Thursday, May 20, 2010

பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி :11

கீதையிலான பிராமணீய கலப்படங்கள் குறித்த கிழிப்பு தொடருது. கிருஷ்ணர் சொல்றதா கீதைல வர்ர கீழே உள்ள வரிகளை பாருங்க

//வேள்விகளையும் தவங்களையும் அனுபவிப்பவன் நானே//



தவத்தை அனுபவிக்கிறவன் நானேங்கற பார்ட்டை நானும் ஏத்துக்கறேன். அதாவது கண்ணன் ஒருத்தனே இல்லை நமக்கெல்லாருக்குமே இந்த கெப்பாசிட்டி இருக்கு. எங்கனயோ ஒரு பார்ட்டி அன்ன தானம் பண்ணா நமக்குள்ளயும் ஒரு வித குளிர்ச்சி பரவும். எங்கனயோ ஒரு ராஜ பக்சே நம்மாளுங்களை கொன்னு குவிச்சா நமக்குள்ளயும் ஏதோ செத்துப்போகுது. ( அங்கே படுகொலைகள் நடந்த நேரங்கள்ள இங்கே நடந்த கொலை,தற்கொலை,கொலை முயற்சி இத்யாதியோட நெம்பருக்கும், இதர நேரங்கள்ள நடந்த சம்பவங்களோட நெம்பருக்கும் பெரிய அளவுல வித்யாசம் இருந்தே தீரும்) இதை உணர கொஞ்சமே கொஞ்சம் சூட்சும புத்தி இருந்தா போதும்.



இந்த தியரியை டோட்டல் உலகத்துக்கு அப்ளை பண்ணா புரிபடறது கஷ்டம். ஸோ ஒரு சின்ன காலனி அ அப்பார்ட்மெண்டை எடுத்துக்குவம். அங்கன ஒரு தற்கொலை நடக்கப்போவுதுன்னு வைங்க. அது நடக்கறதுக்கு 6 மாசம் முந்தியே அங்கே ஒரு வித அமானுஷம் / ரெஸ்ட் லெஸ் நெஸ்/ பேட் வேவ்ஸ் பரவ ஆரம்பிச்சுரும். அட்மாஸ்ஃபியர் மாதிரி நூஸ்ஃபியர்னு ஒரு வார்த்தை உண்டு. அதுக்கு எண்ணங்களால் உருவாகும் சூழல்னு அர்த்தம். இந்த நூஸ்ஃபியர் ஸ்பாய்லாயிரும். அந்த காலனி /அப்பார்ட்மெண்ட்ல அதுவரை சண்டையே போட்டறியாத தம்பதி சண்டை போட்டுப்பாங்க. நோயே கண்டறியாத பார்ட்டிக்கு கடுமையான ஜுரம் வரும் . இப்படி அனேகம் நடக்கும்.



இந்த அடிப்படையில //தவங்களை(யும்) அனுபவிப்பவன் நானே//ங்கற கருத்தை ஏத்துக்கிடலாம்.



ஸ்வாமி விவேகானந்தா கூட உன் பிரார்த்தனைக்கு பலன் எங்கேயிருந்தோ வரலே கண்ணா.. உனக்குள்ளருந்தே வருதுங்கறார். தவத்தை அனுபவிக்கிறது மட்டுமில்லே அந்த தவத்துக்கு வரம் கொடுக்கிறது கூட உங்களுக்குள்ள இருக்கிற "சக்தி" தான்.



ஆனால் இதே வாக்கியத்துல முத பார்ட்டை பாருங்க //வேள்விகளையும் தவங்களையும் அனுபவிப்பவன் நானே//



வேள்வியை என்னத்த அனுபவிக்கிறது ? சொர்கம்னு ஒன்னிருந்தா இந்த பயலுவ பண்ற யாகம்/வேள்விலருந்து கிளம்பற புகை மண்டலம் தேவர்கள் கூட்டத்தை மூச்சுத்திணறல், காஃப், ப்ராங்கடைஸ், டி.பினு வர வச்சு அவிகளை ஒரு வழியாக்கியிருக்கும்.



சரி யாகம் பவர் ஃபுல். ஜென்யூன். பக்கானு சொல்ற பார்ட்டிங்களுக்கு ஒரு சவால்

ஆந்திர அரசு செயற்கை மழை பொழியவைக்கிறதுக்காக பல நூறு கோடி பணம் செலவழிச்சிக்கிட்டு இருக்குது. விரயமா விமானத்துல போய் மேகங்கள்ள சில்வர் நைட்ரேட் விதைச்சுட்டு வராய்ங்க.



கீதை தான் சொல்லுதுல்ல யாகத்தால மழை வரும்னு பேசாம ஆந்திரா கவர்ன்மெண்டுக்கிட்ட பேசி "செயற்கை மழையெல்லாம் எதுக்கு தெண்டம். நாங்க யாகம் பண்றோம் . மழை வந்தே உடும்"னு ஒத்துக்க வச்சி காண்ட்ராக்ட் எடுத்துக்க வேண்டியதுதானே. வேணம்னா இந்து மடங்கள், இந்து ஆசிரமங்களோட ( நித்யானந்தா ஆசிரமம் உட்பட) சொத்துக்களை பிணையா கூட வைக்கலாம்.



என்னய்யா கதை விடறிங்க. யாகத்தை எவனாச்சும் அனுபவிக்க முடியுமா? சகிச்சுக்கலாம். தட்ஸால். தலைவன் செத்தா லாரி டயரை கொளுத்தற தொண்டனுக்கும், மழை வரும்னு யாகம் பண்ற தெண்டனுக்கும் என்னய்யா வித்யாசம்?



லாரி டயரை மாதிரி இதையும் சகிச்சுக்கிடத்தான் முடியும். அனுபவிக்க முடியுமா ?

யாகம்/வேள்வி எல்லாம் உண்மையா இருந்தா எல்லா தேர்தல்லயும் எல்லா பன்னாடையும் ஜெயிச்சுத்தான் ஆகனும். ஏன்னா எல்லா நாதாரியும் யாகம் பண்ற கேஸுதானே. தோற்க ஆளே இருக்காதுல்ல.



யாகம் வெற்றிய தரும்னா அப்போ ஏன்யா தவலை, மூக்குத்தி, கவர்ல காசு, பாட்டில் எல்லாம் குடுக்குறாய்ங்க? ஆறும்,அருவியும்,ஏரியும், பச்சை புல்வெளியும் பசு கூட்டமுமா இயற்கைக்கு நெருக்கமா வாழ்ந்த கண்ணன் இயற்கையின் கொடையான காட்டுச்செல்வத்தை கரியாக்கிற யாகத்தை அனுபவிக்கிறேன்னு சொல்லியிருப்பாரா? ரோசிச்சுப்பாருங்க.



அடுத்து கிட்ன பரமாத்மா ஒரு பஞ்ச் டயலாக் உடறாரு.



" ஏழுலகிற்கும் இறைவன் நானே." சுபாஷ் சந்திரபோஸ் கீராரா பூட்டாராங்கற விஷயத்துல நடக்கிற மாதிரியே இந்த உலகங்கள் பற்றிய எண்ணிக்கை பத்தி கூட ஓயாத சர்ச்சை நடக்குது.



ஜரிதா போட்டவனுக்கு புதுசா ஒரு உலகம் விரியுமாம், ஃபுல் அடிச்சவனுக்கு ஒரு உலகம், கஞ்சா அடிச்சவனுக்கு ஒரு உலகம், சப்பை ஃபிகர் மடில படுத்தவனுக்கு ஒரு உலகம்னு கச்சா முச்சானு விரியறதா கேள்வி. அந்த காலத்து நாவல்ல ஹீரோயின் கண்ணை மூடினதுமே விரியற கனவுலகம் வேற..



திருக்குறள் அவ்வுலகு/இவ்வுலகுனு ரெண்டு உலகத்தை காட்டுது, மூவுலகுனு கேள்விபட்டிருக்கோம், இங்கே கிட்னர் ஏழு உலகம்ங்கறார். சில மாயா ஜால கதைகள்ள ஈரேழு பதினான்கு உலகம்னு வரும். சைன்ஸ்ல நம்ம சூரியன், சூரியனை சுத்தி கிரக கூட்டம் இருக்குதுல்ல. இதை சூரிய குடும்பம்ங்கறாய்ங்க . இந்த மாதிரி பல்லாயிரம் சூரிய குடும்பங்கள் இருக்கிறதா சைன்ஸ் சொல்லுது. இதில்லாம இந்த விசுவம் விரிவடைஞ்சுக்கிட்டே போவுதாம்.மகாவெடிப்புல ஆரம்பமான படைப்புதானே அந்த சூட்ல தான் இப்படி விரிவடையுதாம்.



(ஒரு பக்கம் சூடு ஆறிட்டே வருதாம் அதனால இந்த படைப்பு ஒரு பக்கம் சுருங்கிக்கிட்டும் வருதாம்)



அப்போ மொத்தம் எத்தனை உலகம் இருக்கும் ? குத்து மதிப்பா ஒரு கணக்கு போடுங்க. ஆனால் கிருஷ்ணர் என்னடான்னா ஏழு உலகத்தோட நின்னுர்ரார். அப்போ மத்த உலகத்துக்கு வேற ஒரு கிருஷ்ணர் உண்டா? டோட்டல் படைப்புக்கும் பேட்டன்ட் ரைட் என்னுதுங்கற பார்ட்டிக்கு மொத்தம் எத்தனை உலகம்னு தெரியாதா? இந்த ஒரு விஷயத்தை வச்சே சொல்லிரலாம். இந்த கீதைய சொன்னது கிருஷ்ணர் இல்லேன்னு. நாலாங்கிளாஸ் ஜியாக்ரஃபி பாடம் கூட தெரியாத பார்ட்டின்னு.





அடுத்து யோகம் - யோகி பற்றி கீதை என்ன சொல்லுதுனு பார்ப்போம்:



//யோகி யோகி என் கிறாயே எவன் அந்த யோகி என்று கேட்கிறாயா? குந்தியின் மகனே என்னையே நம்பி என்னையே நெருங்கி என்னையே சார்ந்து என்னை தொழுகின்றவனே எல்லா யோகிகளிலும் சிறந்த யோகி இது என்னுடைய முடிவு//



இங்கே கிருஷ்ணர் நம்ம ஜெயலலிதா, கலைஞர் ரேஞ்சுக்கு போயிட்டாரு. யாரெல்லாம் நிறைய கோவில்ல அபிஷேகம் அர்ச்சனை பண்ணி பிரசாதம் கொண்டுவராய்ங்களோ அவிகதான் ஜெ வுக்கு ஸ்ரேஷ்டம். யாரெல்லாம் தொகுதி பிரச்சினை, மானில பிரச்சினை, கழக பிரச்சினையை கண்டுக்காம தன்னை சுத்தி சுத்தி வர்ரவுகதான் கலைஞருக்கு ஸ்ரேஷ்டம்.



//என்னையே நம்பி என்னையே நெருங்கி என்னையே சார்ந்து என்னை தொழுகின்றவனே // யோகின்னா. அவன் பத்மாசனத்துல உட்கார வேணாமா? மூக்கு நுனில நினைவை நிறுத்தி மூச்சை, எண்ணங்களை, எண்ணங்களுக்கிடையிலான இடைவெளிய கவனிக்க வேணாமா? அவன் பத்து வட்டி வாங்கினா பரவாயில்லையா? தன் அப்பா அம்மாவை முதியோர் இல்லத்துல சேர்த்தாலும் பரவாயில்லையா? என்னங்கய்யா இது ?



இந்த கீதைய கண்ணனே சொல்லியிருந்தா " தபாருப்பா. .. நான் என்ன அரசியல் தலைவனா தொகுதிய /மக்களை /கட்சிய/ கவனிக்காம என்னை சுத்தி சுத்தி வந்தா பதவியை தூக்கி கொடுத்துர.. ஏன் விரயமா என்னை வெளிய தேடறே? நான் உனக்குள்ள இருக்கேன்பா. நீ இந்த இயற்கையோட கையடக்க பதிப்புகண்ணா.. உன்னைபாரு...இந்த இயற்கைய பாரு. இதுல இருக்கிற ஒழுங்கற்ற ஒழுங்கை பாரு. நான் தான் இயற்கையின் வடிவா என்னை நான் வெளிப்படுத்திக்கிட்டிருக்கேன் . இயற்கையும் நானும் வேறில்லை. இயற்கை உனக்கு கொடுத்திருக்கிற கடமைகளை நிறைவேற்று. உன்னை நீயே ஒரு சாட்சியா இருந்து கவனி. இதான் தியானம். ஒழுங்கா தியானம் பண்ணு. வெறுமனே எனக்கு ஜால்ரா போட்டு எனக்கு ஆகிறது ஒன்னுமில்லைன்னு சொல்லியிருப்பாரு



ஆனால் மேற்படி ஸ்டேட்மென்ட்டுக்கு ஓனர் ஒரு ஐயர். அதனாலதான்

//என்னையே நம்பி என்னையே நெருங்கி என்னையே சார்ந்து என்னை தொழுகின்றவனே யோகி/ன்னு கிருஷ்ணர் சொல்றதா பீலா விடறார். ஏன் ? எதுக்கு?





எவனாலயும் இப்படி வாழமுடியாது. அப்படி வாழாத பட்சத்துல அவனுக்குள்ள குற்ற மனப்பான்மை வரும். வந்தா அவன் அவாளை அப்ரோச் பண்ணுவான். அப்போ அவனை சரண்டர் பண்ணிக்கிறது ஈஸி. இதான் நூலாசிரியரோட வியூகம்.



என்னைப் பொருத்தவரை இயற்கைதான் இறைவன். இயற்கையிலிருந்து வந்த மனிதர்கள் தான் இறைவனின் வாரிசுகள். இயற்கையை புரிஞ்சிக்கிட்டு இயற்கையை பணிஞ்சு, பாதுகாத்து, இணக்கமா வாழற வரைக்கும் இந்த உலகமே ஸ்வர்கம். இதுதான் கிருஷ்ணனுக்காக நாம செய்ற தவம், வேள்வி எல்லாமே.



இப்படியொரு வாழ்க்கைய வாழ்ந்தா தியானம்,யோகம்லாம் மனிதர்கள் கிட்டே ஆட்டோகிராஃப் கேட்டு முண்டியடிக்கும்.



அடுத்த பத்திய பாருங்க



//அர்ச்சுனா ! யார் மூன்று வேதங்களையும் படித்து கிடைப்பதற்கு அரிதானதும் ஒரு கொடியில் இருந்து கிடைப்பதுமான சோமபானத்தை அருந்தி தங்கள் பாவங்களுக்கு விடை கொடுத்து அடிக்கடி வேள்விகளால் என்ன பூஜித்து சொர்கத்தை அடைய விரும்புகிறார்களோ அவர்கள் தேவருலகத்தில் திகட்டாத சுகம் முழுவதும் அல்லும்,பகலும் அனுபவித்து வாழ்கிறார்கள்.//



//அர்ச்சுனா ! யார் மூன்று வேதங்களையும் படித்து//



நான்குனு வந்திருக்கனும். அச்சுப்பிழை போலிருக்கு. விட்டுருவம். வேதங்களை பத்தி ஏற்கெனவே சொல்லியிருக்கேன். முதல்ல பொருளை பாருன்னாங்க, நான் ப்ராமின் வர்கங்கள்ள ஏற்பட்ட கல்வி வளர்ச்சி காரணமா அது புஸ்வானம்னு தெரிஞ்சு போன பிறகு பொருளை பார்க்காதே உட்பொருளை பாருன்னு டுமீல் விட்டாய்ங்க. அதுவும் ஒரு மண்ணுமில்லைன்னு நம்மாளுங்க ப்ரூவ் பண்ண பிறகு ரிதம், டெசிபல், ஸ்ருதின்னு ரீல் விட்டாய்ங்க. ஏ.ஆர் ரஹ்மானோட ஸ்ருதிதான் வையத்தை ஆளுதே தவிர வேதம்லாம் வெறுமனே அவாளுக்கும், திருந்தாத சில சூத்திர ஜென்மங்களுக்கும் மட்டும் பரிமிதமாயிருச்சு.



//ஒரு கொடியில் இருந்து கிடைப்பதுமான சோமபானத்தை அருந்தி//



இது வெறுமனே டாஸ்மாக்ல கிடைக்கிற சரக்கு இல்லிங்கண்ணா அதை விட காட்டம். சட்டத்தால தடை செய்யப்பட்ட பானம். இதை அருந்தி என்ன செய்யனும்னு அடுத்த வரில பார்ப்போம்.



//(சோம பானத்தை அருந்தி ) தங்கள் பாவங்களுக்கு விடை கொடுத்து//



சோம பானங்கறது டாஸ்மாக் சரக்கை விட காட்டமானது இன்றைய மானங்கெட்ட அரசுகளால் கூட தடைசெய்யப்பட்ட போதை வஸ்துன்னு சொல்லியிருக்கேன். இதை அடிச்சா பாவங்கள் குட் பை சொல்லிருமா ? நோ.. மிஞ்சி போனா பாவங்கள் பற்றிய நினைவு கொஞ்ச நாழிக்கு குட் பை சொல்லலாம். அதே சமயம் " நான் மனிதன். மிருகம் போல நடக்க கூடாது"ங்கற எண்ணம் கூட குட் பை சொல்லிரும் அண்ணாத்தை.



பார்த்திங்களா பாவங்களுக்கு விடை கொடுக்க இன்னா மாதிரி வழி சொல்லுது கீதை? ராமதாஸு, அன்புமணில்லாம் 3 மணி நேர சினிமால ஜஸ்ட் ஒரு நிமிசம், ரெண்டு நிமிசம் வர்ர பீடி,சிகரட் சீனுக்கே அவ்ளோ சீன் போட்டாங்களே பல்லாயிரம் கோடி காப்பீஸ் புத்தகமா, சி.டி.யா, டிவிடியா வித்திருக்கிற கீதைல, இவ்ளோ பகிரங்கமா போதைக்கு விளம்பரம் தர்ராய்ங்க, போதைய ஜஸ்டிஃபை .

பண்றாய்ங்க,கீதைய பத்தி பேச ராமதாஸ் அண்ட் கோ தயாரா?



பாரதியார் ஒரு தரம் வீட்டை விட்டு வெளிய வர்ரச்ச எதிர்த்தாப்ல ஒத்தை அய்யரு வந்தாராம்.அப்போ பாரதியாரோட நண்பர் ஒருத்தர். "சகுனம் சரியில்லையே"ன்னு சொல்ல பாரதியார், " யோவ் கள்ளுபானை எதிர்க்க வந்தா நல்லது தானே"ன்னு கேட்டாராம். நண்பர் " நீங்க கேட்கிற கேள்விக்கும் இந்த சிச்சுவேஷனுக்கும் என்ன

சம்பந்தம்னு கேட்க பாரதியார் சொன்னாராம் " எதிர்த்தாப்ல வர்ர அய்யரு மொடா குடியன். அவனோடது வயிறுல்ல கள்ளுப்பானை"ன்னாராம். பாரதியார் காலத்துலயே இதான் நிலைமை.



இப்போ லிக்கர், கோழிக்கறி,ஆட்டுக்கறி,முட்டையெல்லாம் விலையேற டிமாண்ட் எகிற காரணமே "அவாள்" கூட சாப்பிட ஆரம்பிச்சுட்டதுதான். பிராமணன் என்றால் பிரம்மத்தை (இயற்கையை) அறிந்தவன்னு அர்த்தம். கிறிஸ்தவ பேர்கள்ள ஒளிஞ்சிக்கிட்டு "அவாள்" போடற கமெண்டை பார்த்தா சரோஜா தேவி நாவல் எல்லாம் இவாள் கிட்டே பிச்சை எடுக்கனும். அப்புறம் ஏனய்யா உங்களுக்கு இந்த கேவலமான புத்தினு கேட்டா " நானெல்லாம் காயத்ரி சொல்றவன் தெரியும்ல"ன்னு ப்ளாக் மெயிலிங் வேறே.





அடுத்த பத்திய பாருங்க:



//ஒருவன் ஒழுக்கம் கெட்டவனாக இருந்தாலும் அவன் வேறு தெய்வத்தை வணங்காமல் என்னையே வணங்கினால்//



தமிழ் நாட்ல இருக்கிற ரவுடிப்பய எல்லாம் எதிர்கட்சில இருந்தா என் கவுண்டர், ஆளுங்கட்சில இருந்தா ரவுடி ஷீட் இருக்கும், கேஸு இருக்கும்,வாரண்ட் இருக்கும், போலீஸ் ரெக்கார்ட்ல தலைமறைவுன்னு இருக்கும். ஆனால் மேற்படி மாண்புமிகு ரவுடி பப்ளிக் ஃபங்க்ஷன்ல முதல்வர்,துணைமுதல்வர், மந்திரிங்க பின்னாடியே நின்னுட்டிருப்பான். ஏன்னா இவிக கீதையின் பாதைல நடை போடறாய்ங்க. அதான் கிருஷ்ணரே சொல்ட்டாரே.



//ஒழுக்கம் கெட்டவனாக இருந்தாலும் அவன் வேறு தெய்வத்தை வணங்காமல் என்னையே வணங்கினால் அவன் உன்னத உத்தமமானவன் என்றுதான் கருதவேண்டும்//



தூத்தேறிக்க...கிருஷ்ணனை கலைஞர்,ஜெ, ரேஞ்சுக்கு கொண்டுவந்துட்டாய்ங்களே. உண்மைலயே இந்த கீதைய கண்ணன் சொல்லியிருந்தா "த பாருப்பா என்னை வணங்கறது, பேனர் கட்டறது இதெல்லாம் தேவையில்லாத விஷயம், நான் தான் என்னை இயற்கையோட வடிவத்துல வெளிப்படுத்திகிட்டிருக்கேன். நீ எந்த தெய்வத்தை வேணா வணங்கு. வணங்காம போ. ஆனால் இயற்கைக்கு இணங்கு. தலை வணங்கு. இல்லே லைலா, ஷகீலானு வரிசை புயல்களோட வடிவத்துல சக்கரம்தான் மாப்ளே"ன்னிருப்பாரு. அதனால தான் சொல்றேன் இந்த கீதை கண்ணன் சொன்னதுல்ல.



இப்போ செலாவணில இருக்கிற கீதைலயே அய்யர் கண்ல படாம ஒளிஞ்சுக்கிட்டு தப்பிச்ச இந்த பத்திய பாருங்க



"எவன் எந்த வடிவத்துல வணங்கினாலும் அவன் என்னையே வணங்கறானு அர்த்தம். எவன் எந்த வடிவத்துல வணங்கினாலும் அவனுக்கு அந்த வடிவத்திலயே அருள்புரியறேன்"