Friday, May 14, 2010

மதக் கலவரம் @ 60 லட்சம் ஸ்ரீராம்சேனா ஆஃபர்

அண்ணே !
வணக்கம்ணே. இந்த பகீர் பதிவோட இன்னைக்கும்
பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி- 5
தொடர்பதிவு தொடருது. உபரியா
கண்ணா நீ ஜெயிச்சுட்டே: 2 
பதிவோட இரண்டாம்  பாகமும் போட்டிருக்கேன்.வழக்கம்போல அந்தந்த தலைப்பு மேல க்ளிக் பண்ணி  படிச்சுருங்கண்ணா

ஈட்டி எட்டினவரை பணம்  பாதாளம் வரைனு கேள்விப்பட்டிருப்பிங்க. பணத்தை வச்சு அ பணத்துக்காக என்னென்ன கருமாந்திரம் பிடிச்ச வேலைகளையோ செய்து கொடுக்க டை கட்டின மாமா பசங்க எல்லா உயர்ந்த இடத்துலயும் இருக்கானுக.

கொலை, மிரட்டல்,கிட்னாப்புன்னு எந்த ப்ராஜக்டாயிருந்தாலும் சலூன் மாதிரி ஒரு ரேட்டை போட்டு வச்சிட்டு முடிச்சு தர ஆளிருக்கு,கும்பல்களிருக்கு .இல்லேங்கலை.

ஆனால் முதல் தடவையா மதக்கலவரம் ஏற்படுத்த கூட ஒரு ரேட்டை போட்டு பணம் வாங்கி கேமரா கண்களுக்கு சிக்கின பெருமை இந்துமத சாம்பிரதாய காவலர்களான ஸ்ரீராம் சேனாவோட தலைவர்  -ப்ரமோத் முத்தாலிக்குக்கும் அவரது சிஷ்ய கோடிகள்க்கும் மட்டுமே கிடைத்திருக்கு

கர்னாடக மானிலம் ,மங்களூர்ல  2009 ஜனவரி மாசம்  - பப் கள்ள நுழைஞ்சு  - இந்து மத காவலர்கள் என்ற போர்வையில் -  பெண்களை அடித்து உதைத்து அராஜகம் செய்த   இந்த க்ரூப்   மதகலவரம் ஏற்படுத்த - டிமாண்ட் பண்ண  சர்வீஸ் சார்ஜ்
 60 லட்சம்.


தெஹல்கா  நாளிதழும் + ஒரு டிவி சேனலும் நடத்திய  - ஸ்டிங்க் ஆப்பரேஷனில் தான் இவர்கள் சிக் கென்ன்று சிக்கியிருக்கிறார்கள். அதுவும் கையும் களவுமாக.

இந்த பன்னாடைகளை கேமராவுல சிறைபிடிக்க  மேற்படி தெஹல்கா + சேனல் நிருபர்கள் ஒரு மாத காலம் முயற்சி பண்ணியிருக்காங்க.

முத்தாலிக்கோட சிஷ்ய கோடிகளான வசந்தகுமார், பவானி,பிரசாத், அத்தாவர் ஆகியோர் இந்த ஆப்பரேஷனில் மாட்டியுள்ளனர்.

இதில்  பிரசாத் என்பவரும்  அத்தாவர் என்பவரும்  மங்களூர் சிறையில் உள்ளனர்.  அங்கும் ஸ்டிங்க் ஆப்பரேஷனில் கலந்து கொண்ட  நிருபர்களுடன் சந்திப்பு நடந்திருக்கு..

இதுல பவானிங்கறவர்  பக்கா ப்ரொஃபெஷ்னல்  போல - எங்கே  எந்த ஏரியால கலவரம் செய்தா எந்த அளவுக்கு நஷ்டம் ஏற்படும்னு கூட கொட்டேஷன் போட்ட கணக்கா சொல்லியிருக்கார்.

முஸ்லீம்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதிகளில் கலவரம் ஏற்படுத்தினால் தூள்னு சொல்லியிருக்கார்.

முஸ்லீம்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதிகளில் கலவரம் ஏற்படுத்தினா சூப்பர் இம்பாக்ட் இருக்கும்னு டிப் வேற கொடுத்திருக்கார்.

தேவை ஏற்பட்டால் உபயோகிக்க ஆம்புலென்ஸ்களை கூட ரெடி பண்ணிக்கிறோம்
போலீஸ் பிரச்சினை வராம  இருக்க அவிகளுக்கு கூட மியாமியா தரனும்னு சொல்லியிருக்காரு.

அவதார்,  பவானி  மட்டுமல்லாது முன்னர் பஜ்ரங்கதள் , ஆர்.எஸ்.எஸ் ல் இருந்த ஜிதேஷ் எனும் குற்றவாளி கூட இந்த ப்ராஜக்ட்ல (?)  வேலை செய்ய முன் வந்திருக்காரு.

நிருபர்கள் முதல்ல தொடர்பு கொண்டது  முத்தாலியை. அவர் கைகாட்டின பிறகு இதரரை சந்திச்சு சந்தி சிரிக்க வச்சிருக்காய்ங்க.

முஸ்லீம் தீவிரவாதி, வன்னிய தீவிரவாதி ,தமிழ் தீவிரவாதின்னு செய்தி போடற மீடியாக்களுக்கு ஒரே ஒரு சொல்.

அட டுபுக்குங்களா..  திருடன்னா வெறும் திருடன் தான் இருக்க முடியும். இந்து திருடன், முஸ்லீம் திருடன்னு  இருக்க முடியாது. ஒருத்தன் எப்ப திருடன்னு பிடிபடறானோ, நிரூபிக்க பட்டுர்ரானோ உடனே மதம் கழண்டுக்குது.

அதே மாதிரிதான் தீவிர வாதமும். இந்த பொறுக்கி,பன்னாடைகளை இந்து தீவிரவாதினு குறிப்பிடச்சொல்லி கேட்கலை.

இனி எவனாச்சு தீவிரவாதி பிடிபட்டா உடனே அவன் ஜட்டிய கழட்டி பார்க்காதிக. அவன் தீவிரவாதியா இல்லையானு எழுதுங்கனு தான் சொல்றேன்.