Saturday, August 7, 2010

வாஸ்து ரகசியங்கள் : 9

அண்ணே வணக்கம்ணே,
இன்னைக்கு எனக்கு பிறந்த நாள். 43 வருஷம் ஓடி முடிச்சாச்சு. இதுல என்னத்த கிழிச்சோம்ங்கற மேட்டருக்குள்ள போனா சோகம் தான் மிஞ்சும்.  அதைவிட இந்த வருஷம் என்னத்தை கிழிக்கலாம்னு ப்ளான் பண்றது பெட்டரில்லையா.  ஃபோன் மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிச்ச திரு  அய்யாகண்ணு அவர்களுக்கு நன்றி.
நாம இதையெல்லாம் எதிர்பார்க்கிறதில்லிங்கண்ணா.

கண்ணாலம், சாவுக்கே கலந்துக்கறதில்லை. கண்ணாலத்துக்கு தேவை பொண்ணு,மாப்பிள்ளை. நாம போயி ஆகப்போறது ஒன்னுமில்லை. சாவுங்கறிங்களா நாம போறதால செத்துப்போன பார்ட்டி எந்திரிக்க போறதில்லை.

மேலும் இதுக்கெல்லாம் அட்டெண்ட் ஆக ஆரம்பிச்சா இதே பிழைப்பா போயிரும். நிற்க மேட்டருக்கு வந்துர்ரன்.

தப்பான திசைகள்ள கிணறு, பள்ளம், செப்டிக் டாங்க், காலியிடம்,தெரு அமைஞ்ச வீடுகள் அந்த மனிதர்களின் கதையை  அடுத்த பதிவுல பார்ப்போம்னு சொல்லியிருந்தேன். இப்ப பார்த்துரலாம்.

ஆக்னேயத்துல செப்டிக் டாங்க்:
இந்த திசையில கிணறு, பள்ளம், செப்டிக் டாங்க், காலியிடம்,தெரு அமைஞ்சாலும் இதே எஃபெக்ட் வரலாம்னு மனசுல வச்சு படிங்க. உங்க சுத்து வட்டாரத்துல இது மாதிரி அமைப்பு இருந்தா அந்த வீட்டு சனங்கள் நிலையை அப்சர்வ் பண்ணீ ஸ்டடி பண்ணுங்க. உங்க கருத்தை எனக்கு எழுதுங்க.

பழைய வீட்டு இடிச்சு கட்டினாய்ங்க. ஆக்னேயத்துல செப்டிக் டாங்க்   மாட்டிக்கிச்சு. அந்த வீ.காரர்  புதுசா வீட்டை கட்டறதுக்கு    முன்னாடியே பீக் ஸ்டேஜ் போய் விழுந்து எழுந்த பார்ட்டிதான். (இதுக்கான காரணம் அவர் ஜாதகத்துலயே இருந்திருக்கும்.  லூப் ஹோல் இருந்தா வாஸ்து செமர்த்தியா உதை கொடுக்கும்ங்கறதுக்கு இந்த கேஸ் ஒரு உதாரணம். பார்ட்டி கவர்ன்மென்ட் எம்ப்ளாயி.இருந்தாலும் பிரபல பத்திரிக்கையோட ஏஜென்சிலருந்து டஜன் கணக்கா ஆட்டோ வாங்கி வாடகைக்கு விடறதிலருந்து கூல் டிரிங் ஏஜென்சிலருந்து அடிச்சு தூள் கிளப்பி பரமபதத்துல பாம்பு வாய்ல விழுந்த கதையா விழுந்து எழுந்து இன்செக்யூரிட்டி காரணமா வீட்டைக்கட்டிக்கிட்டாரு.

மொதல் பாயிண்ட் பிள்ளையோட விரோதம். (அது நந்தூர்னிங்கறது வேற விஷயம்) அடுத்த பாயிண்ட் அண்ணன் தம்பியெல்லாம் கட்.  அடுத்த பாயிண்ட் வீட்டு மாப்பிள்ளையெல்லாம் விரோதம். வீ.காரர்ருக்கு ஹார்ட் ட்ரபிள். போய் சேர்ந்துட்டாரு. நெக்ஸ்ட் பாயிண்ட் வீட்டம்மாவுக்கு ஹார்ட் ட்ரபிள்.ஆப்பரேஷன் எல்லாம் நடந்து  கண்ணாடி பாத்திரம் அலங்காரமா இருக்காய்ங்க. இதெல்லாம் பத்தாதுன்னு மருமகளோடயும் விரோதம். விவகாரம் கோர்ட் வரை போய்  பிள்ளை வாரம் ஒரு தாட்டி வெளியூர் போய் பெண்டாட்டியோட படுத்துக்கிட்டு வீடு திரும்பறான்.

அக்னேயம் பெண்களை குறிக்கும் திசை. மேற் கண்ட பத்திகள்ள வீ.காரரை பத்தி மட்டும் சொன்னாப்ல இருக்கும். ஆனா பாதிப்பு யாருக்கு ? அவரோட மனைவிக்கு. பெண்களுக்கு,மருமகளுக்கு தான்.

ஆக்னேயம் எதிரிகளை , ரத்தம்  இத்யாதியை காட்டற இடம் இப்ப கூட்டி கழிச்சு பாருங்க ஆக்னேயம் இன்னா மாதிரி வேலை கொடுத்துருச்சோ. உங்க அப்சர்வேஷனை எழுத மறந்துராதிங்க தலைவா..

குறிப்பு:
ஆன் லைன் ஜோதிட ஆலோசனை கேட்டு பைசா கொடுத்த ஆர்வலர்களுக்கு பலன் எழுதறதுல நேரம் போனதே தெரியலைங்கண்ணா. நாளை முதல் வழக்கம் போல அனுமார் வால் தனமான பதிவுகள் வெளிவரும். டோண்ட் ஒர்ரி.

உடுங்க ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜூட்