின்ன டிப். யாராச்சும் ஜோசியர் ( ஓரளவு லாஜிக்கலா கணிச்சு உங்க கடந்த காலத்தை சொல்லி தங்கள் வித்வத்தை நிரூபிச்ச பார்ட்டிங்க) மனைவிக்கு கண்டம் இருக்கு, அம்மாவுக்கு கண்டம் இருக்குனு சொன்னா அவிகளை காப்பாத்த ஒரே வழி அவிகளை பிரியறதுதான். ஜோசியத்துல பிரிவும், மரணமும் சமம்.

என்னோடதும்  கடகலக்னமாவே அமைஞ்சு பஞ்சம  ஜீவனாதிபதியான செவ்வாய்  வித்யா ஸ்தானமான 4 ல் உட்கார்ந்து கேதுவோட சேர்ந்துட்டார். இது தரித்திர யோகத்தை கொடுத்தாலும் (40 வயசுவரை அப்பப்போ சோத்துக்கே லாட்டரிங்கண்ணா)
தர்கத்துக்கு அதிபதிங்கறதால , ஞான காரகனான கேதுவோட சேர்ந்து தர்க ரீதியிலான ஞானத்தை கொடுத்துட்டார். 1997 லருந்தே சனம் நம்மை சாமி சாமினு கூப்பிட ஆரம்பிச்சிட்டாய்ங்க.

(கேது ஜாதகர்களுக்கு கொடுக்கிற சாய்ஸ் ரெண்டு தான் ஒன்னு பிச்சைக்காரனாகனும்,இல்லே சாமியாராகனும் . நம்ம விஷயத்துல சனம் நம்மை சாமியாராக்கிருச்சு. இதுக்கு லக்னத்துல உச்சம் பெற்ற குருவும் அவர் கொடுத்த பிராமண லட்சணங்களும் கூட உதவுச்சு). நான் ஏன் பிராமணாளை இப்படி சகட்டுமேனிக்கு விமர்சிக்கிறேனு ஒரு கேள்வி கேட்பிங்க. கடகத்துக்கு குரு 6,9க்கு அதிபதி. ஆறுன்னா சத்ரு,ரோகம்,ருணம். அதனாலதான் அவிக நம்மை எதிரியா பாவிக்கிறாய்ங்க. நமக்கு அவிக எதிரிங்க கிடையவே கிடையாது.  நான் அவிகளைஅச்சு பிச்சு கேசுகளாதான் பார்க்கிறேன். பிராமணீயத்தால் அவாளுக்கே ஆபத்துனு ஒரு தனிப்பதிவே போட்டிருக்கேன்.

3. என் ஜாதக பிரபாவத்தால எனக்கு 17 வயசு இருக்கும்போதே யூட்ரஸ் கேன்சர்ல 1984லயே அம்மா காலி.  1984 முதலே ரீ மாடலான வீட்ல மாடியறைய நமக்கு ஒதுக்கிட்டாய்ங்க. வாஸ்து தோஷங்கள் கிரவுண்ட் ஃப்ளோர்ல இருக்கிறவங்களுக்கு 100% வேலை செய்யும். மாடில இருக்கிறவிங்களுக்கு 50 % தான் வேலை செய்யும்.

பால்யத்துல வந்த சுக்கிர தசை  பிரபாவத்துல செக்ஸுல பூந்தாலும்  ஜன்மத்துல உச்சமா இருந்த குரு சீக்கிரமே (2 வ) வெளிய கொண்டுவந்துட்டாரு. அந்த ப்ராசஸ்ல ஆஞ்சனேயரை பிடிச்சேன். அவருக்கு பிடிக்குமேனு ராம நாம ஜபம் ஆரம்பிச்சேன்., வாஸ்து தோஷங்களை ராம நாம ஜபம் பரிகாரம் பண்ணிரும்னு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலகுமார ஸ்வாமிகள் கூட சொல்லியிருக்கார். ( அட நம்ம எழுத்தாளர் பாலகுமாரனுங்கோ)

இத்தனை சப் க்ளாஸ் நமக்கு ஃபேவரா இருந்தாலும் 1991ல அந்த வீட்டை விட்டு வெளியேர்ர வரை பட்டறிவுங்கறது ஒரு மாற்று கம்மிதான்.( எங்க வீட்டுல இருந்த வாஸ்து தோஷங்களை வச்சி ஒரு தொடர்பதிவே போடலாம்னா பார்த்துக்கங்க)

தாய்,வீட்டை  காட்டற 4 ஆவது இடத்துல இருந்த  செவ்வாயும்,கேதுவும் தாயின் மரணத்தாலயும், வீட்டை விட்டு வெளியேறினதாலயும்  வெடிச்சு போன க்ளைமோர் பாம் மாதிரி ஓரளவு ந்யூட்ரலாயிட்டாங்க. நாம வெறுமனே லாஜிக்கை வச்சிக்கிட்டு எதையெதையோ ப்ளாஸ்ட் பண்ணி அசலான சத்தியங்களையே சிறை பிடிச்சிட்டோம்.

4.அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னுவாங்க. என்னை பொருத்தவரை ஸ்தூலமா அவிக தெரிஞ்சோ தெரியாமயோ எனக்கு இன் ஜஸ்டிஸ் பண்ணியிருந்தாலும் ( நாம என்ன அவிகளுக்கு கொஞ்சமாவா இம்சை கொடுத்தோம்)
அவிகளோட ஜீன்ஸும், நல்ல குணங்களும்  சர்வ நிச்சயமா எனக்கொரு அசெட் தான். நான் லைஃப்ல எடுத்த ரிஸ்குகளை மீறி பைத்தியம் பிடிக்காது, இன்னும் உயிரோடு இருக்க , இந்த அளவுக்கு கடவுள் கைல வச்சிருக்கிற அஜெண்டாவையே பிட் அடிக்கிற அளவுக்கு, அவரோட மகா மந்திரிகளான நவகிரகங்களுக்கே டேக்கா  கொடுக்கிற அளவுக்கு வளரவும் அவிக பண்ண புண்ணியம், சைக்கிரியாட் ரிஸ்டுங்க கோணத்துல பார்த்தா அவிக கொடுத்த  நல்ல என்விரான்மென்ட், சுத்தியுள்ள மனிதர்கள் என்னதான்  நீசமான சனமாக இருந்தாலும் பெரும்போக்காவே  போன ஸ்டைல் இதெல்லாம் எப்படிப்பட்ட க்ரைசிஸ்லயும் கொஞ்சம் நின்னு நிதானிச்சுக்க தேவையான மெச்சூரிட்டிய கொஞ்சம் தாமதமாவாச்சும் கொடுத்தது

5.  தமிழ் நாட்ல எந்த அம்மாவாவது பிரதி வெள்ளிக்கிழமையும், நல்ல நாட்களிலும் அறிஞர் அண்ணாவோட படத்துக்கு தீபாராதனை காட்டி அண்ணா என் பிள்ளைங்க  உங்களை   மாதிரி அறிவில் சிறக்க ஆசீர்வாதம் பண்ணுங்கனு வேண்டியிருக்காங்களா? எங்கம்மா அப்படி வேண்டிக்கிட்டாங்க.
அண்ணாவோட அப்பா முருகனுக்கு பண்ண தேனாபிஷேகம் அண்ணாவுக்கு தேனினும் இனிய சொல்லாற்றலை தந்தாற்போல எங்கம்மா அறிஞர் அண்ணாவுக்கு செய்த பூஜை அண்ணா அளவுக்கு இல்லன்னாலும் அவரை தமிழ் சினிமா க்ளைமாக்ஸில் தங்கச்சி கேரக்டர் மாதிரி "அண்ணா ஆஆஆஆஆஆ "ன்னு கூவினா
அவருக்கு கேட்கிற உயரத்துக்காவது கொண்டு போகும்ங்கற நம்பிக்கை எனக்கிருக்கு.

6..கொஞ்சம் அறிவியல்,உயிரியல், மனோதத்துவம்  கலந்த உண்மை ஒன்னும் இருக்கு. அது என்னன்னா என் ரெண்டு அண்ணன் மாருக்கு பிறகு பத்து வருஷம் கழிச்சி என் பெற்றோரின் நடுத்தர வயதில் பிறந்தவன் நான். (இப்ப எல்லாருக்கும் நடுத்தர வயதுலதான் கல்யாணமே நடக்குது. அது வேறு விஷயம்) .

ஆணுக்கும், பெண்ணுக்கும் நடுத்தர வயசுல புதுசா என்ன கிடைச்சுர போவுதுனு நீங்க கேட்கலாம். என் பதில் மெச்யூரிட்டி.  கல்யாணமான புதுசுல உடல் தொடர்பான வேட்கை பிரதானமா இருக்கும். போக போக அது குறைஞ்சு உண்மையான இணக்கம் ஏற்படும். தொடர்ந்த,குற்ற உணர்வற்ற, ஆத்திரம்,அவசரம், இனெக்யூரிட்டி இல்லாத  உடலுறவுகளால் அவிகளால உடலுறவின் ஆழத்துக்கு போக முடியுது. மேலும் அவிக சரீர தர்மங்கள் ( உஷ்ண த்ரேகம், சீதள த்ரேகம்) சமப்படுகின்றன. இப்படி மனம், உடல் ரெண்டுமே ஒரு நிதானத்துக்கு வர்ர காலத்துல பிறக்கிற பிள்ளைகளுக்கு ஐக்யூ அதிகமா இருக்கும்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க.அவிக உடலுறவுக ஆன்ம கலப்பு ஏற்படும்னு ஞானிகள் சொல்றாய்ங்க. இன்னும் நிறைய விஷயம் இருக்கு. இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம். ஆக பெற்றோருக்கு அவிக நடுத்தர வயசுல பிறந்ததும் நவகிரக பிடியிலிருந்து விடுதலை பெற எனக்கு உதவுச்சுனு சொல்ல விரும்பறேன்.

மேலும் கமலோட அப்பா மாதிரி என் அப்பாவும் குழந்தை பிறப்பு விஷயத்துல ஏதேனும் ஆராய்ச்சி பண்ணாரான்னும் ஒரு சம்சயம் உண்டு.ஏண்டான்னா அவர் தன் லைப்ரரில சேர்த்து வச்சிருந்த புக்ஸ்ல இந்த மாதிரி சமாசாரங்க நிறைய இருந்தது. நாள் நட்சத்திரம் பார்த்து ஜோசிய கணக்கு ஏதாச்சும் போட்டு  கசமுசா பண்ணாரானும் ஒரு டவுட்.

இந்த இடத்துல ஒரு விஷயத்தை ( அசம்பந்தமா இருந்தாலும்) சொல்லிர்ரன். கொய்யா மரத்துல கொய்யா தான் காய்க்கும். அது மாதிரி பெற்றோர் ஜாதகத்துல உள்ள அம்சங்களை கொண்டுதான் பிள்ளைகள் பிறக்குது. ஆனால் அடுத்தடுத்து குழந்தைகள் பிறக்கும்போது பெற்றோர் ஜாதகத்துல யோகங்கள் இருந்தா குழந்தைக்கு குழந்தை குறைஞ்சிக்கிட்டே வருது. ஆனால்  தோஷங்கள் மட்டும் அதிகரிச்சிட்டே போய் மூனாவது நாலாவது குழந்தைலருந்து குறைய ஆரம்பிக்குது. சில கேஸ்ல படக்குனு ஒரு குழந்தைக்கு கேப் விட்டு அடுத்த குழந்தைக்கு கடுமையான தோஷமும் ஏற்பட்டுருது. 

இதுக்கெல்லாம் ஏதோ ஒரு விதி இருக்கு. அதை என்னனு கண்டு பிடிக்கனும்னா ஒரு மெகா சர்வேக்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒத்துழைக்கனும்.  குத்தாட்டங்களை ஸ்பான்சர் பண்ற தர்மாத்மாக்கள் இதை ஸ்பான்சர் செய்ய முன்வரனும். எப்படியோ இந்த வகையிலும் எனக்கு உதவி கிடைச்சது.

7. பிதுர்கள்:
பிதுர்கள்னா உங்க மூதாதையர்கள்னு அர்த்தம். வெறுமனே உங்க  மூதாதையர்கள் மட்டுமில்லே. ஒட்டு மொத்த ஆவி உலகமே உங்க ஆட்டத்தை கவனிக்குது.  கொய்யா மரத்துல கொய்யா தான் காய்க்கும்ங்கற பழமொழிய ஜஸ்ட் உங்க பேரண்ட்ஸை வச்சி மட்டும் சொன்னேன்.. வம்ச விருட்சம்னா என்ன தெரியுமா ?
பாபர்,ஹுமயூன்,அக்பர்,ஜஹங்கீர்,ஷாஜஹான்,ஔரங்கசீப்னு வமிசாவழி சொல்றோமில்லை. அதான் வமிச வ்ருட்சம். வசதி வாய்ப்பிருந்தா ஒரு வம்சத்தை மட்டும் எடுத்துக்கிட்டு ஒரு பதினாலு தலைமுறைக்கு அவிக விவரங்கள்,வாழ்க்கை முறையை ஆராய்ச்சி பண்ணா ஒரு ஆச்சரியகரமான உண்மை வெளிப்படும். அது என்னன்னா .... ஒவ்வொரு வம்சத்துலயும் ஒரு சில தலைமுறைகளுக்கு பிறகு அதே ஆட்கள் பிறந்து வராங்க.

சின்ன வயசுல என் தம்பியோட இடது கை வழக்கத்தை வச்சு எல்லாம் எங்க தாத்தா மாதிரினு முடிவு பண்ணாங்க.ஆனால் லாங் ரன்ல பார்க்கும் போது என் தாத்தாவோட பல குணங்கள் என் கிட்டே வெளிப்பட்டுது. அவர் பேரு முனிசாமி. என் பேரு முருகன் (ஒரே நட்சத்திரம்), அவரும் எந்த வேலையையும் 6 மாசத்துக்கு மேல செய்யமாட்டார். ( என்னோட ஹையஸ்ட் ரிக்கார்ட் தினத்தந்தி 2007 ஏப்ரல் கடைசி வாரத்தல இருந்து 2009 ஏப்ரல் கடைசி வாரம் வரை). ஜோசியத்துல பிரவேசம் உண்டு.

ஆவியுலகத்தை பொருத்தவரை உங்களுக்கு ஒரு சின்ன விஷயத்தை சொல்லி இந்த பதிவை முடிக்கிறேன்.

உலகத்துல உள்ள அத்தனை குடும்பங்களோட கதையையும் எடுத்து பார்த்தா பாதி குடும்பங்கள்  ஏதோ ஒரு 10 வழில உருப்பட்டிருக்கு. அதே மாதிரி பாதி குடும்பங்கள் ஏதோ ஒரு 10 வழில நாசமா போயிருக்கு.

உருப்படவும் புதுவழி இல்லே. நாசமா போகவும் புதுவழி இல்லே. இது எப்படி சாத்தியம்னு நீங்க கேட்கலாம். இந்த உலகத்தை ஒரு ஸ்போர்ட்ஸ் ட்ரெயினிங் சென்டரா நினச்சுக்கங்க. எல்லாரும் ஏதோ ஒரு ஆட்டத்தை ஆடிக்கிட்டிருக்கோம். கேலரியெல்ல்லாம் ஆவி கூட்டம் உட்கார்ந்து எஞ்சாய் பண்ணிக்கிட்டிருக்கு. அவிக எல்லாம் வெறும் பார்வையாளர்கள் மட்டுமில்லே முன்னாள் ஆட்டக்காரர்கள். வெறுமனே பாப் கார்ன் தின்னுட்டு,கோக் சாப்பிட்டுட்டு போக முடியாதுல்லயா?
அதுனால அவிக தங்களுக்கு பிடிச்ச ஆட்டத்தை , (ஒரு காலத்துல தாங்கள் விளையாடின ஆட்டத்தை ஆடற தங்களுக்கு பிடிச்ச ஆட்டக்காரன் கூட ட்ரெயினியா வந்து சேர்ந்துக்கறாங்க. வெறுமனே கம்பெனிக்காக குடிக்க ஆரம்பிச்சவன் கேவலம் ஒரு குவார்ட்டருக்காக சொந்த தங்கச்சிய/பெண்டாட்டிய கூட்டி கொடுக்கிற ஸ்டேஜுக்கு வரான்னா அவன் பின்னாடி ஒரு குடிச்சே செத்த  ஆவி வந்து சேர்ந்துக்குச்சுனு அர்த்தம் இது  ஒரு வ்யூ.


இன்னொரு வ்யூல பாருங்க. இந்த உலக மனிதர்களோட வாழ்க்கை கதைகளையெல்லாம் தொகுத்து கம்ப்யூட்டரைஸ் பண்ணி பார்த்தா மொத்தம் ஒரு
100 ஸ்க்ரீன் ப்ளே கிடைச்சா அதிகம். நாமெல்லாரும் என்ன நினைக்கிறோம்னா கடவுள் என் தலைல மட்டும் இந்த வாழ்க்கைய ஸ்பெசலா இப்படி எழுதிட்டானு நினைக்கிறோம் .அது தப்பு. இத்தீனி பேருக்கு தனி தனியே எழுதனும்னா ஆயிரம் கை இருந்தாலும் கஷ்டம் தான். அதனால கடவுள் என்னா பண்ணாருன்னா ஒரு நூறு ஒன்லைனை ஆஃப்செட்ல ப்ரிண்ட் பண்ணிட்டு காட்சி காட்சியா கட் பண்ணி கலந்து விட்டுட்டார். கைக்கு கிடைச்சத தூக்கி ஒட்டியனுப்பிர்ரார்.

நாமெல்லாரும் யார்,யாருக்காகவோ கடவுளால் எழுதப்பட்ட ஸ்க்ரீன் ப்ளேவோட துண்டு துணுக்குகள்ள நடிச்சிக்கிட்டிருக்கோம்.அசிங்கமாயில்லே.

இந்த உலக வாழ்க்கைல ஒன்னே ஒன்னுதான் முக்கியம் அது எண்ணம். அந்த எண்ணம் பிறப்பது ஆகாய வெளில மிதந்துகிட்டிருக்கிற  நம் முன்னோரின் எண்ண லைகள்ள இருந்துதான். அந்த எண்ண அலைகள்ள நல்ல எண்ணங்களும் இருக்கு. கெட்ட எண்ணங்களும் இருக்கு.  நாம எதை ஏத்துக்கறதுங்கற விஷயத்துல நமக்கு பூரண, சம்பூரண உரிமை இருக்கு.

அந்த எண்ணம்தான் நம்ம வாழ்க்கைய  நிர்ணயிக்குது, நம் உணர்வுகளை பல்வேறு நாளமில்லா சுரப்பிகள் சுரந்து வெளியிட்டு ரத்தத்தில் கலக்கச்செய்யும் ரசாயனங்கள் தான் கண்ட் ரோல் பண்ணுதுங்கறாய்ங்க. மேற்படி நாளமில்லா சுரப்பிகளையெல்லாம் கண்ட் ரோல் பண்ற கிங் ஆஃப் க்ளாண்ட்ஸ் ஹைப்போதலாமஸை கண்ட் ரோல் பண்றது எது தெரியுமா ? நம் எண்ணங்கள்.

அதனாலதான்

லுக் அப் எய்ம் ஹை - எண்ணம் போல் மனம், மனம் போல் வாழ்வு - உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - ஃபைண்ட் எ வில் தி வில் ஃபைண்ட்ஸ் தி வே

இப்படி எத்தனையோ விஷயங்களை பெரியவுக சொல்லி வச்சிருக்காக. 

ஹ்ய்மன் லைஃபோட  போக்கை  டிசைட் பண்றது எண்ணம். அந்த எண்ணங்களும் ஏற்கெனவே வாழ்ந்து முடிஞ்ச நம்ம முன்னோருடையது. அதை செயல்படுத்த பின்னணிலருந்து உதவறதும் அவிக ஆத்மாக்களே.

நவ கிரக பிடியிலிருந்து விலகனும்னா நல்ல ஆத்மாக்கள் உங்களை சூழனும். அவிக வரணும்னா உங்கள்ள   நல்ல எண்ணம் இருக்கனும். அதை செயல்படுத்தனுங்கற துடிப்பு இருக்கனும். அந்த நல்ல எண்ணம் அண்டை வெளிலருந்துதான் கிடைக்கனும். கூடவே தீய எண்ணங்களும் அங்கே மிதந்து கிட்டுதான் இருக்கு. அந்த தீய எண்ணங்கள் நுழைஞ்சிரகூடாது. அதே சமயம் நல்ல எண்ணங்கள் நுழையனும்.

இதுக்கு என்ன பண்றது?

உங்க மைண்டை ட்யூன் பண்ணிக்கனும். ஆல் இண்டியா ரேடியோல கர்னாடக சங்கீதம்ன வுடனே படக்குனு   ஸ்டேஷன் மாத்திர்ரமில்லே அது மாதிரி தீய எண்ணங்கள் நுழைய ஆரம்பிக்கறச்ச படக்குனு ஸ்டேஷன் மாத்திரனும், முடியலையா நீங்களே  இடம் மாறனும். பாதி ராத்திரி சமயம் போலீஸ் டவுட் கேஸ்ல புடிச்சிருவானு பயமா ? படக்குனு ஒரு குளியல் போடுங்க. தண்ணி பஞ்சமா
உள்ளங்கைல கொஞ்சம் தண்ணிய எடுத்துக்கிட்டு கங்கா,காவேரி,சிந்து,பிரம்ம புத்ரான்னிட்டு தலைல தெளிச்சுக்கோங்க. பஸ்கி எடுங்க. என்ன வேணம்னா பண்ணுங்க. அந்த எண்ணத்தை மட்டும் நுழைய விடாதிங்க.

பி.கு:
கடந்த பதிவை படிச்சுட்டு ஒரு பார்ட்டி செரிக்காதவன் எடுத்த வாந்தி மாதிரி இருக்குனு மறுமொழி போட்டிருந்தாரு. எனக்கே தெரியுது இது ஃபார்ம்ல இல்லேன்னு.

ஆனா என்ன செய்ய இதெல்லாம் வைரமுத்து மாதிரி கார்ல, ஃப்ளாஸ்க்ல காஃபியோட பெரியார் பூங்காவுக்கு போய் எழுதுன காலணா சினிமா பாட்டு இல்லே.

இயற்கைங்கறதே முரண்பாடுகளின் மொத்த உருவம். எந்த ஒரு பாயிண்ட் ஆஃப் வ்யூவையும் விடக்கூடாதுங்கற அக்கறைல ஃபார்ம் பத்தி கவலைப்படாம, என் ஈகோவுக்கு என்ட்ரி குடுக்காம   மனம் போன போக்குல எழுதிக்கிட்டு போறேன். ஏன்னா சமுதாயம் மோல்ட் பண்ண ஈகோவை விட இதனால டச் பண்ண முடியாத சப் கான்ஷியஸ் மைண்டுக்கு இயற்கையோட நல்ல ஒத்திசைவு இருக்கு. அதுக்கு ஃபார்ம், வே ஆஃப் ப்ரசண்டேஷன்லாம் தெரியாது. அதனால தான் இந்த அளவுக்கு தேவரகசியங்களை கூட அசால்ட்டா டச் பண்ணமுடியுது..ஓகே உடு ஜூட்.