Showing posts with label ஜோதிடம். Show all posts
Showing posts with label ஜோதிடம். Show all posts

Thursday, February 13, 2014

தொழிலில் வெற்றி



அண்ணே வணக்கம்ணே !
ஜோதிடத்தை காலத்துக்கேத்தாப்ல அப்ளை பண்ணனும்ங்கறது நம்ம பாலிசி. சமீப காலமா இந்த பாலிசியை அப்ளை பண்ணி சில பதிவுகள் போட்டுக்கிட்டு வர்ரன்.
தொழில்னா இதுல விற்பனையும் ஒரு அங்கம். இன்னைக்கு விக்கிறவன் சாஸ்தி.வாங்கறவன் ரெம்ப கம்மி. ப்ரொடக்சன் ஒரு மலைன்னா சேல்ஸ் அதைவிட பெரிய மலையா இருக்கு.அதை ஏறமுடியாம அவனவன்  நாக்கு தள்ளி கிடக்கான்.
மொதல்ல சோதிடத்துக்கு சம்பந்தமில்லாத மேட்டரை சொல்லி விட்டுர்ரன். ஃபர்ஸ் அஃப் ஆல் நம்ம சரக்குல ஒர்த் இருந்து விலையும் நாணயமா இருக்கோனம். இது ரெண்டுமே இல்லாமலும் சிலருக்கு ஒர்க் அவுட் ஆகுது இல்லேங்கல. அவிகளை ஆத்தா பார்த்துக்குவா.
இந்த பதிவே சரக்குலயும் ஒர்த் இருந்து விலையும் நாணயமா இருந்தும் மூவ்மென்ட் இல்லை,சேல்ஸ் இல்லைன்னு தவிக்கிறவுகளுக்காகத்தேன்.
எச்சரிக்கை:
ரெண்டு பாரா படிச்சதுமே இதை ஏற்கெனவே படிச்ச மாதிரி இருக்கேன்னு நீங்க நினைச்சா அது கரெக்ட். நேத்திக்கு இந்த பதிவை அனுபவஜோதிடம் டாட் காம்ல போட்டம். அது என்ன இழவெடுத்துருச்சோ தெரியலை. சைட் ஈஸ் சஸ்பெண்டட்னு வருது.
அங்கன படிக்காதவுக படிச்சு பயன்பெறனுமேன்னு இந்த புதிய தலைப்புல - நிர்வாண உண்மைகள் ப்ளாக்ல இதைபோஸ்ட் பண்றேன். 
ஏற்கெனவே படிச்சவுக விலகிருங்க. மத்தவுக தொடரலாம்.
மொத பாய்ண்ட் நீங்களே ப்ரொடக்சன் நீங்களே சேல்ஸான்னு தெரியனும். ஜஸ்ட் சேல்ஸுதான்னா ரெம்ப சிம்பிள் ..உங்க ஜாதகத்துல லக்னாதிபதி விரயத்துல இருக்கறதோ அல்லது விரயாதிபதியோட சகவாசம் பண்றதோ இருந்தா மோதும் மெறிச்சிக்கலாம். குறைஞ்ச பட்சம்  உங்க சேல்ஸ் மேனேஜர்/கொடவுன் இன்சார்ஜ் ஆச்சும் இந்த மாதிரி ஜாதகத்துல அமைஞ்சா சூப்பரு.
என்ன ஒரு கண்டிஷனுன்னா க்ரெடி பேஸ்ட் சேல்ஸ் கூடாது. ப்ரொடக்சனும் நீங்களேன்னா மேற்படி கிரக  அமைப்பு செம  நாஸ்தியாக்கிரும். அது வேற ஸ்கூல்.
அடுத்து ஸ்டாக் வைக்கிற இடம். இது உங்க கொடவுன்லயே தென் கிழக்கு மூலை எதுன்னு பார்த்து அங்கன வைக்கனும். அதே போல அங்கன வைக்கிற சாமி படம்லாம் கொஞ்சம் டிஃப்ரன்டா இருக்கனும். உ.ம் நிக்கிற லட்சுமி,குழலூதும் கண்ணன்,தியானத்துல உள்ள ஈஸ்வரன். (இதெல்லாம் வீட்ல வைக்கவே கூடாது)
உங்க ப்ராடக்ட் எதுன்னு பார்க்கனும். அதுக்கு எந்த கிரகம் காரகம்னு பார்க்கனும். அந்த கிரகம் உங்களுக்கு அனுகூலமா பார்க்கனும் அது ரெம்ப முக்கியம். அதே நேரத்துல அவரு உங்க ஜாதகத்துல சூப்பர் மோஸ்ட் பலத்தோடவும் இருக்கக்கூடாது.
உ.ம் உங்க ஜாதகத்துல செவ் உச்சம்.  நீங்க பட்டாசு ஸ்டாக் வச்சிருக்கிங்கனு வைங்க. சரக்கு லேசுல மூவ் ஆகாது. வேற ஒரு ஜாதகருக்கு செவ் நீசம்.அவரும் இதே வேலைய செய்றாருன்னு வைங்க பிச்சுக்கிட்டு போகும் (என்ன ஒரு வில்லங்கம்னா படக்குனு தீ விபத்து கூட நடக்கும்)
ஏன்னா எந்த கிரகம் அட் மோஸ் பவர்டா இருக்கோ அந்த காரகம் உள்ள பொருட்கள் உங்களை விட்டு போகாது.
அதே நேரத்துல எந்த கிரகம் ஏற்கெனவே உங்க லைஃப்ல விளையாடிருச்சோ அந்த கிரக காரகம் கொண்ட பொருள் கூட லாபம் தரும்.
உ.ம் ஏற்கெனவே நீங்க பயங்கர தீவிபத்துல சிக்கி பிழைச்சவருன்னு வைங்க அப்பம் பட்டாசு தொழில் ஒர்க் அவுட் ஆகும்.
ஜோதிடம் 360 மொத பதிப்பு வெளியிடும் போது ஸ்கின் ப்ராப்ளம் இல்லை.அதனால குடிசை தொழில் கணக்கா டூ கலர் ரேப்பரோட போட்டம். இப்பம் ஸ்கின் ப்ராப்ளம் லந்து பண்ணிக்கிட்டிருக்கிறதால தூளான ப்ரொஃபெஷ்னல் எக்சலன்சியோட வந்திருக்கு.
விற்பனைக்கு எந்தெந்த கிரகம் எப்டில்லாம் உதவும்னு பார்த்துரலாம். இந்த கிரகங்கள் உங்க ஜாதகத்துல பல்பு வாங்கி சரக்கு முடங்கி கிடக்கா? அதுக்கெல்லாம் பரிகாரம் இருக்கும் அடுத்த பதிவுல சொல்றேன்.
1.சூரியன்:
மார்க்கெட் லீடராக்குவார். விளம்பரம்- ஃபீல்ட் கேன்வாஸ்,ஃபீல்ட் எம்ப்ளாயிஸ் அமைய உதவுவாரு. அப்பா காலத்து உற்பத்தியில புதிய இன்னிங்ஸ் துவக்க செய்வாரு. கிராமப்புற,புற நகர்
2.சந்திரன்:
உங்க உற்சாகம் உங்கள் சேல்ஸ் ரெப்ஸை தொத்திக்கும்.அவிக உற்சாகம் டீலரை தொத்தும். லாஜிக்கே இல்லாம மக்கள் மத்தியில ஒரு  குட் வில்லை ஏற்படுத்துவாரு. உதாரணமா நான் "நந்தி ப்ராண்ட்" தீப்பெட்டிகள் உபயோகிச்சப்போ ஃபுல் பந்தாவா இருந்தன். வைட் பியர் உபயோகிக்கும் போதும் பரவால்லை. பிறவு செம நாஸ்தி.இடையில லட்சுமி ப்ராண்ட் கிடைச்சது உச்சம். கொஞ்ச காலம் முன்னே கூட யானை ப்ராண்ட் .சூப்பரு. இப்படி ஏதோ ஒரு சென்டிமென்டல் காஸ் உங்க சரக்கோட விற்பனைய தூக்கிவிடும். ஆனால் காரணமே இல்லாம ஒரு 14 நாள் சரக்கு தூங்கவும் செய்யலாம்.
3.செவ்வாய்:
போட்டி உற்பத்தியாளர்களை முடக்கி உங்களை முன்னணிக்கு கொண்டு வருவாரு.
4.ராகு:
மார்க்கெட்ல ஏற்படக்கூடிய எதிர்பாரா திருப்பங்கள் உங்களுக்கு சாதகமா அமையும்.
5.குரு:
அரசு ஆதரவு,அரசு கடன்,அரசியல் ஈடுபாடு காரணமா சேல்ஸ் பிச்சிக்கும்
6.சனி:
தொழிலாளர்கள் சைட்ல கிடைக்கிற ஆதரவு விலைய குறைக்க உதவலாம். லேபர் ஏரியா,ஸ்லம் ஏரியாவுல பிச்சுக்கும்
7.புதன்:
சரியான டீலர்/ஏஜெண்டுகள் கிடைப்பாய்ங்க. மீடியா ஒத்துழைப்பு நெல்லா இருக்கும் ஆடிட்டர் வழியில ஒரு நல்ல திருப்பமே கூட ஏற்படலாம்.
8.கேது:
ஒரு புதிய தொழில் நுட்பத்துல இறக்கும். கொஞ்ச காலம் அவதிப்பட்டாலும் நிக்கலாம். நின்னு காட்டலாம்.உசந்தும் காட்டலாம்.
9.சுக்கிரன்:
பெண்கள் ஆதரவு கிடைக்கும். அப்பர் மிடில் க்ளாஸ், ஹை க்ளாஸோட ஆதரவும் கிடைக்கும்.
சரி இந்த கிரகங்களோட பலம் இல்லின்னா என்ன செய்றது பாஸ்? இதானே உங்க கேள்வி?அடுத்த பதிவுல க்ளியர் பண்றேன்.
பை தி பை  எக்கச்சக்கமா இன்வெஸ்ட் பண்ணிட்டு ப்ரிண்ட் ஆகி வந்த புக்ஸை கூரியர்ல அனுப்பக்கூட வசதியில்லாம முடங்கி கிடக்கேன் நாம பப்ளிஷ் பண்ணியிருக்கிற 4 புக்ஸையும் வாங்கி ஆதரிங்க பாஸூ..

மேலதிக விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
swamy7867@gmail.com

Wednesday, December 12, 2012

சந்திரனுடன் பேட்டி : 2

அண்ணே வணக்கம்ணே !
நேத்தே சொன்னாப்ல இந்த காலண்டர் ப்ரிண்டிங் வேலை காரணமா சந்திரன் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள்ள மொத 5 கேள்விகளுக்கு மட்டும் பதில் கொடுத்திருக்காரு. மத்த கேள்விகளுக்கான பதில் நாளைக்கு. இந்த நிலை டிசம்பர் 15 வரைக்கும்  (இன்னம் 3 நாள் தேன்) . புரிஞ்சுக்கோங்க.

இப்பம் சந்திரனோட பதில்கள் :

1.கடலுக்கும் உங்களுக்கும் என்ன லிங்க்?
செரி.. செரி.. நீ பேட்டி எடுப்பது எப்படிங்கற புஸ்தவம் எதையோ படிச்சுட்டு கேள்வி கேட்கிறாப்ல இருக்கு. என்ன ரிலாக்ஸ்டா வைக்க இப்படி சாதா கேள்வி கேட்கிறேன்னு நினைக்கிறேன்.
 நதி எங்கே போகிறது கடலைத்தேடின்னு ஒரு பாட்டு இருக்குல்ல. அது கிராவிட்டிய பொருத்த விஷயம்.  அப்படி நதி கடலை சேரும் இடத்துல போய் நின்னுக்க.  நான் தேஞ்சுக்கிட்டு வர்ர காலம்னா அது இயல்பான கூடல் போல இயல்பா நடக்கும். அமாவாசைன்னா அரைத்தூக்கத்துல நடக்கிற கூடல் போலன்னு வச்சுக்க.

இதுவே பவுர்ணமி தினம் போய் நில்லு. ஊடலுக்கு பின்னான கூடல் போல இருக்கும்.கடலோட அலைகள் நதியை புறந்தள்ளிக்கிட்டிருக்கும்.  நதி நீர் கடலில் கலக்க ரெம்பவே மெனக்கெடனும். இதான்  கடல் நீர் மேல எனக்குள்ள கட்டுப்பாடு. இதுதான் கடலுக்கு என் பால் உள்ள கவர்ச்சி.

கடல் நீர் - ஹ்யூமன் பாடியில உள்ள வாட்டர் கன்டென்ட் - பனிக்குட நீர் இந்த 3 க்கும் உள்ள கெமிக்கல் காம்பினேஷன்3 ம் ஒன்னுதானாம்

இதனாலதேன் கடலை -கடலலையை நான்  பாதிக்கிறாப்லயே மனித உடலையும் என்னால பாதிக்க முடியுது. மனித உடலில் வாட்டர் கன்டென்ட் 90 சதவீதம்னா நம்ப முடியுதா?

2.ஹ்யூமன் பாடியில உள்ள நுரையீரலுக்கும் உங்களுக்கும் இருக்கிற கனெக்சனுக்கு அடிப்படை என்ன?
 நுரையீரல் -சுவாசிக்கும் உறுப்பு . சுவாசத்துக்கும் எண்ணங்களும் தொடர்பு உண்டு. எண்ணம் வேகமா இருந்தா சுவாசமும் வேகமா இருக்கும். எண்ணம் விவேகத்தோட இருந்தாசுவாசம் மெதுவா இருக்கும். மெதுவான சுவாசம் தீர்காயுளை கொடு்க்கும். நாய்க்கு 14 வருசங்கறாய்ங்க. அதனோட சுவாசத்தை கவனி.  ஆமையோட ஆயுள் சாஸ்திங்கறாய்ங்க.அதனோட ஆயுளையும் கவனி. எண்ணம் -மனம் - நுரையீரலுக்கு இடையில் உள்ள தொடர்பு இது. நான் மனோகாரகன்ங்கறதால இந்த 3 ஐயும் நான் பாதிக்கிறேன்.

3.உங்களுக்கு மனோகாரகன்னு ஏன் பேர் வந்தது?
பகல்ல சூரியனோட இம்பாக்ட் இருக்கும். சூரியன் என்றால் சுயம். ஈகோ. பகல் எல்லாம் மனிதனை ஈகோ வழி நடத்தும். எனக்கென்னடா கிங்குன்னு - நான் எல்லாம் ரிஷ்ய ஸ்ருங்கன் மாதிரி எவளுக்கும் மயங்கமாட்டேன்னு அலப்பறை பண்ணிக்கிட்டிருப்பிங்க . சூரியன் மறைஞ்சு நான் உதிச்சு உதிக்காததுக்கு மின்னயே மனசுல கொஞ்சம் கொஞ்சமா சஞ்சலம் -சபலம் ஆரம்பிச்சுரும். அந்த ஃபைலை கொடுக்கிறப்போ கொஞ்சம் கைய தொட்டிருக்கலாமோ மாதிரி எண்ணங்கள் வர ஆரம்பிச்சுரும்.

வளர்பிறை நாட்கள்ள எந்த பேச்சு வியாபாரியும் வந்து மோட்டிவேட் செய்யாமயே எல்லாரும் கொஞ்சம் பாசிட்டிவாவே இருப்பாய்ங்க.

மேலும் இந்த நாட்களில் தண்ணீர் பஞ்சம் இருக்காது.வேளைக்கு குளிச்சு ஃப்ரெஷ்ஷா இருக்க முடியும். எப்படியா கொத்த டென்ஷன்ல இருந்தாலும் ஒரு குளியல் போட்டா தெளிஞ்சுர்ரதை பார்க்கலாம். நானே ஜலகாரகன் .நானே மனோகாரன்ங்கறதால இந்த எஃபெக்ட். கொசுறு: வளர்பிறை நாட்களில்  நீச்சலடிக்க போயி சாவுன்னு செய்தி வராது.

ஏன்னா வளர்பிறை நாட்களில் மனிதனோட பாடியில வாட்டர் கன்டென்ட் புஷ்கலமா இருக்கும். வெளியிலிருந்து ஈரப்பதம் தேவைப்படாது.

இதுவே தேய்பிறை நாட்கள்ள  பாசிட்டிவ் அப்ரோச் கொஞ்சம் போல குறையும். தண்ணி பஞ்சம், மோட்டர் எரிஞ்சு போயிர்ரது.தண்ணி லாரி வராம போறது. இதனால் கடுப்பு,எரிச்சல் ,மனக்கசப்பு எல்லாம் தொடரும்.

மேலும் இந்த நாட்களில் நதியில் மூழ்கி சாவு செய்திகள் வர்ரத பார்க்கலாம். ஹ்யூமன் பாடியில வாட்டர் கன்டென்ட் குறையறதால வெளியிலிருந்து ஈரப்பதம் பெறும் முயற்சியே குளியல்,நீச்சல்லாம்.

அதுவும்  நான் சனியோட  சேரும்போது அடுத்தவுகளுக்கு விருப்பமில்லாத வேலைய கட்டாயப்படுத்தி செய்யவைக்கிறது ,செவ்வாயோட சேரும்போது கோப தாபம், ராகு/கேதுக்களோட சேரும் போது மனக்குழப்பம் நெகட்டிவ் தாட்ஸ் அதிகரிக்கிறது - நுரையீரல் -சிறு நீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவுகளுக்கு பிரச்சினை அதிகமாறதுல்லாம் சகஜமா நடக்கும்.

மனம் போன போக்கிலே கால் போகலாமான்னு பாட்டு இருக்குல்ல. இந்த நிலை  இரவு நேரங்களில் அதிகமா இருக்கும். என்னோட பலம் இல்லாத ஜாதகர்களுக்கே நடக்கும். மத்தவுகளுக்கும் நடக்கலாம். கோசாரத்துல என்னோட பலம் குறையும் போது.

4.பப்ளிக் சப்போர்ட்டுக்கு உங்க பலம் தேவைங்கறாய்ங்களே  அது ஏன்?
நான் ஜலகாரகன் -மனோகாரகன்னு சொன்னேன். ஜலத்தோட இயல்பு என்ன பள்ளம் நோக்கி பாய்வது.  நான் ஒரு ஜாதகத்துல பலம் பெற்றிருந்தா அந்த ஜாதகனோட மனசு ஆட்டோ மெட்டிக்கா அடித்தட்டு மக்கள் பற்றி யோசிக்கும். அவிகளோட நெருங்கி பழகுவான். எந்த காலத்துலயும் -எந்த சமுதாயத்துலயும் இவிக தானே மெஜாரிட்டி அதனால பப்ளிக் சப்போர்ட்டு நிச்சயம்.

5.சந்தையிலருந்து - மேரேஜ் ஹால் வரை ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் உள்ள இடங்களுக்கு நீங்கதேன் இன்சார்ஜாம்? இதுல உள்ள லாஜிக் என்ன?

என்னோட இயல்பு என்ன? வளர்ந்துக்கிட்டே போவேன் - பவுர்ணமி தினம் ஜாஜ்வல்யமா பிரகாசிப்பேன் -பிறகு தேய ஆரம்பிச்சுருவன்.

ஒவ்வொரு ராசியிலயும் பிரவேசிக்கும் போதும் மொத ஆறு மணி நேரம் கொஞ்சம் சுஸ்தா இருப்பேன். கடைசி ஆறுமணி நேரமும் இதே கதைதான். மத்தியில உள்ள 12 மணி நேரம் உங்க மனசை சகட்டு மேனிக்கு மாத்தி விட்டுக்கிட்டிருப்பேன்.

இதே நிலைய நீங்க மேற்படி ஃப்ளொட்டட் பாப்புலேஷன் உள்ள இடங்கள்ளயும் பார்க்கலாம். அதனால இந்த இடங்களுக்கு நான் இன்சார்ஜா இருக்கன்.

அடுத்து நான் பரபரன்னு ராசி மாறி போயிக்கிட்டே இருக்கிறாப்ல  மேற்படி இடங்களுக்கு வர்ரவன் கூட சந்தைன்னா விற்பனை முடிஞ்சதும் அல்லது பர்ச்சேஸ் முடிஞ்சதும் வீட்டை பார்க்க கழண்டுக்கறதுலயே இருப்பான். கண்ணால மண்டபம்னா வந்தவன் தாலிகட்டியாகட்டும் கிளம்பிரலாம்னே காத்திருப்பான்.  நான் எப்படி குறுகிய காலத்துல புது புது ராசிய பார்த்துர்ரனோ அப்படியே இந்த இடங்கள்ளயும் நீங்க புதுப்புது முகங்களை பார்க்கலாம்.



Sunday, November 18, 2012

எதை இழந்தால் எதை பெறலாம்?

அண்ணே வணக்கம்ணே !
எதை இழந்தால் எதை பெறலாம்னு ஒரு மேன்யுவலே தந்துரலாம்.இந்த மென்யுவலுக்கு அடிப்படை என்னனு கேப்பிக. கடைசி பாரா வரை படிச்சிங்கனா தெரிஞ்சுக்கலாம்.

அதை படிச்சும் புரிஞ்சுக்காத பார்ட்டிங்களுக்கு ஒரு சிறுகதைக்கான சுருக்கத்தையும் தந்திருக்கேன். ஆக்சுவலா இன்னைக்கு சூரியனுடனான பேட்டி தொடர்ந்திருக்கனும். நாம முக நூல் நண்பர்களோட பொருளுதவியோட அச்சிட்ட ஸ்ரீ அம்மன் சத நாமாவளி ( கையடக்க பதிப்பு) பிரதிகளை வேலூர் வாழ் தமிழ்மக்களுக்கு இலவசமா வினியோகிக்க களத்தில் இறங்கினமா பழைய ஞா எல்லாம் கூகுள் சர்ச் ரிசல்ட் கணக்கா கொட்டோ கொட்டுன்னு கொட்டிருச்சு.

இந்த ஞாபகங்களை பினாத்தி தொலைக்கலின்னா ராத்தூக்கம் ஃபணால் ஆயிரும். அதனாலதேன் டைவர்ட் ஆயிட்டம்.

சின்ன வயசுல பல் விளக்காம டிஃபன் தின்னதுக்கு அண்ணன் வைய ரிட்டர்ன் டிக்கெட் இல்லாம போனது. நடந்தே திரும்பினது. அப்பம் டிக்கெட்டு ரூ.1.90

அதுக்கும் சின்ன வயசுல அம்மா வழி பணக்கார சொந்தங்களோட வீட்டுக்கு போனது . நினைவு தெரிஞ்ச பிறவு சாதி சங்க பிரமுகனோட 3 நாள் கண்ணாலத்துக்கு போனது. ஏதோ ஒரு கண்ணாலத்துக்கு போயி பாக்யராஜின் மொத படத்தை பார்த்தது ( தந்தன தந்தன தாளம் வரும் .. புதிய வார்ப்புகள்? 1979 ? )

ரஜினி படம் பார்க்க சைக்கிள்ள போயி டிக்கெட் கிடைக்காம டி.ராஜேந்தர் படம் பார்த்தது. இன்னொரு பயணத்துல ஒரு ஷோ கமல் படம் , ஒரு ஷோ ரஜினி படம் பார்த்தது.. மிஸ்டர் பாரத் படத்துல மிஸ்டர்.பாரத் சினிமால காமராஜர் மாதிரி ஒரு கெட்டப்,ராஜீவ் மாதிரி ஒரு கெட்டப்,இவரோட அம்மாவுக்கு இந்திராகாந்தி மாதிரி பில்டப் எல்லாத்தயும் பார்த்ததுல ங்கொய்யால அவனா நீயின்னுட்டு கழண்டுக்கிட்டதும் வேலூர்லதேன்.

அந்த காலத்துல காங்கிரசுன்னா அப்படி ஒரு அலர்ஜி. இடையில ஒய்.எஸ்.ஆர் ங்கர பிம்பம்  காங்கிரசோட அழுகலை மறைத்திருந்ததே தவிர காங்கிரசுன்னா அன்னைக்கும் இன்னைக்கு என்னைக்கும் உவ்வே தான்.

ஒரு தாட்டி நம்ம நண்பரும் -அவரோட பெரியப்பா பையனும் தங்கள் டூ வீலரை மாத்திக்கிட்டாய்ங்க. வீட்ல உள்ளவுக கடும் எதிர்ப்பு தெரிவிக்க மறுபடி மாத்த ஒரு தாட்டி டூ வீலர்ல போயிருக்கம்.( வாணியம்பாடி வரை)

1984 ல் அம்மாவுக்கு கான்சர் வந்து - சி.எம்.சிக்கு  ஷட்டில் பயணங்கள் தனிக்கதை .1992 ல் அதே ரூட்டில் தினசரி 20 சிங்கிள் அடிச்சதும் உண்டு. ப்ரைவேட் பஸ்ல செக்கிங். ஆஃப்டர் ஆல் கண்டக்டரா இருந்த ரஜினியே சூப்பர் ஸ்டாராயிட்டாருன்னா செக்கிங்கா இருக்கிற நாம சூஊஊஊஊஊஊப்பர்  ஸ்டார் ஆகாம போயிருவமான்னு ஒரு நப்பாசை.

2004 ல் ஒரு விக்டிமுக்காக பஞ்சாயத்து பண்ண ரெகுலர் ட்ரிப் அடிச்சது அது ஒரு கால கட்டம். 2007 ல தினத்தந்தியில நிருபரா குப்பை கொட்டின காலத்துல மாசத்துக்கு ரெண்டு தாட்டியாச்சும் வேலூர் கட்டாயம்.

எப்பயாச்சும் இன்டிரியர் தமிழ் நாடு போயிட்டு வேலூர் திரும்பி வந்தா போதும். சொந்த ஊருக்கு வந்துட்டாப்ல ஒரு ஃபீலிங் வரும். 

இடையில ஒரு தடவை மட்டும் நம்ம  பேப்பர் பிரிண்டிங்  (மல்ட்டிகலர்) விஷயமா  போய் வந்தது ஞா வருது. மத்தபடி கடந்த 3 வருடங்களா நோ வேலூர். நோ பயணம். 2011 புத்தக கண்காட்சி , 2012 பதிவர் சந்திப்பு தவிர வேற ஏதும் பயணம் பண்ணதா ஞாபகமில்லை.

ஆக்சுவலா பயணம்னாலே பயங்கர கடுப்பு. மொத காரணம் நாம செயின் ஸ்மோக்கர் .அதுவும் இங்கன புகை பிடிக்க கூடாதுன்னு போர்டை பார்த்தா உடனே பரபரக்கும். புகைக்க வாய்ப்பிருக்கும் இடத்துல நாள் கணக்கா கூட பிடிக்காம இருந்திரலாம் அதுவேற கதை. அல்லாரும் த்ரூ பஸ்ஸுக்கு தவமிருந்தா நாம பிட்டு பிட்டா பயணம் பண்றதும் உண்டு.

ஃப்ளாஷ் பேக் எல்லாம் இருக்கட்டும் போன வேலை என்னாச்சுன்னு கேப்பிக. சொல்றேன்.சிஷ்ய பிள்ளை ஒருத்தனோட பிக் ஷாப்பர்ல 2ஆயிரம் பிரதிகளோட காட்பாடியில லேண்ட் ஆனோம். சிஷ்யன் நம்ம பேப்பரை வினியோகிச்சு ட்ரெய்ன் ஆனவங்கறதால பிரச்சினை இல்லை. கோடு போட்டா ரோட்டே போட்டுருவான்.

காட்பாடி ரவுண்டானாவை பைசல் பண்ணிட்டு ஆட்டோ பிடிச்சு ........ ஷேர் ஆட்டோதேன் (ரூ.10 வாங்கிட்டான் -ஹூம் ..2009 வரை ரூ .5 தேன். எத்தீனி தபா போயிருப்பம்) புது பஸ் ஸ்டாண்டு.பஸ் ஸ்டாண்டுன்னாலே சுஜாதா சொல்ற மாதிரி வர்ஜியா வர்ஜியமில்லாம புஸ்தவங்க தொங்கனும். இங்க என்னடான்னா என்ட்ரன்ஸ்ல இருந்த கடைகளையெல்லாம் சாலை விரிவாக்கம் சாப்டாச்சு போல.விதவிதமான சனத்தை நாம அப்சர்வ் பண்ணிக்கிட்டிருக்க சிஷ்யன் புகுந்து விளையாடிக்கிட்டிருந்தான்.

ஒரு அரை லிட்டர் ஃபேன்டா அவனை சுறு சுறுப்பாக்கிருச்சு. நம்ம ஊர்ல எல்லாம் ரூ.6 க்கு ஃப்ரூட் மிக்சர் தீர்ந்தது கதை. அங்கன இருந்து பின் வழியே வந்து  மறுபடி ஆட்டோ பிடிச்சு  சி.எம்.சி. மார்க்கெட் போன பிற்காடு நடிகைங்க சீரியல்ல வர்ராப்ல பழைய பஸ் ஸ்டாண்டு டவுன் சர்வீஸுக்கு மட்டும்னு ஆயிட்டாப்ல இருக்கு. சொம்மா சொல்ல கூடாது .சனம் அம்முது.

இங்க மட்டும் பெரிய புஸ்தவ கடையே இருந்தது. சொந்த பணத்தோட வந்திருந்தா கடைய காலி பண்ணியிருக்கலாம்.வினியோகம் முடிஞ்ச பிறவு லாங்கு பஜார்,நேத்தாஜி மார்க்கெட் ,ஜுவெல்லரி லைன் எல்லாம் பார்த்துக்கிட்டு தேன் கிளம்பினோம்.மறுபடி புது பஸ் ஸ்டாண்டு . மறுபடி புதிய பயணிகளுக்கு வினியோகம். ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன்.

ஆத்தாவுக்கு கடன் சொல்ட்டு ஆத்தா காசுல ஆழம்னு ஒரு புஸ்தவம் வாங்கினேன். அட்டையில மோடி .பக்கமெல்லாம் மோடி மயம்.படிச்சுட்டு சொல்றேன்.

போன திங்கள் கிழமை ( நவம்பர் 12 ) சத்யாங்கற நண்பரும்  நானும்  கார்ல புறப்பட்டோம். . (அவரோட சொந்த கார்) கிரீம்பேட்டையிலயே டயர் பஸ்ட். ஸ்டெப்னி மாத்திக்கிட்டு போனதும் தெரியலை.வந்ததும் தெரியலை.ஹோட்டலுக்கு அலைஞ்சது மட்டும் தேன் ஞா இருக்குது.

வேலூர் டு காட்பாடி பார்த்துக்கிட்டே வந்து - மறுபடி வேலூர் போயி உப்பில்லாத எண்ணெய் இல்லாத ரொட்டியும் - மாசக்கடைசியில பொஞ்சாதி மூஞ்சி மாதிரி தம்தூண்டு. இதுல  படு காரமா சால்னாவும்,பட்டாணியும்  வேற  தின்னம்.   (  பஞ்சாபியாம்)

ஆனால் இன்னைக்கு   ரூ.45 க்கு பை டூ நூடுல்ஸ் (+சிக்கன்) ப்ளெசன்டா  அடிச்சுட்டு ஒரு தம் போட்டதுல ஆத்தா சவாரி பண்ற சிங்கத்தோட கர்ஜனை கேட்டது.

இன்னைக்கு போறச்சயும் வரச்சயும் ஆந்திர அரசு பேருந்து (லொட லொடன்னு சத்தம் கேட்குமே தவிர பாடி  செமை ஸ்ட்ராங்கு  விபத்தே நடந்தாலும் .சாமானியமா சாவு  நடக்காது. பொடி நடையா நடந்து போயி கவுர்மென்டு ஆஸ்பத்திரி பெட்ல படுத்துக்கலாம்.

அன்னைக்கு சல்லுன்னு ஏசி கார். தின்டிக்கு  டிக்கானா இல்லை. இன்னைக்கு ஜஸ்ட் ரூ.22.50 பைசால  ஹெவன்லி ஃபுட்.

என்ன காரணம்?  சுக்கிரன் தான் வாகன காரகன் .அதே சுக்ரன் தான் அறுசுவை உணவுக்கும் காரகன்.

சிறுகதைக்கான சுருக்கம்:

லட்சுமி காந்தன் பரம்பரை பணக்காரர். என்னென்னமோ தொழிற்சாலைகள் . தலை நகரின் வி.ஐ.பி ஏரியாக்கள் ஒவ்வொன்றிலும் கடல் மாதிரி வீடுகள்.  சொம்படித்து நூல் வெளியீட்டு விழாக்களுக்கு ஸ்பான்சர் பண்ணும்படி இன்டென்ட் போடும் எழுத்தாளர்கள் சகவாசத்தால் அவருக்கும் எழுத்தார்வம் வந்துவிட்டது.

மூடு வந்தா  எதையாவது எழுத மட்டும்  நகரின் நாலு மூலையில் கெஸ்ட் ஹவுஸ் வச்சிருக்காரு. அவரிடம் குவிந்திருந்த பைசா  பெரிய எழுத்தாளர்ங்கற சர்ட்டிஃபிகேட்டை பெரிய பெரிய எழுத்தாளர்களிடமிருந்தே கிடைக்க செய்து விட்டது.  எல்லா பரிசுகளும் பெற்று அலுத்து இன்னைக்கு பரிசு வழங்கும் கமிட்டிகளில் இருக்கிறார்.

தங்கப்பேனாவால் தான் எழுதுவார். எத்தனையோ "சேர்க்கைகள்" இருந்தாலும் ஏதோ ஒரு தொண்டு நிறுவனம் நடத்தும்  மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கான பள்ளியில் வேலை செய்யும் - திமிர் பிடித்த கவிதாயினி ரசிகா மீது மட்டும் ல.காந்தனுக்கு தீராத மையல்.

மேற்படி தொண்டு  நிறுவனம் அணு உலை எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபட மானில அரசு கிடுக்கிப்பிடி  போட
மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள் ரோட்டுக்கு வரும் நிலை.

ரசிகா ல.காந்தன் உதவியை நாட -அவர் ரசிகாவின் உதவியை (?) நாட குவிட் ப்ரோக்கோ அடிப்படையில் ரசிகா புதிய சேர்க்கையாக ஒரு கெஸ்ட் ஹவுசில் ஸ்திரவாசம்.

ல.காந்தன்  படைப்புகளை ஆங்கிலத்தில் வெளியிட்டு அகில உலக புகழ் பெற  திட்டமிடுகிறார். யாரோ   நாமகனை அறிமுகப்படுத்த அவனை மொழிபெயர்ப்பு வேலைக்கு அமர்த்துகிறார்.  நாமகனின்  அசலான பெயரை சொன்னால் வம்பு வரும். எனவே அம்பேல். மொத்தத்துல கிராமத்துல இருந்து வந்தவன்.  நினைத்த போது வெளிவரும் சிற்றிதழ்களின் நாயகன்.  அவன் மனைவி  கார்த்திகாவின் குளோனிங் கணக்கா இருப்பாள்.

நாமகன்,கார்த்திகா அவுட் ஹவுசில் இருக்க, ரசிகா கெஸ்ட் ஹவுசில் இருக்க , லட்சுமி காந்தன் முதல் பார்வையிலேயே  உலகப்புகழ் லட்சியத்தை ஒத்தி வைத்துவிட்டு - கார்த்திகா குறித்த கட்டில் கனவுகளில் மிதக்கிறார்.

இதன் முடிவு என்ன ? அந்த முடிவுக்கு ஜோதிட ரீதியிலான காரணங்கள் என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்




.

Wednesday, August 29, 2012

பிரச்சினை உங்களோடது -தீர்வு நம்மோடது: 1


அண்ணே வணக்கம்ணே !

ஜாதகமே இல்லாம பிரச்சினைக்கு தீர்வு சொல்றேன்னு அறிவிச்சதும் சூப்பர் ரெஸ்பான்ஸு. இதுல என்னடா பிரச்சினைன்னா அல்லாரும் மெயிலுக்கு வந்துட்டாய்ங்க. போனசா ஜாதகமும் அனுப்பியிருக்காய்ங்க.

இந்த பிரச்சினை தீர்வு அனவுன்ஸ்மென்டுக்கு காரணமே சேவைதான்னு பீலா விட நான் தயாராயில்லை.ஏதோ ஹிட்ஸும் தூக்குமேங்கற கெட்ட எண்ணம் தான். தீர்வை மெயில்ல அனுப்பிட்டா அவிகளே சைட்டுக்கு வராம போற ஆபத்திருக்கு.

அதுக்குன்னு மெயில் மூலமா பதிலே தரலின்னா திமிர் பிடிச்சவன்யான்னிருவாய்ங்க. இது ரெண்டுத்துக்கு மத்தியில ஒரு சொல்யூஷனை நான் கண்டுபிடிச்சேன்.

அஃதாவது கேள்விகளை தொகுத்து தீர்வுகளோட ஒரு பதிவா போட்டுர்ரது. பதிவுக்கான லிங்கை மெயில் மூலம் அனுப்பிர்ரது. இப்படிக்குங்கற இடத்துல அவிக பேருக்கு பதிலா இனிஷியலை போட்டுர்ரது. ஐடியா எப்டி?

மொத கேள்வி:
அண்ணே வணக்கம் !

நான் ஒரு Software Engineer-ஆ வேல பாக்குறேன்.
இப்போ வேல செய்யற கம்பனிக்கு சேர்ந்து நாலு வருஷம் ஆகப்போகுது.
நாலு வருஷத்துல சம்பள உயர்வு பெருசா இல்ல.(நடுவுல recession வேற).

சிம்ம லக்னம்,துலா ராசி - 7-1/2-ல ஜன்ம சனி நடக்குது.
பைரவர் காலடியே கதின்னு கெடக்குறேன். தேய்பிறை அஷ்டமி தவறாம பைரவர் காலடில surrender ஆயிடறேன்.

என்ன செய்யலாமுன்னு சொல்லுங்க. Result வந்ததும் அப்டேட் பண்ணிடறேன்.

என்னோட நண்பர் ஒருத்தருக்கு வேற பிரச்னை இருக்கு அதைப் பத்தியும் அவர் சார்பா நானே mail அனுப்பலாமா ?

நன்றியுடன்,
T.A

தீர்வு:

ஜன்ம சனிக்கு ரெம்ப ஈசியா பாய்லா காட்டலாம்.ஆனா செப்.5 வரை அவரோட இருக்கிற செவ்வாய் தான் ரெம்ப குர்ருன்னு இருக்காரு. அதனால செப்.5 க்கு மேல பரிகாரத்தை ஆரம்பிங்க.

பெரிதாக கல்வியறிவில்லாதவர்கள், காலில்/ நடையில் பிரச்சினை உள்ளவர்கள், கரிய நிறம் கொண்டவர்கள், நீண்ட ஆயுள் படைத்தவர்கள் மேற்சொன்ன சனி தொடர்பான தொழில் செய்பவர்கள். 8,17,26 தேதிகளில் பிறந்தவர்கள், தங்கள் இருப்பிடத்துக்கு மேற்கு பகுதியில் வசிப்போர்.கீழ் சாதியினர் எனப்படுவோர். தொழிலாளிகள், காக்கி உடை அ யூனிஃபார்ம் அணிவோருடன் சேர்ந்து ஒன்னுக்கடிக்க கூட போகாதிங்க.

ஆனா மேற்சொன்ன கேட்டகிரியில உள்ளவுகளுக்கு செலவு பண்ணுங்க. தப்பில்லை.

சஃபாரி சூட் ( கருப்பு/ஆஷ் கலர் அ நீல நிறம் - டார்க் /லைட்/ நேவி ப்ளூ/ ஸ்கை ப்ளூ - எதுவானாலும் சரி நீலம்) , ஸ்டீல் செயின், மோதிரம் அணியவும். தையல் விட்டுட்டது, சாயம் போனதுன்னு உள்ள உடைகளை அணியவும்.
ஹேர் டை போடாதிங்க - அசிங்கமா இருந்தாலும் சரி தாடி வச்சுக்கங்க,அப்பப்போ ட்ரிம் பண்ணிக்கலாம். கேஷுவல் ட்ரஸ்ஸுக்கு காக்கி கலர் பெஸ்ட். வீட்லருந்து குளிச்சுட்டு போகாதிங்க.வீட்டுக்கு வந்த பிற்காடு குளிக்கலாம்.

பிரச்சினை: 2
அண்ணே ..வணக்கம்
with reference to the subject, i here with attached my son jadagam.
he is premature baby (7 months). his birth date is 05-03-2010, time 5.49 AM place TRIPELICAN-CHENNAI.
he underwent for eye operation (both eye) at 10 months old. actually he is having RETINA problem by birth-due to prematurity (ROP Retinapathy of prematurity) doctors told that his right eye don't have no power and his left eye having some power-he has to wear power "4" spectacle. now he is 2 1/2" we have to send him to school. but he is not yet speaking fully except amma and appa.
what we have to do for his eye growth and come to normal children life style. thanks in advance. please help us. we have only one child (this is the first baby).
-S.M

தீர்வு:
அய்யா !
லக்னம் கும்பம். வாக்கு -நேத்திர ஸ்தானத்துல சுக்கிரன் உச்சம்.ஆனால் கண்,பேச்சு ரெண்டுலயும் பிரச்சினை. ஏன் இப்படினு கேப்பிக. மேட்டர் என்னடான்னா லக்னாதிபதியே எட்டுல இருக்காரு..
இவருக்கு மரணம் சார்ந்த என்விரான்மென்டை ஏற்படுத்துங்க. ஒடனே சுடுகாட்டுல தூங்க வைக்கனுமான்னு நினைக்காதிங்க. நம்ம சிவன் கோவில் எல்லாம் ஆரோ சித்தர் சித்தியடைஞ்ச இடம் தான். அல்லது தர்காக்கள் இருக்கு. அங்கன ராத்தங்க வைங்க.சொந்தம்,பந்தம்,நட்பு வட்டத்துல மரணம் நிகழ்ந்தால் கடேசி வரைக்கும் இருந்துட்டு வாங்க.
பாவ புண்ணியம் பார்க்காம நிறைய ஸ்ட்ரெய்ன் பண்ண வைங்க. பாடி வியர்வையில நனையனும். எட்டு பேர் உடல் ஊனமுற்றவர்களுக்கு - அது கால் தொடர்பான ஊனம்னா விசேஷம் வயிறு நிறைய சாப்பாடு போட்டுட்டு உங்க கிராம தேவதைக்கு இரும்பு சம்பந்தப்பட்ட கேட்/ஜன்னல் எதாச்சும் செய்து தர்ரதா கமிட் பண்ணிக்கங்க.
நீங்க இருக்கிற இடத்துலருந்து மேற்கு திசையில கருப்பான வைத்தியர்/அ தலித்/ அ கால் ஊனமுள்ள வைத்தியர் அமைவாரு. அவரோட சிகிச்சையின் காரணமா நல்ல தீர்வு ஏற்படும்.
வெறுமனே அம்மா,அப்பான்னு மட்டும் சொல்ற பிள்ளை எதிர்காலத்துல பெரிய பாடகராவோ -பேச்சாளராவோ -வழக்கறிஞராவோ ஆவாருன்னு அடிக்க வருவிங்க.ஆனால் இது நாளைய உண்மை.
இவரோட ராசி துலாம். இப்பம் ஜன்மத்துல சனி உச்சமா வந்திருக்காரு. உங்க கேள்விக்கு முந்தின கேள்விய கேட்ட பார்ட்டிக்கு சொன்ன பரிகாரங்களை இடம் பொருள் ஏவல் வயது அறிந்து பின்பற்றவும் .
ஆல் தி பெஸ்ட்.






உங்கள் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு


அண்ணே ..வணக்கம்ணே !

நானும் மாஞ்சு மாஞ்சு சோசியத்தை பத்தி எழுதிக்கிட்டே இருக்கேன். நீங்களும் படிச்சிக்கிட்டே இருக்கிங்க. இன்றைய தேதிக்கு 8 லட்சம் ஹிட்ஸை தாண்டி மீட்டர் ஓடுது.

நம்ம எழுத்துக்களால் எத்தீனி பேரு பலனடைஞ்சாய்ங்கன்னு தெரியலை. சனங்க சைக்காலஜி என்னன்னா திட்டனும்னா ஒடனே திட்டிருவாய்ங்க. ஒரு நன்றி சொல்லனும்னா கூட தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு மறந்தே உடுவாய்ங்க.

இலவச ஜோதிட ஆலோசனைன்னு ஒரு பக்கம் ஓடுது. இருந்தாலும் அது ரெம்பவே நேரத்தை தின்னுருது. ஜாதகம் போட்டு - அனலைஸ் பண்ணி பதில் எழுதறதுக்குள்ள தாவு தீர்ந்துருது.

ரயில் பெட்டியில ,ரேஷன் கடை க்யூவுல கேட்கிற சனத்துக்கு பதில் சொல்லவே ஒரு மெத்தடை டெவலப் பண்ணி வச்சிருக்கம்.

அதாவது கிரகத்தை வச்சு பிரச்சினைய சொல்றாப்ல பிரச்சினைய வச்சு -அந்த பிரச்சினைக்கு காரணமான கெரகத்தை ஐடென்டிஃபை பண்ணி அந்த கெரகத்துக்கு பரிகாரம் சொல்லிர்ரது. இதை முற்றிலும் இலவசமா தர முடிவு பண்ணியிருக்கேன்.

ஆடிக்கொன்னு அமாவாசைக்கொன்னுன்னு பிரச்சினைகளை அனுப்பினா ஊத்தி மூடிருவன். அதே போல ஒரே பார்ட்டி கச்சா முச்சான்னு கேட்டாலும் இந்த பகுதி அம்பேலாயிரும்.

இது எந்த அளவுக்கு ஆக்யுரேட்டா இருக்கும்னு ஒரு சந்தேகம் வரலாம்.

எங்க என்.டி.ஆர் சி.எம்மா இருக்காரு.அந்த நேரம் வீரபிரம்மேந்திர சுவாமி சரித்ரா படம் எடுத்துக் கிட்டிருக்காரு. பொசிஷனுக்கு வந்து தியானத்துல உட்கார்ராப்ல ஃபோஸ் கொடுக்காரு. படக்குன்னு "கட் கட்"ங்கறாரு.ஏம்பா அங்கன ஒரு பேபி லைட் எக்ஸ்ட் ராவா இருக்கு பாரு அதை எடுத்துருங்கறாரு.
இது எப்டி சாத்தியமாகுதுன்னா எக்ஸ்பீரியன்ஸு. இந்த சம்பவத்தை ஒரு தாட்டி குமுதத்துல படிச்சதா ஞா.

நம்ம ஊருல ஒரு அய்யரு ஃபேமிலி. குழந்தைங்க இல்லின்னு ஒரு பெண் குழந்தைய தத்து எடுத்து வளர்க்கிறாய்ங்க. அது ஸ்கூலுக்கு போற வயசு. பில் குல் ஸ்கூலுக்கு போகமாட்டேங்குது. அப்பம் அய்யரம்மா இதுக்கு எதுனா பரிகாரம் சொல்லுங்கோன்னு கேட்டுது.

பாப்பாவுது மேஷ ராசி. அப்பம் மேஷத்துக்கு வாக்குல சனி. ஒரு கருப்பு கவுத்துல எட்டு ஊக்கு பின்னு கோவுத்து போட்டு விட்டுருங்க. ஸ்கூலுக்கு போகும்னேன். ப்ராப்ளம் சால்வ்ட். இது எப்டி ஒர்க் அவுட் ஆச்சுன்னு ஜூரிங்க ஆருனா சொல்லலாம்.

பிரச்சினை எம்மாம் பெருசோ சொல்யூஷன் கூட அம்மாம் பெருசா இருக்கனுங்கற அவசியமில்லை. சூட்சுமத்துல மோட்சம் இருக்குங்ணா..

உங்க பிரச்சினைய எழுதுங்க. உடனடி தீர்வை உடனடியா சொல்றேன். உடுங்க ஜூட்டு..

பின் குறிப்பு:

சென்னை பதிவர் சந்திப்புல அறிமுகத்துக்கே காலை 10 முதல் மதியம் 2 வீணாப் போயிருச்சு. இதைவிட முன் கூட்டியே பதிவர்கள் படத்தோட ஒரு புக்லெட் ஜெராக்ஸ் அடிச்சு கொடுத்திருக்கலாம்னு கடந்த பதிவுல எழுதியிருந்தன்.

இதை படிச்சு டிசைட் பண்ணாய்ங்களோ அவிகளுக்கே ஸ்ட்ரைக் ஆச்சோ தெரியலை .இப்பம் மேற்படி கன்டென்டோட ஒரு புஸ்தவமே போடப்போறாய்ங்களாம். வாழ்க..

Saturday, August 4, 2012

நோ கமெண்ட்ஸ் !


அண்ணே வணக்கம்ணே !

ப்ரஸ் மீட்ல ஆருனா ரிப்பபோர்ட்டரு வில்லங்கமான கேள்வி கேட்டு தொலைச்சுட்டா அரசியல் வாதிகளை காப்பாத்தற வார்த்தை நோ கமெண்ட்ஸ்.

ஆனால் நம்ம சைட்டை பொருத்தவரைக்கும் நெஜமாலுமே நோ கமெண்ட்ஸ். ஒன்னு ரெண்டு புண்ணியாத்மாக்களை தவிர ஆருமே கமெண்ட் போடறதில்லை.

ஒரு பதிவை அடிச்சு சைட்ல போட்டு , இன்ட்லி,தமிழ்10,உடான்ஸ்,ஃபேஸ்புக்ல் ஷேர் பண்ணனும்னா குறைஞ்ச பட்சம் 1 மணி நேரம் பிடிக்குது. இந்த ஒரு மணி நேரத்தை செலவழிச்சு 60 விஷயங்களை சொல்ல எதுனா வழி இருக்கான்னு ரோசிச்சேன். ஒரு ஐடியா வந்தது. அதை கடேசியில சொல்றேன்.

மேலும் பதிவுன்னா ஒரே மேட்டரை நை நைன்னு அடிச்சாகனும். அதுலயும் நாம தொடர்பதிவு போடறதால படிக்கிற உங்களுக்கு போரடிக்குதோ இல்லியோ அடிக்கிற எனக்கு போர் அடிக்குது.

இப்படில்லாம் அடிச்சு பிடிச்சு போட்ட பதிவை எத்தீனி பேரு படிக்கிறாய்ங்கன்னு பார்த்தா வெறுத்துபோகுது. லேட்டஸ்ட் பதிவை 200 பேரு படிச்சா பழைய பதிவுகளை படிக்கிறவுக 800 பேரு.

இத்தோட இன்னொரு மனக்குறை என்னடான்னா சனங்களோட வில் பவர் குறைஞ்சு போச்சா அ நம்ம வில் பவர் குறைஞ்சு போச்சா தெரீல.இதுக்கு மிந்தில்லாம் ஒரு பதிவு போட்டா "பாஸ்.. இதை பத்தி நீங்க எழுதினா நல்லாருக்கும்னு நினைச்சேன் ..ஒடனே எழுதிட்டிங்க"ன்னு கமெண்ட்/மெயில்/ஃபோன் இப்படி எதோ ஒன்னு வரும்.சமீபகாலமா இதுவும் இல்லை. ரீடர்ஸ்/ கோ ப்ளாகர்ஸ் பார்ட்டிசிப்பேஷன் ரெம்ப புவர் ஆயிருச்சு..

எல்லாத்தையும் கூட்டிக்கழிச்சு பார்த்து ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கன். அது என்னடானா இனி ஃபேஸ்புக்ல இருக்கிற அனுபவஜோதிடம் பக்கத்து மேல கான்சன்ட்ரேட் பண்றது. கு.பட்சம் 15 நாளைக்காச்சும் பதிவுகள் போடறதை நிப்பாட்டிட்டு.. ஸ்பான்டேனியஸா சனங்க கேட்கிறதை ஃபாஸ்ட் புட் கணக்கா ஒடனே கொடுத்துர்ரது, மனசுல தோனினதை உடனே போஸ்ட் பண்ணிர்ரது. உடனடி லாட்டரி மாதிரி மேட்டர் ஓவர் ஆயிரும்.

தனிப்பட்ட ஜோதிட கேள்விகளை அவாய்ட் பண்றது பெஸ்ட். அதே சமயம் எதுனா ட்விஸ்ட் இருந்தா கேளுங்க.

அனுபவ ஜோதிடம் முக நூல் பக்கத்துக்கு வர இங்கே க்ளிக் பண்ணுங்க ப்ளீஸ் .. கையோட கையா ஒரு லைக்கும் போட்டுருங்கப்பு..

Tuesday, July 24, 2012

சில காட்டமான கேள்விகளும் -என் பதில்களும்

அண்ணே வணக்கம்ணே !
கொய்யால ஒரு பதிவுக்கே சிங்கியடிச்சுக்கிட்டிருந்தம். எப்படியோ உங்கள் ஆயுள்பலம் எப்டி மினி தொடருக்கான 6 ஆவது அத்யாயத்தை ஒப்பேத்தியாச்சு.

போது போகாம அனுபவஜோதிடம் சைட்டுக்கு வந்த பழைய கமெண்டுகளை படிச்சுக்கிட்டிருந்தப்போ - ரஞ்சன் என்ற பிரிட்டானியா காரரு சில காட்டமான கேள்விகளை எல்லாம் கேட்டிருந்ததை பார்த்தேன்.

சில கமெண்டுகளுக்கு விளக்கமா பதில் தரனும்னு நினைச்சு பிறவு மறந்து போறது வழக்கம். அப்படி விடுபட்ட கமெண்ட் அது. அதுக்கான பதிலைத்தான் இன்னைக்கு பதிவா படிக்க போறிங்க. உடுங்க ஜூட்..


1. ஜோதிடம் உண்மை என்பதற்கு என்ன ஆதாரம்?
கடவுளை நம்பாதவன் கூட ஜோதிடத்தை நம்பறானே. கடவுள் பேரை சொல்லி ஏமாத்தறவனை விட ஜோதிடத்தின் பேரால் ஏமாத்தறவுக நெம்பர் அதிகமா இருக்கே.

கடவுளையும் -ஜோதிடத்தையும் மனிதர்களின் நினைவிலி மனம் நம்புகிறது.அதற்கும் முற்றும் உணர்ந்த ஆன்மாவுக்கு கூப்பிடு தூரம் தான். அதுக்கு எப்பயோ இந்த ரெண்டு மேட்டரும் அவெய்லபிளா இருந்திருக்கு.அதனாலதான் இப்பயும் தேடி ஓடுது.

2. ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன ஆகிவிடும்?
ஒன்னும் ஆகாது. நடக்கவேண்டியது நடந்துக்கிட்டே இருக்கும். ( நாம கடியாரத்தை பார்க்காட்டாலும் அதும்பாட்டுக்கு ஓடிக்கிட்டே தானே இருக்கு)

3. ஜோதிடம் பார்த்தும் பலருக்கு அதன்படி பலன்கள் நடக்கவில்லையே அது ஏன்?

ஜோதிடம் பலித்தால் அது ஜோதிடத்தின் பெருமை.
அது பொய்த்தால் ஜோதிடனின் சிறுமை

4. ஒரே ஜாதகத்திற்கு ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு விதமாகப் பலன் கூறுகிறார்களே அது எப்படி?
அந்த ஜோதிடரின் " நான்" ஜோதிடத்துக்குள் பிரவேசிப்பதால் ஏற்படும் மாற்றம் இது. நான் விலகி நின்னாதான் எதிர்காலம் தரிசனம் கொடுக்கும்.

5. ராகு, கேது பாம்புகள், கிரஹணத்தின் போது சந்திரனை, சூரியனை விழுங்கும் என்பதெல்லாம் பொய் என்று விஞ்ஞானம் நிருப்பித்திருக்கிறதே அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

ஹ்யூமன் மைண்ட்ல ரைட் லெஃப்டுன்னு டிவிஷன்ஸ் இருக்காம். படத்தை பார்க்கிறது லெஃப்ட் டிவிஷன்.அது லாஜிக் பார்க்காது.

பாடத்தை புரிஞ்சிக்க பார்க்கிறது ரைட் மைண்ட் அது லாஜிக் பார்க்கும்.

அந்த காலத்துல சனங்களுக்கு லெஃப்ட் மைண்ட் நெல்லா வேலை செய்தது.அதுக்கு படம் காட்டனும். படம் காட்டி கதை சொல்லனும்.அப்பத்தான் ஏத்துக்கும்.

அப்படி படம் காட்டி சொன்ன கதைதான் அது.


7. அதது இயற்கையாக நடந்து கொண்டிருக்கும் போது, ஜாதகம் போன்றவற்றை நம்புவது பகுத்தறிவிற்கு முரணாக உள்ளதை அறிவீர்களா?

மழை கூட இயற்கையாதான் பொழியுது.அப்ப எதுக்கு வானிலை அறிவிப்பு மையம்? குடை கொண்டு போகலாம்னுதானே.. கடலுக்குள்ள மீன் பிடிக்க போகாம இருக்கலாம்னு தானே

8. ஜாதகம் பார்த்து, பொருத்தம் பார்த்தும் விவாகரத்துகள் நடக்கின்றன, சிலர் இறந்து போகிறார்கள், மனைவியைக் கொலை செய்கிறார்கள். இதெல்லாம் எப்படி? எதிர்காலத்தில் நடக்கப் போவதைக் கூறுவதுதான் ஜோதிடம் என்றால் எப்படி உங்களால் இவற்றைக் கணிக்க முடியவில்லை.

ஜோதிடம் பொய்க்க பல காரணம் உண்டு. ஜோதிடர் டுபாக்கூரா இருக்கலாம். உங்க பிறப்பு விவரங்கள் தவறா இருக்கலாம். மேன்யுவலா கணிக்கும் போது தவறு ஏற்பட்டிருக்கலாம்.

ஜோதிடர் கிரகங்களின் பலத்தை கணிப்பதில் கோட்டை விட்டிருக்கலாம்.
மேற்சொன்ன காரணங்கள் இல்லாமலும் ஜோதிடம் பொய்க்கிறது. காரணம் ஜோதிட சாஸ்திர‌த்தில் உள்ள மர்மங்கள் ஆயிரமாயிரம்..


9. பரிகாரம் என்ற பெயரிலும் யாகம் என்ற பெயரிலும் ஜோதிடர்களும் புரோகிதர்களும் கூட்டுக் கொள்ளை அடித்து வருகிறார்களே, இது நியாயமா?

நியாயமில்லைதான் . உங்களுக்கு நம்ம நவீனபரிகாரங்களை பத்தி தெரியாதுன்னு நினைக்கிறேன்

10. விதிப்படி தான் அனைத்தும் நடக்கும் என்பது இந்து தர்ம சாஸ்திரம். அப்புறம் ஏன் ஜோதிடம்?
ஒரு க்யூரியாசிட்டி தான். முன்னாடி தெரிஞ்சுக்கிட்டு முன் கூட்டியே கவலைப்படலாம்ங்கறது மசாக்கிசம் தான்.

11. விஷ்ணு ஆலயங்களில் ஏன் நவக்கிரகங்கள் காணப்படுவதில்லை?
இது "அவாளுக்கு" போக வேண்டிய கேள்வி.

12.பட்சி சாஸ்திரம், சகுனம், ராகு காலம், எம கண்டம் இவையெல்லாம் பைத்தியக்காரத்தனமாக உங்களுக்குத் தோன்றவில்லையா?
சகுனம் பலதும் ஒர்க் அவுட் ஆகியிருக்கு (நம்ம அனுபவத்துல) ராகுகாலம்னா ஞா கிழமை மட்டும் நிறைய தாட்டி பல்பு வாங்கியிருக்கோம். மத்த மேட்டர்ல நானும் உங்க கட்சிதான்.

13. செவ்வாய் தோஷம், மூலம் என்றெல்ல்லாம் பெண்களை ஜோதிடம் கொடுமைப்படுத்துகிறதே, இது நியாயம் தானா?

சத்தியமா நியாயமில்லை. இதுக்கெல்லாம் செமர்த்தியான,அயனான லாஜிக்கல் ரெமிடீஸ் தந்திருக்கேன். நம்ம சைட்டை துழாவுங்க.

14. கிழக்கே சூலம், மேற்கே சூலம் என்றால் என்ன?
தெரியாதுங்ணா.. இதையெல்லாம் நாம ஃபாலோ பண்றதே கடியாது.

15. பிறக்கும் நேரத்தைத் தவறாகச் சொல்லி ஜாதகம் கணித்தால் என்ன ஆகும்?
தவறா சொன்ன டயத்துக்கு கரீட்டா பொறந்தவுகளுக்கு அந்த பலன் நடக்கும்.

16. பிறந்த தேதியே தெரியாதவர்களுக்கு எப்படி ஜாதகம் கூறுவீர்கள்?

இதை பத்தி நிறைய எழுதியிருக்கேங்ணா சைட்ட துழாவுங்க..

- ரஞ்சன், பிரிட்டானியா

Thursday, June 28, 2012

12+12 பாலியல் விருப்பங்கள்: முடிவுரை


அண்ணே வணக்கம்ணே !
தெலுங்குல கோடி வித்யலு கூட்டி கொரக்கேன்னு ஒரு பழமொழி இருக்கு. அதாவது உலகத்துல கோடி கணக்கான திறமைகள் இருந்தாலும் எல்லாம் "புவ்வா"க்காகத்தானு அருத்தம். ஆனால் ஒரு கேட்டகிரி சனம் மட்டும் பலான மேட்டருக்காகவே திறமைகளை வளர்த்துப்பாய்ங்க, உள்ள திறமைகளையும் பலான மேட்டருக்கே யூஸ் பண்ணுவாய்ங்க. இவிக பத்தாவது கேட்டகிரி. (ச்சீக்கிரமே இதையும் இழந்துருவாய்ங்க - டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் இல்லியா? )

மேற்படி ஆர்வம் கட்டுக்குள்ள இருந்தாலோ -சப்கான்ஷியஸ்ல இருந்தாலோ அது பாசிட்டிவ். இதுக்கு விரோதமா ஆர்வம் கட்டுக்குள் இல்லாத போனாலோ -கான்ஷியஸாவே இருந்தாலோ அது நெகட்டிவ்.

அதே போல ஃபைனான்ஸ் மேட்டர்லயும் இவிக பிஹேவியர் இப்படித்தான் இருக்கும். பணம் பத்தும் செய்யும்னு கேள்விப்பட்டிருப்பிங்க.ஆனால் இவிக மட்டும் பணம் செய்யக்கூடிய மத்த 9 அம்சங்களையும் கண்டுக்கிடமாட்டாய்ங்க. ஒரே ஒரு அம்சமான "கில்மா"வை மட்டும் மண்டையில நிரப்பிக்கிட்டு பாடுபட்டு ஈட்டிய பொருளையெல்லாம் ஒளிச்சு கட்டிருவாய்ங்க.

பணத்துக்காவ வர்ரவ மனசை நிரப்ப முடியாது. மனசை நிரப்பக்கூடியவ பணத்துக்காவ வரமாட்டா. பொளப்பு நாறிரும்.

இந்த சீரிஸ்ல 11 ஆவது கேட்டகிரியிருக்கே.. ரெம்ப விசித்திரமான கேரக்டர். இவிகளை பத்தி வண்டையா ஒரு பாய்ண்ட் சொல்வாய்ங்க " கொய்யால அவனா.. காரியத்தை முடிச்சுட்டு -அவள் புடவையிலயே ... சிட்டு வந்துருவான்"

சாதாரணமா எவ்ளோ பெரிய கஞ்ச பிரபுவா இருந்தாலும் பலான மேட்டருன்னு இறங்கிட்டா ரெம்ப லிபரலாயிருவான்.அள்ளி விடுவான்.ஆனால் இந்த 11 ஆவது கேட்டகிரி மட்டும் அதுலயும் எனக்கென்ன லாபம்னு கணக்கு போடுவான்.

தங்கச்சி பலான மேட்டர்ல ஒர்த்லெஸ்ஸுன்னுட்டு சொந்த மச்சானை பலான இடத்துக்கு தள்ளிக்கிட்டு போயி அவன் காசுலயெ இவன் காரியத்தையும் முடிச்சுட்டு வந்த ஆசாமியை நாம சந்திச்சிருக்கம்.

இன்னொரு ஆசாமி டே புக்கிங் பண்ணிட்டு கூட்டாளிங்களை வரவழைச்சு அவிக கிட்ட வசூல் பண்ணி செட்டில் பண்ணிருவான்.

இந்த மாதிரி ஜென்மங்கள் 11 ஆவது கேட்டகிரி. இந்த லாபம் பார்க்கிற போக்கு சோஷியலா அனுமதிக்கப்பட்டதா இருந்தா, லீகலா இருந்தா சரி. அது பாசிட்டிவ். சமூகம் அனுமதிக்காகாததா -இல்லீகலானதா இருந்தா நெகட்டிவ்.

அடுத்து வர்ரது 12 ஆவது கேட்டகிரி. இவன் கிணறு வெட்டுவான் எவனோ தண்ணி குடிப்பான். இவன் நமக்கு கொடுத்து வச்சது அவ்ளதான்னு ரிட்டர்ன் ஆயிட்டா அது பாசிட்டிவ். ஆசிட் பாட்டிலை தூக்கிக்கினு ஓடினா நெகட்டிவ்.

ஆக 12+12 பாலியல் விருப்பங்கள் தொடர்ல சொல்லவேண்டிய விஷயங்களையெல்லாம் சொல்லியாச்சு. ஆமாம் பரிகாரங்கள் சொல்றதை எந்த கேட்டகிரியில நிறுத்தி தொலைச்சுட்டம்.? ஞா இல்லியே.. ஆருனா ஞா படுத்துக்கங்கப்பா..

நாளைக்கு தீர்த்துவச்சிருவம்.

Friday, June 8, 2012

பொம்பளைய நம்பலாமா: 2


//ஹெல்த்தியா உள்ள 45 வயசு காரன் கையில இருக்கிற வாக்கிங் ஸ்டிக் கணக்கா தாய்குலத்தோட டீலிங் வச்சுக்கிட்டா நோ ப்ராப்ஸ்.//

இது நேத்து நாம விட்ட பஞ்ச். இப்படி டீலிங் வச்சுக்க முடியாதவுக லைஃப் பிக்சரை நேத்து சொல்லியிருந்தம்.

இவிகளுக்கு என்ன தான் பரிகாரம்?

எந்த பிரச்சினைக்கும் தீர்வு ஜஸ்ட் சின்ன புரிதல்தான். சீனம்,சீனா,சைனா இப்படி எந்த பேர்ல குறிப்பிட்டாலும் ஒரே நாட்டை தான் குறிப்பிடறோம்.

அங்கன கிடைக்கிற களி மண்ணை சைனா க்ளேன்னு சொல்றோம். நம்ம ஒக்காபிலரியில சைனா டிஷ் அ பீங்கான்.

இந்த மெட்டீரியல்ல சிரிக்கும் புத்தர் சிலையும் கிடைக்குது , கப் அண்ட் சாஸரும் கிடைக்குது , கக்கா போறதுக்கான டபுள்யூ சியும் கிடைக்குது.

புத்தர் சிலைக்கு பூ போட்டு வணங்கறோம்.கப் அண்ட் சாசர்ல டீயோ காஃபியோ சாப்பிடறோம். இன்னொரு சமாசாரத்தை அல்ப சங்கியைக்கு உபயோகிக்கிறோம்.

பீங்கான்ல செய்த புத்தர் சிலையை வணங்கறதால அதே மெட்டீரியல்ல செய்த கப் அண்ட் சாஸர்ல டீ சாப்பிடமாட்டேன். அல்ப்ப சங்கியைக்கு ஒதுங்கமாட்டேன்னா அது பை. தனம்.

இதே விதத்துல தாய்,சகோதிரி , நண்பி ,லவ்வர், பொஞ்சாதி எல்லாரும் ஒரே ஜாதி தான்.ஆனால் அவிகவிகளை எப்படி டீலிங் பண்ணிக்கனுமோ அப்டி பண்ணிக்கனும். குழப்பிக்க படாது.

அதே போல பெண் வாழ்க்கையில ஒரு பார்ட். (முக்கியமான பார்ட்டுன்னு வேணம்னா வச்சுக்கலாம்) அதை விட்டுப்போட்டு எட்டாத காய் பார்த்து கொட்டாவி விடறதெல்லாம் வெட்டி.

அந்த பெண்ணே கூட தனக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கிறவனை சிலகாலம் பிரமிப்பா பார்க்கலாமே தவிர அவளோட காதலை பெற - அவளோட வாழ அது ஒன்னே தகுதி கிடையாது.

ஒவ்வொரு மன்ச ஜென்மமும் சேற்றில் முளைத்த செந்தாமரைதான். ச்சொம்மா ஜூம் போட்டு தாமரையை மட்டும் பார்த்துக்கிட்டிருந்துட்டு திடீர்னு சேற்றை பார்த்தா லவ் எல்லாம் ஓடிப்போயிரும்.

அதனால எதிராளிய பார்க்கும் போதே அப்பப்போ மிட் ஷாட், லாங் ஷாட்டுன்னு பார்த்துக்கிட்டிருக்கனும். இல்லின்னா மிரண்டு போயிருவம்.

பெண் என்பவள் இரண்டு விதமாக இருக்கிறாள். ஒன்று அவளது உடல் ரீதியான பலவீனம் தந்த குறுக்கு புத்தி, வியூகங்கள், பாதுகாப்பற்ற தன்மை இதெல்லாம் சேர்ந்து தயாரித்த தற்போதைய பெண்.

மற்றொரு பெண் ஒவ்வொரு பெண்ணிலும் அவளது மன ஆழத்தில் இருக்கிறாள். அவள் சில மில்லி கிராம் அன்புக்கு ஏங்கியபடி, அது கிடைத்தால் ஆதிசக்தியாகி அந்த அன்பை செலுத்தியவனுடைய குடும்பம்,வம்சம்,ஏன் அவன் ஊர்,உலகத்தையே காத்து ரட்சிக்கக்கூடிய இயற்கையின் பிரதி நிதியான பெண்ணும் இருக்கிறாள். -(இது சீரியஸ்)

கண்ணாலத்துக்கு மிந்திதான் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு கேரக்டர். கண்ணாலத்துக்கு அப்பாறம் அவள் ஜஸ்ட் மனைவி " ஏன் லேட்டு " " இந்த சம்மருக்குன்னா ஊட்டி உண்டா இல்லியா" " ஊர்ல இருக்கிறவனுக்கெல்லாம் ஓடி ஓடி செய்விங்க என் தம்பின்னா மட்டும் இளக்காரம்"

மைண்டு ஒரு குட்டி பின்னாடி ஓடுதுங்கற ஃபீலிங் வந்த ஒடனே இந்த தத்துவம்லாம் ஞா வராது. சின்ன வயசுல காட்லிவர் ஆயில் சாப்டிருந்தா ஞா வரும் .தப்பிச்சுக்கலாம் (இது காமெடி)

ஒரு பொருளை பெறும் தகுதி தனக்கிருக்குங்கற நம்பிக்கை இருந்தாலே அந்த பொருள் மேல ஆர்வம் குறைஞ்சுரும்.

அதை பெறும் தகுதி தனக்கில்லையோ -எவனாச்சும் முந்திக்குவானோ - எவனாச்சும் அடிச்சுக்கிட்டு போயிருவானோங்கற பீதியிருக்கும் போது தான் ரெஸ்ட்லெஸ்னெஸ் வந்துரும். பரபரப்பு,பதைப்பு வந்துரும்.

அப்பாறம் தத்துவம் கித்துவம்லாம் சைடு வாங்கிரும். மூளை டார்ஜான் வைரஸ் புகுந்த கம்ப்யூட்டர் மாதிரி ஆயிரும்.

உங்க ஃபோட்டோவை வச்சு பூஜை பண்றாங்கற ஒரே காரணத்துக்காவ நீங்க விரும்பாத பெண்ணை உங்களால லவ்வ முடியுமா? ரோசிங்க. நம்ம மாதிரிதானே தாய்க்குலமும்.

இப்பல்லாம் இந்த குட்டிங்க எந்த மாதிரி பயலுவளை விரும்பறாய்ங்கன்னு சர்வேல்லாம் வருது. அதையெல்லாம் படிச்சு குவாலிஃபைடாகி அப்பாறம் லவ்வறதுதேன் அல்லாருக்கும் சேஃப்டி.

எங்க காலத்துலல்லாம் ஹையர் சைக்கிள்ள ஹேண்டில் பார்லருந்து ரெண்டு கைய தூக்கிட்டு வந்தாலே குட்டிங்க செம பார்க்கும். விளுந்தா செம சில்லறை கிடைக்கும்.

இன்னைக்கு லட்ச ரூவா பைக்ல டெத் ரேஸ்ல போயிட்டிருந்தா கூட "பாவம்.. இன்ஷியூர் பண்ணானோ இல்லியோ"ங்கற கமெண்ட் தான் கிடைக்கும். தவறினா சங்குதேன்.

சத்தியம் அந்த முனைலயும் நஹி இந்த முனையிலயும் நஹி அது மையத்துல இருக்கு. பெண்ணை வெறுக்கவும் தேவையில்லை. பூஜை பண்ணவும் தேவையில்லை. சக மனுச சன்மமா ட்ரீட் பண்ணா போதும்.

ஒரு பெண் உங்க வாழ்க்கைய ஸ்வர்கமாக்கவும் போறதில்லை - நரகமாக்க போறதுமில்லை. சாதிக்கிறவன் பொஞ்சாதி நச்சரிப்பை மீறித்தான் சாதிக்கிறான். வாழ்க்கையில தோத்துப்போறவன் கலைவாணியே பெண்ணுரு கொண்டு பொஞ்சாதியா வந்தாலும் தோத்துத்தான் போவான்.

இந்த பொம்பளை மேட்டரை ஃப்ரீயா உட்டுட்டு நார்மலா இருக்க ட்ரை பண்ணனும்.

உடலில் நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. இவை ஒவ்வொரு ரசாயனத்தை சுரந்து ரத்தத்தில் கலக்கின்றன.

இவை சுரந்து கலக்கும் ரசாயனங்களுக்கும் கோழைத்தனம், வீரம், சுய நலம், தியாகம் ,காமம், காதல் இத்யாதி குணங்களுக்கும் தொடர்பு உள்ளது.

மேற்சொன்ன நாளமில்லா சுரப்பிகளுக்கெல்லாம் தலைவன் ஹைப்போதலாமஸ். இதன் கட்டளைப்படி இதர சுரப்பிகள் வேலை செய்கின்றன.(ரசாயனங்களை சுரக்கின்றன) ரசாயனங்களுக்கேற்ற குணம் ஏற்படுகிறது.

மேற்சொன்ன நாளமில்லா சுரப்பிகளை,அவற்றின் சுரப்புகளை யெல்லாம் கட்டுப்படுத்தும் தலைவனான ஹைப்போதலாமசை கட்டுப்படுத்துவது எது தெரியுமா? நமது எண்ணம் . இந்த எண்ணங்களை நம் ஜாதகத்திலான சந்திரனின் இருப்பு கட்டுப்படுத்துது.. ( மறுபடி மொதல்லருந்தா...ஆஆஆஆஆஆஆஆஆ)

வேணாம் பாஸ் நாளைக்கே பார்ப்போம்..

Thursday, June 7, 2012

பொம்பளைய நம்பலாமா?


//வேணா மச்சான் வேணா இந்த பொண்ணுங்க காதலே//ங்கற இன்றைய திரைப்பாடல்லருந்து

//ஆலகால விஷத்தை நம்பலாம், கோலமாமத யாணையை நம்பலாம்,
கொல்லவரும் வேங்கைபுலியை நம்பலாம். காலன்விடும் தூதையும் நம்பலாம்.
சேலைகட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று திகைப்பார்தாமே, //ங்கற சித்தர் பாடல் வரை தாய்க்குலத்துக்கு ஆன்டியாவே இருக்கே . இன்னாபா மேட்டருனு கேப்பிக,

(சப்ஜெக்ட் தாவலை தலை! நம்ம தொடர்பதிவோட லைன் அப்பை விட்டு டைவர்ட் ஆகலை பாஸு.. ச்சொம்மா போற போக்குல டச் பண்றேன் தட்ஸால்)

எங்கயோ கேட்டது/படிச்சது.

ஹெல்த்தியா உள்ள 45 வயசு காரன் கையில இருக்கிற வாக்கிங் ஸ்டிக் கணக்கா தாய்குலத்தோட டீலிங் வச்சுக்கிட்டா நோ ப்ராப்ஸ்.

அதை விட்டுட்டு தாத்தா கையில உள்ள கைத்தடி கணக்கா ரெம்ப ஊனி நடந்தா மூஞ்சி பல்லு பேர்ந்துரும். பொம்பளைய நம்பாதேன்னவுகள்ளாம் முட்டாள் "பெண் இயற்கையின் பிரதி - நிதி - பிரதிநிதி" ன்னு சொன்ன நாந்தேன் க்ளெவருன்னு நான் சொல்லமாட்டேன்.

இந்த ஒலகத்துல எல்லா நிஜமும் நிஜமில்லை. எல்லா பொய்யும் பொய்யில்லை. எந்த நிஜமும் 100 சதம் நிஜமில்லை . எல்லா பொய்யும் 100 சதம் பொய்யுமில்லை.

எல்லா நிஜமும் 24 மணி நேரமும் நிஜமா இருக்கிறதில்லை. எல்லா பொய்யும் 24 மணி நேரமும் பொய்யா இருக்கிறதில்லை.

இங்கன எல்லாமே மாறும் .ஆளை பொருத்து , நேரத்தை பொருத்து . டீலிங்கை பொருத்து மாறும்.மாறிக்கிட்டே இருக்கும்.

சகோதிரிகள் உள்ள ஆண், சகோதரர்கள் உள்ள பெண் இவிக லைஃப் பிக்சரை பார்க்கலாம். சகோதிரின்னா ஆரு? தாயின் பிரதி.

ஒவ்வொரு ஆண் குழந்தையும் தாய் மீது மையல் கொள்ளும்னு சைக்காலஜி சொல்லுது. ( அப்பனை போட்டுதள்ளிர்ர ரேஞ்சுக்கு போயிட்டா அது ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் - மனோவியாதி) சகோதிரி தாயின் பிரதி.

சகோதிரிகளிடை வளரும் ஆண் குழந்தை விவரம் தெரியறதுக்கு மிந்தி வெள்ளந்தியா ஒன்னு மண்ணா கிடக்கும். டீன் ஏஜ்ல ஒரு மிரட்சி வரும். நெருங்கலாமா கூடாதா?

இந்த மிரட்சி எல்லா பெண்கள் விஷயத்துலயும் பரவிருச்சுன்னா நாஸ்தி.. கான்ஷியஸ் மைண்ட்ல "கூடவே கூடாது"ங்கற கான்செப்ட் இருக்கும். சப் கான்ஷியஸா " வேணும்"ங்கற கான்செப்ட் இருக்கும். நிலத்துல புதை படும் நிலக்கரி அழுத்தம் காரணமா வைரமா மாறலாம். ஆனால் மனசுக்குள்ள அழுத்தப்பட்ட உணர்வு காஷ்மோரா மாதிரி . 12 வருசத்துக்கப்பாறம் பீறிட்டு கிளம்பலாம்.

மேலும் சகோதிரிகளோடு வளரும் ஆண்குழந்தை கொஞ்சம் பயந்த சுபாவமா ஃபிமிலிஷ் ஆ இருக்க வாய்ப்பிருக்கு. (என்விரான்மென்ட்) .

அதுலயும் சுருட்டை முடி,அழகான கண்கள்னு வடிவேலு சொல்றாப்ல சூப்பர் ஃபிகரா இருக்கிற சகோதிரிகள் இடையில் வளர்ர ஆண்குழந்தை பயந்த சுபாவமா வளர வாய்ப்பிருக்கு.

ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா பால்யத்துல ரெம்ப துணிச்சலா இருக்கிறதும் - டீன் ஏஜ்ல பயந்த சுபாவமா மாறுவதும் உண்டு.

பயம் செயல்படுவதை தடுக்கும். சிந்தனையை வளர்க்கும் . அது ஆக்கப்பூர்வமானதா இருந்தா நோ ப்ராப்ளம். இதர ஃபேக்டர்ஸ் சரியில்லின்னா அது பகல் கனவா மாறும்.

ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா செய்த அட்வென்சர்ஸ் - அந்த குழந்தைய சூடு கண்ட பூனையா மாத்தலாம். ஆனால் இயற்கை விதிகளின் படி பூனை பால் குடிச்சே தீரனும். ( பால்னா இங்கன நான் சொல்றது வள்ளுவர் சொன்ன 3 ஆவது பால்) . இதனால மன அழுத்தம், கான்ட்ராடிக்சன் இத்யாதி இத்யாதில்லாம் டெவலப் ஆகும்.

நினைவெல்லாம் நித்யாங்கற மாதிரி சப் கான்ஷியஸ் முழுக்க பிட்டு படமா ஓடும்.. அதனால ஒரு கில்ட்டி. தன் மேல தனக்கே நம்பிக்கையில்லாத நிலை.

அதனால கில்மாவுக்கு வாய்ப்பே இல்லாத வயசு, முறை உள்ளவுகளோட மட்டும் பழகலாம். அப்படி பழகும்போது உள்ளாற அழுத்தப்பட்ட காஷ்மோரா கிளம்பிருச்சுன்னா நாறிரும்.

இங்கே இன்னொரு பாய்ண்டை சொல்லனும். இறைக்கிற கேணி தான் ஊறும்ங்கறது லாஜிக்.ஆனால் இருக்கிற தண்ணி வயலுக்கு பாய்ஞ்சா தேன் கிணறு தன் கப்பாசிட்டிக்கு ஊறும்.

ஐ மீன் ஒரு ஆண் செக்ஸ் குறித்த நேரிடை கருத்துக்களுடன் "செயல்படுவதற்கான" வாய்ப்புகளுடன் இருக்கும் போது அவனோட பாடி கரீட்டா ஒர்க் அவுட் பண்ணி வைக்கும்.

எதிரிடையான கருத்துக்கள் இருந்தாலோ - செயல்படுவதற்கான உந்துதலோ -ஊக்கமோ இல்லாம இருந்தாலோ விந்து உற்பத்தியே குறைஞ்சு போயிரும்.

இதுல இன்னொரு லாஜிக். பால் பாத்திரம் நிரம்பி இருந்து -அதை காய்ச்ச ஆரம்பிச்சா நேரம் பிடிக்கும். இதுவே அதுல ஒரு ஸ்பூன் பால் மட்டும் இருக்குன்னு வைங்க. என்னாவும்?

படக்குனு காய்ஞ்சி , பொங்கி ,தீஞ்சுரும். இதெல்லாம் - இந்த சிக்கல் எல்லாம் அவிக உள் மனசுக்கு தெரியாட்டாலும் - பாடிக்கு தெரியும்.

மனசை உருவாக்கிறது இயற்கையிலருந்து விலகி ஓடிக்கிட்டிருக்கிற சமூகம். பாடியை உருவாக்கிறது ஆதி நாட்கள்ளருந்து அதே தாது உப்புக்கள்,விட்டமின்ஸ்,கார்போ ஹைட்ரேட், ப்ரொட்டீன்ஸ் தான், இதனால மனசை விட பாடிக்கு இயற்கையோட நல்ல ஒத்திசைவு இருக்கும்.

எதிர்காலத்துல இருக்கவே போறதில்லைங்கற "அலார்ம்" ஒலிச்சிட்டே இருக்க இவன் என்ன பண்ணுவான்? "காஞ்ச மாடு கம்பங்கொல்லை மேஞ்ச மாதிரி " செக்குக்கும் சிவலிங்கத்தும் வித்யாசம் தெரியாத மாடு மாதிரி .. போய்க்கிட்டிருப்பான்

இப்படியா கொத்த பார்ட்டிங்க தான் பொம்பளைய தாத்தா கைத்தடியா உபயோகிச்சுக்கிட்டு - இந்திரியம் தீர்ந்து சுந்தரியும் பேய் போல ஆகிர .. பதிவின் ஆரம்பத்துல சொன்ன தத்துவம்லாம் சொல்லிக்கிட்டு கிடப்பாய்ங்க. இது 12+12 பாலியல் விருப்பத்துல லைஃப் பிக்சர் நெம்பர்: 3

(இது பவர்கட் நேரம் மீதியை நாளைக்கு பார்க்கலாம்)

Wednesday, June 6, 2012

வெறும் பேச்சால் "அது" போச்சு


அண்ணே வணக்கம்ணே !
<இஸ்மாயில் சார் சொன்ன ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ் > <பாப்பா> <அதை வளர்க்க பைசா> <லைஃப் ஸ்மூத் கோயிங்கா இருக்க கில்மா> இந்த வரிசையில வரும்போது படக்குன்னு தொடரோட தலைப்பை மாத்தி <படுக்கையறை மர்மங்கள்>ங்கற தலைப்புல ரெண்டு அத்யாயம் மறுபடி டைட்டில் மாத்தி <12+12 பாலியல் விருப்பம்>னு இந்த தொடர் போயிக்கிட்டிருக்கு.

இந்த செனேரியோல 12 விதமான லைஃப் பிக்சர்ஸ் கொடுத்து அதுல பாசிட்டிவ் நெகட்டிவ் காட்டி பரிகாரம் சொல்லலாம்னு ப்ளான் பண்ணோம். இடையில பரிகாரம் இல்லாம வெறுமனே ச்சூ காட்டிட்டு போறாப்ல இருக்கோன்னு ஒரு கில்ட்டி. அதனால படக்குனு பரிகாரத்துக்கு தாவிட்டம்.

இதுல மொதல் பிக்சருக்கு விளக்கம் - பரிகாரம்லாம் நேத்து கொடுத்தம். இன்னைக்கு செகண்ட் பிக்சருக்கு போயிரலாம்.

இங்கன வாயை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கிடனும். யாகாவாராயினும் நா காக்கன்னு வள்ளுவர் சொன்னாரு. இதுல டபுள் மீனிங் இருக்கு. ஒன்னு ருசிக்காக வவுத்தை செப்டிக் டாங்கா மாத்திராதிங்க. இன்னொன்னு தேவையில்லாம வாயை கொடுத்து பைல்ஸ் வரவச்சுக்காதிங்க.

சிலர் பேசுவாய்ங்க. எப்டி இருக்கும் தெரீமா அப்டியே மடியில "தாச்சுக்க "சொல்லி தாலாட்டு பாடறாப்லயே இருக்கும். வவுத்துல இருக்கிற புள்ளை அப்டியே நழுவி வெளிய வந்துரும். உபமான உபமேயம்,பழமொழி, தத்துவம் இப்படி ஒன்னு விடாம உபயோகிச்சு அவ்ளோ சூப்பரா பேசுவாய்ங்க. எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டு "யப்பா.. மூக்குப்பொடி"க்கு ஒரு ரெண்டு ரூபா கொடேம்பாய்ங்க.

நம்மாளு ஒருத்தன் இருக்கான். ஏரியால ஆல் இண்டியோ ரேடியோ மாதிரி. செய்திகள் வாசிப்பதுன்னுட்டு ஆரம்பிக்க மாட்டான் அதான் வித்யாசம். "தகவல் வெள்ளம் "அப்டியே பாயும்.. கொய்யால அதுல முக்காவாசி "கிசு கிசு" ரேஞ்சுல தான் இருக்கும்.

தன்னை பத்தி அதி வீர பயங்கரமா பீத்திக்குவான். பிரச்சினைன்னு வந்தா மட்டும் ஆளு காயப் (மாயமா மறைஞ்சுருவான்) அப்படி மறைய நேரமில்லாம புக் ஆயிட்டா ஒன் பாத்ரூம் டூ பாத்ரூம் எல்லாம் சகஜம்.

நாட்ல உள்ள ரவுடிக்கெல்லாம் தானே கேர் ஆஃப் மாதிரி பீலா விடுவான்.ஒரு ஹோம் கார்ட் இவன் கிட்டே நின்னு பேசிட்டா டி.ஐ.ஜி கிட்டயே பேசிட்டாப்ல அலைப்பறை .

இந்த பராக்ரமங்களை சொல்றச்ச ஹை டெசிபல்ஸ் வேற. நாம தான் லைஃப்ல அடிப்பட்டு உதைப்பட்டு கிடக்கமே. எவனாச்சும் "சுமாரா பேசினாலே" அலார்ட் ஆயிருவம் (வைக்கப்போறாண்டா ஆப்புன்னுட்டு) இந்த பிக்காலிக்கிட்ட மாட்டுவமா என்ன?

டாப் சீக்ரெட்:
அப்படியும் அய்யோ பாவம்னுட்டு ரூ.3000 கடனா கொடுத்துட்டு அதை வசூலிக்க பெரிய பெரிய சதி திட்டம்லாம் தீட்ட வேண்டி வந்துருச்சு .அது வேற கதை.

இந்த கேரக்டரை பத்தி முழுக்க சொல்லனும்னா வடிவேலுவை போட்டு ஒரு படமே எடுத்தாகனும். அடடா முக்கியமான மேட்டரை விட்டுட்டமே. கில்மா மேட்டரு.

என்னவோ ஊரு உலகத்துல உள்ள பொம்பளை எல்லாம் தூக்கிக்கிட்டு நிக்கிறாப்லயும் ( வண்டியில ஏற கொசுவத்தை சொன்னேங்ணா) இவரு பெரிய மதன காமராசன் போலவும் ஏகத்துக்கு பில்டாப் பண்ணுவான்.

ஒரு தாட்டி ஒரு ஆசாமி ஒரு கில்மா பார்ட்டிய சொல்லி பிக் அப் பண்ணிக்கிட்டு போயிருக்காரு. நம்மாளு போனான் . வந்துட்டான்.

அதுக்கு அந்த ஆசாமி கேட்ட கேள்வி " கொய்யால வாய்ல போட்ட பாக்கு கூட மசியலை .அதுக்குள்ள வந்துட்ட .. என்ன சொம்மா பார்த்துட்டு வந்துட்டயா"

ஃபேஸ் டு ஃபேஸோட நின்னிருந்தா பரவால்லை. ஃப்ரீ டெலிகாஸ்ட் -ஃப்ரீ ப்ராட்காஸ்ட் வேற பண்ணிட்டாரு அந்த ஆசாமி.

இன்னைக்கும் இந்த கேரக்டர் வெறும் வாய வச்சுக்கிட்டு இன்னம் மேனேஜ் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கு.

ஆனால் குட்வில்? அது அதலபாதாளத்துக்கு வந்துருச்சு. கூட்டம் குறைஞ்சு போச்சு. எவனும் சீந்தறதில்லை. அக்கா மகளை தான் கட்டியிருக்கான். அக்காவும் - அக்கா மகளும் உட்கார்ரான்னா உட்காரனும் எந்திரிடான்னா எந்திரிக்கனும் இது நிலைமை.

ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம் - பிச்சுப்பார்த்தா ஈறும் பேனுமாம் கதைதான். ஓசியில தின்னு தின்னு அல்சர் வந்துருச்சு. ஓசியில குடிச்சு குடிச்சு லிவர் வீங்கிருச்சுன்னா கிட்னி போச்சுன்னா பொஞ்சாதி தெருத்திண்ணையில கொண்டு வந்து போட்டுருவா.

இம்மாம் பெரிய உபகதையை இங்கன கொண்டு வந்தது எதுக்குன்னா உங்க மைண்ட்ல ஒரு பிக்சர் வரனும்னு தேன். வெறுமனே பேச்சுல கலர் கொடுக்கிறது ,பீலா விடறது மட்டுமில்லை. அலங்காரமா எழுதறது -பேசறதுல்லாம் கூட இதே கேட்டகிரிதான்.

வெறும் பேச்சுங்கறது எம்ப்டி ஸ்பூன் மாதிரி . எம்ப்டி ஸ்பூனை கொண்டு வவுத்தை நிரப்ப முடியுமா என்ன? வாத்தியார் கூட "கத்தி வச்சுக்கங்க" "போஸ்ட் கார்ட் விலையை குறைப்பேன்" "மானில சுயாட்சிக்காக ராணுவத்தை சந்திப்பேன்"ன்னு பாம்பு விட்டாரு .

அவருது இன்னா மேரி கேரக்டரு. அதுல இந்த பேச்சு எவ்ளோ கலீஜா இருக்குது பாருங்க.காமராஜர் "பார்க்கலாம்ணே"னுட்டா மேட்டர் க்ளோஸ். . மன்சன்னா அப்டி இருக்கோணம். முரசொலியில கலைஞர் பக்கம் பக்கமா அள்ளி விடற மாதிரி விட்டா கதை கந்தலாயிரும்.

மீறி அள்ளி விட்டா வாய் கோணிக்கும் - திங்க சோறு கிடைக்காது - குடும்பம் உருப்படாம போயிரும். கண்ணு டப்ஸாயிரும்.

இதுவரை சொன்னது பிக்சர்ல குவார்ட்டருதேன் . அடுத்த குவார்ட்டரு இன்னாடான்னா திங்கறது . இதை பத்தி விவரமா சொல்ல விரும்பலை. நாம ஏற்கெனவே எழுதின வாயும் இன உறுப்பும் பதிவை படிச்சாலே போதும்.

பேச்சு .. ஆன்டி டேட் போட்ட செக் மாதிரி. செயல் தான் கேஷ். ச்சொம்மா ரப்பர் செக்கை விட்டுக்கிட்டிருந்தா லைஃபே ஸ்மாஷாயிரும். இந்த ரெட்டை வேடம் ,கில்ட்டி, தாழ்வு மனப்பான்மை எல்லாம் சேர்ந்து பேட்டரியை ஒரு வழியாக்கிரும். "பாச்சா குட்டியா" உச்சா மட்டும் தேன் போக முடியும்.

நம்ம பேச்சை ஆரும் நம்பமாட்டாய்ங்க. குடும்பத்துல உள்ளவுக கூட " அதும்பாட்டுக்கு எதுனா பினாத்திக்கிட்டு கிடக்கும் .. அந்த ரிமோட்டை எடும்பாய்ங்க" இந்த பிக்சருக்கு என்ன பரிகாரம்னு நாளைக்கு பார்ப்போம்.

Tuesday, June 5, 2012

1-3 பாலியல் விருப்பங்கள் & பரிகாரங்கள்


அண்ணே வணக்கம்ணே !
12+12 பாலியல் விருப்பங்கள் தொடரில் 3 விதமான செனேரியோவை கொடுத்திருந்தம். இந்த செனேரியோக்கள்ள வாழ்ந்துக்கிட்டிருக்கிறவு இன்னா மேரி பரிகாரங்களை செய்துக்கலாம்னு இன்னைக்கு பார்த்துரலாம். நாளையிலருந்து 4 , 5 , 6 ன்னு 12+12 வரை பார்ப்போம்.

மொதல்ல கொடுத்த 3 வகையான செனேரியோல எந்த பிரச்சினையும் இல்லாம வண்டி ஓடிக்கிட்டிருந்தா அவிக எந்த பரிகாரமும் செய்ய தேவையில்லை. பிரச்சினை உள்ளவுக மட்டும் பரிகாரம் செய்தே ஆகனும்.
இத்தீனி நாள் நம்ம ப்ளாகை/சைட்டை ஃபாலோ பண்ணாதவுக வசதிக்காக மேற்படி 3 செனேரியோவை இங்கே மறுபடி தரேன்.

1.சுகமான கற்பனைகள் - நல்ல ரசனை - கலைகள்ள ஈடுபாடு -பெண்களுடன் இரண்டற கலக்கும் மென்மை/பெண்மை உ.ம் ரெசிப்பி பத்தி கூட டிஸ்கஸ் பண்ணுவாய்ங்க. டிப்ஸ் கொடுப்பாய்ங்க. இவிகளை பொருத்தவரை வீடு,வாகனம்லாம் அனுபோகத்துல இருக்கும். (சொந்தம்னு அடிச்சு சொல்லவரலை -எவனுதோ இவிக தங்களோடதை போல அனுபவிக்கறாபல் ஒரு அமைப்பு.

பிரச்சினை:
கற்பனைக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் இடைவெளி கியாரண்டி இதை சீரணிச்சுக்கிட்டா நோ ப்ராப்ஸ் இல்லின்னா பிரச்சினைதேன்.

பரிகாரம்:

1.சாயந்திரம் போடப்போற பதிவை பத்தி காலையில ரோசிச்சா புண்ணியம் உண்டு. அட்லீஸ்ட் வேலை கிடைச்சு,அது பர்மனன்டாகி , தரகர் கிட்டே ஜாதகம் கொடுத்துட்டு வந்து பொஞ்சாதிய பத்தி கற்பனை பண்ணா புண்ணியம் உண்டு. அதை விட்டுட்டு "ஆலு லேது ச்சூலு லேது கொடுக்கு பேரு சோமலிங்கம்"னுட்டு கற்பனை குதிரையை விரட்டக்கூடாது. ( ஆலு=மனைவி ; ச்சூலு = கர்பம் ; கொடுக்கு =மகன் ) பொஞ்சாதியும் இல்லை -அவள் கர்பமாவும் இல்லை. பிள்ளை பேரு சோமலிங்கம்னு கற்பனை பண்றது வீண் தானே.

முதலிரவு அறைக்குள்ள நுழையறதுக்கு முந்தி கற்பனை செய்தா விந்தும் முந்தும் ( சூப்பர் எதுகை மோனைப்பா) அப்பாறம் இல்லாத பொல்லாத இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ். இழந்த சக்தி வைத்தியர்கள் இதெல்லாம் தேவையா?

கற்பனைக்கு கர்த்தா நாம. அதனால கற்பனை பழைய தமிழ்படம் மாதிரி ஸ்மூத் கோயிங்கா இருக்கும். ஆனால் லைஃப் ? இதுக்கு கர்த்தா நம்ம கருமம். டப்பிங் தெலுங்கு படம் மாதிரி கத்தி,குத்து,ரத்தம்லாம் இருக்கும்.

நல்லதை நினைக்கும் போதே கெட்டதையும் நினைச்சு பாலன்ஸ் பண்ணிக்கிரனும். அதுலயும் இந்த கில்மா மேட்டர்ல அசலான வேலைய செய்ய வேண்டியது வேற டிப்பார்ட்மென்ட். கற்பனைக்கு கேந்திரம் மூளை.

காமம் தலைக்கேறின்னு சொல்வாய்ங்க. அப்படி ஏறிட்டா "கிளிச்சுரலாம்"ங்கற மாதிரி ஒரு ஐடியா வரும். மேட்டர் இன்னாடான்னா காமம் தலைக்கு ஏறக்கூடாது. ( ஐ மீன் அது குறித்த எண்ணங்கள் ,கற்பனைகள்) அப்டி ஏறிருச்சுன்னா பெர்ஃபார்மென்ஸ்ல பல்பு வாங்கிர வேண்டியதுதான்.

இந்த பாய்ண்டையெல்லாம் நோட் பண்ணிக்கிட்டு அடக்கி வாசிக்கனும். கற்பனைய தூண்டக்கூடிய உப்பு,காரம்,புளிப்பு, தனிமை , மசாலா ,ஸ்வீட்ஸ், ஸ்ன்ட், நொறுக்கு தீனி ,பட்டை ,லவங்கம் முதற்கொண்டு நம்ம சைட்டு உட்பட எல்லாத்தையும் தவிர்க்கனும்.

லைஃப் ஸ்டைலை மாத்திக்கிடனும். கடுமையான் உடல் உழைப்பு , ஆழ்ந்த தூக்கத்தை தரும். ஆழ்ந்த தூக்கத்துல கனவு வராது.

பாடியில ஜெனரேட் ஆகக்கூடிய எனர்ஜியை எங்கேஜ் பண்ணிரனும்.உபரியா உள்ள எனர்ஜி நிச்சயமா செக்ஸ் பவராத்தான் வெளிப்படும். இந்த புரிதல் தான் முழு முதல் பரிகாரம்.

நல்ல ரசனை - கலைகள்ள ஈடுபாடு :

ரசனைன்னு சிம்பிளா ஒரே ஒரு வார்த்தை.ஆனால் வாழ்க்கைக்கான அருத்தமே இதுல அடங்கிருது. ரசனை இல்லாதவன் மன்ச ஜன்மமே கிடையாது.

நம்ம ஃப்ரெண்டு ஒருத்தரு கீறாரு . நல்ல உயர்தர சைவ உணவகத்துக்குத்தான் போவாரு. இட்லி தோசை இத்யாதிக்கு என்னெல்லாம் சைட் டிஷ் இருக்கோ எல்லாத்தையும் கேட்டு வாங்குவாரு. ரெண்டு மூனு வாய் தனித்தனியா தொட்டு சாப்பிடுவாரு. அப்பாறம் என்ன பண்ணுவாருன்னா எல்லா சைட் டிஷ்ஷையும் ப்ளேட்ல கவுத்து பிசைஞ்சு ( சாரி .. ரெம்ப குமட்டுதோ?)

ஒரு செருப்பு வாங்க நூறு ஜோடியையாவது பார்த்துருவாரு. ஐ நூறு,ஆயிரத்துக்கு குறைச்சு எடுக்கவே மாட்டாரு, வயசு 55 இதுவரைக்கு கண்ணாலமாகல்லை.

இன்னொரு ஃப்ரெண்டு . 1987 ல திடீர்னு அப்பா செத்துப்போக 007 ஜீ.ஓ படி அவர் வேலைய இவருக்கு கொடுத்தாய்ங்க. அப்பாவோட பாண்ட் சட்டை எல்லாத்தையும் அள்ளிட்டு போயி ஆல்ட்டர் பண்ணி அதையே 3 வருசம் போட்டாரு.

அதையாவது ஒரு ரீஜனா போடுவாரு -களட்டி வைப்பாருன்னா ஊஹூம்.பாண்டோடயே தூங்கிருவாரு. தூங்கி எந்திரிச்சு அப்டியே ஆஃபீஸ் வந்துருவாரு.

மொதல் கல்யாணம் 35 வயசுல நடந்தது. ரெண்டு வருசத்துல பொஞ்சாதி செத்துப்போச்சு. போன வருசம் செகண்ட் மேரேஜ்.

ஒரு அய்யரு வீடு. கோவில்ல பூஜைல்லாம் கூட செய்துக்கிட்டிருந்தாய்ங்க. ஃப்ரீயா வர்ர வேட்டி,துண்டையெல்லாம் கடையில வித்துருவாரு போல. அவர் கட்டியிருக்கிற வேட்டி துண்டை பீத்துணியை கூட வச்சு விளையாடற நாய் குட்டி. கூட சீண்டாது. அம்மாம் அழுக்கு. அவிக வீட்டுக்குள்ள காலை வச்சு எடுக்கிறதுக்குள்ள நம்ம பாதங்களோட அடையாளம் கிருஷ்ண ஜெயந்தி கணக்கா பதிஞ்சுரும். அம்மாம் தூசு.

பிள்ளை குட்டி கிடையாது. வெள்ளையோ வெள்ளையா ஒரு பெண்ணை தத்து எடுத்து வளர்த்தாய்ங்க. அதுவும் கண்ணாலம் கட்டிக்கிட்டு பூட்ச்சி. திரும்பி பார்க்கலை. அய்யரும் போய் சேர்ந்துட்டாரு. அய்யரம்மா தனிமரமா நிக்காய்ங்க.

இதையெல்லாம் படிச்சுட்டு ஓஹோ.. ரசனையோட வாழ்ந்தாதான் கண்ணாலம்,கில்மா, பிள்ளை குட்டில்லாம் அமையுமோன்னு ஒரு முடிவுக்கு வந்துராதிங்க.

இதே ரசனை ஓவரா போனாலும் சுக்கிர பலம்லாம் அதுக்கே செலவாகி கண்ணாலம்,கில்மால்லாம் கானல் நீரா போயிரும். சாக்கிரதை .

வசதியான வீடு இருக்கு. ஏஜ் பார் ஆயிட்டே இருக்கு. கண்ணாலம் அமையலியா? ஒரு பத்து ரூபா ஸ்டாம்ப் பேப்பர் வாங்கி உங்க வீட்டை லட்சுமிக்கு எழுதிவச்சுர்ரதாவும் வாழ் நாள் முழுக்க பிரதி மாதம் 1 முதல் 5 ஆம் தேதிக்குள்ள ரூ.108 லோக்கல் பெருமாள் கோவில் உண்டியில செலுத்திர்ரதாவும் கமிட் பண்ணிக்கங்க.

இதுல நீங்க ரூ.108 போடறது ஸ்தூலமான சமாசாரம் இது முக்கியம் கிடையாது. வாடகை வீட்ல இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங் உங்க மனசுல இருக்கனும். அதான் முக்கியம். வாகன மேட்டர்லயும் இதே ஃபார்முலாவ யூஸ் பண்ணுங்க.

படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்களை அவாய்ட் பண்ணிருங்க. சீக்கிரமே தூங்கப்போயி விடியல் 4 அ 4.30 க்கெல்லாம் எந்திரிச்சுருங்க. நடனம், சங்கீதம் மாதிரி ப்ரோக்ராம்ஸுக்கு காசு கொடுத்து டிக்கெட் வாங்கி போய் பாருங்க

தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறாக்களை நீங்க அவாய்ட் பண்ணுங்க. ஃப்ரெண்ட்ஸ் கேட்டா வாங்கி கொடுங்க.

ஏசி இருந்தா அதை அப்பப்போ ஆஃப் பண்ணிருங்க. பயணம்னு கிளம்பினா ஸ்லீப்பர், சூப்பர் டீலக்ஸ் இத்யாதியை அவாய்ட் பண்ணுங்க.

வீட்டுக்கு தென்கிழக்குத்திசையில பள்ளம், வீட்டுல உபயோகிக்கிற தண்ணீர் வெளிய போறது இத்யாதி இருந்தா மாத்துங்க.

நட்பு ,உறவு வட்டத்தில் விசேஷங்களுக்கு வெள்ளிச்சாமான்களை ப்ரசன்ட் பண்ணுங்க. நீங்க பெண்ணா இருக்கும் பட்சத்துல ப்யூட்டிபார்லரை கட்டாயம் அவாய்ட் பண்ணுங்க.

குறிப்பு: 3 செனேரியோவுக்கும் பரிகாரம் கொடுத்துரலாம்னு பார்த்தேன். ஊஹூம்.. வேலைக்காகலை . நாளைக்கு பார்ப்போம்.

சீ யு..

Sunday, March 4, 2012

ஜாதகம் எப்டி இருந்தாலும் ஆண்மை இழப்பு


அண்ணே வணக்கம்ணே !
இதென்னடா டகுலா கீதுன்னு பேஜாராயிராதிங்க. அல்லா வீட்லயும் ப்ராண்டட் ஆட்டா தான் வாங்கறாய்ங்க. ஆனால் அல்லார் வீட்லயும் சப்பாத்தி ஒரே மாதிரியாவா கீது. நீங்க உபயோகிக்கிற எண்ணெய், ஸ்டவ், வைக்கிற ஃப்ளேம் , போடற உப்பு,அதனோட அளவு இப்படி எத்தனையோ சமாசாரம் சப்பாத்திய சப்பையாக்கிருது. அதை போலவே தான் ஜாதகமும். எந்த ஜாதகத்துல பிறந்தாலும் ஆண்மை இழப்புக்கு வழி இருக்கு.

ஒரு காலேஜ் குட்டிகளுக்கு ஒரு குட்டி பதம்ங்கறாப்ல லக்னாதிபதியோட நிலையை மட்டும் இன்னைக்கு பார்ப்போம்.

1-1
லக்னாதிபதி லக்னத்துலயே இருந்தா../ உச்சம் பெற்றால்:

மன்சனுக்கு சுப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்துரும். தாளி "அஞ்சு மினட்டுக்காக" என்ன இவளுகளை கெஞ்சிக்கிறதுன்னு ஹோமோவா மாறலாம்/ சுய இன்பத்துக்கு அடிமையாகலாம்.

1-2
லக்னாதிபதி ரெண்டுல இருந்தா வெறுமனே பேசியே ஓய்ஞ்சு போயிரலாம்

1-3
லக்னாதிபதி 3 ல இருந்தா ப்ரதர்ஸ் /சிஸ்டர்ஸுக்கு அதிக முக்கியத்வம் கொடுத்து அவிகளை பிரியனுமேங்கறதுக்காவ திருமணத்தை தள்ளி போடலாம். பருவத்தே பயிர் செய்யாத காரணத்தால ஆண்மை இழப்பு ஏற்படலாம்.

1-4
லக்னாதிபதி 4 ல இருந்தால் பலான பரீட்சையில செயிச்ச பிற்காடுதேன் கண்ணாலம்/ டாக்டர் பட்டம் வாங்கினபிறவுதேன் கில்மான்னு திருமணத்தை தள்ளி போடலாம். அம்மா மேல அதீத பாசம் வச்சு வர்ரவ கொடுமை பண்ணா என்ன பண்றதுன்னு தள்ளி போடலாம்.

கச்சாமுச்சான்னு வாகனசுகத்தை அனுபவிக்கலாம்/ கண்ணாலத்துக்கு மிந்தியே ஊடு கட்டி கடனாளி ஆகி கடனை நினைச்சு நினைச்சே ஆண்மை இழப்புக்கு ஆளாகலாம்.

வாகன சுகத்தால இல்லற சுகம் எப்டி பாதிக்கப்படும்?

மனித உடலின் சராசரி உஷ்ண நிலை 98.4 டிகிரி. இதுல உயிரணு உயிர் வாழமுடியாதுனுதான் இயற்கை விதைகள் உடலுக்கு வெளிய விட்டிருக்கு.பாடி டெம்பரேச்சர் அதிகமா இருக்கிறப்ப இன்னம் கொஞ்சம் கீழே இறங்கி சூட்டை குறைக்கற ஏற்பாடும் இருக்குது.

ஆண்கள் 24 மணி நேரம் டென்டெக்ஸ் போட்டு/ஜீன் போட்டு விதைகளை அழுத்தி வைக்கிறதால விந்துல உயரணுக்களோட கவுண்ட் குறைஞ்சி போயிருது. இதுல தாளி விழிச்சிருக்கிற நேரம்லாம் வண்டி வாகனத்துல சுத்திக்கிட்டிருந்தா என்ன ஆகும்? இதான் கணக்கு.

1-5
லக்னாதிபதி அஞ்சுல இருந்தா சதா சர்வ காலம் தன்னை பற்றியே யோசிச்சுக்கிட்டு கனவுலகுல சஞ்சாரம். ஆகாய கோட்டை கட்டிக்கிட்டு அதுலயே வாசம். இப்டி இருந்தா என்ன ஆகும்? இவரோட உலகமே வேறயா இருக்கும்.

இங்கன யதார்த்தமா உள்ள உலகம் இவிகளை நெக்லெக்ட் பண்ணிரும். கண்ணாலமாவது கருமாதியாவது.மூச்.

1-6
லக்னாதிபதி 6 லருந்தா கோர்ட்டு,போலீஸ் ஸ்டேஷன், ஆஸ்பத்திரின்னு அலையவே நேரம் சரியா பூடும். அந்த சூழல்ல கூட சிலர் "கற்பழிப்பு/கில்மான்னு" போறாய்ங்கன்னா அவிகல்லாம் தெய்வங்க.

1-7
லக்னாதிபதி 7 லருந்தா சதா சர்வ காலம் தன் மனைவி/அவளுடனான கில்மா பற்றியே யோசிச்சுக்கிட்டு கிடப்பாய்ங்க.

இப்படி கீறவனை பொஞ்சாதியே " வேலை வெட்டி எதுனா இருந்தா பாரு - நாலு இடம் சுத்திட்டு வா.. வெறுப்பா கீது"ன்னிருவா.

கண்ணாலத்துக்கு மிந்தி கனவுகள் அதிகமா இருக்கிறதால யதார்த்தம் என்னதான் பாசிட்டிவா அமைஞ்சாலும் கனவை போல இருக்காதே.

1-8

லக்னாதிபதி எட்டுல இருந்தா என்னாகும்? லக்னாதிபதின்னா ஜாதகர். எட்டாமிடம்னா இன உறுப்பு. கூட்டி களிச்சு பாருங்க . ரெண்டு பக்கமும் ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தி மாதிரி சக்தி விரயம் பண்ணி அசலான நேரத்துல இழந்த சக்தி வைத்தியர்களை தேடி ஓடவேண்டி வந்துரும். மேலும் எட்டுன்னா மரணம். ஜாதகர் முகத்துல பிணக்களை வரனும். அதுக்கு அவர் பல தாட்டி சாகனும். சாக தில்லில்லாதவுக சரணடையறது செக்ஸ்ல தானே.

(லக்னாதிபதி மத்த பாவங்கள்ள இருந்தா ஆண்மை இழப்பு /திருமண தாமதம் எப்டி ஏற்படும்.அதுக்கு என்ன ரெமிடின்னு அடுத்த பதிவுல பார்ப்போம்)

உடுங்க ஜூட்

Monday, January 2, 2012

புத்தாண்டில் பிரபலங்கள்: விஜய்காந்த்

எச்சரிக்கை:1
புத்தாண்டு புத்தாண்டுன்னு பீத்திக்கறோமே தவிர புத்தாண்டுங்கறதே ஒரு மாயா. ஜனவரி 15 க்காச்சும் சூரியன் மாறுவாரு. ஜனவரி 1 ஆம் தேதி அந்த இழவும் கடியாது. குரு வக்ர நிவர்த்தியும் டிசம்பர் 25 ஆம் தேதியே நடந்துருச்சு. செவ் வக்ர சஞ்சாரம் கூட ஜனவரி 23 ஆம் தேதிதான் துவங்குது.சனி கூட டிசம்பர்லயே மாறிட்டாரு .ஞா இருக்குல்ல. குரு 2012 மே மாசம் தேன் மேசம் டு ரிசபம் ஷிஃப்ட் ஆறாரு

சொந்த ஜாதகத்துல தசாபுக்தியில ஏதேனும் மாற்றம் வந்தாலே தவிர, வருடக்கோள்கள் எதுனா மாறினாலே தவிர புத்தாண்டுக்கு ஒரு மண்ணும் மாறாதுன்னு தெரிஞ்சுக்கங்க.

இருந்தாலும் வெளிய சொல்ல முடியாத சில காரணங்களால புத்தாண்டில் பிரபலங்கள்னுட்டு வி.ஐபிகளோட ஜாதகங்களை வரிசையா அலச முடிவு பண்ணியிருக்கேன். (ச்சொம்மா ரிவிஷன் மாதிரி வச்சுக்குவம். இப்படி ரிவிஷன் பண்ணாத காரணத்தாலதேன் எங்க ஒய்.எஸ்.ஆர் வெற்றிய கணிச்ச நம்மால அவரோட மரணத்தை கெஸ் பண்ண முடியாம போயிருச்சு. அதேன் ஒரு எச்சரிக்கைக்கு இந்த ரிவிசன்.

இருக்கிறதெல்லாம் இருக்கட்டும் கிழவியை தூக்கி மனையில வைங்கற மாதிரி விஜய்காந்த் ஜாதகத்துக்கு ஏன் இந்த ப்ரியாரிட்டின்னு கேப்பிக. என்னதான் பக்கத்து மானிலத்துல வாழ்ந்தாலும் தமிழன்னு ஒரு உணர்வும் - தமிழ் சனம் தேன் வாழ வைக்கிறாய்ங்கங்கற விஸ்வாசமும் இருக்கு.

கொண்டவன் கோலால் அடித்தால் கண்டவன் காலால் உதைப்பாங்கற மாதிரி தமிழன் நிலை ஆயிருச்சு. இதை தட்டிக்கேட்க வை.கோ இருந்தாலும் அவரு ஆர்ட் ஃபிலிம் மாதிரி. தாத்தாவுக்கு கனிமொழியோட எதிர்காலத்தை கனிய வைக்கிறதை விட்டா வேற சிந்தனையே கடியாது. அம்மா பாவம் நம்பினவுக வச்ச ஆப்பை பிடுங்கியெறியதுல பிசி.

மன்மோகனார் சென்னை விசிட் அடிச்சப்ப கொஞ்சம் சினிமாட்டிக்கா இருந்தாலும் நெத்தியடியா ,"ப்ளான் பண்ணி" கருப்பு கொடி காட்டி நம்ம எதிர்ப்பையெல்லாம் பதிவு செஞ்சாரு. அம்மா அடிச்சா மாமா கிட்டே ஓடறாப்ல அம்மா அடாவடி அடிச்சா அதை தட்டிக்கேட்கற விஜய்காந்த் கிட்டே தான் ஓடியாகனும்.

மாமாவோட ஜாதகத்துல விசயமே இல்லேன்னு ஏற்கெனவே டிசைட் பண்ணியிருக்கம். இருந்தாலும் இந்த சைக்கிள் கேப்ல எதுனா மாற்றம் வந்திருக்கான்னு பார்த்துரலாமே..

எச்சரிக்கை: 2
நூலை போல சேலைம்பாய்ங்க. அப்படி பர்த் டீட்டெயில்ஸை வச்சுத்தேன் ஜாதகம். ஏதோ நம்மாளு ஒருத்தரு கும்ப லக்னம்னு கொடுத்த க்ளூவை வச்சு ஒரு ஜாதகம் கணிச்சு அதனோட அடிப்படையில போடற பதிவு இது.

இருந்தாலும் நம்ம ஸ்டைல்ல அனுபவத்தையும் - கிரகஸ்திதியையும் மொதல்ல க்ராஸ் செக் பண்ணிருவம். ஐ மீன் இந்த ஜாதகத்துல விசயகாந்த் தெரியறாரா பார்த்துருவம்.

லக்னாதிபதியே எட்டுல கீறாரு ( இதுக்கு எங்க ஊரு சோசியர் கொடுத்த பலன் என்ன தெரியுமா தானும் கெட்டு, தன்னை நம்பினவுகளையும் கெடுத்து ஊரையும் கெடுத்துரும்) .

ஆனால் கும்ப லக்னத்தை பொருத்தவரை சனி விரயாதிபதியாவும் இருக்காரு. அதனால விரயாதிபதி 12 ல் மறைந்த யோகமும் வேலை செய்யனும் .

அனுபவத்தில் பார்க்கும் போது இப்படி ஒரே கிரகத்துக்கு ரெண்டுவித ஆதிபத்யம் ஏற்படும் போது அது முதல் பாதியில் (ஆயுளில்/ தன் தசையில்) தீமையையும் அடுத்த பாதியில் நன்மையையும் செய்கிறது.
இதற்கு ஜாதகரின் ஆயுள் எவ்வளவு என்று பார்க்க வேண்டும். நான் ஆயுர்தாயம் செய்வதில்லை. பின்னே எப்படிங்கறிங்களா? எந்த வயசுல ஜாதகருக்கு கால் ,நரம்பு,ஆசனம் சம்பந்த பட்ட பிரச்சினை உச்சக்கட்டத்துக்கு போகுதோ அங்கருந்து அந்த வயசைப்போல இரண்டு மடங்கு வாழ்வாரு. வாழ்க்கையின் ரெண்டாவது பாகம் ஆரம்பிக்கும். அந்த ரெண்டாவது பாகம் ராஜயோகத்தை தரும்.

2/11 க்கு அதிபதி போய் 3 ல மாட்டினாரு. ரிஸ்க் எல்லாம் ரஸ்கு சாப்ட மாதிரின்னுட்டு சம்பாதிச்ச காசையெல்லாம் செல்ஃப் ஷேவ் பண்ணி தொலைச்சுக்கட்டிருவாருங்கோ. ( கூடவே குளிகன் மாந்தியும் இருக்காய்ங்க - அப்போ நிலைமை எவ்ள தீவிரமா இருக்கும்னு பாருங்க )

5/8 க்கு அதிபதியான புதன் போய் ஆறுல நின்னாரு கூட கேது சேர்ந்தாரு. அஞ்சுதான் நேம் அண்ட் ஃபேமை,வாரிசுகளை, அதிர்ஷ்டத்தை காட்டற இடம் . இவருக்கு பேருனு வந்தா " மொத்தறதாலயோ" "ரேங்கறதாலயோ தான்" வரும்.

எலக்சன் டைம்ல மொத்தினாரு .பேரு வந்தது. இப்பம் மன்மோகனார் மேல ரெங்கினாரு பேரு வந்தது. இவரோட சிந்தனையே நெகட்டிவா இருக்கும். ஆரை ரேங்கலாம்ங்கற மாதிரி. இவரை பொருத்தவரை இவரோட வாழ்க்கையே இவர் கட்டின கல்யாண மண்டபம் மாதிரிதான். நல்லாவே இருக்கும். ஆனா இருக்காது. படக்குனு புல்டோசர் வந்து குப்பையாக்கிட்டு போயிரும்.(ஜெவுடனான கூட்டணியும் இப்படித்தானே ஆச்சு) இதே பலன் தான் இவரோட வாரிசுகளுக்கும்.( பார்த்திருக்கிங்கல்ல. சினிமா பக்கம் வந்தா நாறிரும்)

இந்த கெட்டதுல ஒரு நல்லது இருக்கு. அது என்னடான்னா அஷ்டமாதிபத்யம் வாங்கின புதன் 6 ல நின்னது. இதனால கடன் தீரனும் அல்லது எதிரி ஒழியனும். கடன் தீரலை.ஆனால் எதிரிங்க ஒழிஞ்சுட்டாய்ங்க ( வடிவேலு ,ராமதாசு,கலைஞரு)

இப்பம் நடக்கிற தசையே புத தசை தான் . இதனோட பலன் என்ன? கடன் தீரனும் அல்லது எதிரி ஒழியனும். எதிரி ஒழியனும்னு நினைச்சா கடன் தீராது. கடன் தீரனும்னு நினைச்சா எதிரி ஒழியமாட்டான்.

ஏழாவது இடத்தை பாருங்க. இங்கன சுக்கிரன் நின்னாரு. 7 ல சுக்கிரன் நின்னாலே நாஸ்தி. இதுல அவரு சூரியனோட வேற சேர்ந்திருக்காரு. மனைவியால யோகம்னு சொல்றது தவறு. 7 ல சுக்கிரன் நிக்கிறது ஜாதகரை போலவே அவரோட மனைவிக்கும் நல்லதில்லை. கூட சூரியன் சேர்ந்தது அதைவிட மொக்கை. சுக்கிரனை எரிக்கப்பட்டுட்டாரு. மனைவி பெண்களுக்கே உரிய மென்மை தன்மையை இழந்து மேன்லியா மாறிட்டு வருவாய்ங்க.

அடுத்துபாருங்க பாக்ய பாவத்துல சந்திரன் நிக்காரு. ஒரு ஜாதகனோட நீண்ட கால திட்டங்களை எல்லாம் காட்டறது 9 ஆமிடம் . அங்கே ரெண்டே கால் நாளைக்கொரு தாட்டி ராசி மாறிர்ர சந்திரன் நிக்கிறாரு. இவரோட ப்ளான் ரெண்டே கால் நாளைக்கொருதாட்டி கம்ப்ளீட்டா மாறிரும். ஒரு ரெண்டே கால் வருசம் ஏறுமுகம்னா அடுத்த ரெண்டேகால்லயே இறங்கு முகம் ஆரம்பமாயிரும்.

மேலும் சந்திரனுக்கு ரோகாதிபத்யம் வேற கிடைச்சிருக்கு. இதனால எதிரி நண்பனாதல் - நண்பன் எதிரியாதல் எல்லாம் இவர் லைஃப்ல சகஜமப்பா. சசி அண்ட் கோ அம்மாவுக்கு ஆப்படிச்சா அந்த சமயம் பார்த்து அம்மாவுக்கு கை கொடுத்தாலும் நான் ஆச்சரிய படமாட்டேன். அட கட்சியை கலைச்சுட்டு அம்மா கட்சியில ஐக்கியமாயிட்டா கூட ஆச்சரியப்படமாட்டேன்னா பார்த்துக்கங்களேன்.( அப்பம் டூ இன் ஒன்னா கடனும் தீரும் - எதிரிகளும் ஒழிவாய்ங்க -ஐ மீன் எதிரி நட்பாயிருவாருன்னு சொல்றேன்)

சிரஞ்சீவியாச்சும் பரவால்லை . நாய் பிடிக்கிற வண்டிய முனிசிபாலிட்டில நிறுத்தின மாதிரி நிறுத்தினாரு. நம்மாளு அதுகூட செய்யமாட்டாரு. பாதிவழில இறக்கி "வண்டி இதுக்கு மேல போகாதுன்னிருவாரு"

பத்துல செவ்வாய் நிற்கிறார். இவர் 3,10 க்கு அதிபதி. 3 ன்னா தைரியம் , பத்துன்னா தொழில் . பேசாம போலீஸ் வேஷம், மிலிட்டரி வேஷம் போட்டுக்கிட்டு காலத்தை கழிச்சிருக்கலாம். அந்த சான்ஸும் போச்சு.

ராசிப்படி பார்த்தா ஏழரை ஆரம்பம். அடுத்து வரப்போறது ஜன்ம சனி. இதன் காரணமாக நிறைய அலையனும் ,சட்டை போடாதவனை கூட அணைச்சுக்கிட்டு பேசனும். இதெல்லாம் பொலிட்டிக்கலா லாபம் தரும்லியா?

சனின்னா தொழிலாளிகள், ஏழைகள்,பிற்படுத்தப்பட்டோர். இவிக ஆதரவு ஓரளவு கிடைக்கலாம் (சனி உச்சமா வர்ரதால ) இவர் 3 ஐ பார்க்கிறதால தகிரியம் கூடலாம். 7 ஐ பார்க்கிறதால கட்சியில பிளவும் வரலாம். மனைவியே எதிரியாகலாம் அ நீச ஸ்த்ரீ ஒருவரால் இம்சை வரலாம். டேக் கேர்

மே 8 வரை குரு 6 ல .ஆக எதிர்கட்சியிலதான் கிடக்கனும். குரு 7 க்கு வந்த பிற்காடு அம்மாவோட ஓரளவு ஒத்துப்போக வாய்ப்பிருக்கு.

மே 16 முதல் ராகு கேது 2/8 ல இருந்துக்கிட்டு சகட்டு மேனிக்கு சீறச்செய்வாய்ங்க தேசீய .பாதுகாப்பு சட்டம் பாயாம பார்த்துக்கனும்.

எதிர்காலம்:
இப்பம் புததசையில சுக்கிர புக்தி தேன் நடக்குது ( 20/Aug/2010 => 20/Jun/2013 ) இந்த காலகட்டத்துல சுக்கிரனோட பலன் மருந்துக்கு கூட நடக்காது. சூரியன் தேன் 7ல இருந்து மனைவிக்கும், லக்னத்தை பார்த்து ஜாதகருக்கும் தூக்கமில்லாம செய்வாரு. கை கால் வலி, முதுகு வலிதான் மிச்சமாகும். வேணம்னா ஒன்னு சொல்லலாம் இவர் மேல மனைவியோட கமாண்ட் அதிகமா இருக்கும். ஆனால் இதனால மனைவிக்கு நோய்கள் தான் வருமே தவிர இவரு திருந்தவும் போறதுல்லை. வருந்தவும் போறதில்லை.

பொஞ்சாதி சொல்லை கேட்டு நடக்கிறதை விட சூரிய ஆதிக்கம் பெற்ற "அம்மா" பேச்சை கேட்டு நடந்தா பொளப்பு நாறாம இருக்கும்.

இதான் நம்ம அனாலிசிஸ். நமக்கு விசயகாந்துக்கும் வரப்பு தகராறு - வாய்க்கா தகராறு ஏதும் கிடையாதுங்கண்ணா. இன்னம் சொல்லப்போனா ரஜினி ரசிகனா இருந்து அவரால ஏமாத்தப்பட்ட
( வருவேன்..ஆனா வரமாட்டேன்)நமக்கு வந்தே உட்ட விசயகாந்த் மேல ஒரு மதிப்பு கூட உண்டுங்கண்ணா.


Thursday, November 17, 2011

ராசியா? லக்னமா?


ஜாதகத்தை அனலைஸ் பண்ணும்போது,தசாபுக்திகளுக்கான பலனை கணிக்கும்போது லக்னத்தையும்,கோசார பலனை கணிக்கும்போது ராசியையும் பேஸ் பண்ணிக்கனுங்கறது அடிப்படை விதி. அதே சமயம் ராசியாதிபதி,லக்னாதிபதி ரெண்டு பேர்ல ஆரு பலம்மா இருக்காய்ங்கனு பார்த்து ஒர்க் அவுட் பண்ணனும்னுல்லாம் நேத்து சொல்லியிருந்தேன்.

ஒரு வேளை ராசியாதிபதி -லக்னாதிபதி ரெண்டு பேரும் பலம்மா இருந்தா ஆரை பேஸ் பண்றதுன்னு சிண்டை பிச்சுக்கனும் -அனுபவத்தை வச்சுத்தேன் டிசைட் பண்ணனும்னு சொல்லியிருந்தேன். இந்த மேட்டர்ல மொத பேஷண்ட் நாமதேன்.

நம்முது கடகலக்னம்,சிம்மராசி. லக்னாதிபதியான சந்திரனும் -ராசியாதிபதியான சூரியனும் பரிவர்த்தனம் அடைஞ்சிருக்காய்ங்களா.. ஒவ்வொரு சனி பெயர்ச்சி,குரு பெயர்ச்சிக்கும் அது அனுகூலமா பிரதிகூலமான்னு சிண்டை பிச்சுக்கறதே வேலை.

ராசிய வச்சு பார்த்தா 3 ல சனி வேலை செய்யனும். லக்னத்தை வச்சுப்பார்த்தா 4 ல சனி வேலை செய்யனும். சமீபத்திய அனுபவங்களை வச்சுப்பார்த்தா ரெண்டுமே வேலை செய்யறது.

3-ல் சனி:

தினத்தந்தியில 2007 ஏப்ரல்ல சேர்ந்ததுலருந்தே வீட்டு நிர்வாகம் மொத்தத்தையும் மகளுக்கு கொடுத்து விட்டாச்சு. அதனால கொஞ்சம் பொளச்சம். தினசரி தாதா மாமூல் கணக்கா காலை 30 மாலை 30 வாங்கி அதை மட்டும் அழிக்கிறது. அப்படியும் ரெண்டு தாட்டி பல்லு கட்டி மொக்கை. இப்பம் 3 ஆவது.

போன மாசம் (2-ல் சனி இருக்கிறச்ச) பொஞ்சாதியும் மகளும் ஏதோ கண்ணாலத்துக்கு போனாய்ங்க.மறு நாள் திரும்பிர்ரதா திட்டம். நமக்குன்னு பாப்பா ரூ.100 வச்சுட்டு போனாள். தாளி எதையாச்சும் உருப்படியா பண்ணா என்னன்னு வண்டியோட சைலன்ஸரை க்ளீன் பண்ண விட்டேன். அந்த பிக்காலி நம்ம தொப்பைய,முகத்துல தேஜஸை பார்த்து பார்ட்டி தாங்கும்டான்னுட்டு ஆயில் மாத்தினேன், ஸ்விட்சை மாத்தினேன்னு ரூ.300 க்கு பில்லை தீட்டி விட்டுட்டான். பல நாளைக்கப்பாறம் கை மாத்து வாங்கி சமாளிக்கவேண்டியதாயிருச்சு.

இதுவே சனிப்பெயர்ச்சிக்கப்பாறம் இதே போல ஒரு சந்தர்ப்பம் வந்தப்ப 400 ரூ வரை சர்ப்லஸ் பட்ஜெட்ல இருந்தம். பரவால்லடா மாப்ளே ராசிக்கு 3 ல சனி வேலை செய்றாருன்னு நிமிர்ந்தம். நம்ம பங்காளி ஜா.ராவுக்கு ஏதோ வேலை கிடைச்சுட்டாப்ல இருக்கு. பாவம் நேரமில்லை போல .வீக் எண்ட்ல மட்டும் கமெண்ட் போடறாரு

4-ல் சனி:
இந்த ஊட்டுக்கு பாடிகைக்கு வந்து 1 வருசமாகுது. வந்த நாளே ஊட்டுக்காரவுகளுக்கு நாம போட்ட கண்டிஷன் தனி மீட்டர் போட்டுரனுங்கறது.ப்ரீச் ஆஃப் அக்ரிமெண்ட். சரி ஒளிஞ்சு போவட்டும்னு நாமளே ரூ.2000 கொடுத்தம் ஏறப்போட்டு போட்டுருன்னுட்டம். இதுவரை ஒரு ம..ரும் நடக்கலை. இன்னைக்கு புதுசா தண்ணி விடமுடியாதுன்னுட்டாய்ங்க ( இதுக்கு அடிஷ்னல் சார்ஜு ரூ.300) .வண்டில சைலன்சர் ரெண்டு தாட்டி க்ராக்.கழட்டி -வெல்ட் பண்ணி மாட்டியிருக்கம். வீடு,வாகனம்லாம் நாலாவது இடம்தானே.

நம்ம ப்ளாகையும் ,சைட்டையும் (விதியில்லாம) பார்க்கிற சோதிடப்புலிகாள்! நீங்களே சொல்லுங்க. நமக்கு சனி 3 ல வேலை பார்க்கிறாரா? 4 ல வேலை பார்க்கிறாரா?

Wednesday, November 16, 2011

எந்த கிரகம் கொல்லும்?


அண்ணே வணக்கம்ணே !
பதிவுலகத்துக்கு வந்து 11 வருசம் ஆகுது ( 200,ஜூலை,31) ஓரளவுக்கு பேர் சொல்ல ஆரம்பிச்சும் பல காலம் ஆகுது ( 2009,மே) ஆனாலும் இந்த மேட்டரை டச் பண்ணவே இல்லை. எதைத்தான் விட்டுவச்சிருக்கம்.அதனால இதையும் இன்னைக்கு தோரஹா பண்ணிருவம்.அதாவது ஜாதகத்தில்
/கோசாரத்தில் எந்த கிரகம் கொல்லும் ,எந்த கிரகம் நன்மையை செய்யும்னு இப்பம் பார்த்துருவம்.

கிரகங்களுக்கு நைசர்கிக சுபத்துவ,பாபத்துவம் / லக்னாத் சுபத்துவ,பாபத்துவம் என்று இரண்டு விதிகள் இருக்கு. இதில் லக்னாத் சுபத்துவ,பாபத்துவ விதியையே அப்ளை செய்ங்க அனுபவத்துல இதான் சரியா வருதுன்னு பல தடவை சொல்லியிருக்கேன். ஏனோ எந்த லக்னத்துக்கு எந்த கிரகம் நன்மை தரும் -தீமை தரும்ங்கற மேட்டருக்குள்ள மட்டும் போகவே இல்லை. அதை இப்ப பார்த்துரலாம்.

அதுக்கு மிந்தி ஒரு விஷயம் லக்னம் முதற்கொண்டு எண்ணும்போது 2,3,7,8,12 ஆம் பாவங்கள் மாரகஸ்தானங்கள்னு சொல்றாய்ங்க. மாரகம்னா தெரியும்ல. மரணம். ஜோதிடப்படி மரணம் -சிறை -அவப்பேர் -ஐ.பி போடறது -அண்டர் கிரவுண்ட் போறது இது எல்லாமே சமம் தான்.

இவை 2,3,7,8,12 பாவ காரகத்வத்தால நடக்க அதிகமான வாய்ப்பிருக்கு.அதனாலதேன் இவற்றை மாரகஸ்தானம்னு சொல்லிவச்சாய்ங்க.

2.தனஸ்தானம்:
சத்யம் ராமலிங்கராஜூவை உள்ளே அனுப்பினது இந்த கொடுக்கல் வாங்கல் மேட்டருதேன். வராத லாபத்தை வந்ததா காட்டி தில்லாலங்கடி பண்ணாரு ஞா இருக்குல்ல.

2 : வாக்குஸ்தானம்:
வை.கோ ,சீமான்லாம் சகட்டு மேனிக்கு பேசித்தானே உள்ளாற போனாய்ங்க

2.குடும்பஸ்தானம்:
கனிமொழியை செயிலுக்கு அனுப்பினது குடும்பம்தானே

3.சகோதர ஸ்தானம்:
நிறைய அரசியல்வாதிங்க தாங்கள் நேரிடையா செய்யமுடியாத மேட்டரையெல்லாம் சகோதரர்களை வச்சு செய்றது ஃபேஷன். அப்பாறம் ஆப்படிச்சுக்கறதும் ரொட்டீன். உ.ம் ஆற்காடு வீராசாமி , ஆந்திராபக்கம் வந்தா எங்க சி.எம் கிரண்

3.தைரிய ஸ்தானம்:
அஞ்சுவதஞ்சுதல் அறிவுடைமைங்கற பஞ்சை மறந்துட்டு "வேணம்னா இந்திராகாந்திக்கு விதவை பென்ஷன் தரோம் வரச்சொல்லுங்க"ன்னுட்டு எமர்ஜென்ஸி காலத்துல பல்பு வாங்கினவுகளை கேளுங்க.விவரமா சொல்வாய்ங்க.

7.களத்ர ஸ்தானம்: (ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப்)
ராஜீவ் கெட்டது நண்பர்களாலே,ஜெ கெடப்போறது நண்பியாலே, என்.டி.ஆர் கெட்டது காதலாலே, கலைஞர் கெட்டது பார்ட்னராலே (கலைஞரும் -எம்.ஜி.ஆரும் எதை எதையோ ஷேர் பண்ணிக்குவாய்ங்களாமே -அப்பம் பார்ட்னர்ஸ்தானே)

8.ஆயுள் பாவம்:
வெல்ல முடியாத‌ ,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌ கூடிய‌ சத்ரு, தீராத‌ ரோகம், தீர்க்கமுடியாத‌ ருணம்(கடன்),சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல்,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம் இதை எல்லாம் காட்டும் இடம் ஆயுள்பாவம். இதுகளால கெட்டவுக மஸ்தா பேரு கீறாய்ங்க. வேணம்னா ஒரு லிஸ்டை நீங்களே ப்ரிப்பேர் பண்ணுங்க.

12.விரயபாவம்:
ஆனமுதலில் அதிகம் செலவானால் பாட்டு தெரியுமா? வரவு எட்டணா செலவு பத்தணா பழமொழி தெரியுமா? ஸ்ரீ தேவி திவாலாகி /கணவரையும் திவாலாக்கின கதை தெரியுமா? ப்யூட்டி பார்லருக்கே கோடிகளை செலவழிச்சாய்ங்களாம். லேட்டஸ்ட் உதாரணம் விஜய் மால்யா.

ஆகவே இந்த பாவங்கள்/பாவாதிபதிகள் கெடுவது,பலகீனப்படுவது நெல்லது பாஸ்.

1.மேஷம்:
சூரியன் ,குரு நன்மை செய்யும் கிரகங்கள்.ஆனால் இவர்களுக்கு சனியோட தொடர்பு ஏற்பட்டால் பல்பு தேன். சூரிய,சனி சேர்க்கை தொடர்பு ஏற்பட்டா கால்ஷிய குறைபாட்டால் வரும் பிரச்சினைகள் வரலாம், மேலும் இது அப்பாவுக்கும் அப்பாவுடனான உறவுக்கும் நல்லதில்லை, குரு சனி சேர்க்கை ஏற்பட்டா வயிறு இதயம் பிரச்சினைய கொடுக்கும்.ஜாதகர் பெரியாரிஸ்டா மாறும் வரை வறுமை தனிமை வாரிசின்மை எல்லாம் வாட்டும்.

சூரிய குரு சேர்க்கை யோகத்தை தரும். 5க்கதிபதியான சூரியன் 9 க்கு அதிபதியான குருவோட சேரும்போது குரு மங்கி போயிருவாரு. அதாவது பல மேட்டர்ல அப்பாவை பீட்பண்ணிருவிங்கன்னு அருத்தம். ( நிபந்தனை: சேர்க்கையில ரெண்டு பேருக்கும் ஓரளவுக்காவது பலம் இருக்கனும் - இந்த சேர்க்கை 6,8,12 போன்ற துஸ்தானங்களில் ஏற்பட்டிருக்கக்கூடாது)

புதன்,சுக்கிரன்,சனி பாபிகள். சனி ,புதன் மாரகர்கள். ரெண்டாம் பாவாதிபதியானாலும் சுக்கிரன் டிக்கெட் போடமாட்டாரு. சனி புதன் போட்டுருவாய்ங்க. இவிக மாரக ஸ்தானங்களான 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கொப்பான கெண்டம்.

எப்டி எப்டின்னு கேப்பிக.சொல்றேன். மேஷ லக்னத்துக்கு சனி 10,11 க்கு அதிபதி புதன் 3,6 க்கு அதிபதி.

உதாரணமா சனி 2 ஆவது இடத்துல நின்னா அவரு லாபஸ்தானாதிபதிங்கறதால வீண் பேச்சு (அதுவும் நம்ம ப்ளாகோட பேரு மாதிரி பட்டவர்த்தனமா நிர்வாண உண்மைகளை பேசி ரெட் கார்டு வாங்கலாம், அல்லது ரெண்டு ஃபேமிலின்னு ட்ரபுள் கொடுக்கலாம்.

அல்லது அவர் ஜீவனஸ்தானாதிபதிங்கறதால ச்சொம்மா பேசிக்கிட்டிருந்தா போதும் அதான் நம்ம வேலைங்கற மென்டாலிட்டி வந்துரலாம்.அல்லது தன் தொழில் ரகசியங்களை கூட உளறிக்கொட்டி தனக்குத்தானே ஆப்பு வச்சுக்கலாம்.

பொதுவாவே சனி ரெண்டுல நின்னா ஆப்புதேன். ( நம்ம கேஸையே பார்க்கறிங்கள்ள - சனி 3 க்கு பெயர்ந்தும் அப்பப்போ தடுக்குது) மேலும் பேமெண்ட் எல்லாம் டிலே ஆகும்.குடும்பத்துல ஒரு விதமான சோம்பல் -வறுமை நிலை இருக்கலாம்.

( கிருஷ்ணா ! திருத்தியாச்சு.ஓகேவா )

இப்படியே 3,7,8,12 ல சனி இருந்தா என்னெல்லாம் தீமை நடக்கும்னு கெஸ் பண்ணிப்பாருங்க. கமெண்டா போட்டாலும் ஓகே.

2.ரிஷபம்:
சூரியனும்,சனியும் நல்லவர்கள். சனி நெல்லவருன்னா லாஜிக் இருக்கு .( 9-10 க்கு அதிபதிங்கறதால) சூரியன் எப்படி நல்லவருனு கேப்பிக.சொல்றேன். இவரு நாலுக்கு அதிபதி. வித்யாஸ்தானாதிபதி. சூரியன் உதிச்ச பிற்பாடு கயிறா பாம்பாங்கற சந்தேகமே வராதுல்லியா.அதைப்போல இவிகளோட அறிவு சூரியனை போல பிரகாசிக்கும்.அந்த வெளிச்சத்துல நெல்லது -கெட்டதுல்லாம் பக்காவா புரிஞ்சி சாலாக்கா நடந்துப்பாய்ங்க.

சனி யோக காரகன். சந்திரனும் வியாழனும் ,சுக்கிரனும் பாபிகள். இது இன்னாடா இது அக்குறும்பா இருக்குது. லக்னாதிபதியே பாபியான்னு கேப்பிக.

சுக்கிரன்னா கில்மா. லக்னம்னா மனம்,உடல் பார்ட்டியோட உடல் ,மனம் பூரா கில்மா மயமா இருந்தா முன்னேற்றம் பாதிக்கப்படுமா இல்லியா?மேலும் சுக்கிரன் 6 க்கு அதிபதி. அதுனாலதேன் சுக்ரன் பாபின்னு சொல்லிப்புட்டாங்கோ.

மேலும் சந்திரன் ஏன் பாபி? சந்திரன் 3 ஆமிடத்துக்கு அதிபதியாறாரு. மூணுங்கறது மாரகஸ்தானமாச்சே .அதனால பாபி. மேலும் சந்திரன் நிலையில்லாத கிரகம். 3ங்கறது தைரியஸ்தானம். தைரியம் பர்மனன்டா இருந்தாலே மவனுங்க பல்பு குடுத்துர்ரானுங்கோ. இதுல சந்திரன் அப்பப்போ லீவு போட்டுட்டா பேதியாயிரும்ல.குரு ஏன் பாவின்னா இவரு அஷ்டமாதிபத்யம் வாங்கிக்கிறாரே.அதனாலதேன்.

சந்திரன் குரு செவ் மாரகர்கள்.புதன் கொல்லார். வியாழன் முதலானோர் கொல்வர். 2,3,7,8,12 பாவங்களில் பாபி/மாரகர்கள் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

குறிப்பு:
மேஷம் ரிஷபம் லக்னங்களுக்கு விளக்கியதை போல மத்த ராசிகளுக்கும் விளக்க ஆசைதான்.ஆனால் பவர் கட் நேரம் நெருங்குதே. அதனால அடக்கி வாசிக்கிறேன்.

3.மிதுனம்:
சூரியன்,செவ்,குரு கொடிய பாபிகள்.குரு செவ் சேர்க்கை நல்லதில்லை.( நோட் திஸ் பாய்ண்ட் . குரு செவ் சேர்க்கையை பொத்தாம் பொதுவா குருமங்கள யோகம்னு ஊத்தி விட்டுருவாய்ங்க. நம்பாதிங்க) சுக்கிரன் யோககாரகர்.. சந்திரன் தனபாவாதிபதியானாலும் மாரகம் கொடுக்கமாட்டார். சூரியன்,செவ்,குரு 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம் ஏற்படும்.


4.கடகம்:
குரு,செவ் சுபர்கள், செவ் யோககாரகன். செவ்வாயும் குருவும் சேர்ந்தால் யோகம்.சூரியன் கொல்லான்.சுக்கிரன்,புதன் பாபிகள்.புத சுக்கிரன் சனி மாரகர்கள். இவர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

5.சிம்மம்:
சூரியன் செவ் சுபர்கள்.புதன்,சுக்கிரன் பாபிகள்.செவ் சுக்கிரன் யோககாரகர்கள். ஆனால் செவ் சுக்கிரன் கூடியிருந்தால் தீயபலன். சனி சுக்கிரன் மாரகர்கள்.புதன் கொல்லான். மாரகர்கள் மாரகஸ்தானமாகிய 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

6.கன்னி:
சுக்கிர,சனி சுபர்கள், சந்திரன் செவ் குரு பாபிகள்.புத சுக்கிரர்கள் யோககாரகர். இவர்கள் கூடினால் யோகம். சந்திரன்,செவ்,குரு மாரகர்கள்.சுக்கிரன் தனபாவாதிபதியானுலும் கொல்லார். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

7.துலா:
சனி,புத,சுக்கிரன் சுபர்கள்.சூரி,செவ்,குரு பாபி.சந்திர,புதர்கள் யோககாரகர்கள் இவர்கள் கூடினால் யோகம்.சூரியன்,குரு மாரகர்கள். செவ் சப்தமாதிபதியானாலும் கொல்லான். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம் தருவார்.

8.விருச்சிகம்:
சூரியன்,சந்திரன்,குரு சுபர்கள்,செவ் ,புத ,சுக்கிரன் பாபிகள்.( செவ் லக்னாதிபதியானாலும் பாவிங்கறாய்ங்க.ஏன்னு கேப்பிக. செவ் யுத்த காரகர். வாழ்க்கையில எப்பயோ ஒரு தாட்டி ஃபைட் பண்ணா பரவால்லை. வாழ்க்கை முச்சூடும் போராடினா நாஸ்திதானே)

சூரி,சந்திரர்கள் யோககாரகர்கள். இவர்கள் கூடினால் யோகம். ( சந்திரனால் வரும் யோகம் என்பதால் நிலைத்த ,நீடித்த பலன் கிடைக்காது.) புதன்,செவ்,சுக்கிரன் மாரகர்கள். குரு சனி கொல்லார்.புதன் முதலானோர் கொல்வர். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

9.தனுசு:
சூரிய,செவ் சுபர். சுக்கிரன் ஒருவனே பாபி. சூரியனும் புதனும் கூடினால் யோகம். (இது எப்டி ஒர்க் அவுட் ஆகும்? சூரியன் 9 க்கு அதிபதி. புதன் 7 ,10 க்கு அதிபதி - 9+10 அதிபதிகள் சேரும்போது தர்ம கர்மாதிபதி யோகம் வரும் போல..ஆனால் இந்த யோகம் ஒர்க் அவுட் ஆகிற விஷயத்துல நமக்கு சில சம்சயங்கள் உண்டு) சுக்கிரன் புதன் மாரகர்கள். சந்திரன் ,சனி கொல்லார்.சுக்கிரன் முதலானோர் கொல்வர். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

10.மகரம்:
செவ் புதன் சுக்கிரன் சுபர்கள்.சந்திரன் குரு பாபிகள்.சுக்கிரன் ஒருவனே யோககாரகன்.சுக்கிரனும் புதனும் கூடினால் ராஜயோகம். சூரி,சனி கொல்லார்.சந்திரன் வியாழன் மாரகர்கள்.2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

11.கும்பம்:
சுக்கிரன் புதன் சனி சுபர்கள். சந்திரன் செவ் குரு பாபிகள்.சுக்கிரன் யோககாரகன். சுக்கிரன் செவ் கூடினால் யோகம்.( சுக்கிர செவ் சேர்க்கைய பற்றி தனி சாப்டரே இருக்குங்கோ - அதையும் ஒரு மூச்சு படிச்சுருங்க -கும்ப லக்னத்துக்கு மட்டும் ஓரளவு நன்மைய தந்தாலும் அவிகளுக்கும் சேர்த்து ஆப்படிக்க கூடிய கிரக ஸ்திதி இது ) குரு தனபாவாதிபதியானாலும் கொல்லான்.சந்திரன் செவ் கூடினால் யோகம்.சந்திரன் செவ் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

12.மீனம்:
சந்திரன் செவ் சுபர். சூரியன் புதன் சுக்கிரன் புதன் சனி பாவிகள்.செவ் குரு யோககாரகர்கள்.செவ்வாய் குரு கூடினால் யோகம் சூரியன் புதன் சுக்கிரன் சனி மாரகர்கள்.செவ் கொல்லார்.சூரியன் முதலானவர்கள் கொல்வார்கள் .மாரகர்கள் (செவ் தவிர) 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.


எச்சரிக்கை:
(இந்த விதிகளை ஜாதகத்துக்கு ,தசாபுக்திகளுக்கு மட்டுமில்லே கோசாரத்துக்கும் அப்ளை பண்ணலாம்.ஆக்யுரேட் ரிசல்ட் கடிக்கும். அடச்சே கிடைக்கும். இந்த விதிகளை கோசாரத்துக்கு அப்ளை பண்ணும்போது ராசியை அடிப்படையா வச்சுக்கறது நல்லது . ராசியாதிபதி-லக்னாதிபதிகளுக்கிடையில் பரிவர்த்தனம் அ ரெண்டுபேருமே ஆட்சி ,உச்சம் மாதிரி அமைப்புகள் உங்க ஜாதகத்துல இருந்தா சிண்டை பிச்சுக்க வேண்டியதுதான். ஆனால் உங்க அனுபவப்படி ராசி வேலை செய்யுதா லக்னம் வேலை செய்யுதான்னு கண்டுக்கிடலாம்.கவலை வேண்டாம்)

Thursday, November 3, 2011

அல்லாருக்கும் சில்லறை : 2


அண்ணே வணக்கம்ணே !

நேத்து அல்லாருக்கும் சில்லறை புரளாம இருக்கிறதுக்கு காரணங்களை மட்டும் லிஸ்ட் அவுட் பண்ணி சூ காட்டி விட்டுட்டன். அந்த லிஸ்ட்ல வாஸ்து மேட்டரை கடேசில பார்ப்போம். இன்னைக்கு சாபங்கள்ங்கற சப் ஹெடிங்ல உள்ள சமாசாரங்களையும் (ரிவிஷன்) பரிகாரங்களையும் பார்ப்போம்.


பொருளாதார முடக்கத்துக்கு காரணமாகும் சாபங்கள்:

1.அப்பா ,அம்மா வழி உறவில் ( சித்தப்பா,பெரியப்பா/ சித்தி,பெரியம்மா) அகால மரணம் ( ஐ மீன் 40 வயசுக்குள்ள மரணம்) துர்மரணம் ( ஐ மீன் விபத்து,தற்கொலை,கொலை)

2.உங்களுக்கு முந்தைய தலைமுறை/ உங்கள் தலைமுறையில் அங்கஹீனம் கொண்டவர்கள் பிறப்பது / பெரிய விபத்து/தீ விபத்தில் சிக்குவது /துர்மரணம் அடைவது.

3.உங்கள் தலைமுறை/முந்தைய தலைமுறையில் திருமணத்துக்கு முன்பே இறப்பது/ஒருவருக்கு ஒன்றுக்கு மேல் திருமணங்கள் ,சின்ன வீடு எக்ஸ்ட்ரா

4.உங்கள் தலைமுறை/முந்தைய தலைமுறையில் வாரிசின்றி போவது - பக்கவாதம் போன்ற வியாதிகள் வந்து பிறர்கையை எதிர்பார்த்து வாழ வேண்டி வருவது

5.உங்கள் தலைமுறை/முந்தைய தலைமுறையில் தோல் வியாதிகள் , விரைவாதம்,புத்திகுழப்பம்,பெண்கள் என்றால் அண்டம் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்படுவது.

(இந்த பட்டியலை நேத்தே பார்த்திருக்கிங்க ) அப்படி பார்த்த அதே செகண்ட்ல கொய்யால .. போன தலைமுறைல நடந்ததுக்கும் எனக்கும் என்னய்யா சம்பந்தம்னு ஒரு கேள்வி தாது புஷ்டி லேகியம் சாப்பிட பிறகு கிளம்பின ............... மாதிரி கிளம்பியிருக்கும். ( நான் சொல்ல வந்தது கில்மா தாட்டுங்கண்ணா)

இப்பத்து ட்ரெண்டுக்கு உதாரணம் சொல்லனும்னா ஏழாவது அறிவை சொல்லலாம். பல தலைமுறைகளுக்கு பிறகு பிறந்தவனோட ஜீனை தூண்டி என்ரிச் பண்ணினா பல தலைமுறைகளுக்கு மிந்தி செத்துப்போன ஒரு மூதாதையோட டேலன்டை எல்லாம் ரெக்கூப் பண்ணலாம்ங்கறது மேற்படி சினிமாவுல வருது. ( சினிமாவுக்கு போனவுங்கல்லாம் தலைவலிதான் வருதுங்கறாய்ங்க- அது வேற மேட்டர்)

புதுசா ஒரு குழந்தை பிறந்ததும் அத்தை மூக்கு ,அப்பன் மூஞ்சி,ஆத்தா வாயின்னு பட்டியல் போடறாய்ங்க.
போடறாய்ங்களா இல்லியா? அந்த குழந்தை கொஞ்சம் வளர்ந்து கைய காலை திருப்பினா " த பாரேன் அப்படியே எங்கப்பன் மாதிரியே"ங்கறோம். அது எதையாவது தூக்கி வீசினா " த பாரு ..அப்படியே உன் ஆத்தாக்காரியோட கோபம் சிந்தாம சிதறாம வந்து விடிஞ்சிருக்கு"ன்னு பொஞ்சாதி முகவாய் கட்டைய தோள்ள இடிச்சுக்கறா. இடிச்சுக்கறாளா இல்லியா?

ஆக மூதாதையரோட மணம்,குணம்,காரம்லாம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஜீன்கள் வழியா கடத்தப்படுது.

தாத்தாக்கிட்டேருந்து அப்பா, அப்பாக்கிட்டே இருந்து உங்களுக்கு, உங்க கிட்டேருந்து பாப்பாவுக்கு அஞ்சலாகும்னு தான் நினைச்சிருப்பிங்க.அதான் ராங்கு.

டார்வின் இன்னா சொல்றாருன்னா ஒவ்வொரு மனிதன்லயும் - இயற்கையிலான எல்லா புழு,பூச்சி,பறவை,விலங்குகளோட மணம்,குணம்,காரம்லாம் பொதிஞ்சிருக்குங்கறாரு. பாரதியார் கூட ஒவ்வொரு குணம் கொண்ட மனிதனையும் ஒவ்வொரு மிருகத்துக்கு ஒப்பிட்டு ஒரு கட்டுரை எழுதியிருக்காரு. நெட்ல கிடைச்சா சுட்டு அதனோட சுட்டியை தாங்கண்ணா.. ரெம்ப த்ரில்லிங்கா இருக்கும். அல்லாரும் படிக்கட்டும்.

க்லைஞரோட குடும்ப உறுப்பினர்களை நெட்ல கிளை வாரியா ( நெல்லா கவனிங்க கிளை வாரியா -கிளைங்கறது மரத்துக்கு இருக்கக்கூடிய ஒன்னு) மேப் போட்டு வச்சிருக்காய்ங்க .இதை சமஸ்கிருதம் ,தெலுங்கு மொழிகள்ள வம்ச விருட்சம்னு சொல்வாய்ங்க.

ஒரு ஆறு இருக்கு. அந்த ஆத்துல தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவு நீரை சுத்திகரிக்காம அப்படியே விடறாய்ங்கனு வைங்க., அப்பம் அந்த ஆற்றங்கரையோரமா வளர்ர எல்லா விருட்சமும் (மரமும்) அந்த தண்ணிய உறிஞ்சித்தானே உயிர் வாழும். அந்த மரங்களோட எல்லா கிளைகளும் -உபகிளைகளும் - இலைகளும் அந்த கழிவு நீரால பாதிக்கப்பட்டுத்தானே தீரும்.

இதே இழவுதேன் இந்த தலைமுறைகள் மேட்டர்லயும் ஒர்க் அவுட் ஆகுது. உசரம், கண் ,மூக்கு , நியூமரிக்கல் எபிலிட்டி,ஹேண்டி க்ராஃப்ட் மட்டுமில்லிங்கண்ணா அவிகளோட லைஃப் ஸ்பான், வாழ்க்கையின் முக்கிய சம்பவங்களும் அப்படியே பேக் அப் ஆகி , நம்ம லைஃப்லயும் ரிப்பீட்டு. இது ஒரு கோணம்.

இன்னொரு கோணத்துல பார்க்கும் போது நாம இந்த பூமியில் இல்லாத காலமே கடியாதுன்னு ஒரு சித்தாந்தம் சொல்றாய்ங்க. உங்க தாத்தா சகட்டுமேனிக்கு கண்டவளை கை வச்சிருந்தாருனு வைங்க. அதே புத்தி உங்களுக்கும் வருதுன்னு வைங்க. இதை ஜெனடிக் காஸ்னும் சொல்லலாம். அந்த தாத்தாவோட மறுபிறவிதான் நீங்கன்னும் சொல்லலாமில்லையா? புனரபிமரணம் புனரபி ஜனனம்.

ஜியாமிட்ரில ஒரு பாய்ண்ட் வரும். எல்லா படுக்கை கோடுகளும் ஒரு வட்டத்தின் பாகங்களே . நியூட்டன் இன்னா சொல்றாரு "ஃபார் எவ்ரி ஆக்சன் தேர் ஈஸ் என் ஈக்வல் ரியாக்சன்"

முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும்"னு சொல்றாய்ங்க. அது செயல் செய்யப்பட்ட அதே நாளின் பிற்பகல்னு நினைச்சுராதிங்க. கால ஓட்டத்துல பல்லாயிரக்கணக்கான வருடங்களும் ஒரு நாள் மாதிரி தேன்.

இப்பம் ஓரளவாச்சு கன்வின்ஸ் ஆகியிருப்பிங்கனு நினைக்கிறேன். நீங்க கன்வின்ஸ் ஆனாலும் ஆகாட்டாலும் விளைவை சந்திச்சுத்தான் ஆகனும். தாத்தா இன்னைக்கும் நான் தான் முதலமைச்சர்னு நினைச்சுக்கிட்டா ஆச்சா? ஊஹூம். அதே போலதான் இதுவும். நான் சொன்ன மேட்டரெல்லாம் டுபுக்குன்னு நீங்க டிக்ளேர் பண்ணிரலாம். ஆனால் விளைவுகள்?

தாத்தா வேணம்னா இன்னைக்கும் நான் தான் சி.எம்னு நினைச்சுக்கலாம்.ஆனால் மார்ட்டின் நினைக்கமாட்டாரே. திரைக்கதை வசனத்துக்கு ரூ.25 லட்சம் சன்மானம் தரமாட்டாரே. அப்டி நீங்க இந்த விசயம்லாம் பீலான்னு நினைச்சுக்கிட்டாலும் யதார்த்தத்துல இதற்கான பலனை அனுபவிச்சே தீரனும்.

எச்சரிக்கை:
யாருடைய வமிசா வளியில் கீழ்காணும் நிகழ்வுகள் நடந்திருக்கோ அவிகல்லாம் சிரமப்பட்டுத்தான் தீரனும்னுல்ல கோடிகள் குவிக்கவும் கூடும். ஆனால் இந்த சம்பவங்கள் ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்துக்கிட்டே இருக்கும். ( சில கேஸ்ல ஒரு தலைமுறை விட்டு ஒரு தலைமுறை நடக்குங்கோ)

யாருடைய வமிசா வளியில் கீழ்காணும் நிகழ்வுகள் நடந்திருக்கோ அவிகள்ள பலர் இவற்றின் வீரியத்தை உணராம பணம் பணம்னு அலைஞ்சு பறை சாற்றி நாசமா போறதும் உண்டு. ( ஐ மீன் அகால மரணங்கள்/துர்மரணங்களுக்குள்ளாவது)

ஒரு சிலர் குருவருளாலோ, திருவருளாலோ,அப்பா அம்மா ஆசியாலோ, ஜாதகத்திலான இதரகிரகங்களின் பலத்தாலோ ஏழ்மையில் இருப்பார்கள் - வரவுங்கறது தொட்டுக்கோ துடைச்சுக்கோன்னு இருக்கும் .ஆனால் பெரிய இழப்புகள் இருக்காது ( ஐ மீன் அகால மரணங்கள்/துர்மரணங்கள்)

( வேண்டுகோள்: இந்த மேட்டர்லாம் பல தடவை வெரிஃபை பண்ணி, பல நூறு தடவை நேர்ல பார்த்து ,கேட்டு எழுதின மேட்டருதான்.

இருந்தாலும் இந்த பதிவை படித்த உங்கள் வட்டத்தில் இது போன்ற கேஸ்கள் இருந்தால் ஊர்,பேரை குறிப்பிடாம சொல்லுங்க.

ஒரு வேளை உங்க குடுமபம் / உங்க வமிசாவளியில் நடந்திருந்தா எனக்கு தெரிந்தவர்கள் வீட்டில்னு ஆரம்பிச்சு சொல்லலாம்.

நமக்கு தேவை டேட்டா தான். விவரம் கடியாது. இதெல்லாம் எதுக்குன்னா நாளைக்கு நான் தரப்போற பரிகாரங்களை இன்னம் கொஞ்சம் நம்பிக்கையோட சனம் ஃபாலோ பண்ணி ரிலீஃப் பெற வசதியா இருக்கும்)

இப்பம் பதிவின் ஆரம்பத்தில் தந்த அதே அம்சங்களை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு பரிகாரங்களை அடுத்த பதிவில் தருகிறேன்.

பரிகாரங்களை இந்த பதிவிலும் தராம சஸ்பென்ஸ் தொடர்வதற்கு சாரிங்ணா. நாம சொல்ற மேட்டர் மேல மொதல்ல சனத்துக்கு நம்பிக்கையை ஏற்படுத்தாம மளிகை கடை லிஸ்ட் மாதிரி பரிகாரங்களை அள்ளி விடறது வீண் வேலைங்கண்ணா.

அப்படி செய்தா சொன்ன நமக்கும் புண்ணியமில்லை - படிக்கிற சனத்துக்கும் புண்ணியமில்லை. ஜஸ்ட் 24 ஹவர்ஸ் .. நாளைக்கு ஏ To ஜெட் பரிகாரங்களை ஒரே மூச்சா கொடுத்துர்ரன்.

Monday, October 24, 2011

ஒரு அனுபவம் - சில பாடங்கள்


சின்னவயசுல சித்தி வீட்டுக்கு போறச்ச -மூட்டை முடிச்சை இறக்கிவச்சுட்டு நாம வாய திறந்தா அந்த வீட்ல எந்த வேலையும் ஓடாது. அல்லாரும் நம்ம வாய பார்த்துக்கிட்டு கிடப்பாய்ங்க. அந்த வீட்ல நமக்கு ஒரு அக்கா, நாலு தங்கச்சினு ஞா. சித்தி மட்டும் என்னவாம் ஒரு பக்கம் திட்டித்தீர்த்துக்கிட்டே கரண்டியும் கையுமா சமையலறைக்கும் ஹாலுக்கும் ரன் எடுத்தபடி இருப்பாய்ங்க. நம்ம வாய் சாலம் அப்படி.

அந்த வயசுல முக்கியமா பட்ட மேட்டர்லாம் இப்பம் சப்பை மேட்டராயிருச்சு. அதனால வயசு பிள்ளைங்க கிட்ட எதையாவது பேசனும்னா ரோசிக்க வேண்டியதாயிருக்கு. துருக்கி பூகம்பம்தேன் நம்மை அதிகமா பாதிக்குது. இப்பம் கேரளா ,தமிழகத்துல 3.5 வருசத்துல பூகம்பம் கியாரண்டின்னு சொல்றாய்ங்க.

பூகம்பத்தை விட அதை ஃபேஸ் பண்ணக்கூடிய நிலையில இல்லாத அரசு இயந்திரம்தேன் பேதியாக்குது.பசங்க கிட்டே இடையில என்னப்பா போரடிக்கிறேனா? ச்சொம்மா என் திருப்திக்கு சொல்லாதே..போரடிச்சா சொல்லிருன்னு பேசவேண்டியதாயிருக்கு.

நியூஸ் பேப்பரை எடுத்தா சில பிள்ளைங்க கிரிக்கெட் -சினிமா மட்டும் பார்த்துட்டு (அண்டர்லைன்) போட்டுர்ராய்ங்களா பகீருங்குது. அத்வானியோட மொத ரதயாத்திரையின் போது ஹின்டுவை கூட படிக்கவேண்டியதாயிருந்ததுன்னா பார்த்துக்கங்க. இதனால வீட்ல சின்ன உலகயுத்தமே நடக்கும்.

ஆனால் நம்ம பசங்க ஊஹூம்.. தெலுங்கு பேப்பர்ல தாய்குலத்துக்குன்னு ஒரு இணைப்பு வச்சிருப்பாய்ங்க. வாழைப்பழத்துல அழுகின பாகத்தை கிள்ளிபோடறாப்ல அதை கழட்டி வீசினப்பறம் தான் நாம பேப்பரையே படிக்க ஆரம்பிப்போம்.ஆனால் அதை என்னமோ எஸ்.எஸ்.சி ரிசல்ட் வந்த பேப்பர் மாதிரி என் பொண்ணு வாரிக்கிட்டு போறதை பார்த்தா பகீருங்குது.

நம்ம வாய் சாலத்து மேல நம்பிக்கைய வச்சு ஒரு மேட்டரை சொல்லலாம்னுதேன் இந்தபதிவை ஆரம்பிச்சோம். ரெம்ப சாதாரணமான சம்பவங்கதேன்.ஆனால் இந்த சம்பவங்களை இயற்கை கோர்க்கிற விதமிருக்கே ச்சொம்மா சொல்ல கூடாது நெசமாலுமே தூள் தான்.

நாம விளம்பரத்தையே உள்ளடக்கமா கொண்டு ஒரு பத்திரிக்கை நடத்தறது உங்களுக்கு ஞா இருக்கலாம். ஆரம்பத்துல டிடிபி,டிசைன்னு ரெம்பவே அல்லாட வேண்டியிருக்கும்.

இடையில மக டிசைன்ல விளையாட ஆரம்பிச்சபிறகு இம்சை குறைஞ்சது. ( நம்ம சுகுமார்ஜி அவளோட டிசைனை பார்த்துட்டு கண்ணு வலிக்குதுன்னுட்டாரு - அப்படி சொன்னதோட நிக்காம கலர் செலக்சனுக்கு ஒரு சூட்சுமத்தையும் சொல்லிக்கொடுத்து புண்ணியம் கட்டிக்கிட்டாரு.) இப்பம் தீபாவளி ஸ்பெஷல் டிசைன் பண்ணிக்கிட்டிருக்கம்.

நாம வாழறது தெலுங்கு தேசத்துலயாச்சே அதனால என்னதான் வெறுமனே விளம்பரம்னாலும் சுந்தரதெலுங்குலயும் மேட்டர் வரும். வந்தே தீரும். இந்தபிரச்சினைய ராம்பாபு சாஃப்ட்வேரை வச்சு சமாளிச்சிட்டிருந்தோம். சிஸ்டத்தை ஃபார்மட் அடிக்கிறப்ப பேக் அப் எடுக்காம கோட்டை விட்டாச்சு.

நெட்ல தேடு தேடுன்னு தேடறோம். ஒன்னும் பெயரலை. தேடலின் சமயம் மாலை 4.30 முதல் 7 வரை. பொஞ்சாதி டிவி ரிமோட்டை தேட நொந்து போயிட்டம். கொய்யால தேடுங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்ங்கறதெல்லாம் பீலாவா? எவனோ ஒருத்தனுக்கு அம்பதோ நூறோ கொடுத்து அடிச்சுவிடாம இந்த ஸ்ட்ரெய்ன் தேவையான்னு ஆயிருச்சு.

சில அட்வர்டைசர்ஸை சந்திக்கவேண்டியிருந்ததால தேடும் பணியே பணியா கொள்ளாம வெளிய புறப்பட்டாச்சு. ஒரு பார்ட்டி ஃபோட்டோ கொடுக்க அதை ஸ்கான் பண்ணியாகனும். வீட்ல மெகாசைஸ் ஸ்கானர் இருந்தாலும் அதை கனெக்ட் பண்ணா தாளி கீ போர்ட் வேலை செய்யாது அ மௌஸ் வேலை செய்யாது அ ரெண்டும் வேலை செய்யாது.

இந்த லொள்ளை தாங்கமுடியாமயே ஸ்கான் பதிவுக்கெல்லாம் லாங் லீவ் விட்டாச்சு.அதனால ஓரளவு பழக்கமான நெட் சென்டருக்கு போய் ஸ்கான் பண்ண சொன்னேன்.

கொக்குக்கு ஒன்னேமதிங்கற மாதிரி டொக்கா நெட் ஆசாமிய தெலுங்கு சாஃப்ட்வேர் பற்றி விஜாரிச்சேன். அவரு அங்குர் சாவ்ட் வேரை சிபாரிசு பண்ணதோட சி.டி.கொண்டாங்க லோட் பண்ணித்தரேன்னாப்ல.

ரூ.25000 ஐ ஒரே நாள்ள செலவழிச்ச ரிக்கார்டுக்கு சொந்தக்காரங்கற பயத்துல வெளியவர்ரச்ச ரூ30க்கு மேல கொண்டு வர்ரதில்லை. அந்த ரூ30 செலவழியற வரை வீடு திருமபறதில்லை. செலவழிஞ்சுட்டா வெளிய நிக்கறதில்லை.

பையில பார்த்தா சிடிக்கு தான் தேறும் போல.என்னதான் சாஃப்ட் வேர் ஓசின்னாலும் ரைட்டிங் சார்ஜாச்சும் தரனும்னு வீட்டுக்கு ஃபோன் அடிச்சு சில்லறை கொண்டுவரச்சொன்னேன். அம்பதா கொண்டுவந்தாய்ங்க.

சரி இருக்கட்டும்னு வச்சுக்கிட்டு நெட் ஆசாமிக்கு ரைட்டிங் சார்ஜு கொடுத்துட்டு ரூ40 ஐ பையில வச்சுக்கிட்டு பஜாருக்கு போனேன்.

ம்னசுல எல்லையில்லாத தகிரியம் தாளி எவனையும் போய் கெஞ்சத் தேவையில்லை. தன் கையே தனக்குதவின்னு அடிச்சு தூள் கிளப்பலாம்.( நம்முது சிம்மராசி -சனி ரெண்டுலருந்து மூணை பார்க்கிறாரு)

அங்கருந்து நேர சத்யாவோட நகைக் கடை. ச்சொம்மா இருந்தவனை தீபாவளி பூஜைக்கு ஆந்தை வாகனத்தோட லட்சுமி சிலை வச்சு செய்யுன்னு ஜும் ஏத்தி விட்டாச்சு. ஆனா ஆர்டர் கொடுக்கிற சமயம் இன்னொரு ஆசாமி சத்யாவுக்கு டபுள் டோஸா வினோலாக்ஸ் கொடுக்க ஆந்தை வாகனம் கான்சல். ஆனாலும் சிலை ஓகே.

அன்னைக்கப்பாறம் சத்யாவுக்கு கான்டாக்டல போகலை. இந்த கேப்ல சென்னை போய் பர்ச்சேஸ் எல்லாம் முடிச்சு வந்திருக்காரு போல. நம்மை பார்த்ததும் கண்ணனை பார்த்த ராதை கணக்கா வா வா ..னுட்டு கடைய விட்டு இறங்கி வண்டியேறிட்டாப்ல ( அவரோட வண்டிதான்)

ஷகரான கடை பூஜை முடிக்க பகல் 12 ஆகும் (இடையிடையில வியாபாரம்) டிஃபன் 2 மணிக்கு சோறு நாலு மணிக்கு ராத்திரி சோறு பன்னெண்டு மணிக்குத்தேன்.

வண்டி நேர புக்ஸ்டோர் போயிருச்சு. அங்கன பூஜைக்கான இன்விட்டேஷனை போட பந்தா கவர் (டிசைன்+ப்ரிண்டிங் நம்ம மகதேன்) , ரெண்டு மார்க்கர்லாம் வாங்கியாச்சு. பையில கைய விடறாரு காசை காணோம் . கொஞ்ச நா இடைவெளிக்கப்பாறம் நம்மை பார்த்த உணர்ச்சி வேகத்துல கல்லாவுல இருந்து காசை எடுக்காமயே கிளம்பிட்டாப்ல.

சித்தூரு ஊரு சின்னதா இருந்தப்ப வேற கதை. ஒவ்வொரு கடைகாரருக்கும் தன்னோட ஒவ்வொரு கிராக்கியோடவும் பர்சனல் டச் இருக்கும். இப்பம் எவன் முகத்தை பார்க்கிறான்? அந்த நிமிசத்துல சத்யாவோட மன நிலைய வர்ணிக்கனும்னா தனிப்பதிவே போடனும். தீபாவளி பர்ச்சேஸ் மட்டும் ஒரு லட்சத்து அம்பதாயிரத்துக்கு செய்துட்டு வந்திருக்கிற பார்ட்டி. என்னமா ஃபீல் பண்ணியிருப்பாருன்னு நினைச்சுப்பாருங்க.

பில்லு எவ்ளோங்கறிங்க? கரீட்டா நாப்பது ரூவா. நாம படக்குனு எடுத்து நீட்ட சத்யாவுக்கு ஒரே ஆச்சரியம் . ( இவன் முப்பதுக்கு மேல வச்சிருக்க
மாட்டானே..அதுலயும் நேரம் இப்ப ராத்திரி எட்டாகுதே)

ராத்திரி எட்டுங்கறது சத்யாவோட டீ டைம். கடைலருந்து "டுப்கி"அடிச்சாவது டீ குடிக்கிற கிராக்கி.ஆனால் அவர் கையிலயும் கால் காசில்லை. நம்ம கையிலயும் காசில்லை.

புஸ்தவ கடைக்கும் - சத்யா கடைக்கும் மிஞ்சிப்போனா 100 அடி தூரமிருக்கலாம் அவ்ளதான்.ஆனால் கையறு நிலை.

சத்யாவுது மீனராசி.சனி எட்டை பார்க்கிறாரு. ரெண்டு மூனு வாரத்துக்கு மிந்திதான் 407 வேன் காரன் ரைட்ல பூந்து வண்டியோட டேஞ்சர் லைட்ஸ் காலி, நெம்பர் ப்ளேட் வளைஞ்சு போச்சு. இப்பம் இந்த மாதிரி.

இப்பம் சொல்லுங்க .ஜோதிடம் மூட நம்பிக்கையா?