Saturday, August 25, 2007

கலைஞருக்கு ஒரு பகிரங்க கடிதம்


நதிகளை இணைக்க சோனியா அம்மையாருடன் பேசி வரும் தாங்கள் என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தின் தொலைநோக்கு தன்மையை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.(திட்டத்தின்  முக்கிய அம்சங்கள்:

1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்.

இன்னமும் உங்களுக்கு கண்ணை கட்டலின்னா இங்கே அழுத்தி மேலதிக விவரங்களை படிங்க


இந்த திட்டத்துக்கு ஜெயலலிதா அம்மையாரின் ஆதரவைப் பெற அவர்களுக்கு ஜாதகம் எல்லாம் கணித்து பலன் எழுதி அனுப்பியவன் நான். என் கணிப்பு நிஜமானதும்,அதற்கு அம்மையார் Thanks Caர்ட் அனுப்பியதும் உண்மை. தங்கள் நீண்ட‌ வாழ்வில் எத்தனையோ நல்லது,கெட்டதுகளை பார்த்திருப்பீர்கள். 

அரசு அலுவலகங்களில் வைக்கப் படும் பிரதமர்களின் படம் மாறும். காந்தியடிகளின் படம் மாறாது. காந்தியடிகளின் படத்தோடு தங்கள் படமும் நிரந்தரமாக இருக்க இந்த திட்டம் உதவும்..

இந்த வலைப் பூவை கூரியரிலும் அனுப்புகிறேன். (ரகசியம்: தினகரன் இதழ் கடந்த சட்டம‌ன்ற தேர்தல்கள் குறித்த ஜோதிட கணிப்புகளை வெளியிட்ட போது..தங்கள் தலைமையி மைனாரிட்டி அரசு அமையும் என்றும் ராமதாசு தாங்கொணாத குடைச்சல் கொடுப்பார் என்றும் உறுதியாக கணித்து கூரியர் மூலம் கடிதம் அனுப்பினேன். 

ஆனால் தினகரன் என் கணிப்பை வெளியிடவில்லை. இன்னும் என்னிடம் அதற்கான ஆதாரம் உள்ளது)