Monday, May 17, 2010

டாப் 10 பதிவுகள்

அண்ணே வணக்கம்ணே,


இன்னைக்கு முப்பெரும் விழா தான். டாப் டன் பதிவுகள் என்ற இந்த தனிப்பதிவோட பெண்களில் 9 வகை தொடர் பதிவோட இரண்டாவது அத்யாயம், பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி தொடரோட 9 ஆவது அத்யாயத்தையும் இன்னைக்கு போட்டிருக்கேன் .(ப)அடிச்சு தூள் கிளப்புங்க ..
 
சமீபத்தில் கமெண்ட்ஸ் குறைந்து போய் ( சுத்தமா இல்லாத போய்) விட்டதால் எனது நெட் ப்ரவுசிங் கோட்டாவில் பதினைந்து நிமிடம் மிச்சப்பட்டுவிட்டது. கமெண்ட்ஸ் எல்லாம் (ஒரு பத்து பனிரண்டு பேருடையது தவிர) ஜஸ்ட் எக்ஸிபிஷனிஸம் .அவரவர் மேதாவிலாசத்தை வெளிச்சமிடவோ அ மட்டம் தட்டவோ அ பாஸ் டைமுக்கு போடப்படுவதோதான். இதுக்கெல்லாம் பதில் சுட சுட அப்பத்திக்கப்பவே கொடுத்துரலாம்.




ஆனால் சமீப காலமா மெயில்களோட எண்ணிக்கை அதிகமாயிருச்சு. மெயிலுங்கறது பர்சனல் மேட்டர். இதுல ஈகோ இருக்காது, உண்மை இருக்கும். என் மேலயோ ,என் எழுத்து மேலயோ சனத்துக்கு ஏற்பட்டிருக்கிற ட்ரஸ்டை காட்டுது. இதுக்கெல்லாம் பதில் தரப்ப ரொம்ப சாக்கிரதையா பொறுப்பா தர வேண்டியிருக்கிறதால பென் ட்ரைவுக்கு காப்பி பண்ணிக்கிட்டு வீட்ல வந்துதான் ஆன்சர் பண்றது வழக்கம்.



ஆங் என்ன சொல்ல வந்தேன் நெட் ப்ரவுசிங் கோட்டால பதினைஞ்சு நிமிஷம் மிச்சமாயிருச்சு. இந்த நேரத்துலதான் கண்ட சைட்டையும் குடைய ஆரம்பிச்சேன். ஏதோ ஒரு சைட் என்னோட ஆயிரம் பதிவுகள்ள டாப் டென் பதிவு எதெதுன்னு ஒரு லிஸ்டை வச்சிருந்தது. அதை பார்த்ததுலருந்து ஒரு துடிப்பு. அதே சாதில ஏன் பதிவை போட்டு ஹிட்ஸை கூட்டக்கூடாது.



ஹிட்ஸ் கூடினா எனக்கு கிடைக்க போறது ஒன்னுமில்லை. கூகுல் ஆட் சென்ஸ் அன் சப்போர்ட்டட் லேங்குவேஜுங்கற பதிலையே தான் கொடுத்து க்கிட்டிருக்கு.என் வாழ்க்கைய தொலைச்சு தெரிஞ்சுக்கிட்டு நான் எழுதற விஷயங்களை (உலகத்துல வேற எங்கனயும் கிடைக்காதுங்கண்ணா) ஒரு நூறு இரு நூறு பேர் கூடுதலா படிக்க ஆரம்பிப்பாங்க.



என் டாப் டென் பதிவுகள் வருமாறு:



1.சாரு நிவேதிதா அவர்களே

2.அதல பாதாளத்துக்கு செக்ஸ் பவர்

3.எனது கண்டு பிடிப்புகள்

4.முன் பின் பிறவிகள்

5.என் ஐடியாவை சுட்ட ஆ.வி

6. பனிரண்டு ராசியினரின் குணங்கள்

7.ஒய்.எஸ்.ஆர் கொலை பின்னணியில் ஈ நாடு

8.பிராமணீயத்தால் அவாளுக்கே நஷ்டம்

9.பாலகுமாரன் எங்கே



என் விளக்கம்:

1.சாரு நிவேதிதா அவர்களே 5.என் ஐடியாவை சுட்ட ஆ.வி 9.பாலகுமாரன் எங்கே 7.ஒய்.எஸ்.ஆர் கொலை பின்னணியில் ஈ நாடு



இந்த 4 பதிவும் பிரபலமாக டாப் டென்னில் நிற்க ஒரே காரணம் பிரபலங்கள் பற்றி எழுதப்பட்ட பதிவுகள் என்பதே. சாரு நிவேதிதா அவர்களே பதிவு கொய்ட் பாசிட்டிவ். மத்த பதிவுகள் விமர்சன பூர்வமானவை.ஆக காய்ச்ச மரத்து மேல கல்லு போட்டா படிக்க ஆளிருக்கு.



எதிர்கால திட்டம்:

வெற்றிதான் முக்கியம். பதிவுகள் பிரபலமாகிறதுதான் முக்கியம்னா தன் ரசனையை வளர்த்துக் கொள்ளாமலே இருந்து என் பிற்கால கதைகளை பிரசுரத்துக்கு தேர்வு செய்யாத கே.பாக்யராஜ்,

என் கதைகளை பற்றிய முடிவுகளை அறிவிக்க தபால் செலவுக்கு அனுப்பிய ரூ.10 ஐ பெற்றுக்கொண்டும் முடிவு சொல்லாத ஆனந்த விகடன் ஆசிரியர்.

என் படைப்புகளை சுவற்றிலடித்த பந்தாக திருப்பியனுப்பிய கல்கி ஆசிரியர் பிற பிரபலங்களின் பெயர்கள் மட்டும் இங்கே...விள‌க்க‌ம் அவ்வப்போது தொடர உள்ள பதிவுகளில்.

ப்ரைம் பாயின்ட் சீனிவாசன்,எண்டமூரி வீரேந்திர நாத், ரஜினி காந்த், அவர் மனைவி லதா ரஜினிகாந்த்,ஆர்னிகா நாசர்,வாணியம்பாடி டாக்டர்(?) அக்பர் கௌசர்,எங்கள் முன்னாள் முதல்வர் சந்திரபாபு, இன்னாள் முதல்வர் , உங்கள் 'ஜெ' ,கலைஞர்,நக்கீரன் ஆசிரியர்,பா.ம.க. ராமதாசு,வாழைப்பாடி ,லோக் சபா சபாநாயகர்,திருமலை திருப்பதி தேவத்தானத்தார்,மதுரை மீனாட்சி கோவில் நிர்வாக அலுவலர், சென்னை வானொலி நிலையம், திருப்பதி எப்.எம்,கலியுக நாரதா,சைக்காலஜி டுடே ஆசிரியர்கள், நடிகர் கிருஷ்ணா, ஜனாதிபதிகள்,தலைமை நீதிபதிகள்,மானில முதல்வர்கள்,கவர்னர்கள்,பல நாட்டு பிரதமர்கள்,ஜனாதிபதிகள், என்.டி.ஆர் மகன் அரிகிருஷ்ணா,அவர் மகன் சின்ன என்.டி,ஆர்,லோக்கல் சாக்லெட்டு கம்பெனி,மணிமேகலை பிரசுரம்,லிப்கோ பதிப்பகம், ராஜமன்ட்ரி கொல்லப்பூடி வீராசாமி அன்ட் சன், வேதவியாசர் (புராண பார்ட்டி இல்லிங்கோவ்!) இவிக பத்தியெல்லாம் எழுதினா போதும். இவிக எப்படி ஆப்பு வச்சாய்ங்கனு விஸ்தாரமா எழுதலாம் அஃதாவது திட்டித்தீர்க்கலாம்.



"பனிரண்டு ராசியினரின் குணங்கள்" பதிவு சனங்களோட சோதிட நம்பிக்கையை மட்டும் காட்டலை. சக மனிதன் மேல இருக்கிற நம்பிக்கையின்மையையும் காட்டுது. எதிராளியை கணக்கு போட நிறைய ஃபார்முலா கைவசமிருக்கு அதையும் ஒரு கை பார்க்கலாம்ணா.



3.எனது கண்டு பிடிப்புகள் 4.முன் பின் பிறவிகள் இந்த 2 பதிவுகளும் சனத்துக்கு கடந்த காலம் கசந்து போச்சு. நிகழ்காலம் தீர்ந்து போச்சு. மாற்றத்தை விரும்பறாய்ங்கங்கற சங்கதியை காட்டுது. என் கண்டுபிடிப்புகளோட பட்டியல் ரொம்ப பெரிசு. நீங்க கடந்த பிறவில எந்த சாமிய வணங்கினிங்கனு கண்டுபிடிச்சு இந்த ஜன்மத்துல அதே சாமிய வணங்க வச்சு தூள் கிளப்ப வைக்கிற ஃபார்முலா ஒன்னு கைவசமிருக்குங்கண்ணா . இது நம்ம கண்டு பிடிப்பில்லை. ஒளிச்சு வைக்கப்பட்ட சமாசாரம்.



சரிங்கண்ணா கூடிய விரைவுல மேற்படி பதிவுகளையெல்லாம் நீங்க கவிதை07ல எதிர்பார்க்கலாம். எதை எழுத சொல்லி நிறைய பேர் கமெண்ட் மூலமா டிமாண்ட் பண்றிங்களோ அதையே எழுதறதா இருக்கேன். (அப்பாடா கமெண்ட் வர ஒரு வழி பண்ணியாச்சு)