Tuesday, August 14, 2007

எச்சரிக்கை: படு ஜிகாவான ஜோக்





வெங்கடேஷ் (7)பக்கத்து வீட்டு சிறுமியுடன் விளயாடிக்கொண்டிருந்த்தான். இயல்பாகவே இருக்கக் கூடிய அறியும் ஆர்வத்தில் அவளின் உறுப்பை தீண்டிப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருந்தான். இதை பார்த்த அவன் அம்மாவுக்கு பயங்கர கோபம்..விளங்காதவனே..பொட்டை புள்ளைங்களுக்கு அங்கே பல்லிருக்கும்டா பல்லு பட்டால் விஷம் என்று சொல்லிவிட்டாள்.



வெங்கடேஷ் பெரியவனான். திருமணமானது.முதலிரவில் அவன் தன் மனைவியிடம் சில்லரை விளையாட்டுக்களோடு நிறுத்திக் கொண்டான். இதனால் மன்ம் நொந்த வெங்கடேஷின் மனைவி தன் தாயிடம் புகார் செய்தாள். அவள் கி.ரா கதைகளில் வரும் தந்திரங்களில் கை தேர்ந்தவள். அட காரசாரமா மீன் குழம்பு வச்சு ஊத்தி போடுவயா..என்று யோசனை சொன்னாள். மீன் குழம்பு ரெடியானது. இரவு வெங்கடேஷுக்கு கும்பமும் கொட்டப்பட்டது. கொல்லைப்புறம் காற்றாட கயிற்றுக் கட்டிலும் போடப்பட்டது.


வேலைக்காரி உண்டவர்கள் மென்று உமிழ்ந்த மீன் முள்ளை எல்லாம் தோட்டத்தில் கொட்டியிருந்தாளே அந்த இடத்திலேயே போடப்பட்டது கட்டில். வெங்கடேஷ் பயங்கர ஆவேசத்தில் இருந்தான்.கடிபட்டாலும் சரி என்று 'அந்த ' காரியத்தை செய்தே விட்டான். துரதிர்ஷ்டவசமாக அவன் இன உறுப்பு கயிற்று கட்டிலின் சந்தில் நுழைந்து விட்டது.


கீழே கொட்டப் பட்டிருந்த மீன் முட்கல்ளை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்த பூனை ஒன்று இதென்னடா உயிருள்ள மீனாயிருக்கிறதே என்று அவனுடையதை ஒரு கவ்வு கவ்வி விட்டது. அலறி புடைத்து ஓடியவன் தான்..நாளிதுவரை கிராமத்துக்கு திரும்பவில்லை.