Wednesday, May 19, 2010

கீதை தொடர் மீதான எதிர்வினை

தம்பி ஸ்மார்ட்டு..
நான் நாஸ்திகன்னு டிக்ளேர் பண்ணியிருக்கே . அதுக்கு என் வாழ்த்துக்கள். ஆஸ்திகனா இருக்கிறது ஆத்தோட போற மாதிரி நீஞ்ச தெரியனுங்கற அவசியமே கிடையாது. நீ நாஸ்திகன்னு டிக்ளேர் பண்ணியிருக்கே . நீஞ்ச தெரிஞ்சுக்க கண்ணா! நிறைய எழுத்துப்பிழை இருக்கு. (அர்த்தமே மாறிப்போற அளவுக்கு).

ப்ளாக்ல எதையாவது விமர்சிக்கனும்னு  முடிவு பண்ணிட்டா லவ் லெட்டரை படிச்ச மாதிரி ஆயிரம் தடவை படிக்கனும்.  நீ பாவம் ஆடு மாதிரி நுனிப்புல்  மேஞ்சுட்ட  போலிருக்கு.

//கீதையின் எந்த இடத்தில் இரண்டும் ( கர்ம யோகம் , கர்ம சன்னியாசம் )  சமம்//னு சொல்லியிருக்குனு கேட்கறே. இது புள்ளிமானோட உடம்புல எங்கே புள்ளியிருக்குனு கேட்கிறாப்ல இருக்கு.

கீதாசாரியர் ஒரு இடத்துல சமம்ங்கறாரு. இன்னொரு இடத்துல கர்ம யோகமே பெட்டர் சாய்ஸுங்கறாரு. மறுபடி ஒரு இடத்துல ரெண்டும் ஒன்னுதானு தெரிஞ்சிக்கிட்டவன் தான் விவரம் புரிஞ்சவன்னு சொல்றாரு. இன்னொரு தடவ கடந்த இரண்டு பதிவுகளை புரட்டிரு கண்ணா..கு.பட்சம்  கண்ட்ரோல் ஃபைண்ட் கீ உபயத்துல "சமம்"ங்கற வார்த்தையை தேடிப்பாரு.

//பலனை வாங்காதே என்று கூறியதாக கற்பனை செய்து//

ஸ்மார்ட்டு ! என்னை என்ன வேத பாடசாலைல படிச்ச கிளிப்பிள்ளனு நினைச்சியா வாழ்க்கைய படிச்சவன் நைனா..  நான் பலனை வாங்கறது விக்கறத பத்தி ரெய்ஸ் பண்ணவே இல்லே. எதிர்பார்க்கிறதை பத்திதான் பேசியிருக்கேன். 


//ஒரு செயல் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால் முழு ஈடுபாடு வேண்டும் எதையும் எதிர்பாக்காமல் இயற்கையாக செய்யும் செயல், ஏதோவொன்றை எதிர்பார்த்து அதற்காக செயற்கையாக செய்யும் செயலைவிட சிறந்ததுதானே.//


இயற்கைல பலனை எதிர்பார்க்காம செயல்படற அளவுக்கு  மன்சனுக்கு இயற்கையோட போதிய நெருக்கம்  இல்லடா செல்லம்!

//ரெகுலர்ல படிச்சவனெல்லாம் புத்திஜீவிபோலவும் தொலை தூரக் கல்வியில் படிச்சவன் எல்லாம் முட்டாள் போலவும் இடத்தை வைத்து மட்டும் கல்வியை கணிக்கமுடியாதே. அவனிடத்திலுள்ள ஆர்வம் தானே முக்கியம்//

ஆர்வம் ஆட்டுக்குட்டிங்கறத பத்தி நான் ரெய்ஸ் பண்ணலை தலை. நீ தொலை தூர கல்வில ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தாலும் சர்ட்டிஃபிகேட்ல ஸ்டேட் ஃபர்ஸ்டுன்னுதானே இருக்கும். உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாயிராதுங்கண்ணா..

என் கான்செப்ட் என்னடான்னா  கர்ம யோகம், கர்ம சன்னியாசம்ங்கற ரெண்டுமே மெகன்னாஸ் கோல்ட் சினிமால வர்ர புதையல் மேப் மாதிரி .  மேப்பை வச்சிக்கிட்டா புதையல் கிடைச்சுராது தலை. ( இன்னைக்கு பதிவை படிங்க கோனார் கைட் மாதிரி விளக்கியிருக்கேன்.இந்த ரெண்டுமெ அல்ஜீப்ரா மாதிரி குழப்படி சமாச்சாரம். கரணம் தப்பினா மரணம் மாதிரி தப்பா புரிஞ்சிக்கப்பட அதிக வாய்ப்புள்ள விஷயங்கள் . 

இந்த ரெண்டையும் தனித்தனியா சொன்னதே குழப்பம். இதுல ரெண்டும் ஒன்னுதான்னு ஒரு சமயம், கர்ம யோகம்தான் பெட்டர் சாய்ஸுன்னு வேற  ஒரு  சமயத்துல சொன்னது பயங்கர குழப்படி. தமிழ் சினிமால பஞ்ச் டயால்குக்கெல்லாம் இன்ஸ்பிரேஷன் கீதைதான். நான் புலி,சிங்கம்னு பயாக்ரஃபி சேனல் மாதிரி கரடி விட்ட  நேரத்துல இது ரெண்டையும் இன்னம் கொஞ்சம் டீட்டெய்ல்டா பீசியிருக்கலாம்.

நான் கர்ம யோகத்தையோ, கர்ம சன்னியாசந்த்தையோ நக்கலடிக்கலை. அதுக்கு பின்னாடி உள்ள பிராமண இனத்தோட சதியைத்தான் விளக்கினேன். ரெண்டையும் சமம்னு புரிஞ்சிக்க நிறைய ஒர்க் அவுட் தேவை. அதை என்னமோ தமிழ் வார இதழ் அறிவு போட்டிக்கான விடை மாதிரி கொடுத்து ச்சூ காட்டிட்டு போறது ஒரு பொறுப்பான ஆசாமிக்கு தகாதுன்னுதான் சொன்னேன்.ரெண்டும் சமம்னு ஒரு பத்தில சொல்லிட்டு  கர்ம யோகம் பெட்டருங்கறது முரண்பாடில்லையா? இதுக்கு பின்னாடி ஹிடன் அஜெண்டா இல்லையான்னு கேள்வி எழுப்பியிருந்தேன்

என் கருத்து:
//மனிதனுக்கு வர்ர மனக்கோளாறுகளுக்கு முதல் காரணம் அவன் தன் மனதை அடக்கறதுதான். (அதுக்காக மனம் போன போக்குல மனிதன் போகனும்னு நான் சொல்லலே.)//
உங்க கேள்வி:
என்னங்க கடைசியில் மனம் போன போக்குல போகாதேன்னு அந்தர் பல்டி அடிக்கிறீங்க.

என் விளக்கம்:
ஸ்மார்ட் அண்ணாச்சி !  நான் எழுத வந்தது கீதைய பத்தி அதனால மனித மனதை பத்தி பெரிசா விளக்கலை.(உங்க குழப்பத்துல லாஜிக் இருக்கு. இதுக்கு என்னொட தவளைப்பாய்ச்சல் நடையும் ஒரு காரணமாயிருச்சு) இப்ப விளக்கறேன். (பல்லை இல்லிங்கண்ணா) மனித மனம் ஈகோங்கற பாலிடால் கலந்துட்ட பால் குடம். சில சமயம் பால் அடில தங்கி பாலிடால் மேல வந்துருது. அந்த நேரம் பார்த்து மன்சங்க  "மனம் இயற்கையின் அந்தர்பாகம். நான் மனம் வழி போறேன்"னா எய்ட்ஸும் வரலாம். தந்தில செய்தியாவும் வரலாம். சில அரிய சந்தர்ப்பங்கள்ள (உ.ம்: மனிதனுடைய ஈகோவானது மரண அடி வாங்கின சமயத்துல) பாலிடால் எல்லாம் அடில தங்கிருது. பால் மேலே வருது. அப்போ மனம் சொல்வதை கேட்டால்  நீங்க இயற்கைக்கு நெருக்கமா போறிங்க)

/(மனம்) /உங்க ஜாதகம் சொன்ன பாதையில் போகணும்னு சொல்லவரீங்களா?//

உங்க மனம் உங்க ஜாதகம் சொன்ன பாதைல போகனும்னு கூட நான் சொல்லமாட்டேன். சர்வ ஸ்வதந்த்ரி ஆன இயற்கை அன்னையின் செல்லப்பிள்ளைகள் நவகிரகங்களின் கால்களின் கீழே ஃபுட் பால்களாக இருப்பதை மாத்தத்தான் முதல்ல நவீன பரிகாரங்களை ரிலீஸ் பண்ணேன்.அப்புறம் நவகிரகங்களிலிருந்து விடுதலை தொடர் பதிவையும் போட்டேன்.ஆனால் ஒன்னு தலீவா.. சனங்க  மனம் மட்டும் என் ஜாதகம் சொல்ற பாதைல போனா அஞ்சுவருசத்துல ஆப்பரேஷன் இந்தியா 2000 அமலாயிரும். இந்தியாவே சொர்கமாயிரும்ல.

//ஒருவனால் அடக்கமுடியதவிஷயம் எல்லாராலும் அடக்கமுடியாது என்று கேள்வி ஞானத்தை அடைத்துவிட்டீங்களா? //

இல்லாததை அடக்க வேண்டிய அவசியமே இல்ல அண்ணாச்சி. நான் சொல்றது
(  ஸ்வப்ன ஸ்கலிதம், சுய இன்பம் இத்யாதி வழிகள்ள சக்தி இழந்த நண்பர்களை)  இருக்கிறதை அடக்கவே முடியாதுங்கண்ணா. அது பிரம்மனாவே இருந்தாலும். ஒரு தரம் சொர்கத்து கேபரே கேர்ள் ஆடறப்ப அவருக்கு  ......... நழுவிருச்சாம்ல .

என் கருத்து:
//புலனடக்கம் புண்ணாக்குனு கண்டதையும் அடக்கினா அந்த சமாசாரம் மேம்போக்கான கான்ஷியஸ் மைண்ட்லருந்து ஆழமான சப்கான்ஷியஸ் மைண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆயிருது. //
தங்கள் விமர்சனம்:
முயற்சி செய்யாமலே முடிவு கட்டியாச்சு. அப்போ அடக்கி வச்சவங்களோட சப்கான்ஷியஸ் மைண்டுல அதுயிருக்கும் என்கிறீங்க. இங்க தான் நிக்கிறது கீதை. எதையோ எதிர்பார்த்து நீங்க அடக்கமுயன்றால் (செயற்கையாக) அது அப்படித்தான் போகும், பலனை எதிர்பார்க்காமல் அடக்கினால் சப்கான்ஷியஸ் மைண்டுலையும் நிக்காது.

என் கேள்வி:
முயற்சி செய்யாம முடிவு கட்டறதெல்லாம் நம்ம சரித்திரத்துல கிடையாதுஅண்ணாத்தை !   நாலாம் கிளாஸ் படிச்ச காலத்துலயே பருவம் படிச்சவன்.  அந்த நாள் முதல் இந்த நாள் வரை சனத்துக்கு  நாம தான் கன்சல்டன்ட் தெரியும்ல.

பித்துக்குளி முருகதாஸ் தெரியுமா?  வாழ் நாள் எல்லாம் முருகன் புகழ் பாடுவேன்னாரு. ஆனா எல்லாம் நின்னு போற காலத்துல கண்ணால கட்டிக்கிட்டாரு.

விஸ்வாமித்திரர் கதை தெரியும்ல. அவரை விட புலிங்க நாட்ல இருக்காங்களா தலீவா.. இயற்கைலயே இல்லைன்னா ( செக்ஸ் பவர்) அதை அடக்கவே தேவையில்லை. இருந்ததுன்னா  அதை அடக்கவே முடியாது.இது  சைன்ஸு கண்ணா தெரியும்ல...

//மனோதத்துவ சாஸ்திரத்தின் அடிப்படைக்கே விரோதமான புலனடக்கத்தை பத்தி பேசற பகவத்கீதை தலை சிறந்த மனோதத்துவ நூலாம். //
மனம் சொல்வதையெல்லாம் செய்தால் மனிதனுக்கு மூளை தேவையில்லையே! மனதை சரியான பாதைக்கு அனுப்பினால்தானே  (அனுப்பத்தான்?) மனோதத்துவமே தேவை

மனம் சொல்றதை கேட்கிறது மனோதத்துவம். நீ செக்ஸு, வன்முறை, சேடிசம், மசாக்கிசம் ,பணம்,பதவி ,புகழாசைன்னு தனித்தனியா பார்க்கிறே. உன் வாய் இதையெல்லாம் தனின்னு தான் சொல்லுது. உன் வாய் சொல்றதை கேட்க சைக்காலஜி தயாராயில்லை.

உன் மனசு எல்லாத்தையும் ஒன்னாவே பார்க்குது. ஒன்னத்துக்கு அடுத்ததை ஆல்ட்டர் நேட்டிவா பார்க்குது. சொல்லுது. இப்படி  மனம் சொல்றதை கேட்கிறது தான் சைக்காலஜி. அதுக்குண்டான அவுட்லெட்டை ப்ரிஸ்க்ரைப் பண்றது தான் சைக்காலஜி. சரியான பாதைன்னு ஈர கோவணத்தை இழுத்து கட்ட சொல்றதும், காமப்பேயா மாத்தறதும் மத்தாலஜி ( மதங்களின் உபதேசம்)

என் கருத்து:

//பரமாத்மாவை இயற்கையின் மறு உருவா,உருவகமா, பிரதி நிதியா காட்டற கீதாசாரியர் புலன் களை அடக்குவது இயற்கைக்கு விரோதமானது அதாவது கிருஷ்ணருக்கே விரோதமானதுங்கற சங்கதியை வசதியா மறந்துர்ரார்.//

உங்க விமர்சனம்:

வயலில் புல் முளைப்பது இயற்கை என விடமுடியாது.

என் விளக்கம்:
அப்படி விடாம வீட்டு மனைகளாக்கினதும், சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கினதும் தான் இப்ப தண்ணி லாரி பின்னாலே ஓட வச்சிருக்கு அண்ணாத்தை ..

நீங்க வெளியிட்டிருக்கிற குவிஸ்:
who is that உட்டாலக்கடி?
a)இந்தியாவை பணக்கார நாடாக்கிட திட்டம் தீட்டி அதை அமல் படுத்தியே தீர்வதென்று பிடிவாதமாய் உழைத்து ஏழையானவன்.
b)2006 ஹிட்ஸ் மட்டும் கண்டு இருட்டில் இருந்தவன்

என் ரியாக்சன்:
அசத்தப்போவது யார் பாணியில் படிக்கவும். நன்றி!  நன்றி!!  நன்றி!!!

குவிஸ்:

//c)தொழில் முறை ஜோதிடனாக மூடநம்பிக்கையை வளர்ப்பவர்.//
//d)நிர்வாண உண்மைகள்//

ஸ்மார்ட்டு கண்ணா.. பாவம் ரொம்பவே இர்ரிடேட் ஆயிட்டாப்ல இருக்கு. பிராமண விஷ விருட்சத்துக்கு எந்த உரங்களை போட்டு வளர்த்தாங்களோ, எந்த தண்ணீரை ஊத்தி வளர்த்தாங்களோ  அதே உரங்களையும், அதே தண்ணீரையும் என் ஸ்டைல்ல கெமிக்கல் ட்ரீட் மெண்ட் கொடுத்து அந்த விஷ விருட்சத்தோட தோட வேர்களை வெட்டி எறிய உலகமகா சதி பண்ணிக்கிட்டிருக்கேன்.  இந்த சதில ஒரு பாகம்தான் தொழில் முறை ஜோதிடன் என்ற மாறு வேஷம். நான் மூட நம்பிக்கைய வளர்க்கலிங்கண்ணா.. ஒரு அக்மார்க் விஞ்ஞானத்துல அவாள் கலந்து விட்டுட்ட மூட நம்பிக்கைகளை பொறுக்கி எடுத்துக்கிட்டிருக்கேங்கண்ணா.. இந்த என் முயற்சிக்கு பெருமாளு, பெரியாழ்வாரு, பெரியாராழ்வார்லருந்து இந்த ஒட்டு மொத்த படைப்பே சப்போர்ட்டுங்கண்ணா..


நான் ஒரு குவிஸ் தரேன்:

கண்ணன் என்பவர் யார்?
பெண் வடிவெடுத்து ஈஸ்வருடன் ஹோமோ செக்ஸில் ஈடுபட்டவர்.
ஊரான் மனைவியர் குளிக்கும் இடத்துக்கு போய் அவிக ஆடைகளையெல்லாம் கவர்ந்து ரெண்டு கையால கும்பிட்டாதான் ஆடை வாபஸ்னு லந்து பண்ணவர். அவிகளோட ...... ஐ பார்த்து பரவசமானவர்.
திரவுபதிக்கு ஆயிரம் புடவை கொடுத்து மானத்தை காப்பாத்தினவர்.
இத்தனை லட்சம் வருஷத்துக்கப்புறமும் அண்டை வெளில மிதக்கிற தன் எண்ண அலைகள் மூலம் உண்மையான கீதையை எனக்கு உபதேசிச்சிட்டிருக்கிறவர்

தங்கள் வலைப்பூவில் வெளியாகியிருக்கும் இரண்டு கமெண்டுகள் தங்கள் (புதிய) பார்வைக்கு

வால் பையன்:
நேரம் காலமெல்லாம் பார்க்குறதில்ல, எப்ப என்ன தோணுதோ, அதை அப்ப செய்வேன்
ஸ்மார்ட்:
எங்கவூர் எருமை மாடும் அப்படித்தான் செய்யும். நான் உங்கள சொல்லல பொதுவா சொல்றேன்
வால் பையன்:
நிச்சயமாக மனிதனை விட எருமைமாடு கேவலமானதல்ல!, நான் ஒரு இயற்கை விரும்பி, எருமமாடு போல வாழ்வதில் எனக்கு மகிழ்ச்சியே!