Wednesday, August 29, 2007

அடிக்கடி ட்ரான்ஸ்ஃபர்: போலீசாரை சுட்ட ஏட்டு


அண்ணே வணக்கம்ணே !

மேற்படி செய்தி ச்சொம்மா ஒரு சாம்பிள் தான்.  நம்ம பக்கத்துல ரீசன்டா ஒரு ஏட்டு எஸ்பியை கிட்னாப் பண்ணி வ்ச்சுக்கிட்டு அலப்பறை பண்ணாரு. செய்திக்கு வராத எத்தனை சம்பவம் இருக்கோ தெரியாது.

இதுக்கெல்லாம் காரணம் காவலரின் பணி சூழல். இதை மாற்றினாலே தவிர புண்ணியமில்லை.


காவலர்கள் மீதான காதலால் இல்லையென்றாலும் அப்பாவி மக்கள் நலம் கருதி இந்த கட்டுரையை வலையில் பதிகிறேன். ஆந்திரத்தில் உள்ள காவலர் பணிச்சுழலின் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்படுகிறது. இருந்தாலும் என்ன ....வீட்டுக்கு வீடு வாசற்படி.


சமீபத்தில் வலைப்பதிவுகளை ரகசிய போலீசார் பார்த்து குறிப்புகள் எடுப்பதாய் அறிந்து இதனை தமிழில் பதிகிறேன். யூனிகோட் என்பது தமிழில் எத்தனைக்கெத்தனை எளிதாக உள்ளதோ,தெலுங்கில் அத்தனைக்கத்தனை கடினம் என்பதும் இந்த தமிழ் பதிவுக்கு ஒரு காரணம். ஊர் பிள்ளையை ஊட்டிவள்ர்த்தால் தன் பிள்ளை தானே வளருமாமே..சரி விஷயத்துக்கு வருகிறேன்.


இந்த கட்டுரைக்கான விஷயங்கள் பல வருடங்களாய் என் மனதில் இருந்தாலும், இதனை இன்று பதிய உடனடி காரணம் ஒன்று இருக்கிறது. நான் ஒரு பத்திரிக்கை நிருபன். (ஜோதிடனும் கூட). ஒருவாரத்திற்கு முன் என் க்ளையண்டுகளில் ஒருவரான் திருமதி. ............. என்பவர் என்னை செல்லில் தொடர்பு கொண்டு தன் மகன் ஒரு திருமணமான பெண்ணை ஏதோ செய்து விட்டதாய் புகார் கொடுக்கப்பட்டதாகவும், அவனை தேடி வேளை தவறிய வேளைகளில் போலீசார் தம் வீட்டுக்கு வந்து மிரட்டுவதாகவும் கூறி அழுதார். நானும் காலையில் இருந்து எஸ்.ஐ அவர்களை சந்தித்து பேச முயன்று கொண்டே இருந்தேன்.


காலை தி.தி.தேவஸ்தான இலவச திருமண நிகழ்ச்சிக்கான செக்யூரிட்டி யில் இருந்தார். (மக்கள் தொகை பெருக்கத்தால் திணறும் ஒரு நாட்டில் இது தேவையா?)மாலை சென்றேன். அவருக்காக அப்போதுதான் ஜீப் அனுப்பப்பட்டு கொண்டிருந்தது. சரி நாமும் வீட்டுக்கு போய் ப்ரஷ் அப் ஆகி வரலாம் என்று வீட்டுக்கு போனேன்.


அதற்குள் திருமதி...... அவர்களின் மகள் போன் செய்தார். "அம்மாவை போலீஸ்காரங்க கூட்டிட்டு போயிட்டாங்க."அப்போது நேரம் மாலை 6.
உடனே ஸ்டேஷன் போனேன். யார் செய்த புண்ணியமோ அதற்குள் அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டிருந்தார்கள்.


பிறகு எஸ்.ஐ.யிடம் பேசினேன். அவர் குரலில் இனம் புரியாத எரிச்சல், இயலாமை,தாழ்வு மனப்பான்மை,நாசூக்கான மிரட்டல். சரி எப்படியோ நான் அந்த பையனின் நண்பர்களை விசாரித்து தேடிப் பார்க்கிறேன் ,கிடைத்தால் அழைத்து வருகிறேன், நீங்களே தீர்த்து வைய்யுங்கள் என்று கூறினேன்.


அவரோ தன் ஈகோவை திருப்தி படுத்திக்கொள்வதிலேயே குறியாயிருந்தார்."நான் கேட்கவில்லையே அழைத்து வரச்சொல்லி..அவனென்ன்ன வீரப்பனா ? நாங்களே பிடித்துக் கொள்கிறோம்" என்றெல்லாம் பேசினார்.


எனக்கு ஓரளவுக்கு பாடி லாஙுவேஜ், பேஸ் ரீடிங் எல்லாம் தெரியும். ஆசாமி பார்ட்டி கைக்கு கிடைத்தால் பார்ட் பார்ட்டாய் கழட்டாது விடமாட்டார் என்பது புரிந்து விட்டது. நான் அந்த பையனை அழைத்து வரும் வரையிலாவது காவலர்களை வீட்டுக்கு அனுப்பாதீர்கள் என்று கேட்டு கொண்டேன்.


அடுத்து 2 நாட்களும் தொடர்ந்து காவலர்களை அனுப்பியபடியே இருந்தார். நேற்று என்னை ஸ்டேஷனுக்கு அழைத்து "அழைச்சிட்டு வரேன்னிங்க என்னாச்சு? குடும்ப நண்பர் உங்களுக்கே அவங்க தகவல் தரலை.. எங்களுக்கு வேறு வழியே இல்லை என்னும்போதுதான் பெண்களை அழைத்து வருவோம் " அது இது என்று பேசி அனுப்பினார்.


இன்று அது "வேறு" வகையில் தீர்ந்துவிடப்போகிறது.அது வேறு விஷயம். அவரின் பேச்சு,செயல் யாவும் என்னில் அவர் மேல் பரிதாபத்தைத் தான் ஏற்படுத்தியது. கோபம் என்பது பலவீனத்தின் அடையாளம்.


"செல்லாவிடத்து சினம் தீது "என்பது வள்ளுவர் மொழி.
நான் எங்கள் மானில முதல்வர் மீதே மனித உரிமைகள் கமிஷனுக்கு புகார் கொடுத்தவன், நுகர்வோர் மன்றத்தில் புகார் கொடுத்து தீர்ப்பும் பெற்றவன். குண்டர் தலைவர் என்று பார்ப்பன மீடியாவால் வர்ணிக்கப் படும் தற்போதைய முதல்வர் முதல்வராக இருக்கும் போதே அரசை கண்டித்து தன்னந்தனியே உண்ணாவிரதம் இருந்தவன். என்னை மிரட்டுகிறார் அவர்.
ஜோதிட ஞானம் வேறு இருப்பதால் சரி ஒழியட்டும் அஷ்டமத்தில் செவ்வாய் என்று அட்ஜஸ்ட் செய்து கொண்டேன்.


இது யாரோ ஒரு எஸ்.ஐ. பற்றி என்று நினைத்து விடாதீர்கள். காவலர் பணிச்சூழல் அப்படி.


இதை மாற்ற என் ஆலோசனைகள் இங்கே




















அதுவ