Friday, May 21, 2010

"அவாளுக்கு" ஒரு குட் நியூஸுங்கோ.

ஆமாங்கண்ணா பகவத்கீதை ஒரு உட்டாலக்கடிங்கற தொடர்பதிவுல கட்ட கடைசியா சில பத்தியை எழுதிட்டு இதுக்கு தலை முழுகிரலாம்னு முடிவு பண்ணிட்டேன்.



இந்த தொடர்பதிவு மூலமா நான் சொல்ல நினைச்ச சில விஷயங்கள்:



1.கண்ணன் உண்டு. கண்ணனின் குரல் அலைகள் அண்டை வெளியில் இன்னமும் மிதக்கிறது. தன்னில் தன்னை தள்ளி வைத்தவர்களின் காதில் இன்னமும் ஒலிக்கிறது. ஒரு தாய் வயிற்று மக்களாய் வந்த மக்களில் ஒரு பகுதியினரை தள்ளி வைத்தவர்களின் காதில் அல்ல.



(இன்றைய கீதையில் தொகுப்பாசிரியரின் இனவாதம், சாதி அகங்காரம் , சுய நலம் ,மடமைகள் சேர்ந்து அதை நாறடித்த மாதிரியே என் விளக்கங்களிலும் சில அல்லவை கலந்திருக்கலாம். ( ஆனால் இதை சொன்ன நான் வெறும் முருகேசன்ங்கறதால நல்லா விஜாரிச்சு விவாதிச்சு ஒரு முடிவெடுக்கலாம். ஆனால் கீதைய சொன்ன பார்ட்டி இது கிட்னன் சொன்னதுன்னு வல்லடி அடிச்சுருச்சே)



2.மதத்தோட மையத்துல நீ என்ற உச்சரிப்பு சேரனும். அது ம 'னி'தமா மாறனும். அப்பத்தான் அது மதம். இல்லேன்னா ஆனைக்கு பிடிக்கிற மதம். மனிதனுக்காகத்தான் மதமே தவிர மதத்துக்காக மனிதனில்லே. மனிதங்கறவன் ஒரு மிருகம். ஜஸ்ட் மனிதனா ஆக்டு கொடுக்கிறான். நடிப்பையே நிஜம்னு நம்பி அசால்ட்டா இருந்தா படக்குனு மனிதனுக்குள்ள இருக்கிற மிருகம் வெளிய வந்துரும். அதை அப்பப்போ உலவ விடனும். கழிவறைல, படுக்கையறைல, தனிமைல . அப்பத்தான் அது மறு நாள் வரை சமூக, நாகரீக சங்கிலிக்கு அடங்கி இருக்கும். அதை விட்டு நான் அடக்கி காட்டறேன், முடக்கி காட்றேன்னு இறங்கினா இவிக வேதம்,உபனிஷதம்,புராணம்,சமூகம் இத்யாதி போட்ட சங்கிலியெல்லாம் பராசக்தில கண்ணாம்பா வசனத்துக்கப்புறம் தெறிச்சு விழறாப்ல ஃபணாலாயிரும்.



உள்ளுக்குள்ள மிருகமா இருக்கிற மனிதனை அதை உணரச்செய்து , அந்த மிருகத்தனத்தை படிப்படியா இழக்கச்செய்து (லீகல் & மோரல் மெத்தட்ஸ்) மனிதனா மாத்தி மனிதனா தொடரச்செய்யனும், விட்டா தெய்வமா முன்னேற வைக்கனும் அதான் மதம். இந்த ஃப்ரேமுக்குள்ள அடங்காத எதையும் நான் மதமா ஏத்துக்க தயாராயில்லே.



ஓஷோ தான் சொல்வாரு ஒரு மனிதன் ஞானமடைந்த பிறகு தானா வந்து சேரக்கூடிய நற்குணங்கள் ஏற்கெனவே தமக்குள்ள இருக்கிறாப்ல வெறுமனே நடிக்கறது ஆபத்தானது. அதை தான் மதம் செய்யுது. இது ஏமாற்று வேலை, ஹிப்பாக்ரசி, கேணைத்தனம். முட்டாள்தனம்.



புதுசா ஆரம்பிங்கப்பா. உண்மை நிலையை ஏத்துக்கிட்டாத்தான் ப்ளானிங் பக்காவா இருக்கும். அடுத்த கட்ட நடவடிக்கையும் யூஸ்ஃபுல்லா இருக்கும்.



அரிது அரிது மானிடராய் பிறத்தலரிதுன்னு அவ்வை சொன்னது கரெக்டுதான். ஏன்னா மனிதனுக்குள்ள ஒரு மிருகமிருக்கு அதை காலை,மாலை உலவ விட்டு (லீகல் & மோரல் லிமிட்) மறுபடி கட்டி வச்சா லேசா உறுமிக்கிட்டு கிடக்கும். ஆனால் மிருகங்கள் 24 ஹவர்ஸ் மிருகங்கள் தான். மனிதன் பார்ட் டைம் மிருகம். ( அது கூட அவனோட உயிருக்கு ஆபத்து வரச்ச, பசி,பட்டினி பாதிக்கிறச்ச, அவனோட ஆதாரமான செக்ஸ் தேவை மறுக்கப்படறச்சத்தான்)



சரிங்கண்ணா இந்த தொடர்பதிவோட கடைசீ ...பத்திகளை படிச்சுருங்க. தொடர் வெறுமனே "முற்றும்" இல்லே. தற்காலிகமா முற்றும்.



இதுவரை நான் எடுத்துவச்ச வாதங்களை தப்புன்னு நிரூபிச்சு , கீதையில இருக்கிறதெல்லாம் கிட்னர் சொன்னது, அய்யர் சொல்லலை, அந்த அய்யருக்கு ஹிடன் அஜெண்டா ஏதுமில்லேன்னு, கீதையில இருக்கிறதெல்லாம் அறிவுப்பூர்வமானது, லாஜிக்கல், லீகல்னு ருசுப்படுத்திட்டாங்கன்னா கு.ப. வலுவான வாதங்களை எடுத்து வச்சாங்கன்னா அப்போ இந்த தொடர்பதிவை ரீ ஸ்டார்ட் பண்றேன். அதுவரைக்கும் அம்பேல்.



தொடர் பதிவின் கடைசி பத்திகள்:



//ஒழுக்கம் கெட்டவனாக இருந்தாலும் அவன் வேறு தெய்வத்தை வணங்காமல் என்னையே வணங்கினால் அவன் உன்னத உத்தமமானவன் என்றுதான் கருதவேண்டும்//னு கிருஷ்ணர் சொன்னதை (?) கடந்த பதிவுல பார்த்திங்க. அடுத்து ஒரு பாரா வருது.



//அப்படி வணங்கறவன் சூத்திரனா இருந்தாலும் அட பெண்ணாவே இருந்தாலும் நோ பிராப்ளம்//னு கிட்னர் என்.ஓ.சி கொடுக்கிறாரு.



நாய் கறிய சமைச்சு சாப்பிடறவன் , சத் பிராமணன் இரண்டு பேருக்கிடையிலயும் எந்த வித வேறுபாட்டையும் பாராத ஒருவனே எனக்கு ப்ரீதியானவன்னு வேற ஒரு சீக்வென்ஸ்ல சொல்லப்போற கிட்னர் சூத்திரனா இருந்தாலும் அட பெண்ணாவே இருந்தாலும்னு சொல்றாருன்னா என்ன அர்த்தம் அவருக்கு பேதபாவம் தான் இருக்கு. அபேதபாவம் இல்லேன்னு ருசுவாகுதுல்ல. இந்த ரெண்டு ஸ்டேட்மெண்டுக்கு மத்தியில இன்னா மாதிரி காண்ட் ராடிக்ஷன் இருக்கு பார்த்திங்கல்ல.



ஏதோ காலணா டைரக்டர் எடுத்த நாலணா சினிமாவுலயே இப்படி ஒரு முரண்பாடு வந்தாலே விகடன்ல போட்டு குடைஞ்சுருவாங்க. ஆனால் ஜகன்னாடக சூத்திரதாரியான கிட்னரோட ஸ்டேட்மெண்ட்ல இப்படி ஒரு முரண்பாடு வருமா? வராது. ஆனால் கீதைல வந்திருக்கே.



"இதனால் யாவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் தற்போது கீதை என்ற பெயரில் செலவாணியில் இருக்கும் கீதைக்கும் , கண்ணனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லிங்கோ"