Saturday, August 25, 2007

ஜோதிட சாஸ்திர‌ மர்மங்கள்

இது அந்திமழை டாட் காமி வெளியாகி நெஜமாலும் ஆயிரக்கணக்கான வாசகர்களால் படிக்கப்பட்ட ஐட்டம். இதை இன்னம் நெல்லாம் மெருகேத்தி இங்கே தரேன்.

ஜோதிட சாஸ்திர‌த்தில் உள்ள மர்மங்கள் ஆயிரமாயிரம்.. எல்லோரும் ஒரே பஞ்சாங்கத்தை தான் உபயோகிக்கிறோம். சிலர் சொல்வது நடக்கிறது. பலர் சொல்வது நடப்பதில்லை. இதை வைத்தே பகுத்தறிவாளர்கள் ஜோதிடம் விஞ்ஞானம் அல்ல என்று கூறிவிடுகிறார்கள்.

எந்த ஜோதிடர் பலன் கூறினாலும் அது அப்படியே நடக்க வேண்டும் என்றால் அதற்கு சில மர்மங்களை ஜோதிட நிபுணர்கள் பகிரங்கப் படுத்த வேண்டும் . நான் நிபுணர் அல்ல என்ற போதிலும் இதை துவங்கி வைக்கிறேன். சனங்க தொடரட்டும்.

மொதல்ல கைய தூக்கிருங்க:
ஜேம்ஸ்பாண்ட் படத்துல வில்லன் துப்பாக்கிய தூக்கினா ஜே.பாண்டே கை தூக்கிர்ராரு. அதை மாதிரி ஜோசியர்களும் கை தூக்கிரனும்.

தங்களோட இயலாமைய போட்டு உடைக்கனும்.

1.இன்னைக்கு செலாவணில உள்ள மூல நூல்களே மூல நூல்கள் அல்ல

2.இது பல காலம் அவாள் கஸ்டடில இருந்து மூச்சு திணறிக்கிட்டிருந்தது ( சீக்ரெட்)

3.ஜோதிஷத்துக்கு அடிப்படையே ஆன்மீகம் தான். ஆன்மீக தேடலோ, செல்வமோ இல்லாத பார்ட்டி சொன்னா எல்லாமே பல்லை இளிக்கும். ஜோசியருக்கு மட்டுமில்லை ஆர்வலருக்கும் இதெல்லாம் இருக்கனும்.

4.படைப்பாளி கையில உள்ள அஜெண்டாவ பிட் அடிக்கிற முயற்சி இது. அந்தாளு பெரீ கில்லாடி அஜெண்டா அமலாக தொடங்கிட்ட பிறவு கூட படக்குனு கண்ட் ரோல் ஜெட் கொடுத்துருவாரு

5.ஜோதிஷத்துக்கு பேஸ் ரிஷிகளோட ஸ்டடி. அவிகளுக்கு அந்த பலத்தை தந்தது அவிக தவம். நான் ட்ரான்ஸ்ல எழுதிட்ட கவிதைய சாதாரணமா இருக்கிறச்ச படிக்க கூட முடியாம போயிருது. அதனால அவிக என்னா மூட்ல எழுதினாய்ங்க்ளோ அந்த மூட் ஜோதிடருக்கு இருந்தாதான் அதையெல்லாம் புரிஞ்சிக்கிட முடியும்

6.ஜோதிஷத்துல மேற்படி ரிஷிகள் ,மகரிஷிகள் கொடுத்திருக்கிற விதிகள் எல்லாம் ஜஸ்ட் ஒரு சாக்கு மட்டும் தேன். அவுட் புட்டுக்கும் விதிகளுக்கும் சம்பந்தமே கிடையாது.

7.நீங்க ஜோசியர்னா உங்க முன்னாடி வந்து உட்கார்ர பார்ட்டியோட மைண்ட்ல பாஸ்ட்,ப்ரசன்ட்,ஃப்யூச்சர் எல்லாம் கலந்து கட்டியா இருக்கிறத பார்க்கமுடியனும். ஜஸ்ட் டெலிபத்தியாலயே கண்ணா .. கொஞ்சம் ஃப்யூச்சர் கன்டென்டை மட்டும் மேலே அனுப்புன்னனும். அப்ப ஃப்யூச்சர் கன்டென்ட் தண்ணில எண்ணெய் மாதிரி மிதக்கும். அதை கலக்காம அப்படியே சக் பண்ணி எடுத்து விடனும்.

8.பார்ட்டியோட எதிர்காலத்தை நீங்க சொல்றிங்கனு நினைச்சிங்கன்னா அது முட்டாள் தனம். பார்ட்டி உங்களை ஒரு மீடியமா யூஸ் பண்ணிக்கிறாரு. உங்க மூலமா அவரே பேசறாருனு நினைக்கனும்.

9.நீங்க மீடியமா மாறனும்னா உங்களுக்கு ஈகோ ங்கறதே இருக்ககூடாது

10.ஜோதிஷ விதிகளையெல்லாம் மைண்ட்ல ஸ்டோர் பண்றதே எதுக்குன்னா அந்த விதிகள் எத்தனை பேரோட லைஃப்ல ஃபெயில் ஆயிருக்குனு தெரிஞ்சுக்கத்தான்.

11.ஜோதிஷம் ஒரு சைன்ஸுதான். என்ன ஒரு வில்லங்கம்னா அது மிஸ்டிக் சைன்ஸ்.

12.ஜோதிஷத்துல என்டர் ஆறதுக்கு முந்தி அ கமாண்ட் ஏற்படற வரை அது ஐ.இ.சி மாதிரி தோணும். பக்கா சைன்ஸுப்பான்னு கூவத்தோணும். என்னைக்கு உங்களுக்கு நாம தேறிட்டம்னு ஒரு நினைப்பு வருதோ அந்த க்ஷணத்துலருந்து அய்யய்யோ இது சைன்ஸ் இல்லைப்பா அதுக்கும் மேலனு ஒரு ஃபீலிங் வந்துரும்.

13.இன்னைக்கு நமக்கு அவெய்லபிளா இருக்கிற கன்டென்ட் மொத்தமே ஒரிஜினல் சப்ஜெக்ட்ல 00.01% கூட கிடையாது. இதுவே தாளி இந்த அளவுக்கு பல்பு கொடுக்குதுன்னா மொத்தமா இருந்திருந்தா இன்னா கதி?

14.அட ஜாதக கணிப்புக்கு அடிப்படையான பிறப்பு நேரத்தையே எடுத்துக்கங்க. நாட் நாட்ல கர்பதான முகூர்த்தத்தை வச்சுத்தான் ஜாதகம் கணிப்பாய்ங்க.அப்பாறம் கொளந்தை தலை தெரிஞ்சதுமே நேரம் குறிச்சிக்கிட்டு ஜாதகம் கணிக்க ஆரம்பிச்சாய்ங்க. இப்போ? கொளந்தை வெளிய வந்து மூக்கை துடைச்சு மூஞ்சை துடைச்சு புட்டத்துல பளார்னு ஒன்னு விட்டு அது கூவின நேரத்தை வச்சு கணிக்கறோம். எந்தளவுக்கு டீட்டெயில்ஸ் மிஸ் ஆகும்னு ரொசிங்க

சரிங்கண்ணா ரெம்ப டீப்பா போயிட்டாப்ல இருக்கு. இப்போ லைட்டா சில அம்சங்களை பார்ப்போமா?

ஜோதிட சாஸ்திரத்தில் எத்தனையோ விதிகள் உள்ளன. இவற்றில் எது முக்கியம் எது முக்கியமல்ல என்பதை புரிந்து பலன் கூறவேண்டும்.

1.உதாரணமாக கிரகங்களுக்கு நைசர்கிக சுபத்துவ,பாபத்துவம் ‍/ லக்னாத் சுபத்துவ,பாபத்துவம் என்று இரண்டு விதிகள் உள்ளன. இதில் லக்னாத் சுபத்துவ,பாபத்துவ விதியையே அப்ளை செய்ய வேண்டும்.

2.எண்சாண் உடலுக்கு சிரஸே பிரதானம் என்பது போல் லக்னம்,லக்னாதிபதி பலத்தை வைத்துத் தான் மற்ற கிரகங்கள் பலனளிக்கின்றன.

லக்னாதிபதி 6,8,12 லிருக்க, அல்லது அஸ்தங்கதம் அடைந்திருக்க மற்ற கிரகங்கள் என்னதான் நல்ல நிலையில் இருந்தாலும் நல்ல பலன் கள் ஏற்படுவதில்லை. அதே போல் லக்னாதிபதி 6,8,12 அதிபதிகளோடோ,லக்னாத் பாபர்களோடோ சம்பந்தப்பட்டாலும் நிலைமை இது தான்.

3.பிரபல தோஷங்கள் இருத்தல் : உதாரணமாக செவ்வாய் தோஷம்,கால சர்ப்பதோஷம், சர்ப்ப தோஷம்,குருசந்திர தோஷம்

4.பாபர்கள் அநியாயத்துக்கு வலுத்தும்,சுபர்கள் வலுக்குன்றியும் இருத்தல்

5.லக்னாதிபதியை விட 6,8,12 அதிபர்கள் அதிகம் பலம் பெற்றிருத்தல்

6.சுபபலனை தரவேண்டிய கிரகங்களின் தசைகள் இளமையில் வராது போதல். (இதுவே சுக்கிரன் சுபனாக இருந்து இளமையில் சுக்கிர தசை வந்தாலும் தொல்லையே.)

7.தாய்,தந்தையரின் ஜாதகங்களில் 5 ஆமிடம் வலுக்குன்றியும், சோதர,சோதரிகள் ஜாதகத்தில் 3 ஆமிடம் பாப சம்ம்ந்தம் பெற்றுமிருத்தல்

8.ஜாதகர் தம் ஜாதகத்தில் வலுக்குன்றிய கிரகத்தின் தொழில்,வியாபாரம்,வேலையில் ஈடுபட்டிருத்தல்

9.சேரக்கூடாத கிரக‌ங்கள் சேர்ந்திருத்தல்,

10.மாங்கல்ய தோஷம் உள்ள பெண்ணை மணத்தல், இருதார ஜாதகனை/ஜாதகியை மணத்தல் போன்ற அம்சங்கள் திருமண வாழ்வுக்குண்டான நற்பலன் களை தடுத்து விடுகின்றன‌.

11. அதே போல் வாஸ்து கோளாறுகள்: வாடகை வீடாக இருக்கும் பட்சத்தில் நல்ல தசை,புக்தி வந்ததுமே அந்த நல்ல நேரம் அந்த வீட்டிலிருந்து வெளியே கிளப்பிவிடும். ஒரு வேளை சொந்த வீடாக இருந்தால்? இவர்கள் வீடு மாறமாட்டார்கள். கிரக பலன் அவ்வீட்டின் கெடுபலனை கட்டுப்படுத்துவதிலேயே செலவழிந்து விடும்.

12. நஷ்ட ஜாதகர்களுடன் கூட்டு: நம் ஜாதகம் நல்ல ஜாதகமாயிருந்தாலும் நஷ்ட ஜாதகர்களுடனான் கூட்டு அது தரும் நல்ல பலன் களுக்கு வேட்டு வைத்து விடும்.

13.பிள்ளைகள் ஜாதகம்: நமக்குப் பிறக்கும் பிள்ளைகளின் ஜாதகத்தில் 9 ஆமிடம் கெட்டால் தந்தை காலி, 4 ஆமிடம் கெட்டால் தாய் காலியாகிவிடுவார். தாய்,தந்தையரின் ஜாதகம் தீர்காயுஷ் ஜாதகமாக இருந்தால் போண்டியாகி விடுவார்கள்.

14.நேரம் தவறிய செயல்: சிலர் நல்ல நேரத்தில் அடிமைத்தொழில் செய்வர், கெட்ட நேரத்தில் சொந்தத் தொழில் செய்வர்.

(இன்னம் மஸ்தா கீது நைனா .. நைசா படிச்சுட்டு ரெண்டாமரம் தெரியாம பூட்டிங்கண்ணா இந்த சப்ஜெக்ட் இதோட க்ளோஸ். இதை படிச்சதும் உங்களுக்கு என்னதோணுதோ அதை நாலு வரி கமெண்டா போட்டுட்டு போங்க - அப்போ தொடரும்.உடு ஜூட்!)