Wednesday, July 15, 2009

தமிழ் ப்ளாக் அக்ரகேட்டர்கள் பற்றி சில சந்தேகங்கள் !

தமிழ் ப்ளாக் அக்ரகேட்டர்கள் பற்றி சில சந்தேகங்கள் !
1.முதலில் தமிழ் மணம் ஊரார் வீட்டு பதிவுகள் எல்லாம் தெரிகிறது. என் பதிவு மட்டும் கண்ணாமூச்சி காட்டுகிறதே ஏன் ? (கருவிப்பட்டை எல்லாம் பதிஞ்சிருக்குண்ணா ! ஆனால் ஏதோ ஒரு கிரகம் உச்சத்திலிருந்தாலன்றி அது என் ப்ளாகில் தெரிவதில்லை. தெரிந்தாலல்லவா "அளி"க்க.
2.சங்கமம்,தமிலிஷ், நம் குரல்,இடமில் (இடமில்லைனு சுருக். காக சொல்றாங்களா ?
3.வேலை வெட்டியின்றி மேற்சொன்ன தளங்களை திறந்து பார்த்து தேடு தேடு என்று தேடினாலும் கிடைப்பதில்லை என் பதிவு (பாவம் ஏசு நாதர் அவர் காலத்தில் இந்த லொள்ளு எல்லாம் கிடையாதா அவர்பாட்டுக்கு "தேடுங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்" என்று சொல்லிவிட்டார்
4.மேற்சொன்ன வலைதளங்களுக்கெல்லாம் இணைப்பும் கொடுத்துள்ளேன்

இன்னும் என்னதான் செய்யனும் ? விச‌யம் ( நன்றி தினத்தந்தி) தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்கனா