Monday, September 20, 2010

அய்யர் தி கிரேட்டுங்கற பேர்ல ஒரு அராத்து

கூவம் பெருக்கெடுத்து ஓடறச்ச ஒரு குட்டி தவறி விழுந்துருச்சு.  எல்லா பயலும் ஜீனும், டீ ஷர்ட்டுமா வேடிக்கை பார்க்கிறாய்ங்களே தவிர எவனும் குதிச்ச கதையா காணோம். அப்போ திடீர்னு ஒருத்தர் குதிச்சு அந்த குட்டியை இழுத்துட்டு வந்து கரையில போட்டுட்டு " எந்த நாதாரிடா என்னை தள்ளி விட்டதுன்னானாம். அந்த கதை தான் நம்முதும்.

என்.டி.ஆரை ஒழிச்சுக்கட்ட ஒரு சந்திரபாபுவையும் சேர்த்தே படைச்சாப்ல கடவுள் எங்க ஊர்ல என்னையும் படைச்சு எனக்கு ஆப்பு வைக்க ஒரு பார்ட்டியையும் சேர்த்து படைச்சுட்டாருபோல.

ஆனால் ஆக்சுவலா நம்முது சந்திரபாபு கேரக்டருங்கண்ணா. போனா போவுது என்.டி.ஆராதான் வாழ்ந்து பார்ப்பமேனு வாழ்ந்துக்கிட்டிருக்கன். என்.டி.ஆரா செயிக்க முடியலைன்னா தாளி சந்திர பாபுவா மாற ஒரு செகண்ட் போறும். நாம முன்னாடி இருக்கிற கேரக்டருகளை விட நம்ம முதுகுக்கு பின்னாடி இருக்கிற கேரக்டர்களைதானே உன்னிப்பா கவனிச்சிக்கிட்டிருக்கம்.

நம்ம ரேஞ்சுக்கு அய்யர் தி கிரேட் சுண்டைக்காய். ஆனால் இளைதாக முள் மரம் கொல்கங்கறது வள்ளுவர் வாக்கு. அதனால ஃபைனலா ஒரு கிழி கிழிச்சுர்ரதா உத்தேசம்.

//தனி மனித தூஷணைக்கு போற சாதி நானில்லே//ன்னு சொல்லிக்கிட்டே " சித்தூர் முருகேசனின்  சின்னத்தனம் "னு தலைப்புலயே தன் சின்னத்தனத்தை காட்டியிருக்காரு.

அவரோட சமூக அக்கறையை பாருங்க //சில சாக்கடைகள் வழிஞ்சுண்டே இருந்தா ஊரு நாறிப்போகாதோ? அதனாலதான் இந்த சாக்கடைல இறங்கியிருக்கேன்.//

அடப்பாவிகளா இந்த ஒரு வேலையத்தான் விட்டு வச்சிருந்திங்க. இதுலயும் போட்டிக்கு இறங்கிட்டிங்களா?

//என்ன சேறு வாரி இரைப்போ. இரைக்கட்டும்//

அய்யரே! எவனொருத்தன் சமூக அக்கறையோட பார்ப்பனீயம், மூட  நம்பிக்கைகள், வர்ணாசிரம தர்மங்களுக்கு எதிரா, ஒட்டு மொத்த மனித குல நன்மைக்காக கோதாவுல இறங்கறானோ அவன் மேல சேறு வாரி இறைக்கிறது உங்க தொழில். உம்ம மண்டையில இருக்கிறதெல்லாம் அதானே. உங்க வேலையை நாங்க ஏன் செய்யப்போறோம்?

//வராஹ மூர்த்தி மாதிரி இந்த மலக்கடல்ல முங்கியே தீர்ரதுன்னு நிர்ணயிச்சுண்டேன். //

இதான் இதான் உங்க ரேஞ்சு. சூத்திரங்களுக்கு தெரிஞ்சுரக்கூடாதுன்னு உங்க மூதாதைங்க மறைச்சு மறைச்சு வச்சது உங்களுக்கும் விளங்காமயே போயிருச்சு பார்த்திங்களா? இதைத்தான் மாதா செய்தது மக்களுக்குன்னு சொல்வாய்ங்க.

வராஹ அவதாரம் மட்டுமில்லே தசாவதாரத்தோட அசலான தத்துவம் என்னன்னு எந்த அய்யராச்சும் சொல்றாரா பார்த்துட்டு அப்பாறம் உடைக்கிறேன். மலம்னா "ஆயி"னு  அர்த்தம் பண்ணிட்டாப்ல இருக்கு. அட டுபுக்கே.  நிர்மலம்ங்கற வார்த்தைக்கு எதிர்பதம் தான்  மலம்.  நிர்மலன் என்ற வார்த்தைக்கு  அப்பழுக்கில்லாதவன்னு அர்த்தம் அம்புட்டுதேங்

//இனி பகவான் விட்ட வழி.//

அடங்கொய்யால பகவான் என்ன டூரிஸ் கைடா இல்லே  ட்ராஃபிக் கான்ஸ்டபிளா .. உன்னாட்டம் என்னாட்டம் அல்பங்களுக்கெல்லாம் வழி விட. பகவான் நம்மையெல்லாம் சுதந்திரமா வாழச்சொல்லி சபிச்சிருக்காரு அதை முதல்ல புரிஞ்சிக்கிடுங்க

//பிராமணன்னா பூணூல்,பஞ்ச கச்சம்,வேதம்,பொறுமை மட்டுமில்லிங்காணும். //

இன்னம் நிறைய இருக்கே நோகாம நோன்பு கும்பிடறது, அடுத்தவன் உழைப்பில் உய்யலாலா  பாடறது ,  போட்டு குடுக்கிறது, காட்டி கொடுக்கிறது, எந்த துறையா இருந்தாலும்  தன்னை சேர்ந்தவன் தான் நெம்பர் ஒன்னா இருக்கனும்னு ஒர்க் அவுட் பண்றது. சூத்திரன் நெம்பர் ஒன்னாயிட்டா அவனுக்கு பொண்ணை கொடுத்து பார்ப்பானாக்கிர்ரது..

//சாணக்கியன் பிராமணந்தான். ஆனால் தன்னை அவமதிச்ச நந்தர்களை நடுத்தெருவுல  நிறுத்தினானோன்னோ?//

தோ பார்ரா சாணக்கியன் என்ன நந்தர்களோட மக்கள் விரோத ஆட்சியை எதிர்த்து ஃபீல்டுக்கு வந்தாரா? இல்லியே சத்திரத்துல ஓசி சோறுக்கு போனாரு அங்கன மக்கள் வரிப்பணத்துல சோத்தை போட்டுட்டிருந்தா " அன்னதாதா சுகீபவா"ன்னு ஆசீர்வாதம் பண்ணிட்டு குண்டி மண்ணை தட்டிட்டு போயிருப்பாரு. அட நந்தர்களை நடுத்தெருவுல நிறுத்த வாளை தூக்கினாரா,வேட்டியை தூக்கினாரா ஊரான் பெத்த புள்ளையத்தானே கிணத்துல தள்ளி ஆழம் பார்த்தாரு.

//இன்னைக்கு நாட்டுல  உள்ள பிராமணாள் ரத்தத்துல இந்த இன்ஸ்பிரேஷன் இல்லே.//

தப்புக்கணக்கு போட்டுட்டிங்களே அய்யரே .. ஓசி சோத்துக்கு அலையறதும், உழைக்க சொன்னவனை ஒழிச்சு கட்டறதும், அதுக்கும் ஊர் பிள்ளையை முன்னே தள்ளி பலி கடா ஆக்கிறதுமான இந்த குணம் தலை முறை தலை முறையா தொடர்ந்து வந்துக்கிட்டுதானே இருக்கு

//அதனாலத்தான்  சித்தூராரோட கதை ஆட்டைக்கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில மனுஷாளை கடிச்ச கதையாகிப்போச்சு //

நாட்ல மாமியார்களும், மருமக்கள் மாரும் மிருகங்களா மாறி ஒருத்தரை ஒருத்தர் கடிச்சுக்க என்ன காரணம்னு நோண்டி நுங்கெடுத்து மனுஷாளை மனுஷாளா வாழ வைக்கிறதுதான் நம்ம உத்தேசமே தவிர கடி என்ன காக்கா கடி கூட நமக்கு வழக்கமில்லே சாரே. அதெல்லாம் உங்களாவாக்குத்தான் தகும்.

//உலகை உய்விக்க வந்த பெருமாள் மாதிரி தலையை சுத்தி பிரபையை காட்டிண்டு அபய ஹஸ்த முத்திரை  கொடுத்த சித்தூர் முருகேசன்  கடைசியில பெத்ததாயாரை கூட கேவலப்படுத்தற  நிலைக்கு வந்தூட்டார். தன்னோடது பஸ்மாசுர ஹஸ்தம்னு ருசுப்படுத்திண்டார்.//

வா வாத்யாரே!  எப்படியோ என்னை வில்லனாக்க காத்திருந்த கூட்டத்துக்கு நானே ஒரு சான்ஸ் கொடுத்துட்டாப்ல இருக்கு.  நீ என்னதான் சனங்களை உசுப்பி விட்டாலும் என் வார்த்தைகள்ள இருக்கிற சத்தியம், என் வார்த்தைகளுக்கு பின்னாடி இருக்கிற சமூக அக்கறை, மனிதாபிமானம் அவிகளுக்கு புரியும். மாமியா மருமக சண்டைக்கு பின்னாடி இருக்கிற உண்மையை புரிஞ்சிக்காம பெண்டாட்டி மோகத்துல தாயை கொடுமைப்படுத்தறது, அம்மா கோண்டுகளாகி புதுப்பெண்டாட்டிய அம்மா காரி கொளுத்த சீட்டா ஃபைட் தீப்பெட்டியாகிறதுல்லாம் கேவலமில்லையா? மனத்திரைக்கு பின்னாடி இருக்கிற பூதங்களை வெளிச்சம் போட்டது கேவலப்படுத்த இல்லே. வெட்டி மடியாம இருக்கத்தான். மாமியாரும் - மருமகளும் கத்திரியா மாறி ஆணை கொத்துக்கறி போடற அவலத்தை ஆஃப் பண்ணத்தான்.

//தெலுங்கு வலையுலகத்துலயும் இந்த அச்சு பிச்சு இப்படித்தான் உளறி கொட்டித்து ஜோட்டால அடிச்சு வீட்டுக்கு அனுப்பிட்டா.//

பார்த்தயா .. உன்னை மாதிரி ஆள்காட்டியெல்லாம் இப்படி உப்புக்காகாத மேட்டரையெல்லாம் ராஜ ரகசியம் கணக்கா வச்சு ப்ளாக் மெயில் பண்ணுவிகன்னுதான் என் வாழ்க்கையையே திறந்த புத்தகமாக்கிட்டேன்.  என் தெலுங்கு வலைப்பூ தோற்றுப்போக காரணம் அங்கன ஆரம்ப காலத்துல தமிழ் மணம் கணக்கா ஏக போக அக்ரகேட்டர்ஸ் மட்டும் இருந்ததுதான். அய்யரே நீ சொல்றது முந்தா நேத்து நியூஸ். நம்ம திக்விஜயம் தெலுங்குல முந்தா நேத்தே  ஆரம்பிச்சுருச்சுய்யா

// ஏனோ தெரியலை தமிழ்ல மட்டும்  இந்த பிரகிருதியை தட்டி கேட்க தயங்கறா.//

அதான் நீ வந்திருக்கியே தட்டித்தான் பாரேன் எல்லாம் தப்புத்தாளமாயிரும்.  ஏன்னா
என் செயல்பாட்டுல சுய நலமில்லை, தியாகம் தான் இருக்கு. நான் நினைச்சா நை நைன்னு சோசியத்தை போட்டு உழப்பி மார்க்கெட் பிக்கப் பண்ணி பணம் பண்ணலாம் . ஆனால் என் இமேஜ் பாதிக்கப்படும்னு தெரிஞ்சும் உண்மைகளை போட்டு உடைக்கிறேனே அதான் என்னோட பலம். தர்மம் எங்கே இருக்கோ அங்கனதான் பகவான் இருப்பாருனு பீத்திக்கிறிங்களே . தர்மம் இப்போ என் பக்கம் இருக்கு. கடவுளுக்கு  லெட்டர் போட்டா பகவான் கேர் ஆஃப் தர்மம் கேர் ஆஃப் முருகேசன்னு போடு . வந்து சேர்ந்துரும்.

//சைக்காலஜி,செக்ஸாலஜியெல்லாம் மெடிக்கல்ல சேர்த்தி. நம்ம கான்ஸ்டிட்யூஷன் பிரஜைகளுக்கு பேச்சுரிமை எழுத்துரிமையெல்லாம் வாரி வழங்கியிருந்தாலும் அதுக்கும் சில கட்டுப்பாடெல்லாம் இருக்கு. மெடிக்கல் சம்பந்தப்பட்ட விஷயங்களை அதுக்குரிய படிப்பை படிக்காதவா எழுதப்படாது,பிரசுரிக்கப்படாது. //

பார்த்தீரா.. எலுக்க தோலு தெச்சி ஏடாதி உத்திக்கினா  நலுப்பு நலுப்பே கானி தெலுப்பு காதுன்னு நிரூபிச்சுட்டிங்க. ( எலித்தோலை கொண்டு வந்து ஒரு வருசம் துவைச்சாலும் கருப்பு கருப்புத்தான்னு அர்த்தம்) . சைக்காலஜியும்,செக்ஸாலஜியும் வேதம்னு நினைச்சியளா? சூத்திரன் வேதத்தை கேட்டா காதுல ஈயம் காய்ச்சி ஊத்தனும், படிச்சா   நாக்கை  அறுக்கனும்னு போட்ட ஆட்டத்தை ரீப்ளே பண்ண உத்தேசமா?

சைக்காலஜி,செக்ஸாலஜிக்கெல்லாம் பேசிக் நூத்துக்கணக்கான சர்வேக்கள் மூலமா வெளிவந்த  சாமானியங்களோட் அனுபவம் தான்.  என் எழுத்துக்களை  ஒரு சர்வேல கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சொன்ன பதிலா நினைச்சுட்டு போயிர வேண்டியதுதான்.  நான் என்ன மருந்து மாத்திரையா ப்ரிஸ்க்ரைப் பண்றேன். இல்லே சிகிச்சை தர்ரேனா? என் அனுபவத்தை நான் பகிர்ந்துக்கறேன். தட்ஸால்

//ஆனால் பாருங்கோ முந்தா நேத்து கூகுல்ல போய் செக்ஸாலஜினு தேடறேன் இந்த அபிஷ்டுவோட வலைப்பூ தான் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னாலே  தெரியறது. மாத்ருபூதத்தோட விஷயம் கூட இதுக்கப்பாலதான் தெரியறது.//

என்னா அய்யரே சிண்டு முடியறியா? மாத்ரு பூதம்லாம் யந்திரன் சினிமான்னா நானு அந்த சினிமாவுக்கான   வரி விளம்பரம் ஓய்.

//நமக்கென்ன நமக்கென்னானு இருந்தா சாக்கடை தேங்கி நம்ம வீட்டுக்குள்ளாறயும் பூந்துரும். அப்பால கிருஷ்ணான்னாலும் இல்லை கோவிந்தான்னாலும் இல்லே. படிக்கிறவா "தத் வெறும் உளறல்"னுட்டு போயிர்ரதால இந்த கெரகம் பிடிச்சது என்னென்னத்தையோ குப்பையை கொண்டு வந்து  நம்ம தலைக்குள்ள  கொட்டி வைக்கறது. //

அய்யரே நீயாச்சும் லோக்கல் பார்ட்டி. நான் உங்க ஏரியாவுக்கு ஆளனுப்பி, உன் உறவுக்கார பையன் மூலமா உன்னை வரவழைச்சு என் மெயில் ஐடிய யூஸ் பண்ணாதே உனக்கே ஆபத்துனு உனக்கு நல்லதை சொன்னதுக்கு சட்டமன்றத்துலருந்து  தலை கலைஞ்சு வந்த   ஜெயலலிதா  மாதிரி ஏகத்துக்கு அலம்பல் பண்ணிட்டே . ஆனாலும் நான் பெ.மன்சத்தனமா விட்டேன். பாவம் அரண்டு போய் அய்யரு பினாத்தறாருனு புரிஞ்சிகிட்டேன். நான் நினைச்சா ஒன்னை இந்த செகண்டே ஆஃப் பண்ணமுடியும். இது நிலைமை. ஆனா நீயே இந்த கிழி கிழிக்கிறியே .. நான் சொல்றதுல தப்பு,தவறு இருந்தா உலகமெல்லாம் பரவியிருக்கிற சனம் என்னை சொம்மா  விட்டு வச்சிருக்குமா?  நான் சொல்றதுல சத்தியம் இருக்குதுய்யா . அந்த சத்தியம்தான் ஃபெவிக்கால் மாதிரி சனத்தோட வாயை அடைச்சுருக்கு.

//நானாச்சும் ஏதோ வயித்துப்பாட்டை பார்த்துண்டிருக்கிற ஹார்ட் வேர் காரன். இந்த வலையுலகத்துல எத்தனையோ அனுபவஸ்தருக, மேதாவி எல்லாம்  இருக்கா. அவாள் எல்லாம் வாயை மூடிண்டு இருந்தா இந்த அல்பம் சொல்றதுதான் சத்தியமுன்னு ஆயிராதோ? //

சாவுக்கு வான்னா காரியத்து வர்ரே. //ஆயிராதோ// என்ன ஆயிடுத்து.

//பசு வதையை ஆதரிக்கிறது//
அடங்கொக்கா மக்கா .. நான் பசு வதைய ஆதரிக்கலை சுவாமி. பசு வதைக்கான சங்கிலில முதல் கண்ணியே நீங்க தானு சொன்னேன். வெட்டறவன் திருடிட்டு போயா வெட்டறான். மடி வத்திபோச்சுனு வித்தா வாங்கிட்டு போய் வெட்டறான். மட்டன் ,சிக்கன் வாங்க வசதியில்லாதவன் வாங்கி திங்கிறான். பிணத்தை தின்னா தான் ப்ரோட்டின் கிடைக்கும்னுல்ல பருப்பு தின்னாலும் கிடைக்கும்ங்கற அறிவை தெளிவை கொடுக்காத சமூகமும் ,அரசும் கூட இதுக்கு பொறுப்புன்னு சொன்னேன்.  பசு வதைங்கறது டைரக்டிவ் ப்ரின்சிப்பிள்ஸ் ஆஃப் ஸ்டேட் பாலிசில ஏற்கெனவே இருக்கு. அதை சட்டமாக்கிறதை, அதை மதம் சார்ந்த விஷயமா மாத்தறதைதான் வெளிச்சம் போட்டேன். காரணங்களை ஒழிச்சு கட்டாம பசுவதையை பத்தி வாய் கிழிய பேசறது ரெட்டை வேடம்னு சொன்னேன் தட்ஸால்.

// கீதை உட்டாலக்கடிங்கறதுல்லாம் பைத்தாரத்தனமோல்லியோ.//
இல்லேன்னுதான் நான் நினைக்கிறேன். ஒரே ஒரு ஸ்மார்ட் டமில்ங்கற பார்ட்டியும், அவரோட பினாமி மறுமொழியாளர்களையும் தவிர யாரும் எதிர்க்கலியே.

// ஒரு தாயார் ஒரு குழந்தைய பெத்து போட்டுட்டு பரமபதிச்சுட்டா ஒரு பசுவை வச்சு அந்த குழந்தைய வளர்த்துரலாம். அந்த  பசுவையே கொல்றதை ஒரு ஜென்மா நியாயப்படுத்தறதுன்னா என்ன சொல்ல?//

இதுக்கு ஏற்கெனவே பதில் சொல்லியாச்சு.

//ஆதிசங்கராச்சாரியார்லருந்து பாலகங்காதர திலகர் வரை எத்தனையோ ஞானிகள் கீதைக்கு பாஷ்யம் எழுதினாளே அவாளுக்கெல்லாம் வராத சந்தேகம் இந்த அறிவுகொழுந்துக்கு வந்திருக்கு.//

கலிலியோவுக்கு முந்தி எத்தனையோ விஞ்ஞானிகள் இருந்தாய்ங்க. ஆனா கலிலியோ வந்துதான் பூமி உருண்டையா இருக்குன்னு சொன்னாரு. அதுக்காக அவர்க்கு முந்தி இருந்த விஞ்ஞானிகள்ளாம் முட்டாள்கள்னு அர்த்தமா?

//கிருஷ்ணன் நிஜமாம். கீதை நிஜமாம் .ஆனா அதுல பிராமணாள் கலப்படம் பண்ணூட்டாளாம். அட இழவே ஒன்னை மாதிரி ரெண்டுங்கெட்டானை விட கடவுளே இல்லைன்னு சொன்ன ராமசாமி நாயக்கரே மேல்.//

என்னா அய்யரே ரெண்டும் கெட்டான்னா கேவலமா? புத்தர் உண்மை அந்த முனையிலயும்  இல்லே இந்த முனையிலயும் இல்லேங்கறாரு. கீதையில கண்ணன் தூக்கமில்லாதவனுக்கும் யோகமில்லே. தூங்கு மூஞ்சிக்கும் யோகமில்லே. பட்டினி கிடக்கிறவனுக்கும் யோகமில்லே. தின்னி பண்டாரத்துக்கும் யோகமில்லேங்கறாரு.ஆக ரெண்டுங்கெட்டானுக்குத்தான் மவுசுய்யா.  நான் ரெண்டுங்கெட்டானா மையத்துலயே நின்னுட்டு போறேன். 


//இந்த மாதிரி அரைவேக்காட்டுத்தனமா உளர்ர இந்த பன்னாடைக்கு பல்லு மேல நாலு போட்டு அடக்கறதை விட்டுட்டு வெறுமனே வேடிக்கை பார்த்துண்டிருந்தா எப்படி?//

அடங்கொக்கா மக்கா .. நீங்க "சஹனாவவது சஹனவ் புனக்து சஹவீர்யம் கரவாவஹே தேஜஸ்வினா வதீதமஸ்து. மாவித் விஷாவஹே ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி"ன்னு ஸ்லோகம் சொன்ன பரம்பரையா?

நீ பயப்படாதே அய்யரே .. நாம வால்டேர் ரேஞ்சு " நீ சொல்றதை நான் எதிர்க்கிறேன். ஆனால் உன் கருத்தை சொல்ற உரிமையை காப்பாத்த என் உயிரையும் தருவேன். உன்னை மாதிரி பல்லு மேல போடு லுல்லா மேல போடுன்னெல்லாம் வன்முறைய தூண்டமாட்டேன்.

//இதை இப்படியே  விட்டு வச்சா இதெல்லாமமெங்கே போய் நிக்க போறதோ புரியலை. இந்த ஆலாலத்தை நாம மட்டும் படிச்சா பரவால்லே. குழந்தேள் படிக்கறா, சின்னவயசுக்காரா படிக்கிறா. பொம்மனாட்டிகளும் படிக்கிறா. //

அட அட என்ன ஒரு சமூக அக்கறை.. நீங்க மட்டும் குருவோட மனைவியை சந்திரன் அஜால் குஜால் பண்ணிட்டாரு. அதுல பிறந்தவர்தான் புதன்னு சரோஜா தேவி நாவல் ரேஞ்சுக்கு எழுதி வைக்கலாம். நாங்க ஜஸ்ட் அனலட்டிக்கலா எழுதினா கெட்டுப்போயிருவாளா? "குழந்தேளுக்கு"  புரியாது. சின்ன வயசுக்காரா படிக்கனும்னுதான் கில்மா எல்லாம் சேர்த்து எழுதறேன். ஆனா என்ன பண்றது என் வலைப்பூவை படிக்கிற எல்லாரும் 30 முதல் 40 வயசுக்காராத்தான். பொம்மானாட்டிங்கங்கறேளா அவா கோலம், சமையல், விளக்கு பூஜை, விரதம் தவிர வேற படிக்கிறதில்லேன்னு விரதம் இருக்காய்ங்க.

//இந்த அபிஷ்டு உளர்ரதையெல்லாம் நெஜமுன்னு நம்பி வச்சதுங்கனா வேற வம்பே வேணாம். மண்டை கலங்கினாலும் சொஸ்தப்படுத்திரலாம். நாண்டுக்கிட்டு செத்தா யார் பொறுப்பு.//

மண்டை கலங்கறதா? அங்கே கலங்க இன்னும் என்னத்தை மிச்சம் வச்சிருக்கேள். அதான் வெறும் மண்ணாங்கட்டியை போட்டு திணிச்சு வச்சிருக்கேளே. மெக்காலே பிரபுவோட கல்வித்திட்டத்துக்கு கூட நம்மவா தானே காரண பூதமா இருந்திருப்பா, ப்ரப்போசல்,ட்ராஃப்டிங், ஸ்க்ரிப்ட் எல்லாம்  நம்மவாதானே நாண்டுகிட்டு சாகிறதா? கிழிஞ்சது போம்.. இத்தனை அம்பேத்கர்,இத்தனை பெரியார் வந்தும்,   ரிசர்வேஷன் இருந்தும் உம்மை கொட்டத்தை அடக்க முடியாத நிலைக்கு தற்கொலை பண்ணிக்காதவாளா என் எழுத்தை படிச்சு தற்கொலை பண்ணிக்கபோறாய்ங்க. ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கிறதுன்னா இதான் போலும்.

//சத்தியம் செருப்பை போட்டுக்கறதுக்கு முந்தி பொய் ஊரெல்லாம் சுத்தீட்டு வந்துரும்ங்கற மாதிரில்ல இருக்கிறது கதை. அனுபவம் அனுபவம்னு பீத்தறது.  எனக்கு இந்த விஷாயத்துலல்லாம் அனுபவம் கிடையாதுதான்.ஆனா அனுபவஸ்தாளெல்லாம் மவுனமா இருந்துரலாமோ?//

அனுபவமில்லேனு நெஜத்தை சொன்னதுக்கு வாழ்த்துக்கள். சற்றே தள்ளியிரும் பிள்ளாய். உம்மால முடியாத குறைக்கு ஊர்ல இருக்கிறவாளை எல்லாம் உசுப்பி விடறீரோ.

//ஒரு வேளை இந்த ஊத்தை வாய்க்கு பயப்படறாளோ? தாயார் பிள்ளையோட படுத்துண்டுரனும்னு உள்ளூர   நினைக்கிறாளாம்.  அதுக்கு என்னைக்கோ ஒரு நா வாய்ப்பு ஏற்படும்னு காத்துண்டிருக்காளாம்.  மாட்டுபெண் வந்ததும் அந்த சான்ஸு போயிர்ரதேனு பதறிப்போறாளாம் . மாமியார் மருமா சண்டைக்கு இப்படி ஒரு வியாக்யாணத்தை என் வாழ் நாள்ள கேட்டதில்லை. //

மருமகளை பத்தி பேச்சு வர்ரச்ச "வந்தாளே என் சக்களத்தி"னு ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல புலம்பாத மாமியார் கிடையாதுய்யா. தீக லாகிதே டொங்க கதிலிந்தி . தீகனு அடுகு.

//இந்த வரிகளையெல்லாம் அடிச்ச கைக்கு குஷ்டம் வராதோ?//

யார் கைக்கு? என் கைக்கு.. என்ன வரனும்? குஷ்டம் வரனுமா? அதுசரி.. இந்த கை யார் யாருக்கு இன்னா இன்னா எம்.ஜி.ஆர் வேலை பண்ணியிருக்குன்னு ஊருக்குள்ள விஜாரி நைனா. அதுக்கப்பால சாபம் விடு. இந்த மாதிரி தான்  ரெண்டு வட்டிக்கு என் கிட்டே பணத்தை வாங்கி ஏப்பம் விட்டு சட்டம் பேசின பிள்ளைக்கு வக்காலத்து வாங்கி ஒரு கிழவி சாபம் விட்டா. அவ விட்ட ஒரே வாரத்துல தாளி ஜன்னல்ல தூக்கு போட்டு செத்தா. சாக்கிரதை. "செல்லாவிடத்து சினம் தீது" சாபம்லாம் பலிக்கலைன்னா ரிவர்ஸ் ஆயிரும்ல. உன் ரேஞ்சுக்கு நகசுத்தி வரணும்னு சாபம் விடுய்யா

// இந்த அட்டகாசத்தை தட்டிக்கேட்காதவா மட்டுமென்ன தண்டனையிலருந்து தப்பவா முடியும்?  பழி பாவத்துக்கு அஞ்சாத ஜென்மா இருந்தென்ன லாபம். //

அடத்தேரிக்க .. சனத்துக்கும் சேர்த்து சாபம் விடறியா? நீ விளங்குனாப்ல தான். வயித்து பொழப்ப மட்டும்  பார்த்துக்க அய்யரே .. ஊர் பஞ்சாயத்துன்னா தமாசுல்ல. சில சமயம்  குதத்துலருந்து ரத்தம் குடம் குடமா கொட்டும். அதையெல்லாம் எப்படி சமாளிக்கிறதுன்னு  மொதல்ல நம்ம கிட்டே ட்யூஷன் எடுத்துக்க. அப்பாறம் சபிக்கலாம்.