Tuesday, August 7, 2007

சுஜாதா-சிவாஜி

சமீபத்தில் வெளியாகியுள்ள் சிவாஜி படத்தில் கறுப்புப் பண ஒழிப்புக்கு அரிய வழி ஒன்று அறிவு ஜீவியான சுஜாதா அவர்களால் வழங்கப்பட்டுள்ளதாக அறிகிறேன்.நான் கடந்த 10 வருடங்களாக ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற பெயரில் ஒரு திட்டத்தை மத்திய மாநில அரசுகளுக்கு வழிமொழிந்து வருகிறேன். அதில் கறுப்புப் பண ஒழிப்புக்கு நான் கூறியுள்ள யோசனை வருமாறு:தற்போது நடைமுறையில் உள்ள கரன்சியை செல்லாததாக அறிவித்து புதிய கரன்சியை அறிமுகப்படுத்த வேண்டும் பேப்பர் கரன்சி குறைந்து ஏ.டி.எம்,டெபிட் கார்டு,க்ரெடிட் கார்டுகள் அதிகரித்துள்ள் இந்த நிலயில் இது பெரிய பாதிப்பை தராது.மேலும் பழைய கரன்சி உள்ளவர்கள் தம்மிடம் உள்ள் பழைய கரன்சியின் அக்கவுண்டபிலிடியை நிரூபித்து புதிய கரன்சியை வங்கிகள் மூலம் பெற வாய்ப்பளிக்கலாம்.