Wednesday, May 19, 2010

பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி: 10

அண்ணே வணக்கம்ணே,
பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி தொடர்பதிவின் மீது முதல் முறையாக ஒரு  ஸ்மார்ட் என்பவரிடமிருந்து பகிரங்க எதிர்வினை வந்திருக்கு. அதை படிக்க இங்கே அழுத்துங்க. திருவாளர் ஸ்மார்ட் என்பவரின் மேற்படி எதிர்வினைக்கு எனது விளக்கத்தை படிக்க இங்கே அழுத்துங்கள். ம'ரு' மொழி போடுவோர் கவனத்துக்கு என்ற எச்சரிக்கை பதிவை படிக்க இங்கே அழுத்துங்க.

(வரவர நம்ம வலைப்பூ கவர்ன்மெண்ட் ஆஃபீஸ் மாதிரி ஆயிருச்சு கச்சா முச்சானு அழுத்த சொல்ற நிலைமை வந்துருச்சு)

ஓகே இப்போ பதிவுக்கு போயிரலாம்.

ஓரிடத்துல கருமயோகமும், கரும சன்னியாசமும் (ஆன்மீகம்) ஒன்னுதான்னு சொன்ன கீதாசிரியர் இன்னொரு இடத்துல கரும சன்னியாசத்தை விட கரும யோகமே பெட்டர்னாரு. மறுபடி பார்த்தா

//எவனொருவன் ஆன்மிகமும் செய்கை செய்வதும் ஒன்றே என்று தெளிவு பெறுகிறானோ அவனே விவரம் தெரிந்தவன்.//ங்கறாரு.

ஆன்மீகமும்,  செய்கையும் (கர்ம யோகமும்)  ஒன்னுதானு தெளிவடைஞ்சவன் தான் விவரம் தெரிஞ்சவன்னு கீதை சொல்லுது.

இது 100%  உண்மை. ஏற்கத்தக்கது. பின்பற்ற தக்கதுன்னா அப்புறம் எதுக்கய்யா இத்தனை கோவில், இத்தனை மடம், இத்தனை வேத பாடசாலை இழுத்து மூடுங்கய்யா எல்லாத்தயும். வாங்கய்யா கங்கைக்கு காவிரிக்கும் மத்தில கால்வாய் வெட்டுவம்.

இந்து மத சாரம்னு சொல்றிங்களே அந்த  கீதையே சொல்லுதே ஆன்மீகமும், செய்கையும் ஒன்னுதான்னு. இதைவிட வேற ஆத்தன்சிட்டி என்ன வேணம்? இருக்கிற கோவில் இத்யாதியெல்லாம் மூடிருவிங்களா? செத்தாலும் மூட மாட்டிங்க. ஏன்னா அதுல தான் உங்க பிழைப்பு ஓடுது.

இங்கே நான் குறிப்பிடுவது பிரபலமாயில்லாத  கோவில்கள்ள  வெறுமனே பூசை,புனஸ்காரங்களுக்கு, தங்களை அழைக்கிற வீடுகள்ள  வைதிக கர்மங்களுக்கு  பரிமிதமான அர்ச்சகர்களை அல்ல . இவிக நிலை (பந்தாவை விட்டுட்டு பார்த்தா) செருப்பு தைக்கிறவக, துணி வெளுக்கறவக, பார்பர்ஸை விட மோசம். 

அதனாலதான் இவிகளுக்கு மதவாத சக்திகள் கிறிஸ்தவர்னு சேறுவாரி இறைச்ச டாக்டர் .ஒய்.எஸ்.ஆர் மாதசம்பளத்துக்கு ஏற்பாடுபண்ணார். சிரம தசைல இருக்கிற கோவில்களுக்கு தீப,தூப,நைவேத்தியங்களுக்கு ஒரு அமவுண்ட், இவிக வயித்துப்பாட்டுக்கு ஒரு அமவுண்ட் மாசாமாசம் செக் வடிவத்துல வர்ர மாதிரி வழி பண்ணாரு. ( சாமிக்கு ரூ 1000 ஆசாமிக்கு ரூ.1,500)   இதை நான் விமர்சிக்கலை. ஏன்னா கோவிலுங்கற பின்னணி, பஞ்ச கச்சம், பூணூல், சாதி அகங்காரம் இதையெல்லாம் மீறி அவிக ஏழைங்க.

என்.டி.ஆர் " சமுதாயமே என் கோவில். ஏழை மக்களே என் தெய்வங்கள்"னு சொன்னாரு. நானும் அதை ஏத்துக்கறேன். லாங் ரன்ல இவிகளுக்கெல்லாம் ஆல்ட்டர் நேட்டிவ் சோர்ஸ் ஆஃப் இன்கம்கு ஏற்பாடு பண்ணி  அவனவன் போய்  சாமி கும்பிட்டுட்டு வர்ர மாதிரி பண்ணிரனும். இதான் நம்ம ஸ்டாண்ட்.

திருச்செந்தூர், திருத்தணி, பழனி, திருமலை,காளஹஸ்தி மாதிரி பிரபல கோவில்கள்ள இந்த பிராமணோத்தமர்கள் பண்ற அலப்பறைக்கு அளவே கிடையாது. வர்ர வி ஐ பிங்களுக்கு எல்லாத்தயும் திறந்து காட்டி மஸ்கா அடிச்சு, லாபியிங், பவர் ப்ரோக்கரிங், பத்து வட்டினு ஒரு   மாஃபியாவே மெயிண்டெயின் பண்றாய்ங்க. திருமலைல டாலர் சேஷாத்ரினு ஒரு அய்யரு. பக்தர்களுக்கு விற்பனை செய்யனு தயாரிச்ச பெருமாள் உருவம் பொறிச்ச தங்க  டாலர்களை  கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைச்ச கணக்கா வி.வி.ஐ.பிக்களுக்கு அள்ளிவிட்டு  நிழல் நிர்வாகம் நடத்திக்கிட்டு வந்த பார்ட்டி. சுப்ரீம் கோர்ட்லயே இந்த அபிஷ்டுவை கோவில்ல சேர்க்காதிங்கனு தீர்ப்பு கொடுத்தாய்ங்கன்னா பார்த்துக்கங்க.

என் பாய்ண்ட் ஒன்னுதான் கீதை உண்மை. அதை சொன்னது கண்ணன். அது இந்து மதத்து வேதங்கள்,உபனிஷதங்கள், பதினென் புராணங்களோட சாரமிது , அதெல்லாத்துக்கும் பிரமாணம் இதுனு   நீங்க  ஒத்துக்கிடறிங்களா? இழுத்து மூடுங்கய்யா எல்லா கோவிலையும். இருக்கிற வேதம்,உபனிஷத் எல்லாத்தையும் பொருளோட (அதுல சரக்கு இல்லைனு தயங்கறிங்களா நீங்க பூச்சி காட்டற உட்பொருளை  டிஜிட்டலைஸ் பண்ணி 24 மணி நேரம் ஒலி பரப்பிக்கோங்க வேணாங்கலை.

இருக்கிற கோவில்  ஐயருக்கெல்லாம் (பிரபலம் & நான் பிரபலம்) சித்த வைத்தியம், யோகாசனம், நோய் தடுப்பு, முதலுதவின்னு ட்ரெயினிங் கொடுங்க. இருக்கிற கோயிலெல்லாம் கலைக்கூடமாகட்டும், இயற்கை வைத்தியத்தை தர்ர மருத்துவ மனைகளாகட்டும், மூலிகை பண்ணைகளாகட்டும்.

ஆன்மீகமும், செயலும் ஒன்றேன்னு தெரிஞ்சவன் தான் புரிஞ்சவன் தான் விவரம் தெரிஞ்சவன்னு  கீதையே சொல்லுதே . சொல்லி இத்தனை ஆயிரம் வருஷமாச்சு. இன்னமும் விவரங்கெட்டவுகளா இருந்தா அசிங்கமில்லியா? 

இதையெல்லாம் செய்து விவரம் தெரிஞ்சவங்களா தங்களை தாங்கள் எஸ்டாப்ளிஷ் பண்ணிக்குவாங்கனு நீங்க எதிர்பார்த்தா ஏ.............மாந்து போயிருவிங்க. காரணம் என்னடான்னா....

இவிகளுக்கு கண்ணன் மேலயோ, கண்ணனோட வாக்கான  கீதை மேலயோ ஒரு நயா பைசா மதிப்பு கூட கிடையாது. இவிகளுக்கு தேவை இவிக பிழைப்பு ஓடனும்.அதுவும் அடுத்தவன் உழைப்புல ஓடனும்.

ஆன்மீகம்/ கரும சன்னியாசம் இப்படி எந்த பேரை சொன்னாலும் இதெல்லாமே சமூகத்தில் சிறப்பு  சலுகைகளை எதிர்பார்த்து, உழைப்பிலிருந்து தப்பிக்க உதவுற மார்கங்கள் தான். அதுக்கான வியூகங்கள் தான்.

செக்ஸ் எஜுகேஷன் பத்தி ஒரு படம் வந்து சக்கை போடு போட்டது ஞா இருக்கலாம். பேரு ஞா இருக்கா "குப்த் ஞான்" .குப்த என்றால் ரகசியம்னு அர்த்தம். உண்மையான் ஆன்மீக வாதி தன்னை வெளிச்சம் போட்டுக்கவே மாட்டான் . அவனுக்கு குப்த யோகின்னு பேரு.

தெலுங்குல ஒரு பழமொழி உண்டு. " கன்சு ம்ரோகினட்டு கனகம்பு ம்ரோகுனா" பித்தளை ஒலிக்கிற மாதிரி தங்கம் ஒலிக்குமாங்கறது இதனோட அர்த்தம்.

நான் மறுபடி மறுபடி சொல்றேன் மதம்,ஆன்மீகம்லாம் காலைக்கடன் கழிக்கிற மாதிரி அதை ரகசியமா வச்சுக்கனும். அதைக்காட்டி உழைப்புல இருந்தோ,சமூக கடமைகள்ள இருந்தோ விதிவிலக்கு கேட்கிறது, சிறப்பு சலுகை கேட்கிறதெல்லாம் அசிங்கம்.

ஓஷோ சொல்வாரு " சரியான ஆளு தப்பான வழில போனாலும் சரியான இடத்தை போய் சேர்ந்துருவான். தப்பான ஆளு சரியான வழில போனாலும் வழி தவறிடுவான்"
இவிக தப்பான ஆளுங்க. அதனால தான் கீதையே சரியான வழிய காட்டியும் தப்பான வழில போறது மட்டுமில்லாம சனத்தையும் மிஸ் கைட் பண்ணிக்கிட்டு பிழைப்பை நடத்தறாய்ங்க.

சக மனுஷனை எந்த விஷயத்துல வேணம்னா ஏமாத்திரலாம் ஆனால் அவன் கெட்டு நொந்து  நூடுல்ஸாகி  சரண் புகும் இடம் ஆன்மீகம். அதுல கூட அவனை ஏமாத்தினா/ஃப்ராட் பண்ணா, பண்ணினவன்  மனுஷனே கிடையாது. மிருகம்.

கர்ம சன்னியாசம், கர்மயோகம் பத்தி ஓஷோ நச்சுனு ரெண்டு வரி சொல்லியிருக்காரு.

கர்ம சன்னியாசம்: செயலின்மையில் செயல்படுதல்
கர்மயோகம்: செயலில் செயலற்று இருத்தல்.

இந்த ரெண்டு பாயிண்டை புரிஞ்சிக்கிடனும்னா நீங்க இயற்கையோட இணக்கமா இருக்கனும். அப்பத்தான் மேற்படி கர்ம சன்னியாசம், கர்ம யோகம் ரெண்டுமே ஒன்னுங்கற சத்தியம் புரியும் . கீதை இயற்கைக்கு எதிரா போராடச்சொல்லுதே. புலனடக்கத்தை உபதேசிக்குது. நீங்க உங்க புலன் களோட போராட ஆரம்பிச்சுட்டா உங்களுக்குள்ள இரட்டை தன்மை ஏற்பட்டுரும். நீங்க உங்களோடவே போராடி சாகவேண்டியதுதானே தவிர..ஒரு வெண்ணையும் சாதிக்க முடியாது. உங்க உள் மனப்போராட்டம் காரணமா கர்ம சன்னியாசமும் ஃபணால். கர்ம யோகமும் ஃபணால்.

கர்ம சன்னியாசம்னா  செயலின்மையில் செயல்படுதல்:
கர்மயோகம்னா செயலில் செயலற்று இருத்தல்:

இந்த மாதிரி ஒரு விளக்கத்தை யாராச்சும் ஒரு பஞ்ச கச்சம்  ஏற்கெனவே சொல்லியிருந்தா சொல்லுங்கய்யா. அவிக தப்பான ஆளுங்க அதனாலதான் சரியான விஷயங்களை கூட தப்பா ஆக்கிட்டாய்ங்க. கண்ணன் சொன்ன கீதை சரியானதாதான்   இருந்திருக்கனும். ஏன்னா கண்ணனோட கேரக்டர் அப்படி..அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படி. வாழ்க்கை பற்றிய அவரோட அவுட் லுக் அப்படி.

ஆனால் அதை பகவத்கீதைங்கற பேர்ல   தொகுத்த பார்ட்டி, அந்தாளோட இனம், நோக்கம் எல்லாம் சேர்ந்து கீதைய  சொதப்பிருச்சு.

கர்ம சன்னியாசம்னா  செயலின்மையில் செயல்படுதல்:
கர்மயோகம்னா செயலில் செயலற்று இருத்தல்:

இதை ஓஷோ சொன்னாருன்னு கோட் பண்ணேன். இது சொம்மா எடுத்தாள்ற விஷயமில்லே. எடுத்து காட்டற விஷயம் இல்லே. என் வாழ்க்கைல நான் ஃபேஸ் பண்ண விஷயம்.


கர்மயோகம்னா செயலில் செயலற்று (பற்றற்று/பலனில் நினைவற்று) இருத்தல்:

திருப்பதி மலை மேல கி.பி.1900ல  நிலவிய என்விரான்மென்டை, நாவல்ட்டிய மறுபடி கொண்டுவரனுங்கற நோக்கத்தோட திருமலா விஷன் 1900 னு ஒரு ப்ராஜக்ட் ப்ரிப்பேர் பண்ணேன். அப்போ இருந்த  தி.தி.தே நிர்வாக அலுவலர் , சேர்மன், மந்திரி,முதல் மந்திரி எல்லாருக்கும் அனுப்பினேன். நெம்பர் ஆஃப் டைம்ஸ் ரிமைண்ட் பண்ணேன். ஆக்சுவலா நான் விக்கிரகாராதனைக்கு எதிரானவன். (குறிப்பிட்ட காலம் வரை குழந்தைங்களோட நடைவண்டி மாதிரி உபயோகிக்கலாம்ங்கறது நம்ம ஸ்டாண்ட்.) இருந்தாலும் திருமலா விஷன் 1900
அமலுக்காக சின்சியரா ட்ரை பண்ணேன்.  ஜஸ்ட் கொரியர் தபால், தந்தி, மெயில் தான். ஃபைலை தூக்கிக்கிட்டு ஆஃபீஸ் சுத்தி பிரதட்சணம் பண்றது . லாபியிங் பண்றது, ரெகமெண்டேஷன் தேடறது இதையெல்லாம் செய்யலே. ( செய்ய முடியும்ங்கற நிலை இருந்தாலும்) இதான் கர்ம யோகம். செயலில் செயலற்று (பற்றற்று/பலனில் நினைவற்று) இருத்தல்.

இந்த விஷன் அமலானா எனக்கென்ன தரப்போறானுக. ஒன்னு மண்ணும் கிடையாது. சப்போஸ் தேவஸ்தானம் என் விஷனை அண்டர் டேக் பண்ணி அப்படியே அமல் படுத்தினாலும் எல்லா பிரபல புண்ணிய க்ஷேத்திரங்களுக்கும் அப்ளை பண்ணனும்னு கேட்க ஒரு கிரவுண்ட் ஏற்பட்டிருக்கும் தட்ஸால்

சரி சில காலம் கழிச்சு இந்த கொரியர் தபால்/ ஆர்.பி க்கெல்லாம் தடா போட்டுட்டு பொழப்பை பார்த்துக்கிட்டிருந்தேனா அப்போ என்னாச்சுன்னா..

கர்ம சன்னியாசம்னா  செயலின்மையில் செயல்படுதல்:
திருமலா விஷன் 1900 ஐ திராட்டில விட்டாச்சு.  2008 நவம்பர் தெலுங்குல ஒரு ப்ளாக் ஆரம்பிச்சேன்.  http://www.blaagu.com/swamy7867 . 2009 மே வரை நம்ம ப்ளாக் புலின்னா புலி தான். ஜஸ்ட் ஆறுமாசத்துல 25,000 ஹிட்ஸ் .பயங்கர காண்ட்ரா வர்சி. சித்தூர் பாலிட்டிக்ஸ்ல நான் சி.கே பாபுவோட ஆதரவாளன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஆதி கேசவுலுக்கும், சி.கே வுக்கும் இடையில வெட்டுப்பழி கொலைப்பழி. எம்.பியோ ஆட்க்ள் சி.கே.வை ரெண்டு த்டவை கொல்லப்பார்த்தாய்ங்க. முத தடவை துப்பாக்கில சுட்டப்ப  நோ இஞ்சுரி.ரெண்டாம் தடவை கண்ணி வெடி வெடிச்சப்ப மட்டும் லேசான காயம். நம்ம லோக்கல் பேப்பரான இண்டியன் பொலிட்டிக்கல் க்ளோசப் இதழ்ல எம்.பி யை கிழி கிழினு கிழிச்சு எழுதியிருக்கன். இந்த பின்னணில என்னோட திருமலா விஷன் 1900 ப்ராஜக்ட்ல இருக்கிற முக்கிய அம்சங்களை எல்லாம் இப்போ தி.தி.தே சேர்மன் ஆதிகேசவுலு ஒவ்வொன்னா அமல்படுத்திக்கிட்டிருக்காரு. உ.ம் பெருமாள் ந்கைகளையெல்லாம் எஸ்.பி.ஐல கோல்ட் இன்வெஸ்ட்மென்ட் ஸ்கீம்ல வச்சது. ஹௌ இட் ஹேப்பண்ட்ஸ்? இதான் கர்ம சன்னியாசம். செயலின்மையில் செயல்படுதல்.

நாரத பக்தி சூத்திரத்துல இருந்து ஒரு விஷயம்  " இந்த உலகத்துல எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை விதமான பக்தி மார்கங்கள் உண்டு"

ஆனா கீதை கர்ம யோகம், கர்ம சன்னியாசம்னு ரெண்டு கான்செப்டை மட்டும் ப்ரப்போஸ் பண்ணி ரெண்டுமே ஒன்னுதான்னு "நான் - ப்ராமின்ஸ்"க்கு காதுல பூ சுத்துது. அல்வா கொடுக்குது.

இவிக ( நான் ப்ராமின்ஸ்) கர்ம சன்னியாசத்தை பின் பற்றவே முடியாது. இவன் எப்படியும் கர்ம யோகத்தை தான் ஆப்ட் பண்ணுவான்.  நாம கர்ம சன்னியாசத்தை ஆப்ட் பண்ணி நோகாம நோன்பு கும்பிடலாம். கர்ம யோகத்துல  இருக்கிறவன் தான்  பலனையே எதிர்பார்க்க கூடாதே. அந்த பலனையும் தாங்களே சேர்த்து அனுபவிக்கலாம்ங்கறதுதான் இவிக சதி.

இந்த படைப்புல/அதுலயும் ஆன்மீகத்துல  எந்த ரெண்டு அம்சமும் சமமானது அல்ல. அல்ல.அல்ல. அப்படி ஏதாவது ரெண்டு அம்சம் சமம்னு எவனாச்சும் சொன்னா அவன் தன் ஆன்மீக பயணத்தை முடிச்சிட்டான்.இலக்கை அடைஞ்சிட்டானு அர்த்தம் அல்லது பயணத்தை துவக்கவே இல்லைனு அர்த்தம்.

இந்த கீதையில வர்ர குழப்படிய பார்த்தா கீதாசாரியர் பயணத்தை முடிச்சவரா தோணலை ஆரம்பிக்கவே இல்லைனு தான் தோணுது



(தொடரும்