Thursday, July 30, 2009

ரஜினியின் கட்டக்கடைசி சரணாகதி சன் மூவீஸிடம்

பெரிய மனிதர்களை (அப்படி சமுதாயம் கொண்டாடும்) விமரிசிப்பது ஒரு மனோ வியாதி என்று யாரோ ஒரு பெரிய மனிதர் (?) எனக்கு அறிவுரை கூறியதுண்டு.

ஆனால் நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரன் வழி என் வழி ஆகும். அதிலும் சமுதாய்த்தையே பாதிக்கும் நிலையில் உள்ள செலிப்ரிட்டீஸ் ஆதர்சமாக இல்லா விட்டாலும் , தரம் தாழ்ந்து விடாதிருக்க முயற்சிக்க வேண்டும்.

அதை விடுத்து பெரிய மனிதன் என்ற போர்வையில் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று தவறுகளை தொடர்ந்தால் என் விமர்சனம் தொடரும்.

இந்த பதிவில் கிழிக்க எடுத்துக்கொண்ட நபர் சூப்பற ஸ்டார் ரஜினி காந்த்.
இவரை ஆள் காட்டிவிட்டது வேணும்னா ஒரு பார்ப்பனரா இருக்கலாம். ஆனால் ஆளாக்கி விட்டது சூத்திர பசங்க ,சேரி பசங்க . ஆனால் ஆசாமி பார்ப்பனர்களோட விளையாட்டு பொம்மையாவே ஆய்ட்டாரு.

நேட்டிவிட்டியை பொறுத்தவரை ரஜினியின் நிலையும் என் நிலையும் ஒன்றுதான் காரணம் நானும் ஆந்திரம் வாழ் தமிழன் தான். ஆனால் நான் பேசும் தெலுங்கை கேட்டால் தெலுங்கு பண்டிதர்கள் கூட மயங்கிவிடுவார்கள். ரஜினி பேசும் தமிழை கேட்டால்?

நான் என்.டி.ஆர் ரசிகன். இன்று என்.டி.ஆரின் ஆதர்ஸ் திட்டமான 2 ரூ.க்கு கிலோ அரிசிமுதல் ஏழை மக்களுக்கு ப‌யன் தரும் பல திட்டங்களை ஒய்.எஸ் அமல் அமல் படுத்தி வருவதால் நிபந்தனையற்ற ஆதரவை தந்து வருகிறேன். (மாதமிருமுறை தெலுங்கு பத்திரிக்கை நடத்தியபடி). என்.டி.ஆர் உயிரோடு இருந்தவரை , ஒய்.எஸ்.ஆர் ஜல யக்னம் என்ற பெயரில் அணைகளை கட்டத்துவங்கும் வரை நான் என்.டி.ஆர் புகழைத்தான் பாடிவந்தேன்

ஆனால் ரஜினி?

ஆந்திராவுக்கு வந்தா நான் என்.டி.ஆர் ரசிகன்னுவார்.. நாகேஸ்வர்ராவும் பிடிக்கும்னுவாரு. அப்புறம் சந்திரபாபு என்.டி.,ஆருக்கு ஆப்பு வைக்கும்போது ஜால்ரா போடுவார்.

கர்நாடகத்துக்கு போனா ராஜ்குமார் ரசிகன்னுவார் இங்கே காவிரி தண்ணி கேட்டு நடிகர்கள் நெய்வேலிக்கு போனா இவர் தனியே உண்ணாவிரதமிருப்பார். இன்னைக்கு கன்னடனை உதைக்கனும்னுவார் நாளைக்கு மன்னிப்புன்னுவார் மறுபடி இல்லை வருத்தம் தெரிவிச்சேன்னுவார்.

அட போங்கய்யா நீங்களும் உங்கள் சூப்பற ஸ்டாரும்.

one cannot serve two bosses

one cannot raid 2 horses

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைன்னா எப்படி?

கர்நாடகால படம் வெளி வராட்டா ரோமமே பொச்சு அந்த நஷ்டத்துக்கு என் சம்பளத்துல வெட்டு விதிச்சுருங்கன்னனும் அதான் ஆம்பளைக்கு அழகு. வேறு மாதிரியா சொன்னா வில்லங்கமாயிரும் புரிஞ்சுக்கங்க.
ரஜினி பாவம் என்ன செய்வார் அவர் வெற்றியே இரவல் வெற்றிதான் எந்த படம் எந்த பாஷைல சக்ஸஸ் ஆனாலும் தூக்க வேண்டியது தான் .
அதுலயும் ரொம்ப மோசம் ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன் சினிமா சிவாஜி நடித்த ஹிட்லர் உமாநாத்தின் உல்ட்டா என்பது தெரியுமா?
"ஹிட்லர் உமாநாத்" ல சிவாஜி கோழை, மனைவி ஹிட்லரோட கதையை சொல்லி ஜும் ஏற்றி வீரனாக்கி,பணக்காரனாக்குவார். இதை தெலுங்குல உல்ட்டா அடிச்சு ஹீரோவை பயங்கர ரவுடியாக்கி "தர்மாத்முடு" னு ஒரு படம் எடுத்தானுங்க..

அதைத்தான் ரஜினியை போட்டு ஏவிஎம் நலாவனுக்கு நல்லவன் எடுத்தாங்க .

பார்ப்பனர் கூட்டத்தின் கைதி ரஜினி:

பாஷா பட டிஸ்கஷனின் போது உ.வ.பட்டு பேசிக்கொண்டே பாலா ரஜினியின் சீட்டில் உட்கார்ந்துட்டாராம்.(சி.எம்.நாற்காலி பாருங்க !) ரஜினி மறுபடி அந்த நாற்காலியில் உட்காரவே இல்லையாம். டெட்டாயில்,ஃபெனாயில் போட்டு கழுவிட்டு உட்காரலாம்னு நினைச்சாரோ என்னவோ. பாலா ! ஜால்ரா சத்தம் சகிக்க முடியலை ..கொஞ்சம் அடக்கி வாசியும் பிள்ளாய்!

ரஜினிக்கு கிடைத்த தகுதிக்கு மீறிய அங்கீகாரம் ஒரு விபத்து. ஒரு காலத்தில் வேண்டுமானால் ரஜினி ஒரு வித்யாசமான நடிகராக இருந்திருக்கலாம். வர வர மாமி கழுதைப்போலானாள் என்பது போல் அவரது பாத்திர படைப்பு ஏறக்குறைய ஒரு எம்.ஜி.ஆர் தனமாகிவிட்டது.அக்மார்க் அரைத்தமாவாகி விட்ட பிறகும் காலி பெருங்காய டப்பா மணப்பது போல் மணந்து வருகிறார். அந்த பெருங்காயத்துக்கு ஜல் ஜக் போட்டு என்ன லாபம்? ஒரு வேளை சுஜாதாவின் இடத்தை பிடிக்க ரோபோ ரயிலில் தொற்ற ஒரு முயற்சியா?

ரஜினியின் கட்டக்கடைசி சரணாகதி சன் மூவீஸிடம் தான் . ரோபோவுக்கு மூட்டை அவிழ்க்க கார்ப்போரேட் கம்பெனி யோசிக்க ஆரம்பித்துவிட சன் மூவீசிடம் நாலு காலையும் தூக்கிவிட்டார் ரஜினி.


என்னை பொருத்தவரை என் கையில் இன்றிருப்பது கப்பறையாகவேகூட இருக்கலாம். அவர்கள் தலைகளில் இருப்பது கிரீடங்களாகவே கூட இருக்கலாம். இந்த கப்பறைக்கான நோக்கம் என் எதிர் காலத்தில் தெளிவு பெறும்.


என் இருண்ட காலத்தில் என்னை நானே வெளுத்து சுத்திகரித்துக்கொண்டுவிட்டேன். இவர்களோ லைம் லைட்டின் வெளிச்சத்தில் அழுக்காகிவிட்டார்கள்.

என் அளவு கோல் ரொம்ப சிம்பிள். வெற்றிக்கும் திறமைக்கும் தொடர்பு கிடையாது. இந்த நவீனயுகத்தில் வெற்றி என்பது ஒரு விபத்து மாதிரி. நம்மை விட தகுதி படைத்தவர்கள் ஆயிரக்கணக்கில் ஒரு துண்டு பீடிக்கு கூட கதியில்லாமல் இருப்பார்கள். இதை மறந்து என் வெற்றிக்கு காரணம் என் தகுதி,உழைப்பு என்று ஜல்லியடிப்பது மதியீனம்.

ரஜினியை மக்கள் அங்கீகரித்துவிட்டார்கள். இதற்கு நன்றி தெரிவிக்க ரஜினி செய்ய வேண்டியது என்ன? எந்த கட்சிக்கு ஓட்டு போடவேண்டும் என்று சொல்வதா ? நிச்சயமாக இல்லை. ரஜினியை ரஜினியாக்கி உய்ரத்தியது சினிமா. ஆனால் அந்த சினிமாத்துறைக்கு ரஜினியால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அவர் நினைத்தால்

சினிமாவுக்கு ஏதோ செய்யவேண்டும் என்ற தவிப்பில் இருப்பவர்களுக்கு உதவலாம். இதுஒன்றுதான் ரஜினி செய்யக் கூடியது. ஆனால் அவரோ மீண்டும் மீண்டும் மற்றொரு சிவாஜிக்கு முயற்சி செய்தபடி சர்வைவல் பிரச்சினைகளிலேயே மூழ்கியிருக்கிறார்.

வென்றவன் அதிர்ஷ்டத்தால் வெல்கிறான். திறமையால் வெல்ல முடியாதவர்களுக்கு அவன் வழி காட்ட வேண்டும் அதுதான் அவன் அவனை வாழவைத்த‌ துறைக்கு காட்டும் நன்றி.

ஆனால் ஒன்று ரஜினியுடன் சிரஞ்சீவியை ஒப்பிட்டால் ரஜினி பெட்டர். காரணம் ரஜினி தம் மகளை நடிகையாக்கவில்லை. அவரது காதலை அங்கீகரித்து சைடு கொடுத்து பெரியமனிதராகிவிட்டார். ஆனால் சிரஞ்சீவி மகள் விஷ்யத்தில் சொதப்பி வில்லனாகி , தன் மகனை சினிமாவி திணித்து அதுவும் தன் ஜிராக்ஸ் பிரதியாக.


ரஜினி காந்த் ரசிகர்கள் அவரது படங்களில் இயக்குனர்கள் உருவாக்கி காட்டிய பிம்பத்தையே ரஜினியாக புரிந்து கொண்டார்கள்.

இதனால் தான் ரஜினியால் தமது ரசிகர்களை திருப்திப்படுத்த முடியாமல் போனதோடு அவர்கள் பார்வையிலேயே கோயானாகவும் மாறிவிட்டார். இந்த தவறான புரிதலுக்கு காரணம் ரஜினி செட்டில் மட்டுமல்லாது வெளி உலகத்திலும் சினிமாத்தனமாகவே நடந்து கொண்டது தான் ( நதி நீர் இணைப்புக்கு ஒரு கோடி நன்கொடை அறிவித்தது)


ரங்கா படத்தில் ரஜினி பேசிய வசனம் (இதோ பார் குரு! உங்களை மாதிரி 100 வயசு வாழனும்னுல்லாம் நான் ஆசைப்பட மாட்டேன் என் இஷ்டப்படி 40 வயசு வரை வாழ்ந்துட்டு போறேன்) இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் எத்தனை ஆயிரம் ரசிகர்கள் ரஜினி காட்டிய வழியில் புகையும்,போதையுமாக நாசமாகிப்போனார்கள். எனது புகைப்பழக்கத்துக்கு கூட ரஜினி தான் காரணம்.

நீண்ட ஆயுள் கொண்ட லெஜென்டுகளின் வாழ்க்கை இப்படி சந்தி சிரிப்பது சரித்திரத்தில் சகஜமான ஒன்று தான். லேட்டஸ்டாக அந்திமழை யில் அன்னார் உதிர்த்த முத்துக்களை படித்தேன். அரிக்குதுய்யா! புல்லரிக்குது..


இடம்:சிவாஜி பட வெள்ளி விழா

கபில முனி என்பவர் சொன்னாராம் (அதை ரஜினி எடுத்து கூறுகிறார்)

"ஆசைப்படு.ஆசைப்பட்டதை அடைவதற்கு விஷயத்தை சேர்த்து வை.அப்படி சேர்த்து வைத்த விஷயத்தை , சரியாக செயல்படுத்து...அது கொடுக்கும் பலனை முதலில் நீ அனுபவி...அதில் கொஞ்சம் நீ வைத்துக்கொள் . மீதியை மற்றவர்களுக்கு கொடுத்து விடு "

இத‌ற்கும் யோக‌த்துக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்? சாங்கிய‌ யோக‌ம் இதைத்தான் கூறுகிற‌தா? என்ன‌ இழ‌வு இது?

ஆசை என்ப‌து தோன்ற‌ கார‌ண‌ம் ம‌னித‌னையும் ,இந்த‌ ப‌டைப்பையும் வேறுப‌டுத்தும் அக‌ந்தைதான். நான் த‌னியில்லை. இந்த‌ ப‌டைப்பின் பிரிக்க‌ முடியாத‌ பாக‌ம் நான். என்ற‌ உண‌ர்வுட‌ன், ப‌டைப்பில் த‌ன்னையும், த‌ன்னில் ப‌டைப்பையும் பார்ப்ப‌வ‌ன் ம‌ன‌தில் ஆசை என்ப‌து தோன்றாது. என்.டி.ஆர் சினிமாவில் வில்லன் " டேய் இந்த ஊரே என‌க்கு சொந்தம் என்று சொல்வார் . அதற்கு என்.டி,.ஆர் "ஈ தேச‌மே நாதி"(இந்த‌ நாடே என்னுடைய‌து) என்று ப‌தில் சொல்வார். ஒரு நாட்டை என்னுடைய‌து என்ற‌ எண்ண‌மே இத்த‌னை பெருமித‌த்தை,திருப்தியை த‌ரும்போது இந்த‌ ப‌டைப்பே என்னுடைய‌து என்ற‌ உண‌ர்வும், அனுப‌வ‌மும் ஏற்ப‌ட்டு விட்டால் அந்த‌ உன்ன‌த‌ நிலையை த‌ங்க‌ள் க‌ற்ப‌னைக்கே விட்டு விடுகிறேன்.

இந்த‌ ப‌டைப்பே தான், தானே இந்த‌ ப‌டைப்பு என்று உண‌ர்ந்துவிட்ட‌ யோகி , அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு, இந்த பிண்டத்தில் உள்ளதை கொண்டு அண்டத்தை கட்டுப்படுத்தும் கலையறிந்த ஒரு யோகி "ஆசைப்படு" என்று சொன்னதாக ர‌ஜினி சொல்வ‌தை ப‌டித்த‌து சிரித்து விட்டேன். அடுத்து பாருங்க‌ள் க‌பில‌ முனி சொல்கிறாராம் ஆசைப்பட்டதை அடைவதற்கு விஷயத்தை சேர்த்து வை. எதை சேர்த்து வைப்ப‌து உண்மையிலேயே புரிய‌வில்லை. ஆசையையா இல்லை. ஆசைப்ப‌ட்ட‌தை அடைவ‌த‌ற்கு விஷ‌ய‌த்தை சேர்த்து வைக்க‌ வேண்டுமாம். (என் குறுகிய‌ மூளைக்கு ஆசை என்ற‌துமே பெண்ணும், விஷ‌ய‌த்தை சேர்த்து வைத்த‌ல் என்ற‌தும் பிர‌ம்ம‌ச்ச‌ர்ய‌மும் தான் ஸ்பார்க் ஆகிற‌து.(அபிஷ்டு..)

அப்புற‌ம் பாருங்க‌ ம‌றுப‌டி குழ‌ப்ப‌ம்.

அப்படி சேர்த்து வைத்த விஷயத்தை , சரியாக செயல்படுத்த‌ வேண்டுமாம். இவ‌ர் என்ன‌த்தை சொல்கிறார். ஒருவேளை ஓஷோ கூறும் காம‌த்திலிருந்து க‌ட‌வுளுக்கா ?

அப்புற‌ம் பாருங்க‌ ம‌றுப‌டி குழ‌ப்ப‌ம்.

அது கொடுக்கும் பலனை முதலில் நீ அனுபவிங்கறார்....அதில் கொஞ்சம் நீ வைத்துக்கொள் என்றும் சொல்கிறார். மீதியை மற்றவர்களுக்கு கொடுத்து விடு என்று முடிக்கிறார்.

துன்ப‌ம் வ‌ருகையிலே சிரிங்க‌ என்ப‌து க‌ண்ண‌தாச‌ன் வாக்க‌ல்ல‌வா?

க‌பில‌ முனி(?) அழ‌கே இத்த‌னை அழ‌காக‌ இருக்கிற‌து. இதில் ர‌ஜினியும் கொட்டேஷ‌ன் விடுகிறார்.(என்ன‌ங்க‌டா இது த‌மிழ் நாட்டுக்கு வ‌ந்த் கேடு)

அடுத்து ர‌ஜினி கோட்டேஷ‌னை பார்ப்போம்

சாப்பிட்டதை எல்லாம் உடம்பில் வைத்துக் கொண்டால் , உடம்பு கெட்டுப்போய்விடும் . சம்பாதித்ததை எல்லாம் நாமே வைத்துக்கொண்டால் , வாழ்க்கை கெட்டுப்போய்விடும்.

இதை ரஜினி தனது டேபிள் கண்ணாடி கீழே தட்டச்சி வைத்திருந்தால் ரஜினி 25 விழாவில் 75 ரூபாய் வாட்ச் ர‌ஜினி ப‌ட‌ம் போட்டு 250 ரூபாய்க்கு விற்ற‌ கொடுமை ந‌ட‌ந்திருக்காதே...
ரஜினி ரசிகனா இருப்பது என்பது சுய இன்பம் காண்பது மாதிரி ஒரு வயசு கோளாறுதான்

நானும் ஒரு காலத்துல ரஜினி ரசிகன் தான். ரஜினி ரசிகனா இருப்பது என்பது சுய இன்பம் மாதிரி ஒரு வயசு கோளாறுதான்
அதை தாண்டி வரணும். வராதவங்க இன்னும் ரஜினி ரசிகராவே இருந்துர்ராங்க. என்னதான் நான் மானசீகமா முதிர்ச்சி அடைஞ்சு ரஜினியை சீரியஸா எடுத்துக்க கூடாதுனு நினைச்சாலும் அவருக்கு அவமானம் நடக்கும்போது நான் நடை பழகிய நடை வண்டியை யாரோ அடுப்பெரிக்க உபயோகிக்கறாப்ல ஒரு ஃபீலிங்க். ரஜினிக்கு ஒரே வார்த்தை சொல்ல விரும்பறேன்.
ரஜினி சார்..சைலன்ஸ் ப்ளீஸ் ! ஏன் இப்படி வாயை கொடுத்து எதையோ புண்ணாக்கிக்கிறிங்க.

தெலுங்கில் ஒரு சூப்பர் பழமொழி உண்டு. *நோரு மஞ்சிதைதே ஊரு மஞ்சிதி. அதாவது
வாய் நல்லதாயிருந்தா ஊர் நல்லதாவே இருக்குமாம். மிஸ்டர்.பாரத் சினிமால காமராஜர் மாதிரி ஒரு கெட்டப்,ராஜீவ் மாதிரி ஒரு கெட்டப்,இவரோட அம்மாவுக்கு இந்திராகாந்தி மாதிரி பில்டப் எல்லாத்தயும் பார்த்ததுலயே ஜகா வாங்கிகிட்டது நல்லதா போச்சு. இல்லாட்டி இன்னைக்கு ரஜினி உளர்ர உளறலுக்கெல்லாம் வக்காலத்து வாங்கி செத்து சுண்ணாம்பாயிருக்கனும். பார்ப்பன,மேற்கத்திய கலாச்சாரத்தை தமிழர்கள் மேல் திணித்து காசு பொறுக்கிய மணிரத்தினத்துக்கு வக்காலத்து வாங்கினது முதல் இன்றைய சித்தர் ஆட்சி வரை ரஜினியில் லொள்ளு தாங்க முடியாததாக இருக்கிறது.

அன்றைய ஜெயலலிதா ஆட்சியில் உழைத்து வாழும் சாமானிய மக்களுக்கு சமாதி கட்டப்பட்ட போதெல்லாம் கட்டின பசுவாய் இருந்த ரஜினி சீறியெழுந்ததும், காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாய் ஆட்சி மாறியதும் சாதனை என்று ரஜினியும்,ரஜினி ரசிகர்களும் இன்றுவரை நினைத்து வருகிறார்கள். முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல் ரஜினியின் சாதனைகள்(?) தொடர்கின்றன.

நம் வீட்டில் வைத்து சில காலம் போஷித்த பிறகு லொள்ளு தாங்க முடியாமல் துரத்திவிட்ட தூரத்து சொந்தமான கிழம் ஒன்று ஆற்றங்கரையில் நாயடி பேயடி வாங்கும் போது மனசு அடித்துக் கொள்ளுமே அது போல் என் மனசு அடித்து கொள்கிறது. கடைசி வேண்டு கோள் ! மிஸ்டர் ரஜினி கொஞ்சம் பொத்திக்கிட்டு இருங்க‌
சிவாஜி படம் ரிலீசான புதிதில் உள்ளிட்ட என் வலைப் பதிவுக்கான சுட்டியை கீழே கொடுத்துள்ளேன் .படித்து பாருங்கள்.

http://kavithai07.blogspot.com/2007/08/blog-post_18.html

தெரிந்த்தோ தெரியாமலோ எல்லோரும் தவறு செய்பவர்களே..நம்மை பொறுத்த வரை சிறு தவறாக இருக்கக் கூடிய ஒன்று அடுத்தவரின் வாழ்வையே கூட சீரழித்து விடலாம் .
"தவறு செய்தவன் திருந்த்தியாகனும்,தப்பு செய்தவன் வருந்த்தியாகனும்"
இது ஒன்றே என் எழுத்தின் நோக்கம்.