Monday, May 3, 2010

ஜோதிட முதலுதவி:

ஒருத்தன் மூச்சே வராம கிடக்கான்னா அவனை தூக்கிக்கிட்டு டாக்டர் கிட்டே வர்ரதுக்குள்ளே டிக்கெட் வாங்கிருவான்.அதுக்குத்தான் முதலுதவினு ஒன்னு வச்சிருக்காங்க. டாக்டர் வர்ர வரைக்குமோ, இல்லே டாக்டர் கிட்ட கொண்டு போற வரைக்குமோ  அவன் உயிர் தரிச்சிருக்க ஏதோ ஒரு தகிடுதத்தம் பண்ணனும்.

ஜோசியத்துலயும் அப்படி ஒரு விஷயத்தை ஃப்ரேம் பண்ணி வச்சிருக்கேன். இதையெல்லாம் பூட்டி வச்சிக்கிட்டு பாதி ராத்திரி ஹார்ட் அட்டாக் வந்து பொட்டு பூட்டேனு வைங்க இதெல்லாம் மனித  குலத்துக்கு கிட்டாமயே பூடும். அதுக்குத்தான்
எல்லாத்தயும் போட்டு உடைச்சிக்கிட்டிருக்கேன்.

பழைய தமிழ் சினிமால பார்த்திருப்பிங்க.ஹீரோவுக்கு வேலையிருக்காது. அப்பாவுக்கு டி.பி, தங்கைக்கு காலிருக்காது. சின்ன தம்பி ஊமையா இருப்பான். இந்த மாதிரி கேஸுகளை எங்க பக்கம்  சினிமா கஷ்டாலுங்கறாங்க.

இந்த மாதிரி சினிமா கஷ்டங்கள்ள இருக்கிற குடும்பங்களை எப்படி ரிலீஃப் பண்றது?

ஒரே ஆசாமிக்கு வியாபாரத்துல நஷ்டம், நல்லா இருக்கிறப்ப  கொடுத்துவச்ச பணம் திரும்பி வரமாட்டேங்குது, பெண்டாட்டி கோச்சுட்டு அம்மா வூட்டுக்கு போயிட்டா, கடங்காரன் வீட்டை ஜப்தி பண்றேனு நோட்டீஸ் விடறான். இப்படி கச்சா முச்சானு பிரச்சினை வந்துருது .

இவிக ஜாதகங்களை போட்டு, கணிச்சு, பார்த்து பலன் சொல்றதுக்குள்ள  மொத்த நஷ்டமும் நடந்து முடிஞ்சுரும். பின்னே என்னதான் பண்றது? அதுக்குத்தான் இந்த முதலுதவி.

1.ஆதி நாள் முதலே  30 வருடமாக ஒரே மாதிரி பிரச்சினைகள்  இருந்தாலோ, அல்லது கு.ப ஒன்னரை வருடங்களாக அதிகரித்திருந்தாலோ  வீட்டை மாற்றி பார்க்கலாம்.( ஓரளவாவது வாஸ்துப்படி அமைந்த வீடு)
2.வீட்டை மாற்றும் வாய்ப்பு இல்லாவிடில் கணவர் 9 நாள், மனைவி 9 நாள் வெளியூர் ( அது புண்ணிய க்ஷேத்திரமாக இருந்தால் ஸ்ரேஷ்டம்) சென்று தங்கி வரலாம். ஒரு இரவாவது தேவஸ்தானத்தில் தங்கியிருப்பது பல தோஷங்களை குறைக்கும்.
3.ஆண்கள் அரணாக்கயிற்றை கழட்டி வீசலாம். , பெண்கள் தாலிக்கொடியை கழற்றி வைத்துவிட்டு மஞ்சள் கயிற்றை கட்டிக்கொள்ளலாம்.
4.குடும்ப டாக்டரின் ஆலோசனை பெற்று ரத்த தானம் செய்யலாம்.
5.வீட்டில் உள்ள சாமான் செட்டுகள் அனைத்தையும் வெளியே கொண்டு வந்து வைத்து வீட்டை சுத்தமாக ஒட்டடை அடித்து,சுண்ணாம்பு அடித்து  கழுவி மூன்று கிணற்று/போர் தண்ணீரி மஞ்சள்,கோமயம்  சேர்த்து தெளிக்கலாம்.
6.உடைந்தவை,துருப்பிடித்தவை ,உபயோகிக்காத இரும்பு(சனி),பித்தளை(சூரியன்),செம்பு(செவ்வாய்) பொருட்கள்  இருந்தால் உடல் ஊனமுற்றவர்கள் (முக்கியமாய் கால் ஊனம்)   அங்கம் அறுபட்டவர்கள், தீவிபத்தில் சிக்கியவர்களுக்கு கொடுத்து உதவலாம்.
7. சிவனாரின் உருவப்படம், நிற்கும் லட்சுமி, புல்லாங்குழல் ஊதும் கண்ணன் போன்ற தெய்வப்படங்கள் இருந்தால் கடை அ ஆஃபீசுக்கு ஷிஃப்ட் செய்யவும். அல்லது கோவில்களுக்கு கொடுத்துவிடவும். ஒரே சாமி பல அளவுகளில் இருந்தாலும் இப்படியே செய்யவும். பூஜா பாத்திரங்கள் முடிந்தவரை இரும்பு /ஸ்டீலில் இல்லாது பார்க்கவும்.
8.ஆண்கள் ஏதேனும் கோவிலுக்கு வேண்டுதல் காரணமாக தாடி மீசையுடன் இருந்தால் முதற்கண் அவற்றை அக்கோவில்களுக்கு சென்று நீக்கிவிடவும்.
9.அப்பா அம்மா இருந்தால் அவர்களுக்கு புது வேட்டி,புடவை கொடுத்து அவர்கள் ஆசி வாங்கவும். வீட்டில் பிறந்த பெண்கள் (திருமணமாகி வெளியூரில் இருந்தாலும் )வர்களுக்கும் புத்தாடை வாங்கி தரவும்.
10. பிரதி சனி அ செவ்வாய் ஹனுமான் கோவில் சென்று வரவும். வீட்டில் தினசரி ஹனுமான் சாலீஸா கேசட் அ சிடி போட்டு விடவும்.

பி.கு: இவற்றையெல்லாம் துவக்கும் முன் பிள்ளையார், முன்னோர் ,குல தெய்வம்,இஷ்ட தெய்வம் பெற்றோர் ஆசி பெறவும். முதல் வேலையாக  வன்னியர்/ராஜுக்கள்/அக்னி முக தொழிலினர்/  9 பேரையும், தாழ்த்தபப்ட்டோர், நொண்டிகள் போன்றோர் 8 பேரையும் வீட்டுக்கு அழைத்து குல தெய்வத்துக்கு ( முனீஸ்வரன்,காட்டேரி போன்றவை) பலி கொடுத்து அசைவ விருந்து கொடுக்கவும்.

இவற்றையெல்லாம் செய்தால் நல்ல ஜோசியர் கிடைக்கவும், அவர் ஜாதகம் கணித்து  சரியான  பலன் பரிகாரம் சொல்லவும் வழி ஏற்படும். இவற்றை எல்லாம் செய்தும் பிரச்சினை தொடர்ந்தால் தங்கள் முன்னோர் காலத்தில் கோவில் தொடர்பான சொத்தோ, வாரிசு இல்லாத சொத்தோ கலந்து வந்துள்ளது என்று அறியவும். உங்கள் வமிசத்தில் திருமணமாகாதே செத்தவர்கள், அகால மரணம் அடைந்தவர்கள், வாரிசின்றி செத்தவர்கள், இரு தாரம் கொண்டவர்கள் இருந்தார்கள் என்று பொருள். இவற்றிற்கு உரிய பரிகாரம் ( பரிகாரம்னா மாந்திரீகம்,தகடு ,தாயத்து இதெல்லாம் இல்லிங்க. யாகம்,  க்ஷுத்ர பூஜை, எதுவும் இல்லிங்க )  மேற்சொன்ன மாதிரியே இன்னும் கொஞ்சம் காட்டமான பரிகாரம்) செய்ய விரும்புபவர்கள் கட்டண விவரங்களை அறிந்து கொண்டு தொடர்பு கொள்ளவும்.