Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Thursday, September 1, 2011

கழிவறையில் கண்ணீர்


அண்ணே வணக்கம்ணே!
ரம்லான் ,வினாயகர் சதுர்த்தின்னு அல்லாரும் ஹாலிடே மூட்ல இருந்திருப்பிங்க. சொந்த ஊருக்கு போயிருக்கலாம். நம்ம பொளப்பு " பண்டுக நாடூ பாத்த மொகுடே" கணக்கா ஓடுது. இதுக்கு அருத்தம் "பண்டிகை நாள்ல கூட பழைய புருஷனேவா" தெலுங்குல இந்த மாதிரி கில்மா பழமொழிங்க மஸ்தா கீதுங்ணா. இனி சந்தடி சாக்குல அப்பப்போ எடுத்து விடுவம்ல.

நாம ப்ளாக்ல எழுதிக்கிட்டிருந்தவரை கட்டற்ற சுதந்திரம் இருந்தது. வானத்திற்கு கீழானவை மட்டுமல்லன்னு ஒரு ஸ்லோகனை வச்சு செமை கலக்கு கலக்கிக்கிட்டிருந்தம். அனுபவஜோதிடம் சைட் வந்த பிறகு காற்றுக்கு வேலி போட்ட கதையா போச்சு.

மேலும் ஆன்லைன் ஜோதிட ஆலோசனை ப்ரஷர் வேற. (இன்னைய தேதிக்கு 20 ஜாதகம் வரை பெண்டிங் ) ஆண் பெண் வித்யாசங்கள் தொடர் போயிட்டிருந்தவரை ஒரு கன்டின்யுட்டி -ஒரு கமிட்மெண்ட் இருந்தது. அவன் அவள் அதுவும் ஓகேதான். ஆனால் ஹிட்ஸ் குறைய ஆரம்பிச்சுருச்சு. அதை பேலன்ஸ் பண்ணத்தேன் ஜோதிடபால பாடம் ஸ்டார்ட் பண்ணோம். ஆனால் அவன் அவள் அது தொடரவே மாட்டேங்குது.

இடையில சம்பந்தா சம்பந்தமில்லாம ரஜினி ஸ்டைல்ல ஒரு குட்டிக்கதை.

மகாபாரதத்துல பாண்டவர்களோட வனவாச காலத்துல அருச்சுனனும் - அனுமாரும் மீட் பண்றாய்ங்க. கொஞ்ச நாழி ஜாலியா கடலை போட்டுக்கிட்டு இருக்கிறச்ச அர்ச்சுனன் சொன்னானாம்

" ஹனுமா ! ..இந்த ராமன் இருக்கானே (இருந்தானே) சரியான வாழைத்தண்டு. பெரிய வில்வீரங்கறாய்ங்க.. இலங்கைக்கு படையெடுத்து போக குரங்குகளை வச்சு பாலம் கட்டினான்ங்கறாய்ங்க. நானா இருந்தா அம்புலயே பாலம் கட்டியிருப்பேன்"

அனுமாரு என்னென்னமோ சமாதானம் சொல்லிப்பார்த்தாரு அருச்சுனன் கேட்கலை.( ஈகோ) அனுமாரு கடுப்பாயி "கொய்யால .. நீ அம்பால பாலம் கட்டுவே சரி. அது மேல பயணம் போக வேண்டியது மன்சங்க இல்லை. நீ கட்டற அம்பு பாலம் என் ஒருத்தனுக்கு பதில் சொல்லாது"ன்னுட்டாரு.

ரெண்டு பேரும் சட்டமன்றத்துல ஆ.க -எ.க எம்.எல்.ஏ மாதிரி வீராவேசமா பேசிக்கிட்டே போக அது பந்தயத்துல முடிஞ்சது. இன்னாடா பந்தயம்னா அருச்சுனன் அம்பால பாலம் கட்டனும்.அது அனுமாரை தாங்கினா அருச்சுனன் தீக்குளிக்கனும். பாலம் அனுமாரை தாங்கலின்னா அனுமாரு தீக்குளிக்கனும்.

அருச்சுனன் அம்பால பாலம் கட்டினான். அனுமாரு ராமனை நினைச்சு வலது காலோட கட்டை விரலால பாலத்தை ச்சொம்மா டச் பண்ணாரு. பாலம் ஊழலால உளுத்துக்கிடக்கிற மத்திய அரசு மாதிரி தொபுக்கடீர்.

பந்தயப்படி அருச்சுனன் தீ மூட்ட ஆரம்பிச்சான். அதுல பாய இருந்த சமயம் நம்ம கிட்ண பரமாத்மா என்ட்ரி கொடுக்கிறாரு. ஜட்ஜ் இல்லாம பந்தயம் கட்னது செல்லாது. இப்பம் நான் ஜட்ஜா இருக்கேன். அருச்சுனன் மறுபடி பாலம் கட்டட்டும். அனுமாரு மறுபடி அதை டெஸ்ட் பண்ணட்டும்னுட்டாரு.

அருச்சுனன் பீதியில பேதியாகியிருந்தான். பிரபாகரன் உயிரோட தான் இருக்காரு. ஈழத்துல இறங்கிட்டாருன்னு கேள்விப்பட்ட ராஜபக்சே மாதிரி அருச்சுனனோட ஈகோ காணாம போயிருச்சு.

கிட்ணரை நினைச்சு பயபக்தியா அம்பால பாலம் கட்டினான். அனுமாரு ஏற்கெனவே எழுதின பரீட்சைதானே - இம்ப்ரூவ்மெண்டுக்குத்தானே மறுபடி எழுதறோங்கற எண்ணத்துல இருந்துட்டாரு. பாலத்து மேல ஏறினார். இறங்கினார். நாக்க முக்க நாக்க முக்கன்னு பேயாட்டம் போட்டாரு. பாலம் ஸ்விஸ் வங்கியில இருக்கிற இந்திய கருப்பு பணம் மாதிரி ஆடலை -அசையலை.

இந்த கதைய இங்க சொல்ல ஒரு காரணம் இருக்கு. அம்மனுக்காவ நாம எழுதின கவிதைகளை (தெலுங்கு) வலையேற்றம் செய்ய ஒரு நண்பனுக்கு ஒரு பி.சி ஏற்பாடு செய்தோம். நள்ளிரவு பின் பக்க கதவை உடைச்சு உள்ளாற வந்த திருடங்க சிபியுவை கவுத்துப்போட்டுட்டு (ஏனோ) மானிட்டரை மட்டும் தள்ளிக்கிட்டு பூட்டாங்கோ.

நம்மளோட இன்னொரு ஃப்ரண்ட் ஒருத்தரு அரை டஜன் மானிட்டர் வேணம்னாலும் ஃப்ரீயா தரேன்னு ஏற்கெனவே ஆஃபர் பண்ணியிருந்தாரு. (பயிற்சி மையம் நடத்தறாரு) ஆத்தா ! நீ சிபியுவை காப்பாத்தி கொடுத்ததே போதும்.மானிட்டர் கதைய நான் பார்த்துக்கறேன்னு ஓவ்ர் கான்ஃபிடன்டா நினைச்சுட்டம்.

இப்பம் இன்னாடா நிலைமைன்னா பயிற்சி மைய ஃப்ரெண்ட் பரண்ல இருந்ததெல்லாம் ச்சொம்மா அடைச்சிட்டு இருக்கேன்னு மொட்டைமாடியில போட்டுவச்சுட்டாராம் மொத்தம் நனைஞ்சு நாசமா போயிருச்சாம். கலர் மானிட்டர் வேணம்னா தரேனேங்கறாரு (இதுக்கும் காசு வாங்கமாட்டாரு -அதான் பிரச்சினை) வெளிய போனா பழசுன்னாலும் ஆயிரமாவது வைக்கனும்.

அந்த 20 ஜி.பி சிஸ்டத்துக்கு கருப்பு வெள்ளை மானிட்டரே அதிகம். (பாலிசி).இதுல கலர் வாங்கினா ஜானகிராமனுக்கு சிறந்த பதிவர் பட்டம் கொடுத்தாப்ல ஆயிரும். இப்பம் வலையேற்ற பந்து நம்ம கோர்ட்ல வந்து நின்னுருச்சு.

வேற வழி ..சப்ஜெக்டை ஆத்தா கோர்ட்டுக்கே அனுப்பிர்ரன்.( சாட்சி நீங்கதேன்). மேற்படி அருச்சுனன் - ஹனுமார் கதை ப்ளஸ் நம்ம அனுபவத்தை எல்லாம் வச்சு பார்த்தா என்ன புரியுது? தாளி ..ஈகோங்கறது நாலணா காசுக்கு கூட உதவாது.

தன்னம்பிக்கைங்கறது வேற ஓவர் கான்ஃபிடன்ஸ் வேற. தன்னம்பிக்கை தமிழ் நாட்டு பக்கத்து ஊறுகாய் மாதிரி. லேசா அப்பப்பம் தொட்டுக்கலாம். ஓவர் கான்ஃபிடன்ஸ் எல்லாம் எங்கப்பக்கத்து ஆவக்காய் ஊறுகாய் மாதிரி என்னதான் டப்பாடப்பாவா நெய் ஊத்தி பிசைஞ்சு அடிச்சாலும் கழிவறையில கண்ணீர் வடிக்கவேண்டியதுதான்.

இது ஏதோ உங்களுக்கு நான் தர்ர உபதேசம்னு நினைச்சுராதிங்க. எனக்கு நானே ஞா படுத்திக்கிற உபதேசம்.

பால பாடம் , அவன் அவள் அது தொடர் எல்லாம் நாளையிலருந்து தொடரும்னு நினைக்கிறேன். உடுங்க ஜூட்.

Thursday, August 18, 2011

பூஜ்ஜியத்திலிருந்து ராஜ்ஜியம்




இந்த தொடர்ல பூஜ்ஜியத்துலருந்து புதுசா ஆரம்பிச்ச நமக்கு ஆத்தா எப்படி ஒரு ராஜ்ஜியத்தையே கொடுத்தாங்கற விஷயத்தை சுருக்கமாவாச்சும் சொல்லத்தான் போறேன். இது ஏதோ என் ஒருத்தனுக்கு கிடைச்ச அனுபவம்னு நினைக்காதிங்க. அவள் ஜகன் மாதா - ஜகத்ஜனனி - லோக மாதா அவளோட பார்வையில எல்லாரும் சமம்தான்.

அவள் பார்வையில போலி முருகேசன் கூட சமம் தான். அவரு இந்த மாதிரி போலி கமெண்ட் எல்லாம் போட்டு ஒரு அவுட்லெட்டை தேடிக்கலைன்னா பைத்தியம் பிடிச்சிருக்கும். அதனாலதேன் ஆத்தா அவருக்கு இப்படி ஒரு வடிகாலை ஏற்படுத்தி கொடுத்திருக்கா.

இந்த அவன் அவள் அது தொடரை படிச்சிக்கிட்டு வர்ரவுக என் அனுபவத்தின் மேல் நம்பிக்கை வச்சு நான் ஜெபிச்ச அதே மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பிச்சா நான் பெற்ற அதே அனுபவங்கள் அதே அளவுக்கு அவிகளுக்கு கிடைக்காட்டாலும் அவிக சாதனைய பொறுத்து நிச்சயமா அவிக லைஃப்ல ஒரு டர்னிங் பாய்ண்ட் வந்தே தீரும்னு உறுதி தர்ரேன்.

அந்த மந்திரம் கீழே:

ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் வஷக் வஷக் வஷக்

மொதல்ல பெற்றோரை , குல தெய்வத்தை ,இஷ்ட தெய்வத்தை ,உங்க குருவை வணங்கி அவிக அனுமதி வேண்டி பெற்று அதுக்கப்புறம் ஜெபத்தை ஆரம்பிங்க.ஆத்தாளோட மந்திரத்தை ஜெபிக்க ராகு காலம் எமகண்டம் இத்யாதி நிபந்தனையெல்லாம் கிடையாது. ஒரு குழந்தை தன் தாயை எந்த நிலையிலும் அழைக்கலாம். (கக்கா போயிட்டு கழுவாத நிலையிலயும்) . தைரியமா ஆரம்பிங்க. இந்த தொடர் முடியறதுக்குள்ளயே நீங்க , நானு ,நம்ம மானிலங்கள் , நம்ம நாடு எல்லாத்தோட தலையெழுத்தும் மாறிரனும். ஆரம்பிச்சுருவிங்கதானே.

இப்ப பூஜ்ஜியம் டு ராஜ்ஜியம் டெலிக்ராஃபிக் லாங்குவேஜ்ல - திடீர்னு மூடு கிளம்பினா ஒரே சம்பவத்தோடவே இந்த அத்யாயத்தை முடிச்சுரலாம் .ஆரும் கேட்கப்படாது.

நமக்கு மந்திரோபதேசம் செய்த பார்ட்டி - அவரோட க்ரூப் மற்றும் நமக்கு கேர் ஆஃபா இருந்த கடைக்காரர் ஒரு நாள் ஃபுட் மேட்டை உதறிப்போட சொன்னதும் நாம கழண்டுக்கிட்டதும் அல்லாருக்கும் ஞா இருக்கும்னு நினைக்கிறேன்.

நாம சோகமா நடந்து போயிக்கிட்டிருக்கம். அப்ப நம்ம ஏரியா தலைவரு ஒருத்தரு கிராஸ் ஆனாரு. இன்னா மேட்டருன்னா சனங்க அவரை இஷ்டத்துக்கு போட்டுக்கொடுத்து ஆப்படிச்சு புண்ணாக்கிட்டாய்ங்க போல . வலுக்கட்டாயமா கூட்டிட்டு போய் அவரோட பில்டிங்ல ஆஃபீஸுக்கு வென்யூ கொடுத்தாரு.(தயிருதேன் - நமக்கு ரெப்புட்டேஷன் அதிகரிச்ச பிற்பாடு நாமே நாமினலா ஒரு தொகைய வாடகையா கொடுக்க ஆரம்பிச்சம்)

அங்கருந்து நமக்கு ஒரு விலாசம் - ஸ்திரமான சோர்ஸ் ஆஃப் இன்கம்லாம் ஆரம்பிச்சது. அதே ஏரியாவுல லட்சத்து ரெண்டாயிரத்தோட என்ட்ரி கொடுத்து -கைப்பணத்தை இழந்து - பப்பு வேகாம வாலை சுருட்டி பாக்கெட்ல வச்சுக்கிட்டு திரும்பிட்டது 1998. இப்பம் ரீ என்ட்ட்ரி கொடுத்தது 2001 .

ஜெ தேங்க்ஸ் கார்டு அனுப்பினதும் இங்கனதான். வார்த்தா தெலுங்கு தினசரியில நம்மை பத்தி அரைப்பக்க செய்தி வெளி வந்ததும் இங்கனதான். நமம் சனங்க எந்த அளவுக்கு நொந்து போயிருக்காய்ங்கன்னா ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் பத்தி அரைப்பக்கம் போட்ட செய்தியில அவிகளை கவர்ந்தது நாம ஜோதிடர்ங்கற தகவல்தேன்.விளைவு நம்ம ப்ராக்டிஸ் ஓஹோ.

ஆபிரகாம் லிங்கன் அடிமை ஒழிப்பு சட்டத்துல கையெழுத்து போடறதுக்கு மிந்தி அவரோட கைகளை குலுக்கியே ஒரு வழியாக்கிட்டாய்ங்களாம். ஏறக்குறைய நமக்கும் அதே நிலை. அப்பல்லாம் நமக்கு செல்ஃபோன் இத்யாதி கிடையாது. ஏரியா தலைவரோட கடைக்குத்தேன் கூப்டுவாய்ங்க.

பேப்பரை படிக்க வேண்டியது நேர நம்ம ஆஃபீஸுக்கு வந்துர வேண்டியது. அவிகளால நம்பவே முடியலை. நாம சாதாரணமா நினைச்சிருந்த பார்ட்டி இத்தனை பெரிய ஆளாங்கற ஆச்சரியம். ஒரு கட்டத்துல தள்ளு முள்ளே ஏற்பட்டுருச்சு. நமக்கு ஸ்தான பலத்தை ஏற்படுத்தி கொடுத்த ஏரியா தலைவருக்கே நம்மை கேட்ச் பண்ணமுடியாத நிலைமை. அவரு பார்த்து பார்த்து கடுப்பாகி "கொய்யால நகருங்கடா நகருங்கடான்னுட்டு சனத்தை தள்ளிக்கிட்டு வந்து ...கை குலுக்கி ..

" தபாருய்யா நீ ஊர்ல இருக்கிறவனுக்கெல்லாம் சோசியம் சொல்ற ஆளுதான்.. ஆனால் உனக்கு நான் சொல்றேன். ங்கோத்தா இன்னிலருந்து நீ தான்யா சீமான் "ன்னுட்டு போயிட்டாரு.

நாம எதிர்காலத்துல தேர்தல்ல கீர்தல்ல நின்னா புதுசா போஸ்டர் எல்லாம் டிசைன் பண்ண தேவையில்லை. மேற்படி க்ளிப்பைங்கை ஸ்கான் பண்ணி போட்டுட்டா போதும். எக்ஸ் பார்ட்டிக்கு டிப்பாசிட் கூட கிடைக்காது.

அந்த பத்திரிக்கை செய்தியை தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி உங்க பார்வைக்கு வைக்கத்தான் ஆசை. ரெம்ப கூச்சமா கீதுங்ணா .. அந்த அளவுக்கு புகழ்ச்சி.

இது எல்லாம் எப்படி சாத்தியமாச்சு? நாம ஜெபிச்சிக்கிட்டிருந்த மந்திரம் தான் அந்த பத்திரிக்கை காரவுகளை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுச்சா?ஆமாம்னு தான் நான் சொல்வேன்.

ஏன்னா நாம பாதிரியார் மாதிரி . ப்ரெட் ஹன்டிங் முடிஞ்சதுமே ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றிய பிரச்சாரத்தை ஆரம்பிச்சுருவம். இது நம்ம மாமூல் வாழ்க்கையில் ஒரு அங்கம். அப்படித்தான் சித்தூர் வார்த்தா ஆஃபீஸுக்கும் போனோம்.

அங்கன இருந்த ஸ்டாஃப் ரிப்போர்ட்டரும் ஒன்னும் பெருசா ரெஸ்பாண்ட் ஆகலை. நக்கலெல்லாம் அடிச்சாரு. "பொயப்ப பாருய்யா"ன்னு அட்வைஸ் எல்லாம் பண்ணாரு. ஆனால் அரைப்பக்க செய்தி. அவரோட மனசை மாத்தினது ஆரு? எது?

நம்ம சோசியத்தை பல வகையா பிரிக்கலாம். 1989 முதல் 1994 வரையிலான நம்ம சோசியம் ரெம்ப ரொட்டீன். அதாவது பஞ்சாங்கம் -ஜோதிட விதிகளையே பிடிச்சு தொங்கற சோசியம். -இது ஒரு கால கட்டம்.

1994 ல பிரம்மங்காருவோட படத்தை வச்சுக்கிட்டு சொல்ல ஆரம்பிச்ச சோசியம். நாம " அப்படி ஆச்சா' "இப்படி ஆச்சா"ன்னு கேப்பம். சோசியம் கேட்க வந்த பார்ட்டி "ஆமாம்" " ஆமாமாம்" னு கூவறச்ச அவனுக்கு எப்படி மெய் சிலிர்க்குமோ அப்படி நமக்கும் சிலிர்த்து போயிரும்.

1997 ல சம்பூர்ண சரணாகதி - அகிம்சைங்கற ரெண்டு ட்ராக்ல வண்டி ஓட ஆரம்பிச்சப்ப சொன்ன சோசியம் அது ஒரு டைப்பு. நேரம் கெட்டதா இருக்கும். ஜாதகம் உருப்படாத ஜாதகமா இருக்கும். இருந்தாலும் அவிக பொசிஷனை பார்த்து ஜாகத்துல உள்ள ஏதோ ஒரு சின்ன ப்ளஸ் பாய்ண்டை கேட்ச் பண்ணி அதை ஹைலைட் பண்ணி ஹோப் கொடுத்து - ஒரு சில பரிகாரங்கள் கொடுத்து இது வரைக்கும் செய்ங்க எல்லாத்துக்கும் மேல கடவுள் இருக்காருன்னு சொல்லி அனுப்ப ஒர்க் அவுட் ஆக ஆரம்பிச்சது ஒரு கட்டம்.

ஆத்தாவோட லைன் அப்ல சங்கல்ப்ப ஸ்லோகத்துல " மாதா தேஹி த்ரிகால ஞானம்"னு கேட்டதாலயோ என்னவோ .. நமக்கிருக்கிற ஒன்றரையணா ஜோதிட அறிவுக்கு 90 சதவீதம்லாம் ஒர்க் அவுட் ஆக ஆரம்பிச்சுருச்சு. ஐ மீன் ஜாதகப்படி நாம நடந்ததான்னு கேட்கிற விஷயங்கள் 90சதவீதம் நடந்தே இருக்கும்.

மேலும் ஆரு நம்மை தேடி வராய்ங்களோ அவிகளுக்கு சம்பந்தப்பட்டு மைண்டுல ஒரு மாண்டேஜ் ஷாட் ஏற்கெனவே ஓடியிருக்கும் .அட் லீஸ்ட் அவிக கொண்டுவர்ர ஜாதகத்துல இருக்கக்கூடிய ஒரு சில அம்சங்கள் மைண்ட்ல கிராஸ் ஆகியிருக்கும்.

இவ்வளவு ஏன் ஒரு தாட்டி ஒரு ஆசாமி தன்+ தன் பையனோட ஜாதகத்தை கொண்டு வந்திருந்தாரு. பையன் ஜாதகத்தை அவரோடதுன்னு நினைச்சு -அவரோட ஜாதகத்தை பையன் ஜாதகம்னு நினைச்சும் பலன் சொல்லி தொலைச்சுட்டன் . ரெண்டுமே 90% டேலி ஆயிருச்சு. நம்ம எதிர்கால கணிப்பும் பக்காவா மெட்டீரியலைஸ் ஆயிருச்சு.

இப்ப ஆன்லைன்ல சொல்ற ஜோசியம் எப்படி போகுதுன்னு நீங்கதேன் சொல்லனும்.


Wednesday, August 17, 2011

அவன் அவள் அது : 16


வாடகைப் பணம்கொடுக்க முடியாம அல்லாடினது - ஆத்தா கூட சமயத்துல உதவ மாட்டேங்கறாளேன்னு மனம் நொந்தது - ஆத்தா பட்டப்பகல்ல - சமய புரம் மாரியம்மனா காட்சி கொடுத்தது இத்யாதியை கடந்த பதிவுல சொல்லியிருந்தேன்.

கண்ணாலமாறதுக்கு மிந்தியே ஆஃபீஸ், ஸ்கூல் ,ட்யுட்டோரியல்ஸ் இத்யாதிக்கு ரென்டட் பில்டிங்ல இருந்ததுண்டு - கண்ணாலத்துக்கப்பாறம் ஏவரேஜா வருசத்துக்கு ரெண்டு வீடு மாறினதும் உண்டு. இதை சொல்ல காரணம் அத்தீனி ஹவுஸ் ஓனரை பார்த்த அனுபவம் நமக்கிருக்குன்னு சொல்லத்தேன்.

ஆனால் இந்த பதிவுல சொல்லப்போற ஓனர் மாதிரி ஒரு ஓனரை அதுக்கு மிந்தியும் பார்க்கலை.அதுக்கப்பாறமும் பார்க்கலை. இந்த கேரக்டரை பற்றியும் அவனுக்கு ஆத்தா கொடுத்த ஷாக் பற்றியும் ஏற்கெனவே எழுதி தொலைச்சுட்டதால ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட் இட். நியூ அட்மிஷன்ஸ் வேணம்னா இங்கே அழுத்தி ஒரு பாட்டம் படிச்சுருங்க.

இன்னாடா இது சித்தூர் முருகேசன் ஃப்ளாஷ் பேக்கா சொல்றாரே கண்டி நேத்து முந்தா நேத்து நடந்தது எதையும் சொல்லமாட்டேங்கறாரு. ஒரு வேளை ஆத்தா கூட கா உட்டுட்டாரா?அல்லது ஆய் பையனாயிட்டாரான்னு சிலர் கேப்பிக சொல்றேன்.

ஆய் பையன்னா ஒரு வகையில கரீட்டுதேன். நம்ம லட்சியங்கள் ரெண்டு. ஒன்னு ஆப்பரேஷன் இந்தியா2000 இதை ஒய்.எஸ்.ஆர் துவக்கிய ஜலயக்னம் மயக்கத்துல டீல்ல விட்டாச்சு. ரெண்டாவது லட்சியம் ஆத்தாளுக்காக தெலுங்குல எழுதின கவிதைகளை வலையேற்றம் செய்யறது. இதையும் டீல்ல விட்டுட்டாப்லதேன். ஏன் தெலுங்கு? தமிழ்ல இல்லியான்னு கேப்பிக. சொல்றேன்.

தமிழ்ல எழுதி வச்சிருந்ததையெல்லாம் மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஈ.ஓக்கு அனுப்பி தலைமுழுகியாச்சு. அந்த காகிதங்கள்ள ஆரெல்லாம் பட்டாணி கடலை சாப்டாய்ங்களோ? அந்த மதுரை வாசிகள்ளாம் ரெம்ப புண்ணியம் பண்ணியிருக்கனும்.

( ஒரு கட்டத்துல பெருமாள் மேல காதல் எக்கு தப்பா எகிறிப்போயி இதே போல ஆசுகவி தீட்டி - அது பெரிய கதை ஒரு சீரியலே எழுதலாம் - இப்பம் அந்த ஸ்க்ரிப்ட் ஆனந்த விகடன் ஆஃபீஸ்ல இருக்கலாம் - அல்லது அவிகளும் டிஸ்போஸ் பண்ணியிருக்கலாம்)

அதனால மிச்சமிருக்கிறது தெலுங்கு சரக்கு தேன். அதையெல்லாம் வலையேற்றம் பண்ண நான் இறங்கினா ஆன்லைன் ஜோதிட ஆலோசனைய ஊத்தி மூடிரவேண்டியதுதேன். அதனால அதுக்குன்னு குறைஞ்ச கன்ஃபிகரேஷன்ல ஒரு கம்ப்யூட்டர் வாங்கி வச்சுக்கிட்டு நம்ம இடத்துக்கு வந்தோ அ அவிக இடத்துல வச்சோ டைப் அடிச்சு தர்ரதுக்கு ஆள் தேடிக்கிட்டிருந்தோம்.

அப்பம் ஒரு பழைய க்ளாஸ் மெட் கிராஸ் ஆனான். அவன் படிக்கிற காலத்துலயே ஜகத் சோம்பேறி. கம்பைண்ட் ஸ்டடிக்கு வந்துட்டு ஊர்கதை எல்லாம் பேசிட்டு 'என்னால ஒன்னும்முடியலை ஒரு அரை மணி நேரம் தூங்கிர்ரன்னு தூங்கிருவான். இடி விழுந்தாலும் எந்திரிக்கமாட்டான். ( 1983 -84)

சரி இப்பம் வாழ்க்கையில நிறைய அடிப்பபட்டு இருக்கானே நாமே மாறியிருக்கம். இவன் மாறாத இருப்பானான்னு மேற்படி கம்ப்யூட்டரை கொண்டு அவன் கஸ்டடியில வச்சோம்.அந்த காலத்து டைப்ரைட்டிங் ஹையர் பாஸ் கேஸு. இப்பம் கண்ணெல்லாம் டப்ஸாகி / கம்ப்யூட்டர்னாலே மைண்ட் ப்ளாக் ஆயிர்ர ஸ்டேஜு. இருந்தாலும் பார்ப்பம்னு கொண்டு வச்சிருக்கம் இன்னைக்கு இது 3 ஆவது நாள் பார்ப்போம்.

சொல்ல வந்த மேட்டர் இது இல்லை. இந்த சங்கதியை நம்ம இன்னொரு க்ளாஸ்மெட்டும் -ஆந்திராவுல உள்ள நமக்கும் தமிழ் கூறு நல்லுலகத்துக்கும் பாலமா செயல்பட்ட கன்னிமரா லெண்டிங் லைப்ரரி கார்த்திகிட்டே சொல்லிக்கிட்டிருந்தம்.

அப்பம் அவரு அட எனக்கும் கொஞ்சமா கொடுப்பா நானும் பண்றேன்னாரு. அதான் சடன் ட்விஸ்ட்.
( இவரும் நம்மை போலவே பன்மொழிப்புலவர்தேன்). ட்ரெய்லர் கணக்கா நாம எழுதின சில தமிழ் கவிதைகளை வலையேற்றியிருக்காரு . ஒரு ஓட்டு ஓட்டிப்பார்த்துரலாமேங்கற தில்லுதுரைகள் மட்டும் இங்கே அழுத்துங்க. தெலுங்கு சரக்கும் சீக்கிரமே ஏறும்னு நினைக்கிறேன்.

அதுக்காவ அம்பபலுக்கு ( அம்பிகையின் சொல் - அம்பிகை சொன்ன சொல் ) ங்கற பேர்ல ஒரு ப்ளாக் கிரியேட் பண்ணி சந்திரமுகி ரேஞ்சுல ஹெடர் இமேஜ் எல்லாம் தயார் பண்ணிவச்சிருக்கம்ல . படம் பார்க்க விரும்புபவர்கள் இங்கே அழுத்தவும்

பல காலமா ஃப்ரீஸ்ல இருந்த ப்ராசஸ் இப்படி ஸ்டார்ட் ஆனதுக்கு பின்னாடியும் ஒரு சென்டிமென்ட்
இருக்கு. நமக்கு ஸ்தூல பூஜைகள் ,விக்கிரக ஆராதனை இத்யாதியில ஆர்வமில்லாட்டாலும் ஒரு சில சமயத்துல ( தேஜஸ் இல்லாம இருக்கிறச்ச - சந்திரன் 6,8,12 ல மாட்டினப்ப - நீசமானப்பல்லாம்) அந்தப்பக்கமா மனசு லேசா ஓரங்கட்டும்.

அப்படி ஒரு சந்தர்ப்பத்துல செட்டியாருங்க வீட்ல வரலட்சுமி விரதம் கொண்டாடற சமயத்துல கலசத்தை கழுத்து +உடலா செட் பண்ணி முகமா வைக்க ஒரு பிரதிமை இருக்கும். அதை தங்கம் முதல் ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ் வரை சகல மெட்டீரியல்ஸ்லயும் செய்து விக்கிறாய்ங்க. ( படத்தை பாருங்க)

அது பார்க்க ரெம்ப க்யூட்டா இருக்கும். தாளி இது மாதிரி ஒன்னை வாங்கி சுவத்துலயாச்சும் மாட்டி வைக்கனும்யான்னு நினைச்சேன். நல்லா கவனிங்க ..நினைச்சேன் தட்ஸால்.

வரலட்சுமி விரதத்துக்கு முந்தின நாள் ஆத்தாளும் மவளும் பெரிய பெரிய பையா ரெண்டை தூக்கிக்கிட்டு புஸ்ஸு புஸ்ஸுன்னிக்கிட்டு வர்ராய்ங்க. ஹோம் டிப்பார்ட்மென்ட்ல வரலட்சுமி விரதம் கொண்டாடறதா முடிவு பண்ணிட்டாய்ங்களாம். ( இதெல்லாம் அவிக கேஸ் ஹிஸ்டரியிலயோ -ஜாதகத்துலயோ இல்லாத விஷயங்கள்)

இப்படி நம்ம எண்ணங்களையெல்லாம் ஆத்தா செயலாக்கிர்ரதால நிகழ்காலத்துல சொல்லிக்கிறாப்ல பெருசா த்ரில்லான சம்பவங்கள் ஏதுமில்லிங்ணா.

அடுத்த பதிவுல சந்திப்போம் ..






Monday, August 15, 2011

நம்ம தவத்தை கலைக்க வந்த ஆன்டி


தாத்தாவை போட்டு தள்ள தாத்தா கிட்டயே ஐடியா கேட்டானுவளாம். அவரும் சொன்னாராம்.(பீஷ்மர் Vs பாண்டவர்கள்) அதைப்போல ஆத்தாவுடனான அனுபவங்களை பத்தி எழுத ஆத்தாகிட்டயே ரோசனை கேட்கிற மாதிரி ஆயிருச்சு.

ஒரு பக்கம் ஆன் லைன் ஜோதிட ஆலோசனை (புதனே காரகன்) இன்னொரு பக்கம் பதிவு (புதனே காரகன்) டபுள் அக்கவுண்ட் ஆயிடறதால இந்த லொள்ளுன்னு நினைக்கிறேன். இத்தனைக்கும் நாம பேராசை படறதில்லை. ஒரு நாளைக்கு ஒரு பதிவு -ரெண்டு ஜாதகத்துக்கு பலனுன்னுட்டு ரேஷன் வச்சுத்தான் செய்யறோம்.

பதிவோட ஹிட்ஸையும் தக்கவச்சுக்கனும். குவாலிட்டியும் (?) மெயின்டெய்ன் பண்ணனும். ஞாயிறு திங்கள் லீவுங்கறதால சனம் மாமியா வீட்டுக்கு -சொந்த ஊருக்கு ட்ரிப் அடிச்சுட்டாப்ல இருக்கு. வருகையில் துண்டு. அதை கவர் பண்ண ரஜினியை சந்தித்தேன்.சுதந்திர நாள், ஹசாரே உண்ணாவிரதம்னு இறங்கினா பத்தோட பதினொன்னாயிரும்..

இப்படி எத்தனையோ ஃபேக்டர்ஸ் நம்மை எழுத்தை பாதிக்குது. ஆனாலும் தொடரை தொடர்ந்தே ஆகனும்னு ஒரு சங்கல்ப்பம். பல காலமா ஸ்க்ரிப்டாவே இருந்த தெலுங்கு கவிதைகளை ( அம்மன் குறித்தவை) கணிணியில் பதிக்க ரெம்ப நாளா திட்டம். அதுக்காகவே குறைஞ்ச கன்ஃபிகரேஷன்ல -ப்ளாக் அண்ட் வைட் மானிட்டரோட ஒரு சிஸ்டம் ரிசர்வ்ல வச்சிருந்தோம். அதுக்கு ஒரு ஆள் கிடைச்சது. சிஸ்டத்தை ஷிஃப்ட் பண்ணிட்டம்.

சரி .. சரி.. சரி .. பதிவுக்கு போயிருவம்.

2000 டிசம்பர் 23 ஆம் தேதி துவங்கின சாதனை + அனுபவங்களை சொல்ல ஆரம்பிச்சு 2 வருச கதையை கூட முடிக்க முடியலை.அதுக்குள்ளாற தர்ம சந்தேகம் வ்ந்துருச்சு.

உலகியல் ரீதியில சாதனைன்னா Achivementனு அருத்தம். ஆன்மீக ரீதியில சாதனைன்னா முயற்சி/பயிற்சின்னு அருத்தம். சங்கீத சாதகம்னா பாடி பார்க்கிறது/வாசிச்சு பார்க்கிறது . சாதனைங்கறது அந்த சாதகம்ங்கற சொல்லில் இருந்து வந்த சொல்லா இருக்கும் போல.

சாதனையாகட்டும் - சாதனையின் பலனா நிகழ்ந்த சம்பவங்களாகட்டும் நடந்து ரெம்ப காலம் ஆச்சு. அதுகளையெல்லாம் ரிகலெக்ட் பண்ணி எழுதும் போது அந்த சம்பவங்களின் கோர்வை மாறிப்போகுது. இதையாச்சும் மன்னிக்கலாம். ஆனால் அந்த சம்பவங்களின் வீரியம் குறித்த நினைவே தேசலாகிப் போச்சு.

சாதனைன்னா பெருசா விவரிக்க வேண்டிய அவசியமில்லை. ஜெபம் -ஜெபம் -ஜெபம் தான். பலன் தான் ஒவ்வொரு தடவையும் ரெம்ப ஸ்வாரஸ்யமா - புதுசு புதுசா ஏற்பட்டது . இந்த பலனால லைஃப்ல நிரந்தர மாற்றம்னு எதுவும் ஏற்படாவிட்டாலும் யதார்த்த வாழ்க்கையில அந்த நேரத்து தேவை நிறைவேறும். நம்ம பயணப் பாதை கரீட்டுதாங்கற எண்ணம் வலுப்பெறும்.

மத்தபடி நம்ம ஃபிசிக்லயோ - ப்ரொடக்டிவிட்டியிலயோ பெருசா நிரந்தரமா ஏதும் மாற்றம் கிடையாது. ஆனால் அற்புதம் நடக்கும் போது மட்டும் விட்டலாச்சார்யா ,ஏ.பி நாகராஜன் படம்லாம் பிச்சை வாங்கனும் அந்த ரேஞ்சுல நடக்கும். நம்ம மண்டைக்குள்ள நட்சத்திரங்கள் வெட்டும்.

ஆன்மிக சாதனை (பயிற்சி) லௌகீக சாதனைகளுக்கு ( அச்சீவ்மென்ட்) நிரந்தர உதவியை அளிக்க கொஞ்சம் காலம் பிடிக்கும். நம்ம கேஸ்ல 7 வருஷம் பிடிச்சது. அதனால இதை படிக்கிறவுக நாமும் ஜெபத்தை ஆரம்பிச்சுருவம்னு வேட்டிய வரிஞ்சு கட்டிராதிங்க.

மந்திர ஜெபத்தால் நமக்கு கிடைக்கிற அரைகுறை ஃப்யூயல் கூட நமக்கு ஆப்பாவேமுடியவும் சான்ஸ் இருக்கு. மேலும் நாம பெற்றுள்ள வசதி வாய்ப்புகள்ள நமம் கருமங்கள் மிங்கிள் ஆகி இருக்கிறதால எல்லாத்தையும் புதுசா ஆரம்பிச்சாத்தான் வேலைக்காகும்னு ஆத்தா டிசைட் பண்ணி ஒழிச்சு கட்ட ஆரம்பிச்சுருவாள்.

அந்த மாதிரியான அனுபவங்கள்ள் ஒன்னை இப்ப பார்ப்போம்.

நம்ம மேட்டர்ல அப்படித்தேன் நடந்தது.மந்திரோபதேசம் கிடைச்ச க்ரூப்புக்கு ஒரு சென்டர். அங்கன கூடி முன் தினத்து சாதனைகள் - அச்சிவ்மென்ட்ஸை பத்தி எல்லாம் டிஸ்கஸ் பண்ணுவம். மாலையில காலேஜ் கிரவுண்டுல சத்சங்கம்.

இந்த சிச்சுவேஷன்ல ஒரு நா சென்டருக்கு சொந்தக்காரன் ஃபுட் மேட்டை உதறிப்போட சொன்னான். உதறிப்போட்டுட்டு ( அவனையும் ) கழண்டுகிட்டோம்.

அப்பம் ஏரியா தலைவருக்கு ஏரியா சனத்துலயே சில ஆள்காட்டிங்க பயங்கர ஆப்பா வச்சி தள்ளியிருக்க அவர் பேண்டை அவுத்து எப்படியெல்லாம் புண்ணாயிருக்குன்னு காட்ட ரெடியாயிட்டாரு. நாம ஆறுதல் சொல்லி நான் இருக்கேன்னு அபயம் கொடுத்தோம்.

அவரோட காம்ப்ளெக்ஸ் மாடியில ஒரு சின்ன ரூம்பு . அதுல ப்ராக்டீஸு. 1989 ல துவங்கின ப்ராக்டிஸ் பீக் ஸ்டேஜுக்கு போனது அங்கனதான். நமம் ரூம்பு என்னவோ சின்னது. ஆனால் நம்ம விசிட்டர்ஸ் பால்கனியை நிரப்பியிருப்பாய்ங்க.

வாணியம்பாடியிலருந்து காணிக்கு கியாரண்டி இல்லாம வந்த நமக்கு ஆத்தா ஒரு ஆஸ்தானத்தையே ஏற்பாடு பண்ணி தந்துட்டா. இதுவரை ஓகே.

பீஜாக்ஷர ஜெபத்தால் இப்படி ஆகர்ஷண சக்தி (வசியம்) எக்கு தப்பா எகிறி போச்சு. தாய்குலத்தோட மென்டாலிட்டி பத்தி ஆண் பெண் வித்யாசம் தொடர்ல விவரமா எழுதியிருக்கேன். அவிகளுக்கு தேவை கொஞ்சம் போல அன்பு.

காய்கறி வண்டி காரன் என்னக்கா டல்லா இருக்கிங்கன்னு கேட்டுட்டாலே ஊர்ல இருக்கிற தம்பியா நினைச்சு கொட்ட ஆரம்பிச்சுருவாய்ங்க. நாம சொல்யூஷன் வேற தந்து தொலைச்சுர்ரமா அதனால
பல ஆன்டிகள் நமக்கு சம்பளமில்லாத பி.ஆர்.ஓவா மாற நாமதேன் அவிகளை கழட்டி விட வேண்டியதாய்ருச்சு.இதுல சில ஆன்டிகள் கோவிச்சுக்கிட்டதும் உண்டு. நமக்கு செக்யூரிட்டியா மகளை ஆஃபீஸ்ல கூட வச்சுக்க ஆரம்பிச்சேன். இதுவாச்சு பரவால்லை நாம குடியிருந்த இடத்துல பக்கத்து போர்ஷன் தாய்குலம் வேற நம்மை கச்சா முச்சான்னு சீண்ட ஆரம்பிச்சுருச்சு.

தாய்குலத்தை பொருத்தவரை நாம ஒன்னு அப்பனோட ரோலை ப்ளே பண்ணுவம்.அல்லது மகனோட ரோலை ப்ளே பண்ணுவம். இதை மொதல்லயே கான்கிரீட்டா எஸ்டாப்ளிஷ் பண்ணிருவம். அவிக சப்கானிஷியஸா வேண்டுவதும் இதைத்தான்.

ஆனால் மேற்சொன்ன பக்கத்து போர்ஷன் ஆன்டிக்கு இந்த ரெண்டு ரோலும் பிடிக்கலை. நமக்கு இந்த ரெண்டு ரோலை விட்டா வேற ரோல் செய்ய பிடிக்காது. அண்ணா தம்பி பிசினஸ் எல்லாம் அலர்ஜி.

ஒரு நாள் நம்மை சீண்ட - நாம குளிக்க தயாரான சமயம் பார்த்து பாத்ரூம்ல புகுந்துக்கிட்டாள். (காமன் பாத்ரூம்) பொஞ்சாதிக்கு இந்த மேட்டர் பின்னாடி இருக்கிற இன்டென்ஷன் தெரியாது. அவள் ரொட்டீனா
" அக்கா! அவரு குளிக்கனும் ..ஒரு பத்து நிமிசம் வெளிய வாங்க' ன்னு ப்ரப்போஸ் பண்ண ஆரம்பிச்சுட்டா.

கொய்யால .. நாம பார்க்க அவள் தூக்கி கட்டின பாவாடையோட வெளிய வந்து நமக்கு ஒரு தர்ம தரிசனம் தரனும் இதான் அவளோட ஸ்கெட்ச். இதையெல்லாம் நாம 1984-1986 பீரியட்லயே கச்சா முச்சான்னு பார்த்தாச்சு.

க்ரூப் ஸ்டடியில க்டுப்பாக்கி கட்டிலை சுத்தி ஓடவிட்டு தம் போட்ட பார்ட்டி நாம. இதுக்கெல்லாம் ஜொள்ளுவமா என்ன?

பொஞ்சாதிக்கு கண் ஜாடையில .. உன் வேலைய நீ பார்த்துக்கன்னு சொன்னம். அவள் கேட்ச் பண்ணிக்கலை. மறுபடி பாத்ரூம் கதவை தட்டி " அக்கா! பத்து நிமிசம்"

மிகக்குறுகிய கால அளவுல நான் என்னத்தை சொல்லி பொஞ்சாதிய தடுக்கறது. அவள் அக்மார்க் பொஞ்சாதியாகி என்னை குளிக்க வைக்கிறதே பதிவிரதா தர்மம்னு டிசைட் ஆயிட்டாப்ல இருக்கு.

நமக்கா பயங்கர கடுப்பு.ஆஃபீஸ் என்னோடது . நான் குளிக்காம போகலாம் - லுங்கியில போகலாம் - ட்ராக் சூட்ல போகலாம் - ஏன் பெரமுடால கூட போகலாம் -அட போகாமயே இருந்துரலாம். யாரு நம்மை கேட்க முடியும்.

தூத்தெறி .. ஒரு சின்ன மேட்டர்.. இதை கூட புரிஞ்சிக்காம லொள்ளு பண்றாளேன்னு எரிச்சலாகி கன்னத்துல பளார். நாம ஆஃபீஸ் வந்துட்டம்.மதியம் சோத்துக்கு போனா டிவி பெட்டி மேல லெட்டர் " நான் போறேன்'

ஸ்கூலுக்கு போயி மகளையும் பிக் அப் பண்ணிக்கிட்டு போயிருக்காள். அவளோட அக்கா காரி ( அது ரெம்ப ஸ்வாரஸ்யமான கேரக்டர் -நம்ம சைக்காலஜி ஸ்டஃபுக்கு அவளும் அவள் பிஹேவியரும் கூட ஒரு காரணம்) பி.பி நெம்பருக்கு ஃபோன் போட்டு "இங்க தான் வந்திருக்காப்பா.. நாலு நல்லது கெட்டது சொல்லி அனுப்பி வைக்கிறேன்' னாள்

நாம .." அய்யய்யோ .. அவளுக்கு இன்னும் 10 மாசத்துக்கு நேரமே சரியில்லை.அவளை அங்கயே வச்சுக்கங்க நான் சொல்றப்ப அனுப்பினா போதும் " னு கட் பண்ணிட்டம்.

ஆக 2003 ஜூன்ல இருந்து 2004 பிப்ரவரி வரை மறுபடி பேச்சிலர் லைஃபு. பக்கத்துலயா துடியா ஒரு ஆன்டி. ஆத்தா எப்படியெல்லாம் கார்னர் பண்றா பாருங்க.

நாமளா மாட்டுவம்.. 24 ஹவர்ஸ்ல வீட்டை ஷிஃப்ட் பண்ணிட்டு நமக்கு ஸ்தான பலம் உள்ள - ஃபேமிலி லைஃப் + பேச்சிலர் லைஃப் ரெண்டுக்கு சூட் ஆகக்கூடிய ஒரு போர்ஷனை பிடிச்சு யோக சாதனையில முழுகிட்டம்.

(தொடரும்)



Saturday, August 13, 2011

வசிய மந்திரம்


அவன் அவள் அது :13


ஆத்தாளை அடுத்த பிற்பாடு 2000 டிசம்பர் 23 முதல் ஏற்பட்ட என் ஆன்மீக அனுபவங்களை ஒன்னு விடாம சொல்லனுங்கற உத்தேசத்தோட தான் இந்த தொடரை ஆரம்பிச்சேன். எந்த மேட்டரா இருந்தாலும் க்ளைமாக்ஸ் கண்ணுக்கு தெரியற வரைதேன் ப்ரிப்பரேஷ்ன்லாம். அதுக்கப்பாறம் காட்டடிதேன்.
எந்த விதமான முன் தயாரிப்பும் இல்லாம ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பிச்சுருவம்.

கில்மா மேட்டர் எழுதினப்பல்லாம் இந்த ஃபார்முலா நல்லா தான் போயிட்டிருந்தது . அவளை பத்தி எழுத ஆரம்பிச்சா எல்லாமே முரண்டு பிடிக்குது. இந்த ஃபார்ம் இல்லாத ஃபார்ம் தான் அவளுக்கு இஷ்டம் போல.அப்பத்தானே என்னை குழப்பின மாதிரி படிக்கிறவுகளையும் குழப்ப முடியும். சரி.. ஆத்தா விருப்பமே நம்ம விருப்பமும்.

ஆத்தாளுக்கு நாம கொடுக்கிற மாமூல் ரெம்ப சிம்பிள்.தினசரி ஒரு தம்ளர் மஞ்சள் நீர் வாரத்துக் கொருதரம் பத்து ரூவா பட்டை லவுங்கம். பத்து ரூவா எலுமிச்சம்பழம்.அம்புட்டுதேன். பட்டை லவுங்க சமாசாரம் சஸ்பென்ஸ்.

தினசரி வெளிய கிளம்பும் போது அந்த மஞ்சத்தண்ணியில ஒரு ஸ்பூன் விட்டுத்தேன் சந்தனம் உரைச்சு நெத்திக்கிட்டுக்கறது.

பூஜை ,புனஸ்காரம்லாம் ஒரு மண்ணும் கிடையாது.மைண்டுல ஒரு ட்ராக்கை ஆத்தாளுக்கு ஒதுக்கியாச்சு.அதும்பாட்டுக்கு ஓடிக்கினு இருக்கும்.அந்தாசா மாசத்துல ஒரு தினம் ரெம்ப சுஸ்தா இருந்தா க்ரூப் ஸ்டடி மாதிரி சகல தேவதா ஸ்தோத்திரத்துல ஆத்தாளுக்குன்னு நாம ஃப்ரேம் பண்ணி வச்சிருக்கிற சங்கல்ப்ப ஸ்லோகம் உட்பட ஒரு பாட்டம் சொல்லிருவம்.

எப்பயாச்சும் ஜா.ரா மாதிரி பார்ட்டிங்க கழுகு தளத்துலல்லாம் போய் போலி கமெண்டு போட்டா ம்னசு கொஞ்சம் சங்கடமாயிட்டா சத நாமாவளியை ஒரு தாட்டி சொல்லிருவம்.

சத நாமாவளி சொல்ற சந்தர்ப்பம் வர 3 மாசம் 6 மாசம் கூட ஆகும். எப்பயாச்சும் மனசு பஸ்டான லாரி ட்யூப் மாதிரி ஆயிட்டா ஊருக்கு வெளிய இருக்கிற அம்மன் கோவிலண்டை போய் காம்பவுண்டுக்கு வெளிய இருந்து தம் போட்டுக்கிட்டே கொஞ்ச நாழி சாட் பண்ணிட்டு வந்துருவம்.

இதுக்கே ஆத்தா நமக்கு என்னெல்லாம் கொடுத்திருக்கான்னு கணக்கெடுத்தா பயங்கர கில்ட்டி வருது. நாம வாழ்ந்த வீடுகளோட லட்சணங்களை சொன்னா வா.வெ.

கதவில்லாத வீடு ,கரண்டில்லாத வீடு ,கழிவறை இல்லாத வீடு ,குளியலறை இல்லாத வீடு , கூரையே இல்லாத வீடு,விலாசமில்லாத வீடு இப்படி ஒன்னிலை ..ஒன் டு ஃபைவ் வாடகை தரனும்னா ஒன்னாம் தேதிக்கு ஒரு வாரம் முந்தி வரை ஆயிரமாயிரமா வந்து போயிருக்கும். ஆனால் இனி எந்த கமிட்மெண்டும் இல்லை . வாடகை ஒன்னுதேனு நினைக்கும் போது லெச்சுமி அக்கா அவுட் ஆஃப் ஸ்டேஷன் ஆயிருவா.

ஆனால் ஆத்தாவுக்கு நம்ம ஹார்ட்ல இடம் கொடுத்ததுலருந்து நமக்குன்னு ஒரு இடம் சந்தில,மந்தியில நிக்காம நாலு பேரை போல "குட்டா" (ரகசியமா) வாழ்ந்துக்கிட்டிருக்கம். ஒரு வகையில ஜெ மந்திரி சபையில மந்திரி மாதிரி வச்சுக்கங்களேன். ஆத்தா ஒருத்திக்கு ஹார்ட் ஃபுல்லா ஹானஸ்டா இருந்துட்டா ஒரு பிரச்சினையும் கிடையாது.

பிரச்சினை வரும். ஆனால் அதுவும் நமக்கு ஜாக்பாட்டாவே முடியும். பழக்க தோஷத்துல (ஈகோ) சொல்யூஷனுக்கெல்லாம் ட்ரை பண்ணுவம். ஒரு ஸ்டேஜ்ல ரியலைஸ் ஆகி அப்படியே டீல்ல விட்டுர்ரது.டீல்ல விட்டதும் பிரச்சினை ஃபணால்.

ரெகுலர் பவர் கட்டு பத்தி சொன்னேனே.. அப்பம் காசிருக்கிற திமிர்ல யு.பி.எஸ் எல்லாம் வாங்கிட்டன்.படக்குன்னு ரியலைஸ் ஆகி ஸ்டுடியோவுக்கு கொடுத்துட்டன். அப்படி கொடுத்த நாள்லருந்து பவர் கட் சீசன் முடியறவரை என்.டி.ஆர் ரேஞ்சுதேன். விடியல்3 மணிக்கு விழிப்பு வந்துரும். பவர் கட்டாவது மசுராவது..

போன வாரம் வரை கூட மதியம் 1 முதல் 3 வரை தான் பவர் கட். அப்பாறம் அதை தூக்கிட்டானுவ. இன்னைக்கு (சனிக்கிழமை /ஆகஸ்ட் 13,2011) தாளி மெயின்டெய்னன்ஸுன்னு காலையிலருந்து மதியம் 2 வரை பவர் கட்டு. தகவல் தொழில் நுட்ப புரட்சின்னு அனத்தறாய்ங்க.மொதல்ல ஒழுங்கான மின்சாரத்தை கொடுங்கய்யா.அவிகளை சொல்லியும் புண்ணியமில்லை. கன்சம்ப்ஷன் நாளுக்கு நாள் அதிகரிச்சுட்டே வருது.

கொய்யால வீடு கட்டறானுவ ஒரு சன்னல் கிடையாது ,வென்டிலேட்டர் கிடையாது, அப்படியே இருந்தாலும் சாக்கடை நாத்தம் தேன் வரும்.அல்லது சன்னல் வழியா கம்பி விட்டு திருடறாய்ங்க.என்ன பிழைப்பு இது நாய் பிழைப்பு.

இதையெல்லாம் சால்வ் பண்ணனும்னா பொது நல நோக்கோட செயல்படனும். தாளி .. கூட்டி/காட்டி கொடுத்து ஏர் கூலர் வாங்கறானே தவிர சென்ட்ரல் ஏசிக்கு ப்ளான் பண்றானே தவிர எங்கன கோட்டை விட்டோம்னு எவனும் ரோசிக்கமாட்டேங்கறான்.

அவளை பற்றி எழுத ஆரம்பிச்சாலே இப்படி கச்சா முச்சான்னு ட்ராக் மாறி பூடுது. அது சரி அகஸ்மாத்தா கூகுல்ல எதையோ தேடி இங்கன வந்தவுகஅவள்னா யாருனு கேப்பிக. சொல்றேன்.

அவள்னா அது உங்க அம்மா/எங்க அம்மா நம்ம அம்மாக்களை எல்லாம் பெத்த அம்மாலருந்து நம்ம எல்லாத்துக்கும் மூலமான ஒரு செல் அங்க ஜீவியான அமீபா வரை எல்லாத்தயும் இந்த ஒட்டு மொத்த இயற்கையையும் குறிக்கிற ஒரு சொல்.

அவள் முரண்பாடுகளின் மொத்த உருவம். குழப்பங்களின் கூடாரம். எவளுக்குள்ளயும் ஆணினம் அவளைத்தான் தேடுது. அவளைபத்தி செலாவணியில உள்ள நாமாவளியை சொன்னா பீலா விடறதா தோணும்.

ஆனா எல்லா எழுத்தும் அவளையே குறிக்கும். ஒன்னுக்கொண்ணு முரண்பட்ட எல்லா வார்த்தையும் அவளையே குறிக்கும். காலாயை நமஹான்னாலும் அவதான். காலாதீதாயை நமஹான்னாலும் அவள் தான்.

சூர்ய ப்ரகாசாயை நமஹாம்பாய்ங்க. படக்குனு சந்திரமண்டல வாசினிம்பாய்ங்க. மஹோதர்யைம்பாய்ங்க ( பெரிய வயிறு படைச்சவள் - இல்லாட்டி இத்தீனி ட்ரில்லியன் குட்டிகளை போட்டிருக்கமுடியாதே) டக்குனு நித்ய கன்னிம்பாய்ங்க.

ஸ்தோத்ர ப்ரியேன்னு சொன்னாலும் அவள் தான் . அதுக்காவ விமர்சனம் பண்ணா ஜெ மாதிரி கஞ்சா கேஸ்ல தூக்கி போட்டுரமாட்டா.நிந்தா ஸ்துதின்னாலும் அவளுக்கு பிரியம் தேன்.நான் எல்லாம் ரெம்ப பர்சனலா,வில்லங்கமால்லாம் கேள்வி கேட்டிருக்கேன்.

ஒரு தாட்டி பயங்கர கடுப்புல சத நாமாவளியை எதிர்க்க வச்சுக்கிட்டு அதுல ஒன்னு கூட பொருந்தாதுன்னு எஸ்டாப்ளிஷ் பண்ணி சுந்தர தெலுங்குல எழுதி தள்ளினேன்.அதுக்கப்பாறம் தேன் நம்ம வாழ்வில் பயங்கர ( ஐ மீன் பாசிட்டிவ்) திருப்பங்கள்.

மந்திரம் உபதேசிச்ச பார்ட்டி தான் சொன்ன பீஜாக்ஷர மாலையை வவ்ஷட்னு ஒரு லட்சம் தடவை , ஹும் பட் ஸ்வாஹான்னு ஒரு லட்சம் தடவை வஷக் வஷக்னு ஒரு லட்சம் தடவை சொல்லி முடிக்க சொன்னாப்ல.

நாமதேன் ஏடாகூட பார்ட்டியாச்சே. ஆரம்பத்துலருந்தே வஷக் வஷக்னு முடிக்க ஆரம்பிச்சோம். இதுக்கு வசியமாகுன்னு அர்த்தம் போல. இது ஒர்க் அவுட் ஆக ஆரம்பிச்ச பிற்பாடு சாலையில நமக்கு முன்னே போறா ஆணோ பெண்ணோ நம்மை திரும்பி திரும்பி பார்த்துக்கிட்டே போவாய்ங்க.சிலர் நம்ம பார்வை படற பகுதிகளை ( பின்னந்தலை /முதுகு) தடவி விட்டுக்குவாய்ங்க.

இது ஏதோ ஒர்க் அவுட் ஆறாப்ல இருக்குன்னு உறைச்சதும் இதை பிரயோகம் பண்ண ஆரம்பிச்சோம்..மொதல்ல சாமானியர்கள் மேல. அப்பாறம் விஐபிக்கள் மேல கடேசியில கொய்யால எல்லாத்துக்கும் மூல காரணம் காசு பணம்தானே அதை வசியம் பண்ணிட்டா பிரச்சினை ஓவரில்லையான்னு லெச்சுமிக்கே வச்சோம் டார்கெட்டு .அந்த அனுபவங்கள் அடுத்த பதிவுல


Thursday, August 11, 2011

விளக்கை அணைச்சு..


அண்ணே வணக்கம்ணே !
விரைவில் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்ங்கற தலைப்புல ஒரு பதிவு போட்டது ஞா இருக்கலாம். அன்னாஹசாரே ஜோக் பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க விளக்கை அணைக்க சொல்லியிருக்காரு.

இதெல்லாம் ச்சொம்மா ட்ரெய்லர் மாதிரிதான். இன்னம் என்னெல்லாம் நடக்கப்போவுதோ தெரியலை. 2011 ஏப்.15 முதல் செப்.27 க்குள் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்ங்கறது நம்ம கணிப்பு.இன்னம் ஒரு தாட்டி ரிவைஸ் பண்ண நினைக்கிறவுக இங்கே அழுத்துங்க.

சோனியா ஆட்டம் க்ளோஸுன்னு ஒரு பதிவு போட்டேன். சோனியாஜீக்கு செர்விக்கல் கான்சர்.கட்சி பொறுப்பு ராகுல் காந்திக்காம், இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ தெரியலை.

நிலத்துல கால்பாவாத சமாசாரமா பேசிக்கிட்டிருந்தா மூளை பஜ்னு ஆயிருது ( நன்றி:சுஜாதா) அதனால கொஞ்ச நாழி நாட்டு நடப்பை பத்தி டச் பண்ணுவம். அப்பாறம் அவன்-அவள் -அது .

அரசாங்கங்களோட முடிவை - நாட்டு நடப்பை பத்தி பேசாதவுக கிடையாது.ஏன்னா இதெல்லாம் நம்ம வாழ்க்கையை நேரிடையா பாதிக்ககூடிய விஷயங்கள். நம்ம இந்திய நாடு ஐ மீன் நடுவண் அரசு தன் ஆதரவு இலங்கை அரசுக்கா , புலிகளுக்காங்கற மேட்டர்ல எடுத்த முடிவு நம்ம வாழ்வை எப்படியெல்லாம் பாதிச்சுருச்சு - இனி பாதிக்கப்போவுதுன்னு ரோசிச்சு பார்த்தா கண்ணை கட்டுது.

இலங்கைக்கு கொட்டி கொடுத்தாச்சு காசு பணம் ,ராணுவ உதவி , 1லட்சத்து 20 ஆயிரம் உசுருங்களை அள்ளொ கொடுத்தாச்சு. ஆனால் இப்பம் அவன் சீனாவுக்கு தாணா போடறான்.அமெரிக்கா அவனுக்கு ஆனா (ஆப்பு) வைக்கறேன்னு கிளம்பிட்டான். இவனும் அவனும் முட்டிக்குவான்.( சீனா -அமெரிக்கா) . நம்ம ஆட்சியாளர்கள் அமெரிக்காவுக்கு சால்ரா போட்டே ஆகவேண்டிய கட்டாயம். பீஜிங், நியூயார்க் என்ன ஆகுதோ அது அப்பாறம்.மொதல் ஆப்பு சென்னைக்கும் இந்திய நகரங்களுக்கும் தேன். ஏன்னா இப்பம் சீனா பீஜிங்லருந்து எதையும் ஏவ தேவையில்லை. இலங்கையிலயே எல்லா ஏற்பாடும் இருக்காமே.இதுல பக்சே சீனப்பயணம் வேற. அந்தாளு போய் மூக்கை சிந்தி ..ஹும் இன்னம் என்னெல்லாம் நடக்கப்போவுதோ?


பேசிக்கலா நாம ட்ரீமர்தான். ஆனால் அப்பாவோட நேர்மை - அது பரிசா தந்த ஒரு சில ப்ராக்டிக்கல் டிஃபிகல்ட்டீஸ் - நாம செய்துக்கிட்ட காதல் திருமணம் - கட்டிக்காத்த தன்மானம் -ஈவு இரக்கம் இத்யாதி எல்லாம் நமக்கு செமர்த்தியா ஆப்படிச்சு கற்பனை தேர்ல பறந்துக்கிட்டிருந்த நம்மை இந்த பூமியில லேண்ட் ஆக வச்சுருச்சு.

இந்த காலத்து யூத்து மாதிரி ஸ்போர்ட்ஸ் பேஜ் , சினிமா பேஜை மட்டும் பார்க்காம எமர்ஜென்சி காலத்துலருந்தே நியூஸ் பேப்பருங்களை ஃபாலோ பண்ணிட்டு வந்ததால - ஒரு கட்டத்துல ஸ்தூல செய்தியை வச்சு பின்னணியை கெஸ் பண்ற கப்பாசிட்டி வந்துட்டதால மைக்ரோவையும்
மேக்ரோவையும் இணைக்க முடிஞ்சது.

மேலும் ஏதோ நம்ம லக்னாதிபதி லாட்ஜு வைத்தியர் மாதிரி சுற்றுப்பயணத்துலயே இருந்ததால "இத்தீனிக்கப்பாறமும்" இன்னம் நம்ம மனசுல முடிச்சுகள் விழாம எஸ்கேப் ஆயிக்கிட்டிருக்கோம். நாம சோசியம் சோசியம்னு எழுதறத படிச்சுட்டு நம்ம முருகேசண்ணன் பாவம் சோசியத்துல மூழ்கி இதான் உலகம்னு நினைச்சிட்டு இருக்காருன்னு ஆருனா நினைச்சா மிஸ்டேக். ஹிஸ்டாரிக்கல் மிஸ்டேக்.

நாம இந்த சமுதாயத்தோட இருட்டு பிரதேசங்களை எல்லாம் தரிசிச்சிருக்கோம். ங்கோத்தா வாழ்ந்தும் இருக்கோம். பை மிஸ்டேக் நமக்கு கொஞ்சூண்டு மூளையும் அனலடிக்கல் திங்கிங்கும் இருக்கிறதால -அதுக்கெல்லாம் ஆதி என்ன அந்தம் என்னன்னு ஒரு கணக்கு போட்டு வச்சிக்கிட்டோம். அதாங்க மைக்ரோ மேக்ரோ .

அந்த இருட்டு பிரதேசங்களையெல்லாம் வெளுக்க சூப்பர் ரின் கணக்கா தீர்வுகளும் வச்சிருக்கோம். இந்த ட்ரை க்ளீனிங் வேலைய ரெண்டு பாய்ண்ட்ல இருந்து ஆரம்பிக்க வேண்டி இருக்கு.டாப் டு பாட்டம் நாறிப்போயிருக்கு.

வெளுப்பு வேலைய டாப்லருந்து ஆரம்பிச்சு பாட்டம் வரனும்னாலும் லேட் ஆயிரும்.பாட்டம் டு டாப் வெளுக்கப்பார்த்தாலும் லேட் ஆயிரும்.அதனாலதேன் ஒரே சமயத்துல ரெண்டு பக்கமும் வெளுத்துக்கிட்டிருக்கோம்.

டாப்புன்னா அமெரிக்கா பாட்டம்னா நம்ம ஜா.ரா மாதிரி பார்ட்டிங்க.ஆன்மீக ரீதியில பார்த்தாலும் - க்ளோபலைசேஷன் கோணத்துல பார்த்தாலும் நாமெல்லாம் ஒரே படகுல தேன் பயணம் செய்துக்கிட்டிருக்கோம்.

நம்ம பயணத்தை நெம்பர் ஆஃப் ஃபேக்டர்ஸ் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது. நம்ம பயணமே அழிவை நோக்கித்தேன். ஏதோ ஆரு செய்த புண்ணியமோ நம்மை ஆள்றவுக எண்ணங்கள் ஒரு சிலது உடனடியா நிறைவேற மாட்டேங்குது . அதெல்லாம் நிறைவேறியிருந்தா இந்தியா ஒரு பெரிய சுடுகாடா மாறியிருக்கும்.அதுலயும் ஏழை பாழை - எஸ்.டி. எஸ்.சி (தலித்)க்கு இடம் இருந்திருக்காது அது வேற விசயம்.

அல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கோம். சிறப்பு பொருளாதார மண்டலம்- அணு மின் நிலையங்கள் -துறைமுக விரிவாக்கங்கள் - இரும்பு தாது விவகாரம் -பாக்சைட் -கோதாவரி பேசின்ல எரிவாயு. இப்படி ஒன்னே இல்லை ரெண்டே இல்லை . நூத்து பதினெட்டு விசயங்களை கவனிச்சுக்கிட்டுதான் இருக்கோம்.

ஆனா சோசியத்தை பத்தியே எழுதிக்கிட்டு இருக்க ஒரு காரணம் இருக்கு. சோசியம் தேன் சனங்களுக்கு அவன் எப்பேர்ப்பட்ட புடுங்கியா இருந்தாலும் "மவனே .. உன் தனிப்பட்ட வாழ்விலான சுக துக்கம்லாம் நீ உழைச்சு/திருடி சேர்க்கற பணம், பதவி,அதிகாரத்துக்கு அப்பாற்பட்டும் வரக்கூடியதுன்னு சோசியம்தேன் ஆணித்தரமா சொல்லுது.

இந்த உலகத்துல பசி சுரண்டல் எல்லாம் இன்னம் தொடர ஸ்தூலமான காரணம் லட்சம் இருந்தாலும் மன்சனுக்கு அவனோட வாழ்க்கையை பற்றின இந்த சின்ன புரிதல் கூட இல்லாததேனு நம்பறேன்.

அமெரிக்காவ பாரு அமெரிக்காவ பாருன்னு அலட்டினானுங்க அங்கன நிலைமை என்ன? கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் வருவாய் 18 % அதிகரித்துள்ளது. உழைப்பாளர்களின் வருமானம் 12 % குறைந்துள்ளது.(தகவல்: தினமணி) இந்த வித்யாசம் தேன் எல்லா பிரச்சினைக்கும் ஆணிவேரு.

ஆத்தா கசப்புக்கும் கருணை காட்டறாள். ஆனால் அந்த ஆசாமி ரியலைஸ் ஆகனும். நாம இத்தீனி அட்டூழியம் செய்தும் தெய்வம் இன்னம் நம்மை உசுரோட விட்டுவச்சிருக்கு இதுக்கு என்ன காரணம்னு ரோசிக்கனும். செயல்படனும். இல்லாட்டி கக்கூஸ் போறப்ப மலக்குடலே பேசின்ல வந்து விழுந்து செத்துப்போயிருவான்.

காந்தி தாத்தா ஒரு மேட்டர் சொல்வாராம். எவனும் தன் ப்ராப்பர்ட்டிக்கு தான் தான் சொந்தக்காரன்னு நினைக்கக்கூடாதாம். தன் சொத்துக்கு தன்னை ஒரு ட்ரஸ்டியாத்தான் நினைக்கனுமாம். இப்படி ஒரு நினைப்பு இருந்தா ஏழை பணக்காரன் வித்யாசம்லாம் ஒடிப்போயிரும்.

பொது நலம் பொது நலம்னு அலட்டிக்கிட்டாய்ங்களே அதுவே பெரிய சுய நலம். ஆமாண்ணே.. சுய நலத்தோட செயல்படும்போது பாடி,மைண்ட்,நாலெட்ஜு எல்லாமே தேசலாத்தான் வேலை செய்யும். பொது நலத்தை நாடி செயல்பட ஆரம்பிச்சா மைண்டு எக்ஸ்ட்ரா ஹார்ட் டிஸ்க் போட்டு ராம் மாத்தி ஃபார்மெட் அடிச்ச கம்ப்யூட்டர் மாதிரி பறக்கும்.

டெக்னிக்கலா பார்த்தாலே பொது நலம் தேன் உண்மையான சுய நலம். நாம சுய நலத்தோடசெயல்படும் போது எல்லாமே சுருங்கி போயிருது. பொது நலம் கருதி ஃபீல்டுக்கு போறச்ச நம்ம பின்னாடி ஒரு சக்தி செயல்பட ஆரம்பிச்சுருது.

காந்தி எல்லாம் வக்கீலாவே தொடர்ந்திருந்தா வாய்தா வக்கீலாத்தான் குப்பை கொட்டியிருக்கனும்.பொஞ்சாதி 6 மாசத்துல விவாகரத்து பண்ணிட்டு போயிருக்கும்.

எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ வந்துட்டம். ஆத்தா ஆத்தான்னு புலம்பறது நாலு கை ,ஆயிரம் கண்ணு கொண்ட பார்ட்டிய் எப்படியாச்சும் காண்டாக்ட் பண்ணி தமிழக முதல்வர் பதவியை வரமா கேட்கறதுக்கு இல்லிங்ணா.( கலைஞரோட சொத்துப்பட்டியலை பார்த்திங்கல்ல)

ஆத்தா ஆத்தான்னு புலம்பிக்கிட்டு இருக்க காரணம் இந்த உலகம்ங்கற பஸ் ஸ்டாண்ட்ல மரணங்கற பஸ் வர்ரதுக்கு மிந்தி இதை வீடா நினைச்சு ஏமாந்துராத இருக்கத்தேன். பஸ் வர்ர வரை நம்மால முடிஞ்ச அளவு இந்த பஸ் ஸ்டாண்டை சுத்தப்படுத்திரனும்.

சக பயணிகள்ள பல பேரு இந்த பஸ் ஸ்டாண்டை நிரந்தர வாசஸ்தலம்னு நம்பி கடைக்கால் போட்டு சுவரெழுப்பிட்டானுவ. அவனுகளையும் கொஞ்சம் உசுப்பனும். இந்த அஜெண்டா அமலாகுதோ இல்லியோ ங்கொய்யால நாம ஏமாந்துரமாட்டம்.

பஸ் ஸ்டாண்டை வசிப்பிடமா கொள்ள மாட்டோம். அதுக்குத்தேன் ஆத்தா புலம்பல்.




Wednesday, August 10, 2011

அவன் அவள் அது : 12


அடிக்கடி ஆத்தா பார்த்துப்பா -அம்பாள் பார்த்துப்பான்னு நாம ஃபிலிம் காட்டறதா சிலர்/பலர் நம்மை தப்பா நினைச்சிருப்பாய்ங்க. கொய்யால எவந்தான் அம்மன் பேரை சொல்றதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சுப்பான்னு கடுப்பாகியிருப்பாய்ங்க .அவிகளுக்கெல்லாம் ஒரு க்ளேரிஃபிகேஷன் தந்தாப்லயும் இருக்கும் - நமக்கும் ஒரு மலரும் நினைவுகளா இருக்கட்டும்னு அவன் -அவள் -அது என்ற தலைப்பில் ஒரு தொடரை ஆரம்பிச்சோம். இடையில டீல்ல விட்டுட்டம். அப்பாறம் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரெண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிச்சோம்.

இந்த அம்மன் பிசினஸ்ல தலை கொடுக்க முக்கியமான காரணம் அவளை நாட எந்த ஒரு சாஸ்திர சம்பிரதாயமும் தேவையில்லைங்கற ரிலேக்சேஷன் தேன். நாமதேன் விதிகளுக்கு அடங்காத விதிவிலக்காச்சே.(எங்க பக்கத்துல அர்ரா கட்டைனு சொல்வாய்ங்க - ஆமா இதுக்கென்ன அருத்தம்?)

நாம ஒன்னும் இமய மலைக்கு போய் தபஸ் எல்லாம் பண்ணலை. நாம ஒன்னும் ஓக்கியம் ஒரு குளத்து நண்டு இல்லை. ஆனாலும் ஜா.ரா மாதிரி ஆட்களோட கம்பேர் பண்ணிக்கிட்டோ என்னவோ ஆத்தாவே நம்மை "சரி இப்படி ஒரு கேரக்டரும் இருக்கட்டும்"னு தன் சபையில சேர்த்துக்கிட்டா.

நம்ம யோகி சார் நம்ம அனுபவங்களை படிச்சுட்டு " பார்த்துங்க ..இதெல்லாம் எதுனா யட்சிணி வேலையா இருக்கப்போகுதுன்னு பேதிக்கு கொடுக்கிறாரு." நம்ம கையில சனி மேடு பள்ளத்துல இருந்தாலும் அதுல ஒரு சதுரக்குறியும் , புத்தி ரேகைக்கு கீழே நேஷ்னல் ஹைவே கணக்கா சனி ரேகையும் இருக்குதுங்ணா.

1967 ,ஆகஸ்ட் ,7 ஆம் தேதி காலை 6.10க்கு நாம பிறக்கிறோம்னா கரீட்டா நிமிசம் முந்தி அதாவது 6.09 க்கு பக்கத்து பெட்ல சந்தேகம் பிறந்துருச்சு. மேலும் நாம ராமகிருஷ்ண பரமஹம்சரோட வெறித்தனமான ஃபேன். ரிசர்வ் பேங்க் சேர்மனே செக் கொடுத்தா கூட பாஸ் ஆயிரும்லன்னு ஆரூடம் பார்க்கிற கேஸு. நம்ம ஆட்காட்டி விரலுக்கு கீழே குரு வளையம் வேற கீது. நம்ம ஜட்ஜிங் கரீட்டா இருக்கும். ( உணர்ச்சி வசப்படாம இருக்கிற வரை)

ரா.கி சொன்னாப்ல ஆரு சொன்னாலும் - ஆரு தந்தாலும் -அது காலணா கருத்தா இருந்தாலும் -காசா இருந்தாலும் அது செல்லுமா செலாவணியாகுமான்னு செக் பண்ணிட்டுத்தேன் ஆக்செப்ட் பண்ணுவம்.

இந்த காளியாத்தா ,மாரியாத்தா மாதிரி கேஸ்களே நம்மை பெருசா கவர்ரதில்லை . நம்ம ஊர்ல ஒரு பிரபலமான அம்மன் கோவில் இருக்கு. அங்கிட்டு போனா உள்ளாற போறது -கன்னத்துல போட்டுக்கறதுல்லாம் இருக்காது. கூட வந்தவுக போய்ட்டு வர்ரவரைக்கும் காம்பவுண்டுக்கு வெளிய இருந்து தம் போட்டுக்கிட்டே அந்த அம்மன் கிட்டே பேச்சு வார்த்தை நடத்துவம். அம்புட்டுதேன்.

நம்ம லட்சியத்தை ( 10 கோடி நிருத்யோகர்களை கொண்டு சிறப்பு ராணுவம் -சிறப்பு ராணுவத்தை கொண்டு இந்திய நதிகளின் இணைப்பு) ஞா படுத்தினா ஆத்தாளே . வடிவேலும் ரேஞ்சுல " உஸ் .. உன்னை வச்சுக்கிட்டு என்னால முடி..யலடா..முடியலை" ன்னு பெருமூச்சு விடறாள். .யட்சிணி கிட்சிணியெல்லாம் நம்ம பக்கம் கூட திரும்பாது பாஸ். அலறி அடிச்சுக்கிட்டு ஓடிரும்.

சரி மேட்டருக்கு வருவம். ( இது மஸ்தா பேரு சொல்ற ஒழுங்கான தமிழ்ல இருக்கும்)

ஒவ்வொரு உயிருக்கும் பின்னால் ஒரு தெய்வீக சக்தி இருக்கிறது. அதை உணர்வதும்,வளர்த்துக் கொள்வதும் சிலருக்கே சாத்தியமாகிறது.அந்த சிலரில் நானும் ஒருவன் என்று மிகுந்த தயக்கங்களுக்கு பிறகு தான் சொல்ல முடிகிறது.

விட்ட குறை தொட்ட குறை கணக்காக கடந்த பிறவிகளின் சாதனை காரணமாக தெய்வம் ஒரு சிலர் பின்னால் அலைகிறது. உங்க பேர்ல பெரிய அமவுண்டுக்கு ஒரு வங்கியில மெச்சூர்ட் எஃப்.டி இருக்குன்னு வைங்க. மெச்சூரிட்டி டேட்டுக்கு ஒரு வாரம் முந்தியே மேனேஜர் உங்க பின்னாடி அலைவாரு. முடிஞ்சவரை ரென்யூவல் பண்ண வைக்க. அல்லது வட்டியை ரெக்கரிங் டெப்பாசிட்டா மாத்த. ஆனால் தெய்வங்கள் இந்த விஷயத்துல ரெம்பவே ஸ்ட்ரெய்ட் ஃபார்வார்ட்.

தாங்கள் ஏதோ மனிதர்களுக்கு ` கடன் பட்டுவிட்டதை போல ஃபீலிங்கோட உங்க பின்னாடியே அலையும். நம்ம சனங்க அந்த தெய்வீக சக்தியை பிற்காலத்துல தலைக்கு தீம்பா முடியக்கூடிய காதல் வெற்றிக்காகவோ - நெக்லஸுக்காகவோ - ஃபாரின் சான்ஸுக்காகவோ உபயோகிச்சுர்ராய்ங்க.

இந்த ஆத்தா மேட்டரு நமக்கு ஒர்க் அவுட் ஆகவும் இது போன்ற காரணம்தான் இருக்கனும். இல்லாட்டி நம்மை மாதிரி பார்ட்டிக்கு ஆத்தா துணை நிக்கறதாவது.

துணைன்னா நமக்கு பாசிட்டிவா ஒர்க் அவுட் ஆறது பெருசா ஏதுமில்லைன்னாலும் நம்மை இன்சல்ட் பண்றவுகளுக்கு அவள் கொடுக்கிற தண்டை இருக்கே வேண்டான்டா சாமி..

என் இளைய நண்பர்களுள் ஒருவன். குடும்ப சொத்தான லாட்ஜு ஒன்றை நிர்வகித்து வந்தான் .அதில் சினிமா தியேட்டர் கவுண்டர் அளவில் ஒரு அறை உண்டு. அதில் காலாவதியான நாற்றம் பிடித்த மெத்தைகள்,தலையனைகளை போட்டு வைப்பது வழக்கம். அதில் என்னை பிராக்டீசு (ஜோதிட ஆலோசனை)செய்து கொள்ளும்படி கோரி வந்தான். நானும் ஒரு பலவீன கணத்தில் ஒப்பி ஆரம்பித்து விட்டேன்.

பையன் என்னவோ நல்லவந்தேன்.ஆனால் அவிக குடும்பத்தார் பார்வையில ஜீரோ. அந்த லாட்ஜு அவிக சொத்துக்கள்ளயே பனிஷ்மெண்ட் ஏரியா மாதிரி.

நாமளும் நம்மோட மணி ,மந்திர,வைத்திய சேகரங்களையெல்லாம் அவன்+ அவன் லாட்ஜு டெவலப்மெண்டுக்கு தத்தம் பண்ணிக்கிட்டுத்தான் இருந்தோம். அது ஒரு ரேஞ்சுக்கு வந்ததும் அவன் தந்தை அறையை (?) காலி செய்து விடும்படி கூறிவிட்டார். இ.நண்பனாலயும் பெரிதாய் அதை தடுக்க முடியலை.

ஞானிகள் நாயை போன்றவர்கள்போன்றவர்கள் என்று இன்று ஒரு தகவலில் கேட்டதாய் ஞாபகம். நாயை அடித்துக் கொண்டே இருந்தாலும் மறுபடி மறுபடி தேடி வருமாம் , ஒரேயடியாய் அடித்து விரட்டி விட்டால் மறுபடி அந்த பக்கம் திரும்பாதாம்.நான் ஞானியல்லாவிட்டாலும் ஞானியாக நடிப்பவன்.(நடிப்பும் ஒரு நாள் நிஜமாகிவிடும் வாரியார் சொன்ன சலவை தொழிலாளி கதை போல) நான் விலகி விட்டேன்.

சில தினங்களிலேயே அந்த இ.நண்பனின் 50 ஆயிரம் ரூபாய் வண்டியும்,அதை ஒட்டிச் சென்றவனும் காலி. இதையடுத்து சில பல தினங்களில் கிட்னாப்புக்கும் ஆளானான். அதெல்லாம் பெரிய கூத்து.

இப்போதும் நான் அவனையோ ,அவன் தந்தையையோ நீங்கள் வெ.பாக்கு கொடுத்து அழைத்து ,துப்பி அனுப்பியது நியாயமில்லை என்று கூறவில்லை.நியாயமா என்றும் கேட்கவில்லை.

நான் என்னவோ அந்த வெளியேற்றத்துக்கு பிறகு வாழ்வில் முதல் முறையாய் கு.பட்சம் உலகத்தின் பார்வையில் கவுரவமான வேலை பெற்று (வேறென்ன தினத்தந்தியில் நிருபர்) மாதம் ரூ.3000 சம்பளத்துல புது லைஃபை ஆரம்பிச்சுட்டேன்.

இதில் நண்பனின் தந்தைக்கு ஒரு இழவும் நஷ்டமில்லை. இதிலிருந்து நான் அறிந்து கொண்ட ரகசியம் பாவம் செய்பவனை விட அதை தடுக்காதவனுக்குத் தான் ஆத்தா உடனடி லாட்டரி போல் தண்டனை தருவாள் என்பதே)

இந்த தொடர்ல ஒவ்வொரு பதிவுலயும் ஆத்தாளின் அருள் வேட்டலுக்கான என் சாதனையையும் - அவள் அருளையும் பாலன்ஸ் பண்ணிக்கிட்டே வரேன். காரணம் .. இதையெல்லாம் படிச்சாவது நாலு பார்ட்டி சாதனையை ஆரம்பிச்சுராதாங்கற அல்ப்ப ஆசைதேன்.

Monday, August 8, 2011

அவன் அவள் அது : 11?


அண்ணே வணக்கம்ணே.. ஆத்தாவுக்கும் நமக்கும் எப்படி கனெக்சன் ஆச்சு - ஆத்தாளை நாம எப்படி அப்ரோச் பண்ணோம் -ஆத்தா நம்மை எப்படி அப்ரோச் பண்ணாள்?

நம்ம டீலிங் எப்படியிருந்தது -ஆத்தாவுக்கு நாம என்ன கொடுத்தோம் ஆத்தா நமக்கு என்னெல்லாம் கொடுத்தா கொடுத்துக்கிட்டிருக்காங்கறதை பத்தி ஒரு தொடர்பதிவு போட நினைச்சு ஆரம்பிச்சோம். அது ஏனோ எதுக்கோ எப்படியோ அப்படியே நின்னுப்போச்சு. ஆமை முட்டை வச்ச இடத்தை நினைச்சா அது பொரியுமாமே அதுமாதிரி ஆத்தா எங்கருந்தோ நம்மை ஆப்பரேட் பண்றாள். நாமளும் ஆடிக்கிட்டிருக்கோம்.

தொடரை எந்த லைன் அப்ல ஆரம்பிச்சோம்.எதுவரை வந்ததுனு கூட ஞா இல்லை. நாம என்ன வீக்லியில தொடரா எழுதறோம் சினாப்சிஸ் -வச்சுக்கிட்டு போன வாரம் என்ன எழுதினோம்னு பார்த்துக்கிட்டு எழுத .

பணம் காசு வர மந்திரம் கேட்டோம் - பீஜங்களின் தொகுப்பே தந்துட்டாய்ங்க. ஜெபிக்க ஆரம்பிச்சோம்.ஸ்தூலமா லெமன் - மஞ்ச தண்ணி (அப்பாறம் பட்டை லவுங்கம் சேர்ந்துக்கிச்சு)

உடுப்பி ஹோட்டல் சாப்பாடு கணக்கா இருக்கவேண்டிய சாப்பாட்ல தொடர்ந்து காரம் மஞ்ச தண்ணிய டேஸ்ட் பண்ணி பார்த்தா பயங்கர காரம். அப்பாறம் மஞ்ச தூள் ப்ராண்டை மாத்திட்டம்.

மஞ்ச தண்ணி வைக்க லேட்டானா ரத்த காயம் அ ருத்ர தாண்டவம். மேற்படி மந்திரத்துக்குரிய ஐ மீன் ஹ்ரீம் என்ற பீஜத்துக்குரிய அம்மன் பேரு புவனேஸ்வரி. முன் அனுமதியில்லாம இந்தம்மாவோட அந்தப்புரம் வ்ரை போய் தகவல் சொல்லும் அதிகாரம் படைச்சவுக ரெண்டு பேரு ஒருத்தர் ஆஞ்சனேயர். இன்னொருத்தர் கிளி முகம் கொண்ட ரிஷி (பேர் என்னங்கண்ணா? மறந்து போச்சு)

ஒரு நா ஒரு கிளி நம்ம போர்ஷனுக்குள்ள நுழைஞ்சுருச்சு.ஒரு 9 நாள் தங்கியிருந்துச்சு. நாம தியானம் பண்ணிக்கிட்டிருக்க ( ஐமீன் பீஜ ஜெபம்) பாம்பு வந்துருச்சு. எட்செட்ரா எல்லாம் சொல்லியிருப்பன்.

இந்த செனேரியோல நடந்த ஒரு சம்பவம் மட்டும் ரெம்ப த்ரில்லா இருக்கும். ஒரு இடைவெளிக்கப்புறம் இந்த தொடரை படிக்கிற உங்களுக்கும் ஒரு இன்வால்வ்மென்ட் வரும்.

அப்படியே நம்மை உரசிப்பார்க்கலாம்னு ஆருக்குனா எண்ணம் இருந்தா தயவு செய்து விட்டுரனும்னு தேன் அந்த சம்பவத்தை சொல்றேன். அனானி கமெண்ட் போடற பார்ட்டி என்னமோ அநியாயத்துக்கு "அவாளை" கோர்த்து விடுது.

அவாள்ளாம் ரெம்ப சென்சிட்டிவ் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்ங்கறாப்ல அவிக நம்மை உரசிப்பார்த்து மேட்டர் இன்னான்னு புரிஞ்சுக்கிட்டு ல்லாம் அபவுட் டர்ன் அடிச்சி பல காலம் ஆச்சு. மேலும் இழந்தவந்தேன் தலையில அடிச்சிக்கிட்டு அழுது கூப்பாடு போடுவானே தவிர அடிச்சுக்கிட்டு போனவன் கமுக்கமாதேன் இருப்பான்.இதை ஆருனா அந்த அனானிக்கு புரியறாப்ல சொல்லுங்க.

சரி சரி ஆத்தா மேட்டருக்கு வந்துர்ரன். வருசம் 2000 மாசம் ஜூனுக்கு பிறகான ஏதோ ஒரு மாசம். வாணியம்பாடியில அக்பர் கவுசருக்கு டாட்டா சொல்லிட்டு வந்துட்டம். தியாகய்யருக்கு உஞ்ச விருத்தி மாதிரி நமக்கு சோசியம். ஒரு நாளைக்கு அம்பதோஅறுவதோ கிடைச்சா போதும். ஒழுங்கு மரியாதையா கோட்டையில சேர்த்துட்டு நகர்வலம் ஆரம்பிச்சுருவம். நாட்டு நலன் நாடி சாக்ரடீஸ் கணக்கா இழுத்து வச்சு பேச ஆரம்பிச்சுருவம்.

அப்படி நகர்வலம் வரும்போது அங்கங்கே ஒவ்வொரு க்ரூப்ல டச் ஆயிருவம்.அப்படி ஒரு க்ரூப்ல டச் ஆன பார்ட்டியை பத்தி ஒரு அறிமுகம். நிறம் ரஜினிக்கு சாஸ்தி -வி.காந்துக்கு கம்மி. நடுத்தர உயரம். எப்பவும் இன்செர்ட் பண்ணின சட்டை. புதுசா சொந்த வீட்டை இடிச்சு கட்டவும் ஆரம்பிச்சிருந்தாப்ல. ஜாதகம்னா மிதுனலக்னம் 2 , 8 ல ராகு கேது.

எவனோ ஒரு கிரானைட் காரனுக்கு எதையோ சொல்லப்போக அது எக்குத்தப்பா ஒர்க் அவுட் ஆகி ஃபீஸு பத்தி கேட்டா ரூ500ல் ஆரம்பிச்சு பல ஆயிரம் வரை வாய்க்கு வந்ததை சொல்லுவாப்ல. நாம எதையும் கண்டுக்கறதில்லை. பயங்கர பீலா விடுவான்.இதுல நம்மையும் இழுத்துக்கறது "நாமல்லாம் நினைச்சா"ன்னு ஆரம்பிச்சு எதை எதையோ உளற வேண்டியது.

ஊரு விட்டு ஊருவந்த இளைப்பு களைப்பெல்லாம் தீர்ந்து க்ளாக் வைஸ் லைஃபுக்கு வந்துட்ட தைரியத்துல மார்க்கெட் சவுக்ல மாடியில லிஃப்ட் சைஸுல ஒரு ஆஃபீஸ் ரூம் ஒன்னு அமைய கடை விரிச்சுட்டம்.

அந்த சமயம் பார்த்து நம்ம கணிப்பு உண்மையாகி சி.எம் ஆன புரட்சி தலைவி ரெசிடென்ஸ்லருந்து ஒரு தேங்க்ஸ் கார்டு வந்தது. இந்த தகவல் தீயா பரவலின்னாலும் ஒரு மாதிரியா பரவிருச்சு. மேற்சொன்ன பார்ட்டி நம்ம ஆஃபீஸுக்கு வந்தான்.

வந்தவன் மொத நாள் ஒழுங்கு மரியாதையா ஜெ மேட்டர்ல சோசியம் பலிச்சதுக்கு வாழ்த்து சொல்லிட்டு கிளம்பிட்டான். ஆனா அடிக்கடி வர ஆரம்பிச்சவன் ஏதோ அவருதான் ஜெ ஜாதகத்தை கணிச்சு ஓரலா சொன்னாப்லயும் நாம ஏதோ படியெடுத்து அனுப்பினாப்லயும் உளறி கொட்ட ஆரம்பிச்சுட்டான்.

"கொய்யால ..மூடறா ரெண்டையும்" ங்கறதுக்கு ரெம்ப நேரம் பிடிக்காதுதான். ஆனால் அதென்னமோ ஒரு வித தயக்கம். எங்க பக்கத்துல மூ முலாஜானு சொல்வம்.அதை பார்த்து சகிச்சுக்கிட்டிருந்தன். போக போக அவன் வரவு பேச்செல்லாம் தலை மூசனையாயிருச்சு.

ஆத்தா என்னடி இது சோதனைன்னு புலம்பவே ஆரம்பிச்சுட்டன். ஆத்தா கொடுத்த தீர்ப்பு இருக்கே.யப்பா.. என்ன பிரச்சினையோ என்ன இழவோ விசாக பட்டினம் கடற்கரையில பிணமா ஒதுங்கினான் ஆசாமி.

ஏன்?ஏன்? ஏன்?னு பல ராத்திரி என்னை நானே கேள்வி கேட்டுக்கிட்டேன். உலக வாழ்க்கைங்கறது பத்து வட்டிக்கு வாங்கி செலவழிக்கிறாப்ல. ஆத்தா நேஷ்னலைஸ்ட் பேங்க் மாதிரி. குறைஞ்ச வட்டிக்கு ( என்ன கொஞ்சூண்டு பக்தி -விஸ்வாசம்) தர தான் காத்திருந்தும் -சனம் கொத்து பரோட்டா போடற பத்து வட்டிக்கே
அலை பாயறதை பார்த்து அரண்டு தன்னை அண்டினவுகளை தக்க வச்சுக்க தன் அருமை பெருமைய உணர்த்த எந்த ரேஞ்சுக்கு வேணா போயிர்ராங்கறது புரிஞ்சது.

இப்ப அனானி கமெண்ட் ஆசாமியையே எடுத்துக்கங்க. இப்பத்துக்கே ஆசனத்துலருந்து குடம் குடமா ரத்தம் கொட்டிக்கிட்டிருக்கும்.ஆனால் அந்த மன்சன் வீம்புக்காவ தன் சில்மிசத்தை தொடர்ந்துக்கிட்டே இருக்கான். இந்த கிராக்கியை எல்லாம் ஆஃப் பண்ணனும்னா விஜயகாந்த் மாதிரி ஆஃப் அடிக்கனுங்கற அவசியம் கூட இல்லை.ச்சொம்மா ஜுஜுபி.

கெட்டவனுக்கு நாம கெட்டவனாகி என்னத்த பண்ணிர முடியும்? ஆத்தா நினைச்சாள்னா வாய் வழியா கழியவும் -ஆசனம் வழியா திங்கவும் வச்சிருவா.அதையெல்லாம் நாம பண்ணனும்னா எத்தீனி ஆப்பரேஷன் பண்ணனும்.. அதெல்லாம் நடக்கிற கதையா? அதனாலதேன் ஃப்ரீயா உட்டாச்சு. நம்மால முடிஞ்ச எச்சரிக்கை எல்லாம் பண்ணியாச்சு. இனி நாம அம்பேல். தி பால் ஈஸ் இன் தி கோர்ட் ஆஃப் அம்பாள்.

Friday, July 29, 2011

ஆடி அ(ம்)மாவாசை ஸ்பெசல்



அண்ணே !
வணக்கம்ணே .. இன்னைக்கு ஆடி அமாவாசை போல. ( பஞ்சாங்கம் பார்த்தே பலகாலம் ஆகுது) சூரியனும் -சந்திரனும் ஒரே நட்சத்திர கால்ல ஏறி சஞ்சரிக்கிற நாள் இது.

வழக்கமா மனம் ஒரு பாதை -அறிவு ஒரு பாதைனு இருந்திருக்கும் போல. அமாவாசை எஃபெக்ட் நேத்து ராத்திரியே ஸ்டார்ட் ஆயிருச்சு.

சில சனம் செம்மொழி செப்பு .. செந்தமிழ் சிந்துன்னு அடம் பிடிச்சதாலயோ என்னமோ நேத்து ராத்திரி தமிழன்னை 16 கஜம் புடவை கட்டித்தான் வருவேன்னுட்டா.

ஆத்தாவுக்கு சொந்தமான கடல்லருந்து எடுத்த ஆத்தாவோட முத்துகளால் செய்த முத்துப்பல்லக்குல ஆத்தாவை ஏத்தி ஊர்வலம் நடத்தறதை விட அவளை அன்ன பூரணியாக்கி ஒவ்வொரு குடிசையிலும் பிரதிஷ்டை பண்றதுதேன் நம்ம லட்சியம்.

ஆதிசங்கரர்ல இருந்து ஆத்தாள பாடாத பார்ட்டி கிடையாது. அவிக விட்டதை எழுதினேனா? தொட்டதை எழுதினேனா? படிச்சு பார்த்து முடிவு பண்ணுங்க.


இகம் விட்டு பரம்
நாடிய போதே பரவசம்

புறம் நோக்கி ஓடும் எண்ணங்கள்
அகம் நோக்கி திருப்பியபோதே
பரம் உனை விரும்பும்

பரம் பொருள் உன்னில் அரும்பும்


இலவசமாய் பெற்றதை
இலவசமாய் வழங்கவே ஆசை

அதுவாய் மதுவாய் பொழிய
கையேந்தி நிற்கிறேன்
புதிதாய் கற்கிறேன்

அவற்றை இலவசமாய் வழங்கவே
ஆசை..
ஆனால் பெறுவோர் அகந்தை
அடியுண்ட நாகமாய்
சீறுமோ என்றே சிறு பொருள்
ஏற்பது வழக்கமாச்சு
அண்டைவெளியின் அகன்ற பாத்திரத்து
அமுதம்
வழியுது பொழியுது என்னை நனைக்குது
மனம் அவளை நினைக்குது



முழு நிலவுக்கும்
முழுதாய் தேய்ந்த நிலவுக்கும் உண்டு மரியாதை

உயர்ந்தோர் ஒரு படி தாழினும்
இழிந்தோர் ஒரு படி உயரினும்

அம்மவோ.. பெரும் தொல்லை
அதனால் தானோ என்னவோ

முழுமைக்கும் -புது நிலவுக்கும் மறு நாளை
மரு நாள் என்றனர் பெரியோர்.





அண்டை வெளியில் அவள் ...
அன்ன நடை போட

கால் தண்டை ஒலி கேட்கிறது
திருவடி பதிவதையா பேரிடி என்கின்றார்?


பிடிக்கேங்கும் களிறும்
ஆங்கே அரண்டு அலை பாயும் நேரத்திலும்

அன்னை மடி கண்டால்
பின்னை அது அல்லாடுமோ?


முதல் உயிர் முகிழ்த்தது
அந்த அலைகடலில் என்கின்றார்.

மின்னல் வெட்டுகையில்
புதிதாய் உயிர் புஷ்பித்ததென்றே
புகல்கின்றார்

அன்னை புன் சிரிக்க அவள்
எயிற்றோளி கடல் மிசை
சிந்திடவும்

முதல் உயிர் வந்ததென்பேன்
எங்கே? யாருக்கு வலி?




ஆதிசிவனுடன் ஆடிப்பார்த்த பாதம்
அரக்கர் தமை தரை மிசை அரக்கி தேய்த்தபாதம்

நினைந்தார் வாழ்வில் எல்லாம் ..எல்லாம் நிறைக்கும் பாதம்
ஆடி சிவந்த பாதம்

என் சிரசில் பதிவதாயின்
அரக்கனாகிடவும் அம்மையே நான் சித்தம்

இம்மையே மறுமையென நீ ஆக்கிட்ட பாங்கினாலே
உன்மத்தமானதடி
உன் பேரில் நான் கொண்ட பித்தம்


அண்டை வெளியினிலே
முழு நிலா நாளினிலே
நிலவில் நான் காண்பேன் அம்மை அவள் மஞ்சள் முகம்

புது நிலா வரும் முன்னே இருள் சூழ்ந்த வான்மிசை
வீணே முகம் தேடி மானே போல் நான் மருள
வானே முகமாகி கரிய முகத்தினிலே கருவிழி கலந்திருக்க
காட்சி தந்தாள் காளியாக

மரணமே போல் ஒரு தரிசன்ம்
என்ன ஒரு கரிசனம்.

கண்டவளிலும் அவளை கண்டவன்
கண்டதை விண்டவன்

விண்டதெல்லாம் அண்டை வெளி இட்ட பிச்சை


ஏழு வண்ணங்களும் ஏந்திழை வண்ணமாச்சு
அவளே யாவும் என்ற என் எண்ணம் திண்ணமாச்சு

உருவம் எதுவாயின் என்ன?
பருவம் எதுவாயின் என்ன?

அவளை தரிசிக்க அகிலத்து பெண்டிர் ஒரு கண்ணாடி


கதிரும் நிலவும் கூட
அது முழு நாள்

அறிவும் -உணர்வு கூட
அது ஆன்மா விழித்து எழு(ம்) நாள்



சொல்,வில், will யாவும் அடுக்கித்தந்தவளே
நில் உன் கரம் காட்டு

நான் தடுக்கி விழுந்த போதெல்லாம் இடையில் இடுக்கி
இதயம் முடுக்கிய கை உனதுதானா பார்க்க வேண்டும்

தாள் பிடித்தோரையெல்லாம் தள்ளி வைத்து
உனக்கெதிராய் வாள் பிடித்த என்னை
அள்ளி அணைத்தாயே அந்த கையை -உன் சொந்தக்கையை காட்டு

அதில் என்னை அரவணைத்த அத்தனை கைகளும் தெரியும்
அவற்றின் மவுன மொழி எனக்கு புரியும்


மனமருள் கொண்டு வாக்கில் தெளிவிழந்த மாந்தரிடை
அருள் வாக்காய் -ஆற்றொழுக்காய்
அமுதம் சொரிவித்தாய்
என் விலாசத்தை விசுவத்துக்கே தெரிவித்தாய்

கட்டணம் பெற்றுக்கொள்ளாத சைக்கியாட் ரிஸ்ட் நீ
என் மனம் தெளிவித்தாய் அல்லவா?

மனதை ப்ளீச் செய்தே வாக்கில்
தெளிவூட்டிய ஸ்பீச் தெரஃபிஸ்ட் நீ அல்லவா

ஊதியம் எதிர்பாராத என் PRO நீ.
என் விலாசத்தை விசுவத்திற்கு அறிவித்தாய் அல்லவா?

Sunday, July 24, 2011

ஆண்கள் X பெண்கள் : ஆன்மீக போக்கு


அண்ணே வணக்கம்ணே !

போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் சேறு வாரி இறைக்கட்டும்னு ஒரு வேலைய எடுத்தாச்சு. அதை முடிச்சே தீரனும்னு "ஆண் பெண் வித்யாசங்கள் தொடர்பதிவை தொடர்ந்துக்கிட்டிருக்கோம். சாமி,பூதம்,பெரியாரு, நித்யானந்த பாபா (இவர் வேற பார்ட்டி-பெரியார்+ நித்யானந்த பாபா படம் தேன் நம்ம டெஸ்க் டாப்ல இன்னைக்கும் இருக்கு ) ஆரானாலும் சரி நமக்கு கொஞ்சம் போல பீஸ் ஆஃப் மைண்டை கொடுத்து இந்த தொடரை முடிக்க வச்சா கோடி புண்ணியம். வேற ஆருக்கு? நமக்குத்தேன். ஆண் பெண்கள் ஒரே யுத்தத்தை ஒரே அணியிலிருந்து நடத்தவேண்டிய நிலையில ஒருத்தரை ஒருத்தர் சந்தேகப்பட்டுக்கிட்டு -டார்ச்சர் பண்ணிக்கிட்டு அல்பாயுசா போயிர்ராய்ங்கப்பா.

அனானி கமெண்ட் போடற நாதாரிய கூட சாகனும்னு நான் நினைக்கமாட்டேன். நம்ம எதிரி செத்தா அவன் இத்தீனி நாளு நமக்குள்ள ஒரு அங்கமா இருந்ததால நமக்குள்ளயும் ஏதோ செத்துப்போயிரும். அதனால ஆரும் சாகக்கூடாது. கொய்யால விதி வந்து செத்தா சாகட்டும். சாவை எதிர் நோக்கி போய் வரவேற்கிற பிசினஸ் இருக்கக்கூடாதுங்கறதுதேன் நம்மளோட முக்கிய நோக்கம்.

கடந்த அத்யாயத்துல (9) ஒன்பதாம் பாவ காரகத்வத்துல அப்பாவை பொறுத்தவரை ஆண் பெண் இடையில் என்ன வித்யாசம்னு பார்த்தோம். இப்பம் மதம் - தெய்வம் - குரு -குரு உபதேசம் -புண்யக்ஷேத்திர தரிசனம்- ஆன்மீகம் ஆகிய விசயங்கள்ள ஆண் பெண்ணுக்குள்ள என்ன வித்யாசம்னு பார்த்துருவம்.

ஆன்மீகத்தோட முக்கிய நோக்கமே நம்மை நாம இல்லாம ஆக்கிக்கறதுதேன். இந்த அனானி கமெண்டெல்லாம் பார்க்கிறச்ச பார்த்தாப்லயே கியாபகம் வச்சுக்கறதில்லை. யாரோ காத்துவாக்குல மெசேஜ் கொடுத்தாப்ல நினைச்சுக்கறது.

"அடடே நாம இந்த ஆப்ரிக்கதீவுல வந்து மாட்டிக்கிட்டமே இங்கன கம்ப்யூட்டர் இல்லை இன்டர் நெட் இல்லை. இது நிஜமா பொய்யானு கூட தெரியலை .சரி ஊருக்கு போனபிற்பாடு பார்ப்போம்னு அடுத்த வேலைய பார்க்க ஆரம்பிச்சுர்ரது.

நம்மை நாம இல்லாம ஆக்கிக்க துணியனும்னா நாம நமக்கு சுமக்க முடியாத பாரமாயிருக்கனும். (அதாவது ஆளுமை - அகந்தை - சக்தி எல்லாம் உச்சத்துல இருக்கனும்.) நம்மை நாம இல்லாம ஆக்கிக்கிட்டா அந்த அனுபவம் எப்படி இருக்கும்னு ஆண் ஒவ்வொரு உடலுறவுலயும் ஃபீல் பண்றான். உச்சம் பெறுகிறான்.

அவனோட சாகும் இச்சை அதாவது தன்னைத்தான் இல்லாம ஆக்கிக்கிற கோரிக்கை ப்ளாக் அவுட் மூலம் நிறைவேறுது. (இங்கன நாம குறிப்பிடறது உட்டாலக்கடி உறவை பத்தித்தேன் - நாம ஒரு காலத்துல பொட்ட அஜால் குஜால் டெக்னிக்கை எல்லாம் உபயோகிச்சு " நின்னு விளையாடினா" அதனோட எஃபெக்டே வேற)

வீர்ய ஸ்கலிதத்துக்கு மிந்தி அவனோட கொல்லும் இச்சையும் /வீ.ஸ்கலிதத்த்துக்கு பின் சாகும் இச்சையும் ஒரு சேர நிறைவேறுது. இதனால அவனுள்ளான "எதுவோ" அண்டை வெளியுடன் ஒரு கணமேனும் தொடர்பு கொள்ள முடிகிறது. அவன் மனம் அந்த தொடர்பை நீட்டிக்க துடிக்கிறது.

ஆனால் பெண்ணை பொறுத்தவரை உச்சமென்பது ஒரு கனவாகவே இருக்கு. இதனால அவளோட சாகும் இச்சை முழுக்க நிறைவேர்ரதில்லை. அவனோட ஸ்கலிதத்துக்கு மிந்தி ஓரளவு சேம்பிள் பார்த்தாலும் அடைதல் என்பது இல்லை.

இந்த கடுப்புல அவளுக்குள்ள கொல்லும் இச்சையும் -சாகும் இச்சையும் திரளுது. . அவன் ஸ்கலிதத்துக்கு பின் ஒரு நொடி பிணமாய் மாறும் போது இவளோட கொல்லும் இச்சை ஒரு நொடி நிறைவேறுது. ஒரு நொடிதேன் சாஸ்தி இல்லை. கொல்லப்படும் இச்சை? அதுக்கு ஃபோர் ப்ளே ரெம்ப முக்கியம். நம்மாளுங்க14 ரீல் படத்தையே ஃபாஸ்ட் ஃபார்வார்ட் பண்ணி பார்க்கிற கேசுங்களாச்சே. அதனால அதுவும் ஃபணால்.

ஆக ஆன்மீகம் என்பது " நான்" சாவதற்கான வழி. பெண்ணிலான " நான்" ரெம்ப பூஞ்சை. வீக்கு. அப்பன்,அண்ணன் தம்பி ,ஆத்துக்காரர் பண்ற டார்ச்சர்ல அவளோட ஈகோ /அதாவது நான் என்ற எண்ணம் நிலத்தடி நீரா ஆழத்துக்கு போயிருது.

அதனால அதை ஜஸ்ட் லைக் தட் bear பண்ண முடியுது. அதனோடயே வாழ்ந்துர முடியுது. அதனாலதேன் பெண்ணை தியானம் /யோகம் இத்யாதி பெருசா கவர்ரதில்லை.

ஆனால் ஆணோட நிலை இதற்கு டிஃப்ரண்டா இருக்கு. அவன் தியானம் யோகம்னு ஓடறான். ஏற்கெனவே எட்டாம் பாவத்துல சொன்னாப்ல பெண் படைப்பின் சக்தியா -படைப்பின் உச்சத்துல இருக்கா. அவளை மரணம் பெருசா கவர்ரதில்லை. உண்மையான தியானம் யோகத்துக்கும் மரணத்துக்கு வித்யாசமில்லிங்கோ.

இதனால பெண் ச்சொம்மா மேம்போக்கான பூசை ,புனஸ்காரம் ,மங்கல வாத்திய ஓசை ,சங்கீதம், நடனம்னு பின் தங்கிர்ரா.

ஒரு குழந்தைக்கு ஆதி குரு தந்தை. அந்த பார்ட்டி சரியானவனா அமைஞ்சிருந்தா "குருக்கள்" பற்றிய தெளிவு இருக்கும். இல்லின்னா கண்டவனையும் குருனு ஏமாந்துர்ரதோ அ அப்பனை "சோப் போட்டு மேனேஜ் பண்ணாப்ல" குருவையும் கவர் பண்ண பார்க்கிறதும் நடக்க ஆரம்பிச்சுருது.

குரு ஒரு காட்டாற்று வெள்ளம் கரையோரமா நின்னு பார்க்கவும் செய்யலாம். புடவை கொசுவத்தை காலிடுக்குல செருகிக்க்ட்டு குனிஞ்சு நாலே நாலு சொட்டு தண்ணிய எடுத்து தலையில தெளிச்சுக்கிட்டும் வந்துரலாம்.

அல்லது அந்த காட்டாற்றின் இசைக்கு நம்ம மனம் தலையசைக்க துவங்கினா "முக்தி" மோட்சம்லாம் கூரியர் பாய் மாதிரி நம்மை தேடிவரும்.

பெண்ணுக்கு சமூகம்/சமூகத்து பெரிய மனிதர்கள்/ மத குருக்கள் மேல எல்லாம் ஒரு ஊமைக்கோபம் இருக்கு. தன்னோட அடிமைத்தனத்துக்கு இவிகதான் காரணம்ங்கற சப்கான்ஷியல் தாட் இருக்கு. ரஞ்சிதா மேட்டரை நான் அப்படித்தேன் பார்க்கிறேன். நித்யானந்தாவுக்கு வெடிவைக்கவே அந்த நடிகை கில்மாவுக்கு சம்மதிச்சிருக்கலாம்.

பெண் தான் சிக்கியிருக்கும் அடிமை வலையை உணர்ந்தவளா இருக்கா. சக பெண்ணையே நம்பாதவ ஒரு குருவை ஆணை எப்படி நம்புவா?

அட கடவுளாவே இருந்தாலும் எந்த கடவுளாச்சும் அட்லீஸ்ட் தன் பொஞ்சாதிக்கு ஜஸ்டிஸ் பண்னியிருக்கா? நோ..

ரிவர்ஸ் எஃபெக்ட்:

ஆனால் பாருங்க மனம் ஒரு விசித்திரமான கருவி. உங்கள் அனுபவம் என்னவோ நோக்கம் என்னவோ இலக்கு எதுவோ அதுக்கு சம்பந்தமே இல்லாத ரூட்ல உங்களை இழுக்கும். தள்ளிக்கிட்டு போகும். அல்லாம் கொஞ்ச நாளுதேன். அப்பாறம் தன்னோட இயற்கை வழிக்கே திரும்பிரும்.

உ.ம் கண்ணாலமான புதுசுல அல்லா புருசன் மாரும் சோடியா கோவிலுக்கு போயிருப்பிங்க . கண்ணாலமான புதுசுல அல்லா மனைவி மாரும் ஒரு கட்டத்துல புருசன் இன்ஃப்ளுயன்ஸ்ல தியானத்தை ட்ரை பண்ணியிருப்பிங்க. அது உங்க இயற்கைக்கு விரோதமானது. அதனால கொஞ்ச நாள்ளயே மாயை விலகிரும்.

அவரு மெடிட்டேஷனுக்கும் நீங்க கோவில் குளத்துக்கும் திரும்பிருவிங்க..

Friday, May 20, 2011

சரித்திர சாக்கடைக்கெல்லாம்

கணபதியே உனை கை தொழுதேன்
தொழாத நேரம் தான் நான் அழுதேன்
அச்சன் என்றும் பாராதே
அச்சு முறித்தவன் நீ

புல்லெடுத்து சூட்டிவிட்டால்
புரவலனாய் தருபவம் நீ
எருக்க மாலையிட ஏழ்மை கருக்கி
தொலைப்பவன் நீ

புலியென்று அலட்டிடுவர்
வலி வந்தால் அரண்டிடுவர்

எலி மேல் அமர்ந்தவனே அலட்டி தீர்ப்பதற்கும்
அரண்டு தவிப்பதற்கும் நீயன்றோ ஆதி மூலம்

சரித்திர சாக்கடைக்கெல்லாம்
நாயகனே நீயன்றோ  மறுக்கவொண்ணா நதி மூலம்

நான் சொல்ல நினைப்பதெல்லாம்
என் சொல்லில் அடங்கிடவே
அய்யன் நீ அருள் செய்வாய்

மடமை தன் சிரத்தினையே மகேசி மைந்தனே நீ
ஒரு கணத்தில் உடன் கொய்வாய்

நினைவில் - சொல்லில்  நிற்கும்  எண்ணமெல்லாம்
செயலாகி நெருப்பாறாய் ஓடிட ஆணை கொடு

வில் அது விரட்டிட்ட அம்பென ஆக்கிவிடு
வீண் தேக்கம் யாவினையும் இங்குடன் போக்கிவிடு

கணம் ஏவும் சனம் உண்டு- அவர்க்கே
தினம் ஏசும் மனம் உண்டு

கண நாதன் நீயன்றோ கணமெலாம் நின் சேனையன்றோ
தளபதி நின் தாள் பிடித்தேன்.

நீ உண்டென் பின் என்றே தயங்காது வாள் பிடித்தேன்
நின் சேனை எனை தாக்க காவாதிருப்பதுவோ?

தாளிடு தாளிடு தடைகளுக்கே
கந்தன் வேலெடு வேலெடு  விரட்டிடவே

சோரத் திலகங்கள்

ஆசு கவி இங்கெனக்கே வார்த்தைகளின் கண்ணாமூச்சி
அசடன் என் நாவில் நடம் புரியும் நாமகளே  இன்று உனக்கென்னாச்சி

யான் பெற்ற இன்பமெலாம் பெறுக இவ்வையம் என்றே
போட்டுடைக்க நான் முனைந்தால்

ஏதோ  சக்தி இடை  வந்து  மைந்தன் என்னை வாட்டுவதோ
சக்தி உன்னை பேயெல்லாம் போவென்றேதான்  விரட்டுவதோ

நீயல்லால் ஒரு சக்தியுண்டோ
என்னைப்போல் ஒரு பித்தனுண்டோ

உண்டோ பகர்வாய் நின் படைப்பில்
நீயும் அடித்து சென்றாயோ விதிவாய்க்காலின் உடைப்பினிலே

முன் கதை சுருக்கம் முழுக்கத்  தந்து 
என் முடிவை முன் கூட்டி அறிவித்தாய்.

வாழ்வுக்கொரு பொருள் நீ தந்தாய் -என்
தாழ்வுக்கும் ஒரு முடிவினையே முற்றிலுமாக நீ தந்தாய்

அன்று ஒரு நாள் உம் சபை தனிலே
உன் கொள்கை முடிவெலாம்  எதிர்த்தாலும்
என் அலப்பறை யாவும் நீ சகித்தாய்

விதியறியாத மதி தந்து மக்களை வாட்டுதல் தவறேன்றேன்
அதுவும் அவர் விதி என்றேதான் விண்ணவர் எல்லாம் வாதிட்டார்

எனக்கொரு வாய்ப்பு தந்திட்டால்
உம் சதிகள் யாவும் விரித்துரைப்பேன்

பின் வேகாது அவணியில் உம் பருப்பு
என்றேன் .வந்தேன் .அதனாலே தேவர்க்கெல்லாம் பெரும் வெறுப்பு

அவர் தம் கடுப்பை கண்ணுற்றும்
கண்ணே போய்வா என்றேதான்
விடை கொடுத்திங்கு அனுப்பி வைத்தாய்
விடையில்லாத வினாக்களுக்கே விடைகள் தந்து விடை கொடுத்தாய்.

உன்னை மறைக்கும் யாவினையும்
வி(ள)லக்க  வந்தேன் விசுவத்தில்

பழுதாய் கிடந்த பாவி நானே என்னவர் இன்னல் போக்கிடவே
நினைந்தது ஒன்றை சாக்கிட்டு
சிக்கென்றே தான்  பற்ற வைத்தாய் அம்மா நினது  பொன்னடியே

பற்றிய பின் தானே திரி பற்றிய அதிர் வேட்டாய்
முழங்கி அதிர்வித்தேன்.

வானப்பந்தலிலே படர்ந்த  கொடி மிசை பழுத்த பழமெல்லாம்
மண் மிசை உதிர்வித்தேன்

தாய் மண்ணும் நின் வடிவம்
தாய் மொழி நின் உருவம்
இவை காக்க களம் கண்டால்
அவை கூட்டி ஆதரிப்பாய்

வீரத்திலகம் தான் தீட்டி வழி அனுப்பிடுவாய்
சோரத்திலகங்கள்
சொக்குப்பொடி போட்டாலும்
சொக்க வைத்து சிக்கவைப்பாய்

வேட தாரிகளை இச்சாதாரி போல பல வடிவம் எடுத்தேதான்
பாடம் கற்பிப்பாய்

ஒன்றிரண்டா புரிவித்தாய்?
நம்மிடை மதில் எல்லாம் மாதா நீ சரிவித்தாய்

முப்பிறவி பயிற்சியெல்லாம் இப்பிறவி தனில் தந்து
முப்போதும் பாடுவித்தாய்

பாரோர் பாடெல்லாம் பட்டுப்போக வைக்கும்
பரம் பொருள் நிறை  சிந்து

ஏழ்மை ஒன்றுதானே சிக்கலின் துவக்கமென்று
கீழ்மை நான் விட்டு கிழக்கு நோக்கி புறப்பட்டேன்.

பாதையெல்லாம் பாம்பாய் கிடக்க
விண்ணவர் வீம்பெல்லாம் விளக்கி கூறிட்டாய்.

வீணன் எனக்காக வீணை நீ தாங்கி   புதுக்கலைகள் தந்திட்டாய்
பாணன் என் பாட்டுக்காய் பாவி என் வறுமையிலே வண்ணமகள் வெந்திட்டாய்

முன்னவரில் மூலம் சொன்னவர்கள்
சொல்லுக்குள் சுருக்கி வைத்த
சூக்குமமெல்லாம் காட்சி தரவைத்தாய்

மண்ணுலகில் மருவெனவே கிடந்த என் மீதே அருள் கூட்டி
அவணி மிசை மாட்சி பெற வைத்தாய்

ஆருமிலை இங்கெனக்கு என்றே உனை அடுத்தேன்
ஊருமிலை எனக்கென்றே பாச்சரம் நான் தொடுத்தேன்

அது தீச்சரமாய் விழுந்தாலும்  நுதல் விழியில் ஏற்றிட்டாய்
ஏழ்மை எனை எரிக்க  பனிப்பார்வை ஒன்றாலே அந்நிலை  மாற்றிட்டாய்

பாடொன்று வந்தாலே பாடென்று சொல்லுவதாய்
ஏடொன்று நான் எடுத்தால் எழுத்தாகி வந்துற்றாய்

பாட்டி வீட்டினிலே பாட்டிசைத்து மகிழுதற்போல்
மகேசி உன் மடியில் மகவு நான் இசைத்திருந்தேன்.

படியெடுக்கும் ஆள்காரன் எனக்கென்ன தெரியும்
அடுத்தவரி விழுந்த பின் தான்  பொருள் எனக்கு புரியும்.

செவியமர்ந்து  சேதி சொல்லும் சேச்சி
ஆவி சோர நானமர்ந்தால் தாவி வரும் ஆச்சி

எல்லாம்  நீ தானே
உன் கைப்பொருள் நான் தானே

செலவழித்தல் சேமித்தல் யாவும் உன்  விருப்பம் -
உனை சேவித்தல் ஒன்றுதானே என் வாழ்வில் புது திருப்பம்

கோள் எல்லாம் நின் காற்சிலம்பு  பரலாமோ? - ஞான
வாள் எடுத்து பிளந்திட்டால் கோலவிழிதனிலே கோபம் வரலாமோ?

ஈங்கிவரை ஈன்றவளே!
தாங்கிவரை கடைசி வரை !

போதை கண்ணடிக்க
பாதை தவறுகின்றார் - நல்

வழி காட்டும் வழி காட்டி நானே வழி தவற
பழி வருமே பார்மிசை

மீன் விழி தூங்காதாம்
துளி தூக்கம் உள் வாங்காதாம்

உன்னாட்சி மீன் ஆட்சி
என்றே உன் நாமம் மீனாட்சி என்றாச்சாம்.

நல்லாட்சி தருவதும் தான் மீனாட்சி கடமையன்றோ?
சொல்லாட்சி தந்திட்டாய் நானுன் உடமையன்றோ?

என் கடமை நான் முடிக்க தாயே நீ சக்தி கொடு
உன் உடமை நானன்றோ எனை ஏற்க  முக்தி கொடு

Saturday, April 23, 2011

உஜிலா தேவியும் -உஜாலா சொட்டு நீலமும்

அண்ணே வணக்கம்ணே!

வம்பு வழக்கு வேணாம்னு ஒதுங்கி ஒதுங்கி போனாலும் 6 மாசத்துக்கு ஒன்னு வந்து மாட்டிக்குதுங்கண்ணா.

என்னவோ பெரியமன்ச தராவா கீதேனு அப்பப்போ பார்த்துக்கிட்டிருந்த
உஜிலா தேவி  யை உஜாலா சொட்டு நீலம் இல்லாமயே வெளுக்க முடிவு பண்ணிட்டன்.

மேற்படி   வலைப்பூவில் பா.ஜ.க வாசம் வீசுவதை முன் கூட்டியே தெரிந்து கொண்டவன் நான். மேற்படி வலைப்பூ
//இன்றைய கிறிஸ்த்துவர்களில் 98 சதவீதம் பேர் இயேசுவை அறியாதவர்கள், இயேசுவை புரியாதவர்கள் அவர் சொற்படி நடக்காதர்கள் இன்று தங்களை கிறிஸ்த்துவர்கள் என்று அழைத்து கொள்ளும் மனிதர்கள் அவர் கூறியப்படி மட்டுமே வாழ்க்கை முறையை நடத்தி கொண்டிருந்தால் இன்யை உலகில் எந்த சிக்கலுமே இல்லாமல் இருந்திருக்கும்// என்கிறது .

இதே பத்தியில் ஏசு என்ற இடத்தில் இந்துக்டவுளருள் ஒருவர் பெயரையும் கிறிஸ்தவர்கள் என்ற இடத்தில் இந்துக்கள் என்ற வார்த்தையையும் போட்டு எழுத உஜிலா தேவிக்கு மனம் + தில் இருந்தால் பா.ஜ.க வாசம் என்ற குற்ற்ச்சாட்டை  வாபஸ் வாங்கிக்கொள்ள நான் தயார்.

வார்த்தைகளை மாற்றிப்போட்டு எழுத அவர் தயாரில்லை என்றால் என் குற்றச்சாட்டு அக்மார்க் உண்மை என்று அர்த்தம் 

பை தி பை அவன் அவள் அது தொடரை ஆவலுடன் படிக்கும் அந்த நானூறு பேரில் நீங்களும் ஒருவரானால் பத்தாம் அத்யாயத்தை படிக்க இங்கே அழுத்துங்க

Friday, April 22, 2011

அவன்-அவள்-அது : 9

இந்த அவன்-அவள்-அது தொடரை படிச்சுட்டு சமைத்துப்பார் புஸ்தவம் மாதிரி ஆன்மீக முன்னேற்றத்துக்கான டூஸ் அண்ட் டோன்ட்ஸை பத்தி ஒரு பதிவு போட்டா என்னன்னு மஸ்தா பேரு கேட்டுக்கிட்டே இருக்காய்ங்க. (ஹி ஹி ஒரே ஒரு பார்ட்டிதேன்.அதுவும் ஒரே ஒரு தாட்டித்தேன்)

என்னை நான் ஆன்மீக விஞ்ஞானின்னெல்லாம் சொல்லிக்கிட்டு வரைஞ்சு தள்ள ஆரம்பிச்சா  அது கேணத்தனமாயிரும்.  நமக்கு நடந்ததெல்லாம் ஜஸ்ட் ஆக்சிடென்டல். மேலும் படிக்க

அவன்-அவள்-அது : 9

இந்த அவன்-அவள்-அது தொடரை படிச்சுட்டு சமைத்துப்பார் புஸ்தவம் மாதிரி ஆன்மீக முன்னேற்றத்துக்கான டூஸ் அண்ட் டோன்ட்ஸை பத்தி ஒரு பதிவு போட்டா என்னன்னு மஸ்தா பேரு கேட்டுக்கிட்டே இருக்காய்ங்க. (ஹி ஹி ஒரே ஒரு பார்ட்டிதேன்.அதுவும் ஒரே ஒரு தாட்டித்தேன்)

என்னை நான் ஆன்மீக விஞ்ஞானின்னெல்லாம் சொல்லிக்கிட்டு வரைஞ்சு தள்ள ஆரம்பிச்சா  அது கேணத்தனமாயிரும்.  நமக்கு நடந்ததெல்லாம் ஜஸ்ட் ஆக்சிடென்டல். மேலும் படிக்க

Sunday, April 17, 2011

பாம்பு விடறான்யா

அவன் அவள் அது தொடர்பதிவுல மாயா பீஜத்தை சான்ட் பண்ணிக்கிட்டிருந்த சமயம்  பாம்பு வந்துருச்சுன்னு சொன்னேன். அதை படிச்சுட்டு மஸ்தா பேரு பாம்பு விடறான்யானு நினைச்சிருக்கலாம்.

ஒரு காலத்துல பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான் நாம. ஆனால் ஒரு கட்டத்துல "ங்கொய்யால எவனுக்கோ பயந்து நாம ஏன் இப்படி பீலா விட்டு எதை விட்டோம்னு ஞா வச்சுக்கிட்டு சாகனும். இந்த சொசைட்டியே பொய் - இந்த மனிதர்களே பொய் -இவிக நம்மை பார்த்து டர்ராகனும்னா தாளி உண்மைய சொல்றதுதான் வழிங்கற முடிவுக்கு வந்துட்டு சொல்ல ஆரம்பிச்சுட்டேன். Read More

Tuesday, March 29, 2011

பலான மேட்டரில் சில பிடிகளும் பிடிப்புகளும்

எச்சரிக்கை:
பிடின்னா பெண் யானைனு அர்த்தம். பேச்சு வழக்குல  "பிடி"ன்னா கேட்ச் .  பொருளை பிடிங்கறதுக்கும் பிடிதான். ஆளைப்பிடிங்கறதுக்கும் பிடிதான்.

ஆளைப்பிடிச்சு வேலைய முடினு சொல்றதுக்கும் "ஆளைப்பிடி"தான்.  நிலை தடுமாறிட்டிருக்கிற 'குடி"மகனை பிடிங்கறதுக்கும் பிடிதான்.

மல் யுத்தத்துல பிடிக்கு வேற அர்த்தம். பலான நேரத்து பிடி வேற.

எங்கயோ பிடிச்சிருக்குன்னா அது உடல் சாந்த  புகார். உன்னை எனக்கு பிடிச்சிருக்குன்னா அது மனம் சார்ந்த நிலை.

பிடிப்புங்கற வார்த்தைக்கும் பல அர்த்தம் இருக்கு.

"என்னமோப்பா வாழ்க்கையில ஒரு பிடிப்பே இல்லாம போயிருச்சு"
"பிடிப்பு போக கைக்கு எவ்ளதான் வருது?"
"பிடிப்பு இல்லாம எப்படிப்பா கடன் கொடுத்தே?"

உணர்வு மொழியாக்கம் செய்யப்படும்போது எப்படியெல்லாம் அர்த்தம் மா ( நா) றிப்போயிடும்ங்கறதுக்கு இதெல்லாம் உதாரணம் (  வினோத்ஜி கவனிக்கனும்)
Read more

Monday, March 28, 2011

அவள்


எவளுக்குள்ளயும் ஆணினம்  அவளைத்தான் தேடுது. அவளைபத்தி சொன்னா பீலா விடறதா தோணும். லாலா போட்டு பினாத்தறதா தெரியும்.  மோகத்தை உண்டாக்குபவளும் அவளே மோகினி. பின் மோகத்திலிருந்து யோகத்துக்கு இழுத்து செல்பவளும் அவளே. யோகினி.

எல்லா எழுத்தும் அவளையே குறிக்கும். ஒன்னுக்கொண்ணு முரண்பட்ட எல்லா வார்த்தையும் அவளையே குறிக்கும். காலாயை நமஹான்னாலும் அவதான். காலாதீதாயை நமஹான்னாலும் அவள் தான்.

"அனாமிகா"ம்பாய்ங்க ( பேரில்லாதவள்) .அப்பாறம் பார்த்தா சஹஸ்ர நாம அர்ச்சனைம்பாய்ங்க. அவளே ஒரு புதிர். தர்கத்துக்கு எதிர்.

நம்ம ஈகோ ஒரு அல்பம். எதையெடுத்தாலும் லாஜிக் பார்க்கும். லாஜிக் பார்த்துதானே ஓட்டுப்போடறாய்ங்க. பின்ன ஏன் நம்ம ஆட்சியாளர்கள் எல்லாம் இப்படி இழவெடுக்கிறாய்ங்க.

முரண்பாடுகளின் மொத்த உருவம் அவள் .
ஒத்திசைவுகளின் பிறப்பிடமும் அவளே

Saturday, March 26, 2011

குரு+குண்டலி :3 « Anubavajothidam.com

அண்ணே வணக்கம்ணே !
உங்கள் ஆன்மீக குரு என்ற பதிவை ஆரம்பிச்சு பாதியில விட்டு இடையில ராசிச்சக்கரம் வெர்சஸ் பிறவிச்சக்கரம்னு ஒரு பதிவை போட்டு தொலைச்சேன். இது போதாதுன்னு இன்னைக்கு குண்டலி விழித்தால்னு ஒரு பதிவு வேற.

மேலும் தொடர்ந்து படிக்க

Wednesday, March 23, 2011

உங்கள் குருவும் - முற்பிறவி ரகசியங்களும்

 நம்ம ஜாதகப்படி நமக்கு குருவா வரக்கூடியவர் யாரா இருக்கக்கூடும்னு முன் கூட்டியே தெரிஞ்சுவச்சுக்கிட்டா எவ்ளோ நல்லாருக்கும். பாடாவதி பத்திரிக்கைகள்ள ஸ்பான்சர்ட் ஃபீச்சர்ஸை பார்த்து விளம்பரங்களை பார்த்து கல்கி கிட்டே போய் போதை ஊசி, நித்யானந்தா கிட்டே போய் "பலான ஆராய்ச்சி"க்கு உதவினு அல்லாடாம அசால்ட்டா ஆன்மீக கடல்ல குதிச்சுரலாமே.

நேத்து மரணம் என் ஆசான்ங்கற பதிவுல இந்த டீட்டெயிலை நாளைக்கு தரேனு சொல்லியிருந்தேன். அதுக்காகத்தேன் இந்த பதிவு.Read More