Monday, May 31, 2010

கமெண்ட் கண்டங்கள் (Condumn)

தாளி என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும், தகவல் தொழில் நுட்பம் வளர்ந்தாலும் சில முண்டங்கள், தண்டங்கள் மட்டும் தங்கள் ரசனை, விருப்பங்கள், வக்கிரங்களை, மாற்றிக்கொள்வதே இல்லை.  நம்ம பதிவுகளுக்கு அனானி கமெண்டுகள் போடும் அனாசாரங்கள் பத்தி ஏற்கெனவே பலரும் கிழிச்சிருக்காய்ங்க. இப்ப இன்னொரு கூட்டம் கிளம்பியிருக்கு. இவிக வேலை என்னடான்னா நம்ம பேரை உபயோகிச்சு கமெண்ட் போடறது. இது எனக்கு நடந்திருக்கு. இது எப்படி என் பார்வைக்கு வந்ததுன்னா...

நம்மளோட ஹரர்,டெரர், டர்ரு  பதிவுகள் உள்ளதை சொன்னா நொள்ள கண்ணிக்கு நோப்பாளம் கணக்கா சில சனத்துக்கு பி.பி, பைல்ஸ் எல்லாத்தையும் வரவழைச்சுர்ரதால நாம இல்லாத இடத்துல சில நாய்கள் குலைச்சு வைக்கும். இது தாமதமா நம்ம பார்வைக்கு வரும்  . அதாவது நமக்கு தொடர்பே இல்லாத வலைப்பூக்கள்ள கமெண்ட் போடும்போது நம்ம பேரை ப்ரஸ்தாபிச்சு லொள்ளுபண்றது. இதுகளை கண்டுபிடிக்க அப்பப்போ கூகுல் சர்ச்சுல என் பேரை அடிச்சு நானே தேடிப்பார்க்கிறது வழக்கம்.

இந்த தேடல்லதான் என் பேரை உபயோகிச்சு சில சில்லறைகள் சரோஜா தேவித்தனமான கமெண்டுகளை போட்டிருக்கிறது பார்வைக்கு வரும். உடனே அந்த பதிவருக்கு "அய்யா இது என் மறுமொழியல்ல தயவு செய்து நீக்குங்கள்"னு அப்பீல் பண்றதை சில காலமா செய்து வரேன்.


சித்தூர்.எஸ்.முருகேசங்கறது என் பேர். அப்பா அம்மா வச்ச பேரு கூட கிடையாது. பாக்யா பத்திரிக்கை ஆஃபீஸ்ல யார் மனசுலயோ தெய்வம் புகுந்து வச்ச பேரு. 1987லயே ஃபிக்ஸ் ஆன பேரு 1991 வரை அகங்காரத்துல ஆடவச்சி, சவமாக்கி அடக்கி போட்ட பேரு. 1991லருந்து . 2007 வரை பிச்சை எடுக்க வச்ச பேரு. இந்த பேரை தாங்க  ஒரு ஸ்டாமினா வேணம். 1987ல இருந்து 199 தடவை கொலை செய்யப்பட இருந்தேன். 199 தடவை தற்கொலை செய்துக்கற சந்தர்ப்பம் வந்தது. 199 தடவை சாவு என்னை தேடி வந்தது. எல்லாத்தயும் தாண்டி என்னை கரையேத்தி ஒப்பேத்திக்கிட்டு வந்த தெய்வத்துக்கே தாவு தீர்ந்து போயிருச்சு.

என்னமோ எங்கப்பன் இவிக அம்மாக்களை கும்தலக்கா பண்ணி இவிக பிறந்தாப்லயும் எங்கப்பனே என் பேரை இவிகளுக்கு வச்சாப்லயும் என் பெயரை உபயோகிச்சிருக்காய்ங்க.

வேணாம் ராசா 199+199+199 கண்டம் வரும் , 4 வருசம் அகங்காரத்துல ஆடி அடங்கனும். 16 வருசம் பிச்சை எடுக்கனும்.

இந்த ல...டா பஞ்சாயத்தை தவிர்க்க இனி எந்த வலைப்பூவுக்கும் போய்  கமெண்ட் போடறதில்லைனு  ஒரு அதிரடி முடிவு எடுத்திருக்கேன். எந்த வலைப்பூவை பத்தியாவது எனக்கு கருத்து இருந்தா அதை என் ப்ளாகிலயே எழுதி அந்த வலைப்பூவுக்கு லிங்க் கொடுத்துட்டா தீர்ந்தது பிரச்சினை.