Thursday, September 30, 2010

ஆண்களுக்கு எஜாகுலேட்டர்

அண்ணே வணக்கம்ணே,
இந்த வில்லங்க பதிவோட சாட் வித் சாமுண்டினு ஒரு நக்கல் பதிவும் போட்டிருக்கேன்.படிச்சு பாருங்க. மெம்பரா சேருங்க. உங்க நண்பர்களையும் சேரச்சொல்லுங்க

குழந்தையும் தெய்வமும் ஒன்னுன்னு சொன்னது ஏன் தெரியுமா? சனங்க இன்னா கொடுமை பண்ணாலும் ரெண்டாலயும் வாய் திறந்து சொல்ல முடியாதே ! "பெரியவுக சொல்றத கேளு"ன்னு சொல்லாத கேனத்தனமான அப்பன் ஆயி உலகத்துலயே கிடையாது.

தாளி நீ பார்த்த உலகம் வேற. அந்த குழந்தை பார்க்கப்போற உலகம் வேற. உன் மலரும் நினைவுகள் தெண்டத்துக்கு அந்த புது டிஸ்கை அடைச்சுக்கத்தான் செய்யும்.

நீ ஜஸ்ட் முன் கதை சுருக்கத்தை மட்டும் சொல்லு. பாப்பா கன்டின்யூ பண்ணிக்கும். நீ லட்சம் தடவை ஃபார்மெட் அடிச்ச டிஸ்க். பாப்பாவுது புத்தம் புது டிஸ்க்.  உன் மாடலே அவுட் டேட்டட். பாப்பா லேட்டஸ்ட் மாடல்.

அது உன்னை பார்த்து தெரிஞ்சிக்க ஒரு ம..ருமில்லை.  ஆனா நீ அதைப்பார்த்து தெரிஞ்சிக்க ஆயிரம் இருக்கு. தியானம் யோகம்னு அல்லாடுதே உலகம் . அதனோட லட்சியம் என்ன தெரியுமா? மீண்டும் குழந்தையா மாறுவதுதான்.

நீ என்னவா மாறனும்னு தவிக்கிறயே அதுவாவே அந்த பாப்பா இருக்கு.  ஆனா நீ என்ன பண்றே ஜஸ்ட் அது உன் தயவை எதிர்பார்க்கிற நிலையில இருக்கிற ஒரே காரணத்தால அதை இம்சை பண்ணி "இந்த இம்சையிலருந்து தப்பிக்கனும்னா அப்பனை காப்பியடிக்கிறதுதான் ஒரே வழி" ங்கற முடிவுக்கு அந்த உசுரை வர வச்சுர்ரே.

நீயே கரப்ப்டட் டாக்குமெண்ட். உன்னை காப்பி பண்ணி என்னத்த பிடுங்க.  அதுக்குள்ள சக்தி ஊறுது. பீச்சியடிக்குது. அதுக்கு பாயற வயசு. உன்னுது ஓயற வயசு. நீ தோத்த கேஸு. நீ இன்டர்ஃபியர் ஆகாம இருந்தா அது தூள் கிளப்ப போற கேசு.

(இதெல்லாம் நானு எனக்கே சொல்லிக்கிற  உபதேசம் பாஸ்.. உங்களுக்கு பிடிச்சா நீங்களும் உபதேசிச்சுக்கோங்க)

பெரியவுக குழந்தைத்தனமா பிஹேவ் பண்றதுனால, இதனோட இம்பாக்ட் சமுதாயத்து மேல  ரெம்ப ஓவரா இருக்கிறதால இந்த கிழவாடிகளை கிழிக்கவே நேரம் சரியா போவுது.

 குழந்தைகளை பத்தி ரோசிக்கவோ எழுதவோ நேரமில்லாம போயிருச்சுங்கண்ணா. ஒரு மைனாரிட்டி ,ஒரு தலித்,ஒரு பெண்ணுக்கு ஏதாச்சும் கொடுமை நடந்தா சமுதாயத்துல ஒரு பிரிவாச்சும் கத்துது,கலாட்டா பண்ணுது. ஆனா குழந்தைகளுக்கு கொடுமை நடந்தா - முக்கியமா ஸ்கூல்ல நடந்தா அந்த அளவுக்கு நடக்கிறதில்லை.ஏன்னு எப்பயாச்சும் ரோசிச்சிங்களா? குழந்தைங்க மேட்டர்ல நாம எல்லாருமே திருடங்கதான். குழந்தைகளை கொடுமைப்படுத்தறதுல அப்படி ஒரு ஒத்துமை.

இதுல பார்ப்பானும் அப்படியே இருக்கான். சூத்திரனும் அப்படியே இருக்கான். இந்து,முஸ்லீம்,ஆண்,பெண் எல்லா க்ரூப்பும் இப்படியே இழவெடுக்குது. குழந்தைன்னா அப்பனை பொருத்தவரை அவனோட ஆண்மைக்கு ஒரு சர்ட்டிஃபிகேட்.  ஆத்தாக்காரிக்கு அவள் மலடியில்லேனு சமுதாயத்துக்கு அறிவிக்கிற ஃப்ளெக்ஸ் போர்ட்.

இந்த லெவல்லயே ரோசிச்சாலும் பரவாயில்லை.வெள்ளை காகிதம் கிடைச்ச மன நோய் காரன் மாதிரி  அந்த குழந்தையோட மனசுங்கற வெள்ளை காகிதத்துல இஷ்டாத்துக்கு கிறுக்க ஆரம்பிச்சுர்ரம்.

சைக்கிரியாட்ரிஸ்டுகளுக்கு ஒரு வேண்டுகோள். பேஷண்டுக கையில காகிதம் கொடுத்து கண்டதையும் கிறுக்க சொல்லி அல்லது சில விசேஷமான ஓவியங்களை கொடுத்து பேஷண்ட் மனசுல உள்ள முடிச்சுகளை அவிழ்க்க பார்ப்பீகளாம்.

இதைவிட பேஷண்டோட குழந்தைய கூப்டு வச்சு 15 நிமிஷம் பேசினா போதும் அதனோட பேரண்ட்ஸோட  மன நோய் எந்த அளவுல இருக்குன்னு கரீட்டா கணக்கு பண்ணீரலாம்.

குழந்தைங்க விஷயத்துல கெட்டவுகளே பெட்டர் கண்டுக்கிடாம விட்டுர்ராய்ங்க. அதுக பாட்டுக்கு அட்லீஸ்ட் சுதந்திரத்தையாவது அனுபவிச்சு வளருதுங்க.  சமூகத்துல நல்லவுகளா பேரெடுத்திருக்கிற  பெற்றோர்கள் கிட்டே மாட்டின குழந்தைகள் தான் நாறிப்போகுது.

ஓஷோ சூப்பரா சொல்வாரு " நீ ஒரு வாசல்.. குழந்தைகள் உன் வழியே வந்தாய்ங்க. தட்ஸால். வாசலுக்கு எப்படி விசிட்டர்ஸ் மேல ரைட் இருக்காதோ.. அதே மாதிரி உன் குழந்தைகள் மேல உனக்கு ரைட் கிடையாது"

ஐ.நா சபை குழந்தைகளின் உரிமைகளுக்காக ஒரு ஒப்பந்தத்தை தயாரிச்சது.( ஐ.நா ங்கறது திண்ணைல உட்கார்ந்து லொக் லொக்னு இருமிக்கிட்டிருக்கிற தாத்தா மாதிரி .எதை எதையோ புலம்பிக்கிட்டிருக்கும். மத்த நாடுகளோட அதிபர்கள் எல்லாம் யூத் மாதிரி கண்டுக்கிடாம போய் கிட்டே இருப்பாய்ங்க.

இந்த கு.உ. பத்தின ஒப்பந்தத்தோட கதியும் இதான். மொத்தம் 23  நாடுகள் கையெழுத்து போட்டிருக்கு. 26 நாடுகள் அதற்கான முயற்சியில இருக்கு. 23+26 ஐ சேர்த்தாலும் இது ஐ.நா உறுப்பு நாடுகளோட எண்ணிக்கையில 25 சதவீதம் கூட கிடையாதாம். நம்ம "பாருக்குள்ளே நல்ல நாடு " 1992ல இந்த ஒப்பந்தத்துல கை.எ போட்டது.

ப்ளான் இன்டர் நேஷ்னல்ங்கற தன்னார்வ தொண்டு  நிறுவனம் செய்த சர்வேல 69 சதவீதம் குழந்தைகள் கொடுமைக்காளாறதாவும், இதுல 62 சதவீத கொடுமை பள்ளிகள்ள நடக்கிறதாவும் தெரிய வந்திருக்கு.

கல்விக்கண் திறக்கறோம்னுட்டு குழந்தைங்க கண்ணை பறிச்ச சம்பவம்லாம் கூட நடந்திருக்கு. ஏன் இப்படி நடக்குது? நம்ம கல்வி முறை அப்படி..  இன்டர்னெட்ல  ஒரு க்ளிக்ல கொட்டக்கூடிய தகவலை ஒரு மாசம் மனப்பாடம் பண்ணனும்.  இதுல ஷூஸ்,டை,யூனிஃபார்ம், 25 கிலோ எடைக்கு புஸ்தவ பை, லேப்,லைப்ரரின்னு வெத்து பந்தா வேற . இதெல்லாம் யாருக்கு? அம்மாவோட மடிய விட்டு அப்பத்தான் இறங்கி இந்த பாடாவதி சமூகத்துல அடி வச்ச குழந்தைக்கு. அடங்கொய்யால..

நாட்ல இன்னா முன்னேற்றம் வந்தாலும் அது பெண்களுக்கே ஆப்பா முடியறாப்ல.. அதே முன்னேற்றங்கள் குழந்தைகளுக்கு வேட்டாவே முடியுது. உ.ம் முந்தா நேத்து வந்த கம்ப்யூட்டர்.

இதுல ஒரு கொடுமையென்னடான்னா கொடுமைகள்,சுரண்டலை பொருத்தவரை சமூகத்துல உண்மையான தலித் பெண் தான்னு நான் சொல்றது வழக்கம். ஆனால் தலித்துகள்ளயே ஒரு உட்பிரிவை சேர்ந்தவுகளை இன்னொரு உட்பிரிவுகாரவுக கொடுமை பண்றாப்ல பெண்களும் குழந்தைகள் கொடுமைப்படுத்தறதுதான் சோகம்.


ஒரு குழந்தைய அஷ்டாவதானியாக்கினாலும் பரவால்லை. இதுக்கே ப்ரஷர் தாங்காம அதனோட பூப்போல மனசு வாடி வதங்கி போயிருது. கான்வென்ட் குழந்தைங்க வீட்டுப்பாடம் எழுதறச்ச பாருங்க. அடுத்தமாசம் ரிட்டையர் ஆகப்போற கிழவாடி கூட அந்த அளவுக்கு சீரியஸா ஃபைல் பார்க்கமாட்டான். அஷ்டாவதானத்துக்கே இந்த கதி இதுல தசாவதானம், சதாவதானம்னு அதுக தாலியை அறுத்துட்டு எங்கன அனுப்பறாய்ங்க?

டெப்ரஷன், ஹைபர் டென்ஷனுன்னுட்டு சைக்கிரியாட்ரிஸ்டு கிட்டே அனுப்பறாய்ங்க. இல்லைன்னா அல்சர், ரத்த சோகை ,ஷுகர்னுட்டு டாக்டர் கிட்டே அனுப்பறாய்ங்க. தேவையாய்யா இது.

மெகாலே பிரபு வடிவமைச்ச இந்த பாடாவதி கல்வியை அந்த இளம் மனசுக்குள்ள திணிக்க அதனோட சுதந்திரத்துக்கும், உள்ளார்ந்த வளர்ச்சிக்கும் ஆப்பு வைக்க எத்தீனி மாஃபியா செயல்படுது தெரியுமா? ரிக்ஷா காரன்,ஆட்டோக்காரன்,ஸ்கூல் வேன் ட்ரைவர் ,ஸ்கூல் ஆயா, டீச்சர்,ஹெட் மிஸ்ட்ரஸ், கரெஸ்பாண்டென்ட், அரசு கல்வித்துறை அதிகாரிகள் அப்பப்பா ஒன்னா ரெண்டா?

நம்ம சமுதாயத்துல செக்ஸுங்கறது ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருக்கு. உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் வெறியோட மனித வெடிகுண்டை விட மோசமான நிலைல ஆண் பெண்கள் இங்கன வாழறாய்ங்க. மனித வெடிகுண்டுக்காச்சும் அதை எப்ப வெடிக்க வைக்கிறதுங்கற சாய்ஸ் இருக்கும் .ஆனா இந்த பன்னாடைகளுக்கும் அதுவும் கிடையாது. எப்ப வெடிப்பாய்ங்கனு ஆருக்கும் தெரியாது. இதுல கன்னியாஸ்த்ரீகள், அவிகளுக்கு டூப்ளிக்கேட்டா இந்து மதத்துல முளைச்சிருக்கிற மடங்களோட பெண் நிர்வாகிகள், முதிர் கன்னி டீச்சர்ஸ், அன் மேரீட் மேல் டீச்சர்ஸ், டிவோர்ஸ் வாங்கினவன், பெண்டாட்டிய பிரிஞ்சு வாழறவன் ஒன்னா ரெண்டா?

என்னை கேட்டா at least .. குழந்தைகளை டீல் பண்ற ஆண் பெண்களுக்கு மட்டுமாச்சும் பெண்களுக்கு வைபரேட்டர்ஸும், ஆண்களுக்கு எஜாகுலேட்டர்ஸும் கொடுத்துரனும். எஜாகுலேட்டர்னா தெரியுமில்லை யானைகள் கிட்டேருந்து விந்துவை சேகரிக்க பயன்படுத்தற இயந்திரம்

மேரிடா இருந்தா அவன் ஒழுங்கா குடித்தனம் பண்றானா அவனோட செக்ஸ் லைஃப் நார்மலா இருக்கானு கன்ஃபர்ம் பண்ணிக்கனும். இதையெல்லாம் பண்ணாம ஒரு மாணவனோ மாணவியோ தற்கொலை பண்ணிக்கிட்டா அ கொலையாகிட்டா, அல்லது கண்,கால்,கை இழந்தா மட்டும் கொடுமை கொடுமைனு கோஷம் போடறது கயவாளித்தனம்.

நம்ம குழந்தைகளை மனித வெடிகுண்டுகளை விட மோசமான நிலையில உள்ள மனிதர்கள் கிட்டே ஒப்படைச்சிட்டு "எல்லாம் யாருக்காக.. குழந்தைகளுக்காக
த்தானேன்னு வசன்ம் விடறது வடிகட்டின பேமானித்தனம்.

பஞ்ச்:
கல்வி உரிமைச்சட்டம்னு ஒன்னு கொண்டு வந்தாய்ங்களே (2009) அதுல செக்சன் 17 குழந்தைகள் உடல்,உள்ள ரீதியில் கொடுமைப்படுத்தப்பட கூடாதுன்னு சொல்லுது. ஒரு வேளை கொடுமைப்படுத்தப்பட்டா அதுக்கு காரணமானவுக மேல துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படனுமாம்.

எப்படியோ  துறை ரீதியிலான நடவடிக்கைன்னா என்ன? இன் க்ரிமெண்ட் கட் பண்றது, ஒரு வாரம் சஸ்பெண்ட், ஒரு வார சம்பளம் கட்டு. ரேரஸ்ட் ஆஃப் தி ரேர் பொசிஷன்ல ரிமூவல் ஃப்ரம் சர்வீஸ்.

செருப்பாலடிங்க:
எந்த பன்னாடையாச்சும் அஞ்சுல வளையாதது ஐம்பதில் வளையாது, அடியாத மாடு படியாது,  அடி உதவறாப்ல அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் மாதிரி வசனங்களை விட்டா செருப்பாலடிங்க.

கொடுமைக்காளாகிறவன் மசாக்கிஸ்டா மாறுவான். அவன் கைக்கு அதிகாரம் கிடைச்சா சாடிஸ்டா மாறுவான். சாடிசம்,மசாக்கிசம் ரெண்டுமே மனோ வியாதிதான்.

எப்படியோ  இன்றைய  ஆட்சியாளர்கள் தான் மன நோயாளிகளா கிடக்காய்ங்க .. நாளைக்காச்சும் ஒரு மன நோயாளிகளா இல்லாதவுக ஆட்சி பண்ணட்டும்யா.. தூத்தேறிக்க..