Saturday, August 14, 2010

யார் அந்த தேவி : 2

தேவி கருணை


நம்ம இந்து மதத்துல ஒவ்வொரு இலாகாவுக்கும் ஒவ்வொரு அம்மனை போட்டு வச்சிருக்காய்ங்க. ஆக்சுவலா இந்த இந்து மதம்ங்கற பேரு வெளி நாட்டுக்காரய்ங்க கொடுத்தது. (இந்து மகா சமுத்திரத்தை வச்சு இந்த பேர் வந்ததா சொல்றாய்ங்க) ஆரம்பத்துல இதை சனாதன மதம்னு தான் சொல்வாங்களாம். சனாதனம்னா க்டவுள் மாதிரியே ஆதியந்தமில்லாததுனு அர்த்தம்.



சுஜாதா புதுக்கவிதை வெள்ளத்தை வருணிக்கிறப்ப சகலமும் மிதந்து வருதும்பார்.அதை மாதிரி இந்து மதத்துல சகலமும் இருக்கு. சில ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் கொண்ட இளைஞர்கள் மெனோஃபஸ் கேஸ்களை பிடித்துக்கொண்டு தொங்குவது போல சனம் இதுல உள்ள சக்கைகளை பிடிச்சி தொங்கறாய்ங்க.



எங்கயோ டைவர்ட் ஆயிட்டோம். ஆங் இந்து மதத்துல ஒவ்வொரு இலாகாவுக்கு ஒவ்வொரு அம்மனை போட்டு வச்சிருக்காய்ங்க



வீரத்துக்கு பார்வதி, படிப்புக்கு சரஸ்வதி, சில்லறைக்கு லட்சுமி இதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சதே. அது ஏன் நிறைய பொம்பள சாமியாவே இருக்குன்னு கேப்பிக. அன்னைக்கு எல்லாம் மேல் சாவனிஸ்ட் சொசைட்டியாச்சா. அதனால பொம்பள மேல கவர்ச்சி. பெண்டாட்டிய வணங்க ஈகோ இடம் கொடுக்காது. அதனால பெண்ணா உருவகப்படுத்தினாய்ங்க.



கிரேக்க கலாசாரத்துல அறிவு ஜீவிகள் சொசைட்டில ஹோமோ தான் ஃபேஷன். பெண் புணர்ச்சியெல்லாம் சந்தானத்துக்காகத்தான். ( அடங்கொய்யால அந்த காலத்துல டெஸ்ட் ட்யூப் பேபி இருந்திருந்தா ஒட்டடையே படிஞ்சு போயிருக்கும் போல- நான் சொல்றது பெட் ரூம்லிங்கண்ணா)



சில சந்தர்ப்பத்துல ஒரே சப்ஜெக்டுக்கு ஆம்பளை சாமியும் உண்டு பொம்பளை சாமியும் உண்டு.



உ.ம் கல்விக்கு சரஸ்வதி,ஹயக்ரீவர்

பைரவர் -பைரவி

வராஹ மூர்த்தி -வாராஹி



இது ஏன்னு கேப்பிக. அந்த பொம்பள சாமிய ஆம்பளையா இமேஜின் பண்ணவன் ஹோமோவா இருந்திருக்கலாம்.



அது சரி சக்திக்கு ஆண்,பெண் வடிவம் கொடுக்கிறது வணங்குறதுல லாஜிக் இருக்கா? பலன் கிடைக்குதானு கேப்பிக. இருக்கே.



பாரத அன்னைங்கறோம் , தமிழ் அன்னைங்கறோம் உணர்வுக்கு ஒரு வடிவம் கொடுத்திருக்கோம். அதே மாதிரிதான் படிப்புன்னா சரஸ்வதி , சில்லறைன்னா லட்சுமி.லாஜிக் இருக்கே.



நமக்கு உருவம் இருக்கு. போது விடிஞ்சி போது போனா உருவங்களை தான் பார்க்கிறோம். அதனால சக்திக்கு கூட உருவம் கொடுத்தா தான் ஆட்டோ சஜஷன்

( சுய வசியம் ) பாசிபிள்.



மனித குலம் கண்ணில்லாம உருவாகியிருந்தா சாமியெல்லாம் ஒலி வடிவத்துல இருந்திருக்குங்கோ.



நீ எந்த வடிவத்துல என்னை வணங்கறியோ அந்த வடிவத்துல அருள்பாலிப்பேனு கீதைல கிருஷ்ணர் சொல்றார். (என் அனுபவத்துக்கு வந்த கிருஷ்ணர் - நான் ஏத்துக்கிற கீதைலனு சேர்த்துக்கிடுங்க)



விவேகானந்தர் உன் பிரார்த்தனைக்கு பலன் கிடைச்சா அது எங்கிருந்தோ வரலை உனக்குள்ள இருந்தே வந்ததுனு சொல்றார்.



அப்பாடா கம்யூனிகேஷன் ஸ்கில்ஸே ஃபணாலாகி,டர்ராகி கிடக்கிற இந்த மோமெண்ட்ல ஒரு ரீ ஸ்டார்ட் தேவைப்படுது. (கொச்சையா சொன்னா கலை மகளோட அருள்)



இந்த மாதிரி சந்தர்ப்பத்துல பேனா பேப்பர் எடுத்து அவிகளை வில்லங்கமான கேள்வியெல்லாம் கேட்டு வந்து என் நாக்குல நில்லு ( ரெம்ப நாறும் பரவாயில்லியா தாயே) வாக்கு சொல்லு அது இதுன்னு கவிதை எழுதிர்ரது வழக்கம்.



ப்ளாக்ல கவிதை எழுதினா யாரு படிக்கிறது?.அதனாலதான் சரஸ்வதிக்கும் நமக்கும் உள்ள ரிலேஷன் , கம்யூனிகேஷனை ரீ கலெக்ட் பண்ணிக்க இந்த பதிவை எழுதிக்கிட்டிருக்கேன்.



வைரமுத்து சொல்வாரு :

வார்த்தைக்கு பொருள் அகராதியில் இருக்கிறது.

கவிதைக்கு பொருள் வாழ்க்கையில் இருக்கிறது.



"யாழினிது,குழலினிது" என்பார் "தம் மக்கள் சொல் கேளாதார்"ங்கற குறளை எடுத்துக்கங்க. இந்த குறள் புரியனும்னா நீங்க வாழ்ந்திருக்கனும்.குழந்தைய பெத்திருக்கனும். சில மாசமாச்சும் பிரிஞ்சிருக்கனும். பிரிவுக்கப்பறம் கொளந்தை பேச்சை கேட்டிருக்கனும்.. இல்லைனா ஒரு ..ரும் புரியாது.



தினசரி காலை பத்து மணி போய் சாயந்திரம் 5 மணிக்கு வீட்டுக்குள்ள வந்து பூந்துகிட்டா களவாணி பசங்கள பத்தின செய்திகள் தான் இனிதுனு தோணும்.



கவிதைய புரிஞ்சிக்க நீங்க வாழ்ந்திருக்கனும். கவிதைய எழுத ? வாழ்க்கைய இழந்திருக்கனும். இழந்தா மட்டுமே புரியற மேட்டர் எதுன்னா வாழ்க்கைதான். இழந்திருந்தா மட்டும் போதாது ஃபீனிக்ஸ் பறவையா எழுந்திருக்கனும்.



கவிதை புரியனும்னா வாழ்ந்திருக்கனும். தட்ஸால். வாழ்க்கை புரியனும்னா? இழந்து எழுந்திருக்கனும். வாழ்க்கையோட மறை பொருள் புரியனும்னா? அதை அசால்ட்டா சொல்லனும்னா?



தேவி அருள் இருக்கனும். யார் அந்த தேவி ( ஸ்ரீ தேவியில்லிங்கண்ணா 47 வயசாமே நெஜமாவா?) வாக் தேவிங்கண்ணா. அவிக அருள் எனக்கு எப்படி கிடைச்சுது. எப்பல்லாம் தடங்கலுக்கு வருந்தறாய்ங்க. உங்களுக்கும் கிடைக்குமா? ( உங்க பசங்களுக்கும்) கிடைக்க என்ன பண்ணனும்? இதையெல்லாம் .சுருக்கமா பார்ப்போம்.



சின்னவயசுல கொலுப்பாடகியான எங்கம்மா ஒரு பாட்டுப்பாடுவாய்ங்க.



சகலகலா வாணீயே சரணம் தாயே

சங்கீத வீணா பா நீயே



ஆற்றலும் ஆயுளும்

...............................ம்

தேச நலம் புரிய எங்களுக்கருள்வாய்

மங்கல செல்வியே



இந்த பாட்டுல அந்த காலத்துலயே "தேச நலம் புரிய"ங்கற கான்செப்ட் ரெம்ப பிடிச்சிருந்தது. ( சொம்மா பீலா விடாதேப்பாங்கறிங்க அப்படித்தானே.. இல்லே பாஸு சத்தியமா சொல்றேன்)



அம்மா சொன்ன கதை ஒன்னு ரெம்ப இன்ஸ்பைர் பண்ணுச்சு ( நம்முது ஜீஜாபாய் கிட்டே கதை கேட்டு வளர்ந்த வீர சிவாஜி ரேஞ்சுங்கோ)



கவிஞர் மகன் ராசா மகளை லவ்வறாரு. (பாருங்க இந்த ரைட்டர்,பொயட்டெல்லம் அந்த காலத்துலயே உருப்படாத பார்ட்டிகளாத்தான் இருந்திருக்காய்ங்க) ராசா வீட்ல கவிஞருக்கும், அவரோட மகனுக்கும் விருந்து நடக்குது. ராசா மகள் ஓடி ஓடி பரிமார்ராய்ங்க.



அப்போ கவிஞர் மகன் ஓடி ஓடி பரிமாறனதால தன் காதலியோட பாதம் சிவந்து போனதா ஒரு கவிதை சொல்லிர்ராரு.ராசாவுக்கு கோவம் வந்துருது. கவிஞர் வெளியே ஒரு பெண் கிழங்கு வித்துக்கிட்டு போறதாவும் தன் மகன் பாடினது அந்த பெண்ணோட பாதத்தை பத்தின்னும் சொல்லி அஜீஸ் பண்றாரு.



ராசா ஒடனே தன் சிப்பந்தியை ஃபீல்ட் ஸ்டடிக்கு அனுப்பறாரு.அப்போ கலை

வாணியே கிழங்கு விக்கிற பொம்பளையா ரோட்டுல நடந்து சீன் க்ரியேட் பண்றாய்ங்க.



1984ன்னு நினைக்கிறேன். சங்கராபரணம் எப்பங்கண்ணா ரிலீஸ் ஆச்சு? அந்த படத்துல "சங்கரா நாத சரீரா பரா"ன்னு ஒரு பாட்டு. அந்த பாட்டோட ட்யூனுக்கு வாணிக்காக ஒரு பாட்டு எழுதினேன். அதுல மேற்படி கதைய ரெஃபர் பண்ணி ரெண்டு வரி எழுதினேன்.



"பாணனை காத்திட பாதம் சிவந்திட

கிழங்குகள் விற்றவள் நீயன்றோ ?"



1986ல பலான எண்ணங்களை கட்டுப்படுத்த ஜெய் ஹனுமான், அவரை குஜிலிப்படுத்த ராம நாமம் எல்லாம் துவங்கிருச்சு. அதுக்கு மிந்தி அப்பா, கிருபானந்த வாரி, நடராஜர் பத்து (மானாட மழுவாட.. எட்செட்ரா ) உபயத்துல நமசிவாய இதெல்லாம் ஒரு ட்ராக்.



ஒருபிறவி முழுக்க நமசிவாய ஜெபிச்சா, அடுத்த பிறவில ராம நாமம் ஜெபிக்கிற அருகதை ஏற்படுமாம், அந்த பிறவியெல்லாம் ராம நாம ஜெபிச்சாத்தான் அதுக்கடுத்த பிறவில ஆத்தாளை வணங்கனுங்கற எண்ணம் ஏற்படுமாம். நாமதான் ஆத்திரத்துக்கு பொறந்த கேஸாச்சே. அதனால டபுள் பிரமோஷனா போட்டுவிட்டுட்டாப்ல இருக்கு.



எப்படியோ 2000,டிசம்பர் ,23 ல சகட்டு மேனிக்கு பிரணவம், வித்யா பீஜம்,மாயா பீஜம்,காளி /கிருஷ்ண பீஜம்/லட்சுமி பீஜம் எல்லாத்தையும் கலந்து கட்டியா ஜெபிக்க ஆரம்பிச்சேன்.



வித்யா பீஜத்தை ஜெபிச்சிட்டு வந்ததாலயோ என்னவோ சரஸ்வதியோட மூல மந்திரம் கிடைச்சு அதை ஜெபிக்க ஆரம்பிச்சேன்.



எப்படியோ ஒரு மேட்டரை பத்தி நமக்கு அறவே தெரியலைன்னாலும் , அதுல ப்ரிலிமினரி நாலெட்ஜுலயே தகராறுன்னாலும் மந்திரி பையன் கணக்கா படிக்காமயே டாக்டர் பட்டம் வாங்கிர்ரன். ஒரு மேட்டரை எழுத ஆரம்பிச்சா வார்த்தைகளும், பாயிண்டுகளும் ஏ.ஆர்.ரகுமானை தேடிவர்ர அவார்டுங்க மாதிரி வரிசை கட்ட ஆரம்பிச்சுருது.



சேராதிருப்பது கல்வியும் செல்வமும்ங்கறது ஃபேமஸ் சினேரியோ. ஆனா ஒரு தினம் நமக்குத்தேன் வசியம் தெரியுமே நாலணா எட்டணாவுக்கு ஏன் கண்டவனை வசியம் பண்ணனும்னு சாட்சாத் லட்சுமியையே வசியம் பண்ண ஆரம்பிச்சேன்.



2007லருந்து ப்ரெட் ஹண்டிங் எல்லாம் முடிஞ்சுருச்சு. ஆனாலும் ஒரு ரேஞ்சுக்கு மேல பணம் வரும்போது திக்குவாயன் கணக்கா திணற வேண்டியதாயிருது. தனம்,வாக்கு ரெண்டுக்கும் லக்னாத் ரெண்டாம் பாவம் தானே காரகம். அதனால போல . தனம் வந்தா வாக்கு பிடுங்கிக்குது.



அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்ததால தான் இந்த கலைவாணி அருள் வேட்டல். "ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான்"னு வாத்தியார் பாடுவாரே அது மாதிரி வாணி எனக்காக கொடுக்கலைங்கண்ணா நாம என்ன ஜஸ்ட் லவுட்ஸ்பீக்கர் மாதிரி. அதனாலதான் எல்லாத்தையும் போட்டு உடைச்சிக்கிட்டிருக்கேன். உடைக்கபோறேன். நான் மெம்பர்ஸ் படிக்கிற கடைசி பதிவு இதான்னு நினைக்கிறேன்.



இன்ஸ்டண்டா மெம்பராயிருங்க. நாளைக்கு ( ஆகஸ்ட் 16, திங்கள்) ப்ளாக் வ்யூயிங் ஆப்ஷனை மெம்பர்ஸ் ஒன்லியா மாத்திர போறேன்.அப்பாறம் திட்டிக்காதிங்க.



உயர் நிலை பள்ளில படிக்கிறப்ப ப்ரேயர்ல கும்பலா காட்டு கத்தலா சரஸ்வதி நமஸ்துப்யம் பாடுவாய்ங்க. ( 1979) ஆனால் இது நம்ம மைண்ட்ல நிக்கலை.



1986



2001-2002 பீரியட்லதான் இந்த ஸ்லோகத்தை ஒரு உருப்படாத கருணீக குலத்து முத்தி போன வெண்டைக்காய் ( பேச்சலர்) கிட்டே கேட்டு எழுதி பிக் அப் பண்ணேன்னா பார்த்துக்கங்களேன்.

. சொல்லனுமா என்ன இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம்.



உடு ஜூட்..