Sunday, October 7, 2007

வைரமுத்து கவியரசா? கவி சிப்பாயா?

அழுது கொண்டும்,மூக்கை சிந்திக் கொண்டும் சாதாரண வரிகளை எழுதி அந்த சந்தர்ப்பங்களை போட்ட கோலம் என்ற தலைப்பில் புத்தகமாகவும் எழுதி வெளியிட்டுக் கொள்ளும் வைரமுத்துவை கவியரசு என்று விமர்ஸ‌கர்கள் ஒப்புக்கொண்டு விட்டதாகவே தெரிகிறது.

தயிர் வடை சாப்பிட்ட படி தெலுங்கு திரைப் பாடலாசிரியர் வேட்டூரி சுந்தர ராமமூர்த்தி எழுதிய இரண்டே வரிகளை கீழே தருகிறேன் (பொருளையும் தான்) இதையும் படித்து விட்டு முடிவு செய்யுங்கள். வைரமுத்து கவியரசா? கவி சிப்பாயா? என்று.

"மாட்டலகே அந்தனி மனஸு
சூப்புலதோ தெலுசுகோ
ரெப்பவலே காஸுகோ"

தந்தை தன் கண்ணில்லாத மகளுக்கு திருமணம் நடத்தி மாப்பிள்ளையுடன் வழியனுப்பும்போது மாப்பிள்ளைக்கு கூறுவது போல் வரும் வரிகள் இவை.

இதற்கான பொருள்:

வார்த்தைகளுக்கே எட்டாத மனதை பார்வைகளால் புரிந்துக்கொள்
இமை போல் காத்திரு
இப்போது முடிவு செய்யுங்கள் ..வைரமுத்து அரசா? சிப்பாயா?