Wednesday, October 31, 2007

ஜெயாவுக்கு மீண்டும் கணிப்புகள்


என் வாழ்வில் மட்டுமா எல்லோர் வாழ்விலும் இப்படியா தெரியவில்லை. சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கின்றன.


1997 ல் லட்சத்து இரண்டாயிரம் வந்த போது 2 ரோல் படம் எடுத்தேன். அப்போதும் கேமரா இருந்தது. இப்போதும். ஆனால் அப்போது நான் பிரபல நடிகர்களின் நகலாக படமெடுத்துக் கொண்டேன்.


இப்போது எனக்கென்று இறைவன் அளித்த தகுதிகளை வெளிப்படுத்தும் வண்ணம் எடுத்து கொண்டேன். ஒரு ஜோதிடனாக,ஒரு நிருபனாக அடையாளம் காணும் வண்ணம் எடுத்து கொண்டேன். இது வளர்ச்சிதான் என்பது என் நம்பிக்கை


மேலும் இம்முறை நோ ப்ரிண்ட்ஸ். சி.டி.யில் பெற்றுக்கொண்டேன். அப்போதும் படங்களில் சுமாரானவற்றை பொறுக்கி லே அவுட் செய்ய முயன்றேன். முடியவில்லை. இப்போது கணிணி இருப்பதால் அது ஜுஜுபி.


நிறக நான் சொல்ல வந்தது வேறு.. ஒரிஜினலாக உள்ள பிரச்சினைகளை விட்டு மனைவி,மகளிடம் மாரடிப்பதிலேயே என் நல்ல நேரம் எல்லாம் காலியாவது வழக்கம். இம்முறை அதை தவிர்க்க வேண்டும்.தினத்தந்தியில் இருந்த படியே :


1.ஐ.பி.சி பதிவுக்கு முயற்சி செய்ய வேண்டும்.


2.ஜோதிடனாக பிரபலமாக வேண்டும்.(ஜெயாவுக்கு மீண்டும் கணிப்புகள்)

3.டிஜிட்டல் போர்டு4.டிஜிட்டல் பேனர்5.வெப் சைட்டுக்கு விளம்பரம் (முடிந்தால் என்ன கட்டாய பேனல் விளம்பரம்)6.ஸ்டார்,டேக்ஸி,தனஞ்சயன்,பரசு பிரச்சினைகளை முடிக்க வேண்டும்.