Sunday, May 16, 2010

பகவத்கீதைஒரு உட்டாலக்கடி : 8

பகவத்கீதைஒரு உட்டாலக்கடி தொடர்பதிவுல உச்ச கட்டத்துல இருக்கோம். செயல்  நல்லதா? அல்லது /செயலின்மை  நல்லதா?

அதாவது கர்ம யோகமா ? சன்னியாச யோகமா?ன்னு கண்ண பரமாத்மா (?) சொல்ற கட்டத்துக்கு வந்திருக்கோம்.

கிருஷ்ணர் ரெண்டையும் ஒன்னா சேர்த்து சொல்றார். இதனால உனக்கு  குழப்பமான்னு அர்ச்சுனனை கேட்கிறதோட  (மேற்சொன்ன) // இரண்டிலும் செயலை துறப்பதை காட்டிலும் செயலை செய்வதே சிறந்தது//ன்னு கன்க்ளூட் பண்றார்.

இது எந்த ஊரு தர்க்கமோ புரியலை. ரெண்டுமே நல்லதுன்னு சமமானதுன்னு சொல்லிட்டு வந்த  பார்ட்டி (கீதாசிரியர்) ) படக்குனு ஒரு அந்தர் பல்ட்டி அடிச்சு  . செயலை துறப்பதை காட்டிலும் செயலை செய்வதே சிறந்ததுங்கறாரே. ஏன்னு சிண்டை பிச்சுக்காதிங்க.

இப்போ செலாவணில கீதைய சொன்னது கண்ணன் கிடையாதுங்கறதால இந்த ஸ்டேட்மெண்டை சீரியஸா எடுத்துக்காதிங்க தலைவா!

ஆனா இந்த ஸ்டேட்மெண்டுக்கு பின்னாடி இருக்கிற பார்ப்பன சதியை ஸ்மெல் பண்ணி  உணரப்பாருங்க. ( ரொம்பவே நாறும்)

செயல்னு வரும்போது அவா என்னத்த செயல்களை செய்து வெட்டி முறிக்கிறாய்ங்க  காயத்ரி, சந்தியா வந்தனம், அக்னி ஹோத்ரம், வேத அத்யயனம் யாகம் இந்த மண்ணாங்கட்டியெல்லாம் நின்னுப்போனா உலகத்துக்கு வர்ர நஷ்டமேதுமில்லே.

ஆனால் மத்த வர்ணத்தார் எல்லாம் செயலின்மைய அடாப்ட் பண்ணிட்டா என்னாகும்? எதிரி நாட்டு அரசர்களிடமிருந்து காப்பாத்த சைனியம் இருக்காது,  யதேஷ்டமா கிடைக்கிற இடத்துல இருந்து லேசில்  கிடைக்காத இடத்துக்கு பொருட்களை பெயர்த்து கொண்டு வந்து விக்க ஆள் இருக்காது.  காடு திருத்தி,கழனியாக்கி உழுது பயிரிட ஆள் இருக்காது. அதனால தான் நூலாசிரியர் செயலின்மைய மட்டம் தட்டி  செயலுக்கு ஓட்டுப்போடறாரு.

தர்க்கப்படி யோசனை பண்ணா செயல்ல இறங்கி , அதனுடன் ஒட்டாம, பலனை எதிர்பார்க்காம கர்ம யோகம் செய்யறதெல்லாம் கொக்கு தலைல வெண்ணைய வச்சு பிடிக்கிற மாதிரி.

பாக்யராஜ் ஸ்டைல்ல சொல்லனும்னா வயிறு முட்ட லாலா, மசாலா, சென்ட் எல்லாம் போட்டுக்கிட்டு பலான வீட்டுக்கு போய்  பலான பார்ட்டியை குப்பைய கிளர்ர கோழி மாதிரி கிளறிக்கிட்டே

இந்த செயலுக்கு நான் பொறுப்பில்லை. நான் பகவான் கையில வெறும் கருவி மாதிரி, இந்த செயலுக்குண்டான பலனையும் பகவானுக்கே ஒப்படைச்சுர்ரேன்னு சங்கல்ப்பம் பண்ணிக்கிற மாதிரி.

தாளி கேண்டோம் யூஸ் பண்ணினா பொழச்சோம். இல்லெ எய்ட்ஸுன்னு வந்தா பகவானுக்கா வரும். ஊஹூம் உங்களுக்குத்தான் வரும்.

ரெய்டுன்னு வந்தா போலீஸ் பகவானையா அரெஸ்ட் பண்ணும் ஊஹூம் உங்களைத்தான் அரெஸ்ட் பண்ணும்.

இந்த நிலைல  கர்ம சன்னியாசம்ங்கறது இரவு ஏழு மணிக்கே சாப்பிட்டுட்டு , பட்டை கிட்டை போட்டுக்கிட்டு பகவனை தியானம் பண்ணிட்டு வீட்டு ஹால்ல அப்பா அம்மா நடுவுல படுத்துக்கற மாதிரி. எது சேஃப் ? மிஞ்சிப்போனா விடியல்ல ஏதேனும் கெட்ட கனா வந்து ஜட்டில மேப் விழும் அவ்ளோதான். அதை ட்ரை க்ளீனர்ஸுக்கு போடாம கிருஷ்ணருக்கு அர்ப்பணம் பண்ணிராதிங்கப்பு. அதையும் நீங்க தான் துவைச்சாகனும். இல்லேன்னா ட்ரை க்ளீனர்ஸுக்கு போட்டாகனும்.


ஆக சாய்ஸுன்னு வரும்போது  விஷப்பரீட்சையா இருக்கிற கர்ம யோகத்தை விட  சன்னியாசம் தான் ஈஸியரா ,பெட்டரா இருக்கும்.

நூலாசிரியரோட உண்மையான நோக்கம் அனைவருக்கும் முக்தி என்பதானால் அவர் செயலின்மையைத்தான் தூக்கிப்பிடித்திருக்கவேண்டும்

ஆனால் அவரின் உண்மை நோக்கம் அவாளின் பிழைப்புக்கு வழி செய்றதாவே இருக்கு. பிராமணரல்லாதோர் செயலின்மையை பின்பற்ற துவங்கி விட்டால் அவர்கள் உழைப்பிலேயே வாழ்ந்து ,  உழைத்தே அறியாத அந்த இனம் பிழைப்பதே துர்லபமாகிவிடும் என்பதால்  செயலுக்கு ( கரும யோகத்துக்கு )வக்காலத்து வாங்குகிறார் கீதாசிரியர்.

//சாங்கியம் என்னும் புலனை அடக்கிய ஆத்ம ஞான யோகத்தை மேற்கொண்டவர்கள் எந்த உன்னத நிலையை அடைகிறார்களோ அந்த நிலையை செய்கையையே யோகமாக  கொண்டவர்களும் அடையலாம்.//

மேற்படி வரிகளை பாருங்க பலனை எதிர்பாராது செயல்படுவதையே கரும யோகம் என்று கூறும் கீதாசிரியர் அடுத்த வரியிலேயே பலனை பற்றி பேசுகிறார்.  ரெகுலர் ஸ்டடீஸுக்கும் தொலை தூர கல்விக்கும் வித்யாசமே கிடையாதுன்னு யூனிவர்சிட்டிங்க அடிச்சி விடறதை போல செயல் மற்றும் செயலின்மைக்கு பலன் ஒன்றேதான்னு டிக்ளேர் பண்றாரு.

//சாங்கியம் என்னும் புலனை அடக்கிய ஆத்ம ஞான யோகத்தை மேற்கொண்டவர்கள் எந்த உன்னத நிலையை அடைகிறார்களோ // அதே நிலையை கர்மயோகத்தை பின்பற்றுபவனும் அடையலாமாம்.

"புலனை அடக்கிய"ங்கற வார்த்தைய பாருங்க. கீதை தலைசிறந்த மனோதத்துவ நூல்னு சவுண்டு விடறவங்க கூட இருக்காய்ங்க. புலனை அடக்குதல்ங்கறது  மனோதத்துவ  அடிப்படைக்கே விரோதம். மனிதனுக்கு வர்ர மனக்கோளாறுகளுக்கு முதல் காரணம் அவன் தன் மனதை அடக்கறதுதான். (அதுக்காக மனம் போன போக்குல மனிதன் போகனும்னு நான் சொல்லலே.)

எதை மாத்த முடியாதோ அதை ஏத்துக்கற மனப்பக்குவத்தை கொடுன்னு ஒரு மேதை கேட்டாராம் . புலன் களின் கிளர்ச்சியை  அடக்க முடியாதுங்கறப்போ அதுக்கு  சட்டம், சமூகத்துக்கு இணக்கமான வழில ஒரு வடிகாலை தேடிக்கிறதுதான் மனிதனின் மன நலத்துக்கு உத்தமமான மார்கம்.

ரோட்ல ஒரு சூப்பர் ஜுஜிலிப்பா குட்டி போகுதுனு வைங்க அவளை ஃபாலோபண்ண நினைச்சிருப்பிங்க.ஆனால் வேற ஏதோ அவசர வேலை காரணமா ஃபாலோபண்ணாம விட்டிருப்பிங்க.மனித மூளைக்கு முடிவில்லாத கதைகள் பிடிக்கிறதில்லை. அதனால தானா ஒரு ஒன் லைனை ரெடி பண்ணிக்கிட்டு கதைய முடிச்சுருது (கனவு மூலமா)

படிக்கிற பிள்ளைகள்ள யாரு தாங்கள் கத்துக்கிட்ட விஷயத்தை பத்தி கனவு காணறாங்களோ அவிக அந்த விஷயத்தை லேசில மறக்கறதில்லையாம்.

இதுலருந்து என்ன தெரியுது? புலனடக்கம் புண்ணாக்குனு கண்டதையும் அடக்கினா அந்த சமாசாரம் மேம்போக்கான கான்ஷியஸ் மைண்ட்லருந்து ஆழமான சப்கான்ஷியஸ் மைண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆயிருது. மைனாரிட்டி அரசுக்கு மெஜாரிட்டி கிடைச்ச கணக்கா ஸ்திரமாயிருது. கனவுல கூட உங்களை துரத்துது.

மனோதத்துவ சாஸ்திரத்தின் அடிப்படைக்கே விரோதமான புலனடக்கத்தை பத்தி பேசற பகவத்கீதை தலை சிறந்த மனோதத்துவ நூலாம். அப்படி சொன்னவர்களின் வீட்டு மனையை எவனேனும் குட்டித்தலைவன் ஆக்கிரமிக்கட்டும்.

புலனடக்கம்ங்கற வார்த்தையை மேம்போக்கா பார்க்கும் போது  ரொம்ப பாசிட்டிவானதா / அறிவுப்பூர்வமானதா தோணும். உடனே எப்படியாவது அடக்கிரனுங்கற நப்பாசை பிறக்கும்.

கைக்குழந்தை தாய் பாலுக்கு அழுவுது, தாய் ஏதோ வேலையா இருக்கா. குழந்தைக்கு காக்கா,குருவி,பொம்மை, தாத்தாவோட பொக்கைவாய் இப்படி என்னென்னத்தையோ காட்டி டைவர்ட் பண்றாள். சில நிமிடங்களுக்கு குழந்தை டைவர்ட் ஆகுது
( மண்டுகள் கூட பத்து பதினைஞ்சு நிமிசம்தான் ) .ஆனா பசி ஞா வந்தது முன்னைய விட அதிக டெசிபல்ஸ்ல கூவ ஆரம்பிக்குது. பிரச்சினைக்கு என்ன சொல்யூஷன்? பாலை கொடுத்து முதுகுல தட்டி படுக்க வைக்கிறதுதான். இந்த நிமிஷம் இல்லைன்னாலும் அடுத்த பதினைஞ்சாவது    நிமிஷமாவது இந்த வேலைய செய்துதான் ஆகனும்.

ஒரு வேளை கேஸ்ல வாணலில எண்ணைய ஊத்தி கடுகு போட்டிருக்கலாம். இல்லே குக்கரோட மூணாவது விசிலுக்கு காத்திருக்கலாம். அந்த மாதிரி சமயத்துல சில முயற்சிகள் பண்றது மன்னிக்க கூடியதுதான்.

இப்போ பையங்களுக்கு 12 அ13 வயசுக்கே புலன் புரட்சி பண்ண ஆரம்பிச்சுருது. அதுக்காக சைல்ட் மேரேஜை கொண்டுவரமுடியாது.  மேற்படி புலனோட புரட்சியின் தீவிரத்தை  பொருத்து  முடிவெடுக்கனும். அது ரொம்ப காட்டமா இருந்தா டென்த் முடிச்சதுமே ஏதோ ஒரு ப்ரொஃபெஷ்னல் கோர்ஸுல சேர்ந்து சொந்தக்கால்ல நிக்க முயற்சிபண்ணி சட்டம், சமூகம் ஏத்துக்க கூடிய ஒரு தீர்வை தேடலாம்.

புலனை டைவர்ட் பண்ணமுடியும் கொஞ்ச நாழிக்கு, மிஞ்சிப்போனா கொஞ்ச நாளைக்கு . ஆனா அடக்கவே முடியாது. இன்னொரு சமாசாரம் ஜன்ய பாகங்களை ரொம்ப நாளைக்கு உபயோகத்தில் இல்லை போர்டு மாட்டி பராமரிக்க முடியாது. அப்புறம் அதும்பாட்டுக்கு சுருங்க ஆரம்பிச்சுரும். விரைப்பு,புடைப்பு எல்லாம் காணாம போயிரும்.

புலனடக்கம்னா பலான விஷயம் மட்டுமில்லேன்னு  புரியுது. மெய்,வாய்,கண்,மூக்கு செவிங்கற ஐந்து புலன் களை பத்தியும் தான் கீதாசிரியர் சொல்றார். புரியுது. இந்த ஐந்து புலன்களுக்கும் மனதுக்கும்   லின்க் இருக்கு.  மனசுக்கு மேல புத்தி இருக்கு. ஆனால் பல்வேறு காரணங்களால் பலவீனமாக இருக்கும் மனதையும், புத்தியையும் பல்வேறு சக்திகள் பரோட்டாவுக்கு மிலிட்டரி ஓட்டல் சரக்கு மாஸ்டர்  மாவு பிசைந்த கணக்காய் பிசைகின்றன. இதில் இயற்கைக்கு முதலிடம்.

கிருஷ்ண பரமாத்மாவை இயற்கையின் மறு உருவா,உருவகமா, பிரதி நிதியா காட்டற கீதாசாரியர் புலன் களை அடக்குவது இயற்கைக்கு விரோதமானது அதாவது கிருஷ்ணருக்கே விரோதமானதுங்கற சங்கதியை வசதியா மறந்துர்ரார்.

//புலனை அடக்கிய ஆத்ம ஞான யோகத்தை மேற்கொண்டவர்கள் எந்த உன்னத நிலையை அடைகிறார்களோ // அதே நிலையை கர்மயோகத்தை பின்பற்றுபவனும் அடையலாமாம்.//

இந்த வரியை ஆழமா பாருங்க.// புலனை அடக்கிய// (அடக்கவே முடியாதுங்கண்ணா. கொஞ்ச நாழி,காலம் டைவர்ட் பண்ணலாம். தவமிருந்த முனிவர்கள் ரம்பா ,ஊர்வசி,மேனகாவை பார்த்ததும் ஒழுக விட்ட கதையாகிவிடும். ( நான் சொல்வது ஜொள்ளை).

//ஆத்ம ஞான யோகத்தை //

ஆத்ம ஞான யோகத்தைங்கற வார்த்தைல மூணு வார்த்தை இருக்கு.  ஆத்மாங்கற கான்செப்ட் வேற . ஞானம்ங்கற கான்செப்ட் வேற யோகம்ங்கற கான்செப்ட் வேற இது மூணையும் போட்டு சாலட் பண்ணிட்டாய்ங்க பாருங்க.

ஆத்மாங்கறது  தனக்கு சப்ஸ்டிட்யூட்டா மனித மனதில்  வளர்ந்துவிட்ட ஈகோவால் மறைக்கப்பட்டுள்ள ப்ரக்ஞை. இதுக்கும் பரமாத்மாவுக்கும் (ஜேஜிக்குங்கண்ணா எந்த வித்யாசமும் கிடையாது. ஆத்மா தான் பரமாத்மா. பரமத்மாதான் ஆத்ம ரூபத்துல மனுஷன்ல வேலை செய்யுது)

ஞானங்கறது மேற்படி ஈகோ,மனதையெல்லாம் கடந்து இதெல்லாம் நானல்ல. ஆத்மன் தான் நானுன்னு அனுபவ பூர்வமா தெரிஞ்சிக்கிடறதுதான்.

இதுக்கான முயற்சிதான் யோகம்.

இதை கொஞ்சம் தமாசா சொல்லனும்னா ஆத்மாங்கறது தொகுதியை முழுக்க மறந்து   தில்லிலயே முடங்கி கிடக்கிற எம்.பி.

மனசு,புத்தி,ஈகோ  எல்லாம் மேற்படி எம்.பியோட மச்சான் மாரு. அவிக தாங்கதான் எம்.பி போல அனல் காட்டிக்கிட்டிருக்காய்ங்க.

எம்பி.யை தொகுதிக்கு வரவச்சுட்டா மச்சான் மாரு கொட்டம் அடங்கிரும்.

இது ப்ராஸஸ். ஆத்ம ஞான யோகம்ங்கற வார்த்தைல இருக்கிற (வார்த்தையா இது வாக்கியம் போல இருக்கு) பகு பதங்கள் எல்லாமே தனி தனியாகவே முழு பொருளை தரக்கூடிய பதங்கள்  ஏனோ கீதாசிரியர் மூன்றையும் ஒட்டுப்போட்டு குழப்புகிறார்.

சரி ஓஞ்சு போவட்டும் ஆத்ம ஞானத்தை பெற செய்யப்படும் யோகம் (பயிற்சி/முயற்சினு)  வச்சிக்கிட்டு பார்ப்போம்.

கருமயோகம் / ஆத்ம ஞான யோகம் ரெண்டும் ஒரே பலனை தரும்னு ஆசிரியர் சொல்றார். இதுக்கு பின்னாடி இருக்கிற பிராமண சதியை , பிராமணரல்லாதோர் மீதான அவிக அண்டர் எஸ்டிமேட்டை பத்தியெல்லாம் அடுத்த பதிவுல பார்க்கலாம்ணா !

உடு ஜூட்