Sunday, July 5, 2009

கூகுல் யர்த் உதவியின்றி கண்டம் விட்டு கண்டம்

மிருகம் Vs மனிதன்

மனிதன் எல்லா மிருகங்களைவிடவும் கேவலமானவன். ஏன் எப்படி என்பதற்கு சில உதாரணங்களை பார்ப்போம்.
1.நாய்:
கருவுற்ற பெண் நாயை ஆண் நாய் புண‌ராது. புணர்ச்சிக்கு முன்பு பெண் குறியை முகர்வதன் மூலம் கருவுற்றிருப்பதும்,இல்லாததும் தெரிகிறது.(தகவல்: வேலூர் டாக்டர்.அமரர்.கண்ணப்பர்). கருவுற்ற மனைவியிடம் உடல் உறவு கொள்வதற்கான பொசிஷனை பத்திரிக்கைகளிலேயே வெளியிடுகின்றனர்.
2.பறவைகள்:
மேப்,கூகுல் யர்த் உதவியின்றி கண்டம் விட்டு கண்டம் தாவுகின்றன. காட்டுப்பகுதிகளில் வெள்ளம் எந்த அளவுக்கு வரும் என்று சூட்சும உணர்வுடன் கணித்து வெள்ளம் தொட முடியாத உயரத்தில் மரங்களில் கூடு கட்டுகின்றன. மனிதர்களோ ஏரி,குளங்களில் வீடு கட்டி வெள்ளம் மூழ்கடித்தால் வாயிலும் வயிற்றிலும் அடித்து கொள்கிறார்கள்.
3.புலி:
உண்ட உணவு செரிக்காது போனாலோ,அழுகிய மாமிசத்தை உண்டுவிட்டாலோ அருகம்புல்லை மென்று தின்று சுய வைத்தியம் பார்த்துக்கொள்கிறது. ஆனால் மனிதர்கள் மருந்து அலமாரியை முதுகில் கட்டி அலைகின்றனர்.
4.எறும்பு: மழைக்காலத்துக்கு தேவையானதை வெயில் காலத்துலயே சேர்த்து வச்சுக்குது. மனிதன் ?
5.விபச்சாரம் என்பது மிருகங்களிடையே கிடையவே கிடயாது. ஓரின சேர்க்கை என்பது மனிதனின் தாத்தாவான குரங்கினம் ஒன்றை தவிர வேறு எந்த மிருக ஜாதியிலும் கிடையாது.


இன்னும் அனேக சமாச்சாரங்கள் உள்ளன . சக பதிவர்கள் ஆளுக்கொரு சமாச்சாரம் போட்டாலும் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி கணக்காய் ஆணவத்தில் சிலிர்த்து நிற்கும் மனித குலத்தை தலை குனிய வைக்கலாம்