Monday, May 17, 2010

பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி: 9

இந்த தொடர்பதிவில் கடந்த பதிவை முடிக்கும்போது "கருமயோகம் / ஆத்ம ஞான யோகம் ரெண்டும் ஒரே பலனை தரும்னு ஆசிரியர் சொல்றார். இதுக்கு பின்னாடி இருக்கிற பிராமண சதியை , பிராமணரல்லாதோர் மீதான அவிக அண்டர் எஸ்டிமேட்டை பத்தியெல்லாம் அடுத்த பதிவுல பார்க்கலாம்ணா !" என்று முடித்திருந்தேன்.




மேலுக்கு பார்க்கும் போது பிராமணரல்லாதோருக்கு என்ன தோணும்னா



" ஆகா என்ன லிபரலா சொல்லியிருக்காய்ங்க. கர்ம சன்னியாசம்னா நம்மால ஆவாத வேலை. நாம சன்னியாசியா வாழபார்த்தாலும் நாம திங்கற/அல்லது இதுவரைக்கும் தின்ன உப்பு,புளி,காரம் இதெல்லாம் சும்மா விடாது.



கரும யோகம்னா என்ன ஜுஜுபி. நம்ம வேலைய நாம செய்துக்கிட்டிருந்தா போதும் என்ன அப்பப்போ கிருஷ்ணார்ப்பணம்னு சொல்லிக்கிட்டிருக்கனும் அவ்ளதானேனு தோணும்.



இங்கே கர்ம சன்னியாசத்துக்கும், கர்மயோகத்துக்கும் ஒரே ஹோதா கொடுத்ததே ஒரு சதிதான்.



மனுஷன் முக்தியடைய பிரம்மச்சரியம், கிருஹதாஸ்ரமம், வான பிரஸ்தம், சன்னியாசம்னு நாலு ஸ்டேஜ் இருக்கு. அந்தந்த பருவத்துல அந்தந்த வேலைய பார்த்துட்டு கடைசில சன்னியாசம்னு வந்தா /போனா தான் ஸ்மூத் கோயிங்கா இருக்கும். அதை விட்டுட்டு பால சன்னியாசி, இளையவர், மூத்தவருன்னு வெறுமனே காவிய கட்டிக்கிட்டு கதை விட்டா ம(க)ட்டைய தூக்கிக்கிட்டு நிக்க வேண்டியதுதான்.அப்புறம் பெண் எழுத்தாளர்கள் எல்லாம் கட்டுரை வரைவாய்ங்க. பேட்டி கொடுப்பாய்ங்க. (அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்)



ரெண்டே வேட்டி,ரெண்டே துண்டை சோப்பு உபயோகிக்காம துவைச்சி துவைச்சி கட்டிக்கிட்டிருந்தா அதுவே காவியா மாறிரும்.அதுதான் காவி நெம்பர் 1. இதற்கடுத்த சாய்ஸ் இயற்கைல கிடைக்கிற சில மூலிகைகளை உபயோகிச்சு சாயமேற்றின காவி வந்த் காவி நெம்பர் 2.



இன்னைக்கு சாமியாருங்க கட்டற காவியெல்லாம் உங்களோட கல்யாண சூட்டை விட காஸ்ட்லி. ஒன்லி இம்போர்ட்டட்.



கீதாசிரியர் எந்த வயசுல கர்ம சன்னியாசம், எந்த வயசுல கர்ம்யோகம்னு ஸ்பெசிஃபை பண்ணாததை கவனிங்க.



இந்த ரெண்டு வார்த்தைக்கும் (கர்ம யோகம், கர்ம சன்னியாசம்) என்னென்னமோ அர்த்தம்லாம் தேடி கண்டு பிடிச்சு பெரியவுக சொல்லி வச்சிருக்கிற அர்த்தத்தையெல்லாம் போட்டு குழப்பிக்கிராதிங்க. அதெல்லாம் இட்டுக்கட்டினது. அவிகவிக தங்களோட கொள்கைகளையெல்லாம் கீதை மேல ஏத்தி சொன்ன விளக்கங்கள்.



சரித்திரத்தை புரட்டி பார்த்து, அந்த இனத்தோட நோக்கத்தை வியூகத்தை புரிஞ்சிக்கிட்டு ரோசிச்சா கர்மயோகம்னா பலனை எதிர்பார்க்காம உழைச்சிக்கிட்டே இருக்கிறது. தங்கள் உழைப்பின் பலனை பஞ்ச கச்சங்கள் நேரடியா அடிச்சிக்கிட்டு போச்சா, இல்லே தாங்கள் ராஜாவுக்கு வரியா கட்டின காசுலருந்து தானமா லவட்டிக்கிட்டு போச்சுங்களானுல்லாம் யோசிக்காம உழைச்சிக்கிட்டே இருக்கிறதுதான் கர்மயோகம்.இது பிராமணரல்லாத மத்த 3 வர்ணத்துக்குரியது.



வேலை வெட்டி எதுவுமில்லாம மத்த வர்ணத்தார் உழைச்சி கொட்ட அதுல கொம்மாளம் போடறதுதான் கர்ம சன்னியாசம் . இது பிராமணர்களுக்கே உரியது.



மத்த வர்ணத்தான் எல்லாம் உழைச்சி உழைச்சி என்னத்தை கண்டோம்னு யோசிச்சுர கூடாதில்லையா அதனாலதான் கருமயோகம்னு ஒரு பில்டப். அதுக்கு கர்ம சன்னியாசத்துக்கு சமமான ஹோதா.



ஒரு சில பக்தி இலக்கியங்கள் ஒரு மைல் நீளத்துக்கு இருக்கும். அதை மனப்பாடம் பண்றதோ , ப்ரவச்சனம் பண்றதோ எல்லாராலயும் முடியாத காரியம். அதுக்காக என்ன பண்ணுவாய்ங்க குறிப்பிட்ட ஒரே ஒரு அத்யாயத்தை படிச்சாலே மொத்த இலக்கியத்தையும் படிச்ச பலன் கிடைக்கும்னுவாய்ங்க. அந்த ஒரு அத்யாயத்தை கூட படிக்க முடியாத தற்குறிகளோ, சோம்பேறிகளோ இருப்பாய்ங்க.அதுக்காக ஒரு ஸ்லோகத்துக்கு ஸ்டார் மார்க் கொடுத்து அந்த ஒரு ஸ்லோகத்தை சொன்னாலே போதும் 100% ரிசல்ட்டுன்னு பீலா விடுவாய்ங்க. அதுவும் முடியாதவுக கடவுளோட 1000 நாமங்களை (சஹஸ்ர நாமம்) சொன்னா போதும்னுவாக. இது கூட முடியாத சோம்பேறிக்கு சோறு கொண்டு போகும் பார்ட்டிங்க இருப்பாய்ங்க அவிக மேற்படி சஹஸ்ர நாமங்கள்ள குறிப்பிட்ட பேரை சொன்னா போதும் சஹஸ்ர நாமம் சொன்ன புண்ணியம்/பலன் கிடைச்சுரும்னுவாக.



இதெல்லாம் ஜஸ்ட் சைக்கலாஜிக்கல் சேடிஸ்ஃபேக்சனுக்காக சொல்றதுதான். ஒரு உபசாரத்துக்கு சொல்லிக்கிரதுதான். உதாரணத்துக்கு ஸ்ரீராமனோட இந்த மூலமந்திரத்தை பாருங்க



ஸ்ரீராம ராம ராமேட்டி ரமே ராமே மனோரமே

சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீராம நாம வரானனே



இது வந்து ஸ்ரீராமனோட சஹஸ்ர நாமத்துக்கு சமமானதாம். இந்த ரெண்டு வரிய சொன்னாலே சஹஸ்ர நாமம் எல்லாத்தையும் சொன்ன புண்ணியம், பலன் கிடைச்சுருமாம்.



இதே ஸ்டைல்ல தான் கருமயோகமும், கரும சன்னியாசமும் ஒன்னுதான் .பலனும் ஒன்னுதான்னு சொல்றாரு கீதாசிரியர்.



இந்த பெரும்போக்குக்கு இன்னொரு உதாரணமா கீதையையே எடுத்துக்கங்க.



//நம்பிக்கையுடன் நாட்டம் மிகுந்து இந்த கீதையை எவன் கேட்பானோ அவனது பாவமும் அழிவது உறுதி அமர நிலைதான் அவனது இறுதி//



கீதைய கேட்டாலே பாவம் அழிஞ்சு போயிருமாம். இதெல்லாம் ஜஸ்ட் ஒரு சம்பிரதாயம். பாகவதம் படிக்கனும், மகாபாரதத்தை படிக்கனும்,கிருஷ்ணனை சுத்தி சனம் கட்டிவிட்டிருக்கிற கதைகளை அடையாளம் கண்டு வடிகட்டி உண்மையான கிருஷ்ணனை உள் வாங்கனும். அப்புறமா கீதையை கேட்கனும். கண்ணனோட கேரக்டருக்கும் கீதைக்கும் பொருத்தமில்லாத அம்சங்கள் எத்தனை இருக்குனு பார்த்து அதையெல்லாம் அரிசில கல்லை பொறுக்கின மாதிரி பொறுக்கி போட்டுட்டு கீதாசாரத்தை ( உண்மையான ) வாழ்க்கைல கடை பிடிக்கனும். இந்த ப்ராசஸ் எல்லாம் நடக்காம வெறுமனே கீடைய கேட்டுட்டா பாவம் அழிஞ்சுருமா? அமர நிலை கிடைச்சுருமா? ஒரு ................ரும் கிடைக்காது.





இவிகளுக்கென்ன எல்லாம் ஒன்னுதான்னு அசால்ட்டா சொல்ட்டாங்க. எவ்வளவு பெரிய நேர் கோடா இருந்தாலும் அது ஒரு வட்டத்தின் பகுதிதான். இல்லேங்கலை. அந்த நேர்கோடு என்னைக்கோ ஒரு நாள், எங்கனயோ ஒரு இடத்துல தன் ஆரம்ப புள்ளியை சந்திச்சு வட்டமாயிரும். இது தியரி. இது ப்ராக்டிக்கலைஸ் ஆகனும்னா அந்த நேர்கோட்டை தொடர்ந்து வரையனும். இந்த ப்ராஜக்டை ஒலிம்பிக் தீபம் மாதிரி தலைமுறை தலைமுறையா தொடர்ந்து கொண்டு செல்லனும்.அப்போ எங்கனயோ ஓரிடத்துல சந்திக்கும்.



ஆனால் கீதை சொல்றது அப்படியில்லை. ரெண்டும் ரெண்டும் நாலு மாதிரி ச்சோ சிம்பிளா சொல்லுது. ரெண்டும் ஒன்னுதான்.





கீதைல சொன்னது ஒர்க் அவுட் ஆகனும்னா அதுக்கு பெரிய ப்ராசஸ் இருக்கு.



கர்மயோகம்னா என்ன ? பலனை எதிர்பார்க்காம கடமையை செய்யறது. உயிர்களை படைச்சது இயற்கை. இயற்கையின் பால் உயிர்களின் கடமை என்ன?முதல் கடமை உயிர் வாழறது. இரண்டாவது கடமை இனப்பெருக்கம் செய்யறது. மூணாவது கடமை தங்களுக்கு உயிரையும்,வாழ்வையும் கடமையையும் தந்த இயற்கைய நாசமாக்காம இருக்கிறது.



இந்த கடமைகளை இயற்கைக்கு நிபந்தனைகள் விதிக்காம பலனை எதிர்பார்க்காம செய்ய முனைஞ்சா , செய்ய முடிஞ்சா சொர்கம்லாம் ஒத்தைக்கு இரட்டையா இங்கனயே இறங்கி வந்துரும்.



நான் சொன்ன மூணு கடமைகளை மன்சங்க செய்துக்கிட்டுதான் இருக்காய்ங்க. இல்லேங்கலை. ஆனால் கடமையா நினைச்சு செய்யறதில்லை. பலனை எதிர்பார்க்காம செய்யறதில்லை. அதான் மனுஷ வாழ்க்கைய சிக்கலாக்கிருச்சு.



கிருஷ்ணர் கண்ட குட்டியை போட்டுட்டு நான் நைஷ்டிக பிரம்மச்சாரிங்கறது உண்மைன்னா ஹே யமுனா நதியே நீ இந்த மோர்காரிக்கு வழி விடுன்னாராம். உடனே யமுனை வழி விட்டுட்டுதாம். இது கிருஷ்ணருக்கு செல்லுபடி ஆகியிருக்கலாம். நமக்கு உயிரையும், வாழ்வையும் தந்த இயற்கை நமக்கு கொட்த்திருக்கிற எளிமையான கடமைகளை நிறைவேற்றவே நிபந்தனைகள் நமக்கு கர்ம யோகம் ஒர்க் அவுட் ஆகுமா?



கம்ப்யூட்டர்லயே நாம செய்யற வேலை விவரமெல்லாம் ரீசன்ட் ஃபைல்ஸ்லயும் , டெம்ப்லயும் சேவ் ஆகுது. ஃபைல் ரிக்கவரி சாஃப்ட் வேர் போட்டா டெலிட் ஆன ஃபைல்ஸ் எல்லாம் ரிக்கவரி ஆகி பல்லை இளிக்குது. தேவ நாத குருக்களோட ஜாலிலோ ஜிம்கானா வேலைகள் வெளிச்சத்துக்கு வந்தது இப்படித்தான்.



மனித மூளைய பத்தி சொல்லவே தேவையில்லை. பல கேஸ்கள்ள ஒரு வயசு ரெண்டு வயசு நினைவுகளை கூட ஹிப்னடைஸ் பண்ணி, ட்ரான்ஸ்ல வச்சு தோண்டி எடுத்திருக்காய்ங்க.



கிருஷ்ணர் தான் போட்ட குட்டிகளோட நினைவுகளையெல்லாம் தன் மூளைல சப்ஜாடா தூக்கிட்டாரு .விளக்கெண்ணையை பூசிக்கிட்டு பலாப்பழத்தை பிரிச்ச மாதிரி விளையாடியிருப்பாரு. பிசின் ஒட்டாம வெளிய வந்துட்டாரு. நம்ம கதை?



டாக்டர்களுக்கான ஒரு வழிக்காட்டி சூத்திரம் இருக்கு." நோய்க்கு சிகிச்சை செய்யாதே நோயாளிக்கு சிகிச்சை செய்" இங்கே குருட்டாம்போக்குல கீதாசாரியர் நோய்க்கு சிகிச்சை தரார்.



சரி கீதைய கொஞ்ச நாழி ஓரமா வச்சுருவம். கர்ம யோகம் சாமானியனுக்கு எப்பத்தான் ஒர்க் அவுட் ஆகும்னு யோசிப்போம்.



ஏற்கெனவே சொன்ன மாதிரி பிரம்மச்சரியம், கிருகதாஸ்ரமம், வான ப்ரஸ்தம், சன்னியாசம்னு எல்லா ஆசிரமத்தையும் கம்ப்ளீட் பண்ணிட்டு ஒரு பார்ட்டி மறுபடி சமுதாயத்துல வாழ முனைஞ்சா



இந்த உலகம் நாடக மேடையாகும் . அந்த பார்ட்டி ஒரு நடிகராயிருவாரு.

இந்த உலகத்துல அவர் இருப்பார். ஆனால் அவருக்குள்ள உலகம் இருக்காது

ஓடம் தண்ணி மேல போகும். ஆனால் ஓடத்துக்குள்ள தண்ணி வராது



நீங்க அஞ்சு வயசுல ஒன்னாங்கிளாஸ் படிக்க போன பள்ளிக்கும், பள்ளியோட பழைய மாணவர்கள் சங்க விழா ஏற்பாட்டுக்குனு போற பள்ளிக்கும் வித்யாசம் இருக்கும்.



மேலே சொன்ன நாலு ஆசிரமத்துக்கும் ( பிரம்மசரியம், கிருகதாஸ்ரமம், வான ப்ரஸ்தம், சன்னியாசம்) அந்த காலத்துல தலா எத்தனை வருஷம் ஒதுக்கியிருந்தாய்ங்களோ தெரியாது.



ஜோதிஷத்துல ஒன்பதுகிரகங்களுக்கான தசைகளோட கூட்டுத்தொகை 120 வருஷம். ஆனால் இன்னைக்கு 120 வருஷம் வாழ்ந்தா கின்னஸ் ரிக்கார்டுதான். உயிரியல் நிபுணர்கள், சைக்கிரியாட்ரிஸ்டுகள் இப்படி பலதரப்பட்ட நிபுணர்கள் விஸ்தாரமா சர்வே பண்ணி,ஆராய்ச்சி பண்ணி எந்த ஆசிரமத்துக்கு எத்தனை வருசம்னு முடிவு பண்ணி, அதுக்குண்டான ஏற்பாட்டை அரசாங்கம் ஏற்படுத்தனும்.



இந்த பொதுவிதி எல்லாருக்கும் பொருந்துமாங்கறது சந்தேகம்தான். (விதிவிலக்குகள் இருக்கலாம்)



பிரம்மச்சரியம்னா ஈர கோவணத்தை இழுத்து கட்டி செக்ஸ் தேவைகளை சப்ரெஸ் பண்ணிக்கிட்டு அது வன்முறையா மாற வழிபண்றது கிடையாது. செக்ஸ் பற்றிய புரிதலை வளர்த்துக்கிட்டு ஸ்வப்ன ஸ்கலிதம் இத்யாதிக்கு டெப்ரஸ் ஆயிராம "இது இயற்கையான ஒன்னு"னு புரிஞ்சிக்கிட்டு சுய இன்பம்,ஒட்டல், உரசல்,காதல் , ஹோமோ,லெஸ்பியன், கள்ள உறவு, விலைமாதர்/கால் பாய்ஸ்னு போகாம வாழறது

எதிர்காலத்து தாம்பத்யத்துக்கு உடல்,மனசு,புத்தி அளவுல பிரிப்பேர் ஆறது.



பிரம்மச்சரியத்தை ஒழுங்கா கடைபிடிச்சாதான் கிருகதாஸ்ரமம் /இல்லறம் இனிக்கும். இல்லன்னா எழுச்சி இன்மை, குறி சிறுத்தல், துரித ஸ்கலிதம்னு லாட்ஜு வைத்தியர்களோட விளம்பரங்களை துரத்திக்கிட்டு , தாழ்வு மனப்பான்மைய மறைக்க மேல் ஷேவனிசம், பெண்டாட்டிய கொடுமை படுத்தறது, நம்மால "அதை"தான் கொடுக்க முடியலைன்னு 54 இஞ்ச் கலர் டிவி வாங்கித்தர்ரது. அவள் நம்ம அப்பா,அம்மாவை முதியோர் ஆசிரமத்துக்கு விரட்டினா பார்த்துக்கிட்டிருக்கிறதுல்லாம் நடக்கும்.



இல்லறத்தை ஒழுங்கா அனுபவிக்காதவன் 60 வயசுல 6 வயது சிறுமியை கற்பழிக்க முயற்சி பண்ணி தந்தில செய்தியா வந்துருவான். தனக்குள்ள, தங்களுக்குள்ள (தம்பதி) ஏற்பட்டு போன எம்ப்டி நெஸ்ஸை நிரப்ப ஊரை அடிச்சு உலைல போட்டு வாழ் நாள் எல்லாம் கண்ட குப்பைகளை வாங்கி நிரப்பிக்கிட்டே இருப்பான். அவன் எங்கே வான பிரஸ்தத்துக்கு போறது ? ஞா இருக்கில்ல ? என்.டி. திவாரி



வான பிரஸ்தம்னா காட்டுக்கு போய் மான் வேட்டையாடறதில்லை. முடிஞ்ச வரை ஊருக்கு/ சன நெருக்கடிக்கு/பொல்யூஷனுக்கு தூரமா அமைதியான, என்விரான்மென்ட்ல குறைஞ்ச பட்ச வசதிகளோட வாழலாம். தம்பதிகள்ள யாரோ ஒருத்தர் டிக்கெட் வாங்கிட்ட பிறவோ , இல்லே சோடியாவேவோ சன்னியாசம் வாங்கிக்கிடலாம்.( ப்ரேமானந்தா, ஜெயேந்திர சரஸ்வதி, நித்யானந்தா மாதிரி பார்ட்டிகளோட ஆசிரமம் ,மடம்னு போய்தான் வாங்கனும்னுல்ல. ஜஸ்ட் ஒரு கமிட்மென்ட். தட்ஸால்.



இத்தனை கட்டத்தை வெற்றிகரமா தாண்டிவந்த பிறகு மறுபடி எம்.ஜி.ஆர் கேரளாவுல தான் படிச்ச ஸ்கூலுக்கு போய் ரெஜிஸ்டரை பார்வையிட்டாரே அது மாதிரி ஒரு பங்க் கடை வைக்கலாம். ஒரு பீடா கடை வைக்கலாம். அப்போ கரும யோகம்னா என்னனு புரியும். சனத்துக்கும் புரியவைக்கலாம்.



அதைவிட்டுட்டு வீரப்பனுக்கும் மீசை இருக்கு, தேவாரத்துக்கும் மீசை இருக்கு ரெண்டும் ஒன்னுதான்னிட்டா எப்படி? சரி மீண்டும் கீதைக்கே வருவோம்.



நாம இத்தனை நாழி டிஸ்கஸ் பண்ணோமே அதே வரியை வேற வார்த்தைல சொல்றார் கண்ணன் ( அதாங்க கீதாசிரியர்). அதையும் பாருங்க.



//எவனொருவன் ஆன்மிகமும் செய்கை செய்வதும் ஒன்றே என்று தெளிவு பெறுகிறானோ அவனே விவரம் தெரிந்தவன்.//



இந்த ஸ்டேட்மெண்ட் ரொம்ப மொட்டையா இருக்கு. திராட்சையும், பெண்ணோட கண்ணும் ஒன்னுதான். எதுவரை ? நிறத்துல, பளபளப்புல மட்டும்தான். திராட்சை பார்க்க முடியுமா? இல்லே கண்ணைதான் சாப்பிடமுடியுமா?



ஆன்மீகமும், செய்கை செய்வதும் ஒன்றே என்று தெளிவு பெற்றவர் நித்யானந்தாதான் போலும்.



மேற்படி ஸ்டேட்மெண்டுக்கு சின்ன வார்த்தைய சேர்த்தாதான் அது முழுமை பெறும்.



பலனை எதிர்பாராத செயலும் ஆன்மீகம்தான். பலனை எதிர்ப்பார்த்து செய்யப்படற ஆன்மீகமும் வெறும் செயல்தான்.



இப்படி சுத்தி வளைக்கிறதை விட ஸ்ட்ரெயிட்டா சொல்றேன் பாருங்க ,



" சுய நலமற்ற செயலும் ஆன்மீகம்தான். சுய நலம் கலந்த ஆன்மீகமும் செயல்தான்.



விளக்கம் எப்படி? இன்னைக்கு இது போதும் மீதியை நாளைக்கு பார்ப்போம்.