Sunday, August 8, 2010

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் : ?

இந்த தலைப்புல ஒரு தொடர்பதிவு போட்டுக்கிட்டிருந்தது ஞா இருக்கலாம்னு நினைக்கிறேன். 1986 , 1997 பீரியட்ல இருந்த நாவல்ட்டி இன்னைய தேதிக்கு இல்லிங்கண்ணா. அதனாலதான் இந்த ப்ரேக் எல்லாம்.



ஜஸ்ட் ஒரு ராம நாம ஜெபத்தால நடந்த அற்புதங்களை எடுத்துவிட்டா " சொம்மா பீலா உடற தலை !"ன்னிருவிங்க. ஆனா நடந்தது. ஒரு 3 மாசத்துக்கு முந்தின்னு நினைக்கிறேன் நித்யானந்த பாபாங்கற யோகியோட வா.வரலாறை படிச்சேன்.அதுக்கப்புறம் தான் சிற்சில சர்க்யூட் எல்லாம் வேலை செய்ய ஆரம்பிச்சுது. அதுவரை பேஸ்தடிச்ச மாதிரிதான் இருந்தது.



தமிழ் மணம் தடை பண்ணதுல கொஞ்சம் போல சலனம் . அண்டம்,பிண்டம் ரெண்டுலயும். அதனோட விளைவுதான் வாஸ்துரகசியங்கள் தொடரும், பூர்வ வைபவமும். சரிங்கண்ணா மொக்கை போதும் மேட்டருக்கு வருவம்.



ஏற்கெனவே சொன்னபடி பாபா சத நாமாவளி தொடர்ந்து அச்சிட்டு வினியோகம் நடந்துக்கிட்டே இருக்க நண்பர் ஒருத்தர் கூப்டு ஆளுங்கட்சிக்கு அனுகூலமான பேப்பர் ஒன்னுல ட்ரான்ஸ்லேட்டர் வேணுமாம்பா..தெலுங்கு டு தமிழ். ரெம்ப அர்ஜென்டாம்.. ரெண்டு மணி நேரம் வேலைதான். ஒரு ஆறு ரூ வரை தருவாய்ங்கன்னாரு. நம்ம மென்டாலிட்டிக்கு இன்னொருத்தன் கீழ வேலை பார்க்கறதே சிரமம். அதுலயும் ஒரு நிறுவனத்துலன்னா இன்னம் சிரமம். அதுலயும் ஆ.கட்சி பேப்பர்லாம் சீசனல். பவர் போயிட்டா மார்க்கெட்லருந்து காணாம போயிரும். சரி பார்ப்போம். ரூ 6 ஆயிரம் வருதுன்னா டீ சிகரட் செலவெல்லாம் போய் ரூ 5,400 மிச்சமாகும். கவிதை07 டாட் காம்னு சைட் வச்சுருவம்.ப்ரிண்ட் மீடியால விளம்பரம் பண்ணி தூள் கிளப்புவோம். அப்படியாச்சும் ஆப்பரேஷன் இந்தியாவுக்கு ஒரு விடிவு காலம் வரட்டும்னு நண்பர் கொடுத்த நெம்பருக்கு போட்டேன். அந்த பக்கமிருந்து பாபா காலர் ட்யூன். மேலும் பேசின பார்ட்டி இம்ப்ரெசிவா பேசுச்சு. இன்டர்வ்யூ கூட அட்டெண்ட் பண்ணிட்டு வந்திருக்கன் பார்ப்போம்.



பாபாதான் இப்படின்னுல்ல. இந்த படைப்புல ஆக்சனுக்கு ( ஏலமில்லிங்கோ) ஏத்த ரியாக்சன் நிச்சயமா இருக்கு. அதுலயும் ஜேஜி மேட்டர்லல்லாம் உடனடி லாட்டரிங்கண்ணா.



நாம தான் பட்ட கடனை எகிறடிக்க என்னென்னமோ மாய்மாலம் பண்றோம். ஆனால் தெய்வம் அப்படியில்லே. பட்ட கடன் தீர்க்க ( உங்க சின்சியாரிட்டியை ரெகக்னைஸ் பண்ண) எந்த ரேஞ்சுக்கு வேணம்னா இறங்கும். எந்த ரேஞ்சுக்கு வேணம்னா ஏத்திவிடும்.



பாபான்னா ஏதோ கஞ்சா அடிச்சிக்கிட்டிருந்த பார்ட்டி சனம் தான் யோகியாக்கிட்டாய்ங்கனு ஒரு சிலர் நினைச்சிருப்பாய்ங்க. ஓஷோ எழுதின ஞானத்துக்கு அப்பால் புஸ்தவத்தை நீங்க யாராச்சும் படிச்சிங்களா இல்லையா தெரியலை.



ஞானத்துக்கு அப்பால் என்ன நடக்கும்னு விளக்கற அற்புதமான புஸ்தவம். ஓஷோ நல்ல ஸ்காலர். அவர் ஸ்டடி பண்ணாத சப்ஜெக்டே கிடையாது. ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் மாதிரினு வச்சிக்கங்க. நம்ம பாபா இருக்காரே அவரை பார்த்தா கேல்குலேட்டர் கணக்கா "டொக்கா" இருப்பாரு. இன்னைய தேதிக்கு அவரு பிறந்திருந்தா/இருந்திருந்தா தாளி கவுன்சிலர் கூட கண்டுக்கிட்டிருக்கமாட்டான்.



பாபா சென்ட்ரல் ஸ்டேஷன் மாதிரி. சகட்டு மேனிக்கு எக்ஸ்ப்ரஸ், பேசஞ்சர், கூட்ஸுன்னு எல்லா ரயிலும் வரும். ஒரு தாட்டி ஒரு பண்டிதர் வரார். ஞானத்துக்கு அப்பால என்ன ? இதான் கேள்வி.



பாபா " சரிப்பா அதெல்லாம் நிதானமா பேசிக்கலாம். நீ பலான ஆளோட வீட்ல தங்கியிருங்கறார். பண்டிதரும் ஓகே. இவர் தங்க போற வீட்ல ஒரு வேலைக்கார சிறுமி. அவள் கிழிஞ்சு, நைஞ்சி ,சாயம்போன பாவாடை சட்டை அணிஞ்சிருக்கா. இதுல 24 மணி நேரம் ஒரு பாட்டு வேற . எதை பத்தி ? அழகான பட்டுப்பாவாடைய பத்தி.



பண்டிதருக்கு அவளோட நிலையை பார்த்து மனசு உருகிப்போச்சு. தனக்கு தங்க இடம் கொடுத்திருந்த ஆசாமிக்கு சொல்றார் " ஏம்பா பாவம் அந்த சிறுமிக்கு ஒரு பட்டுப்பாவாடை வாங்கி கொடுத்துருப்பா" பட்டுப்பாவாடை ரெடி.



அந்த சிறுமி ப.பா கட்டிக்கிட்டு பாட்டு பாடறாள். அதே பாட்டு. ப.பாவாடையோட அழகை,சரசரப்பை, ஜொலிப்பை வருணிக்கிற பாட்டு. ஆனால் அந்த குரல்ல துள்ளல்,துடிப்பு, குதூகலம், பரமானந்தம்.



மறு நாள் அவள் கிழிஞ்சு, நைஞ்சி ,சாயம்போன பாவாடை சட்டை அணிஞ்சி வேலை செய்துக்கிட்டிருக்கா. அதே பாட்டு. ஆனால் அவள் பட்டுப்பாவாடை அணிஞ்சி பாடினப்ப அவளோட குரல்ல இருந்ததே துள்ளல்,துடிப்பு, குதூகலம், பரமானந்தம்.



பண்டிதருக்கு தான் கேட்டு வந்த கேள்விக்கு பதில் கிடைச்சுருச்சு. உங்களுக்கு கிடைச்சதா? கிடைச்சவங்க போட்டு உடைங்க. கிடைக்காதவுகளும் தெரிஞ்சுக்கட்டும். ஞானத்துக்க் அப்பால் சாதகனோட நிலை என்ன? நாலு வரியில் பதில் கூறவும்.