Sunday, May 30, 2010

போலீஸ் Vs நாய்

அண்ணே வணக்கம்ணே,
ஏதோ அதிர்ச்சி மதிப்புக்காக இந்த தலைப்பை வைக்கலை.ஒரு மனிதாபிமானியா, ஒரு ஜன நாயக வாதியா, மனித உரிமைகள் ஆர்வலனா வவுறெரிஞ்சு தான் இந்த தலைப்பை வச்சேன். ஏதோ கெட்ட நேரத்துல ஒரு  நல்ல நேரம். இந்த பதிவு தமிழக போலீஸை பத்தி கிடையாது. (அதான் பங்கு கிடைக்காத ரிப்போர்ட்டன் எல்லாம் கிறுக்கி கொடுக்கிற செய்திகளை அது செய்தியா இல்லையானு கூட பார்க்காம தலா ரெண்டு பக்கத்துல  தமிழ் பத்திரிக்கைகள் அச்சடிச்சு குவிக்கிறாய்ங்களே) ஆமாங்கண்ணா தமிழ் நாட்டு போலீஸ் கிட்டே அரெஸ்டுக்கு முன்னாடி என்னா பேப்பரை காட்டினாலும்( ஆன்டிசிபேட்டரி பெயில், கோர்ட் ஆர்டரு) கிழிச்சு போட்டுட்டு அரெஸ்ட் பண்ணிடுவாங்களாமே நெஜமாலுமா?

சரி மேட்டருக்கு வந்துருவம் "அரவம் அத்வானம் " என்ற சொலவடை யாவரும் அறிந்ததே.ஆனால் ஆந்திர போலீஸ் அத்வானம் என்ற புதிய சொலவடை முந்தா  நேத்தோட கன்ஃபர்ம் ஆயிருச்சு.இதுக்குள்ள காரணங்கள் ஒன்றல்ல இரண்டல்ல.

ஒரு முதல்வர் ஹெலிகாப்டரில் சித்தூர் புறப்படுகிறார். குறிப்பிட்ட நேரத்தில் சித்தூர் வந்து சேரவில்லை. மானில டி.ஜி.பி யை என்னசார் ஆச்சு என்று கேட்டால் "தரைல இருக்கிற வரைதான் நாங்க பொறுப்பு காத்துல இருக்கிறவரை நாங்க பொறுப்பு கிடையாது. எங்கனா விழுந்து  நொறுங்கிருச்சுன்னு சொல்லுங்க உடனே போய் பார்க்கிறோம்னாரு. அந்த பார்ட்டிய இப்போ ஆர்.டி.சி சேர்மனா போட்டுவச்சிருக்காய்ங்க. ஏதாவது ஒரு பஸ் தாகமெடுத்து கிணத்துல இறங்கிட்டா பஸ் என்னாச்சுன்னு கேட்டா ரோட்டு மேல இருக்கிறவரைதான் எங்க பொறுப்பும்பாரோ என்னவோ.

மூக்கர் அதான் கே.சி.ஆர் உண்ணவிரதம்னு உட்கார்ந்தார். ஹவுஸ் அரெஸ்ட்ல வச்சிருக்கலாம். இல்லே தாளி திங்காம தான் இரேன் எத்தனை நாள் இருக்கே பார்க்கலாம்னு விட்டிருக்கலாம். ஆடி மாசத்து நாய் மேல கல்லெறிஞ்ச கணக்கா அரெஸ்ட் பண்ணி மெலோ ட்ராமா க்ரியேட் பண்ணி அந்தாளுக்கு டி.பி.என் (டோட்டல் பேரண்டல் ந்யூட் ரிஷன்) கொடுத்து உ.வி நாடகத்தை தொடர்ந்து எத்தனை கோடி நஷ்டம். எத்தனை உசிரு பலியாச்சு. போலீஸை கேட்டா மேலிடத்து உத்தரவும்பாங்க.

வீட்டு நாய்ங்க கூட வேத்து ஆள் உள்ளாற நுழைஞ்சா முதல் வேலையா கவ்வி பிடிச்சிக்கிட்டு  எஜமானன் என்ன சொல்றாருனு பார்க்கும். அவர் விடுன்னு சொல்றவரை பிடிச்ச பிடியை விடாது "சீஸர் சும்மாரு"னு ஓனர் சொன்னாதான் பிடிய விடும். இவிக அதுகளை விட மோசம் !  பிடின்னாதான் பிடிப்பாய்ங்க போல. தாளி உனக்கு எஜமானன் பொது ஜனம். அவிக கட்டற வரிப்பணத்துல தான் சம்பளம் வாங்கற. (கிம்பளம் தரவன் வேற அவனுக்கு சேவை பண்ணாலும் கலி காலம்னு விட்டுரலாம். இந்த மந்திரி,எம்.எல்.ஏ எல்லாம்   5 வருஷத்துல ஓடிப்போற கேசுங்க)

தெலிங்கானா வேணம்னு மூக்கர் தெலுங்கானா கேட்டு உ.வி. பண்ணாரா. அவரை ஐதராபாத் நிம்ஸ்ல வச்சு ராஜவைத்தியம் பார்த்தாய்ங்க. விஜயவாடால எம்.பி லகடபாடி ராஜ கோபால் உ.வி. இருந்தாரு.பார்ட்டி சின்னவயசுல தினசரி மூணு வேளை ஹார்லிக்ஸ் சாப்பிட்டவராக்கும் . மூணு நாள் போல உ.வி. இருந்தாரு. ஏ.சி இல்லே, மருத்துவர் குழாமில்லே. (வேற ஏதோ உ.வி. காட்சியெல்லாம் உங்க மனத்திரைல ஓடினா நான் பொறுப்பில்லிங்கோ)கவர்மென்டு டாக்டருங்கதான் சாஸ்திரத்துக்கு செக் பண்ணிக்கிட்டிருந்தாய்ங்க. அவரை லந்து பண்ணி ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போனாய்ங்க. அவரு மூக்கருக்கும் மட்டும் நிம்ஸ் எனக்கு மட்டும் லோக்கலான்னிட்டு அடம்பிடிச்சாரு. இவிக கேட்கலை.

ஏஜெண்ட் 7 கணக்கா போலீஸுக்கு டேக்கா கொடுத்துட்டு நிம்ஸ் போய் சேர்ந்துட்டாரு. டோட்டல் ஏ.பி. போலீஸ் யந்திரமே கிறு கிறுனு சுத்துச்சு. ரா.கோபால் விட்ட காத்த கூட பிடிக்க முடியலை. பார்ட்டி ஜெர்கின் எல்லாம் போட்டுக்கிட்டு பி.டி.உஷா மாதிரி ஓடிப்போய் பெட்ல படுத்துக்கிட்டாரு.

ஆயிசானு ஒரு மாணவி. அவள் தங்கி படிச்சிட்டிருந்த ஹாஸ்டலுக்குள்ள புகுந்து கழுத்தை நெறிச்சு கொன்னுட்டாய்ங்க. உடனே எவனோ நகை கடைக்கார சேட் ஒருத்தனை பிடிச்சு இவந்தானு நிறுத்தினாய்ங்க. பையன் துடியானவன். எவனுக்கு என்ன வெட்டனுமோ ஒட்டி போலீஸ் டிப்பார்ட்மென்ட்ல இருந்தே ஆதாரங்களை சேகரிச்சு எனக்கு சம்பந்தமில்லேனு வெளிய வந்துட்டான்.

ஊருக்கிளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டினு சத்யம்பாபுங்கற ஒரு எஸ்.சி.பையனை பிடிச்சு இவந்தா குற்றவாளினு காட்டினாங்க. விசாரணை கைதியா இருந்த அவன் வாயை திறந்தா வம்புனு என்ன மாயம் பண்ணாய்ங்களோ தெரியாது வயசு பையன் அடிமைப்பெண் எம்.ஜி.ஆரை விட மோசமாயிட்டான். ரெண்டு முழங்கால் மேல கையை ஊனிக்கிட்டு அவன் நடந்துவர்ரதை பார்த்தா மலடி வயிறு  கூட கலங்கும்.

கூத்து இதோட முடியலை.திடீர்னு ஒரு நாள் வெயிக்கிள்ள கூட்டி வர்ரச்ச ஓடற வண்டில குதிச்சி ஓடிட்டானு கதை பண்ணாய்ங்க. தமிழ் மீடியா  மாதிரி கூட்டுக்கொள்ளை கிடையாது ( நான் சன்/க்லைஞர் டிவியை சொல்றேன்) . மீடியா போட்டு காச்சு காச்சுனு காச்சவே இதோ பிடிச்சுட்டோம் அங்கே பிடிச்சிட்டோம்னு சீன் போட்டாய்ங்க. நடக்கவே ரெண்டாளு உதவி தேவைப்படற பார்ட்டி ஓடிட்டான்னா எவன் நம்புவானு கூட ரோசிக்கிற ஸ்டேஜ்ல கூட இல்லை பாவம்.

இதுவரை சொன்னதெல்லாம் ஒரு எடை. இப்ப சொல்லப்போறது நூறு எடை ?  ஒய்.எஸ்.ஆர் 2009  செப்டம்பர்ல செத்தாரு. அவர் செத்த துக்கத்தை தாங்கமுடியாம பல இதயங்கள் நொறுங்கிப்போச்சு, பலர் தற்கொலை பண்ணி செத்துப்போனாய்ங்க.

அக்டோபர்ல  ஜகன் மோகன் ரெட்டி அப்பாவுக்காக உயிர்விட்ட குடும்பங்களை எல்லாம்  நேர்ல போய் ஆறுதல் சொல்வேனு அறிவிச்சாரு.  இந்த தெலங்கானா சமாசாரம்லாம் நவம்பர் 29 க்கு மேல தான் மொதக்க ஆரம்பிச்சதுங்கறதை ஞா வச்சுக்கங்க.வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை ரோகிங்கற மாதிரி  ஜகன் கொஞ்சம் ஹேம்லெட் கேஸு. அவிக என்ன நினைப்பாய்ங்க. இவிக என்ன பேசுவாய்ங்க. சோனியா மேடம் கோவிச்சுக்குவாய்ங்களான்னெல்லாம் நெறய யோசிப்பாரு.

எப்படியோ துவங்கிட்டாரு. ஹை கமாண்ட் பர்மிஷன், சி.எம்.பர்மிஷன், கட்சி ஆஃபீஸ் அட்டெண்டர் பர்மிஷன் எல்லாம் வாங்கிக்கினு கிளம்பினார். ரெண்டு மூணு  ரவுண்டு கம்ப்ளீட் கூட ஆயிருச்சு. தெலங்கானா ஏரியாவை சேர்ந்த ஒரு மாவட்டத்துல கூட டூர் கம்ப்ளீட் ஆயிருச்சு. ஒரு ..ரு கலவரமில்லை,கலகமில்லே. கே.சி.ஆர் கூட ஆகே பீச்சே மூடிக்கினு தான் இருந்தார். போனசா விஜயாவாடா வந்து தனி ஆந்திரா கேட்கிற க்ரூப் நடந்த்தற நிகழ்ச்சில கூட கலந்துக்கறேன்னுட்டார். மேற்சொன்ன லகடபாட்டி கூட "வாங்கய்யா வாத்யாரய்யா"ன்னிட்டார்.

இடையில என்ன ஆச்சுனு தெரியலை. வரகூடாது/ நடந்து தான் வரனும்/ தெலுங்கானா கேட்டு செத்தவன் குடும்பத்துக்கும் ஆறுதல் சொல்லனும்/பட்டாசு வெடிக்க கூடாது /பேனர் கட்ட கூடாதுனு கண்டிஷன் போட ஆரம்பிச்சாய்ங்க.

ரோசய்யா தாத்தா கூட முதல்ல இந்திய குடிமகனா ஜகன் எங்க வேணா போலாம்னு பேசிக்கிட்டிருந்தவர் " யோசிக்கனும்.. வாய்தா போட்டுக்கனும்னு ட்ராக் மாத்தி பேச ஆரம்பிச்சார்.

ஜகன் போடாங்கொய்யாலனு புறப்பட்டுட்ட்டார். முதல் ப்ரோக்ராம் மெகபூபாபாத்லனு ஃபிக்ஸ் ஆச்சு. ஜகன் செகந்திராபாத் வந்து இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ்ல ஏறிட்டாரு. கல்யாண மண்டபத்துக்கு பணம் கட்டி பர்மிஷன் வாங்கிக்கறோம். அப்புறம் தனித்தனியா நலங்குக்கு ஒரு பர்மிஷன், ஜானவாசத்துக்கு பர்மிஷனுன்னு தனித்தனியா வாங்கறோமா?  மூச்சா போறதுக்கு கூட பர்மிஷன் வாங்க ஜகன் என்ன ரோசய்யா மக வயித்து பேரனா? முதல்லயே ஜகன் சொல்ட்டாரு. இது என் பர்சனல் ப்ரோக்ராம். கட்சிக்கோ, அரசாங்கத்துக்கோ எந்த சம்பந்தமும் இல்லே. நான் ஒரு எம்பியா போகலை. ஜஸ்ட் ஜகனா போறேன்.

ட்ரெயின் வெங்கம்பல்லி வர்ர வரை "சரியாத்தான போய்க்கிட்டிருந்தது" வெங்கம்பல்லில 3 மணி நேரம் ட்ரெய்னை நிறுத்திட்டாய்ங்க. அதுக்குள்ள மெகபூபாபாத் ரயில்வே ஸ்டேஷன்ல சீன் க்ரியேட் பண்ணா ஆரம்பிச்சாய்ங்க. எதிரெதிர் ப்ளாட்ஃபாரத்துல ஒரு பக்கம் ஜகனை வரவேற்க வந்த கூட்டம். இன்னொரு பக்கம் ஜகனை வெட்டுவோம்,குத்துவோம்ன கூட்டம். வரவேற்க வந்த கூட்டமாவது லோக்கல்ஸ். வெட்டுவோம் குத்துவோம்ன பார்ட்டிங்க மொபிலைஸ் பண்ணிக்கிட்டு வந்த கூட்டம்.

தெலங்கானா தனி ஸ்டேட்டாவே பிரியலை. அதுக்குள்ளாற ஆந்திரா காரன் காலை வைக்க கூடாது ..லை வைக்ககூடாதுனு அலம்பல். ஏன்யா எத்தினி தெலுங்கானா பொம்பளை ஆந்திரா பஸ்ஸ்டாண்ட்ல "தொழில்" பண்றாள். அவளையெல்லாம் மீட்டு ஊதுவத்தி ஃபேக்டரியோ, சீயக்காய் தூள் ஃபேக்டரியோ வச்சு கொடுக்கறது.

ஆந்திரா காரன் வரக்கூடாதுன்னா நீ கேட்க வேண்டியது தனி மானிலமில்லே. தனி நாடு. நீ தனி நாடாவே ஆனாலும் பாஸ்போர்ட் விசா இருக்கிற எவனாச்சும் வரலாம்ல.  சரி சீனுக்கு வருவோம்.

இந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல போலீஸ் என்ன பண்ணனும்? ஜகன் புறப்படறப்பவே அரெஸ்ட் பண்ணியிருக்கலாம். ஹவுஸ் அரெஸ்ட்ல வச்சிருக்கலாம். அப்போ இவிக கைல போட்டிருக்கற வளைகாப்பு வளையல் உலகத்துக்கு தெரிஞ்சிருக்கும். ஆங் அது எப்படி?

சரி ப்ரோக்ராம் நடக்க போவுது. எதிர்க்க வந்தவனுங்களுக்கு ஒரு தலைவன் கிடையாது. தலைவனெல்லாம் கமுக்கமா ஏசி ரூம்ஸ்ல இருக்கான். ஆட்களை ஹைதராபாத் முதல் அக்கம்பக்கத்து ஜில்லா வரை மொபிலைஸ் பண்ணிட்டு வந்து குவிச்சு வச்சிருக்கான்.

ஜகனை இன்வைட் பண்ண பார்ட்டி கொண்டா முரளின்னு எம்.எல்.சி. ஒரு காலத்துல நக்சலைட். அவர் மனைவி கொண்டா சுரேகா. முன்னாள் மந்திரி ஒய்.எஸ்.ஆரை பார்த்த கண்ல இந்த கிழவாடிய பார்த்துக்கிட்டு வேலை செய்ய முடியாதுனு ராஜினாமா பண்ணிட்டு போன வீரமான பொம்பளை. இவிக ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்குல கூடியிருக்காய்ங்க. 

போலீஸ் என்ன பண்ணாய்ங்கன்னா வெல்கம் பண்ண வந்தவுகளையெல்லாம் ஸ்டேஷனை விட்டு க்ளியர் பண்டாங்க. கலவரம் பண்ண வந்தவுங்களை மட்டும் ஸ்டேஷன்ல விட்டுட்டாய்ங்க.

ஸ்டேஷன்ல தண்டவாளம் இருக்கும். ரைட்,லெஃப்ட், சென்டர்ல கல்லிருக்கும். கல்லு. அதுவும் எத்தனை ? லோட் லோடா. இந்த மாதிரி ஒரு செட்டுக்குள்ள கலவரம் பண்ண வந்த குரங்குப்பயலுவளை விட்டுட்டு .. இவிகளுக்கெல்லாம் இருக்கிறது மூளையா.. வேறெதுனாவா?

கொண்டா முரளி, சுரேகா, பத்மா (எம்.எல்.சி) எல்லாரும் வந்து வெயிட்டிங் ரூமுக்குள்ள போனாய்ங்க. அவ்ளதான். மனிதன் இன்னமும் மிருகம்தானு நான் அடிக்கடி சொல்வேனே அதை ருசுப்படுத்த கல்மழை துவங்குச்சு. வெயிட்டிங்க் ரூம் கதவு துவம்சம்,கண்ணாடி துவம்சம், சன்னல் துவம்சம்.  டைனிங்க் டேபிளை வெயிட்டிங்க் ரூம் என்ட் ரன்ஸுக்கு குறுக்கே வச்சிக்கிட்டு மேலே சொன்ன எம்.எல்சிக்களோட கன்மென்ஸ் ஷூட்டிங் ஆரம்பிச்சாய்ங்க.

அப்போதான் முழிச்சிக்கிட்ட போலீஸ் காத்துல சுட்டது. கலவரக்காரன்ல   ஒருத்தன் காலி. இதாண்டா சாக்குனு வெங்கம்பல்லில நின்னிருந்த ட்ரெய்ன்ல இருந்த ஜகனை போலீஸ் அரெஸ்ட் பண்ணி ஹைதராபாத் கொண்டு வந்துட்டாய்ங்க.

ராஜபக்சே வந்தப்ப மட்டும் ரெட் கார்ப்பெட் போட்டு வெங்கடேசர் கோவணத்தை கூட விலக்கி தரிசனம் காட்டினாய்ங்க. ராஜபக்சே வெளி நாட்டுக்காரன். கொலைகாரன், போர் குற்றவாளி,  தமிழினத்தை/ இந்திய குடிகளை கொத்து கொத்தா கொன்ன பார்ட்டி. ராஜபக்சேவ கூட அனுமதிக்க கூடாது தமிழ் நாட்ல நிறைய பேர் குரல் கொடுத்தாய்ங்க. ராஜ பக்சேவ கூட அரெஸ்ட் பண்ணி இலங்கைக்கு திருப்பி அனுப்பறதானே.

ஓஹோ தமிழன் திருப்பதி வந்து கல்லெறியலை. பொம்பளைங்க தங்கியிருக்கிற வெயிட்டிங் ரூமை கல் மழையால பெயர்க்கலை .ஜகன் சாதாரணமா ஊசலாட்ட கேஸு. அன்னைக்கு தேதி மே 28. என்.டி.ஆர் பிறந்த நாள் . பிடிவாதத்துல (கொண்ட கொள்கையின் மேல்) என்.டி.ஆரை அடிச்சுக்க ஆளே கிடையாது. அவர் கடைசியா ஆட்சிக்கு வந்தப்ப பூரண மதுவிலக்கை தெர்தல் வாக்குறுதியா கொடுத்திருந்தார். அதை மட்டும் அவர் ஜஸ்ட் ஒரு 10 சதவீதம் தளர்த்திக்கிட்டிருந்தா இன்னைக்கும் அவர்தான் சி.எம். இந்த ஒரே காரணத்தால தான் லிக்கர் லாபி சந்திர பாபுவை விலை பேசுச்சு.

என்.டி.ஆரோட பிடிவாதம் ஒய்.எஸ்.ஆர்ல அப்படியே இருந்தது. ரெண்டு பேரோட ஆத்மாவும் மே லே  கூட்டணி அமைச்சுருச்சோ என்னமோ , அவிக ஆத்ம பலம் அப்படியே ஜகன் மேல பொழிஞ்சதோ என்னவோ  இந்த பூனையும் பால்குடிக்குமானு இருந்த ஜகன் சீறின சீறல் இருக்கே. டிவி திரைல அப்படியே நெருப்பு பொறி பறந்தது.

ஜகன் கொடுத்த பேதிக்கு சோனியா மேடம் சிரஞ்சீவிக்கு அழைப்பு விட்டாய்ங்க. இதே சிரஞ்சீவி 2009 தேர்தல்ல "ஒய்.எஸ்.ஆர் ஸ்டேட்டை கொள்ளையடிச்சு சோனியா கால்ல கொட்டறாரு"ன்னு.  பேசினார். அப்போ சோனியா  கப்பம் வசூலிச்சது நிஜம்தானா? அதுல சிரஞ்சீவிக்கும் இப்ப பங்கு தரப்போறாய்ங்களா தெரியலை.

லேட்டஸ்ட்: ஜகன் கவர்னரை சந்திச்சு வெங்கம்பல்லி & மெகபூபாபாத் சம்பவங்கள் குறித்து புகார்.

நான் சொல்லவரது என்னன்னா.. நீ போலீஸ். உன் கடமை சட்டம் ஒழுங்கு. அதை கைவிடச்சொல்லி எந்த மயிரான் சொன்னாலும் ஸ்டார்ஸ்,பெல்ட், வெப்பன் எல்லாத்தையும் கழட்டி போட்டுட்டு வந்துக்கினே இரு. நீ ஒருத்தனா இருந்தாதானே பிரச்சினை .. உன் பின்னாடி மக்கள் கூட்டமிருக்கும். அதை விட்டுட்டு ஆட்டி வச்சபடியெல்லாம் ஆடினா நாளைக்கு கவுன்சிலர் சொன்னாரு, வார்ட் மெம்பரு சொன்னாருனு பஜார்ல பேண்டை இறக்கி காட்ட வேண்டி வரும்.