Tuesday, July 7, 2009

செக்ஸ் வெறி கொண்ட‌வ‌ன் ம‌னித‌ வெடிகுண்டை விட‌ மோச‌மான‌வ‌ன்.

கத்தி,துப்பாக்கி,வெடி குண்டு எல்லாவற்றையும் விட ஆபத்தானது அடக்கிவைக்கப்பட்ட செக்ஸ் வெறி. கத்தி,துப்பாக்கி,வெடி குண்டுகளுக்கு எப்படி இந்து முஸ்லீம் என்ற வேறுபாடு கிடையாதோ அதே போல் அடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் வெறிக்கும் சாதி, மத வேறுபாடு கிடையாது.

க‌த்தி இத்யாதிக‌ளை வைத்திருப்ப‌வ‌னுக்காவ‌து அதை எப்போது ,எங்கே உப‌யோகிக்க‌ வேண்டுமென்ற‌ திட்ட‌மோ,க‌ட்டுப்பாடோ இருக்க‌லாம். ஆனால் செக்ஸ் வெறி கொண்ட‌வ‌ன் ம‌னித‌ வெடிகுண்டை விட‌ மோச‌மான‌வ‌ன். ம‌னித‌ வெடிகுண்டிட‌ம் அதை எப்போது வெடிக்க‌ செய்ய‌வேண்டுமென்ற‌ திட்ட‌முண்டு. இவ‌னிட‌ம் அதுவும் கிடையாது.

மேலும் செக்ஸ் வெறி அதை எதிர்க்க வழியில்லாத சிறுவர்கள் மீதோ சிறுமிகள் மீதோ வெடிப்பது கொடுமையிலும் கொடுமை. இய‌ற்கை ஒரு சிறுவ‌னையோ,சிறுமியையோ 12 அல்ல‌து 13 வ‌ய‌துக்கெல்லாம் செக்ஸுக்கு ஏங்க‌ வைக்கிறது. ஆனால் அவ‌ர்க‌ளுக்கு திரும‌ண‌ம் ந‌ட‌ப்ப‌தோ கு.ப‌ட்சம் முப்ப‌தை நெருங்கும்போதோ அ தாண்டும்போதோதான்.

அதுவ‌ரை அவ‌ன் என்ன‌ செய்ய‌ வேண்டும். இன்றைய‌ கால‌க‌ட்ட‌த்தில் ம‌ட்டும‌ல்ல‌ என்றுமே பிர‌ம்ம‌ச்ச‌ர்ய‌ம் என்ப‌து unsientific.

இன்பம் துய்க்கும் வெறியும்,சக்தியும் இருக்கும்போது அதற்கான வாய்ப்பின்றி சுய இன்பம், ஹோமோ செக்ஸ் , வகையறாக்களில் சக்தியை விரயம் செய்த பின் கிடைக்கும் வாழ்க்கைத் துணையுடன் இன்பம் துய்க்க அவனால் முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. தான் திருடி பிறனை நம்பான் ,கூத்திக் கள்ளன் மனைவியை நம்பான் என்பது போல் தான் தனது செக்ஸ் வெறியை தீர்த்துக்கொண்டாற்போல தன் மனைவியும் எங்கோ மேய்ந்துதான் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறான். இதில் இயலாமை வேறு இந்த மனப்பான்மையை அதிகரிக்கிறது.

உலக மயமாக்கம்,தனியார் மயமாக்கம், உள்நாட்டு,வெளிநாட்டு,பன்னாட்டு,அரசு நிறுவனங்களின் சதி வலையில் சிக்கி ஆண்கள் திவாலாகி வருகின்றனர்.இந்த போட்டிகள் நிறைந்த உலகம், கு.ப.ஆரோக்கிய சூத்திரங்களை கூட பின் பற்ற முடியாத வாழ்க்கை முறை ஆண்களின் ஆண்மையை அழித்துக்கொண்டிருக்க இதற்கு முதல் பலி ஆணின் ஆண்மை. அவன் அதில் தோற்றுப்போக வெளியே போக தைரியம் போதாத பெண்கள் உன்னால் .......... தான் முடியலை வாஷிங் மெஷினாவது வாங்கிதாயேன் .ஆவது வாங்கித்தாயேன் என்ற ரேஞ்சுக்கு வருகிறார்கள்.(They may be not aware of this instinct , but its true)

இப்படி கன்ஸ்யூமரிசத்துக்கு அடிமையாகிப்போன பெண்களை(அவளது செலவுகளை) சமாளிக்க ஆண் ல‌ஞ்ச லாவணியங்களுக்கு துணிகிறான். சகட்டு மேனிக்கு கடன் வாங்க துணிகிறான். ஒரு கட்டத்தில் தன் சுக போக வாழ்க்கையை (உடலுறவுக்கு பதிலாக தான் பெற்ற ) தொடர பெண் பார்ட் டைம் விபச்சாரத்துக்கும் துணிந்துவிடுகிறாள்/

இதற்கெல்லாம் என்ன தீர்வு என்றால் இயற்கையை நாம் கவுரவித்தாக வேண்டும். பால்ய திருமண்ம் இன்றைய காலத்துக்கு ஒத்துவராது. ஒரு குழந்தைக்கான ஸ்கூல் ஃபீஸ் கட்டவே ஆடு,மாடுகளை விற்க வேண்டி வருகிற நிலையில் அதற்கொரு திருமணம் செய்து அதன் கணவன்/மனைவிக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டுவதெல்லாம் கட்டுப்படியாகாது. பிறகென்ன செய்ய ?


விபசாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குதல் ஒன்றே வழி. ஹோமோ செக்ஸுவல்ஸுக்கே வழங்கும் அங்கீகாரத்தை அதே காரணங்களை காட்டி இதற்கும் வழங்கலாமே