Friday, August 31, 2007

ஈ.வெ. ராமசாமியின் வாக்கும் ராமனின் வாக்காகவே


ஒரு ஜோதிடன்,ராம பக்தன், அம்மனை வணங்கும் சாக்தேயன் பெரியாரை கொண்டாடுவதில் நிறைய பேருக்கு பல சந்தேகங்கள் வருகின்றன. ஆத்திகமோ நாத்திகமோ அதன் உச்சத்தில் இருக்கும்போது அதில் எவ்வித முரண்பாடும் தெரிவதில்லை. பெரியாரின் முழு பெயர் ஈ.வெ.ராமசாமி என்பதாகும். "அந்தா ராம மயம் " என்று துவங்கும் ராமதாசர் கீர்த்தனை ராமசாமியின் வாக்கும் ராமனின் வாக்காகவே எனக்கு தோன்றுகிறது.
பார்ப்பணர்களின் விவாதத்திற்கப்பாற்பட்ட கீதை கூட வேத பண்டிதனையும், நாய் மாமிசம் உண்பவனையும் சமமாக பாவிப்பவனே உத்தமன் என்றுதான் கூறுகிறது.(அதே கீதையில் விஞ்ஞானத்திற்கு எதிரான நிறைய விசயங்கள் உள்ளன. அவற்றை பின்னொரு சமயம் கிழிக்கலாம்.)
நான் வணங்கும் ராமன் (பகவத் கீதையில் கிருஷ்ணனைப்போல்) என்னையே சரணடை என்றெல்லாம் சொன்னதில்லை.ராமன் என் லட்சிய புருஷன்.தான் ஒரு அவதாரம், என்ற பிரக்ஞை கூட ராமனில் இருந்ததில்லை. அவனை சுற்றியிருந்தவர்கள் தான் அவரை அவதார புருஷன் என்று கொண்டாடினார்களே தவிர ராமர் மட்டும் ஆராமாகத் தான் இருக்கிறார்.
இதே ராமன் புத்ரகாமேஷ்டி யாகம் மூலம் பிறந்ததாக பவுராணிகர்கள் கூறுகிறார்கள். (இதன் உண்மையான விளக்கத்தை "சகோதிரிகளை புணர்ந்து" என்ற தலைப்பிலான என் வலைப்பூவில் காணவும்) இதே ராமன் தவத்திலிருந்த சூத்திரனை பிராமணர்கள் பேச்சை கேட்டு கொன்றதாகவும் ஒரு கதை உள்ளது. அன்னப் பறவை போல் நான் ராமன் குறித்த பாசிடிவான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.
காந்திக்கு உதவிய அதே ராம நாமம் எனக்கும் உதவுகிறது. என்னை பக்குவப் படுத்தி *யத்பாவம் தத்பவதி என்பது போல் ராமனாகவே மாற்றியுள்ளது.அதற்காக புராண புருடாக்களை வைத்து பிழைப்பு நடத்தும் உண்மை நாத்திகர்களான பிராமணர்களை இடித்துரைத்த ராமசாமியை என்னால் விட்டுவிட முடியாது. இருந்தானோ இல்லையோ, பிறந்தானோ இல்லையோ தெரியாத ராமனுக்காக ரத்தமும் சதையுமாய் பிறந்து , வளர்ந்து தன் சொல்லம்புகளால் பிராமண ராட்சதர்களை வதம் புரிந்த ராம சாமியை நான் விட்டுவிட்டால் வரலாறு என்னை மன்னிக்காது.
வேதமாகட்டும்,சாத்திரமாகட்டும்,ஜோதிடமாகட்டும் எல்லாமே மக்களுக்காகத்தான். *ஈஷ்வரோ மனுஷ்ய ரூப்பேணா. மனிதனை,மனிதத்தை மறுத்தால் வேதம்,புராணம்,பிராமணீயம்,பிராமணர்களை மட்டுமே அல்ல என் ராமனையும் எதிர்ப்பேன்.
ராமன் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்திருந்து, அவன் தவமிருந்த சூத்திரனை பார்ப்பனர் பேச்சைக் கேட்டு கொன்றிருந்தால் கு.ப. சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தையாவது மேற்கொண்டிருப்பேன்.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பதறிவு
என்பது வள்ளுவர் வாக்கு. பெரியார் ஜோதிடத்தை மறுத்திருக்கலாம். வேதத்தை நிராகரித்திருக்கலாம். அவருக்கு அவற்றை ஆழமாக அராய்ச்சி செய்யும் வசதி,வாய்ப்பு இல்லாதிருந்திருக்கலாம். இன்று எனக்கு அதற்கான வாய்ப்பு உள்ளது. நான் நோண்டி நுங்கெடுக்கிறேன். மக்கள் நலத்துக்காக அவற்றின் உண்மை அர்த்தங்களை வெளியிடுகிறேன் இது தவறா?
*பெத்தல மாட்ட சத்தி மூட்டா - என்பது தெலுங்கு பழமொழி. அதாவது பெரியோர் வாக்கு கட்ட்ச்சோற்றை போன்றது. கட்டுச்சோறு என்பது ஊர் போய் சேரும் வரை தான்.ஊர் சேர்ந்த பிறகு ஆக்கி தின்னவேண்டும். பெரியார் வாழ்ந்த காலத்தில் வேதம்,புராணம் எல்லாம் விமர்சனத்துக்கு அப்பற்பட்டவையாய் இருந்தன, அந்த நேரம் எல்லாமே புருடா என்றுதான் அடித்து பேசவேண்டும். அந்த சமயம் கொஞ்சம் விஷயமிருக்கு ஆனால் அய்யர் பசங்க நிறைய ரீல் விட்டு காசு பார்க்கிறாங்க என்று மென்று விழுங்க முடியாது.
இப்போது நிலைமை மாறியிருக்கிறது. நாத்திகம் அலுத்து , மனக் குரங்கு ஆத்திகத்தின் பக்கம் தாவ ஆரம்பித்திருக்கிறது. இந்த சமயம் பெரியாரைப் போல் எல்லாமே புருடா என்றால் ,ஆத்திகத்தின் காரணாமாய் சற்றேனும் பலன் பெற்றவன் நாம் சொல்லுவதைத் தான் புருடா என்பான். மீண்டும் அவனை பார்ப்பன மாயாவில் இருந்து வெளிக்கொணர முடியாது. எனவேதான் அய்யர்கள்
தம் அடுத்த தலைமுறைக்கு மாற்றும் போது கோட்டை விட்ட டீட்டெயில்களை நான் பிடித்து வைத்துள்ளேன். என்னிடம் விடச்சொல்லுங்கள் புராண புருடாக்களை. அவன் மனைவியை இவன் கொண்டு போனான் இவன் மனைவியை அவன் கொண்டு போனான் என்ற கதைகளை நம் வீட்டுப் பெண்கள் முன்னிலையில் சொல்லியதோடு, அவற்றை பாராயணமும் செய்யச்சொன்ன பாவிகள் நமக்கு ஏன் பவிஷ்ய புராணத்தை கூறவில்லை என்று கேளுங்கள். (முதலில் இந்த தலை முறை அய்யனுக்கு தெரியுமா கேளுங்கள்.