Monday, August 13, 2007

கோ.வி.கண்ணன் அவர்களுக்கு,


தங்கள் கருத்தை படித்து அக,மிக மகிழ்ந்தேன். என்னை, என் எழுத்தைப் பாராட்டிய முதல் ஆள் நீங்கள் தான். (என் ஜோதிட ஞானம் தவிர்த்த எழுத்துக்கு). முதற்கண் அதற்கு நன்றி.


தங்கள் வலைப் பதிவை படித்தேன். சோதிடம் குறித்த தங்கள் குற்றச்சாட்டில் உண்மையில்லாமலில்லை. அதே நேரம் சோதிடத்துறையில் பிரபலமாக உள்ள விஷயங்களை மட்டுமே குறி வைத்து விமர்சித்துள்ளீர்கள். சோதிடம் விஞ்ஞானப் பூர்வமானதே என்பதை நிரூபிக்க ஆயிரம் வாதங்களை என்னால் முன் வைக்க முடியும்.


என்வலைப்பதிவை மேய்ந்த தங்களுக்கு என் லட்சியம் என்ன அதற்கான என் முயற்சிகள் என்ன அதற்காக நான் இழந்தவை என்ன என்பது ஓரளவு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.


தற்சமயத்துக்கு ஆப்பரேஷன் இந்தியா 2000 ஒன்றில் தான் எனக்கு ஆர்வம். அதற்கு ஆதரவு திரட்டத்தான்வலை தள மேய்ச்சல் மைதானத்துக்கு வந்தேன்.யூனி கோடில் தட்டச்ச நான் அறிந்து கொண்டதே..கடந்த 10 தினங்களில் தான்.


எனவே விரிவான் பதிலை தர நான் துடித்தாலும் சிரமமாகவே உள்ளது. நிலா சாரல் டாட் காமில் உள்ளிடப்பட்டிருக்கும் என் ஜோதிட ஆய்வுக்கட்டுரையை ஒருதரம் படித்துப் பாருங்கள். ஜோதிடம் குறித்த என் பார்வைக்கும்/பிற பிரபலங்கள் பார்வைக்கும் உள்ள வேறுபாடுகள் புரியலாம்.
தங்கள் தொடர்புக்கு மீண்டும் நன்றி.