Wednesday, May 5, 2010

தமிழ் நாட்ல தமிழன் செல்லாக்காசு

ஒரே டிவிடிய பார்த்து தெலுங்கும் கத்துக்கிடலாம். பணமும் சம்பாதிக்கலாம். பணத்தை பத்தி என்ன சொல்ல ? உங்களூக்கு தெரியாதா? 

தெலுங்கு கற்றுக்கொள்வதால் என்ன லாபம்? தமிழ் நாட்ல எப்படியும் தமிழனை,தமிழச்சியை  முதல்வராவோ, சூப்பர்ஸ்டாராவோ, ஏன் வெறுமனே அழகு பொம்மையா வந்து போற ஹீரோயினா கூட ஏத்துக்கிடமாட்டாய்ங்க. ஏதோ தெலுங்கை கத்துக்கிட்டு தெலுங்கு காரவுக மாதிரி படம் காட்னா ஒருவேளை ஏமாந்தாலும் ஏமாந்துருவாய்ங்க.

சிரஞ்சீவி ,ஜகன்,  ரோசய்யாவை பார்க்க வரலைன்னாலும் பெருமாளை பார்க்க திருமலா வந்து தானே ஆகனும். அப்ப உதவும்.

மேலும் நீங்க ஐடி ஆசாமியா இருந்து சைபர் சிட்டில வேலை  வந்தாலோ அ உங்க அண்ணா, தம்பி, மகன், பேரன் யார்னா சைபர் சிட்டில வேலையா இருந்து அவிகளை பார்க்க வந்தாலோ உதவும்.

ஆமாங்கண்ணே சென்னைலயே தெலுங்கு பேசறவுக அதிகம்னு ஒரு டாக். நெஜமாலுமா?

இப்ப தெலுங்குன்ன உடனே அது ஏதோ புது மொழினு ஒரு சைக்கலாஜிக்கல் ஃபீலிங் வந்துரும். அதெல்லாம் சொம்மா தலைவா ! தமிழை கொச்சையாக்கினா அது தெலுங்காயிரும். தெலுங்கை 100% இலக்கணமா பேசினா அது தமிழாயிரும். இதெல்லாம் ஒரே பெல்ட்டு பாஸு. திராவிட மொழிங்கறாங்களே அது நிஜம்தான்.

எங்கம்மா அரக்கோணம், எங்கப்பாரு ஆரணி. வயித்து பொழப்புக்காக சித்தூர் வந்த குடும்பம். அரக்கோணம் மணியக்காரர் தன் மகளுக்கு சித்தூர் அட்டெண்டரை மணமகனாக தேர்வு செய்த காலம் அது. விஷயம் அதில்லே. எங்கவீட்டுக்கு என் நினைவு தெரிஞ்ச காலமா ஒரே தயிர் காரி தான் தயிர் ஊத்தினாள். அவள் தெலுங்கு. எங்கம்மா தமிழ். அவள் தெலுங்குலயே பேசுவாள். எங்கம்மா தமிழ்லயே பேசுவாய்ங்க. இப்படியே காலம் ஓடிப்போச்சு.

நான் படிக்கிற வயசுல பத்தாம் வகுப்பு வரை  ரெண்டு ஆசிரிய பெருந்தகைங்க தமிழ் ,தெலுங்கு பாலிடிக்ஸ் பண்ணி எங்களை தெலுங்கு பசங்களோட சேர ஒட்டாம பண்ணிட்டானுவ. ஆனால் அந்த ரெண்டு பார்ட்டில ஒரு பார்ட்டி என்.டி.ஆரை கண்டபடி ஏச நான் என்.டி.ஆர் படம் பார்த்து என்.டி.ஆர் ஃபேனாயிட்டன். அதான் தெலுங்கோட முதல் பரிச்சயம்.  இன்டர் வந்த பிறகு எங்க ப்ரின்சிபால் ஒரு ஆளூ பயங்கர லாலா பார்ட்டி . நாகேஸ்வர்ராவ் மாதிரியிருப்பாரு. ப்ரேயர் மீட்டிங்ல கவிதையா பேசுவாரு. நான் அவரை மிமிக்ரி பண்ணி கிண்டலடிச்சிக்கிட்டிருக்கிறப்ப பின்னாடி வந்து நின்னு ஷாக் கொடுத்த சம்பவம் கூட நடந்ததுண்டு.

ஹை ஸ்கூல்லருந்து ஒன்னா படிச்சிருந்தாலும் டிகிரி வந்த பிறகுதான் ஜனா,  (இன்னைக்கு தெலுங்கு சினி ஃபீல்டுல ஒன் ஆஃப் தி ரைட்டர்.) என் சிந்தனையை சீராக்கி,  விரிவு படுத்தி,  பெரிய அளவில பாதிச்சு  இன்னைக்கு உன் வழியே பெட்டருப்பாங்கற ஸ்ரீனு ( முனி கிருஷ்ணுடுங்கற புனைப்பெயர்ல கவிதை தொகுப்பு கூட வெளி வந்திருக்கு)  எல்லாம்  க்ளோசானார்கள்.

இது அறிவு ஜீவிகள் க்ரூப்பு. இவிகளோட க்ளோசா இருந்துக்கிட்டே மாஸ் க்ரூப்ல கூட மூவ் பண்ணிக்கிட்டிருந்தேன். அவிகளுக்கு தெலுங்குல  லவ் லெட்டர்  டிக்டேட் பண்றது நாமதான்னா பார்த்துக்கிடுங்க.

எங்க வீட்ல எங்க பெரிய அண்ணன் பட்டி விக்கிரமாதித்தன் ( பைஹார்ட் கிங்) அவன் பெத்தபால சிக்ஷா (பெரிய சைஸ் அரிச்சுவடி) வச்சிக்கிட்டு முக்கிப்பார்த்தும் ஒன்னும் பேரலை. ஆனால் வெறுமனே தெலுங்கு குட்டிகளை கலாய்ச்சு பாட்டுப்பாடியும், லவ் லெட்டர் டிக்டேட் பண்ணியும், என்.டி.ஆர் டயலாக்ஸை பைஹார்ட் பண்ணி மிமிக்ரி செய்தும் எழுதவே தெரியாம பேச கத்துக்கிட்டேன்.

டிகிரி ஃபைனல் இயர் படிக்கறச்ச எலக்சன்ல தோத்த கடுப்புல அதை ஈடு செய்ய புதுசுன்னு ஒரு பத்திரிக்கை ஆரம்பிச்சேன். அதுலயே ஜனாவ வச்சி தெலுங்குல ஒரு சீரியல் எழுதவைக்க பார்க்க அவன் குளவியா கொட்டி கொட்டி தெலுங்குல கூட பத்திரிக்கை நடத்த வச்சிட்டான். நாலஞ்சு இஷ்யூலயே புட்டுக்கிச்சி. இந்த புதுசு பத்திரிக்கைல வெளியிட பெங்களூர் போய் எழுத்தாளர் சுஜாதாவை சந்திச்சேன்னா நம்பத்தான் வேணம். அப்ப பாணசங்கரில இருந்தார்னு ஞா.

சரி. நான்  தெலுங்கு கத்துக்கிட்ட கதை பெரிய்ய கதைங்க. தற்சமயத்துக்கு தெலுங்குல பல தடவை இந்த ப்ளாக்ல ப்ரஸ்தாபிச்ச மணி சீக்ரட்ஸ் டிவிடியை
அநியாயத்துக்கு கம்ப்ரெஸ் பண்ணி ப்ரிட்டீஷ் காரன் மாதிரி டிவைட் அண்ட் ரூல் பாலிசியோட ஆர்ச்சிவ் ஆர்க்லயும் யு ட்யூப்லயும் அப்லோட் பண்ணி வச்சிருக்கேன்.

ஏறக்குறைய பத்தாயிரம் ரூபா செலவுல நடந்த செமினார்ல பேசின பேச்சு இது. (எல்லாம் தயிர்தான். உபயம்: சித்தூர் ஸ்ரீ  கிருஷ்ணா ஜுவெலர்ஸ்)  மேலும் பிரபல சைக்கிரியாட்ரிஸ்ட்  சுதாகர் ரெட்டியும் செமினார்ல கலந்துகிட்டதோட என் ஸ்பீச்சையும் ரொம்பவே சிலாகிச்சாரு.

கீழ் காணும் லிங்க்ஸ கட் பேஸ்ட் பண்ணி டவுன் லோட் பண்ணி கேட்டுப்பாருங்கண்ணே. ஒரு தமிழன் சுந்தர தெலுங்குல பொழிஞ்ச சொல் மாரியை கேட்டுப்பாருங்கண்ணே.

விஷயம் பணத்தை பத்தி, மரணத்தை பத்தி .செக்ஸ பத்தினு சகட்டுமேனிக்கு தாவும். மானாவாரியா இங்கிலீஷ்  வோர்ட்ஸெல்லாம் யூஸ் பண்ணியிருக்கென். அதனால நீங்க  தெலுங்கே தெரியாத பார்ட்டினாலும் ஓரளவாவது புரியுங்கண்ணா. ட்ரை ப்ளீஸ்.

நம்ம நாட்ல  பணமில்லாதவுக  இருப்பாய்ங்க. ஆனா பணத்தேவை இல்லாதவங்க இல்லை.இல்லை.இல்லவே இல்லை.

பணம்ங்கறதை அறிமுகப்படுத்தினது மனிதன்.ஆனால் அந்த பணம் மனிதனை பாடா படுத்துது.ஊமைகளையும் பேச வைக்கும், செவிடர்களை கேட்க வைக்கும், நொண்டிகளை ஓட வைக்கும் ஓமக்குச்சி  நரசிம்மனையும் பல சாலியாக்கும், சாமியார்களையும் சம்சாரிகளாக்கும் சாரி விபச்சாரகர்க ளாக்கும் அது எது ? பணம்.

பெண் மனத்தை ஆணால் புரிந்துகொள்ள முடிவதில்லை. காரணம் அவன் மண்டையில் இருக்கும் செக்ஸ். மனிதனால் பணத்தை புரிந்துகொள்ள முடிவதில்லை. காரணம் அவன் மண்டையில் இருக்கும் தேவை. பணம் குறித்த மர்மங்களை  அறிய ஆசையா ஒரு தடவை போட்டுப்பாருங்க.. ஒரே ஒரு தடவை கேட்டுப்பாருங்க மணி சீக்ரெட்ஸ் டிவிடி

ஒவ்வொரு மனிதனும் பணம் பணம் என்று பறக்கிறான். பணத்தை வைத்து என்ன செய்கிறான்? மரணத்தின் நிழல்களோடு யுத்தம் செய்கிறான். ஜெயிக்கிறானா? இல்லை..இல்லை. இல்லவே இல்லை

ஏன்.. எதுக்கு .... இந்த நிலைய எப்படி மாத்தலாம்னு ஆந்த்ரபாலஜி, ஹிஸ்டரி, எக்கனாமிக்ஸ்,செக்ஸாலஜி, சைக்கலாஜி எல்லாத்தயும் கலந்து கட்டி பிரிச்சு மேஞ்சிருக்கேன்.

வீடியோவை டவுன் லோட் பண்ண க்ளிக் பண்ண வேண்டிய லிங்க்ஸ்:
Money secrets Part 1
http://www.archive.org/details/MoneySecretsByMurugeshan1
Money secrets Part 2
http://www.archive.org/details/MoneySecrets2
Money secrets Part 3
http://www.archive.org/details/MoneySecretsPart3


நீங்க நினைச்சா இந்த ஸ்பீச்சை கேட்டே தெலுங்கு கத்துக்கிடலாம்னா அடிக்கவருவிக. கேட்டுப்பாருங்கண்ணா..