Tuesday, August 3, 2010

வாஸ்து ரகசியங்கள்: 6

நான் எவ்ளோ அக்கறையோட வாஸ்து பத்தின விஞ்ஞான பூர்வமான  உண்மைகளை  அள்ளி வீசினாலும் சிலர் நக்கலடிச்சுட்டே இருக்காய்ங்க. அவிகளுக்கு நச்சுனு பதில்  சொல்றதுக்கு முந்தி வாஸ்துவோட நம்பகத்தன்மைக்கு இன்னொரு உதாரணம் +விளக்கம்.

வாஸ்து அறிவுப்பூர்வமானதுதாங்கறதுக்கு அப்பப்போ ஆதாரங்களை அள்ளி வீசிக்கிட்டே இருக்கேன்.  மலையோரம் சரிவுல நிலங்கள் இருக்கிறதை பார்த்துருப்பிங்க. மலை மேல விழற மழை தண்ணி சர சரனு ஓடி போயிரும். மழையில்லாத காலத்துல நிலம் காஞ்சி கிடக்கும். இந்த பிரச்சினைக்கு ஒரு சிம்பிள் சொல்யூஷன் இருக்காம். அது என்னடான்னா ஏர் ஓட்டறச்ச  சரிவு வாட்டத்துல ஓட்டாம குறுக்கால ஓட்டனும். அப்படி ஓட்டினா ஒவ்வொரு தாட்டி ஏரு போன வழியும் சின்ன சின்ன செக் டேம் மாதிரி ஆயிரும் . நின்னு பெய்யற மழைன்னா இன்னம் கொண்டாட்டம். முடிஞ்ச வரை மழை (மலை) தண்ணிய அந்த குறுக்கு சால் தடயங்கள் பூமிக்குள்ளாற அனுப்பும். கிரவுண்ட் வாட்டர் சார்ஜ் ஆகும். இதான் சூட்சுமத்துல மோட்சம்ங்கறது.

வாஸ்து வீட்டை சுத்தி காலியிடம் இருக்கனும்டாங்குது. கூரை தண்ணி கிழக்கு அ வடக்கா தான் கீழே விழனுங்குது. அது மட்டுமில்லே விழுந்த தண்ணி ஈசானிய மூலை வழியாதான்  வெளிய  போகனும்ங்குது. ஏன்?

ஈசானத்துலதான் போர்வெல் அ கிணறு இருக்கனுங்கறது ரூல். காம்பவுண்டுக்குள்ள விழுந்த  மழை தண்ணி  வீட்டுக்குள்ளாற இருக்கிற காலியிடம் (மண் தரை) வழியா ஈசானத்துக்கா ஓடும்போது  ஆட்டோமேட்டிக்கா நிலத்துக்குள்ள இறங்கும். ஈசானத்துல போட்ட போர் வெல்லோ, வெட்டின கிணறோ ஆட்டோ மேட்டிக்கா சார்ஜ் ஆகும். புரியுதா ராசா?

இப்போ நக்கலை பார்ப்போம்.வடக்குல இமயமலை இருக்கிறது தோஷம். அதனால ஓடிப்போயிரலாமானு கேட்டிருக்காய்ங்க.

மனைக்கு 75 அடிக்குள்ள வடக்கு,வடகிழக்கு,கிழக்கு திசைகள்ள மேடாக இருக்கும் பாறை,மணற்குன்று ,பெரிய மரங்கள், பாலங்கள் போன்றவை இருக்கக்கூடாதுங்கறது வாஸ்து விதி.

மனைன்னா 40X60 வச்சுக்குவம். இந்தியாவோட பரப்பளவென்ன? (இமய மலையோட உயரம் என்ன?ங்கறதும் பாயிண்டுதான்)  அந்த விகிதத்துல இமயமலை எத்தனை கி.மீ க்கு அப்பால இருந்தா பரவாயில்லைனு பாருங்க. அப்பால இல்லை. இப்பாலதான் இருக்கு. இப்பால எத்தனை கி.மீ வரை தோஷம்னு பாருங்க. அதுக்கு இப்பால இருக்கிற மானிலங்களோட நிலை என்ன? அதுக்கு அப்பால இருக்கிற மானிலங்களோட நிலை என்ன? காஷ்மீரோட நிலை என்ன? இதையெல்லாம் கூட்டிக்கழிச்சு கணக்கு போடுங்க ( நான் கணக்குல வீக்கு வாத்யாரே)

இது ஒரு வாதம். இன்னொரு கோணத்துல புவியியல் விதிகளின் படி பார்த்தா இமயமலை ஸ்தூலமா பார்க்கிறச்ச உசரமா இருந்தாலும் அது உசரமாயில்லேனு விவரம் தெரிஞ்சவுக சொல்றாய்ங்க.

இப்போ அக்னி மூலைல பள்ளமிருக்குன்னு வைங்க. இதனோட பலன் அந்த வீட்ல குடியிருக்கிற ஆரோக்கியமான மனிதன் மேலதான் அதிகமா இருக்கும். சப்போஸ் ரத்தம் கெட்டுப்போனவனோ, ரத்தம் சுண்டிப்போனவனோ, ரத்தம் கக்கறவனோ வேசியோ இருந்தா அந்த தோஷம் அவனை பாதிக்காது. முழுக்க நனைஞ்சவனுக்கு குளிரில்லேங்கற கதைதான்.

நீங்க இமயமலையை அப்பால நகர்த்தனும்னு வாஸ்து சொல்லல. இப்பால நீங்க வாங்கி கட்டற மனைக்கு காம்பவுண்ட் போட்டுக்கிட்டா போதும்னு தான் சொல்லுது.
மேற்குல பள்ளம் இருக்கக்கூடாதுங்கறது வாஸ்து விதி. இருந்தா பெண்கள் அரசாள்வாய்ங்க. ஆனால் அவிகளும் நிம்மதியா வாழமுடியாதுங்கறது விதி. இப்போ கூட்டி கழிச்சு பாருங்க. இந்திரா காந்தி ஃபெரோஸ் காந்தி ஸ்டைலை மெயின்டெய்ன் பண்ணியிருந்தா கிழக்குல உள்ள  கடல் வேலை செய்ததுனு வச்சிக்கலாம். அந்த மகராசி  நேரு பாதையில போனாய்ங்க. ஃபெரோஸ் காந்தி காந்திங்கற பேரை மட்டும் கொடுத்துட்டு கழண்டுக்கிட்டாரு (காந்தி தாத்தாவோட தத்து புத்திரருங்கோ)
அம்மா இல்லாத ஆட்டம் எல்லாம் போட்டாய்ங்க. சோனியா அம்மா கதை மட்டும் என்ன?

தெற்குல சமுத்திரம் இருக்கறதாலதான் வேலியோரம் ஓடறத காதுக்குள்ள விட்டுக்கிட்ட கணக்கா வங்காள தேசம் அமைக்க பாக் விரோதத்தை விலை கொடுத்து  வாங்கி பாக்கோட கச்சா முச்சானு யுத்தம் பண்ணோம். இன்னைக்கும் மறைமுக யுத்தம் நடந்து கிட்டே இருக்கு. உபரியா  பிரபாகரன் யு.ஜிக்கு போயிட்டாரு.   இலங்கை சீனாவோட பாக்கெட்டுக்கு போய்க்கிட்டிருக்கு.


சரிங்கண்ணா பஞ்சாயத்து போதும்  விசயத்துக்கு வர்ரேன் .கடந்த பதிவுல  மனையை ஒட்டி தெருக்கள் அமையறது பத்தி சொல்லியிருந்தேன். சுருக்கமா சொன்னா வடக்கு கிழக்குல தெரு இருந்தா நல்லது. தெற்கு மேற்குல இருந்தா நல்லதில்லை.(இதுக்கான அடிப்படை கிழக்கு,வடக்குல காலியிடம் இருக்கனும். தெற்கு மேற்குல காலியிடம் இருக்கக்கூடாதுங்கற பாயிண்ட்தான்)இது வாஸ்துவுல உள்ள அடிப்படை  விதிங்கறது ஓகே. ப்ராக்டிக்கலா இதுக்குள்ள அறிவியல் பூர்வமான அடிப்படை என்னனு நீங்க கேட்பிங்க

"ஏன் என்ற கேள்வி அது இல்லாமல் வாழ்க்கை இல்லை"னு வாத்யாரே சொல்லியிருக்காரே.

அல்லாரும் கிழக்கு பக்கம் தலைவச்சுத்தான் படுக்கனும்னு ஒரு விதியிருக்கு. வீட்லசாமிபடங்களையும் கிழக்கை பார்த்துத்தான் வைக்கனும். அப்போ நீங்க தூங்கறதுக்கு முன்னாடியும் கடவுளை பார்க்கலாம். தூங்கி விழிச்ச உடனேயும் கடவுளை  பார்க்கலாம். அது மட்டுமில்லை கிழக்குல சூரியன் உதிக்கறச்ச ஆட்டோமேட்டிக்கா உங்களுக்கு விழிப்பு தட்ட வாய்ப்பிருக்கு (பாதி ராத்திரி வரை குடிச்சி, கூத்தடிச்சிருந்தாலோ, எஃப் டிவில உறிச்ச கோழிகளை பார்த்து ஜொள்ளிக்கிட்டிருந்தாலோ தவிர)

இப்ப நீங்க ஜஸ்ட் இமேஜின் பண்ணுங்க நீங்க கிழக்கு பக்கம் தலை வச்சு படுக்கிறிங்கனு வைங்க உங்க தலைப்பக்கம் கிழக்கு திசை. கால் பக்கம் மேற்கு திசை வரும்.

எண் (எட்டு) சாண்  உடலுக்கு சிரசே பிரதானம், தலையிருக்க வாலாடலாமா? இந்த பழமொழியெல்லாம்  தலையோட முக்கியத்துவத்தை சொல்லுது. தலைல என்ன விசேஷமிருக்குனு யாராச்சும் மூளையில்லாம கேள்வி  கேட்கலாம். மூளை இருக்குங்கண்ணா.

மூளைல இருக்கிற நியூரான்களை மணல் அளவு பெரிசாக்கினா ஒரு லாரி லோடுக்காகுமாம்.  "உங்கள்  உடலின்  முக்கியமான வேலையே மூளைய தாங்கிச் செல்வதுதான்னு ஒரு மேதை சொல்லியிருக்கார். மூளையில உங்க தலை மயிரை விட மெல்லிய ரத்தக்குழாய்கள் இருக்காம்.  (மேலதிக தகவல்களுக்கு: சுஜாதாவின் "தலைமை செயலகம்)

மனிதனுக்கு இந்த அளவுக்கு மூளை வளர காரணமே அவன் நிமிர்ந்து நடக்க ஆரம்பிச்சதுதான்.  நிமிர்ந்து நடக்க ஆரம்பிச்சதால மூளைக்கு பாயற  ரத்தத்தோட ப்ரஷர் குறைஞ்சு ஜெனரேஷன் டு ஜெனரேஷன் ரத்தக்குழாய்கள் மெலிய ஆரம்பிச்சிருக்கலாம். இதனால தான்  மிருகத்தன்மை, முரட்டுத்தனம்லாம்  குறைஞ்சு சூட்சும புத்தி வளர்ந்திருக்கலாம்.

எங்கப்பா தலைக்கு ரெண்டு தலையணை வச்சுத்தான் படுப்பார். ஒன்னு குஷ்பு மாதிரி இருக்கும். இன்னொன்னு ஸ்ரேயா மாதிரி இருக்கும். இந்த செட்டு தலைக்கு,  இதுவல்லாம பக்கத்துல ஒரு தலையணை வச்சுப்பாரு.

அதே பழக்கம் நமக்கும் வந்துருச்சுங்கண்ணா. அதனாலதான் ரிஷிகள் மகரிஷிகளோட உத்தேசங்களை கூட அசால்ட்டா கெஸ் பண்ணி  சொல்ற கெப்பாசிட்டி வந்துருக்குனு நினைக்கிறேன்.

(நீங்களும் ட்ரை பண்ணுங்க. கழுத்து பிடிச்சிக்கிட்டா நான் பொறுப்பு கிடையாதுங்கோ)

ஓகே ஓகே மேட்டருக்கு வந்துர்ரன். மூளை சூட்சுமமானது. டெலிக்கேட் சமாசாரம். உதாரணத்துக்கு உங்க வீட்டு கூரை எட்டடி உயரம்னு வைங்க. திடீர்னு  வீட்டை மாத்த வேண்டி வந்துருது . புது வீட்டு கூரை  ஆறடி உயரம்தான் இருக்குனு வைங்க.

அங்கன உங்களால நிம்மதியா இருந்துர முடியுமா? முடியாது. அப்படியே அழுத்தறமாதிரி ஒரு ஃபீலிங் வரும். மூச்சு முட்டற மாதிரி இருக்கும். திணறும்.எப்படா வெளிய போவலாம்னு இருக்கும்தானே.

ஆறடிக்கே இந்த இழவு. சப்போஸ் நார்த் இண்டியா டூர்ல ஏதோ அசந்தர்ப்பம் நாலடி உயர கூரை இருக்கிற  அறைல தங்க வேண்டி வந்துருச்சு எப்படி இருக்கும் .. ரோசிங்க.

ஏற்கெனவே இந்த தொடர் பதிவோட ஆரம்பத்துல சொன்ன மாதிரி போர் கைதிக்கிட்டே இருந்து யுத்த ரகசியத்தை கறக்கனும்னா முழங்காலை கட்டிக்கிட்டு  சதா உட்கார்ந்தே கிடக்கற மாதிரி அறைல (பிறைல) அடைச்சிருவாய்ங்களாம்.

கூரை உங்க தலையை இடிக்கலை, ஸ்தூலமா அழுத்தலை ஆனாலும் குட்டையான கூரை உங்க  மூளைய பாதிக்குது. ஆமாவா இல்லியா? மூளை அந்த அளவுக்கு சூட்சுமமானது தலைவா.அதானலதான் கிழக்கு திசைல காலியிடம் இருக்கனும்னு ஒரு ரூலை வச்சிருக்காய்ங்க.

காலியிடத்துக்கு பதில் தெரு இருந்தாலும் ஓகேன்னு ஒரு அட்ஜஸ்ட்மென்ட். இது செகண்ட் ஆப்ஷன் தான் முதல் ஆப்ஷன் மனைலயே காலியிடம் விடறதுதான்.

சூரிய உதயம் நடக்கறச்ச உதயசூரியனின் காலைக்கதிர்கள் உங்க வீட்டு சுவரை தடவினா பாக்டீரியா, கொசுவுக்கெல்லாம் சங்குதான். உங்க லைஃப் சங்கே முழங்குதான்.

முக்கியமா மனிதன் பூமியோட குழந்தை, பூமி சூரியனோட குழந்தை (ஓஷோ) நீங்க இயற்கையோட ஒத்துப்போயி வாழ்ந்தா ( சூரிய உதயத்துல எழுந்து , சூரிய அஸ்தமனத்துக்குள்ள படுத்துக்கிட்டா - புதுக்கல்யாண சோடிக்கு இது பொருந்தாதுங்கண்ணா. சாப்பிட்டு ரெண்டு மணி நேரம் கழிச்சுத்தான் ஆரம்பிக்கனும்.ஆமா சொல்ட்டேன்) உங்க பாடியோட மெட்டஃபாலிசமே மாறிடும்.

உடம்பு அரேபியன் ஹார்ஸ் மாதிரி துள்ளும்.

சரி சரி கிழக்குப்பக்கம் தெரு அ காலியிடத்துக்கான அவசியத்தை சொல்லி முடிக்கவே முக்கால் பதிவு முடிஞ்சுருச்சு . மேட்டருக்கு வாங்க முருகேசன்ங்கறிங்க அப்படித்தானே வந்துர்ரன் வந்துர்ரன்.

மனை குறைதல் -மனை வளர்தல் :

வீட்டு மனைக்கான முத தகுதியே அது சதுரமா இருக்கனும் அ செவ்வகமா இருக்கனும். அதாவது நாலு பக்கமும் ஒரே அளவா இருக்கனும். இல்லைன்னா எதிரெதிர் பக்கங்களாவது ஒரே அளவா இருக்கனும். இல்லைன்னா வம்புதான்.

மனை குறையறதாயிருந்தாலும்( ஆக்னேயம் மற்றும் வாயு மூலைல மட்டும்)  சரி வளர்ரதா இருந்தாலும் ( ஈசானியம் மட்டும் )  சரி ஒரு மிளகாய் விதை அளவுக்கு மட்டும் வளரலாம்னு ஒரு ரிலாக்ஸேஷன் இருக்கு.  (என்னைக்கேட்டா இது 24 கேரட்ல சேர்க்கிற செம்பு  பித்தளை மாதிரினு சொல்வேன். 100 சதம் வாஸ்து இருந்தா என்ன ஆகும்னு கடந்த பதிவுல பார்த்திங்கல்ல)

(நம்ம கே.வி.சாரு 30X40 சைட்ல  அரை அடி முதல் ஒரு அடி வரை வளரலாம்ங்கறார் - ஆனால் இதை சிபாரிசு செய்யமாட்டேன். நம்ம அனுபவம் அப்படி)

தப்பான திசைல வளர்ந்தா என்ன ஆகும், குறைஞ்சா என்ன ஆகும். சரியான திசைல கூட அளவுக்கு மீறி வளர்ந்தா என்ன ஆகும், அளவுக்கு மீறி குறைஞ்சா என்ன ஆகும்னு  விலாவாரியா பார்ப்போம்.

1.ஆக்னேயம்  வளர்ந்தா  ( ஈசான்யம் குறைஞ்சா)
இதுவளர்ந்தா ஈசானியம் குறையும். ஆக்னேயம் வளர்ந்ததால நடக்கிற தீமைகளும் நடக்கும். ஈசான்யம் குறையறதால நடக்கிற தீமைகளும் நடக்கும். மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடிங்கற  மாதிரி அடி மேல அடி விழுந்துக்கிட்டே இருக்கும்.   உதாரணமா: ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாரும் படிப்படியா கோபக்காரர்களாயிருவாய்ங்க. ரத்தம் எரிச்சல் தொடர்பான வியாதிகள் வரும். கொலை அ கொலைவெறி தாக்குதல்  கூட நடக்கலாம். வீட்ல திடீர் திடீர்னு  ரத்தக்களறி நடக்கும். பெண்களுக்கு மென்ஸ்ட்ருவல் ப்ராப்ளம்ஸ் வரும்.

ஈசானியம் குறைஞ்சா:
ஈசானியம்ங்கறது ரெம்ப நுட்பமான திக்கு.  இது குறைஞ்சதுன்னா அந்த வீட்டுக்குள்ள பாசிட்டிவ் வேவ்ஸுகு இடமே இல்லைனு சொல்லிரலாம். இது உங்க மைண்டை காட்டற இடம் . ஈசான்யம் குறைஞ்சா குடும்ப உறுப்பினர்களிடையில் பாசம் இருக்காது.  நல்ல  நடத்தை  இருக்காது. ஆரோக்கியம் இருக்காது. எப்படிப்பட்ட  சாந்த மூர்த்தியும் ருத்ரமூர்த்தியாகி ருத்ர தாண்டவமே ஆடிருவாரு. தைவம் மானுஷ்ய ரூபேனாம்பாய்ங்க. அதாவது உங்களுக்கு நல்லது செய்ய தெய்வம் மனித வடிவத்துல (தான்) வரும்னு அர்த்தம் . ஈசான்யம் குறைஞ்சதுன்னா  நல்லவன் எவனும் வரமாட்டான் அப்படியே தப்பித்தவறி வந்தாலும் உங்களுக்கு நல்லதை செய்யமாட்டான் அட இவ்ள எதுக்குங்க  தெய்வம்  கூட அடியெடுத்து வைக்காதுனு சொல்லிரலாம். வீண் விரயங்கள் நடக்கும். பணமுடை ஏற்படும்.

குறிப்பு:
ஆக்னேயம் அளவுக்கதிகமா குறைஞ்சாலும் (மிளகாய் விரையை விட) ஈசான்யம் அளவுக்கதிகமா வளர்ந்தாலும் இதே பலன்கள் நடக்கும். டேக் கேர்

2.வாயு மூலை வளர்ந்து ஈசான்யம் குறைஞ்சா:
சஞ்சலம் அதிகமாயிரும்.தேவையில்லாத பதட்டம், பரபரப்பு அதிகமாகும். தீர்க நோய்கள் ஏற்படும்.  விண்ட் ஃபால் கெயின்ஸ் மேல அதீத ஆர்வம் பிறக்கும். கெட்டப்பழக்கங்கள் ஏற்படும். (முக்கியமா மதுப்பழக்கம், சூதாட்டம், வம்பு,வழக்குகள் தேடிவரும்) . எப்படிப்பட்ட மேதை இந்த வீட்ல வசிச்சாலும் க்ளிக் ஆக முடியாது.

இதோட ஈசான்யம் குறைஞ்சதுக்கான பலனையும் உபரியா அனுபவிக்க வேண்டிவரும்

குறிப்பு:
வாயு மூலை  அளவுக்கதிகமா குறைஞ்சாலும் (மிளகாய் விரையை விட) ஈசான்யம் அளவுக்கதிகமா வளர்ந்தாலும் இதே பலன்கள் நடக்கும். டேக் கேர்

குத்துப்பாட்டு, குத்து டான்ஸு மாதிரி வாஸ்துல தெருக்குத்து தானே ஹைலைட்.
டுபாகூர் பார்ட்டிங்களாகட்டும், விசயம் தெரியாத சனங்க ஆவட்டும் தெருக்குத்துன்னவுடனே சுதி இறங்கி போயிர்ரதை பார்த்திருப்பிங்க.

மீசை மீசை தான். தேவாரத்தோட மீசைக்கும், சந்தன வீரப்பன் மீசைக்கும், கரப்பான் பூச்சி மீசைக்கும் வித்யாசம் இருக்கில்லை . அதே மாதிரி தெருக்குத்துலயும் 12 ரகம் இருக்கு. இதுல 6 ஓகே. 6 நாட் ஓகே

ஸோ அடுத்த பதிவுல நீங்க படிக்கபோறது  தெருக்குத்து . டட்டடாஆஆஆஆஆஆஅய்ங்க்