Wednesday, May 26, 2010

குட்டிகளை மடக்க டிப்

யாரை நம்பி நான் பிறந்தேன்

அந்த காலத்து தமிழ் படங்களுக்கு வச்சது மாதிரி பதிவுகளுக்கு கூட 2 தலைப்பு வைக்கிற வசதியிருந்தா இந்த பதிவுக்கு எதிர்வினைகள் மீதான எதிர்வினைனு ரெண்டாவது தலைப்பு வச்சிருக்கலாம்.

நுள்ளானென்ற பார்ட்டி வெட்டித்தனமா எழுதி பொன்னான நேரத்தை வீணாக்கிறதா குற்றம் சாட்டி தண்டனை கூட இருக்கும்னு டகுலு காட்டறார். என்ன பண்ணுவிக ஜன்ய பாகத்தை க்ளோசப் ஷாட்ல வச்சி இந்த லின்கை  க்ளிக் பண்ணும்பிங்க. அது மர்ம ஸ்தானம் மட்டும் இல்லே கண்ணா நம்ம ஜன்மஸ்தானம்.(பொன்னான நேரத்தை லலிதா ஜுவெல்லர்ஸ்ல எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்குவாங்களா) கேட்டுப்பாருங்கண்ணா. உங்களை மாதிரி பார்ட்டிங்களை ஸ்பெஷலா  நான் வெ.பா. வச்சி கூப்டேனா? வந்தால் வரவில் போனால் செலவில். ரெம்ப அலட்டிக்காத நைனா


ஸ்வாமிங்கறவரு  மரணங்கறது இயற்கை தானே. அதை ஏன் தள்ளிப்போடனும்னு அயனான கேள்வி கேட்டிருக்கார்.  அதுக்கான பதில்:

ஸ்வாமி  அவர்களே!
 மனிதன் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்திருந்தால் மரணமும் மிக இயல்பாக நாடகத்தின் கடைசி  காட்சி போல  இயல்பாக அரங்கேறும். ஆனால் மனிதன் ஜஸ்ட் தன்னோட ஈகோ காரணமா இயற்கை மேல போர் தொடுத்துட்டான். இதனால் மரணம் எந்த கணமாகிலும் என்ட்ரி கொடுக்கிற கேரக்டர் மாதிரி ஆயிருச்சு. இயற்கையோட இருந்த செயின் லின்க் அறுந்து போனவுக வாழ நினைக்கும்போது செத்து ப்போயிர்ராய்ங்க. அவிகளுக்காக தான் அந்த டிப்ஸ். வாழ்க்கை கையில் தம்மை ஒப்படைச்சுட்டு இயற்கையோட இயைந்து வாழற மனிதனுக்கு மரணமே ஒரு வரமாயிரும்.

ஸ்மார்டு சொல்றாரு:
//உங்க நடை நல்லா காமெடியாயிருக்கு//

ஒரு காலத்துல ஒரு பார்ட்டி நம்ம நடைய கூட உடையல் விட்டுது. ஃபார்வோர்டட் டு தட் பார்ட்டி. நன்றி ஸ்மார்ட் கண்ணா ,

//உங்க எதிரிகள் எல்லாம் புத்திசாலிகள்//
அப்படிங்கறிங்க.. எனக்கென்னமோ நம்பிக்கை இல்லை. பல பேரு கீதைய திட்டியிருக்கலாம். நான் ஒருத்தன் தான் அக்கக்கா பிரிச்சு துவைச்சு காயபோட்டுட்டேன்.இப்போ இருக்கிற ஜெனரேசனுக்கு   27 நட்சத்திரங்களோட பேரே வரிசையா தெரியாதுங்கண்ணா. இவிக தலைமுறை தலைமுறையா வந்த வித்தைய  தூக்கி குப்பைல போட்டுட்டு வந்தேறிங்க கிட்டயும், அன்னிய படையெடுப்பாளர்கள் கிட்டயும், அரசாங்கத்துக்கிட்டேயும் சரண்டர் ஆயிட்டாய்ங்க.  என்னோட தொடர் பதிவை விமர்சிக்கிற அளவு ஸ்டஃப் இவிகளுக்கு கிடையாது. ஸ்டஃப் இருக்கிறவனுக்கு நேரம் கிடையாது.

// அதான் துஷ்டனைக் கண்டு தூர விலகிவிட்டனர்.//
நான் துஷ்டனா இருந்திருந்தா கு.ப டி.எஸ்பி ஆஃபீஸ்லயாவது பேசி மிரட்ட வச்சிருப்பாய்ங்க. நாம தான் ஓப்பன் புக்கா இருக்கோமே. வெட்டறியா வெட்டுனு கட்டின பசுவா நிக்கறமே. வேணம்னா என்ல அந்த கிஷ்டன் காட்சி கொடுத்திருக்கலாம்.(பலான ஜோக்கும் போட்டோம், செக்ஸ்கல்வியும் கொடுத்தோம், சமீபத்துல நவீன பகவத் கீதையையும் கொடுத்தோம்.  அய்யய்யோ இந்த ப்ரஷ்டன் மேல கிஷ்டன் ஆவாஹனம் ஆனாப்ல இருக்குடோய்னிட்டு சைட் ஆயிட்டிருப்பாங்க//

//நம்ம ப்ளாக் வந்து பண்ண ரவுசு மாதிரி ஏதாவது பண்ணிருப்பீங்க அதான் ஆப்படுச்சிட்டாரு நம்ம பாக்கியராஜ்.//

ஸ்மார்ட் அண்ணா, நான் இருந்தது சித்தூர். பாக்ய ராஜ் இருந்தது சென்னை. அதுவும் அப்போ அவரு டாப் டென்ல இருக்காரு. அவர்கிட்டே ரவுசு பண்றது ஆன மேல போறவன் கிட்ட சுண்ணாம்பு கேட்ட கதையாயிரும்னு தெரியாதா? ( காதுல விழாது). அவிக ஒரு ஃப்ரேம் கட்டிக்கிட்டு அதுக்குள்ள இயங்குனாங்க. நான் காட்டாறா கரை புரண்டு ஓடினேன். இதான் உண்மை. உங்க ப்ளாகுல வந்து அப்படி என்ன ரவுசு பண்ணேன். ( என் ரவுசு எப்படியிருக்கும்னு ஓம்கார்ஸ்வாமிகளை கேட்டுப்பாருங்க)

ஷிவா சார் அன்பின் மிகுதியால நான் உங்களை சொஸ்தப்படுத்தறேன் . ரிசல்ட் எப்படி இருக்குனு சொல்லுங்கனு கேட்டிருக்கார்.

நமக்கு வில் பவர் அதிகம். என்னை ஹிப்னடைஸ் பண்ண முடியாது. புது விஷயங்களை என் மூளை சீக்கிரமா ஏத்துக்கிடாது (வயசாகுதே) . ஷிவா சொல்ற ட்ரீட்மெண்ட் எல்லாம் பாதிக்கப்பட்டவரோ முழு ஒத்துழைப்பிருந்தாதான் ஒர்க் அவுட் ஆகும்.

எனக்கேதாச்சும் நன்மை செய்யனும்னு ஆத்தா முடிவு கட்டிட்டா இப்படி ஏதாச்சும் செய்து லந்து பண்ணுவா.( வருசத்துக்கு ஒன்னு/ இந்த கணக்கு கூட 1999ல இருந்து 10 வருஷம் கேப் ) அதை சகிச்சிக்கிட்டா அடுத்த காட்சி வந்துரும்.  நான் அதை டிஸ்டர்ப் பண்றதில்லை. முடிஞ்ச வரை சகிச்சுப்பேன். நமக்கு இந்த அல்லாப்பதி மெடிசினோட பேசிக் கொஞ்சம் தெரியும். அதனால கடைசி பட்சமாதான் மாத்திரை ஜோலிக்கே போவேன். ( ஊசி எட்ஸெட்ரால்லாம்  நை நை)

இந்த பிரச்சினைய கொடுத்தவ ஆத்தா. இதை வாபஸ் வாங்க வேண்டியவளும் அவதான். கேஸு சுப்ரீம் கோர்ட்ல இருக்கிறச்ச செஷன்ஸ் கோர்ட்டெல்லாம் வேலை செய்றதில்லை சார். உங்க அன்புக்கும், முயற்சிக்கும் நன்றி.நன்றி. நன்றி.


நான் கீதையிலான சில அம்சங்களை பின்பற்றுவதை உணர்வதாக  நண்பர் ...............சொல்லியிருந்தார். நான் பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி தொடரிலேயே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டா  (ஏக் மார் தோ துக்கடா) சொல்லியிருந்தேன். ஒட்டு மொத்தமாக கண்ணனையோ, கீதையையோ இல்லேங்கலை. விமர்சிக்கலை. அதிலான பார்ப்பன கலப்படங்களை மட்டும் அடையாளம் காட்டறேன்.இந்த கலப்படங்களை பொறுக்கி தூரப்போட்டுட்டு மிச்சமிருக்கிற  கீதை காட்டும் பாதையை ஃபாலோபண்றதுல தப்பில்லே. ஆனால் மேற்படி நண்பர் நீங்க என்னதான் வேஷம் கட்டி ஆடினாலும்  பெரியாரிஸ்டுகள் உங்களை ஆதரிக்கமாட்டாய்ங்க. அதனால இந்த பக்கம் வ் வந்துருங்கன்னிருக்கார்.

எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதை வரி (தெலுங்கு)

"எந்துக்கு ராஸ்தார்ரா கவித்வம் நிஷேதிஞ்சடானிகி அர்ஹத லேனி கவித்வம்"

இதற்கு அர்த்தம்:
ஏனடா எழுதுகிறீர்கள் கவிதை.. தடை செய்ய தகுதியற்ற கவிதை

நம்ம எழுத்தை ஏதோ ஒரு பிரிவு ஆதரிக்க முன் வருதுன்னா நாம அந்த பிரிவை சரியா விமர்சிக்கலை. எங்கயோ விட்டுக்கொடுத்துட்டம்னு அர்த்தம். நான் பெரியாரோட மனிதம் தோய்ந்த  நாத்திகவாதத்தை, பெண்ணுரிமை வாதத்தை, பிராமண எதிர்ப்பை ஆதரிக்கிறேனே தவிர அவர் குறித்தும் சில விமர்சங்கள் உண்டு. 

இன்னைக்கும் இனவாதம் தலைவிரித்தாடும் நாட்களில்  அதையெல்லாம்  லிஸ்ட் அவுட் பண்றது -  காட்டிக்கொடுக்கிறதாயிரும்.  குறிப்பாக  அவரை,அவர் பெயரை,  அவர் எழுத்தை  முதலீடாக வைத்து இதர கழகங்களை காட்டிலும் கமுக்கமாக பணம் குவிக்கும்  வீரமணி இத்யாதியினரை ஆதரித்ததே இல்லை. இன்னம் சொல்லப்போனா விமர்சித்தும் இருக்கேன்.

பெரியார் ஜீஸஸ் க்ரைஸ்டுன்னா இவிக எல்லாம் ஜஸ்ட் கிறிஸ்தவர்கள் அவ்ளதான். இவிகள்ள யாரும் பெரியார் ஆகமுடியாது.

(போச்சு போச்சு...... ஏதோ அதிகாலை டாட் காம்ல இருந்து புட்டபர்த்தியின் புருடாக்களை எடுத்து விடுதலைல வச்சாங்க. அந்த கதவும் க்ளோஸூ)

பெரியாரிஸ்டுகளின் ஆதரவை பெற விரும்புபவனாக இருந்தால் வேறு பெயர், வேறு மெயில் ஐடியுடன் ஜோதிடக் கடை விரித்திருக்கலாமே. பெரியாருக்கு கூட ஜாதகம் இருக்குங்க. யாராச்சும் அவரோட டைம் ஆஃப் பர்த் இருந்தா கொடுங்க. அவர் வாழ்க்கை அவர் ஜாதகப்படியேதான் நடந்ததுன்னு ப்ரூவ் பண்றேன்.

பகிரங்கமா செய்ய முடியாததை ரகசியமா  கூட செய்யாதேங்கறார் மகாத்மா காந்தி. முன்னொரு பதிவுல நான் முஸ்லீமாக மாறவும் தயங்க மாட்டேன் என்று எழுதியிருந்தேன். உடனே ஒரு அன்பர்"அது முடியாது.. அதுக்கு நீங்க ஜோசியத்தை விட்டுரனும்"னாரு.

இஸ்லாம் மீதான என் ஐயங்கள் தீர்ந்த பிறகு ஜோதிஷமாவது வெறொன்னாவது தலைமுழுக ரொம்ப நேரம் பிடிக்காது. ஆனால் நபி(சல்) அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை ராணில படிச்சேன். இவர் சந்தைக்கு போறச்ச யாரோ ஒருத்தர்  முதுகுல ஒரு மச்சமிருக்கானு செக் பண்ணி  பார்த்து இவரை ரொம்ப சாக்கிரதையா பார்த்துக்கங்க. யூதர்களால இவருக்கு ஆபத்துவரலாம்னு சொல்றாரு.

நாம நம்பறோம், நம்பலைங்கறதெல்லாம் கணக்கே இல்லே. அந்தந்த ஃபேக்டர்ஸோட இம்பாக்ட் நம்ம மேல இருந்துக்கிட்டே இருக்கும்.

பெரியாரிஸ்டுகளோட ஆதரவு எப்படியும் கிடைக்கபோறதில்லை. ஒரு யு டர்ன் அடிச்சு இந்த பக்கம் வந்துருனு மேற்படி அன்பர் சொல்றார்.

சிலரோட ஆதரவுக்காக ப்ளான் பண்ணி எழுதினா அவிக ஆதரவு கூட கிட்டாம போயிரலாம்.யாருடைய ஆதரவும் தேவையில்லேன்னு எழுதிக்கிட்டிருந்தா ஒரு நாளில்லை ஒரு நாள் எல்லாருமே " அடடே இவன் எந்த கல்மிஷமும் இல்லாம ஹிடன் அஜெண்டா எதுவும் இல்லாம ஸ்பாண்டேனியசா எழுதறான்பா"ன்னிட்டு ஆதரவு தர முன் வரலாம்.

உங்க லட்சியத்தை அடைய நீங்க செய்ற முயற்சியே நீங்க லட்சியத்தை சென்றடைய தடையா மாறிருது. நான் எல்லாம் லவ் பண்ற காலத்துல எல்லா குட்டிகளுக்கும் ஒரே ரேஞ்சு  தெரஃபி தான் கொடுப்பேன். சூப்பர் ஃபிகருங்க கண்ணாலம் கட்டிக்கிட்டு லண்டன், கோயமுத்தூர்னு போய் செட்டிலாயிட்டாலும் சப்பை ஃபிகருங்க இன்னைக்கும் நின்னு நலம் விசாரிச்சுட்டு தான் போகுது.  அவிக கழண்டுக்கிட்டதுக்கு வருத்தப்படறதுமில்லே. இவிக கண்டுக்கிடறதுக்கு சந்தோசப்படறதுமில்லை.

ஒரு குட்டியை மடக்கனும்னா " மடக்கனுங்கற  அந்த எண்ணத்தையே கழட்டி வச்சுரனும்" ரொட்டீனா டீல் பண்ணனும்.

அப்படி வெகுஜன ஆதரவு வேணம்னு நினைக்கிறவன் மனக் கணக்கு போட்டு வேலை செய்தான்னா மெட்டாஷாயிருவான்.

சாட்ல ஒரு பார்ட்டி குட்டிகளை மடக்கறதுக்கு எதுனா டிப்ஸ் கொடுக்க கூடாதான்னு கேட்டுது. இதோ இப்படி ஆரம்பிச்சிருக்கேன்.

பார்ப்போம்.   ஓகேவா உடுங்க  ஜூட்.

(இந்தில ஜூட் ன்னா பொய்னு அர்த்தம். நான் அம்பேலுக்கு எதிர்பதமா தான் ஜூட்டுன்னிருக்கேன். நோட் திஸ் பாயிண்ட் யுவரானர்.)